2011/01/09

அடுத்து வருவது

போக்கற்ற சிந்தனை




    தைத் தமிழில் பெயர்க்கும் பொழுது சுவை குறைந்து விடும் என்று அஞ்சுகிறேன். இருந்தாலும் இதோ: ஐன்ஸ்டைனிடம் ஒரு நிருபர் கேட்டாராம்: "அறிவியல்லே புதுசா எதுனா உண்டா? சொல்லுங்க பத்திரிகைல எழுதுறேன்". ஐன்ஸ்டைன் நிருபரிடம், "இன்னும் பழைய அறிவியலே தெரிஞ்சுக்கலிங்களே? அதைப் பத்தி முழுசா எழுதிட்டீங்களா?" என்றாராம்.

'அடுத்தது என்ன?' என்ற கேள்வியை நம்மையறியாமலே கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். 'அடுத்தது' என்பதில் இருக்கும் திரைவிலகலை ரசிக்கிறோம்; எதிர்பார்க்கிறோம். நாளைக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அறிந்து கொள்வதில் கணிசமான நேரத்தைச் செலவழிக்கிறோம். நேரம் என்பது ரெலெடிவ் என்று தெரிந்தும். யோசித்துப் பார்த்தால், இந்த நொடியில் சுட்ட சூரியரேகை எட்டு நிமிடங்களுக்கு முந்தையது என்று தெரிந்தும், புதியதில் ஆர்வம் காட்டுகிறோம். (அப்படின்னா, சூரியன் சூபர் நோவா ஆகும் பொழுது நமக்கு எட்டு நிமிசம் டாடா பைபை சொல்ல அவகாசம் கிடைக்குமா?) யோசிக்காமல் பார்த்தால், இந்த நொடியில் இழுத்த மூச்சில் ஜூலியஸ் சீசருக்குப் பாட்டன் விட்ட மூச்சின் அணுமூலம் கலந்திருக்கச் சாத்தியம் உண்டு என்று தெரிந்தும், புதுமையில் மயங்குகிறோம். (மாலிக்யூல்னே எழுதியிருக்கலாம், அணுமூலம் பயமுறுத்துகிறது).

எல்லாமே அரதப்பழசென்றால் புதுமையின் கவர்ச்சியில் மயங்குவதேன்? புத்தாண்டிலிருந்து புதுக்காதல் வரை எல்லாவற்றிலும் ஒரு புதுமையை விரும்புவதேன்? இதற்கெல்லாம் பதில் தெரியாது. ஆனால், 'அடுத்து என்ன?' என்பது பழைய கேள்வியானாலும் புதிதாய்க் கேட்டுக் கொண்டே இருப்போம் என்பது தெரியும். இதையே வருடா வருடம் கொஞ்சம் தூசு தட்டி, நாலு வித ப்லேவருடன் அழகான அட்டை டப்பாவில் போட்டு 'மேலாண்மைத் தந்திரம்' என்று விற்று, ஆலோசகர்களும் அறிஞர்களும் நிறையப் புதுக்காசு பார்ப்பார்கள் என்பதும் தெரியும்.

காசு என்றதும் காதை உயர்த்தும் பிராணிகளில் நானும் ஒருவன். நடந்ததையே புரட்டிப் போட்டு தொலைநோக்கு என்று புது ரிப்பன் கட்டி நடமாடவிடும் சித்தர் கூட்டத்தில் பழகிப்பழகிப்பழகிப்பழகி, மூச்சு விடுவது போல் இயற்கையாகி விட்டது. 'extrapolation' மற்றும் 'marginal theory' என்ற இரண்டு 'utterly sexy and devious' சாதனங்கள் இருக்கும் வரை இந்தப் புது ரிப்பன்கள் தொடரும். எல்லாருள்ளும் நாஸ்ட்ரேடமஸ் உண்டு. அடுத்த பத்து வாரங்களில் என்ன நடக்கும் என்று பட்டியல் போட்டால், பத்தில் ஒன்றாவது நடக்கும்; "சொன்னேன் பார்த்தியா?" என்று புருவங்களைத் துரிதமாக இரண்டு முறை உயர்த்தலாம். இதை இன்னும் வித்தை அளவுக்குக் கொண்டு போனால் பிழைப்புக்கே வழியாகலாம்; பிழைப்பதோடு நிற்காமல், 'உலக மகா இவன் அல்லது அவள்' என்ற அங்கீகாரத்துடன் சில சமயம் அநியாயத்துக்கு காசு கூடச் சேர்க்கலாம். (இதையே குடுகுடுப்பைக்காரன் சொன்னால் "போப்பா, ஒண்ணுங்கிடையாதுபா" என்று விரட்டுகிறோம்; அல்லது திகில் கதை எழுதுகிறோம். வேறு விஷயம்)

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 'தொலைநோக்கு' என்ற பெயரில் வீட்டிலும் வெளியிலும் நிறைய ஜல்லியடி நடக்கும் (இந்தச் சொல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது). சென்ற நவம்பரில் தொழிலுக்காகத் தொலைநோக்கியது போகச் சிறிது அறிவுக்கும், நிறைய வயிற்றுக்கும், ஈயப்பட்டது. பிடித்துக் கொண்டேன். 'அடுத்த நூறு வருடங்கள்' என்ற ஆங்கிலப் புத்தகம் பற்றிய ஆய்வுடன், அடுத்த நூறு வருடங்களில் என்ன ஆகும் என்ற கலந்துரையாடலில் கலந்து கொள்ள உள்ளூர் மேலாண்மை குருக்கள் கழக ஆதரவில் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எனக்குப் பிடிக்கும். அருமையான டிசர்ட் தருவார்கள்.

அரசியல், பொருளாதாரம், உலக வளர்ச்சி, தொழில்நுட்பம், சமூகம், மருத்துவம் என்று பல தலைப்புகளில் கலந்துரையாடுவார்கள். அவரவருக்குத் தோன்றியதை ஒரு வெள்ளைப்பேப்பரில் எழுதி சுவற்றில் தொங்க விடுவார்கள். தொங்கவிட்டதிலிருந்து எது முக்கியம் அல்லது சாத்தியம் என்று வகைப்படுத்துவார்கள். வகைப்படுத்தியதிலிருந்து ஐந்தோ பத்தோ அட்டைப் பெட்டிக்கும் புது ரிப்பனுக்கும் தயாராகும். சுவாரசியமான பொழுதுபோக்கு. டிசர்ட் பற்றிச் சொன்னேன், இல்லை?

அட்டைப் பெட்டிக்குள் என்ன போட்டோம் என்பதை விவரிக்குமுன், இந்தக் கும்மியில் நான் ரசித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

'இருபதாம் நூற்றாண்டில் என்ன நடக்கும்?' என்று இதேபோல் நூறு வருடங்களுக்கு முன் (எதுவும் புதிதில்லை என்று சொன்னேனே?) எல்லோரும் கூடிப் பேசி வெளியிட்ட நூறு 'தொலைநோக்குக் கூற்று'களிலிருந்து என்னைக் கவர்ந்த சில :

- தெருக்களில் கார்கள் இருக்காது; பெரு நகரங்களில் ஆகாயப் போக்குவரத்து மிகும் (இது வெளிவந்த நாளில் முதல் கார் கூட தெருவுக்கு வரவில்லை; போர்ட் கார் படம் காட்டிக்கொண்டிருந்தக் காலம்)
- புகையில்லாத ரெயில்கள் மணிக்கு நூற்றைம்பது மைலுக்கும் அதிகமான வேகத்தில் ஓடும்
- கார்கள், குதிரைகளை விட சல்லிசாகக் கிடைக்கும்
- ஆகாயக் கப்பல்கள் பெருகும்
- புகைப்படங்களை உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு தந்தி மூலம் அனுப்பலாம்
- காய்கறிகளும் பழங்களும் அளவில் பெரிதாகப் பயிர் செய்யலாம்
- எந்த மலரையும் எந்த வண்ணத்திலும் எந்த மணமும் வரும்படி பயிர் செய்யலாம்
- ஆங்கில அரிச்சுவடியிலிருந்து X, Q எழுத்துக்கள் நீக்கப்படும்
- Wireless (தமிழில் கம்பியற்றவா?) தொலைபேசி வழியாக ப்ரூக்லினிலிருந்து சைனாவுடன் பேசலாம்
- கடைக்குப் போகாமல் வீட்டிலிருந்தே மளிகை வாங்கலாம் (ஒரு குழாய் வழியாக மளிகை வந்து சேரும் என்றார்கள்)
- பாஸ்டனிலிருந்து லன்டனுக்கு இரண்டே நாளில் போய்விடலாம்
- மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியமில்லாமல் நோய்களைக் குணமாக்கலாம்
அசல் பட்டியலைக் காணத் துடிப்பவர்கள் 'saturday evening post' மற்றும் 'ladies home journal' பத்திரிகைகளின் ஆவணங்களில் தேடலாம்; ஆச்சரியம் என்னவென்றால் மேலாண்மைப் பள்ளி ஆவணங்களில் இவற்றைக் காண முடியவில்லை):

இனி, இந்த நூற்றாண்டுக்காரர்களின் கும்மியிலிருந்து சில:
- சைனா உலகத்தின் சக்தி வாய்ந்த நாடாகும்; கம்யூனிச நாடாக இருக்காது
- பள்ளிக்கூடம் கல்லூரி போக வேண்டிய அவசியமில்லாமல் வீட்டிலிருந்தே படிக்கலாம்
- தண்ணீரில்லாமல் குளிக்கவும், துணி துவைக்கவும் சாதனங்கள் பெருகும்
- உலகின் எந்த மூலையிலும் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்; மருத்துவர்கள் தொலைக்காட்சி வழியாக மருத்துவம் பழகுவார்கள்
- universal health insurance பரவும்
- அமெரிக்காவில் மிகத்தீவிர பூகம்பம் தாக்கி இருபது முப்பது வருடங்களுக்கான வளர்ச்சியில் சேதமேற்படும்
- எண்ணை வளைகுடா நாடுகளில் சிலிகன் உற்பத்தியினால் எண்ணையை விட அதிகம் செழிப்புண்டாகும்
- wireless நம் தினசரி வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும் (பல் தேய்ப்பதிலிருந்து நிறைய விஷயங்களை wireless பாதிக்கும்)
- சர்க்கரை உபயோகம் மறையும்
- பிறக்கும் பொழுதே கண் பார்வை திருத்தப்பட வேண்டியிருக்கும்
- space weapons பெருகும்; சைனா விண்ணில் கிடங்கு கட்டும்
இதையெல்லாம் பட்டியல் போட்டு எங்கே அனுப்புவார்கள், யார் படிப்பார்கள் என்கிறீர்களா? yahoo newsலிருந்து அரசாங்க public policy institute வரை அனுப்புவார்கள். சில சமயம் ஏதாவது உருப்படியாக நிகழும்.

எனக்கென்னவோ இருபதாம் நூற்றாண்டுக் கணிப்புகளில் ஆழம் இருந்தது போல் படுகிறது. அன்றைய கலந்துரையாடல்கள் ஒரு வட்டத்துக்குள் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இன்றைக்கு எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையும் வழியும் வகுத்து, "இதில் என்ன நடக்கும்? அது என்னாகும்?" என்று சிந்தனை வீச்சைக் குறுக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சாக்லேட் டிசர்ட்டில் கை வைக்கவில்லை; அது வரை சரிதான்.

இத்தனை எழுதிவிட்டு எனக்குத் தோன்றியதை எழுதாமல் விட்டால் எப்படி? வாய்ப்பு கிடைத்திருக்கிறதே, சும்மா விடலாமா? அறிவியல் தொழில்நுட்பம் பற்றித் தொலைநோக்க எனக்கு அறிவில்லை; அதனால் சமூகம் பொருளாதாரம் போன்ற அசல் ஜல்லியடி வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன். அடுத்த நூறு ஆண்டுகளில்:
- சவுதி அரேபியா உலகின் சக்தி வாய்ந்த நாடாகும் (பக்கத்து நாடுகள் சவுதியுடன் இணையும்)
- ஆண்/பெண் சார்ந்த சமூக அமைப்பு மறையத் தொடங்கும்
- பிள்ளைகள் பெற்றோருடன் வளர்வது மறையத் தொடங்கும்; பிள்ளை வளர்ச்சிச் செலவுக்குப் பொறுப்பேற்பதோடு சரி
- உலகெங்கும் பால் (milk) தடைசெய்யப்பட்ட பொருளாகும்
- பள்ளி/கல்லூரி படிப்பறிவு ஐந்தே வருடங்களில் முடியும்; பிள்ளைகள் பனிரெண்டு வயதுக்கு மேல் தான் முறையாகப் படிக்கத்தொடங்குவார்கள்
- ஆங்கிலம் உலக மொழியாகும்; வேறெந்த மொழியும் பயில வேண்டிய அவசியமிருக்காது
நடக்கிறதோ இல்லையோ. இரண்டு சிறுகதைகளுக்கான கருவும் பொருளும் கிடைத்தது.

ஐந்து நாள் கும்மி நிறைவாக இருந்ததா என்று கடைசியில் கேட்டார்கள். சாப்பாட்டில் குறை சொல்லவே முடியாது; அட்டகாசமாக இருந்தது. கடைசி நாள் காக்டெயில் பார்ட்டியில் வழக்கம் போல் எல்லோரும் சிரித்தும் சலித்தும் கொண்டிருந்தோம். "interesting.. 'போர்கள் நிற்கும்; வறுமை ஒழியும்; இனப்பகை ஒழியும்' என்று ஏன் எவருமே சொல்லவில்லை? இதெல்லாம் தொலை நோக்கு வளர்ச்சிகள் இல்லையா?" என்றார் நண்பர்.

"these hors d'œuvres are so fucking good" என்றேன்.

2011/01/08

மூன்று

வெத்து வேலை




   மூன்று என்ற எண்ணிக்கையின் பின்னே ஒரு மாயம், மகத்துவம், ஆழம் இருக்கிறது. எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? எப்படி வந்தது? இதைப் பற்றிக் கொஞ்ச நாளாக அடிக்கடி யோசித்திருக்கிறேன். (பொழுது போக வேண்டாமா?)

மூன்றின் மகத்துவத்தை மக்கள் நம்புகிறார்கள்; இன்று நேற்றல்ல, நாகரீகத்தின் தொடக்கத்திலிருந்தே மூன்றை முக்கியமாக எண்ணி வந்திருக்கிறார்கள். உலக கலாசாரங்கள் அத்தனையிலும் பொதுவாகக் காணப்படுகிறது. "மூன்று எண்ணுவதற்குள் இந்தக் கீரையைச் சாப்பிட்டு விடு" என்று, அடம் பிடிக்கும் பிள்ளையை மிரட்டும் வீட்டு வழக்கத்திலிருந்து, விளையாட்டு, சட்டம், மேலாண்மை என்று நம் வாழ்க்கையின் பல பரிமாணங்களில் மூன்றாவது எண்ணிக்கையில் இருக்கும் நிச்சயத்தன்மையை நடைமுறையில் கடைபிடிக்கிறோம்.

மூன்று முறை விளக்கப்பட்ட எதுவும், மனதில் தங்கும் தன்மை கொண்டது என்று கல்வி உளவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்

முப்பால்
முக்கனி
மூன்று தெய்வங்கள்
முக்குணம்
முப்பகை
மூவகைத் தீ
மூவுலகம்
மும்மாரி
முக்கலை
முத்தமிழ்
முச்சங்கம்
சங்கீத மும்மூர்த்திகள்
மூன்று வேளை (சாப்பாடுக்கு மட்டுமல்ல)
மூன்று முடிச்சு (சினிமா அல்ல)
மூன்று முட்டாள்கள் (சினிமா தான்)
.. யோசித்தால் இன்னும் நிறையத் தோன்றும்.

நம் கலாசாரத்துக்கு வெளியே வந்தால் அங்கேயும் மூன்றின் மகத்துவம்.
மூன்று அமைதியையும் ஒற்றுமையையும் குறிக்கும் (யூதம் - டோரா வழிபாட்டின் தியான மையம்)
மூன்று கடவுள்/புனித ஆவிச் சாதனங்கள் (கிறுஸ்துவம்)
மூன்று சீர்மையைக் குறிக்கிறது (கிறுஸ்துவம்)
மூன்று அமைதிப் பாதைகள் (புத்தம்)
மூன்று முறை பழக வேண்டிய அவசியம் (இஸ்லாம்; இருபத்து மூன்றும் மகத்துவமானது)
.. இன்னும் வேறு ஏதாவது இருக்கும்.

பொதுவாழ்வு, கல்வி, விளையாட்டு என்று பார்த்தால் அங்கேயும் மூன்று தலை காட்டுகிறது.
கணிதத்தில் மூன்றின் மகத்துவம் பற்றி தனிப்பதிவு எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது (பயப்படாதீர்கள்; எழுதப் போவதில்லை)
மற்றத் துறைகளிலும் மூன்றை ஒட்டி நிறைய இருக்கின்றன (குறிப்பாக கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், சைகாலஜி)
இலக்கியத்தில் தடுக்கி விழுந்தால் மூன்றைப் பார்க்கலாம் (கதை, தத்துவம் என்று எதிலும் மூன்று ஒரு அடிப்படையாக ஆளப்பட்டிருக்கிறது)
ஒன் டூ த்ரீ என்றதும் ஒடுகிறோம்
அமெரிக்க பேஸ்பாலின் த்ரீ ஸ்ட்ரைக்ஸ்
.. இந்த வகையில் மூன்றுகளுக்கு அளவே இல்லை.

இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது? என்ன காரணமாக இருக்கும்? அங்கே இங்கே (கூகில், விகி) தேடித் தோண்டிக் கிடைத்தவைகளுள் ஓரளவுக்கு நம்பக்கூடியதாகவும் பிரமிப்பாகவும் தோன்றியதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:
பூமி மூன்றாவது கோள். சூரியன் முழுமுதற் கடவுளாகக் கருதப்பட்ட நாட்களில் (எகிப்திய ரா, அதற்கு முன்) பூமியில் தான் முடிவாக வந்திறங்கி அருள் புரிவதாக நம்பினார்கள். ராவின் மூன்று குணங்களை நம்பினார்கள்: ஒளி, வளர்ச்சி, அமைதி. மூன்றின் மகத்துவம் அங்கிருந்து பரவியிருக்க வேண்டும். (சரி, ராவுக்கு ஏன் மூன்று குணங்கள் என்று கேட்டுப் பார்த்தேன். தேவையில்லாத தேடல் என்றது கூகில்)

இப்ப இது ரொம்ப அவசியமா அவசியமா அவசியமா என்று நீங்கள் மூன்று முறை கேட்கலாம். அவசியமில்லை. ஆனால் அடுத்த பார்ட்டியில் உங்கள் மதிப்பு மும்மடங்காக உயரும் அளவுக்கு விஷயம் இருக்கிறதா இல்லையா?

மூன்றைப் பிடித்துச் சிரைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. 'நசிகேதனுக்கு எமன் ஏன் மூன்று வரங்கள் வழங்கினான்? ஒரு வரத்தோடு நின்றிருக்கலாமே?' என்று யோசித்த போது கிளையாகப் பரவிய சிந்தனையின் விளைவு. நான் தெரிந்து கொண்டதைப் பகிரலாமே என்ற எண்ணம் தான். கடைசியில் நசிகேதக் கேள்விக்கு விடை ரொம்ப ஜிம்பிளாகப் புலப்பட்டது - கையில் வெண்ணை வைத்துக் கொண்டு நெய்க்கலைந்த கதை.

முக்கையை, ஐ மீன் மொக்கையைப் படித்ததற்கு நன்றி, நன்றி, நன்றி.

ஆரிய-திராவிட ஜல்லியடி

போக்கற்ற சிந்தனை




    ரிய மாயை திராவிட வாயை அடைத்தது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்பட்டதில்லையென்று இனிமேல் சொல்ல முடியாது. சென்ற நாற்பது வருடங்களில் தமிழ்நாட்டில் படித்தவர்கள், குறிப்பாக சென்னைப் பள்ளிக்கூடங்களில், இன்னும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில், குறிப்பாக (யோவ்!) கழக ஆட்சி சூடுபிடிக்கத் தொடங்கிய எழுபதுகளின் தொடக்கத்தில் படித்தவர்கள் இந்த ஆரிய-திராவிட அக்கப்போரின் வேர்களை அறியலாம். இந்தப் பிரிவினைப் பிரசாரத்துக்காகவே ஒவ்வொரு அரசுத் தொடக்க நடு உயர் பள்ளிகளில் கழகத் தமிழாசிரியக் கண்மணிகள் நியமிக்கப்பட்டார்கள் (என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்). Systematic induction of separatist sentiments, yet, shrewd strategy (தமிழ்ல தான் அடுக்கு மொழி எழுதமுடியும்னு நிறையபேர் சொல்றாங்க). என் பள்ளிக்கூடத்திலும் இது போல் தமிழாசிரியர்கள் இருந்தார்கள். பாலசுப்ரமணியன் என்று ஒரு தமிழ் ஆசிரியர், அய்யர் பாவம், அவரை அடித்தே துரத்திவிட்டார்கள். நான் படித்ததெல்லாம் கழகக் கண்மணி ஆசிரியர்களிடம் தான். மங்கலமன்னன் போல் சிலர் உண்மையிலேயே தமிழ் பரப்ப முனைந்தார்கள். ஆரியம் திராவிடம் என்று மங்கலமன்னன் எதுவும் வகுப்பில் சொன்னதில்லை - வெளியே என் விபூதிக் கீற்றை அழிப்பார், வேறு விஷயம். சுந்தரேசன் என்று ஆரியப் பெயர் கொண்ட ஆசிரியர் பக்காக் கழக ரவுடி. ஆனால் தமிழில் மெத்தப் படித்தவர். அவர் தமிழ் பேசினால் நாள் முழுதும் கேட்கலாம். அவர் ஆரிய மாயை பற்றி அவ்வப்போது சொல்லி, அதிகமாகத் தமிழ் சொல்லிக் கொடுப்பார். மங்கலமன்னனின் தமிழ் வீச்சு அன்பழகன் என்றால் சுந்தரேசனின் பேச்சு நெடுஞ்செழியன்-அண்ணா சாயல். இடையில் துரைசாமி என்று ஒரு ஆசிரியர். அக்மார்க் கழகக் கண்மணி. வகுப்புக்கு வந்தால் ஆரிய மாயை தவிர வேறு எதையும் பேசமாட்டார். சாதாரண நன்னெறி செய்யுளில் கூட எங்கிருந்தோ ஒரு பார்ப்பனத் தொடர்பைக் கொண்டு வந்து அரை மணி நேரம் பெரியார் பற்றிப் பேசுவார். கடைசி ஐந்து நிமிடத்தில் கோனார் நோட்சிலிருந்தே பொருள் சொல்லி வகுப்பை முடிப்பார்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் இது போல் ஜல்லியடிப்பது எத்தனையோ நாளாக நடந்து வருவது தான். (ஜல்லியடி: இந்தச் சொல்லை கெக்கே பிக்குணியின் வலைப்பூவில் தெரிந்து கொண்டேன்; எத்தனை அருமையான சொல்! நன்றி) இருந்தாலும், எனக்கென்னவோ சென்ற பத்து ஆண்டுகளில் ஜல்லியடி குறைந்திருப்பது போல் படுகிறது. யாரும் இதையெல்லாம் இனிப் பொருட்படுத்துவதில்லை என்பது காரணமாக இருக்கலாம்; இருந்தால் நல்லது. எனினும், இந்த ஜல்லியடியைக் கவனித்தால் பொழுது போவதோடு, நிறைய சுவாரசியமான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்பது என் அனுபவம்.

'History of Tamils' என்று ஒரு ஆங்கிலப் புத்தகம் (தமிழிலும் எழுதக்கூடாதோ?); சீனிவாச அய்யங்கார் எழுதிய புத்தகம். புத்தகத்தைப் படிக்கவில்லை; எண்பதிலிருந்து நூறு டாலர் வரை விற்கிறது. (வேறே வேலை இல்லை? சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இதை சீப்பா தட்ட முடியும்னா தட்டுங்க). அந்தப் புத்தகத்தை ஒட்டி, புலவர். கா.கோவிந்தன் எழுதிய 'தமிழர் இலக்கியம்' எனும் புத்தகம் நூறு ரூபாய்க்குக் கிடைத்தது. போன வருடம் சென்னையில் வாங்கினேன். சீனிவாசர் 'ஆரியம் ஆரியம்' என்றால் கோவிந்தர் 'திராவிடம் திராவிடம்' என்கிறார் (இருவர் பெயரிலும் ஒரு ஒற்றுமை வேர் ஓடுவதை நீங்களும் கவனித்தீர்களா?).

சீனிவாசன் எழுத்தை 'கூகில் புக்ஸ்' முன்னோட்டம் பார்த்தேன். சீனிவாசரின் ஆராய்ச்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது என்றாலும் அவரது ஆங்கில நடை சகிக்கலைடா சாமி! பத்து பக்கத்துக்கு மேல் படிப்பது கஷ்டம். மாறாக, கோவிந்தரின் நடை கழக வாடை வீசினாலும் ஓரளவுக்கு தமிழ்வாணன் நடை போல் இருக்கிறது. படிப்பது சுகமான அனுபவம். இந்த ஆரிய-திராவிட ஜல்லியடியில் புகுந்து வளர்ந்தவன் என்ற முறையில் கோவிந்தர் புத்தகத்தைச் சுந்தரேசனின் ஆசிரிய நடைக்கு ஒப்பிடுவேன். கொஞ்சம் ஆரியத்தை சாணியடிக்கிறார், நிறைய தமிழர் பற்றித் தெளிவுபடுத்துகிறார். இரண்டு மூன்று முறை தொடர்ந்து படிக்க முடிகிற புத்தகம். மூன்று மணி நேரப் பயணத்திற்கு உகந்த புத்தகம் (தூங்க விரும்பாதவர்களுக்கு).

'தமிழர் இலக்கியம்' புத்தகத்தில் நான் ரசித்த பகுதிகளிலிருந்து:

தமிழ் மொழி கி.மு 500ல் வரிவடிவம் பெற்றிருந்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. (தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பார் கவனிக்க; காட்டுமிராண்டிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது; காட்டுமிராண்டிகள் கி.மு 5000ம் வாக்கில் தொலைந்ததாகச் சொல்கிறார்கள்; ஒரு சிலர் மட்டும் படப்பை வண்டலூர் தியாகராயநகர் பகுதிகளில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்)

ஐந்து-ஆறாம் நூற்றாண்டு வாக்கில் வட இந்தியாவிலிருந்து சைவ வைணவ புத்த மதங்கள் தமிழ்நாட்டில் அளவுக்கு மீறிய ஆட்சிமுறை பெற்றுப் பரவி அதுகாறும் இருந்த தமிழ் மதங்களை வழக்கிலிருந்து வேரோடு ஒழித்தன. இதை அதற்கு முந்தைய தமிழ் நூல்களிலிருந்து அறியலாம்.

ஒவ்வொரு சங்கத்திற்கும் கூறிய ஆயுட்காலம் 37ன் பெருக்குத் தொகையாக அமைகிறது. அவற்றின் மொத்த ஆயுட்காலம் முறையே, 37x120=4440; 37x100=3700; 37x50=1850. இது அவ்வெண்கள் எத்துணை செயற்கையானவை என்பதைக் காட்டுகிறது. அப்பழங்காலத்தில், உண்மையில் கூறப்போனால், எட்டாம் நூற்றாண்டு வரை கிறுஸ்தவ ஆண்டு போலும் ஆண்டுக்கணிப்பு முறை தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே ஆண்டுகளைப் பெருமெண் அளவில் எண்ணிக் காணும் வழிமுறை இடம்பெறவில்லை. (தமிழனுக்கு கணக்கு வராது என்று யார் சொன்னது?)

சமஸ்கிருதத்தில் செயப்படுபொருள் குன்றிய செயப்பாட்டு வினையாட்சி செய்வினை ஆட்சியினும் மொழி நடை உடையதாம். (இந்த வரி, சத்தியமாகப் புரியவில்லை; ஆனால் இதை படித்தபொழுது அநியாயத்துக்குச் சிரித்தேன். அதனால் பிடித்தது)

திருவள்ளுவர், சமஸ்கிருத நெறிகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் நிறைய எடுத்தாண்டிருக்கிறார். அவருடைய அறம் பொருள் இன்பம் என்ற பகுப்பு, வடமொழியின் தர்ம அர்த்த காம த்ரிவர்க்கங்களின் தமிழே. அர்த்தசாஸ்திரம், பகவத்கீதை நூல்களின் கருத்தை அப்படியே குறளாகக் கொடுத்திருக்கிறார். ('ஒருமையுள் ஆமைபோல்' வள்ளுவரின் அசல் என்று நினைத்திருந்தேன்; கீதையாம்). ஆரியச் சமயங்கள் தமிழில் பரவத் தொடங்கியக் காலத்தில் எந்தச் சமயமும் அரசாதரவு பெறாத நிலையில் ஒன்றோடொன்று பகைத்துக் கொள்ளவில்லை. (great insight! உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம். secular என்று சும்மா சொல்கிறோமோ இந்நாளில்? எம்மதமும் சம்மதம் என்பது மறந்து போன தமிழர் பண்பாடு என்று தோன்றுகிறது). ஆகவே தான், எந்தச் சமயச்சாயலை ஆதரிக்கிறார் என்பது வெளிப்படாமலே திருவள்ளுவர் ஒளிவீசுகிறார். திருவள்ளுவர் பற்றி முப்பது பக்கங்கள் இருக்கின்றன. நிறைய சுவாரசியம், சில திடுக். தமிழ் நூல்களில் திருக்குறள் மட்டும் உலகப் புகழ் பெறக் காரணம் கிறுஸ்துவ மதம் என்று கோடிட்டிருக்கிறார் கோவிந்தர். உண்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது. வித்தியாசமான கோணம்.

"நோய்வாய்ப்பட்டு இறந்த அரசர்களின் உடலை வாளால் வெட்டிப் புதைக்கும் வழக்கம்" பற்றி ஔவையாரும் சாத்தனாரும் பலரும் பாடியிருக்கிறார்கள். அமைதியை விரும்பும் அரசன் போரே தொடுக்கவில்லையென்றாலும் அவன் பேர் கொண்ட அன்பினால் இறந்தவனைத் துண்டு போடும் வழக்கம் கொஞ்சம் வயிற்றைக் கலக்குகிறது. (வீரமரபுனா வீரமரபு தாங்க). ஔவையார் பழந்தமிழ்ப் புலவர்கள் வழியைப் பின்பற்றிச் சமஸ்கிருதச் சொல்லாம் தருப்பை என்பதை ஆள்வது விடுத்துத் தமிழ்ச்சொல்லாம் புல் என்பதை ஆண்டுள்ளார். ஆனால், சாத்தனார் தருப்பை என்பதையே ஆண்டுள்ளார். சாத்தனார் ஔவையாரினும் பிற்பட்டக் காலத்தவர் என்றே காட்டுகிறது. அவர் இயற்றிய மணிமேகலை ஆரிய நாகரீகமும், பிராமண பௌத்த சமண இலக்கியங்களும், தமிழகத்து வாழ்க்கையில் ஆட்சி செலுத்தத் தொடங்கிவிட்டக் காலத்தைச் சேர்ந்ததாம்.

அட, தருப்பைக்கும் புல்லுக்கும் இடையே இத்தனை ஆரிய-திராவிட ஜல்லியா என்று அசந்து போய் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தேன்:
ஔவை: அறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி, மறம் கந்தாக நல்லமர் வீழ்ந்த
சாத்தனார்: தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து, செருப்புகல் மன்னர் செல்வழிச் செல்கென
எனக்கென்னவோ எதுகை மோனை காரணத்துக்கான சொல்தேர்வாகப் படுகிறது, புலவரே. இந்த மாயை சமாசாரத்தில் எனக்கு நம்பிக்கையில்லாத காரணமாக இருக்கலாம். இல்லாத ஒன்றன் நம்பிக்கை அறிவுள்ள மனிதரையும் எப்படியெல்லாம் எண்ண வைக்கிறது!

நக்கல் நீங்கலாக, இது சுவையான புத்தகம். ஆரிய-திராவிட பிரசாரத்துக்கப்பால் பார்க்கும் தமிழார்வமுள்ள முதிர்ந்த வாசகர்கள் (க்க்க்க்ம் கவனிக்க: முதிர்ந்த ≠ முதிய) இந்தப் புத்தகத்தை ரசிப்பார்கள் என்றே தோன்றுகிறது. தமிழிலக்கியக் காலங்களையும் படைப்புகளையும் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. இந்தப் புத்தகத்தைக் கண்காட்சியில் வாங்கப்போனால், கோவிந்தனாரின் 'பண்டைத் தமிழர்' நூலும் கிடைக்கிறதா பாருங்கள். அடுத்தச் சென்னைப் பயணத்தில் வாங்க நினைத்திருக்கிறேன்.




தமிழர் இலக்கியம் | புலவர் கா. கோவிந்தன் | தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு | ரூ.95 (விலை மாறியிருக்கலாம்; ரூபாய்க்கு யூனிகோட் உரு கிடைக்கிறதா?)

2011/01/07

மோஸ்கி மாமா



    ஜ்ரதம்ஷ்ட்ரன் கதை தெரியுமோ? அதைச் சொல்லவேண்டுமென்றால் மோஸ்கி மாமா பற்றிச் சொல்ல வேண்டும். மோஸ்கி மாமா என்றால் வஜ்ரதம்ஷ்ட்ரன் நினைவுக்கு வரும். இன்னும் சிலதும் வரும், ஆனால் வஜ்ர தான் முதல். (புராணம் மறந்த/அறியாதவர்களுக்கு அவசர அறிமுகம்: ராமாயணத்தில் ராமனுக்கு ராவணன், லட்சுமணனுக்கு இந்திரஜித், அங்கதனுக்கு வஜ்ரதம்ஷ்ட்ரன்).

என் குரோம்பேட்டை நாட்களில் மோஸ்கி மாமா ஒரு ஆஸ்தான கேரக்டர். நியூகாலனியின் சர்வோதயா, போர்ட் ஹை ஸ்கூல், கோவில், ராபர்ட் நர்சரி, வாடர் டேங்க், கண்ணன் கடை என்ற பரந்த வட்டாரத்தில் எழுபதுகளின் தொடக்கத்தில் வளர்ந்தவர்களுக்கு மோஸ்கி மாமா தெரிந்திருக்க அதிகச் சாத்தியம் உண்டு. மோஸ்கி மாமா வீட்டுக்கு அடிக்கடி போவோம். குறிப்பாக மழை நாளில் வெளியே பொறுக்கவோ க்ரிகெட் விளையாடவோ லக்ஷ்மிபுரம் வரை ஓடவோ முடியாவிட்டால், மோஸ்கி மாமாதான் கதி.

ஒரு மழைநாளில் அவர் வீட்டில் ஒதுங்கிய போது, "உங்களை ஏன் மாமா மோஸ்கினு கூப்பிடறாங்க?" என்று கேட்டோம். அவர் பதில் சொல்வதற்குள், "நீங்க ரொம்ப மோசமான ஆளுங்கறதனால மோஸ்கினு கூப்பிடறதா எங்கப்பா சொன்னாரு" என்றான் சுந்தர். "உங்கப்பன் தாண்டா மகாதுஷ்டன்" என்பார் மோஸ்கி மாமா.

மோஸ்கி மாமாவுக்கு வேலை வெட்டி கிடையாது. சுந்தர் வீட்டின் போர்ஷனில் தன் மகன் வனமாலியுடன் குடியிருந்தார். சுந்தர் வீட்டிலேயே சாப்பாடு எல்லாம். சுந்தருடைய அப்பாவுக்குச் சொந்த அண்ணா என்றாலும் ஏதோ குடும்பத் தகராறு காரணமாக மோஸ்கி மாமாவை அவருக்குப் பிடிக்காது. அடிக்கடி சண்டை வரும். கன்னா பின்னாவென்று தெருவிலிறங்கிச் சண்டை போடுவார்கள். ஆளுக்காள் முறை மாற்றி அக்குளில் கைவைத்து அழுத்தி 'ப்ற்ப்' என்று ஒலி ஏற்படுத்தி "இந்தாடா இதைக்குடி" என்பார்கள். மோஸ்கி மாமாவை அடிக்கடி வீட்டை விட்டுத் துரத்தப் பார்ப்பார் சுந்தரின் அப்பா. "டேய், இது எங்கப்பன் கட்டின வீடு, எனக்கு பாத்தியதை உண்டு" என்று மோஸ்கி மாமா நகரமாட்டார். நல்ல நாள் பார்த்து மோஸ்கி மாமா ஒரு காரியம் செய்தார். சட்டை வேட்டி எல்லாம் களைந்து விட்டு நடுரோட்டில் நின்றார். சுந்தர் அப்பா ஓடிச்சென்று அவர் காலில் விழுந்து, "மோஸ்கி, வீட்டிலேயே இரு, இனி உன்னைத் தொந்தரவு செய்யவில்லை" என்றுக் கெஞ்சி உள்ளே அழைத்து வந்தார். இது நடந்தது, '71 தீபாவளி என்று நினைக்கிறேன்; கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாருமே மோஸ்கி தரிசனம் பற்றி ரொம்ப நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மோஸ்கி மாமா அருமையாக வால்மீகி ராமாயணம் கதை சொல்வார். உட்கார வைத்து உபன்யாசம் போல அல்ல. நடித்துக் காட்டுவார். ஒரு கணம் தசரதன் போல் துடிப்பார். அடுத்தது ராமர் போல் மிடுக்காக நடப்பார். மார்பில் காசித்துண்டை போர்த்திக்கொண்டு சீதை போல் நளினமாக நடிப்பார். அனுமன், விஸ்வாமித்ரன், குகன், சூர்ப்பனகை, வாலி, விபீஷணன், ராவணன் என்று அத்தனை கேரக்டர்களையும் மோனோ ஏக்டிங் செய்துகாட்டிக் கதை சொல்வார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ரசிப்போம். நேரம் போவதே தெரியாது. நடிப்பதோடு நிறுத்தாமல் வித்தைகள் செய்வார். ஒரு பொய்க்கத்தியும் சுந்தர் அம்மாவுடைய நெற்றிச்சாந்தையும் வைத்து சூர்ப்பனகை மூக்கு வெட்டுப்படுவதை நடத்துவார். அங்கதன் ரொம்ப பிரபலம் அவரிடம். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி இரட்டைப் பல்டி அடிப்பார். வஜ்ரதம்ஷ்ட்ரன் தான் பெஸ்ட். மாமாவை டச் பண்ணிக்க முடியாது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து வாய்க்குள் அடக்கிக் கொள்வார். பிறகு உதடுகளை விலக்கி 'குஹ்' என்று வாயால் மூச்சு விடுவார். சிகரெட் தணல் அவர் பல்லிடுக்குகளில் இருந்து பரபரவென்று ஜொலிக்கும். நாங்களெல்லாம் பயந்து நடுங்குவோம் என்றாலும் மெய் மறந்து ரசிப்போம். அதனால் வஜ்ரத்ம்ஷ்ட்ர வதம் எங்களுக்கு மிகவும் பிடித்த கதை.

அசோக், மகேந்திரன், நான் மூவரும் போவோம். மகேந்திரனுக்கு சாமி புராணத்தில் எல்லாம் இஷ்டம் இல்லையென்றாலும் சிகரெட் வித்தைகளுக்காக வருவான். சில சமயம் நரசிம்மன் வருவான். மணிவண்ணன் வருவான். எங்களுடன் மோஸ்கி மாமா பையன் மாலியும் அடிக்கடி உட்கார்ந்து கேட்பான்.

மாலி எங்கள் எல்லாரையும் விடப் பெரியவன் என்றாலும் மன வளர்ச்சி குறைவால் சின்னப் பிள்ளை போல் நடந்து கொள்வான். "டேய்! அந்த அசமிஞ்சத்தோட ஏண்டா இப்படி ஒட்டறேள்?" என்று மணிவண்ணணின் அம்மா அடிக்கடி எங்களைத் தட்டிக் கேட்பார். "அப்புறம் நல்ல மார்க் எடுக்குற உனக்கு படிப்பு வராம போயிடும்டா தொரை" என்று பயமுறுத்துவார். எங்களுக்கு மாலி ஒரு பொழுதுபோக்கு, அவ்வளவு தான். அவனுடைய ரிடார்டட் நடத்தை அந்த நாளில் பொழுதுபோக்கு சாதனமாகப் பட்டது. "டேய் மாலி, அந்த மாமியோட பின்னலைப் பிடிச்சு இழுத்துட்டு வா, உனக்கு ரெண்டு கமர்கட் வாங்கித்தரேன்" என்பான் அசோக். அடுத்த கணம் மாமியுடைய கூச்சல் கேட்கும், மாலி அவ்வளவு வேகம். உருப்படாத காரியங்கள் எல்லாவற்றுக்கும் எங்களுக்கு மாலி தேவைப்படுவான். பதிலுக்கு க்ரிகெட் ஆட்ட முடிவில் ஒரே ஒரு ஓவர் பேடிங் பௌலிங் செய்ய அனுமதிப்போம். நன்றியோடு நடப்பான். மாலி எங்களைப் போட்டுக் கொடுத்து விடுவானோ என்று பயந்து, அவனை வீட்டில் விடும் போது மட்டும், ஐந்து பைசாவுக்கு 'காபி டாபி' என்று காபி சுவையோடு ஒரு சாக்லெட் கிடைக்கும், அதை வாங்கிக் கொடுப்போம். எல்லாவற்றையும் மறந்து விடுவான். சாக்லெட் மட்டும்தான் அவனுக்கு நினைவிருக்கும்.

காரணம், மோஸ்கி மாமாவுக்கு மாலியென்றால் உயிர். "என் பிள்ளை சாக்ஷாத் மகாவிஷ்ணுடா. அவனை யாராவது ஏதாவது சொன்னா நானே வதம் பண்ணிடுவேன்" என்பார். மாலியை அப்படிக் கவனிப்பார் மோஸ்கி. கண்ணன் கடையில் கடன் வாங்கிக் கடலை உருண்டை பாகெட் பாகெட்டாக வாங்கிக் கொடுப்பார். சுந்தர் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு தினமும் மாலிக்கு ஒன்றிரண்டு ஸ்பூன் நெய் அதிகமாக ஊற்றி சாப்பாட்டை ஊட்டி விடுவார். வளர்ந்தப் பிள்ளையைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பார். எங்களுக்குச் சிரிப்பாக வரும்.மாலி பள்ளிக்கூடம் போகவில்லை. சர்வோதயாவில் சேர்த்தார்களாம். நடு வகுப்பில் ஒன்றுக்கு போய் அந்த நீரில் குதித்து விளையாடினான் என்று அவனை வீட்டுக்குத் துரத்திவிட்டார்களாம். மோஸ்கி மாமா அவனுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுப்பார். சிலசமயம் என்னிடம் வருவார். "டேய், ஏதோ பொழைப்புக்கு அவனுக்குக் கொஞ்சம் கூட்டல் கழித்தல் இங்க்லிஷ் சொல்லிக் கொடுறா. புண்ணியமா போகும்" என்று கெஞ்சிக் கேட்பார். மாலி எங்கள் வீட்டுக்குள் வர அனுமதியில்லை. "பொண்கள் இருக்குற வீடு, இந்த மாதிரி பிச்சுலுவையெல்லாம் உள்ளே கூட்டிண்டு வராதே, சொல்லிட்டேன்" என்று கறார். என் அம்மாவுக்குத் தெரியாமல் மாலிக்கு அவ்வப்போது கணக்கும் ஆங்கிலமும் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். மாலிக்குப் பிறகு வருகிறேன்.

ராம-ராவண யுத்தத்தில் வஜ்ரதம்ஷ்ட்ர வதம் சுவையானது (என்பார் மோஸ்கி). எங்களைப் பொறுத்தவரை அதுதான் ராம-ராவண யுத்தம். வஜ்ர வதம் முடிந்ததும் எல்லாம் சுபம். ராவணன் சார்பில் வஜ்ரதம்ஷ்ட்ரன் ராம சேனையை நாசம் செய்யும் பொழுது அங்கதன் ஆவேசம் வந்து, வஜ்ரதம்ஷ்ட்ரனின் கழுத்தில் ராவணன் போட்ட சக்தி மாலையை அறுத்தெறிந்தது வதம் செய்தான் என்பது சுருக்கம். அதை மோஸ்கி மாமா சொல்வது அபாரமாக இருக்கும். புரண்டும் ஒருவர் மேல் ஒருவர் ஏறியும் மார்பைத் தலையால் முட்டியும் கழுத்தைத் திருகியும் பலவிதமாகச் சண்டை போட்டார்கள் என்று நடித்துக் காட்டுவார்.

அரைவருடப் பரீட்சைகள் ரத்தாகின. பள்ளிக்கூடம் இல்லை. ராஜாஜி இறந்த வாரம் என்று துக்கம். என்ன செய்வதென்று தோன்றாமல் மோஸ்கி மாமா வீட்டுக்குப் போனோம். நான், அசோக், சுந்தர் மூன்று பேர். கதவருகே போனோம், உள்ளிருந்து ஒரே ஓசை. ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது போலவோ அழுவது போலவோ முனகலும் உறுமலும் கேட்டது. மாலி வெளியே உட்கார்ந்திருந்தான். "என்னடா?" என்றோம். "அப்பா வேலையா இருக்கார்" என்றான். "உங்கப்பாவை யாரோ உதைக்கறாங்கடா, வாடா போய் காப்பாத்தலாம்" என்று அசோக் சொன்னதும், கடகடவென்று கதவைத் திறந்துவிட்டான் மாலி. உள்ளே மோஸ்கி மாமாவும் சுந்தர் வீட்டு வேலைக்காரியும் ஆடையில்லாமல் கிடந்தார்கள். மோஸ்கி மாமா நெஞ்சில் அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் கழுத்தில் பளபளவென்று சங்கிலி. மோஸ்கி மாமா எங்களைப் பார்த்து, "வாங்கடா பசங்களா... வஜ்ரதம்ஷ்ட்ர வதம் பண்ணிக்காட்டறேன். நான் அங்கதன், இவ வஜ்ரதம்ஷ்ட்ரன்" என்றார் சாதாரணமாக. அந்தப் பெண் ஓடிவிட்டாள்.

அந்தச் சம்பவம் பற்றி மோஸ்கி மாமா கவலைப்படவேயில்லை. நாங்கள் மட்டும் தனியாகக் கிசுகிசுப்போம். மாலியைக் கிண்டல் செய்வோம். அவன் புரியாமல் விழிப்பான். அடுத்த மாதங்களில் ஒரு நாள் சுந்தர் வீட்டுக்குப் போலீஸ் வந்தது. மோஸ்கி மாமா நகை திருடினார் என்று பிடித்துவிட்டார்கள். நாங்கள் வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். சுந்தர் அப்பா ஒரு நகையைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று எங்களிடம் வந்து, "டேய் பசங்களா! இந்த நகையை மோஸ்கி கைல பாத்தீங்க இல்லே? உண்மையச் சொல்லுங்கடா" என்று அதட்டினார். வேலைக்காரி கழுத்தில் பார்த்த அதே சங்கிலி. நாங்கள் போலீசுக்குப் பயந்து தலையசைத்தோம்.

பிறகு என்ன ஆனதென்று தெரியாது, மோஸ்கி மாமா ஜெயிலுக்கெல்லாம் போகவில்லை. ஆனால் வீட்டைக் காலி செய்து கொண்டு மாலியுடன் போய்விட்டார். "எங்கப்பா வஞ்சம் வச்சுப் பழி வாங்கிட்டார்டா" என்பான் சுந்தர். மோஸ்கி மாமாவை அதற்குப் பிறகு பார்க்கவில்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இது நடந்தது '72 அல்லது '73 என்று நினைக்கிறேன்.

    சென்ற வருடத் தொடக்கத்தில் கோவிந்தபுரத்தில் என் அம்மாவுடன் பத்து நாள் தங்கிவிட்டு அதிகாலையில் குரோம்பேட்டை பஸ் ஸ்டேன்டில் இறங்கினேன். அந்த நாளில் ஒரு பெரிய மரம் இருக்கும், ரயில்வே ஸ்டேசன் எதிரில். அதனடியில் நிற்போம். அதான் பஸ் ஸ்டேன்ட். வெயிலோ மழையோ அதிகமானால் பின்னால் இருந்த தபாலாபீஸ் கட்டிடத்துக்குள் தஞ்சமாவோம். இப்போது குரோம்பேட்டை பஸ் ஸ்டேன்ட் அடையாளமே தெரியவில்லை. கூரையும் விளக்கும் அமோகமாக இருக்கிறது. காலை நாலரை மணிக்கே கணிசமானக் கூட்டம். பஸ்சிலிருந்து இறங்கியதுமே வரிசையாக ஆட்டோ. அமர்க்கள வசதி! அசந்து போனேன். நடந்து போகலாம் என்று நினைத்து முதல் ஆட்டோவை ஒதுங்கி வழி விட்டபோது, "ஏறுங்க சார், மொதல் வாடிக்கை" என்றார், சுத்தமாக இருந்த டிரைவர். பளிச்சென்ற பேன்ட் ஷர்ட். வெளியில் தெரிந்த தங்கம் பதித்த ருத்திராட்ச மாலை. நெற்றியில் குங்குமப் பொட்டு.

போகட்டும் என்று ஏறி அமர்ந்தேன். சுத்தமாக இருந்தது ஆட்டோ. 'நாக்கிலே நந்தவனம், நெஞ்சிலே நெருஞ்சி முள்', 'கடவுள் காதலித்தால் புராணம், மனிதன் காதலித்தால் மயானம்' போன்ற ஆழ்ந்தத் தத்துவ வாசகங்கள் எதுவும் இல்லை. பின்புற ஸ்பீக்கரில் காதிலேயே விழாது போல் மென்மையாக ஏதோ பாட்டு. கவனித்துக் கேட்டால் எம்.எஸ்! மிதமான ஊதுபத்தி மணம். ஒரே ஒரு போட்டோ. போட்டோவைப் பார்த்ததும் வயிற்றைக் கயிறு போட்டுச் சுருக்கி இழுத்தது போல் உணர்ந்தேன். போட்டோவின் கீழே ஒரு வாசகம். டிரைவரைப் பார்த்தேன். அமைதியாக இருந்தார். "போட்டோல யாருங்க?" என்றேன். "எங்கப்பா சார்" என்றார். இறங்கும் பொழுது, ஏனோ தெரியவில்லை, அதிகமாக டிப் செய்தேன். "ரொம்ப தேங்க்ஸ்" என்றவரிடம், "என்னைத் தெரியுதா?" என்றேன். "இல்லிங்களே.." என்று இழுத்தார். சொல்ல வாயெடுத்து, பேச்சு மாற்றினேன். "இல்ல, உங்களை எங்கியோ பாத்த மாதிரி இருந்துச்சு, அதான்" என்றேன்.

வீட்டுக்குள் வந்து, தங்கையிடம் விவரம் சொன்னேன். "ஆமாண்டா, அதையெல்லாம் இன்னும் யார் ஞாபகம் வச்சிருக்கப் போறா.. வேறே வேலையில்லே, அதுக்காக இவ்ளோ டிப்பா கொடுப்பாங்க? அமெரிகாலந்து வந்தாலே உங்களுக்கெல்லாம் தலைகால் புரியல.. காசைக் கன்னாபின்னானு கொடுக்கறீங்க, எங்க கிட்டயும் அதையே எதிர்பார்க்கறாங்க.." என்று புலம்பத் தொடங்கினாள்.

அவளுக்குப் புரியாது. எனக்கே இருபது வருடமோ என்னவோ கழித்துத்தான் புரிந்தது.

ஒரு வேண்டுகோள்: குரோம்பேட்டையில் அந்த ஆட்டோவில் பயணம் செய்தால் ஒரு ரூபாயோ பத்து ரூபாயோ முடிந்ததைக் கூடுதலாகக் கொடுங்களேன். அடையாளம் சொல்லத் தெரியவில்லை. சுத்தமான ஆட்டோ. "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்று, ஒரு பழுப்பேறிய தந்தை-மகன் போட்டோவின் கீழே எழுதியிருக்கும்.

காதல் காக்க

போக்கற்ற சிந்தனை



    ழக்கம் போல் காற்றுக்குப் புழுக்கம் வர நெருங்கியவர்கள் அன்றைக்கு சற்றுச் சலனப்பட்டார்கள். "எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு, ரகு" என்றாள் மது.

"அப்ப என்ன, கல்யாண ஏற்பாடு தானே?" என்றான் ரகு.

"எங்கப்பா விஷம் கொடுத்துக் கொன்னுடுவேன்னு பயமுறுத்தினாரு; அம்மா உடனே ஊருக்கு வானு அடம் பிடிச்சாங்க. ரெண்டு பேரும் காலைல ஹாஸ்டலுக்கு வந்துட்டாங்க. பக்கத்து ஹோட்டல்ல தங்கியிருக்காங்க"

"ரெண்டு நாளைக்கு அப்படித்தான் இருக்கும் மது... இந்தக் காலத்துப் பெத்தவங்க பசங்க விருப்பத்துக்கு குறுக்கே நிக்கமாட்டாங்க.. இதென்ன 1990ஆ?"

"இல்ல ரகு. நாம கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கிறது நல்லது.. எங்கப்பா எப்படிப்பட்டவருனு சொல்லியிருக்கேன் இல்லே?"

"ஏய்.. என்ன ரூட்டு மாத்துற? நீ உங்கப்பாம்மா பேச்சை தான் கேக்கப்போறியா? இப்பவே சொல்லிரு"

"சும்மா இருடா. எனக்கு நம்ம காதல் முக்கியந்தான். அதுக்காகப் பெத்தவங்களை விட்டு வரமுடியாது"

"நான் உங்கப்பாம்மா கிட்டே பேசவா?"

"வேண்டாம். ஒண்ணும் நடக்காது.." என்று தயங்கினாள். ".. ஏன்னா எங்கப்பா ஒரு மாப்பிளையோட இங்க வந்திருக்காரு. நம்ம காதல் அமர காதல்னு வச்சுக்க வேண்டியது தான்"

அதிர்ந்தான். அவன் அதிர்ச்சியைக் கண்டுச் சிரித்தாள். "என்ன அம்பிகாபதி, ஏனிந்தக் கலக்கம்? இம்மட்டுத் தானோ தங்களின் லவ்வ்வ்வு?" என்று அவனை இடித்தாள். "போவுது விடு, ஒண்ணும் ஆவாது. வந்த விஷயத்தைக் கவனி" என்று அவன் கைகளைக் கோர்த்தாள். ரகு மதுவின் கண்களைப் பார்த்தபடி, "ஏய், என்னை ஏமாத்த மாட்டியே?" என்றான். "ம்ஹூம்" என்றாள். "நெஞ்சைத் தொட்டுச் சத்தியமா சொல்லு" என்றான். "நீ தொடுறியா? நான் சொல்றேன்" என்றாள்.

    மது கிளம்பி சிறிது நேரமானதும் திடீரென்று ஏதோ தோன்ற, அவளை செல்போனில் அழைத்தான். "மது, இன்னிக்கு ராத்திரியே எங்க வீட்டுக்கு வந்துரு. எங்கம்மாப்பா கிட்டே சொல்லி கல்யாணம் செஞ்சுக்கலாம். நீ ஹாஸ்டலுக்கு போவாதே, திரும்பி வந்துரு. உங்கப்பாவை என்னால நம்ப முடியாது. ஊர்ல செல்வாக்கு உள்ள ஆளுனு வேறே சொல்லியிருக்கே, உன்னைத் தூக்கிட்டு ஓடிறப்போறான்".

"அக்கறையப் பாரு? அதெல்லாம் ஒண்ணும் ஆவாது.. அப்படி ஏதாவது நடந்தா நானே உங்க வீட்டுக்கு வரேன் சரியா?" என்று போனை வைத்து விட்டாள்.

வீட்டில் சாப்பிடும் பொழுது நடந்ததைச் சொன்னான். "ஒண்ணும் ஆவாது, அப்படி வந்தா நாங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கறோம்" என்றார் அப்பா. அக்கா மட்டும், "எனக்கென்னவோ அவங்கப்பா அவளை இழுத்துக்கிட்டு இன்னேரம் செங்கல்பட்டு போயிருப்பாருனு தோணுது" என்றாள். அவ்வளவுதான். சாப்பாட்டை உதறி வெளியே வந்தான். 'பதினொரு மணி வரை ஹாஸ்டல் அடைக்க மாட்டார்கள். மதுவைப் பார்க்க வேண்டும்'. "மேகம் மூடிக்கிட்டு இடியும் மின்னலுமா இருக்குடா.. எங்கே போறே?" என்ற அம்மாவின் குரல் தொடர, வாசலுக்கு வந்தான்.

வண்டியை எடுத்தான். நர்ஸ் குவார்டர்ஸ் அருகே மேம்பாலத்தில் தெருவிளக்கு ஒன்று கூட எரியவில்லை. ஏறி இறங்கும் பொழுது அவசரத்தில் பள்ளத்தைக் கவனிக்காமல் விழுந்தான். வண்டி சறுக்கி உருண்டு நின்றது. தடுமாறி எழுந்தான். வண்டியை மீட்டு, எத்தனை உதைத்தும் கிளம்பவில்லை. 'இன்னும் மூணு கிலோமீடர் தான் இருக்கும்'. ஓடினான். விழுந்த குதிகால் வலித்தது. 'ஷூவாவது போட்டிருந்திருக்கலாம்'. சகுனம் சரியில்லை என்று நினைத்தான். கரி நாக்கு அக்காவைத் திட்டினான்.

தொலைவில் பெண்கள் ஹாஸ்டலில் வெளிச்சச் செங்கல்கள். வேகம் கூட்டினான். மதுவைப் பார்க்கப் போவது முட்டாள்தனமாகத் தோன்றியது. காதல் வேகம், கண்ணை மறைத்தது. 'இல்லை, இவள் என் மது'. ஒருவேளை மதுவை ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போயிருப்பார்களோ? நடுங்கினான். 'கூடாது, கூடாது. கடவுளே'. ஹாஸ்டல் வாசலுக்குச் சற்று அருகே வந்து நின்றான். இரும்பு கேட்களில் ஒன்றை அடைத்திருந்தார்கள். அல்சேசன் நாய்களுடன் செக்யூரிடி திரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. நாய் என்றாலே அவனுக்கு நடுக்கம். அல்சேசனைக் கணடதும் ஆதிசேசனைக் கண்டது போலானான். மது தங்கியிருந்த மாடிப்பக்கம் இருட்டியிருந்தது. 'அதற்குள் தூங்கியிருக்க மாட்டாளே? எனக்குத் தூக்கம் வராதபோது என் கண்களுக்கு மட்டும் எப்படித் தூக்கம் வரும்? விழித்திருப்பாள். ஒருவேளை...'. வயிற்றில் ஷாட்புட் வீசியது போலானான். மேற்குத்தெரு மதில் சுவரில் டர்ன்ஸ்டைல் கதவு இருப்பது நினைவுக்கு வந்து நடந்தான். 'அங்கிருந்து மதுவின் கட்டிடத்துக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டியதுதான்'.

டர்ன்ஸ்டைல் கதவைச் சங்கிலி கட்டிப் பூட்டியிருந்தார்கள். ஏறி உள்ளே குதித்தான். வலித்தது. அக்கம் பக்கம் யாருமில்லை. ஆதிசேசன் மோப்பம் பிடித்து வருமென்று பயந்தான். 'படியேறிப் போவதென்றால் நிச்சயம் பிடிபடுவோம்'. இன்னும் பயந்தான். கண்ணெதிரே தெரிந்த மழைக்குழாயைப் பிடித்து மெள்ள மெள்ள மெள்ள இன்னும் மெள்ள ஏறி இரண்டாவது மாடியில் இறங்கினான். மாடிச்சுவரோரம் பதுங்கி தவளைமனிதன் போல் நகர்ந்தான். மது இருந்த கட்டிடம் ஓரமாக வந்தான். பக்கத்துக் கட்டிடம். மெள்ளத் தலை நிமிர்ந்து பார்த்தான். 'இந்த மாடிக்கும் பக்கத்து மாடிக்கும் நாலடி இருக்கும் போலிருக்குதே? எப்படிப் போவது'? துணிந்து சுவர் மேலேறித் தாவினான். பயத்தில் அதிகமாகத் தாவிப் பக்கத்து மாடியில் விழுந்து புரண்ட போது எதிரே இருந்த அறைக்கதவில் மோதி விழுந்தான். ஒலி கேட்டு உள்விளக்கு எரிய, வேகமாக எழுந்து மூலைக்கு ஓடி ஒதுங்கினான். விளக்கு வெளிச்சத்தில் அறையெண்கள் தெரிந்தன. விளக்கு அணைந்ததும் அடி வைத்தான். பதினாறு, பதினேழு...இருபத்தொன்றில் நின்றான். உள்ளே அமைதியாக இருந்தது. ஒருவேளை பெற்றோர்களுடன் ஹோடலில் தங்கியிருக்கிறாளோ? 'மது' என்று தாழ்வாக அழைத்தான். கதவை மென்மையாகத் தட்டினான். மறுமுறை தட்டும் பொழுது கீழே அரவம் கேட்டது. ஆதிசேசனின் உறுமல். தொடர்ந்து நொடிகளில் "சத்தம் கேட்டுச்சு.. லைட்டு போட்டேன்.. யாரோ ஓடினாப்புல.." என்று குரல் வர, பதறினான். "மது, மது!". அறைக்கதவை வேகமாகத் தட்டினான், திறந்தது, உள்ளே விழுந்தான்.

செக்யூரிடி வந்து போகும் வரை அமைதியாக இருந்த மது, ரகுவைப் பார்வையால் எரித்தாள். "மது.. உனக்கு எதுனா ஆயிடுச்சோனு பயந்து.. ஒரு வேளை உங்கப்பாவோட.. பதறிட்டேன் மது.. அதான்" என்றான். ஏதோ சொல்ல வந்தவள், அவன் காலருகே சிவந்து வீங்கியிருப்பதைப் பார்த்தாள். "என்னடா இது? காலில் என்ன?" பதறினாள். விவரமெல்லாம் சொன்னான்.

சீறினாள். "எனக்கும் அறிவில்லைனு நெனச்சுட்டியா? எங்கப்பா என்னை மூட்டை கட்டிகிட்டுப் போனா, திரும்பி வரத் தெரியாதா? ஏன் இப்படி லூசாட்டம் நடந்துக்குறே? வண்டில அடிபட்டு.. இருட்டுல ஓடிவந்து.. சுவரேறிக் குதிச்சு.. திருடனாட்டம்.. இதென்ன லூசுத்தனம்? மாட்டிக்கிட்டா ரெண்டு பேருக்கும் தொந்தரவில்லையா? பொறுப்பில்லாம நடக்குறியே? இப்ப உனக்கு எதுனா ஆச்சுனா யார் பொறுப்பு? எப்படி இங்கிருந்து வெளில போவே? காதலிச்சா கண்மூடித்தனத்துக்கு அளவே இல்லியா? இப்ப டாக்டர் கிட்டே எப்படி போவுறது? உன் வண்டியைப் பாத்துட்டு இந்நேரம் போலீஸ் வேறே தேடிட்டிருக்கும்.. கால்ல வேறே அடிபட்டு நிக்கிறே... நான் பொருமிட்டிருக்கேன், என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு?"

"இல்லே.. உனக்குக் கோபம் வந்தா அழுகை வரும்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்.. கண்ணு ரெண்டும் கலங்கியிருக்கே?" என்றான்.

"போடா.." என்று கண்களைத் துடைத்துக் கொண்டு, பாத்ரூமிலிருந்து ஒரு ஈரத்துணியை எடுத்து வந்து அவன் கால்களில் இறுகச் சுற்றத்தொடங்கினாள். "லூசு, செல்போன் இருக்குல்ல? போன் பண்றது தானே?"

"சட்னு மறந்துடுச்சு மது.. உன்னை நெனச்சா மனசுல வேறே எதுக்குமே எடமில்லாம போயிடுது"

"காட்டான். இந்தக் காலத்துல இப்படியொரு காட்டான்.." என்று கட்டை இறுக்கினாள். "சும்மா கத்தாதே.. சுளுக்குதான், சரியாயிடும். மொதல்ல உங்க வீட்டுக்கு போன் செஞ்சு பத்திரமா இருக்கேனு சொல்லு, போலீஸ் தேடி வந்தா அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லு" என்று செல்போனை எடுத்துக் கொடுத்தாள்.

"புத்திசாஆஆலிடா நீ.. அதான் உன்னை லவ் பண்றேன்" என்றபடி வீட்டுக்குச் செய்தி சொன்னான். "தேங்க்ஸ்" என்றான் அமைதியாக. "சாரிடா, கோச்சுக்காதே. நான் வேணா இப்படியே நைசா ஓடிடறேன்".

"கஷ்டம்! போதும் போதும். பேசாம படு. இரு, விளக்கை அணைச்சுட்டு வரேன். எப்படி வெளியே போறதுனு காலைல யோசிப்போம்" என்றபடி அவனை உருட்டி ஓரம் தள்ளினாள். தலையணையருகே கிடந்த புத்தகத்தை நடுவில் வைத்து, "தொடாம படுக்கணும். நீ அந்தப்பக்கம், நான் இந்தப்பக்கம். புக்கைத் தாண்டி வரக்கூடாது" என்றாள்.

"நூல்வேலியா?" என்று சிரித்தான். "ஆமாம், என்ன புக் இது?"

"எல்லாம்.. உன்னை மாதிரி காட்டுவாசிங்க காதலைப் பத்தி.. பேசாமப்படு " என்றாள்.

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே
நீர்பரந்து ஒழுகலின் நிலம்கா ணலையே
எல்லை சேரலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெம் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே?


"ஐயா, எம் தலைவியின் காதலரே! மேகம் மூடிய வானம் இருளை இன்னும் கூட்டியிருக்கிறது; வெள்ளத்தினால் வழி அறியமுடியாத நிலை! அனைவரும் உறங்கும் இந்த வேளையில் மலை, காடு, வெள்ளம், புலி, அரவம் என்ற கொடிய இன்னல்களையும் இந்த இருளையும் பொருட்படுத்தாது எமது ஊர் எல்லையைக் கடந்து வந்து வேங்கை மரம் சூழ்ந்த எம் இல்லத்தையும் எப்படியோ கண்டுபிடித்தீரே? காதலியைச் சந்திக்க இத்தகைத் துன்பம் மேற்கொண்டீரே? வருத்தமாக இருக்கிறது" என்று தோழி தலைவனிடம் சொல்வதாக வருகிறது கபிலரின் குறுந்தொகைப் பாடல்.

ஆதிராவின் பதிவொன்றைப் படித்த போது தோன்றிய கரு.

2011/01/06

மறுபக்கம்

போக்கற்ற சிந்தனை




    திவு எழுதுவது ஏன்? ஒவ்வொருவருக்கும் ஒரு கோணத்தில் இதற்கான விடை கிடைக்கும்.

வாழ்க்கைப் பயணத்தின் சோர்வைப் போக்க எழுதுவதாக இணைய நண்பர் போகன் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஐமேக்ஸ் முப்பரிமாணப்படம் பார்ப்பது போல, பக்கத்துவீட்டு மாமியை சைட் அடிப்பது போல (ஆர்வீஎஸ்சைச் சொல்லவில்லை, சத்தியமா), இரவு நேர அமைதியில் பழைய சினிமாப் பாட்டு கேட்பது போல, ஓடவுஸ் கார்ல் சேகன் படிப்பது போல, என் பிள்ளைகளுக்கு இட்டுக்கட்டிக் கதை சொன்னது போல, அவ்வப்போது என் அப்பாவை எரிச்சலுடன் நினைத்துக் கொள்வது போல, ஐ-94 நெரிசலில் சிக்கி நிற்கும் பொழுது குறுக்கே புகும் ஔடிக்காரியை நடுவிரல் காட்டி ஒம்மாலத் தமிழில் திட்டுவது போல, "ஏன் B வாங்கினே?" என்று அதட்டினால் தன் அறைக்குப் போய் "gsf dad" என்று txtல் அடக்கும் என் பெண்ணின் துணிச்சலை ரசிப்பது போல, உடற்பயிற்சியைப் போல, அரை ஸ்பூன் நெய்யில் குழம்புகருவடாம் வறுத்துக் கலந்து என் பாட்டி செய்த கொத்தவரங்காய் கூட்டை ஒரு பிடி பிடித்த நினைவுகள் போல, அரைத்தூக்க முத்தத்தைப் போல... எழுதுவது ஒரு வித வடிகால். விடுதலை.
[gsf: get some fiber]

மேலாண்மைத் தந்திரம் என்று ஆங்கிலத்தில் காசுக்குக் குசு விட்டுக்கொண்டிருந்த என்னை உலுக்கியெழுப்பி தமிழ்ப்பக்கம் கொண்டு வந்தவர் என் ஆசிரிய நண்பர் அரசன். தமிழ்ப் பதிவுலக அறிமுகம் அவரால் தான். என் பரம்பரை நதியில் என்னோடு தமிழ் ஓடை வரண்டு போகும் நிச்சயச் சாத்தியம் திடீரென்று உறைத்து, எழுதத் தொடங்கினேன். பூத்தூரிகை, மூன்றாம் சுழி, அபிராமி அந்தாதி வலைப்பூக்களில் எழுதிய அனுபவம் முதல் காதலைப் போல் மறக்க முடியாமல் தொடரும் என்றே நினைக்கிறேன்.

தொடக்கத்தின் மறுபக்கம் முடிவு தானே? கொஞ்ச நாளாகவே மூன்றாம் சுழியிலிருந்து ஓய்வெடுக்க நினைத்து வருகிறேன். சென்ற வருடக் கடைசிப் பதிவுடன் விலக எண்ணியிருந்தேன். தமிழ்மணம் தயவால் ஒரு வாரத்துக்கு சிறப்பானதொரு நீடிப்பு கிடைத்தது. வரும் ஞாயிறுடன் மூன்றாம் சுழியிலிருந்து ஓய்வு பெறப்போகிறேன்.

சோர்வைப் போக்க எழுதத் தொடங்கி அதுவே சோர்வைக் கொடுக்கும் போலிருப்பதால் இந்த முடிவு. வேறு சில பிராஜக்டுகள் வைத்திருக்கிறேன். 'நசிகேத வெண்பா' என்று கொஞ்சம் போரடிக்கும் சமாசாரம் எழுதத் தொடங்கியிருக்கிறேன். முடிந்தால் அங்கே சந்திப்போமே?

என் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாகத் தொடங்கிய முயற்சியில், அருமையான நட்புகள் கிடைத்தது என் தகுதிக்கு மேற்பட்டப் பலன். தொடர்வோம்.

தினம் ஒரு இடுகை எழுதிப் பதிவிடுவது சற்றுச் சிரமம். பொய் சொல்கிறேன். மிகவும் சிரமம். அண்டப்புளுகு. முடியாத காரியம். வலைப்பூ தொடங்கிய நாளில் கூட நான் தினமொரு பதிவு போடவில்லை. தொடக்க நாளில் செய்யாததை முடிக்கும் நாளில் செய்யப்போகிறேன் என்கிற முரணில் ஒரு கிக் இருக்கிறது. Grand finale!

நான் எழுதியதையும் பொருட்டாக மதித்துப் படிப்போருக்கும், பின்னூட்டமிட நேரமெடுத்துக் கொள்வோருக்கும், இன்ட்லியில் தொடர்வோருக்கும் நன்றி. (பாழாய்ப்போன followers gadget இன்னும் 'beta' என்கிறது, பட்டா டேய்). Grand finale வாய்ப்பளித்த தமிழ்மணம் அமைப்புக்கு நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்களும் அன்பும்.

குறுக்கெழுத்துப் புதிர்

வெத்து வேலை




   ங்கீத சீசனாச்சே? விட்டு வைப்பானேன்? இசையை மையமாக வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர். இசையறிவு இருந்தால் சுலபம். (அதனால்தான் புதிர் பக்கமே நான் வருவதில்லை)

பின் வரும் 'குறுக்கெழுத்துப் புதிர்' என்ற தலைப்பைக் க்ளிக்கினால், புதிய பக்கத்தில் இசை தொடர்பான குறுக்கெழுத்துப் புதிர் தோன்றும். விடைகளுக்கான துப்புகளும், விடைகளும் புதிர்ப்பக்கத்தில் கிடைக்கும். (என்னைப் போல் பிட் அடித்தே பிழைத்தவர்களுக்காக ஒரு சகோ உணர்வு)

புதிரின் இடப்பக்க மேல் முனையில் தெரியும் '+' சின்னத்தைச் சொடுக்கினால் தமிழ் எழுத்து அட்டவணை விரியும். விடைக்கான எழுத்தை அட்டவணையிலிருந்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிர் பக்கம் திறக்க> குறுக்கெழுத்துப் புதிர்

அறிக:
1. புதிரைச் செயல்படுத்த Flash மென்பொருள் நிறுவி இருக்க வேண்டும். Flash இங்கே பெறவும்
2. சில உலாவிகளில் புதிர்ப்பக்கம் அப்ஸ்கான்ட் ஆகிறது அல்லது கிறுக்கலாகத் தோன்றுகிறது; காரணம் தெரியவில்லை. அத்தனை தொழில்நுட்பம் தெரிந்தால் நான் பூனையை என்றோ துரத்தியிருப்பேனே? புதிர் கடவுள் போலவோ என்னைப் போலவோ தெரிந்தால் மன்னித்து, உங்களுக்குப் பிடித்த இசையை முணுமுணுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2011/01/05

மூத்த குடி



    "இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறோம்?", கேட்டாள் விமி.

"இருபதாயிரத்து எண்ணூற்றுப் பதினாறு பேர். பதிமூன்றாயிரத்து எழுபது ஆண்கள், ஆறாயிரத்து முன்னூற்று அறுபத்திரண்டு பெண்கள்" என்றான் லெஸ்டோ.

"ழண்கள்?"

"என் கணிதம் சரியாக இருந்தால், ஆயிரத்து முன்னூற்று எண்பத்தி நாலு பேர்" என்றான் லெஸ்டோ, புன்னகையுடன்.

"குறை காணவில்லை, மன்னித்துவிடு" என்றாள் விமி. "எஞ்சியவரில், புதியவர் முதியவர் எத்தனை?"

"பத்து வயதுக்குட்பட்ட அறுபத்தி ஒன்பது புதியவர்கள். ஆயிரம் வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தொள்ளாயிரத்து எழுபது, இரண்டாயிரம் வயதுக்கு மேற்பட்டவர்கள் நூற்றுப் பத்து"

"போகுமிடத்தில் இருபது வயது கூட வாழச் சாத்தியமில்லையாம். நம் இன்றைய நிலைக்குத் திரும்பி வர, லட்சக்கணக்கான வருடங்கள் ஆகலாம் என்கிறார்கள் அறிஞர்கள்." பெருமூச்சுவிட்டாள் விமி. தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கவனித்தாள். "என்ன லெஸ்டோ?" என்றாள்.

"நான் சொன்னதைச் சிந்தித்தாயா?"

"தொடங்கிவிட்டாயா? லெஸ்டோ, உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அது காதலா என்று தெரியவில்லை. காதலுக்கு இது நேரமில்லை என்று நினைக்கிறேன்."

"நாமறிந்த உலக வாழ்க்கை முடியப்போகிறது, விமி. இதை விட வேறு என்ன, நேரம் காலம்?"

"அப்படியெனில், நம் இருவருக்குமிடையில் காதலை வேறு போட்டுக் குழப்புவானேன்? புது உலகில் நாம் ஒன்று சேருவோமென்று என்ன நிச்சயம்?"

"நம் காதல் நிரந்தரம், விமி. நம் காதலின் சக்தியே புது உலகில் நம்மைச் சேர்க்கும் சாதனமாகுமென்று உனக்கு ஏன் புரியவில்லை?"

"இப்போதைக்கு சீரகக் கூட்டத்திற்கு நேரமாகிறது என்பது மட்டுமே எனக்குப் புரிகிறது. போகலாம், வா". எழுந்து நடக்கத் தொடங்கிய விமி, லெஸ்டோ தன்னைத் தொடராததைக் கவனித்துத் திரும்பி வந்தாள். "காதல் பேச்சு வந்துவிட்டால், நீ உன் மூளையைக் கழற்றி வைத்து விடுகிறாய்" என்றாள்.

இன்னும் ஊடி நின்ற லெஸ்டோவை நெருங்கி அவன் கைகளைக் கோர்த்து முகத்துடன் முகம் உரசி, "இது, நீ என்னை விடாமல் காதலிப்பதற்கு" என்றாள். அவன் உதட்டில் துரித முத்தமிட்டு, "இது.. புதுவுலகில் என்ன ஆகுமோ என்று மற்றவர் அலைபாயும் போது, நீ மட்டும் நம் காதலைக் காப்பாற்றத் துடிக்கிறாயே, அதற்காக" என்றாள். பதில் முத்தமிடத் துணிந்த அவன் உதடுகளைக் கவ்வி, நாவுடன் கலந்து, உணர்ச்சி பெருக நீண்ட முத்தமிட்டாள். "இது.. உன் நினைவுகளுக்கு. ஒரு வேளை புது உலகில் நாம் சேர்ந்திருக்க வாய்ப்பில்லாமல் போகலாம்" என்றாள். விலகினாள். பிறகு லெஸ்டோவைத் தூண்டி, "ஊடினது போதும். கிளம்பு. பிழைத்திருந்தால் புது உலகில் ஏகாந்தமாய்க் காதலிப்பதைப் பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு என்னுடன் வா. காதலை விடப் பொறுப்பான வேலை நமக்கிருக்கிறது. வாழ்வைத் தேடும் நம் இறுதிப் பயணங்கள், வரிசையாக இன்றிரவு தொடங்கும்" என்றாள்.

இறுதி மக்கட்தொகைப் புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் லெஸ்டோ. தொலை தூரத்தில் சூ இன்னும் தகித்துக் கொண்டிருந்தது. சொட்டு இயற்கைக் குடிநீருக்காக ஏங்கினான். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் வற்றியதும், உலகின் கடைசி மழை அதற்கு முன்பும் பெய்து ஓய்ந்ததும் நினைவுக்கு வந்தது. 'இன்றைக்கு வருடத்தின் ஐநூற்றி ஏழாவது நாள். என் பிறந்த நாள். இன்றைக்கா உலக முடிவு தொடங்க வேண்டும்?' என்று நினைத்தான்.

    பெரியவர் றமாலி, சீரகக் கூட்டத் தலைவர். உலகத்தின் தலை சிறந்த ழண். கூட்டத்திற்கு சீக்கிரமே வந்துவிட்ட றமாலி, சமீபத்தில் மூகணிலிருந்து திரும்பியிருந்த சக ழண் பகுவைப் பார்த்துப் புன்னகை செய்தார். சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த இருபத்தேழு குழுத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உலக வாசிகளின் பணிவான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, பேசத் தொடங்கினார். "உலகத்தின் இறுதி வாசிகளே, வணக்கம். ஐநூறு வருடப் பயிற்சியில் எல்லாமே சொல்லியிருந்தாலும், மூகணைப் பற்றிய விவரங்களை மறுபடியும் கற்றுத் தெளிவடைவோம்"

றமாலி கைகளை உயர்த்தி, விரல்களை அங்குமிங்கும் சுட்டினார். அவர் சுட்டிய இடங்களில் நேரொளி வாயில்களில் பல்வேறு படங்கள் தோன்றின. "எல்லாமே மூகண் காட்சிகள். நம் கோளைப் போலவே மூகணும் சூவைச் சுற்றி வருவதால், இங்கு போலவே பகலிரவு அங்கேயும் உண்டு. நம்முடைய நாளுக்கும் மூகண் நாளுக்கும் சில மணி நேரங்களே வித்தியாசம். நம்மைப் போலவே மூகண் வாசிகளும் பகலில் இயங்கி இரவில் ஓய்வெடுக்கிறார்கள். அந்தக் காட்சிகளைப் பாருங்கள்." அவர் சுட்டிய காட்சிகளில், மூகண் வாசிகள் மிக நெருக்கத்தில் இருந்தனர். "அங்கேயும் ஆண்கள் பெண்கள் என்று இனங்களுண்டு. உங்களைப் போலவே அவர்களும் சந்ததிப் பெருக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்"

"மூத்தவரே, இதுவரை மூகண் வாழ் ழண்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?" என்றாள் விமி.

"யாமறிந்தவரை அங்கே ழண்கள் இல்லை. ஆனால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை" என்றார் பகு.

"ழண்கள் இல்லாமல் எப்படி வாழ முடியும்? என்றாள் விமி. "அப்படியென்றால் மூகணில் உயர்ந்தவர் யார்? யாருக்கு நாங்கள் பணிய வேண்டும்? யார் எங்கள் வாழ்விற்கும் வளத்திற்கும் அருள்வார்கள்? உதவி செய்வார்கள்?"

"ழண்களைப் பற்றிப் பிறகு பேசுவோமே" என்று புன்னகைத்த றமாலி, "அங்கே பாருங்கள்" என்றார். பார்த்த அனைவரின் முகத்திலும் புன்னகை. நேரொளி வாயில் காட்சிகளில் நதிகளும், ஆறுகளும், கடல்களும் பொங்கி ஓடிக் கொண்டிருந்தன. "நம் உலகத்தை விட மூகண் மிகப் பெரிது. மூகணின் நீர் நிலைகள் நம் மொத்த நில அளவுக்கு இணையென்று நம்புகிறோம், இன்னும் பல கோடி வருடங்களுக்கு வற்றாது. மூகணைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் அதன் நீர்நிலைகள் தான் என்பது பொது அறிவு" என்றதும், கூட்டத்தில் பலர் உற்சாகத்துடன் கைகளை உயர்த்தினர். றமாலி தொடர்ந்தார். "அங்கே பாருங்கள். மூகண் வாசிகளில் ஒருசிலர் தோற்றத்தில் நம்மைப் போலவே இருப்பதால், அவர்களுடன் கலந்திருக்க எளிதாக இருக்கும்"

"நம்மை விட மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே? என் பிள்ளைகள் கூட அவர்களை விட உயரமாகவும் வலுவாகவும் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. நாம் அங்கே தனியாகத் தெரிவோம்" என்றார் ஒரு குழுத் தலைவர்.

"மூகண் வாசிகள் பல ரகம் என்றாலும், பெரும்பாலும் இரண்டடிக்கு மேல் யாரும் உயரவில்லை. ஒரு சில வாசிகள் ஐந்தடி வரை வளர்ந்திருக்கிறார்கள். நீங்கள் இந்தத் தோற்றதில் அங்கே தனியாகத் தெரிந்தாலும், போகப் போக சரியாகிவிடும்" என்றார் பகு.

"நடப்பதற்கு கால், கை இரண்டையும் பயன்படுத்துகிறார்களே?"

"கைகள் இல்லை, எல்லாமே கால்கள். நாமும் அவர்களைப் போல் நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த உலகை விட மூகணில் ஈர்ப்பு பல மடங்கு அதிகமென்பதால், நீங்கள் இயற்கையாகவே கால்களையும் கைகளையும் உபயோகித்து நடக்க வேண்டி வரலாம். கவலைப் படாதீர்கள். நாளடைவில் எல்லாம் பழகி விடும்"

"இருந்தாலும், நம்முடைய அளவைப் பார்த்து அவர்கள் பயந்து போய், பழக விரும்பாவிட்டால்?" என்றனர்.

"கவலைப் படாதீர்கள். இங்கிருந்து மூகணுக்கு விண்வெளிப் பயணம் செய்யும் போது உங்கள் எலும்பிலும் சதையிலும் நிறையவே சேதமேற்படும். அங்கே இறங்கும் போது எடையும் வலிவும் குறைந்து ஓரளவுக்கு மூகண் வாசிகள் போலவே இருப்பீர்கள்"

"சாப்பாடு?"

"சாப்பாடு, தண்ணீருக்குப் பஞ்சமில்லை" என்றார் பகு.

"எதற்குப் பஞ்சம்?"

அவர்களைப் பார்த்து ஒரு கணம் தயங்கி விட்டு, "மூச்சுக் காற்றுக்கு" என்றார்.

"குடிக்கத் தண்ணீர் இல்லாத இடத்திலிருந்து மூச்சு விடமுடியாத இடத்துக்குப் போவதா? நல்ல காரியம்" என்று சிலர் எழுந்தனர்.

அவர்களை அமரும்படி பணித்துவிட்டு றமாலி தொடர்ந்தார். "அங்கே மூச்சுக் காற்று வேறு விதம். அங்கே இருக்கும் மூச்சுக் காற்று புதிய வளர்ச்சிக்கு ஆதாரம் என்று ழண் அறிஞர்கள் கருதுகிறார்கள். மூகண் பயணப் பயிற்சிகளில் நீங்கள் அந்த மூச்சுக்காற்றைத் தான் உள்வாங்கினீர்கள். எந்த பாதிப்பையும் அடையவில்லை."

சீரகத்திலிருந்தவர்கள் மெள்ள அமைதியானார்கள். லெஸ்டோ எழுந்து "ழண்களைப் பற்றிப் பிறகு பேசலாம் என்றீர்களே?" என்றான்.

"நம் கோளைப் போல அனேகமாக ஒரே நேரத்தில் தோன்றியிருந்தாலும், ழண்களுக்கு இன்னும் மூகண் தயாராகவில்லை. அங்கே எங்களை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. இன்றைய ழண்கள் உங்களுக்கு உதவி செய்துவிட்டு மூகணிலோ இங்கேயோ அழிவார்கள். எங்களுக்குப் புது உலகில் இடமில்லை"

"என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே? நீங்கள் இல்லாமல் எப்படி வாழ்வது? எங்களுக்கு யார் வழி காட்டுவது?"

றமாலி அமைதியாகப் பேசினார். "ஒவ்வொருவருக்குள்ளும் ழண்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுங்கள். புது உலகக் காற்றைப் பற்றிச் சொன்னேனில்லையா? வளர்ச்சியைப் பல விதங்களில் தூண்டும் அந்தக் காற்று, ழண்களை மீண்டும் புது உலகிற்குக் கொண்டு வரும். உங்களில் பலர் வளர்ந்து விருத்தியடைந்து ழண்களை வெளிக்கொண்டு வருவீர்கள். இது கண்டிப்பாக நிகழும்"

சிறிது நேரத்துக்குப் பிறகு, பகு பேசத் தொடங்கினார். "இன்றிரவு பயணங்கள் தொடங்கும். எஞ்சியிருக்கும் பதினாறு கலன்களில் அனைவருமே சென்றாக வேண்டும். உங்களில் பதினாறு பேர் குழுத் தலைவராக நியமிக்கப் படுவீர்கள். உங்களுடன் வரும் பயணிகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு"

"பதினாறு கலன்களில் இருபதினாயிரம் பேருக்கு மேல் எப்படிப் போவது?"

"குழந்தைகளையும் முதியவர்களையும் பெரும்பாலான ழண்களையும் இங்கேயே விட்டுப் போகவேண்டும். புது உலகில் இடம் கிடையாது. குழந்தைகளும் முதியவரும் இந்தப் பயணத்தின் போது தடையாகத் தான் இருப்பார்கள். மேலும் பயண அபாயங்கள் அவர்களைக் கொன்று விடும்".

கூட்டம் சலசலத்து மீண்டும் அமைதியானது. கடைசிப் பயணம் தவிர்க்க முடியாதென்பதை உணரத் தொடங்கினார்கள். "எப்போது பயணம்?" என்றார்கள், கூட்டத்தில் சிலர்.

"இன்றைக்குத் தொடக்கம். நம்மைப் போல் சூவைச் சுற்றுவதால், மூகண் நமக்கு மிக அருகில் இருக்கும் இந்த நாட்களில் கிளம்ப வேண்டும். மூகண் அருகில் வரும் போது செய்யும் பயணம், சேதத்தைக் குறைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எல்லோரும் புறப்பட்டால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நாங்கள் உங்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய முடியும்" என்றார் பகு.

றமாலி எழுந்து, "ஓய்வெடுங்கள். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உங்கள் அன்பைக் கொடுத்துவிட்டு விண்துறைக்கு வாருங்கள். இன்றிரவு கிளம்பும் கலன்களின் குழு விவரத்தை நானும் மற்ற ழண்களும் தீர்மானித்து வைக்கிறோம்" என்றார்.

    உலக முடிவின் நிச்சயம், அப்போது தான் எல்லோரையும் தாக்கியது. சீரகத்திலிருந்து வெளியேறியவர்கள் குழந்தைகளிடமும் முதியவர்களிடமும் பிரியமான ழண்களிடமும் பேசினார்கள். அணைத்துக் கொண்டார்கள். அழுதார்கள். ஒரு சிலர் நெருங்கி அமர்ந்து வாய் பேசாமல் அந்த இறுதிக் கணங்களை நினைவுக்குள் நிறுத்திக் கொண்டார்கள்.

விமி லெஸ்டோவுடன் கை பிணைத்து, "கொஞ்சம் வெளியே நடக்கலாமா?" என்றாள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் மின்னிய நட்சத்திரங்களையும், இரண்டு சந்திரன்களையும், தொலைவில் தெளிவாகத் தெரிந்த சில வெளிக்கோள்களையும் பார்த்து ரசித்தபடி இரவின் குளிரில் நடந்தார்கள். "ழண்கள் நம்மைக் கைவிட்டது போல் தோன்றுகிறது" என்றான் லெஸ்டோ. விமியின் கைகளை அழுத்திக் கொண்டான்.

"ழண்கள் திரும்பி வருவார்கள் என்றே தோன்றுகிறது" என்றாள் விமி.

"எப்படி?"

"நம்முள்ளிருந்து தான். புது உலகில் நம்மில் சிலர் விருத்தியடைந்து ழண்களை வெளிக்கொண்டு வருவது சாத்தியமென்றே படுகிறது"

"அதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொன்னது, விமி"

"இருக்கலாம். நம் நலனுக்காக அவர்கள் செய்திருக்கும் தியாகத்தை நினைக்கும் பொழுது, நமக்காகவே திரும்பி வருவார்கள் என்றே தோன்றுகிறது. நம்மிலிருந்து ழண்கள் உருவாவது என்பது, எத்தனை மகத்தானது என்று சிந்தித்துப் பார் லெஸ்டோ.."

"விமி, எப்படி உன்னால் நம்பிக்கையோடு இருக்க முடிகிறது?"

"ஒரு வேளை காதல் படுத்தும் பாடோ என்னவோ, யார் கண்டது?" என்று சிரித்தாள்.

"நீ என்னுடன் ஒரே கலனில் வரச் சம்மதிக்க வேண்டும்" என்றான் லெஸ்டோ.

"சரி. அவ்வளவு தானே?" என்றாள்.

"மூகணில் இறங்கியவுடன் என்னுடன் இருக்கச் சம்மதிக்க வேண்டும்"

"சரி, அவ்வளவு தானே?" கண்களை விரித்துச் சிரித்தாள்.

"என்னைக் காதலித்து, மூகணில் என்னை விட்டுப் பிரியாமலிருக்க வேண்டும்"

விமி அமைதியாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"என்ன, பதிலே காணோம்?"

"சொன்னால் தான் புரியுமா?" என்றாள். அருகே, விண்துறையிலிருந்து அழைப்பொலி கேட்டது.

அனைவரும் திரும்பி வந்தபோது குழுப்பிரிவுகளும் பயணத்திட்டங்களும் தயாராக இருந்தன. பயணிகள் எல்லோரும் முறையாகப் பதினாறு கலன்களிலும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். புறப்படத் தயாராக இருந்த கலன்களில், முதல் கலனில் விமியும், மூன்றாம் கலனில் லெஸ்டோவும் குழுத்தலைவர்களாகப் பணிக்கப்பட்டனர். விமி லெஸ்டோவை நெருங்கி, அவன் கைகளை அழுத்தி "லெஸ்டோ, இதை உன்னிடம் சொல்லியாக வேண்டும். நான் பிறந்த நாளிலிருந்தே உன்னைக் காதலிக்கிறேன், புது உலகில் என்னை மறந்து விடாதே லெஸ்டோ" என்றாள்.

"கிளம்பும் போது சொல்கிறாயே, விமி. பேசக் கூட நேரமில்லையே, இது நியாயமா?"

"அதான் புது உலகில் நிறைய பேசப் போகிறேமே?" என்று சொல்லிவிட்டு முதல் கலனில் ஏறினாள்.

    லன்கள் கிளம்பத் தயாரானதும் றமாலி அவர்களிடம் கடைசியாகப் பேசினார். "மூகணின் மூத்த குடிக்கு வாழ்த்துக்கள். பயமில்லாமல் செல்லுங்கள். உங்களுக்குள் ழண் இருப்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்குச் சொல்ல வேண்டியதில், ஒன்றுதான் மிச்சம்" என்றவர், கலன் புறப்பாட்டு விசையை இயக்க உத்தரவிட்டார். சற்று பொறுத்து பேசத் தொடங்கினார்.

"மூகண் வாசிகள் நம்மை விட பலகோடி ஆண்டுகள் பின்தங்கியிவர்கள். மனமும் அறிவும் முதிர்ச்சியடைந்த இந்த நிலையில் நீங்கள் போனால் உங்களுக்கு ஆபத்து என்பதால், சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டோம். சென்ற ஆயிரம் வருடங்களாக உங்கள் மரபணுக்களை மூகண் வாசிகளுக்கு இணையாக சிறிது சிறிதாக மாற்றி வந்தோம். மூகணில் இறங்குமுன் இந்த மாற்றங்களை உணரத் தொடங்குவீர்கள். முதலில், பேசும் சக்தியையும் நினைவுகளையும் இழப்பீர்கள். பயணத்தின் போது பேசும் சக்தியையும் இந்த உலகின் நினைவுகளையும் இழக்கும்படி கலனின் சுகாதாரம் மாற்றப்பட்டிருக்கிறது. அடுத்த சில சந்ததிகளில் வளர்ச்சி குன்றி மூகணின் மற்ற வாசிகளுக்கு இணையாகப் பல்லாயிரம் வருடங்கள் பின்னோக்கிச் சென்று விடுவீர்கள். இந்த உண்மையைப் பயிற்சியில் மறைத்து விட்டோம். ழண்கள் திரும்பி வர நீங்கள் அழியாமலிருக்க வேண்டும். அதற்கு உங்கள் இனத்தைப் பின்னோக்கித் திருப்புவதே சிறந்த வழி. எங்களின் மொத்த அழிவைத் தவிர்க்க சில இன்றியமையாதத் தியாகங்கள் தேவை. புது உலகில் பல்லாயிரம் வருடங்களில் உங்களில் சிலர் வளர்ச்சியடைய, உங்களிலிருந்தே ழண்கள் வெளிவருவார்கள். அதற்கான வேர்விதிகள் உங்கள் மரபணுக்களில் புதைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் வாழ்வைத் தேடி உங்கள் அறிவையும் வளர்ச்சியையும் தியாகம் செய்வதற்கு, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள்" என்று அவர் சொல்லி முடிக்க, திட்டமிட்டபடி எல்லா கலன்களும் வானில் ஏறின. மூகண் என்றும் சில சமயம் மூன்றாவது கண் என்றும் வழங்கப்படும், சூவைச் சுற்றி வரும் நீல நிறக் கோளை நோக்கிப் பயணத்தைத் தொடங்கின.

லெஸ்டோ "விமி, விமி, நம் காதல்.." என்று அமைதியாக அலறினான்.

வரலச்சுமி சரிதம்




பத்தாம்ப்பு தொடங்குறப்ப பெரியவாத்தி கேட்டாரு:
எத்தனமேல படிப்பீங்க? என்னவேலை செய்வீங்க?
அடுத்தடுத்து முறைபோட்டு அவனவுக பதில்சொல்ல
படுக்காமத் தூங்குனவன் பளிச்சுனு முளிச்சிகிட்டேன்.

என்சினியர் ஆவேனுங்க எம்பிஏ படிக்கபோறேன்
சின்னதா தொழில்செய்வேன் சிஏவாச்சும் படிப்பேங்க
எம்பிபிஎஸ் எம்ஏபிஎல் எம்பில்கூட படிப்பேனுங்க
எம்ஜிஆர் சிவாஜியாட்டம் சினிமாவுல சேர்வேனுங்க

அரசியல்ல இறங்குவேனு ஆளுகொண்ணு சொல்லுறப்ப
வரலச்சுமி எந்திரிச்சு வாத்தியாரைப் பாத்துசொன்னா:
ஆளுக்காளு ஆசைப்படி அத்தனையும் அமையட்டும்
கேளுங்கிப்போ என்னாசை குடும்பத்தலைவி ஆவுறதே!

வரலச்சுமி பேச்சுகேட்டு வகுப்பெல்லாம் சிரிப்பாச்சு
பிரம்பெடுத்த வாத்திமூஞ்சி பாத்தபின்னே சரியாச்சு
பரவாயில்ல பேசுபுள்ள பெரியவாத்தி சொன்னபிறவு
வரலச்சுமி எந்திரிச்சு வெவரத்தையுஞ் வெளக்கிவச்சா:

படிப்பிலயோ இஷ்டமில்லே வீட்டுலயும் வசதியில்லே
துடிப்பாத்தேன் இருக்காரு அப்பாரும் தொரத்திவிட
முறையான மாமனைத்தான் கல்யாணம் கட்டப்போறேன்
குறையென்ன இதிலாச்சு எதுக்கித்தனை ஊத்தப்பல்லு?

பத்தாவது படிச்சுமேலே பலபடிப்பும் முடிச்சுப்புட்டு
சித்தாடை சின்னத்தங்கைக் கல்யாணச் சேதிகேட்டு
பரதேசம் போயங்கே பலகாலம் தங்கினவன்
சிரமங்கள் பாக்காமே சிலநாளு ஊருவந்தேன்.

கல்யாணம் முடிஞ்சபின்னே ஊருபோகக் காத்திருந்தேன்
நல்லாவே குரல்கொடுத்து நாலுதரம் பேரைக்கூவி
சென்னைக்கு விமானமேற வேகமாக் கையசச்சு
என்பக்கம் நின்னவளை எட்டிப்பாத்தா வரலச்சுமி!

குடும்பத்தலைவி! இவளெங்கே இந்தப்பக்கம் ஓடிவந்தா?
திடுமென்னு முன்வந்த முன்னாள் தோழியநான்
பார்த்தெத்தனை நாளாச்சு! நலஞ்சுகஞ் சாரிச்சு
ஊர்க்கதை ஒட்டுமொத்தம் பேசிப்பிறகு கேட்டுவச்சேன்:

மணக்குறதா சொன்னபுள்ளே, எங்கேடி உங்குடும்பம்?
கணமென்னைப் பார்த்தவளோ கண்ணுரெண்டும் காவேரியா
பிள்ளைங்க எதுவுமில்லே புருசன்நாலு கட்டியாச்சு
கொள்ளையா விவரமுண்டு குடிச்சுகிட்டே பேசுவமுன்னா.

வரலச்சுமி கையிலொரு விஸ்கிப்புட்டியப் பாத்தசந்தேன்
விரலாலே என்னோட வியப்பையெலாம் ஒடுக்கிப்போட்டு
மனசுக்குள்ளே சுமையிருக்கு விஸ்கியென்ன கசுமாலம்?
கனவுலயும் நினைக்காத கதையெங்கதை கேளுடான்னா:

கல்லூரிக்கு போகல்லே ப்ளஸ்டூவோடு படிப்புசுபம்
நல்லோருங்க ஆசியோடு நடந்தேறிச் சுன்னாலும்
முறைமாப் பிள்ளையோடு முடிச்சுவச்ச கலியாணம்
குறைமாப் பிள்ளையினு கூடும்போது கண்டுக்கிட்டேன்.

அறிவுலகுறை ஆத்தல்குறை ஆண்மையிலுங்குறை போதாம
கறிக்கொதவா சித்திரமாத் தாய்வீடு திரும்பிவந்தா
ஆயுசுங்குறையாகி ஆறுமாசத் திலெறந்து போனான்.
தேயும்நெலாப் போலே தெனமழிஞ்சுப் போனேன்யா.

ஓய்ந்த பெத்தோருக் கெத்தனைநாள் பாரமாவேன்?
தாய்தந்தை மறுபடியும் மணமுடிக்கச் சொன்னாங்க
சிறகிழந்த சின்னப்புறா எந்நெலமை தாளாமே.
பொறந்திருக்கக் கூடாது பொறந்தபின்ன பொலம்புவானேன்?

இன்னொரு கல்யாணம் இரண்டாம் தாரமானேன்
என்வயசு இருபதுதான் அவனுக்கோ ரெண்டுபங்கு
ஊருக்கு வெகுதூரம் பம்பாயில் புதுக்கணவன்
பேருக்குப் புருசந்தான் பொழுதெல்லாம் நரகந்தான்

தினமுங்குடி சச்சரவு நம்பிவந்த பெண்டாட்டிய
மனப்போக்கில் ஏச்சுமடி மாட்டைவிட மோசமய்யா!
எனக்குவந்த எரிச்சலுல என்னசெயவ தறியாமே
கனலெறிஞ்சு கட்டிலோடே கட்டியவனைக் கொளுத்திப்புட்டேன்.

புகலிடம் புரியாமே பிறந்தகம் திரும்பிவந்தேன்
சிகரெட்டுத் தீயினாலே உண்டான விபத்தென்னு
என்னமோ போலீசாரு கதைமுடிச்சு வச்சாங்க
இன்சூரன்சு தந்தபணம் பத்துலச்சம் சொச்சமாச்சு.

முதலாவது புருசங்காரன் பெத்தவங்க செத்துப்போயி
விதவிதமா வீடுநிலம் பணம்நகை பாத்திரமும்
திரும்பிய வருசத்துல திடீர்திருப்பக் கதையாட்டம்
இருக்குற சொத்துபூரா என்கைக்கு வந்துருச்சு.

முக்கிய வேலையா மூணுவருசம் தங்கிப்போக
பக்கத்துல குடிவந்த பரதேசிப் பழக்கமாச்சு
பரதேசி யாருகேளு வெள்ளைக்கார எட்வினாளு
வரலச்சுமி உங்கழுத்தில் தாலிகட்டச் சம்மதமானான்.

இதுக்கெடையே என்னோட அம்மாவும் எறந்துபோக
எதுக்கும்நான் கவலைவிட்டு எட்வினையே கைப்பிடிச்சேன்
அப்பாவோ அண்ணாமலைச் சாமியாரா ஓடிப்போக
தப்பாமே எட்வினோடே தப்ளினூரு போய்ச்சேந்தேன்.

சீரோடும் செறப்போடும் செலவருசம் வாழ்ந்தாலும்
பேருக்கொரு புள்ளகூட பொறக்கவில்லே எங்களுக்கு.
என்னுடைய பாக்கியமா என்னவென்னு புரியவில்லே
தன்னுடைய வாழ்விலினித் தனிவழி வேணுமென்னார்.

தப்ளினூரில் டைவர்சாகி வருசம்போல இருந்துபுட்டு
எப்படித்தான் தள்ளுறது மிச்சகால மென்னிருந்தேன்
பழயகுருடி கதையாட்டம் போயிடாம கதியில்லா
குழந்தைங்களைக் காப்பாத்த ஆசிரமம் நடத்திவாரேன்.

மறந்துபோன வாசகத்த நெனவுக்கேன் கொண்டுவந்தே?
பொறந்த தெனத்துலந்து பதினெட்டு வயசுவரை
இருவது பசங்கயென்னை அம்மானு அழைக்குதுங்க.
ஒருமனசா சொல்லுராசா நானுங்குடும்பத் தலைவிதானே?

அனாதைப் பிள்ளங்களுக்கு அம்மாவா வரலச்சுமி?
கனாவுலகூட உனக்குநிகர் குடும்பத்தலைவி யாருமில்லே
ஒண்ணுக்கு மூணுமுறை கலியாணமுங் கட்டிருக்கே
கண்ணுரெண்டும் தொடச்சுக்கடி கட்டாயமித தெரிஞ்சுக்கடி.

நல்லதா நாலுசொல்லி சந்தேகத்தைக் கேட்டுவச்சேன்:
எல்லாஞ்சரி எதுக்கிப்போ ஏர்போர்ட்டு வந்திருக்கே?
ஆசிரமத் தமிழ்வாத்திய நாலாவதாக் கட்டிக்கிட்டேன்
காசிருக்கு கலிபோனியாத் தேனிலவுப் போறமென்னா!

இதயமிவள் இதயமிது இரும்பினாலே செஞ்சதாமோ?
அதற்குள்ளே வாத்தியாரும் அந்தப்பக்கம் வந்துசேர
அவருடைய கைகுலுக்கி இருவருக்கும் வாழ்த்துசொன்னேன்.
இவளையா கெக்கரிச்சோம்? அசந்தபடி நகந்துபோனேன்.

2011/01/04

பெரியவர் ஆசி


    கொலை என்றே சொல்ல வேண்டும். சற்று முன் உயிரோடு இருந்தவன், என் செயலால் இறந்தான் என்றால் கொலை தானே? இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என்று எழுந்தேன். அடுத்த முறை கவனமாக இருக்க வேண்டும்.

    நான் அப்படி ஒன்றும் தனிப்பட்டவனில்லை என்றாலும், என் தேவைகள் சற்றே மாறுபட்டவை. என் போன்றவர்கள் எல்லோர் வீட்டிலும், பக்கத்து எதிர் வீடுகளிலும், இருக்கிறார்கள்.

"தங்கமான மனுசனாச்சே? சிரிச்சுப் பேசி, எல்லார் கிட்டயும் நல்லா பழகுவாரு. குழந்தைங்கனனா ரொம்பப் பிரியம்."

உண்மை. பத்து முதல் பதினாலு வயதுக் குழந்தைகள், குறிப்பாகச் சிறுவர்கள் என்றால், சாதிமத பேதமின்றி எனக்குப் பிடிக்கும். பருவம் வந்தது தெரியாமல், புரியாமல், குழம்பிப் போயிருக்கும் அவர்களின் அறியாமையை என் போன்றவர்கள் தீர்க்கிறார்கள். பருவ வயதைப் பற்றிய விவரங்களை, அச்சமூட்டும் விதமாகவோ அறிவை வளர்க்கும் விதமாகவோ, புதிய வளர்ச்சிகளாலும் குறித்தகால வெளிப்பாடுகளாலும், அம்மாக்களும் அக்காக்களும் பெண்களுக்கு ஓரளவுக்குச் சொல்லி விடுகிறார்கள். பாவம், பருவ வயது ஆண்களுக்கு யார் இருக்கிறார்கள்? என் போன்றவர்கள் தான். ஆண்களின் பருவ அறியாமையைச் செயல்முறையாகத் தீர்த்து வைத்தாலும் நன்றி பாராட்டாமல் குற்றப்பார்வை கொண்டு தண்டிப்பதால், என் போன்றோருக்குச் சமுதாயச் சந்திப்புக்கான ஒரு முகமூடி இன்னும் தேவைப்படுகிறது. என்ன செய்வது?

"இதெல்லாம் தப்பு மாமா. எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா அடி பின்னிடுவாரு"

"போடா அசட்டுப்பயலே, உங்கப்பா தாத்தா எல்லாருமே இப்படித்தாண்டா வளந்தாங்க. இதெல்லாம் யாரு சொல்லிக் கொடுப்பாங்க? உங்கம்மா பொம்பளயாச்சே? உங்கப்பனும் சொல்லித்தர மாட்டான். மொதல்ல எல்லா பசங்களும் இப்படித்தான் சொல்வாங்க, பிறகு நிறுத்தவே மாட்டாங்க. உனக்கும் வயசாவுதில்ல? இதெல்லாம் உடம்புலேயே வச்சுட்டிருந்தா வியாதி வந்துரும். இப்ப பாரு, இப்ப பாரு.."

"ஐயோ, என்னவோ பண்ணுதுங்க..."

"ஆயிடுச்சு. இனிமே நீ ஆம்பளை தான். இரு, இப்படி வா. இந்த துண்டைப் பிடி கொஞ்சம். எப்படி இருந்துச்சு?"

"ஒரு மாதிரி.. ஆனா எங்கப்பாக்குத் தெரிஞ்சா பெல்டை உருவிடுவாரு"

"நீ சொல்லாம இருந்தின்னா, நானும் சொல்லலை, சரியா?"

பொதுவாக என் தீண்டல்கள் எல்லாமே இப்படிச் சுமுகமாக, எதிர்பார்ப்புகள் அடங்கிய பொய்மறுப்பில் முடியும். இன்றைக்குக் கொலையில் முடிந்துவிட்டது. ஒரு வேளை அவன் தயாராகவில்லையோ என்னவோ? இன்னும் ஒரு வருடம் பொறுத்திருந்திருக்க வேண்டுமோ என்னவோ?!

"ஒரு கல்யாணம் விசேசம் எதுவும் விடமாட்டாரு. சொந்தமோ, பந்தமோ, பங்காளியோ, இல்லே சும்மா ஊர்க் கல்யாணம்னாலும் சரி, விட்டுக் கொடுக்காம வந்துருவாரு. அங்கே இங்கே எதுனா உதவி பண்ணி, ஒண்ணும் இல்லீன்னா கூட அவரு வீட்ல தங்க இடம் கொடுத்து, ஏதாவது செஞ்சுக்கிட்டே இருப்பாரு. பெரியவரு நல்ல மனுசன்"

என் போன்றத் தனிக்கட்டைகளுக்குச் சரியான வாய்ப்பை அமைத்துக் கொடுப்பது கல்யாணம், கோடை விடுமுறை நாட்கள், மற்றும் அவசர விருந்தினர் வருகை தான். இந்த முறையும் அப்படித்தான் தொடங்கியது. என் வீட்டிற்கு இரண்டு கட்டிடம் தள்ளி இருக்கும் சீனிவாசா கல்யாண மண்டபத்தில் கல்யாணக்களை. முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த வெள்ளை ஜிப்பா ஆசாமி அருகே சென்று உட்கார்ந்தேன். பத்து நிமிடங்கள் பொறுத்து என்னைத் திரும்பிப் பார்த்தவர், "நீங்களா? வாங்க, வாங்க" என்றார். நான் புன்னகை செய்தேன். "சரியா போச்சு. இங்க பக்கத்துல வந்து உக்காருங்க. உங்க மாதிரி பெரிய மனுசங்க, பிள்ளைங்களை ஆசீர்வாதம் செஞ்சாதான் கல்யாணம் நடந்த மாதிரி" என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க" என்றேன்.

"அட, நீங்க வேறே. இது என் பொண்ணு கல்யாணம் சார். நீங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி தான். சும்மா இங்க வாங்க. பாருங்க.. ஊர்லந்து மாப்ள வீட்டுக்கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாயிடுச்சு. சத்திரத்துல வேறே இடம் பத்தல. நாலு பாத்ரூம்லயும் தண்ணி வரலிங்க. சின்ன பசங்க வேறே எக்கச்சக்கமா இருக்காங்க. பாவம் என் சம்சாரம் கவலைப்படுறா"

என் காதில் தேன். "என் வீடு காலியா இருக்குது.." என்றேன். எதிரே அவசரமாக வந்த பெண்ணுடன் இருந்த சிறுவனைக் கவனித்தேன்.

"இதா வந்துட்டா பாருங்க.. இங்கே வா. சாரைத் தெரியுதா? சத்திரம் புக் செய்யுறப்ப மேனேஜர் அறிமுகம் செஞ்சாரே.."

"தெரியாமென்ன? நல்லா இருக்கிங்களா? கோவிச்சுக்காதீங்க. மாப்ள அழைப்பு ஆரம்பிச்சுரும். இடம் ஏற்பாடு செஞ்சாகணும். அலஞ்சுட்டிருக்கேன். காபி சாப்பிடறீங்களா? டிபன் பத்து நிமிசத்துல தயாராயிடும்"

"யார் இந்தப் பையன்?" என்றேன். அவள் அருகே நின்றபடி, சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன்.

"இவனா? என் அக்கா பையன். ஸ்கூல் முடிஞ்சிருச்சு பாருங்க. கூடவே சுத்துறான். அக்காவும் மாமாவும் காலைல தான் வராங்க, அது வேறே கூட்டியாரணும். டேய், மாமாவுக்கு வணக்கம் சொல்லுரா"

"அதெல்லாம் வேணாங்க"

"பதினொரு வயசாவுது சார். இன்னும் சரியா விவரம் தெரியல. போன வருசம் வரைக்கும் விரல் சப்பிட்டிருந்தான்னா பாருங்க சார். அடிக்கடி படுக்கைல ஒண்ணுக்கு போயிருவான். கொஞ்சம் மறை கழண்டிருச்சோனு தோணும். மாப்ள வீட்டுக்காரங்க மத்தியில எதுனா ரகளை செஞ்சுருவானோனு பயமா இருக்குது. படிக்க மாட்றானாம், என்ன செய்ய சொல்லுங்க". மிக வருந்தினார் மிதமாக அறிமுகமான, விவரம் தெரியாத என்னிடம். நல்லது.

"வாயை மூடுங்க. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமா வளரும்" என்றார் அவர் மனைவி. பிறகு என்னைப் பார்த்து, "உங்க மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் இருந்துச்சுன்னா, நல்ல வேளைல எல்லாம் சரியாயிறும்" என்றார்.

"உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா? கடை கண்ணி போகணும், யாரையாவது கூட்டி வரணும் இப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க. என் கிட்ட கார் இருக்கு. புது கார். கல்யாணத்துக்கு யூஸ் பண்ணிக்குங்க" என்றேன்.

"ஒண்ணும் வேணாங்க. இவன கொஞ்சம் நீங்க கவனிச்சுக்க முடியுமா? பேசிட்டிருந்தா போதும். நீங்க படிச்சவரு. படிப்புல கவனம் வர மாதிரி எதுனா அட்வைஸ் குடுங்க. என் கூடவே சுத்திட்டிருக்கான். எனக்கு வேலை இருக்குது, அவருக்கு பொறுமை இல்லை. என்னடா, இந்த மாமா கிட்ட பேசிட்டிருக்கியா?"

"என்ன கார் வச்சிருக்கீங்க?" என்றான், என்னிடம்.

சிரித்தேன். "வாயேன், போய்ப் பார்க்கலாம்? ரெண்டு வீடு தாண்டினா என் வீடு தான்"

"இந்தாடா டேய், அப்படியே போய் குளிச்சு டிரஸ் சேஞ் பண்ணிடு. இங்கே தண்ணி வரலை".

    அவனை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டினேன். வீட்டின் வசதியையும் தனிமையையும் பார்த்து வியந்தான். "பெரிய டிவியா! ஆமா, இத்தனை டிவிடி, விடியோ கேம்ஸ் வச்சிருக்கீங்க? பசங்க யாருமே இல்லே?"

"உன்னை மாதிரி யாராவது அடிக்கடி வந்துகிட்டே இருப்பாங்க இல்லை? நான் வயசானவன், என்னோட எவ்வளவு நேரம்தான் பேசிக்கிட்டிருக்க முடியும்? அதான் வாங்கி வச்சிருக்கேன். வேணும்னா டிவிடி பாரேன்"

அவனாகவே டிவிடிக்களைப் புரட்டத் தொடங்கினான். "இதென்னங்க இது? ஓ போடு, உலக்கை சுற்றும் வாலிபன், மன்மத கம்பு, இதெல்லாம் என்ன படம்? கேள்விப்பட்டதே இல்லையே?"

பொய்யான அவசரத்துடன் விரைந்தேன். "எல்லாம் பெரியவங்களுக்கான படம். தப்பா நெனக்காத, உனக்கு இன்னும் இதெல்லாம் பாக்கற வயசாவலை". விழுவானா?

"எனக்கு பனிரெண்டு வயசாகப்போவுது மாமா. எனக்கு எல்லாம் தெரியும். நான் பாக்கறேனே?"

"மொதல்ல உங்கப்பா அம்மாகிட்டே கேளு, அவங்க சரின்னு சொன்னா பாக்கலாம்"

"அதெல்லாம் நடக்கற காரியமா? இதெல்லாம் தப்புனா நீங்க ஏன் வாங்கி வச்சிருக்கீங்க?"

விழுந்தான். "இதெல்லாம் தப்புனு யார் சொன்னது? வயசுக்குத் தகுந்த படம், அவ்வளவுதான். இதெல்லாம் அசிங்கம்னு உங்க அம்மா அப்பா சொல்லியிருந்தா, அவங்க கிட்டே சொல்லாம நீ இதை பாக்கறது நல்லதில்லை, இல்லியா? எனக்கு உன் வயசுல பசங்க இருந்தா, மொதல்ல இந்த மாதிரி படமெல்லாம் என்னன்னு விவரமா சொல்லிட்டு, சரியான டயத்துல நானே போட்டுக் காட்டுவேன், இதுல தப்பு என்ன இருக்கு?" என்றேன்.

"உங்கள மாதிரி அப்பா கிடைச்சா லக்கு மாமா" என்றான். திடீரென்று ஒரு டிவிடியை எடுத்து, "பூம் பூம் ரப்பர்தான்" என்று உற்சாகத்துடன் குதித்தான். "இந்தப் படம் வச்சிருக்கீங்களா? ஐயோ, ஸ்கூல்ல இதைப் பத்திப் பசங்க சொல்லிக் கேட்டிருக்கேன் மாமா. ப்ளீஸ், இதை மட்டும் பாக்கறேனே?" பாடத் தொடங்கி இடுப்பை ஒடித்தான். பூம் பூம் ரப்பர் தான், ரப்பர் தான்.

"இப்ப வேணாம். டயமாச்சு பார். மாப்ள அழைப்புக்கு லேட்டாயிரும். அப்புறம் பார்க்கலாம். மொதல்ல உங்க சித்தி சொன்ன மாதிரி டிரஸ் மாத்திட்டு வா. போவலாம்" என்று அவன் வேகத்தை அடக்கி ஆர்வத்தைத் தூண்டினேன்.

அதற்குப் பிறகு நிறைய பேசினோம். தன்னுடைய தாய் தந்தை மேல் இருந்த சிறிய கோபங்களையெல்லாம் என்னிடம் எடுத்துச் சொன்னான். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பேசினால் தான் பழகுவான். நெருக்கத்திற்கான அச்சம் விலகும். மாப்பிள்ளை ஊர்வலத்தில் பாதி நேரம் கூடவே வந்தான். இரவு விருந்து சாப்பிடும் போது எதிரில் உட்கார்ந்திருந்தான். சாப்பாடு முடிந்ததும் அவன் சித்தியிடம் விடை பெற்றேன். "நீங்க யாராவது கொஞ்சம் வசதியா படுக்கணும்னா எங்க வீட்டுக்கு வாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை" என்றேன்.

"வேண்டாங்க, உங்களுக்கு எதுக்கு தொந்தரவு? முகூர்த்தத்துக்கு காலைலயே எந்திரிக்கணும். நீங்க காபிக்கே வந்துருங்க இங்க"

"என் வீட்ல தண்ணி பிரச்னை இல்லே. கொசு கிடையாது. கூட்டம் கிடையாது. அதான் சொன்னேன். உங்க இஷ்டம். இல்லேன்னா, காலைல பார்ப்போம்" என்றபடி வெளியேறி வீட்டுக்கு வந்தேன்.

எதிர்பார்த்தபடி, பத்தே நிமிடங்களில் தொலைபேசியடித்தது. "மாமா, நான்தான் பேசுறேன். என் அக்கா பையன் உங்க வீட்டுல படுக்கட்டுமா? இங்கே திடீர்னு மாப்பிள்ளை வீட்லேந்து இன்னொரு கூட்டம் வந்துடுச்சு. எங்க ரூமுங்களையும் காலிசெஞ்சு குடுத்துட்டோம். இவன் கொஞ்சம் தொந்தரவு தரான். உங்க வீட்டுல எடம் நல்லா இருக்குதுன்றான். பரவால்லிங்களா? அவரையும் கூட அனுப்புறேன்"

"தாராளமா நீங்க எல்லாருமே வந்து படுக்கலாம். ஒரு அரை மணி பொறுத்து வரீங்களா? நான் பழக்கடை வரைக்கும் போய் வந்துடறேன். வீட்டையும் சுத்தம் செஞ்சு வச்சுடறேன்" என்றேன்.

"இல்ல சார், அவன அனுப்புறேன். நான் வர லேட்டாகும்" என்றார், மனைவியிடமிருந்து தொலைபேசியை வாங்கிக் கொண்டவர்.

பத்து நிமிடமாகவில்லை. எதிர்பார்த்தபடியே, அவன் மட்டும் தனியாக வந்தான். பேருக்காகக் காரைத் துவக்கி வைத்துக் கொண்டிருந்தேன். வெளிக்கதவைத் திறந்து கொண்டு வந்தான். "மாமா, உங்க வீட்டுல படுக்கச் சொன்னாங்க..வெளில போறீங்களா" என்றான்.

ஒரு மணி நேரம் காரில் சுற்றிவிட்டு வந்தோம். சிறிது நேரம் டி.வியில் விடியோ கேம்ஸ் விளையாடினான். பிறகு பொறுக்காமல், அவன் விரும்பிய நீலப்பட டிவிடியைப் போட்டேன். வியப்பா அதிர்ச்சியா என்று சொல்ல முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். விவரமெல்லாம் சொன்னேன்.

படுத்தபோது நள்ளிரவாகி விட்டது. பத்து நிமிடங்களில் அயர்ந்துத் தூங்கி விட்டான். நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் தான் நெருங்குவதற்குச் சரியான நேரம். முதல் முறையாக அனுபவமேற்படுத்தும் போது, மாற்றார் நெருக்கத்தின் அதிர்ச்சியை ஓரளவுக்குக் குறைக்கும். அரை மணி பொறுத்து அவன் அருகில் படுத்துக் கொண்டேன். என் மூச்சு வேகமானது. அவன் போர்வையை விலக்கினேன். பித்தான்களை விலக்கி, அவனுடைய அரை நிஜாரை மெள்ளக் கீழிறக்கினேன். ஜட்டி கையில் பட்டது. மெள்ள வருடிக் கொடுத்தேன். இலேஸ்டிக் பிடிப்பை விரல்களால் லாகவமாக விலக்கியபோது எதிர்பார்ப்பில் எனக்கு உடலெங்கும் பரபரப்பு. இன்னும் அவன் எழுந்திருக்கவில்லை.

என் அனுபவத்தில் சிலர் இத்தனை நேரம் விழித்திருந்தாலும், ஒரு வித எதிர்பார்ப்பினால் அமைதியாக இருப்பார்கள். இவன் எப்படி என்று தெரியவில்லை. விரலளவு வேசலின் எடுத்து தடவினேன். என் கை படப்பட, எதிர்பார்த்தபடி, உயிர் வந்தது போன்ற ஒரு எழுச்சி. எத்தனை மென்மை! எத்தனை இளமை! என்னை மறந்து அவன் கைகளைப் பிடித்த போது, விழித்து விட்டான்.

"என்ன மாமா இது, சே!"

வழக்கமான எதிர்ப்பு தான். "சும்மா இரு. எல்லாம் சொல்லித் தரேன். சுகமா இருக்கும் பார்"

"வேணாம் மாமா, நான் சத்திரத்துக்கே திரும்பிப் போறேன். எங்க அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு. சித்தப்பா கூட உதைப்பாரு."

"சும்மா இருடா, சொன்னா கேளு. இல்லின்னா மாமாவுக்குக் கோவம் வரும்". கையை வீசி, எழுந்திருக்க முயன்றவனை அழுத்தினேன். என்ன செய்தேனென்று தெரியவில்லை, நொடிகளில் இறந்து விட்டான். கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

    று நாள் காலை, சற்று நேரம் கழித்துத் தான் சத்திரத்துக்குப் போனேன். கவனமாக இருந்தேன். டிபன் சாப்பிடும்போது அவனுடைய சித்தி வந்தார். "என்ன சார், இன்னும் உங்க வீட்டுல தூங்கறானா?" என்றார், கூட இருந்தக் கணவர்.

"யாரு?" என்றேன்.

"என் அக்கா பையன் மாமா.."

"இல்லிங்களே, நீங்க எல்லாரும் வருவீங்கன்னு பாதி ராத்திரி வரை உட்கார்ந்திருந்தேன். யாருமே வரலியே?"

"சரிதான். மாப்பிளை வீட்டு ரூம்லயே படுத்துட்டானோ என்னவோ!" என்று அவசரமாக வெளியேறியவர், நான் டிபன் சாப்பிட்டு முடித்ததும் திரும்பி வந்தார். "எங்கயும் காணோமே மாமா? உங்க வீட்டுக்குப் போறதா சொன்னானே?"

"நான் பழக்கடைக்குப் போகணும், அரை மணி பொறுத்து வாங்கனு சொன்னனே போன்ல? நான் கடைக்கு போயிட்டுத் திரும்பி வந்தப்போ யாருமே இல்லை. பாதி ராத்திரி வரை வெயிட் பண்ணனே? நீங்க வரலைனு நினைச்சு நான் தூங்கிட்டேன். எழுந்ததும் லேட்டு" என்றேன்.

பதறினார் சித்தி. "இப்போ எங்க அக்கா வந்து கேட்டா, நான் என்ன பதில் சொல்லுவேன்? எங்க போய் தேடுவேன் இந்த அரைலூசை? முகூர்த்தத்துக்கு வேறே நேரமாச்சு". கண்களிலும் குரலிலும் அதிர்ச்சி. "அரை லூசு, அரை லூசு".

"பாவம், பையனை ஏன் திட்டுறீங்க? நீங்க போய் முகூர்த்த வேலையை கவனிங்க. நான் வேணா தேடிப் பாக்கட்டுங்களா?" என்றேன் அமைதியாக.

பாரதி கருத்தில் பிழை



    து பாரதியார் எழுதிய, பிழையுள்ள கதை.

வசந்த காலம், காலை நேரம். தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில், திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில், சுமார் நூறு பிரயாணிகள் கூடியிருக்கிறார்கள்.

இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். இன்ன ஊரில், இன்ன தேதியில், இன்னாருக்கு சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள். பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலே இருந்து தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுமங்கலி பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலை குனிந்து நின்றுகொண்டு, போவோர் வருவோரைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில முகம்மதிய ஸ்த்ரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேங்குழல், சுசியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரரும் பகற்கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணி நேரம் தாமசமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. சிறிது தூரம் உலாவலாமென்று கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலே மிகவும் அழகுள்ள ஒரு முகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக்குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகி விட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்ற, எனக்கு மிகவும் பரிதாபமுண்டாயிற்று. அவன் முன்னே போய் நின்று கொண்டு, "தம்பி, ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.

என்னிடத்தில் எப்படியோ நல்லெண்ணம் உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம் கொள்ளாமல் "ரயில் எப்போது வரப் போகிறது?" என்று கேட்டான்.

"இன்றைக்கு ஒரு மணி நேரம் தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். இது நிற்க, நீ வருத்தப்பட்டுக் கொண்டிருந்த காரணம் யாது?" என்றேன்.

அந்த முகமதியப் பிரபு சொல்லுகிறான்:"என் துயரம் மற்றவர்களிடம் சொல்லக் கூடியதன்று. எனினும் உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தை தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்த புண்ணியமுண்டு, இந்த உபகாரத்தை நான் இறந்து போகும் வரை மறக்க மாட்டேன்".

"முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும், தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்" என்றேன்.

"எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார் பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். நான் என் பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதா மிகவும் ஏழையாக இருந்தார். எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய லாட்டரிச் சீட்டு ஏலம் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ பத்து ரூபாய் கடன் வாங்கி அனுப்பினார். அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணி விடவேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் அவருக்கு விழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு நடத்தின வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டு கோடிக்கு அதிபதியாகி விட்டார். நான் பதினைந்து வயதாக இருந்த போது அவர் இறந்து போய் விட்டார். அவர் சொத்தெல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது.

என் தந்தை இறக்குந்தறுவாயில் சிறிய தகப்பனாருக்கு சில லக்ஷங்கள் பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்து, என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்து கொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொள்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம் புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. என் சிறிய தகப்பனார் என் தாயாரின் அனுமதியில்லாமலே விவாகத்தை முடித்து வைத்துவிட்டார்.

சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார், என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்துவிட்டாள். சிறிய தகப்பனார் என் சொத்தில் தம்மால் இயன்றவரை தாசிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு குடல் வெடித்துச் செத்துப் போனார். சொத்தை நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சொத்து கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. என் மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந்தரமன்று.

அதோ, ஸ்டேஷன் பக்கத்தில் முகமமதிய ஸ்த்ரீகள் கூட்டம் தெரிகின்றதோ? நடுவே இருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை இல்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை. அவளுக்கு ஒரு நகை வாங்கிக்கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையைக் கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் மூவரும் முரண்பட்டு என் பிராணனை வதைக்கிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப் படுகிறது. நான் என்ன செய்வேன்?

நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி 'அடே! நீ உன் பத்தினிமார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்து கொள்ள விட்டு விடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக் கொள். உன் துக்கம் தீரும்' என்றார். நம்முடைய மனதில் தோன்றுவது தான் கனவாக வருகிறதென்பதை நான் அறிவேன். ஆனாலும், நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளை என்று தான் கருதுகிறேன். யாரைத் தள்ளுவது யாரை வைத்திருப்பது என்று என் புத்திக்குத் தென்படவில்லை. அதற்காகத் துக்கப்படுகிறேன்" என்று முகம்மதியப் பிரபு சொன்னான்.

இதற்குள் ரயில் வருகிற சத்தம் கேட்டது. அவன் திடுக்கென்றெழுந்து "சலாம்! சலாம்!" என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான். நானும், "நல்ல வேளை, இந்தக் கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்பு சொல்லுமுன் ரயில் வந்ததே" என்று மகிழ்ச்சியோடு ரயிலேறப் போய்விட்டேன்.

இதுவரை படித்தது, பாரதியார் 1920ல் எழுதி வெளியான கதையின் சுருக்கம். (நடையும் எழுத்தும் அவருடையது; சுருக்கம் காரணமாகச் சில பகுதிகளை நீக்கி இருக்கிறேன்). என் அறிவையும் மனதையும் தொட்ட கதைகளில் இது ஒன்று. அந்த நாளில் இப்படி கதை எழுதி முடித்திருப்பது, அல்லது முடிக்காமல் விட்டிருப்பது, புரட்சியே. பின்வந்த இது போன்ற பல கதைகளுக்கு முன்னோடி. சமுதாய நோக்கோடு எழுதப்பட்ட இலக்கியம்.

இனி, உங்களுக்கு ஒரு கேள்வி. பாரதியின் இந்தக் கதையில் கருத்துப்பிழை இருக்கிறது. அது என்ன என்று சொல்ல முடியுமா? நீங்களும் என்னைப் போல் திருமுழியாளரென்றால், இதோ பாரதியே துணைக்கு வருகிறார். தான் எழுதிய 'முகம்மதிய ஸ்த்ரீகளின் நிலமை' என்ற கட்டுரையில் தொடர்கிறார் பாரதி:

இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் என்னிடம் முதலாவது கேட்ட கேள்வி:"ரெயில்வே ஸ்தானம் என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாகவே நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?"

"வெறும் கற்பனை" என்று நான் சொன்னேன்.

"என்ன கருத்துடன் எழுதினீர்?" என்று அவர் கேட்டார்.

"கதையென்றெடுத்தால் கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனினும் என்னை மீறியே கதைகளிலும் தர்ம போதனைகள் நுழைந்து விடுகின்றன. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால், அதனின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மையாகும்" என்றேன்.

அப்போது அந்த முஸ்லிம் நண்பர், "அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது" என்றார்.

"என்ன பிழை?" என்று கேட்டேன்.

"அக்கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள்.அப்படிச் சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்து கொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி 'ஹராம்' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடனிருக்கையில் அவளுடன் பிறந்த மற்ற ஸ்த்ரீயை ஒரு முஸ்லிம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை" என்றார்.

"இதைக் கேட்டவுடன் நான், "சரி தான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாததலால், அது போலே முகம்மதியர்களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்த முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி எழுதிவிடுகிறேன்" என்றேன்.

இதைத் தொடர்ந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் ஒரு திருத்த அறிக்கையையும் வெளியிட்டார்: "ரெயில்வே ஸ்தானம் என்ற கதையில் நான் கூறிய தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும், பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லிம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றி மேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லா ஹூத்த ஆலா அருள் புரிவாராக".

இதைப் படித்ததும் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்:
      1) பாரதி கூட சில சமயம், விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார் என்ற வியப்பு
      2) 'ஒரு சகோதரி இருக்கும் பொழுது இன்னொரு சகோதரியை மணம் புரிவது இஸ்லாத்தில் சாத்திரப்படி தவறு' என்று பாரதி நண்பர் சொல்வது போல், இந்து மதத்தில் எங்கும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை என்ற ஐயம். (சட்டம் தடுக்கிறதே தவிர மதம் தடுக்கிறதா தெரியவில்லை) உங்களுக்கு இதைப் பற்றித் தெரியுமா?
      3) தவறு என்று அறிந்ததும் உடனே பொதுவில் தவறையும் திருத்தத்தையும் வைத்த பாரதியின் மனப்பக்குவத்தை மதிக்க முடிகிறது. 'விவரங்கெட்ட பார்ப்பனரே' என்று கொடி பிடிக்காமல், தவறை அழகாக எடுத்துரைத்த அவருடைய முகம்மதிய நண்பரின் மனப்பக்குவம் பாரதியை விட மேலாகத் தோன்றுகிறது. நண்பர் பாரதியைக் கேட்கும் "என்ன கருத்துடன் எழுதினீர்?" என்ற கேள்வியில் இருக்கிறது ஆழம். அதற்குப் பிறகு தான் "பிழை" பற்றியே சொல்கிறார். பாரதியின் பதில் வேறு விதமாக இருந்திருந்தால், "பிழை" பாரதிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது. இந்தக் கேள்வியின் ஆழத்தை, அதைப் பகிர்ந்து கொண்ட இரு பண்பட்ட மனங்களை, பக்கம் பக்கமாகப் புல்லரித்து எழுதலாம். பாரதிக்கு இருந்த நண்பர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது.

ஒருசிலர் அவரை வெறும் பார்ப்பானாக அறிவார்கள். பெரும்பாலானோர் பாரதியை, 'பாப்பா பாட்டு' 'கண்ணண் பாட்டு' 'தேசீயப் பாடல்கள்' பாடியக் கவிஞராக மட்டும் அறிவார்கள். பாரதியின் கதைகளும் கட்டுரைகளும் அவர் காலத்துக்கு முற்போக்காக இருப்பதாகக் கருதுகிறேன். பாரதியின் கவிதைகளைப் போல் அவருடைய கதைகளும் கட்டுரைகளும் சொல்லில் வடித்த சிற்பங்கள். காலத்தை வென்றவை. வாய்ப்பு கிடைக்கும் பொழுது படிப்பீர்கள் என்ற நம்புகிறேன்.

பாரதியின் கவிதைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புகளை உங்களுக்கு இந்த இடுகை வழியாக அறிமுகமோ நினைவோ படுத்த எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பை எண்ணி மகிழ்கிறேன்.

2011/01/03

பத்தினிப் பட்டம்





ஒன்று காற்று, ஒன்று ஊற்று
ஒன்று வானம், ஒன்று மேகம்
ஒன்று பகல், ஒன்று இரவு
ஒன்று நேரம், ஒன்று காலம்
ஒன்று பிறவி, ஒன்று மரணம்
ஒன்று கணவன், ஒன்று காதலன்.

எனக்குக்
கணவன் வேண்டும்.
காதலனும் வேண்டும்.

எதுகையும் மோனையும்
கவிக்கழகு.
இமையும் புருவமும்
விழிக்கழகு.
சொல்லும் பொருளும்
மொழிக்கழகு.
குழலும் யாழும்
இசைக்கழகு.
கணவனும் காதலனும்
எனக்கழகு.

கணவன் மூச்சுக் காற்று.
காதலன் குருதி ஊற்று.
இரண்டும் வேண்டும் எனக்கு.

ஒன்றும் ஒன்றும் இரண்டாகும் கணித விதி.
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகும் காதல் விதி.
ஒன்றும் இரண்டும் ஒன்றாகும் இது
காதல் கணிதம்.

மூன்றில் அடங்கும் இரண்டு,
என்றாலும்
இரண்டிருந்தால் தானே மூன்று?
கணவா, காதலா
உங்களுக்கு புரியவில்லையா?
உங்களுக்குப் புரிந்த
நயம்
உலகத்துக்கு புரியாத
பயமா?

உனக்கும் எனக்கும் உனக்கும்
புரிந்து விட்டால்
மற்றவருக்குப் புரிந்தால் என்ன?
மயிராய்ப் போனால் என்ன?

எனக்கு வானமும் வேண்டும்
மேகமும் வேண்டும்.
காமக் கண்ணோ, காதல் பார்வையோ
எதுவானாலும்
வானம், பூமி, மேகம்
என்றும்
கணவன், நான், காதலன்.

ரசமென்றால் எதுவும் ரசம்
விரசமென்றால் எதுவும் விரசம்.

ஒரு கண்ணனுக்குப் பல ராதை
ரசம்.
ஒரு ராதைக்குப் பல கண்ணன்
ஏன் விரசம்?
நானே ராதை. நானே சீதை.
உனக்கு நான் சீதை.
உனக்கு மட்டும் ராதை.

பகலும் இரவும் தனியென்றாலும்
இரண்டும்
சேர்ந்தால் தானே நாள்?
நான் ஆளானது
பகலையும் இரவையும்
சேர்க்கும் நாளாவதற்கே.

நேரமும் காலமும்
வேறில்லை.
காலக் கண்ணோட்டத்தில்
நேரம் பறக்கும்.
நேரத்தோடு சேர்ந்தால்
காலம் மறக்கும்.
எனக்குக் காலமும் வேண்டும் நேரமும் வேண்டும்.
காதலனும் வேண்டும் கணவனும் வேண்டும்.

எனக்குப் புரிந்த விதி
உனக்குப் புரியவில்லையா பகலே?
உனக்கும் புரியாதா இரவே?
நீ அறியாயோ காலமே?
நீ மறந்தாயோ நேரமே?

உண்மையில் புரியவில்லையா?
ஊர் பேச்சில் அச்சமா?
கொலையின் பாவம்
உலையில் போக்கும்
உலகம்
உள்ளொன்று நினைத்துப்
புறமொன்று செய்யும்
கலகம்.

ராமனையும் கண்ணனையும் மணந்த
திருமகள்
வழிவந்த நான்
சொல்கிறேன்
என் கண்களின் மொழியினைப் படி.
ஊர் தலையில் விழட்டும் இடி.

கணவன் பிறவி நெருக்கம்.
காதலன் மரண மயக்கம்.
பிறவியும் மரணமும்
ஆன்மா எனக்கு
ஒன்றல்லாமல் வேறல்ல,
இரண்டும் கலந்த மூன்று.
நான் மூன்று.
எனக்குள் நீயும் நீயும்
அடக்கம்.

வா கணவா, வா காதலா.
ஊர் பழி ஊருக்கு,
எனக்கல்ல.
உனக்கல்ல.
உனக்குமல்ல.

நான்
மலருக்கு மலர்
வரும் வாசம்.
மாநிலங்கள்
சேரும் தேசம்.

ஐவரை மணந்த பெண்ணை
அம்மன் என்று எல்லையிலே
கோவில் கட்டும்
இரண்டு பெண்டாட்டிக்காரர் உலகில்
எனக்கு
உனக்கு
உனக்கும்
இடமில்லையா? யார் சொன்னது?

பத்தினிப் பட்டம்
யாருக்கு இட்டம்?
நீ காற்றானால் கணவா,
நீ கயிறானால் காதலா,
சேர்ந்திந்தப் பட்டத்தைப்
பறக்க விட்டுப் பார்ப்போமே?

மூன்றிலுண்டிரண்டு.
உமை நானே.
கண்ணகி மாதவி நான்.
சீதையும் ராதையும் நானே.
நமை யாரும் மோசம் சொன்னால்
உலகை எரிப்பேன்.
உன்னை அணைப்பேன்.
உன்னையும்.

இந்தக் கவிதைக்கரு என் தோழி சாவித்திரிக்குச் சொந்தம்.

சிலர் இருந்த நேரத்தை விட இறந்த பிறகு அதிகமாகத் தொந்தரவு செய்வார்கள். சாவி அந்த வகை. மறைந்தாலும் வளரும் நினைவுகள். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பழகினோம். ஒன்றாகச் சில நாள் படித்தோம். திரைக்கதை, பாடல் என்று கூட்டாக வேலை செய்தோம். அந்தத் துறையின் ஊழலும் ஏழ்மையும், அவளுடைய காதலும் என்னுடைய தேடல்களும், எங்களைப் பிரித்தது எனலாம். தொலைநோக்கு இல்லாமல் தற்காலிகத் தொல்லைகளுக்குள் சிக்கித் தொலைந்தோம் எனலாம்.

சாவி. பாதை வகுத்துக் கொண்டே பயணம் செய்த வியத்தகுப் புரட்சிப் பெண். இது அவள் நினைவில்.

ஆழமும் சிகரமும்



    சிலர் எழுத்தில் அறிவின் ஆழம் புலப்படும். வியாசரில் தொடங்கி வரிசையாக சாக்ரேட்ஸ் அரிஸ்டாடில் ஷேக்ஸ்பியர் ந்யூடன் வோடவுஸ் அசிமவ் கார்ல் சேகன் என்று அந்தப் பக்கம் தாவினாலும், இந்தப்பக்கத்திலேயே நின்று சங்கம், கம்பன், காளிதாசன் என்று இறங்கி சமீப தாகோர், பாரதி, ஜெயகாந்தன், கருணாநிதி வரை நிறைய பேர் எழுத்தில் அறிவின் ஆழத்தை அறியலாம்.

மாறாக, சிலர் எழுத்திலும் பேச்சிலும் அறியாமையின் சிகரம் புலப்படுகிறது. இந்த விஷயத்தில் நான் உச்சியிலேறி கொடி நட்டவன்; எனினும், என்னருகில் கல்லையுருட்டி அதன் மேலேறிக் குரல் கொடுக்கும் சிலரை அவ்வப்போது காண்கிறேன்.

பாரதியின் படைப்புகளைக் கிண்டல் செய்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார் மதிமாறன் எனும் மதியாளர். பழைய புத்தகம் என்றாலும், பாரதி பிறந்த நாள் ஒட்டிய சமீபப்பதிவுகளின் வழியாகத்தான் முதன் முறையாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத்தில்
  • பாரதியின் சாதாரணக் கவிதைகள் சில துணிச்சலுடன் அலசப்பட்டிருக்கிறதா என்று படித்தால், இல்லை
  • பாரதியின் செய்கைகளை ஆதாரத்துடன் ஆய்ந்து அவர் பாடல்களின் முரண்கள் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றவா? கிடையாது
  • கருத்துத் திருட்டு, இலக்கணப்பிழை என்று ஏதாவது.. அதுவும் இல்லை.

இன்ன காரணத்துக்காக பாரதியின் படைப்புகள் மோசமானவை என்று விவரமாக 'அறிவுடன்' சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் பெருத்த ஏமாற்றம். 'சேம் சைடு கோல்' என்று கடிந்து, பாரதி வரிகளையே திரும்ப எழுதி, பாரதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தகுதி தவறானது என்ற வலியுறுத்தலை ஏற்க முடியவில்லை. போலியாகப் படுகிறது. வித்தியாசமான புத்தகமாக இருக்குமோ என்று படித்தால், மதப்பிராந்தி மயக்கத்தில் வெளிவந்தக் கருத்துக்கள் என்பதைத் தவிர வேறெதையும் அறிய முடியவில்லை.

காழ்ப்புணர்ச்சிக்கு உரிமை உண்டென்றாலும், அதன் வேகம் வலுவானதென்றாலும், இப்படியா? வருந்துகிறேன். தாஜ்மெஹலின் பின்னணியில் சாதிமதத்தைக் கண்டு, அதன் மேல் கல்லெறிவதைக் காணப் பொறுக்கவில்லை. முன்பே சொன்னது போல் அறிவின் ஆழம் தொடக்கூடியதே; அறியாமையின் சிகரமும் கைக்கெட்டும். நம் நோக்கத்தில் இருக்கிறது வீச்சு.

வாளினும் ஊடகம் கூர். Sadly, intellectual vandalism is not a crime; worse, it is protected by what prompts it: freedom of expression.

பேச்சு, எழுத்துரிமைகளைப் பொதுவில் வைத்ததால் மதிமாறன் கருத்துக்கு இடமுண்டு.

பாரதிக்கும் அந்த உரிமை இருந்தது, செம்மையாகப் பயன்படுத்தினார். நூறு வருடங்களுக்குப் பின்னும் அவரின் படைப்புகளைத் துய்க்கிறோம்.

எனக்கும் அந்த உரிமை உண்டு. பாரதியாரின் படைப்புகளை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தாக்கிச் சீரழிக்க நினைப்பது, அறிவின் ஆழமாகத் தோன்றவில்லை.

உங்களுக்கும் அந்த உரிமை உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

2011/01/02

கேள்வி எந்திரம்





    வ்வொரு வருடமும் நிறையக் கேள்விகளுடன் தொடங்குகிறது. ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் காண்பதிலேயே வருடப்போது கழிந்துவிடுகிறது. சில கேள்விகள் அடுத்த வருடத்துக்கு மாற்றப்படுகின்றன; நிறைய கேள்விகள் தங்கிவிடுகின்றன. பதில் காணாமல், மாற்றாமல், எங்கோ எண்ணவானில் விரியும் கேள்விகள் திரிசங்கில் என்றைக்காவது ஒருநாள் சிக்குவேனோ என்கிற அச்சம், அவ்வப்போது கேள்வி வடிவில் தோன்றும். அந்தக் கேள்வியும் குட்டி போட்டுத் திரியும்.

என் தாத்தா சுவற்றைப் பார்த்தபடி தனக்குள் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பார்; மூப்பு என நினைத்தேன், இப்போது புரிகிறது - இளைமையிலிருந்து அவர் கேட்டுத் தொலைத்த கேள்விகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார் என்பது. நான் ஏதாவது ஒரு தந்திரம் கற்றாக வேண்டும் - கேள்விகள் திரிசங்கில் மனக்கால் பதிக்குமுன். என் மனைவி மக்கள் எனக்கு alzheimer அல்லது senile delusion இரண்டில் எதுவென்ற கேள்வியையும், இவனை என்ன செய்வது என்ற உப கேள்வியையும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் கேட்டுக் கொள்வார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால் நான் கேள்வித் திரிசங்கில் தமிழுலாச் செய்யும் விவரம் புரியாமல் கேள்வி கேட்டு விழிப்பார்கள். அவர்களும் என் கேள்விகள் திரிசங்கை கூகிலில் தேடிச் சலிப்பார்கள். 'Is he deranged?' என்று கேள்வி கேட்பார்கள். அவர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டுபிடிக்கும் வேலையில் நாளை இறங்கலாம்; அல்லது, முடியாய்ப் போனதெனத் தொடர்ந்து கேள்விகள் கேட்கலாம். அநேகமாக அதைத்தான் செய்வேன். என் பாட்டனாருக்கு முப்பாட்டனார் காலத்துக் கேள்விகள் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றன. This is my legacy.

ஒன்று, இரண்டு, மூன்று... வெளிவந்தேன். How insanely depressing! கேள்விகளுக்குப் பதில் தேடி ஓயாது. அதற்காகக் கேள்விகள் கேட்காமல் இருக்க முடியுமா? ஒன்றிரண்டு பதில்களுக்கானத் தேடலில் தானே, வாழ்க்கை வருடம் முழுதும் சுவைக்கிறது? இந்த வருடத்துக்கான கேள்விகள் எந்திரத்திலிருந்து வெளியே வரத் தொடங்கிவிட்டன. சுறுசுறுப்பானத் தொடக்கம் ...
... என்று நினைத்தால் மூன்று நாள் கூட ஆகவில்லை, அதற்குள் ஹைபர் வேகத்தில் இயங்கத் தொடங்கிவிட்டதே? 'off' விசை எங்கே? என்ன, மென்பொருள் விசையா? மைக்ரோசாஃப்ட் தயாரிப்பா? யாராவது இதை நிறுத்துங்களேன்? Please help me!

இந்த வருடத்துக்கான என் கேள்வி எந்திரத்திலிருந்து:
1. இடைவேளைக்குப் பிறகான என் கதையையாவது நிறைவாக எடுத்துச் செல்வேனா? அடுத்த வருடத்துக்கான மாற்றல் கேஸ் என்று படுகிறது.
2. பிழைப்புக்கான சமாதானங்களை விட்டு, உடலும் உள்ளமும் ஒருங்கே இணைகிறத் தொழிலைச் செய்வேனா? நிச்சயம் திரிசங்கு.
3. வாரத்தில் இரண்டு நாட்கள் ஆத்திரம் சினம் தவிர்த்து, நிதானமாக, பரந்த மனப்பான்மையுடன், இந்த வருடமாவது நடப்பேனா? ஹ்ம்ம்ம்..பெருமூச்சில் கேள்வி அதற்குள் கரைந்து விட்டது போலிருக்கிறதே?
4. பணிவிடை செய்யாவிட்டாலும், தள்ளாமை தள்ளுமுன் என் அம்மாவுடன் சில வருடங்களாவது தங்கியிருப்பேனா? கிளைக் கேள்வி: யாருடைய தள்ளாமை?
5. நினைவு தெரிந்த நாள் முதல் நிறைய பேருக்கு ஏமாற்றத்தையும் மனவேதனையையும் கொடுத்திருக்கிறேன். அவர்களைத் தேடிப் பிடித்து மன்னிப்பு கேட்பேனா? அடச்சே, அதற்குள் கிளைக் கேள்வி: இனியாவது ஏமாற்றாமல் வேதனை தராமல் இருப்பேனா?
6. தொலைத்த நட்புக்களைத் தேடிப் புதுப்பிப்பேனா?
7. 2011 தேர்தலிலாவது போட்டியிடுவேனா அல்லது வெளிவட்டத்தில் நின்று கும்மியடிப்பேனா? ம்ம்.. 2013 வரை யோசிக்கணும்.
8. பகட்டுக்காக வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களைத் தூசு தட்டிப் படிப்பேனா? அல்லது, படிக்க மாட்டேன் என்று தெரிந்தே புத்தகம் வாங்கும் பழக்கத்தை நிறுத்தி, வருடத்துக்கு இரண்டு மரங்களைப் பிழைக்க வைப்பேனா? ஒரு கேள்வி கேட்டால் இன்னொன்று இலவசம் என்றார்கள், அதான்.
9. மூன்றாம் சுழி வலைப்பூவிலிருந்து என்றைக்கு ஓயப் போகிறேன்? இரண்டு மார்க் கேள்விகள் எப்பவுமே பிடிக்கும். நோ திரிசங்கு. பிழைத்தது!

இதைத் தவிர, சிதறியத் துண்டுக் கேள்விகள் சில. கொஞ்சமும் தொடர்பில்லாமல் எங்கிருந்தோ வந்து விழுந்தத் துண்டுகள். யாரையா அது..? கொஞ்சம் தள்ளி நின்னு மிசினை ஓட்டுங்கய்யா...
9. இன்னும் எத்தனை நாள் சாதிச்செங்கல் எறிந்து கொண்டிருப்போம்?
8. அடுத்தப் பதினைந்து ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழரை வழிநடத்த, உருப்படியான தலைமைக்குழு உருவாகுமா?
7. இந்தியாவில் அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்கான பொதுநோக்குடன் நடப்பார்களா? அல்லது 2020 புஸ்வாணமா?
6. செல்ஃபோனுக்கு அடுத்தபடி, பரவலாக ஏற்கப்படும் கண்டுபிடிப்பு என்னவாக இருக்கும்?
5. ஒற்றைத் தலைவலிக்கு மருந்து கண்டுபிடிப்பார்களா?
4. 2012ல் உலகம் அழியுமா? ரப்பர் எங்கிருந்து வரும்?
3. சுஜாதா இலக்கியவாதியா, இலக்கியப்பாதியா?
2. ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவாரா?
1. ஒபாமையை எதிர்க்கவல்ல வஸ்தாது எவளாவது, பேலினைத் தவிர, ரிபப்லிகன் கட்சியில் வருவாளா?

2011/01/01

புத்தாண்டில்

சிரித்து வாழ வாழ்த்துக்கள்.



சொல்லாதே துன்பத்தைச் சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே...