tag:blogger.com,1999:blog-85834740865413151122024-03-13T01:17:41.146-05:00மூன்றாம் சுழிமூன்றாம் சுழிஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger318125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66656068778617647282018-06-23T23:38:00.000-05:002018-06-24T10:35:08.360-05:00புள்ளி - 4<span style="font-size: 280%;">    <b>.<br />
  . . .<br />
. . <font color="white"><b>.</b></font> . .</b></span><br />
<br />
<br />
<center>◄◄ <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/blog-post.html" target="_BLANK">1</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/2-1.html" target="_BLANK">2</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/3-1-2.html" target="_BLANK">3</a><br />
</center><br />
<span style="line-height: 180%;">         <span style="font-size: 280%;"><b>இ</B></SPAN>ந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவிலுக்கு போய் வருகிறேன். ஒவ்வொரு சனிக்கழமையும் நெடியோனைப் பார்த்து உள்ளுக்குள் உருகி வருகிறேன். என்னைச் சுற்றி இருக்கும் பிறரைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்கும். இத்தனை பக்தர்களில் எத்தனை பேர் அச்சுதனை அமரர் ஏறை பச்சை மேனியனை புருஷோத்தமனை நேரில் சந்தித்திருக்கப் போகிறார்கள்?<br />
<br />
ஐம்பத்தாறு சனிக்கிழமைகள் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஐம்பது வாரங்கள்.<br />
<br />
புள்ளி.<br />
<br />
"என்னடா இது? வந்ததும் வராததுமா இப்படிப் பண்றே? எல்லாத்தையும் திருப்பி எடுத்து வந்துட்டே?" என்றார் அம்மா. எனக்காகக் கொடுத்திருந்த சாமி படங்கள்.. பரம்பரையாக வந்த சிவன் பார்வதி படம்.. குலதெய்வம் வெங்கடாஜலபதி படம்.. அம்மா பூஜை செய்த வெள்ளி கிருஷ்ணர் மகாலக்ஷ்மி குட்டி விக்ரகங்கள்.. தாத்தா வீட்டு திருநாங்கூர் பெருமாள் அச்சு.. ஸ்ரீசக்ரம்.. ருத்ராக்ஷம்.. என்று எல்லாவற்றையும் திருப்பினேன். அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது.. "என்ன இப்படி பண்றான் இவன்?" என்று பூஜையறை சுவற்றைப் பார்த்துக் கேட்டார். <br />
<br />
சுவரில் காஞ்சிப் பெரியவர் படம். ஜெயேந்திரர். "அந்தாளையே புடிச்சு உள்ளே போட்டாச்சு. அவரைக் கேட்டு என்ன பிரயோஜனம்?" என்றேன். அம்மாவுக்கு இன்னும் அழுகை வந்துவிட்டது. கோபமும்.<br />
<br />
"என்னடா இது? இப்படிப் பண்றே? உனக்கே நல்லாருக்கா?" என்று அதட்டினாள் அக்கா.<br />
<br />
"நான் என்ன பண்றேன்? எனக்கு நம்பிக்கையில்லை. நீங்களாவது உபயோகிக்கலாம்னு அமெரிக்காலந்து மூட்டை கட்டி எடுத்துட்டு வந்தேன்.. இல்லைன்னா அங்கயே குப்பைனு தூக்கிப் போட்டிருப்பேன்"<br />
<br />
அம்மாவுக்கு என்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அந்த நிலையிலும் "இவனை ஒண்ணும் செஞ்சிடாதே அபிராமி" என்றாள். <br />
<br />
நான் குளிக்கத் தயாரானேன். "துண்டு இருக்கா.. குளிக்கணும்.. ப்ளைட்ல வந்து ட்ரெயின்ல வந்து பஸ்ல வந்து.. ரொம்ப களைப்பா இருக்கு.. உடம்பெல்லாம் நாறுது" என்று நான் குளியலறைக்குப் போனேன்.<br />
<br />
"பயப்படாதம்மா.. அவனை இந்த மாதிரி பண்ண வச்சதே அபிராமி தான்.. " என்று என் அக்கா சொன்னது தெளிவாகக் கேட்டது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.<br />
<br />
புள்ளி.<br />
<br />
லன்டனில் விமானம் தரை தொட்டதும் பைலட் ஒருவர் என்னைத் தேடி வந்தார். "உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. விமானம் நின்றதும் உங்கள் மனைவியுடன் பேசுங்கள்" என்று தொலை பேசியைக் காட்டினார். என்னிடம் செல்போன் இருக்கிறது என்றேன். <br />
<br />
"பதட்டப்படாமல் சொல்லு" என்றேன் மனைவியிடம். <br />
<br />
அவள் மறுமுனையில் அழுது கொண்டே சொன்னபோது திக்கென்றது. என் பெண்ணைக் காணோம். இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்துத் தேடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து நான் பயணத்தில்.. ஐயோ என்று அடித்துக் கொண்டேன். <br />
<br />
"என்ன ஆச்சு?" இப்போது நான் பதறினேன். <br />
<br />
தொடர்ந்து அழுதாள் மனைவி. "என் பெற்றோரை எனக்குப் பிடிக்கவில்லை" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்டாள் பெண். பதிமூன்று வயது. எங்கே போயிருப்பாள்? நண்பர்கள் வீட்டில் தேடியாகி விட்டது. அவளால் கார் ஓட்ட முடியாது. சைக்கிள் ஒட்டக்கூடத் தெரியாது. எங்கே போயிருப்பாள்? மறுமுனையில் போலீஸ் வந்தது. அவள் எழுதியிருந்த கடிதம் பற்றி கேட்டார்கள். துன்புறுத்தினோமா கொடுமைப்படுத்தினோமா.. என்று என்னிடம் விசாரித்தார்கள். முதல் நாளிரவு மைகேல்ஸ் காய்கறி மார்கெட் பக்கம் என் பெண்ணின் அடையாளங்களுடன் ஒரு சிறுமி வெள்ளை நிற பிக்கப் டிரக் ஒன்றில் ஏறியதாக யாரோ சொல்ல அதைப் பற்றி விசாரித்தார்கள். என் உறவினர் நண்பர்கள் யாரிடமாவது அப்படி பிக்கப் டிரக் இருக்கிறதா என்று கேட்டார்கள். பகீரென்றது. இல்லை இல்லை. என் பெண்ணைப் கண்டுபிடியுங்கள் என்று கெஞ்சினேன். அழுகை தொண்டையை அடைத்தது. உடனே திரும்பி வருவதாகச் சொன்னேன். "தைரியமாக இருங்கள்" என்றார்கள். <br />
<br />
பெண்பிள்ளை கடத்தலில் முதல் இருபத்து நாலு மணி நேரம் மிக முக்கியம். அதற்குள் முக்கிய திருப்பங்களோ தடயங்களோ கிடைக்கவில்லை என்றால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண்பிள்ளை கடத்தலில் உடனடியாக தொலைவாக இடம் மாற்றுவார்கள். பெண்பிள்ளை கடத்தலில் முதல் நாலைந்து நாட்கள் போல் அனேகமாக உள்ளூர் சுற்று வட்டாரத்தில் தனியிடத்தில் அடைத்து வைப்பார்கள். பனிரெண்டு வயதுக்கு மேலான சிறுமிகளுக்கு சுய நினைவுகள் சுத்தமாக அழியும் வரை தொடர்ந்து நாலைந்து நாட்களும் போதைப் பொருள் கொடுத்து... அதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்தைத் தீர்மானிப்பார்கள். பெரும்பாலும் வெளியூர் ஆசாமிகளுக்கு விற்று விடுவார்கள். இதைப் பற்றி ஆராய்ந்து கதை கதையாக எழுதியிருக்கிறேன். எல்லாம் இப்போது வந்து அச்சுறுத்தியது. அதுவும் என் பெண் எங்களைப் பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருக்கிறாள். அவளைக் கண்டுபிடித்தாலும் DCFS காரர்கள் பிடித்துக் கொள்வார்கள். <br />
<br />
லன்டன் ஏர்போர்ட்டில் தாறுமாறாக ஓடினேன். என் லக்கேஜ் கூட எடுக்கவில்லை. எப்படியோ போகிறது. எனக்கு என் பெண் வேண்டும். பத்திரமாக ஆபத்தில்லாமல் வீடு திரும்ப வேண்டும். அடுத்த இரண்டு அமெரிக்கன் விமானங்களில் சிகாகோவுக்கு இடமில்லை. நிலையை எடுத்துச் சொன்னேன். முதல் வகுப்பில் இரண்டு இடம் இருக்கிறது என்றார்கள். ஒரு டிக்கெட் ஆறாயிரம் டாலர். முதல் வகுப்பு டிக்கெட் எடுக்க காசில்லை. பெண் காணாமல் போய்விட்டாள் என்பதற்காக டிக்கெட் விலை குறைக்க முடியாது என்று சொல்லாமல் சொன்னார்கள். எனக்குத் தலை சுற்றியது. யுனைடெட் பிரிடிஷ் டெல்டா லுப்தான்சா என்று மாறி மாறித் தேடி கடைசியில் மறு நாள் காலை ஏர் லிங்கசில் எழுநூறு டாலருக்கு இடம் பிடித்தேன். பெண் காணாமல் போய்விட்டாள் என்றாலும் உடனடியாகக் கிடைத்த விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்க மனமில்லாமல் சுற்றியது மிக உறுத்தியது. பெண்ணை விட ஆறாயிரம் டாலர் பெரிதா? ஆறாயிரம் போகிறது என்று கிரெடிட் கார்ட் கொடுத்து எடுத்திருக்க வேண்டுமோ? இந்நேரம் சிகாகோ சேர்ந்திருக்கலாமோ? ஆறாயிரம் டாலர் என்றதும் என் தயங்கினேன்? என் பெண் முக்கியமில்லையா? 'என் பெற்றோர்களை எனக்குப் பிடிக்கவில்லை' என்று பெண் எழுதி வைத்தது நினைவுக்கு வந்தது. இத்தகைய உணர்வுச் சிக்கல்கள் யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.<br />
<br />
'என் பெண் கிடைக்க வேண்டும்.. கிடைக்க வேண்டும்.. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். யாரிடம் சொல்கிறேன்? அதைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுள் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.<br />
<br />
"கண்டிப்பாகக் கிடைப்பா. பயப்படாதீங்க" என்று ஸ்பஷ்டமாகத் தமிழில் குரல் வர, திரும்பினேன். பக்கத்தில் இருந்தவரை அதுவரை கவனிக்கவே இல்லை. "பயப்படாம போங்க.. எல்லாம் சரியாகிடும்" என்றார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். <br />
<br />
"உங்களுக்கு எப்படி?"<br />
<br />
"எனக்கு எல்லாம் தெரியும்" என்றார். உடனே அமைதியுடன் சிரித்து "நீங்க அமெரிக்கன் ஏர்லைன் காரிகிட்டே நிலைமையை விவரமா சொன்னதை நானும் கேட்டேன்.. உங்க பின்னாடியே நின்னுட்டிருந்தேன்.. அதான்" என்று என் தோளை ஆதரவாகத் தொட்டு அழுத்தினார். சுரர்ர்ர்ரென்றது. "எல்லாம் சரியாகிடும்" என்றார் என்னை தீர்க்கமாகப் பார்த்து.<br />
<br />
நிச்சயம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.<br />
<br />
புள்ளி.<br />
<br />
"நாளைக்குப் பணத்தை ரிலீஸ் பண்ணுகிறோம்" என்றான் வசீம். <br />
<br />
நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மூன்று வருடங்களாக சவுதியில் கைதி போல் வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிமமதி. ப்லாக் நண்பரை நம்பிப் பணம் கொடுத்துத் தொடங்கிய தொழில். என்னையும் எமாற்றி வாடிக்கைக் காரரையும் ஏமாற்றி... சவுதி அரசாங்கமே வாடிக்கை என்றால் சும்மா விடுமா? நண்பர் அவசரமாக என்னை அழைத்து நீங்கள் தான் எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பதற மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வந்தவன் ஏறக்குறைய கைதி போல் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றி இருக்கிறேன். <br />
<br />
உள்ளே காலடி வைத்ததும் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டுள் என்பது புரிந்தபோது தாமதமாகி விட்டிருந்தது. உள்ளே வந்து விட்டிருந்தேன். அமெரிக்க பாஸ்போர்ட் இருந்ததால் இரண்டு மாதங்களில் கொஞ்சம் கனிவுடன் நடத்தினார்கள், இல்லையெனில் நண்பர் செய்த மோசடிக்கு என்னை ஏதாவது செய்திருக்கலாம். என்னதான் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் பார்க்க இந்திய லட்சணம் தானே? அதுவும் தமிழ்க் கறுப்பு. சவுதியில் இந்தியருக்கு மதிப்பு பிலிபினருக்கு கொஞ்சம் உயர்வான மட்டில், அவ்வளவே. மத்தியக் கிழக்கு முழுதும் அப்படியே என்று நினைக்கிறேன். <br />
<br />
வீட்டுக்கு வந்தேன். டிரைவர் கண்ணன் மட்டும் இல்லையென்றால் எனக்கு இன்னும் கடினமாக இருந்திருக்கும். தினம் என்னை ரிபைனரி-வீடு என்று மேலும் கீழும் சாரதியாக இருந்து.. வெள்ளி சனியில் தயங்கி தயங்கிப் பழகி.. ஒரு பிடிப்பில் இருந்தான். "கண்ணன்.. எல்லாம் முடிஞ்சிருச்சு.. நாளைக்குப் பணம் வந்ததும் சவுதிக்கு ஒரு சலாம்" என்றேன். "நல்லது சார்.. ரொம்ப சந்தோசம் சார்" என்று சிரித்தான்.. கன்னத்தில் குழி விழ அவன் சிரிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.<br />
<br />
உடனே சென்னையில் ப்லாக் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன். "என்னை மன்னிச்சிருங்க.. உங்களை இப்படி வம்புல மாட்டிவிட எண்ணியதேயில்லை.. நல்லவேளை முடிச்சிருச்சே.. ரொம்ப சாரி துரை.." என்றார். <br />
<br />
"விடுங்க.. விடுங்க.. மூணு வருசமாயிருச்சு விடுங்க.. ஏதோ செஞ்சுட்டீங்க.. ஐம் ஓவர் இட்" என்றேன்.<br />
<br />
மறுநாள் பணம் கிடைக்கவில்லை. "நீங்க கடன் வாங்கினதா பேங்குல முடக்கிட்டாங்க" என்றான் வசீம்.<br />
<br />
"வாட்?" அதிர்ந்தேன். "என்னமோ பிழை நடந்திருக்கு.. யார் கிட்டே கடன்?"<br />
<br />
"அப்தப் சையத் பைசல்னு ஒருத்தர் புகார் கொடுத்திருக்கார். ஜட்ஜ்மென்ட் வாங்கி பேங்குல சமர்ப்பிச்சிருக்காரு. சவுதி நாட்டவருன்றதால அவருக்கு முன்னுரிமை இருக்கு"<br />
<br />
விழித்தேன். வசீம் தொடர்ந்தான். "அது மட்டுமில்லே.. கடன் தொகைல மிச்சம் எட்டாயிரம் ரியால் நீங்க தர வரைக்கும் ட்ரேவல் பேன் பண்ணியிருக்காங்க.. நீங்க வெளியே போக முடியாது"<br />
<br />
எனக்கு தலை சுற்றியது. நடுங்கினேன். என்ன இது, புதுக் கதை?<br />
<br />
வசீமிடம் அப்தப் பற்றிய முழு விவரம் வாங்கிக் கொண்டு கண்ணனுடன் விரைந்தேன். அப்தப் விவரமாகச் சொன்னார். ப்லாக் நண்பர் இந்த கான்ட்ராக்ட்டைக் காட்டி லெட்டர் அப் கிரெடிட் பாணியில் சுத்தமாக வழித்து எடுத்து கடன் வாங்கியிருந்தார். தனிக் கடன். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்தப்பிடம் சொல்லி பார்த்தேன் "ஐயா.. இது நான் வாங்கின கடன் இல்லை.."<br />
<br />
அப்தப் விடவில்லை. "இந்த கான்ட்ராக்ட் பேர்ல கடன் கொடுத்தேன்.. கான்ட்ராக்ட் பணம் கடன் திருப்பத்தான் எடுக்குறேன்"<br />
<br />
ப்லாக் நண்பர் (?) மறுபடி மன்னிப்பு கேட்டார். இந்த முறை அழுதார். "உங்க கால் செருப்புக்கு கூட நான் சமானம் கிடையாது துரை.. உங்களை எப்படி ஏமாத்தியிருக்கேன்.. எனக்கு மன்னிப்பே கிடையாது.. எனக்கு வெட்கமா இருந்ததால உங்க கிட்டே மறைச்சுட்டேன்.. எனக்கு விமோசனமே கிடையாது.. ஆனா என்னை நம்புங்க.. நான் எப்படியாவது இந்தப் பணத்தைத் திருப்பிடுவேன்.."<br />
<br />
"எப்படிங்க? எப்படித் திருப்புவீங்க? இதென்ன ஆயிரமா பத்தாயிரமா ஒரு லட்சமா திருப்பித் தரேன்னு நீங்க சொல்றதுக்கு? நானும் நம்புறதுக்கு?"<br />
<br />
ஒரு வாரம் அலைந்தேன். பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைத்தால் போதுமென்றாகிவிட்டது. கண்ணன் என்னிடம் "சார்.. இந்த ஊர்ல வாஸ்தா இருந்தா எல்லாமே நடக்கும் சார்.. நான் ஒருத்தர் கிட்டே கூட்டிப் போறேன்.. நூறு இருநூறு ரியால் கொடுத்தா விஷயத்தை முடிச்சுக் கொடுத்துருவாரு.." என்றான். நம்பிக்கையில்லாமல் சரியென்றேன்.<br />
<br />
எங்கேயோ சுற்றி கவனமாக என்னை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றான் கண்ணன். என்னை வரவேற்றவருக்கு அறுபது வயதாவது இருக்கும். முகம் நிறைய புன்னகைத்தார். உள்ளே அழைத்து உட்கார வைத்து டீ கொடுத்தார். சிறிய தட்டில் அல்வா போல் ஒரு இனிப்பு. "சாப்பிடுங்க" என்றார். "மஜ்தூல் பேரீச்சம். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும்.. நபிகள் கைப்பட விதைச்ச மரத்துலருந்து வந்தது.. மக்காவுக்கு பத்து கிலோமீடருல இருக்கு தோப்பு"<br />
<br />
என் விவரங்கள் எல்லாம் கேட்டார். உடனே நாலைந்து பேருக்கு செல் போன் செய்தார். பிறகு அமைதியாக "உங்க கான்ட்ராக்ட் கடன் பணம் திரும்ப வராது. ஆனா அந்த எட்டாயிரம் ரியாலை தள்ளுபடி செய்யுறதா சொல்லிட்டாரு அப்தப். உங்க பயணத் தடை நாளைக்கு நீக்கிடறதா பேங்குல சொல்லிட்டாங்க.. என்னால இதான் பண்ண முடியும்"<br />
<br />
என்ன செய்வதென்று புரியவில்லை. மூன்று வருட உழைப்பு வீணான துடிப்பு. ப்லாக் எழுத்தின் திறனை வியந்து எந்தப் பொறுக்கியையோ நம்பிக் கடன் கொடுத்த அசட்டுத்தனம். அதைத் தொடர்ந்து ஏமாந்த முட்டாள்தனம். எல்லாம் என்னைப் புரட்டி எடுத்தது. <br />
<br />
"போகுது விடுங்க.." என்றார் பெரியவர். "நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்" என்று ஆதரவாக என் தோளை அழுத்தினார். "இந்தப் பணம் உங்களது இல்லை.. யாருக்கோ நீங்க பட்ட கடன்"<br />
<br />
"இல்லிங்க.. எப்படி.."<br />
<br />
"உங்க நண்பரை மன்னிச்சு நிலைமையை ஏத்துக்கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் போங்க.. எல்லாம் உன்னதமா இருக்கும்"<br />
<br />
நீண்ட பெருமூச்சு விட்டேன். ப்லாக் நண்பரை மன்னித்தேன். சட்டி சுட்டதடா. மெள்ள எழுந்தேன். பெரியவருக்குத் தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்தேன். சிரித்தபடி வாங்கிக் கொண்டார். "கொஞ்சம் இருங்க" என்று உள்ளே சென்றார். திரும்பி வந்து "நிறைய இழந்துட்ட வருத்தம் உங்க முகத்துல தெரியுது. இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செஞ்சவங்களை மன்னிச்ச பெரிய மனசு உங்களுக்கு நிம்மதியையும் உன்னதத்தையும் கொடுக்கும்" என்று ஒரு சிறிய உருள் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். "விலை மதிப்பில்லாத ஒன்றை உங்களுக்கு பரிசா கொடுக்க விரும்பறேன். எடுத்துக்குங்க"<br />
<br />
பிரித்தேன். திடுக்கிட்டேன். என் மனைவியின் உறவினர் சாகும் தறுவாயில் எனக்குக் கொடுத்தப் பிள்ளையார். அதே வில்லேந்திய பிள்ளையார். எத்தனை வருடங்களுக்குப் பின்.. அதுவும் இங்கே..<br />
<br />
திகைப்பு அடங்காமல் அவரை ஏறிட்டேன். "இது எப்படி உங்க கிட்டே? ஆச்சரியமா.. நம்பவே முடியலியே?"<br />
<br />
பெரியவர் என்னை வழியனுப்பி "நம்ப முடியாதது எதுவுமே இல்லை.." என்றார். தயங்கி என்னை நேராகப் பார்த்து "..நம்பினால்" என்றார். <br />
<br />
என் மிக அருகே வந்து, "நம்புறீங்க இல்லையா?" என்றார் என் தோளை அழுத்தி. பிறகு கண்ணனை அழைத்து "இவரை ஜாக்கிரதையா சேர்க்க வேண்டிய இடத்துல கொண்டு போய் சேர்த்துடு" என்றார்,<br />
<br />
வீட்டுக்கு வந்ததும் உறைத்தது. பெரியவர்.. சவுதியில் கால் வைத்த ஐந்தாம் நிமிடம் என்னுடன் உரையாடிச் சேர்ந்து தொடர்ந்து முடிவில் பெரியவரைப் பார்க்க அழைத்துச் சென்ற கண்ணன்.. திரும்பக் கிடைத்த வில்லேந்திய பிள்ளையார்.. "இவரை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துடு" என்ற பெரியவரின் சொற்கள்.. என் டிரைவரின் பெயர் கண்ணன் என்பது கூட ஒரு பெரிய விஷயமாக முதல் முறையாகத் தோன்றியது. எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நானென்றான்.<br />
<br />
புள்ளி.<br />
<br />
<br />
<இன்னும் உண்டு><br />
<br />
<br />
*DCFS: Department of Children and Family Services - பிள்ளை வளர்ப்பு முறைகேடுகளை விசாரணை செய்யும் அரசு மையம்.<br />
<br />
</SPAN><br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9479796863475244292018-06-12T17:03:00.000-05:002018-06-23T23:38:39.345-05:00புள்ளி - 3<span style="font-size: 280%;">    <b>.<br />
  . . .</b></span><br />
<br />
<br />
<center>◄◄ <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/blog-post.html" target="_BLANK">1</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/2-1.html" target="_BLANK">2</a><br />
</center><br />
<span style="line-height: 180%;"> <br />
        <span style="font-size: 280%;"><b>இ</B></SPAN>ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை கூட்டம் வெயிலில் நிற்கிறது என்கிறார்கள். தெரியாது. அந்நாளில் ஒன்பதரை மணிக்குத் திறக்கும் அமெரிக்க தூதரக விசா அலுவலக வளாகத்தில் காலை எட்டரை மணிக்கே கூட்டம் சேர்ந்து விடும். அலுவலக வெளியில் மரத்தடியில் வரிசையாக கயிறு கட்டி ஒரு மணி நேரம் நிற்க வைப்பார்கள். அமெரிக்கா செல்லும் ஆர்வத்தில் ஒரு மணி நேரம் வெளியே நாய் போல் நிற்கும் அவதியைச் சகித்தேன். உள்ளே சென்ற பின் இன்னொரு அரை மணி நேரம். என் விவரமெல்லாம் சரி பார்த்தார்கள். கூண்டுக்கு அந்தப்புறம் இருந்த வெள்ளைக்காரப் பெண்மணி "that's a very good school.. what is your ph.d in?" என்றாள். <br />
<br />
"application of cognitive science models for consumer marketing precision" என்றேன். <br />
<br />
"i don't understand a word of what you said" என்றாள்.<br />
<br />
"me neither" என்றேன்.<br />
<br />
உரக்கச் சிரித்தாள். என் விவரங்களை சரி பார்த்தாள். வழக்கமாக கேட்பாளா என்னை மட்டும் கேட்டாளா தெரியாது. "what will you do when you come back.. or would you look to stay in America?"<br />
<br />
"why else would i go there? actually.. i intend to run away soon as i land in America; my ambition is to find a job at a petrol bunk and work my way up"<br />
<br />
"we call it gas station" என்றாள் நிதானமாக. "do you know i can disqualify you for expressing vagabond intent?" என்று முறைத்தாள். ஆழமான பார்வை தொடர்ந்த மிதமான புன்னகையுடன் "your application seems in order.. we'll verify.. come back at 4pm for visa" என்றாள்.<br />
<br />
அடக்க முடியாத சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். பெருமையுடன் எதிரே உட்லண்ட்சில் நுழைந்து ஒரு சூடான பாதாம் பால் தரவழைத்தேன். சிகாகோவுக்கான டிக்கெட் போக கையில் ஆயிரம் ரூபாயோ என்னவோ இருந்தது. அமெரிக்கா போகும் வரை இதை வைத்து ஓட்டியாக வேண்டும். மாலை விசா வந்தவுடன் நேரே பர்மா பஜார் சென்று ஒரு நல்ல சூட்கேஸ் வாங்க வேண்டும். தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு எத்தனை சீக்கிரம் முடியுமோ இந்த நரகத்தில் இருந்து கிளம்பி ஒரே ஓட்டம் திரும்பி வரவே கூடாது.. ஐயே.. நாடா இது? பல வித சிந்தனைகளுடன் பொங்கல் வடை பூரி என்று வெட்டினேன். பொழுதை எப்படிக் கழிப்பது என்று எண்ணியபடி வெளியே வந்து நடந்தேன். எதிரே சபையர் தியேடர் வளாகத்தில் நுழைந்தேன். மூன்று தியேடர்களிலும் ஆங்கிலப் படங்கள். அமெரிக்கா போவதால் இனி ஆங்கிலப் படங்கள் மேற்கத்திய வழக்கங்கள் மட்டுமே ஏற்பது என்று தீர்மானித்திருந்தேன். நாகேஷ் நினைவு வந்தது. நாகேஷுக்கு இணையாக ஒரு மேற்கத்திய நடிகன் உண்டா என்ற நினைப்பை அசை போட்டபடி ப்லூ டைமன்ட் தியேடரில் 'the world according to Garp" என்று ஒரு படத்துக்கு டிகெட் எடுத்தேன். சகிக்கவில்லை. உடனடியாக ஜம்பு ஜகன்மோகினி பாணி படம் பார்த்து துக்கத்தைத் துடைத்துக் கொள்ள நினைத்து வெளியே வந்தேன். எல்ஐசி பக்கமாக நடந்தேன். விக்டோரியா காட்சியகத்தில் ஈயடித்தது. நேரம் கடத்த எண்ணி உள்ளே நுழைந்தேன். விதவிதமான சிலைகள் அலங்காரங்கள் காட்சியில் இருந்தன. எட்டு கைகள் கொண்ட நாட்டியப் பிள்ளையார் சிலை ஏனோ கவர்ந்தது. ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதமோ சங்கோ என்னவோ வைத்திருந்தார். போதாக்குறைக்கு தகப்பன் ஸ்டைலில் காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே டான்ஸ் வேறே. வெண்கலமோ செம்போ தெரியவில்லை. செம விலை. இதையெல்லாம் எந்த மனுஷன் வாங்குவான் என்று நகர எண்ணிய போது பிள்ளையாரின் ஒரு கை வளைந்து என்னைச் சுட்டியது "டேய்!" என்பது போல. சட்டென்று விலகி நின்று பார்த்தேன். பிள்ளையார் சிலை லேசாக என் பக்கம் திரும்பி கால்களை ஊன்றி இரண்டு கைகளை இடுப்பில் வைத்து மூன்றாவது கையால் அதே விரல் சுட்டு. "டேய்!". லேசான நடுக்கத்துடன் பிள்ளையார் அருகே சென்று பார்த்தேன். நிச்சயமாக பிரமையில்லை. அதிர்ந்து அவசரமாக வெளியே வந்தேன். சீ சீ நிச்சயம் பிரமை தான்.. இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ.. அதன் பிறகு இந்த கண்றாவியெல்லாம் இல்லை. அமெரிக்கா.<br />
<br />
அங்குமிங்கும் சுற்றி மறுபடி தூதரகத்துக்கு வந்தேன். வந்தவருக்கெல்லாம் விசா கொடுத்துவிட்டு கடைசியில் என்னை அழைத்தார்கள். இந்த முறை ஒரு ஆண். டிப்டாப் வடக்கத்தி இந்தியர். என்னை ஏற இறங்கப் பார்த்து "உங்களைப் பற்றி ஒரு புகார் வந்திருக்கிறதே? நீங்கள் கொடுத்திருக்கும் படிப்பு விவரங்கள் வங்கி விவரங்கள் எல்லாம் ஏமாற்று என்று புகார். பெங்களூர் இந்திரா நகர் போலீஸ் ஸ்டேஷனில் உங்களைப் பற்றிய மோசடி புகாரின் நகல். ஆளை அடித்து மிரட்டி ரவுடித்தனம் செய்ததற்கான புகார்.." என்று வரிசையாக அடுக்கினார்.<br />
<br />
எனக்கு ஒன்றும் புரியவில்லை. <br />
<br />
"இதோ" என்று ஒரு கடிதத்தைக் காட்டினார். "இந்தா.. இதன் நகல்" என்று என்னிடம் கொடுத்தார். விடுவிடுவென்று படிக்கத் தொடங்கினேன். சேஷாத்ரி என்று கையொப்பம் பார்த்தேன். உடனே புரிந்து விட்டது. "சார்.. இது வெறும் பொய் சார்.. நான் கொடுத்த விவரமெல்லாம் உண்மை.. போலீஸ் புகார் எல்லாம் பொய் என்று போலீசே சொல்லிவிட்டது.. கேட்டுப் பாருங்கள்" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.<br />
<br />
சமாதானப்படுத்துவது போல "we will find out.. அதனால நீங்க ரெண்டு நாள் கழித்து வாங்க.. visa is on hold" என்றார்.<br />
<br />
உலகமே இடிந்தது போல் வெளியே வந்தேன். இந்த சேஷாத்ரி என் மேனேஜர். கம்பெனி என்னை அமெரிக்கா அனுப்ப எண்ணி எல்லாம் செய்தது. ஆனால் எனக்கும் அவனுக்கும் ஒத்து வராமல் நான் வேலையை விட்ட போது இந்த மாதிரி ஒரு விஷமக் கடிதம் அனுப்பி என்னை இக்கட்டில் விட்டிருக்கிறான். எச்சக்கலைப் பரதேசி. சொறி நாய். சாக்கடைக் காளான். பன்னி. உடனே பெங்களூர் சென்று அவன் கொட்டையை சுத்தியலால் அடித்து நசுக்க ஆத்திரமும் வேகமும் வந்தது. <br />
<br />
சோர்வுடன் வெளி வந்து பஸ் பிடிக்க நடக்கையில் விக்டோரியா பிள்ளையார் நினைவுக்கு வந்தது. ஏன்? எனக்கு உதவக்கூடாதா? பிள்ளையாரப்பா? நீயெல்லாம் ஒரு அப்பனா? உன்னைப் போய் சாமினு கொண்டாடினேன் பாரு? உனக்கு எத்தனை பூஜை செய்திருப்பேன்.. கடவுளே.. இந்த சேஷாத்ரிக்கு குஷ்டமோ தீராத மூலமோ வந்தால் தான் நீ இருக்கிறாய் என்று அர்த்தம்.. இல்லாவிட்டால் கடவுள்னு பேரை வச்சுகிட்டு ஊரை ஏமாத்துற கல்.. கல் கூட பரவாயில்லை சாணி தட்ட உதவுது.. சாமிக்கல் எதுக்கும் உதவாத நாய் மூத்திரம் போகிற கல். அரை மணி போல் அத்தனை கடவுளையும் திட்டிவிட்டு பல்டி அடித்தேன். பிள்ளையாரப்பா.. எப்படியாவது இந்த விசா வாங்கிக் கொடுத்துரு.. நூத்தி எட்டு தேங்காய் உடைக்கிறேன். ஏதேதோ மனதுள் புலம்பியபடி சைதாப்பேட்டை வரை நடந்தே வந்தேன். வீட்டில் சொன்னதும் அம்மா "கவலைப்படாதடா.. அபிராமி இருக்கா பார்த்துப்பா" என்றாள்.<br />
<br />
இரண்டு நாள் பொறுத்துக் கொஞ்சம் தெளிந்திருந்தேன். விசா கிடைக்கிறதோ இல்லையோ வருந்தப்போவதில்லை. சேஷாத்ரியை மன்னித்து விட்டேன். போகிறான் அல்பன். தூதரகம் சென்றேன். வரிசையில் நின்று என் முறை வந்ததும்.. முன்பு பார்த்த பெண்மணி. "ah.. the gas station aspirant" என்றாள். இன்டர்காமில் யாரையோ பெயர் சொல்லி அழைத்தாள். அதே வடக்கத்தி டிப்டாப் வந்து ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான். என்னைப் பார்த்தான். முறைத்தான். விலகினான். "ok.. here's your visa.." என்று என்னிடம் பொட்டலத்தைக் கொடுத்தாள் பெண்மணி. பரவசமானேன். "thank you.. thank you" என்றேன் இரட்டைக்கிளவியில். "thank the man who was here" என்றாள். மறுபடி "thank you.. thank you" என்றேன்.. "goodluck" என்றாள். மனம் மாறி விசாவைப் பிடுங்கிக் கொள்ளுமுன் இங்கிருந்து ஓடி விட வேண்டும்.. தலையாட்டி வெளியே வந்தேன்.<br />
<br />
தூதரக வாயில் கடந்தபின் உறைத்தது. அவள் இன்டர்காமில் அழைத்த டிப்டாப். மிஸ்டர் கேனஷ்ரேம். மிஸ்டர் கணேஷ்ராம்.<br />
<br />
புள்ளி.<br />
<br />
அப்பா இறந்து ஒரு வருடம் போலிருக்கும் பூணலைக் கழற்றி எறிந்திருந்தேன். "எனக்கு வேணாம்மா"<br />
<br />
"என்னடா இப்படி அக்கிரமம் பண்றே?" என்றாள் அம்மா. "செலவழிச்சு போட்டது.. அடுத்த மாசம் வர்ஷாப்தீகம் முடிஞ்சு காசில கர்மா எல்லாம் பண்ண பூணல் வேணும்.."<br />
<br />
"என்ன செலவு? எதுக்காக போட்டீங்க.. அப்பனுக்கு ஸ்ரார்த்தம் பண்ணத்தானே? என்னவோ ஆசையா பூணல் போட்டாப்புல பேசுறே?"<br />
<br />
"வாய மூடுறா சண்டாளா" என்றார் தாத்தா.<br />
<br />
"யோவ்.. யாருயா நீ? யாரைப் பாத்து சண்டாளன்ற? வயசனவன்னு பாக்க மாட்டேன் ஆமா"<br />
<br />
"என்னடா இது..?" அம்மா அதிர்ந்தாள்.. அவளுக்கு அழுகை வந்துவிட்டது.<br />
<br />
"அப்பனைப் பெத்தவனையே யாருன்னு கேக்குறான்.. உருப்படுவானா இவன்.. சல்லிப்பய..?"<br />
<br />
"அப்பனே பூட்டான்.. அப்புறம் அப்பனுக்கு அப்பன் என்ன வேண்டிக்கிடக்கு?" <br />
<br />
"கூறுகெட்டப் பய.. வளத்திருக்கே பாரு? " என்று அம்மாவிடம் பாய்ந்தார்.<br />
<br />
"டேய்.. மரியாதை கெட்டுரும்.. எங்கம்மாவை பத்திப் பேசினா.. உன் பையனை நீ ஒழுங்கா வளத்திருந்தா இதெல்லாம் வந்திருக்குமா? பேச வன்டான்"<br />
<br />
"தாத்தா.. பிள்ளையார் சிலையை கிணத்துல போட்டான்.. நான் பார்த்தேன்.." என்று நேரம் தெரியாமல் வத்தி வைத்தாள் தங்கை.<br />
<br />
"ஒ.. ஏதுரீ.." என்று பாட்டி சேர்ந்து கொண்டார். "சாமியார் கொடுத்த பிள்ளையார் ஆச்சே? திரும்ப வந்து வாங்கிப்பார்னு சொல்வானே அம்பி?" <br />
<br />
"சாமியார் என் கனவுல வந்து பிள்ளையாரைக் கிணத்துல போடச் சொன்னார்.." என்றேன்.<br />
<br />
"புத்திர சோகம் போறாதுன்னு இப்படி தெய்வச் சேதம் பாக்கணும்னு எழுதியிருக்கானே.." கண் கலங்கினார் பாட்டி. <br />
<br />
"அப்புறம் அம்மா.. நான் காசி எல்லாம் போறதா இல்லே.." என்றேன். தாத்தாவைப் பார்த்தேன். "யோவ்.. உன் பையன் தானே? வேணும்னா நீ போய் காசில எல்லாம் போட்டுக்க"<br />
<br />
என் அம்மா வழக்கம் போல் எதுவும் சொல்லவில்லை. ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றாள். பாட்டி என்னிடம் வந்து "அந்தப் பிள்ளையாரையாவது எடுத்துக் கொடுரா.. நீ நல்லா இருப்பே.." என்றார்.<br />
<br />
புள்ளி.<br />
<br />
<இன்னும் உண்டு>►► <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/4.html">4</a><br />
<br />
<br />
</SPAN><br />
<br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70709593630686581832018-06-10T23:57:00.000-05:002018-06-12T18:23:49.455-05:00புள்ளி - 2<span style="font-size: 280%;">    <b>.<br />
  .</b></span><br />
<br />
<center>◄◄ <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/blog-post.html" target="_BLANK">1</a></center><br />
<span style="line-height: 180%;"> <br />
        <span style="font-size: 280%;"><b>தா</B></SPAN>ம்பரம் பட்ஸ் ஓட்டல் வெளிச்சுவற்றில் ஒரு சிறிய பிள்ளையார் சிலை பதித்து வைத்திருப்பார்கள். ஒரு கதர் துண்டை உடுக்கையாகவும் பட்டையாக விபூதியும் ஒரு எருக்க மாலையும் அணிவித்து பிள்ளையாரை அவர் பாட்டுக்கு விட்டிருப்பார்கள். நான் சென்ற போதெல்லாம் ஒருவராவது கும்பிட்டோ தேங்காய் உடைத்தோ பார்த்ததில்லை. யார் இவருக்கு உடையும் அலங்காரமும் செய்கிறார்கள் என்பதும் அறிந்து கொண்டதில்லை. <br />
<br />
என் அப்பாவின் கொலை வழக்கு தொடர்பாக அடிக்கடி செங்கல்பட்டு போவேன். அப்படியே சில நேரம் புதுப்பட்டினத்திலிருந்த என் மாமா வீட்டுக்குப் போய் ஒரு நாள் தங்கிவிட்டு வருவதுண்டு. வரும் வியாழனன்று முக்கியமான திருப்பம் என்று என்னை ஒரு நாள் முன்பே வரச்சொல்லியிருந்தார் வக்கீல். நான் போவது தெரிந்து நண்பன் ஸ்ரீதர் உடன் வருவதாகச் சொன்னான். செங்கல்பட்டில் அவன் அத்தை வீடு இருந்தது. அவனுக்கு திருக்கழுகுன்றம் போகப் பிடிக்கும். எனக்கு அவன் அத்தை மகளைப் பார்க்கப் பிடிக்கும். எங்களை விட நாலு வயதோ என்னவோ மூத்தவள், பார்க்க அட்டகாசமாக இருப்பாள். இதான் சாக்கு என்று வீட்டில் கொஞ்சம் அதிகம் சில்லறை வாங்கிக் கொண்டு புதன் மதியமே தாம்பரத்துக்கு நடை கட்டினோம். வெயிலாவது கியிலாவது? பொருட்படுத்தியதே இல்லை. பட்ஸ் ஓட்டலில் வெட்டிவிட்டு அங்கிருந்து வண்டலூரில் மாலை சுப்ரமணிய ராஜுவின் பேச்சு ஒன்றைக் கேட்டுவிட்டு அங்கிருந்து செங்கல்பட்டுக்கு பஸ் பிடிக்கத் திட்டம். ஸ்ரீதருக்கு இந்த எழுத்தாளர் வட்டம் கிட்டம் எல்லாம் ரொம்ப இட்டம். பட்ஸ் ஓட்டலில் பணம் கட்டுவதாக வேறே சொல்லியிருந்தானா, குஷியாகக் கிளம்பினேன். <br />
<br />
தாம்பரம் சேனடோரியம் அருகே நடந்து வந்த போது என்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பது போலிருந்தது. என் நண்பன் <a href="http://moonramsuzhi.blogspot.com/2012/03/blog-post_27.html" target="_BLANK">ரவியின் மாமா பையன் பாலு</a>வைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். இதே சேனடோரியம் மருத்துவமனையில் தான் கொடூரமாக இறந்தான். 'என்ன இது.. பாலுவின் குரல் மாதிரி இருக்கிறதே?' என்று எண்ணியபடி ஸ்ரீதரைப் பார்த்தேன். பாலு விவகாரத்துக்குப் பிறகு ஸ்ரீதர் என்னுடன் நட்பைத் துண்டித்துக் கொண்டு சமீபத்தில் தான் ராசியாகி இருந்தான். அதுவும் ஒரே கல்லூரயில் சேர்ந்ததே காரணம். பாலுவைப் பற்றிப் பேச்செடுக்கத் தயக்கமாக இருந்தது. நடந்தேன். தொடர்ந்து யாரோ அழைப்பது போலவே இருந்தது. ராமர் கோவில் அருகே வந்ததும் ஸ்ரீதர் சட்டென்று என்னை இழுத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான். பதட்டத்துடன், "டே.. என்னை யாரோ தொட்டு தொட்டுக் கூப்பிடுறாப்புல இருந்துதுடா" என்றான். "கோவில்ல கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போவோம்"<br />
<br />
"என்னையும் யாரோ கூப்பிடுறாப்புல இருந்துச்சுடா.. நான் தான்.."<br />
<br />
"பாலு தானே? எனக்குத் தெரியும்டா"<br />
<br />
"சீ சீ.. அதெல்லாம் இல்லடா.. அவன் போய் மூணு நாலு வருஷம் இருக்குமா? சரி. சரி.. நீ வேணா கும்பிட்டு வாடா.. போவோம்.. பசிக்குது."<br />
<br />
கோவிலில் நடை சார்த்தியிருந்தார்கள். ஐந்து மணிக்கு மேல் தான் திறப்பார்கள். அவன் அவசரமாக பிரபந்தப் பாசுரம் நாலைந்து சொல்லிவிட்டு 'வாடா' என்று என் தோள் மேல் கை வைக்கப் போனவன் திடுக்கிட்டு "என்னடா இது?" என்றான். என் சட்டை தோள்பட்டை அருகே சிவப்பு நிறத்தில்.. சட்டையைக் கழற்றினேன்.. வில் போல ஒரு வடிவம். <br />
<br />
"நீ பிரகாரம் சுத்துறப்ப இங்க சாஞ்சிட்டிருந்தனா.. ஒட்டியிருக்கும்" என்று ஒரு தூணைக் காட்டினேன். <br />
<br />
ஸ்ரீதர் மசியவில்லை. "அடப்போடா.. தோராயமா சாஞ்சா இப்படி தெளிவா சித்திரம் வருமாடா? இது அசல் கோதண்டம்டா. ஞாபகம் இருக்கா.." என்று ஒரு கணம் என் வாயைப் பொத்தி விலகி, "பேர் சொல்லாதே.. இப்பத்தானே பேசிட்டிருந்தோம்..? பதட்டப்பட்டோம்ல? இது ராமர் கோவில்.. நான் பாசுரம் சொல்லி முடிச்சதும் பாருடா.. துணைக்கு அனுப்பியிருக்கார்டா"<br />
<br />
நான் நெளிந்தேன். "என்னடா இது.. ராமராவது.. கோதண்டமாவது.. இது அழுக்கு சட்டைடா டேய்.."<br />
<br />
"லூசு.. சட்டையைக் கசக்காதடா.. இதப்பாரு இன்னும் அப்படியே இருக்கு. இது ஒரு குறி.. அப்படியே போட்டுக்க.. துணைக்கு கோதண்டம் வரும்"<br />
<br />
"இல்லடா.. நீயே வச்சுக்க" என்று அவனிடம் கொடுத்தேன். பையிலிருந்த மாற்றுச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன். ஸ்ரீதருக்கு என் செயல் பிடிக்கவில்லை. சட்டையை வாங்கிக் கவனமாக இடுப்பில் சுற்றிக் கொண்டான் - வில் வெளியே தெரியும் படி. தாம்பரம் வரை என்னுடன் அதிகம் பேசவில்லை. பட்ஸ் ஓட்டல் வந்ததும் என்னைப் பார்த்தான். சிரித்தான். "சாரிடா.. நீ சொல்றது சரிதான்.. எனக்குத்தான் குழப்பம்.. கோதண்டமாவது.." என்று என்னிடம் சட்டையைத் திருப்பினான்.<br />
<br />
நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே வந்த ஒரு அரை டிராயர் பிச்சைக்காரச் சிறுவன் எங்களிடம் கையேந்தினான். என்னிடமிருந்த சில்லறையிலிருந்து கவனமாக மூன்று பைசா நாணயம் ஒன்றைப் பொறுக்கி எடுத்து அவனிடம் கொடுத்தேன். என்னிடம் இருந்த சட்டையை.. என்ன தோன்றியதோ.. அவனுக்குத் தரப் போனேன்.. "இந்தாப்பா சட்டை போட்டுக்குறியா? பெரிய சட்டை.. பரவாயில்லையா?"<br />
<br />
"இருடா.. எதுக்குடா" என்று ஸ்ரீதர் தடுத்தான். அதற்குள் என்னிடமிருந்து சட்டையைப் பிடுங்கிக் கொண்டு தாவி ஓடி பட்ஸ் ஓட்டல் சுவர் பிள்ளையார் இடுப்பில் இருந்த துண்டையும் உருவிக் கொண்டு சடுதியில் மறைந்து விட்டான் சிறுவன். திகைத்தோம். பட்ஸில் கணிசமாக வயிற்றுக்கு உணவீய்ந்து பிறகு சுப்ரமண்யராஜு தயவில் செவிக்கும் சற்று ஈய்ந்து முடித்து ஒன்பது மணி வாக்கில் நாங்கள் தாம்பரம்-செங்கல்பட்டு மொபசல் வண்டி ஏறிய நேரத்தில் எல்லாம் மறந்து விட்டோம். செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இறங்கிய போது இரவு பதினொரு மணியாவது இருக்கும். பழைய பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீதர் அத்தை வீடு பத்து நிமிட பொடி நடை. சுறுசுறுப்பாக நடந்தோம். பத்தடி நடந்திருப்போம். ஸ்ரீதர் என் கைகளைப் பிடித்து நிறுத்தினான். "டே.. அங்க பாருடா.." என்று தெருவின் எதிர்புறம் காட்டினான். "உன் சட்டையைப் பிடுங்கிக் கிட்டு ஓடின பையன்.."<br />
<br />
பார்த்தேன். அப்படித்தான் தோன்றியது என்றாலும் மறுத்தேன். "அதெப்படிறா முடியும்? சின்னப் பையன்.. பிச்சைக்காரன் வேறே.."<br />
<br />
"டே.. அவனே தான்.. நம்மளைப் பாத்து வரான்.. போவோம் வா" என்று வேகமாக நடக்கத் தொடங்கினான். நானும் விரைந்தேன். ஸ்ரீதர் வீட்டு முனையிலிருந்து திரும்பிப் பார்த்த போது அந்தப் பையன் போலவே உருவம் தொலைவில் நின்றபடி கை அசைத்தது. அடுத்த கணம் நானும் ஸ்ரீதரும் ஓட்டம் பிடித்து ஸ்ரீதர் வீட்டுக்குள் நுழைந்து நின்றோம். விவரம் சொன்னதும் சிரித்த ஸ்ரீதரின் அத்தை "இது கூட தெரியலியா? உனக்கு துணையா வீடு வரைக்கும் கொண்டு விட்டு டாடா காமிச்சுட்டும் போயிருக்கான் ஸ்ரீராமன். உள்ளே வந்து பெருமாளை சேவிச்சுட்டு படுங்கோ ரெண்டு பேரும்" என்றார். ஸ்ரீதரின் அத்தை மகளை சைட் அடிக்க முடியவில்லை.. தூங்கிவிட்டிருந்தாள். கை முகம் கழுவிக் கொண்டு அத்தை சொன்னபடி உள்ளேயிருந்த ராமர் படத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுப் படுக்கப் போனோம். ராமர் படத்திலிருந்த வில் உறுத்தியது. படத்தில் பளிச்சென்று வில் மட்டும் தெரிந்தது. சட்டையில் இருந்தாற்போல். அதே வடிவம். ஸ்ரீதரைக் கேட்க நினைத்து அடக்கிக் கொண்டு படுத்தேன்.<br />
<br />
கோர்ட் விவகாரம் முடிந்து ஸ்ரீதர் வீட்டுக்கு நான் திரும்பிய போது மணி ஒன்றிருக்கும். "டே.. நான் எங்க மாமா வீட்டுக்குப் போறேன்.. திருக்கழுகுன்றம் வரை நடந்து அங்கிருந்து புதுப்பட்டினம் பஸ் பிடிப்பேன்.. வரேன்.." என்றேன்.<br />
<br />
"திருக்கழுகுன்றமா? இருடா நானும் வரேன்" என்று உடன் கிளம்பினான். அவன் வருவானென்று தெரியும். "அத்திம்பேர்.. உங்க சைக்கிளை எடுத்துண்டு போறேன்" என்று கூவினான். "வாடா, சைக்கிள்ள போவோம்"<br />
<br />
கோவிலுக்கு அரை கிலோமீடர் கிழக்கே ஒரு பெரிய குளம்* உண்டு. சிறிய ஏரி எனலாம். கோவிலுக்கு வரும் கழுகு இந்தக் குளத்தின் நடுவில் மூழ்கிக் குளித்து விட்டு வரும் என்பார்கள். கரையில் நிறைய மரங்கள் உண்டு. மரத்தில் ஏறி அங்கிருந்து குளத்தில் தாவிக் குதிப்பது சுவாரசியமான குதூகலம். "குளிக்கலாம்டா" என்றான். ஆளுக்கொரு மரத்தைப் பிடித்துக் கொண்டு சர் சர்ரென்று மரமேறிக் குதித்தோம்.. ஸ்ரீதர் என்னை விட வேகமாக ஓடி நீந்துவான். நான் நாலாவது முறை மரம் ஏறுவதற்குள் அவன் குதித்து எழுந்து நீந்திக் கொண்டிருந்தான். நான் குதிக்கத் தயாராகும் நிலையில் திடீரென்று ஸ்ரீதர் நீரில் மூழ்குவதைக் கவனித்தேன். யாரோ அவனை உள்ளே இழுப்பது போல். இழுத்து இழுத்து அடிப்பது போல். ஸ்ரீதருக்கு எப்போதாவது வலிப்பு போல் வரும். கையில் ஒரு இரும்புக் கவசம் வைத்திருப்பான். ஒருவேளை.. சட்டென்று குதித்தேன். அவனை நோக்கி நீந்தினேன். அவனைப் பிடிக்கபோன என்னை உதறித் தள்ளினான். நான் எதிர்பாரா விதமாக என்னை உள்ளே இழுக்கத் தொடங்கினான். திமிறி வெளிவந்து அவனை மேலே இழுக்கப் போனேன். அதற்குள் ஸ்ரீதர் மயங்கி விடுவான் போல் தொய்ந்து போயிருந்தான். 'ராமா' என்று மனதுள் கூவினேன். . எனக்கு அவனை மேலே இழுக்கும் வலு குறைந்து கொண்டிருந்தது. தெரிந்த கடவுள் பெயரெல்லாம் அழைத்தேன். மூச்சு முட்டியது. கண்களில் தளர்ச்சி. ஒரு நிமிடம் போலிருக்கும். இரண்டு பேர் நீரிலிருந்து எங்களை மேலே இழுத்துக் கொண்டிருந்தார்கள். <br />
<br />
கரையில் கொஞ்சம் சுதாரித்த பின் எங்களைக் காப்பாற்றியவருக்கு நன்றி சொன்னோம். "ரெண்டு பேரு இழுத்தாப்புல இருந்துச்சே?"<br />
<br />
அவர் சிரித்து "நீங்க ரெண்டு பேராச்சே? அப்படித்தான் இருக்கும்"<br />
<br />
"சார்.. உங்களுக்கு ஏதாவது.. எங்க கிட்டே ரெண்டு ரூவா இருக்கு.."<br />
<br />
"உங்கிட்ட வாங்க வேண்டியது நிறைய இருக்கு தேவையானா வாங்கிக்குவேன்.. ரெண்டு பேரும் பத்திரமா வீடு சேருங்க" என்று மரத்தடியில் இருந்த தன் சட்டையை அணியத் தொடங்கினார். <br />
<br />
எனக்குப் புரியவில்லை.<br />
<br />
என் குழப்பத்தைப் படித்தது போல் "புரியும் போது புரியும்" என்று எங்களைப் பார்த்துத் திரும்பினார்.<br />
<br />
திடுக்கிட்டோம். அது.. அது.. என் சட்டை. வில் படிமம் உட்பட அப்படியே.. <br />
<br />
"உங்களுக்கு இந்த சட்டை எப்படிக் கிடைச்சுது? இது என் சட்டை.."<br />
<br />
"என்னுதுபா! எல்லாமே என்னுது.. அதான் சொன்னேன்ல? தேவையானா உங்கிட்ட வாங்கிக்குவேன்" என்று சிரித்து ஸ்ரீதரின் சைக்கிளில் ஏறிக் காணாமல் போனார். <br />
<br />
"யோவ் யோவ்.. வண்டி அவனுதில்லையா.. என்னுதுமில்லையா.." என்று தள்ளாடி எழுந்து அவர் பின்னே ஓடிய ஸ்ரீதரின் பின்னே நான் ஓடினேன். சன்னதித் தெரு முனையில் சைக்கிள் மட்டும் கிடந்தது.<br />
<br />
புள்ளி.<br />
<br />
<இன்னும் உண்டு> ►► <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/3-1-2.html">3</a><br />
<br />
<br />
<br />
<br />
*இப்போது அங்கே அபார்ட்மென்ட் வரிசையாகக் கட்டியிருக்கிறார்கள். குளத்தைக் காணோம். மரங்களையும் காணோம். திருக்கழுகுன்றத்தைக் கூட விடவில்லை.<br />
</SPAN><br />
<br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76315509831285873232018-06-03T20:52:00.000-05:002018-06-12T18:21:39.315-05:00புள்ளி - 1<span style="font-size: 280%;">    <b>.</b></span><br />
<br />
<span style="line-height: 180%;"> <br />
<br />
        <span style="font-size: 280%;"><b>கா</B></SPAN>ரணம் காரியம் எல்லாமே இணைந்திருக்கிருன்றன என்கிறார்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமம் என்கிறார்கள். இப்பிறவியின் நடப்புகள் அனைத்தும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகள் என்றும் சொல்கிறார்கள். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்கிறார்கள். பிற்பகல் செயின் எப்போது விளையும் என்று ஏனோ சொல்லாததால் நிறைய பேர் பிற்பகல் செய்கிறார்கள். எனக்கு அது தோன்றாமல் எல்லாவற்றையும் முற்பகலிலே செய்து பிற்பகலில் அனுபவிப்பது என் வாழ்வின் வாடிக்கை ஆகிவிட்டது. <br />
<br />
எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்கிறார்கள். கடவுளை விட்டால் யாருக்காவது தெரியுமா என்று கேட்டால் கர்மாவுக்குத் தெரியும் என்கிறார்கள். கர்மா அறியாதது எதுவும் இல்லை. நம் செயல்கள் எதுவுமே அழிவதில்லை. எல்லாவற்றையும் பிறவி வாரியாகக் கர்மா பதிவு செய்து கொள்கிறது என்கிறார்கள். அண்டத்தின் முதல் blockchain கர்மா தான் போலிருக்கிறது. அத்தனை செயல்களின் முனைப்புகளும் பாதிப்புகளும் இந்தக் கர்மா blockchainல் பதிவு செய்யப்படுகின்றன. பிறகு அதிலிருந்து அவரவருகேற்ற மாதிரி கர்மா data mining நடத்தி விளைவுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. எங்கே எது எப்படி இணைகிறது.. எத்தனை விலகல்களில் இணைகிறது.. என்பது கர்மா அல்லது கடவுள் அறிந்த புதிர். <br />
<br />
கடவுளை அவ்வப்போது சந்தித்திருக்கிறேன். அந்தக் சந்திப்புகளினாலேயே கடவுள் இல்லை என்ற எண்ணம் எனக்குப் பலமாகத் தோன்றும். சரி, <a href="http://naathikan.blogspot.com/2012/11/blog-post_10.html" target="_BLANK">கலர்சட்டை</a> விவாதம் இங்கே வேண்டாம். 'என்னடா இவன் கமல்ஹாசன் மாதிரி ஒரு தினுசா பேசுறானே?' என்றும் நினைக்க வேண்டாம். பல நேரம் நான் சொல்வது பலருக்கும் புரியும். எனக்கும் கடவுளுக்கும் நேரடி மற்றும் மறைமுக பிணைப்புகள் நிறைய உண்டு. குறிப்பாக பிள்ளையார், ராமர். ஆம். மூஷிக வாகனன். மோதக ஹஸ்தன். ரகுவீரன். ரங்கபுர விகாரன். அவர்களே தான். நிறைய சம்பவங்கள். நிறைய புள்ளிகள். முன்பெல்லாம் புள்ளிகள் தெரியும். இப்போது புள்ளிகள் இணைந்த கோலம் மட்டுமே புலப்படுகிறது. புள்ளிகள் புரிகின்றன. கோலம் இன்னும் புரிந்த பாடில்லை. இந்தக் கதையை எழுதினால் ஒருவேளை எனக்கு விவரம் புரியக்கூடும் என்பதனால் எழுதுகிறேன். எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா. <br />
<br />
நான் எழுத ஒரு நியாயம் கற்பிக்க முடியுமே தவிர நீங்கள் படிக்க அல்ல. அதனால் உடனே இந்தக் கதையை விட்டு பக்கத்து பிலாக் போனால் வருந்த மாட்டேன். இந்தக் கதையை இனித் தொடர்ந்து படிப்பதிலும் ஒரு சிறு சங்கடம் இருக்கிறது. கதையா? நிஜமா? என்ற ஐயம் எழலாம் (<i>அய்யம் என்று எழுத வேண்டுமோ?</i>). நிஜம் என்பது நிகழ்வுப் புள்ளிகள் இணைந்த கோலம். கதை என்பதும் அதானே? நிகழ்வுப் புள்ளிகள் கற்பனையில் இருந்தால் என்ன, கண்ணெதிரே நடந்தால் என்ன? கண்ணெதிரே நடப்பதும் இன்னொருவருக்குக் கற்பனையாகலாமே? எனக்கே கூட அந்தச் சந்தேகம் அடிக்கடி தோன்றும். இந்த நிகழ்வுகள் எனக்கு இந்த உலகில் நடக்கிறதா? அல்லது இன்னொரு இணையுலகில் இதே நேரம் நடக்கிறதா? எது கற்பனை? எது நிஜம்? இதுவா, அதுவா? இங்கா அங்கா? இத்தகைய இணையுலகக் குழப்பங்கள் சில நேரம் வழி நடத்திச் செல்கின்றன. சில நேரம் வழி கடத்திச் செல்கின்றன. என்ன நான் சொல்வது?<br />
<br />
இந்தக் கதை என் கடவுள் சந்திப்புப் புள்ளிகளைத் தழுவியது. தழுவியது என்றதும் நினைவுக்கு வருகிறது. தப்பித் தவறி இந்தக் கதையை இனித் தொடர்ந்து படிப்பவர்களுள் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் இருந்தால் ஆங்காங்கே உரசலான விஷயங்கள் தென்படலாம். கவனம். யூட்யூபிலும் இன்னொரு ட்யூபிலும் இல்லாத உரசலா என்று இக்கட்டான எதிர்கேள்வி கேட்டால், கேசவா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணு மதுசூதனா த்ரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ருஷீகேசா பத்மநாபா தாமோதரா, ஏழை நான் என் செய்வேன்? ஊரிலேன். உறவிலேன். உன் பாதமன்றி ஒரு பற்றிலேன். <br />
<br />
புள்ளி.<br />
<br />
அவர் பிள்ளையார் ரசிகை. வீட்டில் நூற்றுக்கணக்கில் சிறிதும் பெரிதுமாக விதம் விதமான பிள்ளையார் சிலைகள் வைத்திருப்பார். என் மனைவிக்கு உறவு. அதனாலேயோ என்னவோ அவரை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. கர்வமும் அகங்காரமும் தேவையில்லாத நீள் மூக்கும் கொண்டவர் என்பது என் அபிப்பிராயம். <br />
<br />
திடீரென்று ஒரு நாள் உறவினர் "சாகக் கிடக்கிறார், வந்து பார்க்கச் சொல்கிறார்" என்று என் மனைவி வற்புறுத்தியதால் சென்று பார்த்தேன். அடுத்தவரைப் பேச விடாமல் தானே பேசிக்கொண்டிருப்பவர் இன்று பேசத் திணறுவது எத்தனை முரணான விந்தை என்று எண்ணினாலும் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. <br />
<br />
என் கைகளைப் பிடித்துக் கொண்டார். பிறகு தன் தலையணையின் கீழிருந்து பிள்ளையார் சிலையொன்றை எடுத்து என் கையில் திணித்தார். வித்தியாசமான குட்டிப் பிள்ளையார். ராமர் போலக் கையில் வில்லேந்திய பிள்ளையார். ராமனுக்கு முன்னால் சிவதனுசை அலட்சியமாக எடுத்தாண்டவர் பிள்ளையார் என்று படித்திருக்கிறேன். பிள்ளையாருக்கு பட்டையாய் திறுநீறு பூசிப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்தக் குட்டிச் சிலையின் நெற்றியில் திருமண் காப்பிட்டிருந்தார்கள். நாமம் போலவும் இருந்தது. சூலம் போலவும் இருந்தது. அதிசயம். வில்லேந்திய வைஷ்ணவப் பிள்ளையாரைப் பார்ப்பது இதுவே முதல்.<br />
<br />
சிலையைப் பெறத் தயங்கிய என்னை அவர் விடவில்லை. கண்களால் எதோ சொல்ல வந்துத் திணறி விசுக் விசுக் என்று கழுத்தில் நரம்புகள் துடிக்க என் கைகளில் பிள்ளையாரை அழுத்தியபடியே காலமானார். <br />
<br />
திடுக்கிட்டேன். என் கைகளில் ஒருவர் சாவதும் இதுவே முதல். சாகிறவர் நம் வலது கையைப் பிடித்துக் கொண்டு செத்தால் ஆவியாகவோ வேறே வடிவிலோ நம்மைத் தொடர்ந்து வருவார் என்று <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_20.html" target="_BLANK">பம்மல் பூசாரி தணிகாசலம்</a> ஒரு முறை சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது. சட்டென்று பார்த்தேன். என் வலது கையை அவர் வலதுகை பிடித்துக் கொண்டிருந்தது. பதட்டத்துடன் விலக்கிக் கொண்டேன். ஆச்சரியமாக இருந்தது பிணப்பிடியின் வலிமை. வீட்டுக்கு வந்ததும் அவர் கொடுத்த பிள்ளையாரை எங்கேயோ வைத்தேன். அத்தோடு மறந்தும் போனேன். <br />
<br />
புள்ளி.<br />
<br />
தற்செயலாகக் கிடைத்த <a href="http://moonramsuzhi.blogspot.com/2010/10/blog-post_22.html" target="_BLANK">'நினைத்தது பலிக்கச் செய்யும்' மந்திர தாயத்தை</a> கையில் பிடித்து நண்பர்கள் ஆளுக்கொரு வேண்டுதல் வைத்து மறந்த விஷயம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். என்றாலும் நடந்தது என்னவோ இது தான்.<br />
<br />
மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என் அப்பா பிள்ளையாருக்கு விசாலமாகப் பூஜை செய்வார். சொத்தெல்லாம் போனபின் வேலை தேடி சென்னை வந்து காசில்லாமல் சென்னை மெரீனா பீச்சில் நடந்த போது யாரோ சாமியார் கொடுத்த சிறிய வெள்ளிப் பிள்ளையார் என்பார். அந்தச் சிலைக்கு சந்தனக் காப்பு சார்த்தி அட்டகாசமாக அலங்கரித்து ஒரு அஷ்டோத்திரப் புத்தகத்தைப் படித்து அர்ச்சனை செய்வார். மற்ற நாட்களில் ஒன்றுக்கும் உருப்படாத என் அப்பா மாதத்தில் இந்த ஒரு பூஜையை மட்டும் பந்தாவாகச் செய்வார். <br />
<br />
மறு நாள் பூஜைக்கு உதிரிப்பூ வாங்கிவரச் சொல்லி காசும் கொடுத்திருந்தார். பம்மல் மலையுச்சியில் தாயத்து விவகாரத்தில் பூ வாங்க மறந்தே விட்டது மட்டுமில்லாமல் காசையும் தொலைத்து விட்டேன். வீட்டுக்கு வரும் பொழுதே நேரமாகி விட்டது. காசு வேறே இல்லை. திரும்பி வரும் பொழுது கோகுலம் காலனியில் மாமாவிடம் ஒரு ரூபாய் கேட்டு வாங்கி வந்து வைத்து விடலாம் என்ற எண்ணத்துடன் சட்டென்று என் அப்பா பர்சிலிருந்து ஒரு ரூபாயைத் திருடிக் கொண்டு ஓடினேன். இரட்டைப் பிள்ளையார் கோவிலருகே இருக்கும் பூக்கடை எல்லாம் அடைத்து விட்டன. என் அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. முதலில் அடி. அப்புறம் பேச்சு. அடியென்றால் அப்படி ஒரு அடி. அர்த்தமே இல்லாமல் அடிப்பார். இப்போது காரணம் வேறு கிடைத்து விட்டதே? செத்தேன் என்று கிருஷ்ணா நகருக்கு ஓடினேன். பிள்ளையார் கோவில் அருகே பூக்கடை உண்டு. அங்கேயும் மூடிவிட்டார்கள். "பூ இல்லே, பலாப்பழம் கீது, வாங்கிக்கிறியா?" என்றாள் க்ருஷ்ணா நகர்க் கிழவி. இன்றைக்குப் பலிதான் என்று பதறி பிள்ளையாரைப் பார்த்து வேண்டிக்கொண்டே பல்லாவரத்துக்கு ஓடினேன். நல்ல வேளையாகக் கடை அடைக்கவில்லை. "ஒரு ரூபாய்க்கு உதிரிப்பூ குடுங்க" என்று பையில் கை விடுகிறேன்... <br />
<br />
திக்கென்றது. கடைக்காரியிடம் நடந்ததைச் சொல்லி அழுது கடன் கேட்டேன். முதலில் முடியாது என்றவள் என்ன தோன்றியதோ ஒரு பெரிய பொட்டலம் நிறையப் பூ வைத்து என்னிடம் கொடுத்து, "போ ராஜா" என்றாள். தெருவின் அசிங்கம் பாராமல் சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்தேன். பூவை வாங்கிக் கொண்டு அழுது கொண்டே திரும்பி ஓடி வந்தேன். நேரமாகி விட்டது. இனி எப்படியும் அடி விழும். திரும்பும் வழியில் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டேன். 'அப்பனை அடிக்காமல் இருக்கச் சொல்லு, மாமியிடம் கேட்டு தேங்காய் உடைக்கிறேன்'.<br />
<br />
கோகுலம் காலனி வந்த போது மாமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நைசாக மாமியிடம் ஒரு ரூபாய் கேட்டேன். மாமா காதில் விழுந்து விட்டது. "எதுக்குடா ஒரு ரூபாய்?" என்றார். சொன்னேன். "அப்பா வந்திருப்பா மாமா, அவசரமா ஓடணும்" என்றேன். "ரூபாலாம் வேண்டாம். அடிக்க மாட்டான். நடந்ததைச் சொல்லு" என்றார் மாமா. மாமியும் இனி பணம் தர மாட்டார். "இருடா.. சாப்டுட்டு போ. மாமாவை அழைச்சுண்டு போ.. நீங்க போய் சமாதானமா சொல்லிட்டு வாங்கோ.. குழந்தையை அடிக்கிறதாவது.. என்ன ம்ருகம்.. பயந்து போயிருக்கான் பாருங்கோ" என்றார். நான் சாப்பிடவில்லை. மாமாவும் வரவில்லை. <br />
<br />
வீட்டுக்கு ஓடினேன். அப்பா குளித்துக் கொண்டிருந்தார். அவசரமாக பூவை பூஜை மேடையில் வைத்தேன். பர்சில் பணம் இல்லாததைப் பார்த்து விசாரணை நடத்தி முடித்திருந்தார் என்று என் தங்கை என்னிடம் விவரமாகச் சொன்னாள். "என்னடா நீ திருடினியா?" என்றாள். சுத்தமாக மறுத்து விடுவது என்று தீர்மானித்திருந்தேன். "சீ சீ" என்றேன். அப்பா குளித்து வந்ததும் முதல் வேலையாக என்னிடம் கேட்டார். "ஏலே.. திருவாழத்தான்.. உளப்பாம சொல்லு.. எடுத்தியா?". "எனக்குத் தெரியவே தெரியாதுப்பா". பிள்ளையார் மேல் சத்தியம் செய்தால் என் அப்பா சற்று தளர்வதைப் பார்த்திருக்கிறேன். "இல்லப்பா.. பிள்ளையார் மேலே சத்தியமா நான் எடுக்கலே.. உன் பர்ஸ் பக்கமே வரலே.. நாள் முழுக்க விளையாடிட்டிருந்தேன்.. அதான் பூ வாங்கவே லேட்டு.. பிள்ளையார் மேலே சத்தியம்பா" என்று ஒரு போடு போட்டேன். <br />
<br />
வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. என் தங்கை ஓடித் திறந்தாள். மாமி உள்ளே வந்தார். எங்களைப் பார்த்தார்.<br />
<br />
"சரியான டயத்துக்கு வந்திருக்கேன். இதோ பாருங்கோ அத்திம்பேர்.. குழந்தை வந்து எல்லாம் சொன்னான்.. தெரியாம எடுத்துட்டான்.. அடிக்காதீங்கோ.." என்று எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். என் கன்னத்தைத் தட்டி, "வரட்டுமாடா கண்ணா.. அப்பா அடிக்க மாட்டா சரியா? சாப்டாம ஓடி வந்துட்டியேடா.. டீந்த்ரா.. வரட்டுமாடி.. இவனுக்கு சாதம் போடு.." என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். "குழந்தையை அடிக்காதீங்கோ.. ரூவா தானே.. போய்ட்டுப் போறது.."<br />
<br />
என் மாமி கிளம்பியதும் எனக்கு விழுந்த முதல் அறையில் கன்னம் பழுத்துப் போனது. "பிள்ளையார் மேலேயா சத்தியம் பண்றே ப்ளேக்காட்?" எனக்கு விழுந்த இரண்டாவது அறையைப் பார்த்த என் தங்கை நின்றபடி அதிர்ச்சியில் ஒன்றுக்குப் போனாள். பூஜை மேடைப் பிள்ளையாரைப் பார்த்தேன். சிரிப்பது போல் பட்டது. என் அப்பா அடிக்கும் பொழுது என் அம்மா பொதுவாகத் தடுத்ததே இல்லை. அன்றைக்கும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு அடிக்கு மேல் தாங்க முடியவில்லை. பிள்ளையாரைப் பார்த்தேன். என்னைக் கைவிட்டு சிரிப்பு வேறேயா? மீண்டும் <a href="http://moonramsuzhi.blogspot.com/2010/10/blog-post_22.html" target="_BLANK">தாயத்து</a> நினைவு வந்தது. இந்த முறை உருகி வேண்டிக் கொண்டேன். அப்பா சாக வேண்டும்.<br />
<br />
அன்றைக்கு அவரிடம் வாங்கியது தான் கடைசி அடி. அடுத்த மாதம் ஆகஸ்டு 15ம் தேதி இறந்தார். எனக்கும் விடுதலை.<br />
<br />
புள்ளி.<br />
<br />
<இன்னும் உண்டு> ►► <a href="http://moonramsuzhi.blogspot.com/2018/06/2-1.html">2</a><br />
<br />
<br />
</SPAN><br />
<br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68288492150553437582018-04-01T21:30:00.000-05:002018-04-02T08:30:45.098-05:00கோமதியின் காதலன்<span style="line-height: 180%;"> <br />
<br />
        <span style="font-size: 280%;"><b>எ</B></SPAN>ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவுகளும் செய்கைகளும் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை யூகத்துக்கு இடம் வைக்காமல் தெரிவித்தன. வயதானால் இது ஒரு வரம் போல. இயங்கத் தவிக்கும் உறுப்புக்கு இயங்கித் தவிக்கும் இன்னொரு உறுப்பின் துணை. <br />
<br />
இன்னொரு உறுப்பு என்றதும் என் மனைவி கோமதியின் நினைவு வந்தது. <a href="http://moonramsuzhi.blogspot.com/2013/12/blog-post_28.html" target="_BLANK">கோமதி</a> இறந்து நாலு வருடங்கள் இருக்குமா? வீட்டுக்கு வரும் வருந்தினர்கள் ரம்யாவிடம் "உன் அப்பா மிகவும் நொடிந்து விட்டார்.. மனைவியை இழந்த துக்கம்" என்று சொல்லும் பொழுது தலையாட்டுவேனே தவிர எனக்குத் தெரியும் அது எத்தனை போலி என்று. அதற்காக என் கோமதியை நான் நேசித்தது பொய்யாகி விடாது. வயதான காலத்தில் அவளுடைய பொருமல்கள் எரிச்சலூட்டின என்றாலும் அவள் ஆஸ்பத்திரியில் பட்ட அவதிகள் என் விரோதிக்குக் கூட வரக்கூடாது என்று நினைத்திருக்கிறேன்.<br />
<br />
ஆனால் எனக்கே வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கான ஆயத்தங்கள் தான் என் மகள்-மாப்பிள்ளை உரையாடல் என்பது புரிந்திருந்தால் அன்றைக்கே மூச்சைப் பிடித்துக்கொண்டு பொட்டென்று போய்ச் சேர்ந்திருப்பேன்.<br />
<br />
"என் அப்பாவை இன்னிக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க, சொல்லிட்டேன்"<br />
<br />
"ரம்.. அவருக்கு இஷ்டமில்லே.. டோன்ட் யு ஸீ?"<br />
<br />
"வீட்டிலயே இருந்து அவரைச் சாகச் சொல்றிங்களா? யூ வான்ட் ஹிம் டெட்?"<br />
<br />
"இல்லே.. நீ என்ன சொல்லியும் அவரு வர மாட்டேங்குறாரு.. ஐ'ம் ஒன்லி ஹிஸ் ஸன் இன் லா"<br />
<br />
"அவர் கிட்டே பணம் வாங்குறப்ப வேர் வாஸ் திஸ் டிபரன்ஸ்? அப்ப மகன் மாதிரி இளிச்சிங்களே?"<br />
<br />
"லிஸன்.. உங்கப்பா கிட்டே நான் ஒரு பைசா எனக்காக கை நீட்டி வாங்கியதில்லே.. உங்கம்மா இறந்தப்புறம் அவங்க நகை நிலம் எல்லாம் வித்து உனக்காகவும் நம்ம பசங்களுக்காகவும்னு என் கிட்டே கொடுத்த பணத்தை நான் வாங்கிக்கிட்டேன்.. அதுவும் உன் பேர்ல ட்ரஸ்ட்ல இருக்கு.. க்விட் யுர் நான்ஸென்ஸ்"<br />
<br />
"வாடெவர்.. நீங்க தானே ட்ரஸ்டி? ஐ னோ வாட் யு டூ வித் த மனி"<br />
<br />
"யூ அன்க்ரேட்புல் லீச்... உங்கம்மாவுக்கான அத்தனை மெடிகல் செலவும் நான் தானே கொடுத்தேன்? வேர் வில் ஐ கோ பார் மனி?" மாப்பிள்ளை குரல் உயர்ந்தது. பெண் இனி விட்டுக் கொடுக்க மாட்டாள். இருவரும் குரைக்கத் தொடங்குவார்கள். மெள்ள நகர்ந்து என் அறைக்குப் போனேன்.<br />
<br />
"உங்கம்மா மெடிகல் செலவு போதாதுனு.. உங்கப்பாவுக்கான க்ரீன் கார்ட் செலவு.. அண்ணனு சொல்லிக்கிறியே.. ஒருத்தனாவது உங்கப்பாவை கூட வச்சுக்க வேண்டியது தானே? தொண்ணூறு வயசு ஆசாமி கூட இருந்தா தொந்தரவுனு ரெண்டு பேரும் கை விரிச்சாங்க.. நான் தான் உங்கப்பாவையும் வச்சுக் காப்பாத்த வேண்டியிருக்கு"<br />
<br />
"ஓ மை காட்! யூ ஆர் மெஸ்ட் அப்..! என் அப்பாவை சுமைனு சொல்ற அளவுக்கு உனக்கு மூளை கோளாறு வந்திருச்சு.. உன் அப்பா அம்மாவா இருந்தா என்ன செய்வே?"<br />
<br />
"மை பேரென்ட்ஸ் ஆர் டெட்"<br />
<br />
நான் படுக்கையில் படுத்துக் கொண்டேன். "ராமா" என்றேன் ஆயாசத்துடன்.<br />
<br />
"கூப்டீங்களா தாத்தா?" என்றான் இளைய பேரன். பக்கத்தில் படுத்திருந்ததை கவனிக்கவில்லை. "ராம்.. இங்க ஏன் படுத்துட்டிருக்கே? ரூமுக்குப் போ இல்லின்னா அம்மாவுக்கு கோவம் வரும்"<br />
<br />
"தாத்தா.. பயமாருக்கு.. அண்ணா என் படுக்கைல தேள் போட்டிருக்கறதா சொன்னான்.. அதான் இங்கே வந்தேன்.. இந்த ஓரத்துல படுத்துக்கறேன் தாத்தா.. ஐ வோன்ட் பாதர் யு"<br />
<br />
"சீசீ.. இங்க வா.. தாராளமா படுத்துக்கோ" என்று போர்வையை விலக்கி அவனை உள்ளிழுத்தேன்.<br />
<br />
"அப்பா அம்மா சண்டை போடுறாங்களா உன்னைப் பத்தி?" என்றபடி என் கால்களின் மேல் தன் காலைப் போட்டுக் கொண்டு படுத்தான் ராம். "பேசாம டாக்டர் கிட்டே போக வேண்டியது தானே தாத்தா?"<br />
<br />
"டாக்டர் கிட்டே போகாமலே போக முடியுமானு பாக்கறேன்"<br />
<br />
"புரியலே தாத்தா.." என்றவனை இலேசாக வருடிக் கொடுத்தேன். "புரிய வேண்டிய அவசியமே உனக்கு வராமல் இருக்கட்டும்டா".<br />
<br />
பத்து நிமிடம் கூட இருக்காது.. மாப்பிள்ளையும் ரம்யாவும் அறைக்குள் வந்தார்கள். <br />
<br />
"அப்பா.. இப்ப நீயா ஆஸ்பத்திரிக்கு வரியா, இல்லே போலீஸை கூப்பிட்டு அன்கோவாபரெடிவ்னு உன்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பவா?"<br />
<br />
"அனுப்புறதுலயே இருடி" என்று சலித்தபடி எழுந்தேன். ராம் சட்டென்று எழுந்து "சாரிம்மா.. நான் என் ரூமுக்குப் போறேன்" என்று ஓடினான்.<br />
<br />
"ரம்யா.. எனக்கு ஒண்ணுமில்லே.. ஜஸ்ட் வீக்" என்றேன்.<br />
<br />
"அப்பா.. நேத்து ராத்திரி மட்டும் ரெண்டு தடவை கீழே விழுந்தே.. இன்னிக்கு மதியம் ஒரு மணி வரை நீ எழுந்திருக்கக் கூட இல்லே.. ஜஸ்ட் கோ" என்று என்னை எழுப்ப முனைந்தாள்.<br />
<br />
"தள்ளாதடி.. நானே எழுந்து வரேன்".<br />
<br />
                என்னை சோதனை செய்த மருத்துவர் "மிஸ்டர் ஸேடா.." என்று இழுத்தார்.<br />
<br />
"சதாசிவம்"<br />
<br />
"உங்க ரத்தத்துல ஹிமொக்லொபின் எண்ணிக்கை ரொம்ப குறையா இருக்கு.. 12வது இருக்கணும்.. ஆறுதான் இருக்கு.. இந்த நிலையில உங்களால எழுந்து நடமாடக் கூட முடியாது.. அதனால உங்களை இங்கே அட்மிட் பண்ணச் சொல்லியிருக்கேன்"<br />
<br />
நான் கவனிக்கவில்லை. எனக்குத் தெரிந்து விட்டது என் நிலை. "ஹலோ.. நான் சொல்லுறது புரியுதா? உங்களுக்கு ஒரு யூனிட் ரத்தம் கொடுத்து கொஞ்சம் நீருணவும் ஐவில புகட்டச் சொல்லியிருக்கேன். காலைல எப்படி இருக்குனு பார்த்து வீட்டுக்கு அனுப்பிடச் சொல்லியிருக்கேன். ஆல்ரைட்?" <br />
<br />
                "அப்பா எப்படி இருக்கு?"<br />
<br />
"நீ தான் சொல்லணும்.. காலைல வீட்டுக்கு அனுப்புறதா சொன்ன டாக்டரைக் காணோம்.. வந்து ரெண்டு நாளாச்சு"<br />
<br />
"டோன்ட் வரி பா.. உன் ஜூரம் இறங்கலியே அதான் இங்கே வச்சிருக்காங்க.. புது ரத்தம் சேர்த்ததால இருக்கலாம்.. அப்புறம் உன் வயிறு லிவர் கிட்னி சரியா வேலை செய்யலியாம்.. நாளைக்கு என்டஸ்கொபி பண்ணி வயத்துல ஏதாவது சிக்கல் இருக்கானு பார்க்கப் போறாங்க.. அதுக்குள்ள ஜூரம் இறங்கிடும்ன்றாங்க"<br />
<br />
                "இப்ப எப்படி இருக்கு?" மாப்பிள்ளையைக் கண்ணால் பார்த்துச் சிரித்தேன். என் நிலை உனக்கு வரக்கூடாது ஐயா.<br />
<br />
"கவலைப்படாதீங்க.. என்டஸ்கொபில சிக்கல் எதுவும் இல்லேனு சொல்லிட்டாங்க"<br />
<br />
"அப்ப வெளில அனுப்ப சொல்லுங்க" என்றேன். "வந்து ஆறு நாளாவுது"<br />
<br />
"உங்க ஆக்ஸிஜன் கவுன்ட் சீரா இல்லைனு சொல்றாங்க.. இந்த நிலையில வீட்டுக்கு அனுப்ப முடியாதாம். அதுவுமில்லாம நிமோனியா சிம்டம்ஸ் இருக்குல்ல.. உங்க நுரையீரல் பழுதாயிருக்கும்னு சொல்றாங்க"<br />
<br />
"மாப்பிள்ளை.. ஐ வாஸ் ஜஸ்ட் வீக். ரெண்டு வாட்டி தடுமாறி விழுந்தேன். அவ்ளோ தான். ஆனா நானே சாப்பிட்டு நானே குளிச்சு நானே என் படுக்கையை சரி செய்து படுத்து எழுந்தேன். என்னை இங்கே கொண்டு வந்து..."<br />
<br />
"நாட் மி. உங்க பொண்ணு தான் உங்களை வற்புறுத்தி இங்கே கொண்டு வந்தா.. ப்லீஸ் டோன்ட் ப்லேம் மி"<br />
<br />
"ஐயோ.. பழியாச் சொல்லலே.. என் நிலமையை.." அமைதியானேன். <br />
<br />
                "மிஸ்டர் ஸேடா.. ஹௌ ஆர் யூ டுடே?"<br />
<br />
இவன் வேறே.. குசலம் விசாரிச்சுக் கொல்றவன் நம்மாளு. ஹௌ ஆர் யூனு கேட்டே கொல்றவன் வெள்ளைக்காரன். பத்து நாளா காசு குடுக்குற பேஷன்ட் பெயரை ஒழுங்கா கத்துகிட்டு உச்சரிச்சா என்ன? புன்னகைக்க முயற்சித்தேன். வேண்டாமென்று நிறுத்திக் கொண்டேன். "மிஸ்டர் ஸேடா.. உங்க நிமோனியா குறையலே.. அதில்லாமே உங்க கிட்னி அறுபது சதவிகிதம் தான் வேலை செய்யுது"<br />
<br />
"அடப்பாவிகளா.. ஒரு புட்டி ரத்தம் கொடுத்து உடனே வீட்டுக்கு அனுப்புறேன்னு உள்ளே கொண்டு வந்தீங்க.. நாசமாப் போக" <br />
<br />
"அப்பா.. நிமோனியா குறைஞ்சதும் உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க" என்று என் மகள் சேர்ந்து கொண்டாள்.<br />
<br />
"எத்தனை நாள்?"<br />
<br />
"இன்னும் அஞ்சு நாள்"<br />
<br />
"எனக்கு இப்பவே போகணும்னு இருக்கு"<br />
<br />
"இப்ப வீட்டுக்கு போக விட மாட்டாங்கப்பா"<br />
<br />
"வீட்டுக்கு யார் போகணும்னா? சாக விடுவாங்களா கேளூ. ஐ வான்ட் டு டை"<br />
<br />
"ஸேடா ஸீம்ஸ் டிப்ரஸ்ட்" என்றான் வெள்ளை. "மூணு டோஸ் ஏன்டை டிப்ரஸன்ட் சேர்க்கச் சொல்றேன்"<br />
<br />
                "அப்பா" என்று எழுப்பினாள் மகள். நான் உறங்கவில்லை. எப்படி உறக்கம் வரும்? இங்கே வந்த நிமிடம் முதல் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்தப் படுக்கையை விட்டு எழுந்திருக்கவேயில்லை. இந்த வேளைக்குத் தூக்கம் என்று தெரிந்தால் தானே? அதற்கு மேல் இந்த ஆஸ்பத்திரி ஆட்கள் என் மகள் மாப்பிள்ளை யாரையுமே பார்க்கப் பிடிக்கவில்லை. என்னை அவர்கள் இந்த நிலையில் - ஒரு சுருணை போர்த்திய உடலுடன் ஏதோ ஒதுக்கிவைக்கப்பட்ட காளான் போல் தனித்து கிடக்கும் நிலையில் - யாரும் என்னைப் பார்க்க விரும்பவில்லை. என் இயலாமை.. என்னால் சட்டென்று அத்தனையையும் அறுத்துக் கொண்டு ஓடிப்போகவும் முடியவில்லை. நான் ஒவ்வொரு நிமிடமும் வேண்டும் அத்தனை ராமன்களும் க்ருஷ்ணன்களும் மகாலக்ஷ்மி பரதேவதாக்கள் அத்தனை பேருமே என்னை வைத்துக் கேலியாட்டம் ஆடும் பொழுது நேரும் அவமானத்தையும் அவலத்தையும் சகித்துக் கொள்ள கண்களையாவது மூட முடிகிறதே என்ற அல்ப சந்தோஷத்தில் கண்ணை மூடிக் கொள்கிறேன். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருளுமா என்ற வாதம் எத்தனை உதவாக்கரை என்பது இப்போதல்லவா புரிகிறது? மகள் விடவில்லை. "அப்பா" என்றாள். "என்னப்பா தூங்கிட்டியா?"<br />
<br />
எத்தனை மடத்தனமான கேள்வி. இருந்தாலும் கேட்டவள் மகள் அல்லவா? கேள்வியுடன் அவளைப் பார்த்தேன். "அப்பா.. உன்னை மறுபடி ஐசியூவுக்கு மாத்தப் போறாங்க.. ஆக்ஸிஜன் கூடுற வரைக்கும் மூக்குல கப் பொருத்தி எல்லாமே ஐவில தரப்போறாங்க.. அனதர் த்ரீ டேஸ்"<br />
<br />
அவளைப் பரிதாபமாகப் பார்த்தேன். நான் என்ன சொல்வேனென்று எதிர்பார்க்கிறாள்? நான் நிதம் வணங்கும் பெருமாளே.. அசல நிர்குண ஆத்ம ராமா.. என் பெண்ணுக்கு இந்த நிலமையைக் கொடுத்துடாதே. அவளுக்கு இந்த நிலை வந்தா கடவுள்னு சொல்லிக்கத் தகுதியே உனக்கு இல்லை.<br />
<br />
                இன்றோடு இங்கே வந்து இருபத்தேழு நாட்களாகின்றன. இரண்டு முறை டயாலிஸிஸ் செய்துவிட்டார்கள். இரண்டு முறை ஐசியூ பார்த்தாகிவிட்டது. பல்மனெரி, யுராலஜி, நெப்ராலஜி, ந்யூராலஜி இத்யாதி லஜிகளைப் பார்த்தாகிவிட்டது. பாவிகளா! ஹிமொக்லொபின் குறைஞ்சா என்னடா நாசாமாப் போனேன்? நல்லாத்தானே சாப்பிட்டுத் தூங்கி என் பாட்டுக்கு என் பேரனை அவ்வப்போது பார்த்துக்கொண்டு.. ஏதோ யுட்யூபில் நாகேஷ் படம் பார்த்துக்கொண்டு.. கோமதியை அவ்வப்போது திட்டிக்கொண்டு.. நல்லாத்தானே இருந்தேன்? ஹிமொக்லொபின் குறைஞ்சா என்ன இப்போ? எத்தனை குறைகிறதோ அத்தனைக்கேத்தாற் போல இருந்துட்டுப் போறேன்.. இப்படி தெருச் சொறிநாயை விடக் கேவலமா என்னை அலங்கோலப்படுத்தி அசிங்கப் படுத்திட்டீங்களேடா..<br />
<br />
                "அப்பா" மகள் தான். மாப்பிள்ளை வருவதை நிறுத்திக் கொண்டாரா அல்லது அவர் வரும் பொழுது நான் உண்மையிலேயே தூங்கிவிட்டிருந்தேனா தெரியாது. அவசியமும் இல்லை. "அப்பா.. அண்ணா ரெண்டு பேரும் பேஸ் டைம் பண்றாங்கப்பா.. பேசணும்னு சொன்னியே" என்றபடி ஐபோனை என் எதிரே இருந்த டிவியில் இணைத்தாள். என் இரு மகன்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் என்று எல்லாரும் தெரிந்தார்கள். ஏதேதோ பேசினார்கள். என்னால் உரக்கப் பேச முடியவில்லை. கையசைத்து அவர்களை அமைதி காக்கச் சொன்னேன். மெள்ளப் பேசினேன்.. "இதப்பாருங்கப்பா.. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. நீங்கள் சொன்னால் டாக்டர்கள் கேட்பார்கள்.. தயவுசெய்து என்னைச் சாக விடுங்கள்.. நீங்களா இதைச் செய்யலேன்னா இன்னிக்கு ராத்திரி நானே இந்த ட்யூப் எல்லாம் பிச்சிப் போட்டுருவேன்"<br />
<br />
"அப்பா.. அப்படியெல்லாம் பேசாதப்பா.. உன்னால எந்த ட்யூபையும் பிச்சிப் போட முடியாது.. கண்காணிப்புல இருக்கே.. அப்படி முரண்டு பிடிச்சா உன்னை அடைச்சு வச்சுடுவாங்க"<br />
<br />
"அப்பா.. உனக்கு என்ன குறை? ஆஸ்பத்திரிலே கேர் பண்றாங்க.. ரம்யா வேறே தினம் வரா"<br />
<br />
"அப்பா.. உன் எரிச்சல் புரியுது.. ஆனா வியாதி வந்தா அனுபவிச்சு தானே ஆகணும்? அதைவிட்டு சாகறேன் பிச்சுப்போடுறேன்லாம் சைல்டிஷ் இல்லையா?"<br />
<br />
என் குழந்தைகளுக்கு என்னைப் புரியவில்லை. புரிந்து கொள்ளும் சக்தியையும் அறவே இழந்து விட்டார்கள். அவர்களுக்குப் புரியவைக்க எனக்கு வலு இல்லை.<br />
<br />
ஓ என்று அழுதேன். கோமதி.. என் கோமதி.. எனக்கு ஒரு உதவி செய்யேன்? நீ தான் சாமர்த்தியமா கழண்டுகிட்டே.. எப்படியாவது என்னையும் கூட்டிக்க.. கோமதி.. கோமதி.. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. குமுறிக் குமுறி அழுதேன். இதற்கா தொண்ணூறு வருடங்கள் வாழ்ந்தேன்? நாதியற்று கேவலமாக பிச்சைக் கேட்கும் அவலத்தில் மிதக்கவா என்னைப் படைத்தாய் ராமா?<br />
<br />
"ப்லீஸ்" என்றேன் மென்மையாக. "ஐ வான்ட் டு கோ.. இந்தக் கொடுமையிலிருந்து எனக்கு விடுதலை குடுங்க.. உங்க குடும்பங்கள் நன்றாக இருக்கும்"<br />
<br />
"தி ஓல்ட் மேன் இஸ் டிமென்டெட்" என் மகன் சொல்வது தெளிவாகக் காதில் விழுந்தது. கோமதி அடிக்கடி இடிப்பாள் "இதெல்லாம் நல்லா காதுல விழுமே?"<br />
<br />
"லிஸன் மை டியர் சில்ரன்" என்றேன். "எனக்கு தொண்ணூறு ஆவப்போகுது. ஐ ஹெவ் லிவ்ட் மை லைப். எப்படியாவது என் வாழ்நாளை நீட்டிக்க எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்ன செய்யப் போகிறேன்? எழுந்து வந்து உங்கள் யாருக்காவது உதவியாக இருக்கப் போகிறேனா? அல்லது என் போக்கில் நடமாடத்தான் போகிறேனா? ஐ கான்ட் இவன் லிப்ட் மை பிங்கர் விதவுட் யுவர் பர்மிஷன். என்னை ஏன் இப்படிக் கேலி செய்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? இந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் எல்லாம் என்னவோ என் ஒரு உயிரைக் காக்கும் கடமையில் இருப்பதாக நினைக்கிறீர்களா? கூலிக்கு மாரடிக்கும் அந்தக் கூட்டத்துக்கும் என் நலத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உண்மையில் உங்களுக்கும் எனக்கும் கூட அதிகம் இனி சம்பந்தம் இல்லை. வி லிவ் இன் டிபரன்ட் வர்ல்ட்ஸ். நான் ஒரு சுமை. என்னை ஏன் சுமக்க விரும்புகிறீர்கள்? என்னை வீட்டிலேயே இருக்க விட்டிருந்தால் இன்னேரம் இறந்திருப்பேன். அதற்கு பதிலாக இங்கே கொண்டு வந்து உடம்பெல்லாம் ஓட்டை போட்டு ட்யூப் பொருத்தி பீத்துணி மாதிரி ஒரு கவுன் மாட்டி என்னைக் கேலிக்கிடமாக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? நான் உங்கள் அப்பா இல்லையா? அந்த கரிசனம் கிடையாதா? ப்லீஸ்.. என் உயிரை நீட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தயவுசெய்து என்னை கௌரவத்துடன் சாக விடுங்கள். லெட் மி டை இன் டிக்னிடி". நான் அழவில்லை. <br />
<br />
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்கள். என் மகள் தனியாக எங்கோ போய் அண்ணன்களுடன் பேசித் திரும்பினாள். உடன் என் மருத்துவரும் வந்தார். ஐபோனை மறுபடி டிவியில் இணைக்க, பேஸ் டைமில் என் மகன் இருவரும் புன்னகைத்தார்கள். மருத்துவர் என்னிடம் "ஸேடா.. டு யூ வான்ட் டு பி டேகன் ஆப் ஆகிஸிஜன்?" என்றார்.<br />
<br />
"ஆமாம்"<br />
<br />
"இதை எடுத்தால் மிக விரைவில் உங்கள் இதயத் துடிப்பு நின்றுவிடும் என்பது புரிகிறதா? டு யூ ரியலைஸ்?"<br />
<br />
"இதை வைத்திருந்தால் என்னை சாயந்திரம் டிஸ்சார்ஜ் செய்வீர்களா?"<br />
<br />
மருத்துவர் சிரித்தார். "ஸ்மார்ட்.. உங்க முக்கிய உறுப்புகள் எல்லாமே இருவது சதவிகிதத்துக்குக் குறைவாகவே இயங்குது.. ஸோ நோ.. உங்களை டிஸ்சார்ஜ் செய்வது இம்பாஸிபில்"<br />
<br />
"அப்ப.. எனக்கு விடுதலை கொடுங்கள்"<br />
<br />
சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு மருத்துவர் எழுந்தார். என்னைத் தட்டிக் கொடுத்தார். "ப்ரேவ் மேன்" என்றபடி வெளியேறினார். "இரண்டு மணி நேரம் இருந்தால் அதிகம்" என்று அவர் என் மகளிடம் சொன்னது கேட்டது.<br />
<br />
                அத்தனை குழாய்களையும் நீக்கி புதிதாக ஒரு சுருணை அணிவித்து அழகு பார்த்தார்கள். என் பெண், பேரக்குழந்தைகள், மாப்பிள்ளை எல்லாம் வந்திருந்தார்கள். என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். டிவியில் என் இரண்டு மகன்களின் குடும்பம். <br />
<br />
"அப்பா.. வி ஆல் லவ் யூ" என்றாள் மகள். "உனக்கு என்ன வேணும்பா? வாட் கேன் வி டு பார் யூ நௌ?"<br />
<br />
"கோமதி படத்தைக் கொண்டு வரச் சொன்னேனே?" என்றேன். <br />
<br />
"மறந்து போச்சுபா" என்றாள் மகள். <br />
<br />
"போகட்டும்.. ம்ருத்யுஞ்சய மந்த்ரம் சொல்லேன்"<br />
<br />
"மறந்து போச்சுபா.. அம்மா சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது"<br />
<br />
"மாம்.. செக் இன் யுட்யூப்" என்றான் பேரன். <br />
<br />
"சரி விடு.. ராம ராமனு நாலு தடவை சொல்லு"<br />
<br />
"கொஞ்சம் இருப்பா.. யுட்யூப்ல தேடுறேன்"<br />
<br />
கோமதி பாடுவது போல் கேட்டது..<br />
    அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்<br />
    அவனே யணிமருதம் சாய்த்தான் - அவனே<br />
    கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்<br />
    இலங்கா புரமெரித்தான் எய்து.<br />
<br />
நீ சொன்னா சரி, <a href="http://moonramsuzhi.blogspot.com/2013/12/blog-post_28.html" target="_BLANK">கோமதி</a>.<br />
<br />
</SPAN><br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13143766323984915862017-09-28T18:16:00.000-05:002017-11-27T15:13:26.690-06:00நோற்றான்<span style="line-height: 180%;"> <br />
<br />
        <span style="font-size: 280%;"><b>எ</B></SPAN>ன் எதிரே இருந்த இருவரின் பார்வையில் தெரிந்தது என்ன? விடை அ)வெறுப்பு ஆ)கோபம் இ)ஆத்திரம் ஈ)கனிவு - என்ற கேள்வியை என்னிடம் யாராவது கேட்டால் விடை சொல்வது கடினம். <br />
<br />
விடை ஈ)கனிவு அல்ல என்பது மட்டும் நிச்சயம். வெறுப்பு, ஆத்திரம், கோபம், அருவருப்பு, இயலாமை எல்லாம் கலந்த பார்வையை என்னை நோக்கி தாராளமாக வீசினார்கள் இருவரும். <br />
<br />
"எப்படி உங்களுக்கு இது போலக் கேட்கத் தோணுது சார்?" என்றார் இளையவர். அவரை அடக்கிய மூத்த பெண்மணி, "கொஞ்சம் இருங்க ராதிகா, நான் பேசுறேன்" என்று என்னைப் பார்த்தார். "சார்.. தயவு செய்து இங்கருந்து போயிடுங்க.. போய் கோர்ட் ஆர்டரோட வாங்க.. இதுக்கு மேலே உங்களோட பேச எங்களுக்கு விருப்பம் இல்லே".<br />
<br />
நான் விடவில்லை. "மேடம்.. எனக்குச் சேரவேண்டியதைக் குடுத்து நீங்க போகச் சொன்னா தாராளமா போயிருவேன்.. ஆனா எனக்குச் சொந்தமானதை நீங்க எடுத்து வச்சுக்கிட்டு தர மறுக்குறீங்க.. கேட்டா சட்டம் பேசுறீங்க.. சட்டமே என் பக்கத்துல இருக்குதுனு ஆதாரத்தோட வந்திருக்கேன்.. அப்பவும் என்னவோ உங்க சொத்தை நான் கேக்குற மாதிரி பேசுறீங்க.. பீ தொடச்ச துணியாட்டம் என்னைப் பாக்குறீங்க.. போவுது.. உங்க பார்வையைப் பத்தியெல்லாம் எனக்கு அக்கறையில்லே.. என் சொத்தை.. எனக்கு உரிமையானதை எங்கிட்ட கொடுத்துடுங்க.. நான் போயிட்டே இருக்கேன்.. இங்க தங்கி உங்க ரெண்டு பேத்தையும் பாத்துட்டு இருக்க எனக்கு மட்டும் முடையா என்ன?" <br />
<br />
ராதிகாவுக்கு கோபம் வந்துவிட்டது. "சார்.. நீங்க கிளம்புறீங்களா.. இல்லை போலீசை கூப்பிடவா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசுறீங்களே? நீங்கள்ளாம்.."<br />
<br />
"நீங்கள்ளாம் மனுசனானு கேக்கப்போறீங்களா? கேளுங்க. நீங்களும் மனுசன் தான். நானும் மனுசன் தான். என்ன நம்ம நிறம் வேறே அவ்வளவு தான். தகாதது அப்படி என்ன கேட்டுட்டதா கடுப்பாறீங்க. நாலு வருசத்துக்கு முந்தி நீங்க எடுத்துக்கிட்டுப் போன என் பிள்ளையைத் திருப்பிக் குடுங்கனு கேக்குறேன்.. அந்தப் பிள்ளைக்கு அப்பன் நான் தான், எனக்குப் பொறந்தது தான் அந்தப் பிள்ளைனு அத்தாட்சியோட வந்திருக்கேன்.. என் பிள்ளையை எங்கிட்ட குடுங்கனு கேட்டா மனசாட்சி மாங்கா இஞ்சின்றீங்களே?"<br />
<br />
"மிஸ்டர்.. நாங்க உங்க பிள்ளையை எடுத்துக்கிட்டமா?" என்றார் மூத்தவர்.<br />
<br />
"ஆமாம் மேடம்.. இந்தம்மா தானே சொன்னாங்க.. என் பிள்ளையை போலீஸ் ஸ்டேசன்லந்து கூட்டியாந்து இங்கே வளக்குறதா?"<br />
<br />
"ஆமாங்க.. உங்க பிள்ளைக்கு அப்ப ஒரு வயசு கூட ஆவலே.. போலீஸ் ஸ்டேசன் வாசல்ல விட்டுப் போயிட்டீங்க.. அதுவும் ஒரு கை ஊனமான குழந்தை.. கொஞ்சம் கூட இரக்கமில்லாம குழந்தையை விட்டு ஓடிட்டீங்க.. இரக்கம் உள்ள ஆசாமிங்க சிலர் போலீஸ் ஸ்டேசன் வாசல்ல கிடந்த குழந்தையைப் பார்த்துட்டு போலீஸ்ல சொல்லி.. இன்ஸ்பெக்டர் கலெக்டர் வரைக்கும் போய் பிறகு எங்க கிட்டே வளர்ப்பு ஆணையோட ஒப்படைக்கப்பட்ட பிள்ளைக்குழந்தை.. இப்ப உங்களுதுனு உரிமை கொண்டாடிட்டு வரீங்களே?"<br />
<br />
"ராதிகாதானம்மா உம் பேரு? நல்ல பேரு.. அழகா பேர் வச்சிருக்கே.. ஆனா ஆத்திரமா பேசுற.. பரவாயில்லே.. ராதிகா.. இதுல பாரும்மா.. நீ ஆணை கீணைனு நாலு வச்சிருந்தாலும் சட்டம் உரிமைனு ரெண்டு இருக்கு பாரு.. அது என் பக்கம். நீ எடுத்து வளக்குறது என்னுடைய குழந்தைன்றதுக்கு மறுக்க முடியாத கோர்ட் ஆதாரங்களைக் காட்டியிருக்கேன்.. பதினெட்டு வயசு வரைக்கும் பெற்றவருக்குத்தான் உரிமை.. நான் என் பிள்ளையை அடிக்கிறேனா கொல்றேனா..? அதுக்கு சாட்சியும் கிடையாது.. என் போறாத வேளை.. பிள்ளை பொறந்து நாலே மாசத்துல பெண்டாட்டி செத்துட்டா.. பச்சைப் பிள்ளையை நான் எப்படி காப்பாத்துவேன்னு நொந்து போயி ரொம்ப வேதனையோட மனசுருகி வேறே வழியில்லாம போலீஸ் ஸ்டேசன் வாசல்ல விட்டுப் போனேன்.. எத்தனை துக்கம் தெரியுமா.." எனக்குத் தொண்டை அடைத்தது.. கண்களில் நீர்.<br />
<br />
"ஆமாம்.. கேள்விப்பட்டோம்.. உங்க பெண்டாட்டி தண்ணீல மூழ்கி செத்துட்டாங்களாம்.. கொலையா தற்கொலையானு போலீஸ் முடிவெடுக்க முடியாம கேஸை மூடிட்டாங்கனு சொன்னாரு இன்ஸ்பெக்டர்.. இன்சூரன்சு பணம் கிடைச்ச ஆறு மாசத்துல ஊரை விட்டே ஓடிட்டீங்க.. எல்லா விவரமும் குழந்தை ரெகார்டுல கூட இருக்கு.. போங்க சார்.. இடத்தை காலி பண்ணுங்க.. கோர்ட் ஆர்டரோட வாங்க.. நாங்களும் கோர்ட் போகத் தயாரா இருக்கோம்"<br />
<br />
"விளையாடுறியா? அப்போ நான் எதுக்குத் தயார்னு காட்டவா?"<br />
<br />
"சார்.. போலீஸை கூப்பிட்டிருக்கேன்.. போலீஸ் வர வரைக்கும் அமைதியா இருங்க" என்றார் மூத்தவர். சுசீலாவோ என்னவோ பெயர். நினைவுக்கு வரவில்லை. எதுவாக இருந்தால் எனக்கு என்ன? கிழம்.. பார்க்கச் சகிக்கவில்லை.<br />
<br />
"இதென்னம்மா இது.. என் பிள்ளையை நான் கேட்டா போலீஸ் வரட்டும்ன்றீங்க? போலீஸ் வந்து என்ன புடுங்கிடப் போவுது?"<br />
<br />
"மிஸ்டர் மரியாதையில்லாம பேசாதீங்க.. படிச்சவரா இருந்துட்டு"<br />
<br />
"இதென்னம்மா அடாவடியா இருக்குதே? பெண்களாச்சேனு பாக்குறேன்.. வாயுல வந்தபடி பேசிருவேன்.. அனாதை ஆசிரமம்னு பேர்ல மத்தவங்க குழந்தைகளை திருடி வச்சுக்கிட்டு காசு பண்ணிட்டிருக்கீங்க.. உங்களுக்கு நான் எந்த விதத்துல குறைஞ்சவன்? என்ன மரியாதை வேண்டிக்கிடக்குது திருட்டு களவானிகளுக்கு? அனாதை ஆசிரமம்னு பேர் வச்சிட்டு ஊரை ஏமாத்துறீங்க ரெண்டு முண்டைகளும்.."<br />
<br />
ராதிகா அழத்தொடங்கினார். "சார்.. அப்படியெல்லாம் பேசாதீங்க சார்.. இந்த ஆசிரமம் உயர்ந்த நோக்கம் கொண்டது சார்.. இங்க இருக்குற குழந்தைகள்ல ஒரு குழந்தைக்குக் கூட கண் முழுதும் தெரியாது.. உடல்ல வேறே ஊனம்.. ஆனா யாரும் அநாதை இல்லை சார்.. அநாதை என்கிற வார்த்தையே நாங்க பயன் படுத்துறதில்லே.. இந்த வார்த்தையெல்லாம் இங்க பேசி பிள்ளைங்களுக்கு கத்துக் குடுத்துறாதீங்க.. இந்தக் குழந்தைகளுக்கு நாங்க இருக்கோம்.. இங்க வேலை பாக்குற அத்தனை பேரும்.. எங்க ரெண்டு பேர் உள்பட.. ஒரு நயா பைசா சம்பளம் வாங்கறதில்லே.. கிடைக்கிற அரசாங்க மற்றும் தனியார் உதவி அத்தனையும் பிள்ளைங்களுக்கே போவுது.."<br />
<br />
"என்ன சொன்னீங்க? என் பிள்ளைக்குக் கண் தெரியாதா?" என்றேன், வேறெதையும் காதில் வாங்காதது போல. இவர்கள் நயா பைசா சம்பளம் வாங்கினால் எனக்கென்ன.. அனாதைகளை அனாதையெனக் கூப்பிடாவிட்டால் எனக்கென்ன.. <br />
<br />
"தெரியாத மாதிரி பேசாதீங்க சார்.. உங்க பிள்ளைன்றீங்க..மெடிகல், பர்த் சர்டிபிகெட் எல்லாம் காட்டுனீங்க.. அதுல இரிடோகோர்னியல் டிபெக்ட் போட்டிருக்குதுனு படிக்க முடியலியா? கண் சரியா தெரியாத ஊனக் குழந்தைனு தானே விட்டு ஓடினீங்க? பெண்டாட்டி செத்தது வேறே வசதியாப் போச்சு.. இன்சூரன்சு பணம் கிடைச்சதும் செங்கல்பட்டுல யாரையோ கல்யாணம் கட்டிக்கிட்டு மும்பை ஓடிட்டதா போலீஸ்ல சொன்னாங்க.. இத்தனைக்கும் மேலே இது உங்க பிள்ளையே இல்லனு போலீஸ்லயும் கோர்டுலயும் வக்கீல மூலமா பிராக்ஸி வாக்குமூலம் கொடுத்திருக்கீங்க.. எல்லாம் ரெகார்டுல இருக்கு"<br />
<br />
"ராதிகா.. ப்லீஸ்.. வேணாம்.. போலீஸ் வர வரைக்கும் அமைதியா இருப்போம்" என்றார் மூத்தவர். இந்த முகத்தை எத்தனை நேரம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லையே.. எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!<br />
<br />
"இல்லே மேடம்.. எல்லா அயோக்கியத்தனமும் செஞ்சிட்டு நாலு வருசம் கழிச்சு பிள்ளையைக் கொண்டான்றாரு.. அதுக்கு மேலே நாக்குல நரம்பில்லாம.."<br />
<br />
"சரி மேடம்.. மன்னிச்சுருங்க.. நாலு வருசத்துக்கு என்ன செலவு செஞ்சிருக்கீங்க.. அதுக்கு மேலே அம்பதாயிரம் செக் எழுதிக் கொடுத்துடறேன்.. கணக்கை தீர்த்துக்குவோம்.. சரியாப் போச்சா?"<br />
<br />
ராதிகா சீறியது அழகாக இருந்தது. "வாட் நான்சென்ஸ்? உங்க பிள்ளை உயிரோட இருக்குறதுக்கு என்ன சார் விலை? செத்தா என்னனு எங்கியோ ரோட்டுல விட்டுட்டு ஓடினீங்க.. இப்ப கணக்கா கேக்குறீங்க? லஞ்சமா கொடுக்கறீங்க.."<br />
<br />
"ராதிகா.. ப்லீஸ்.. இதோ போலீஸ் வந்துரும்"<br />
<br />
"என்ன்ன்ன்ன்ன்னங்ங்ங்கடி.." என்று எழுந்தேன். எனக்குக் கோபம் வந்துவிட்டால் அடுத்தவர் வேட்டியை உருவிய பின்னரே நிற்பேன். இந்தப் பெண்களை என்ன செய்வது என்று பார்த்தேன். "என்னை என்ன அக்குள் மசிருனு நெனச்சிங்களா? பணிவா கேட்டேன் நயமா கேட்டேன் மசியமாட்றீங்க.. அதுவும் திருட்டுத்தனம் பண்ணி நாடகமாடறீங்க.. இன்னொருத்தர் மகவை திருடி வச்சுகிட்டு ஆசிரமம்னு கூத்தா அடிக்குறீங்க? அஞ்சு எண்றதுக்குள்ற என் பிள்ளையை இங்கே கொண்டுவாங்க.. இல்லின்னா நானே உள்ளாற வந்து ஒண்ணுக்கு ரெண்டா தூக்கிட்டுப் போயிருவேன்.. அஞ்சு எண்ணுவேன்.. புரியுதா?"<br />
<br />
எண்ணத் தொடங்கினேன். ஐந்து எண்ணி முடிக்கையில் போலீஸ் வண்டி வந்தது. ஒரு இன்ஸ்பெக்டரும் ஏட்டும் வந்தனர். பெண் இன்ஸ்பெக்டர். போச்சுடா. பெண்ணுரிமைனு நாடு குட்டிச்சுவராயிட்டிருக்குது.<br />
<br />
வேறு வழியில்லாமல் பெண் இன்ஸ்பெக்டரிடம் எல்லா விவரமும் சொன்னேன். "இன்ஸ்பெக்டர் மேடம்.. நான் செஞ்சது தவறு தான். பெத்த பிள்ளையை நடுத்தெருவுல அனாதையா விட்டுப் போனது பெரிய பாவம்னு உணர்ந்ததால தான் இப்ப இங்கே வந்திருக்கேன். பழைய வக்கீலை விசாரிசசு.. போலீஸ் ஸ்டேசன்ல விசாரிச்சு.. இந்த இடத்துல இருக்குறதா சொன்னாங்க.. ஆண்டவன் புண்ணியத்துல நல்ல அனாதை ஆசிரமமா கிடைச்சுதேனு சந்தோசம்.. ஆனா பாருங்க.. என் பிள்ளையை எங்கிட்டே ஒப்படைங்க.. என்ன இருந்தாலும் தாய் தகப்பன் மாதிரி வருமா? பிள்ளையக் கொடுங்கனு கேட்டா சட்டம் பேசுறாங்க.. மனசை ரொம்ப நோகடிக்கிறாங்க மேடம்" என்றேன். ஆதாரங்களைக் காட்டினேன். "இது என் பிள்ளைதான்.. பாருங்க. ஏதோ என் போறாத வேளை வாக்குமூலம் கொடுத்தேன்.. இப்ப அதை சாக்கா வச்சுக்கிட்டு என்னை ஏமாத்தப் பாக்குறாங்க"<br />
<br />
ராதிகா குறுக்கிட்டு ஆசிரம ஆதாரங்களைக் காட்டினார். "இன்ஸ்பெக்டர்.. இவர் நல்லவரில்லே.. இந்தக் குழந்தையை மும்பைல வித்துப் பணம் செய்ய வந்திருக்காருனு எனக்கு நம்பத்தகுந்த தகவல் இருக்கு.. ப்லீஸ்.. இவரை இந்த இடத்துலந்து விலகச் சொல்லுங்க.. பிள்ளையை தர முடியாதுனு சொல்லிடுங்க"<br />
<br />
இன்ஸ்பெக்டர் எல்லா ஆவணங்களையும் பார்த்தார். ராதிகாவைப் பார்த்து "மேடம்.. தேவையில்லாம வதந்தி பொய் பிரசாரங்களை நம்பாதிங்க.. உண்மையான தகப்பன் உணர்வோட இவரு இங்க வந்திருக்காரா இல்லையானு இவருக்கு மட்டும் தான் தெரியும்.. தகவல்களை நம்பி நாம எந்த முடிவும் எடுக்க முடியாது" என்றவர், என்னிடம் "மிஸ்டர்.. இது உங்க பிள்ளையா இருக்கலாம்.. ஆனா சட்டப்படி இவங்க வளக்கலாம்னு கோர்ட் சொல்லியிருக்குது. அதையும் மதிக்கணும்" என்றார். <br />
<br />
"அதெப்படி? என் பிள்ளையை இவங்க எதுக்கு வளக்கணும்? நான் வக்கீல் கோர்ட்னு போய் லட்சம் செலவானாலும் கேஸ் போடுவேன்"<br />
<br />
"எத்தனை செலவழிப்பிங்களோ உங்க விருப்பம்.. கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு வந்து பிள்ளையைத் தாராளமா கூட்டிப் போங்க.. நானே வந்து உதவி செய்யுறேன்.. இப்ப கிளம்புங்க.. கலாட்டா செய்யாதிங்க"<br />
<br />
"கலாட்டா இல்லிங்க.. இவங்க தான் தாறுமாறா பேசுறாங்க.. என் பிள்ளையைக் குடுத்துட்டா நான் போயிருவேன்.. இன்ஸ்பெக்டர் நீங்க வந்து நியாயம் காட்டுவிங்கனு பார்த்தா.. என்னவோ என்னை நெருக்குறீங்க.. இவங்க செலவை நான் குடுத்துடறேன் இன்ஸ்பெக்டர்.. அதுக்கு மேலே இவங்க செய்யுற இந்த நல்ல காரியத்துக்கு நன்கொடையா ஒரு லட்சம் வேணும்னாலும்.." <br />
<br />
"சார்.. கிளம்புங்க" என்றார் இன்ஸ்பெக்டர் என்னைத் தள்ளாத குறையாக. ஏட்டை அழைத்து ஜீப்பை ஸ்டேசனுக்கு ஓட்டிவரச் சொன்னார். என் வாடகைக் காரில் என்னுடன் ஏறிக்கொண்டு பயணம் செய்தார். போலீஸ் ஸ்டேசன் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி என்னிடம் "சார்.. கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு என்னை வந்து பாருங்க.. இதே போலிஸ் ஸ்டேசன்ல தான் இருப்பேன்.. கோர்ட் உத்தரவும் போலீஸ் துணையும் இல்லாம ஆசிரமம் பக்கம் போவாதிங்க.. புரியுதா?" என்றபடி இறங்கிக் கொண்டார்.<br />
<br />
வண்டியைக் கிளப்பச் சொன்னேன். அழுது மிரட்டி பிள்ளையை வாங்கிவிடலாம் என்று வந்தால்.. இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. முதல் பெண்டாட்டி சாவு போல சுலபமாக முடியாது போலிருக்கிறதே? மும்பைக்காரனிடம் பேரம் பேசியது அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரிந்தது? சும்மா கிளப்பி விட்டாளா? என்னைப் போல் ஆசாமிகளைப் பார்த்திருக்கிறாள். விவரம் தெரிந்த பெண்ணாக இருக்கிறாள். குருட்டு ஊனப் பிள்ளைக்கு ஐந்து லட்சம் வரை தருவதாகச் சொல்லியிருந்தான் மும்பை புரோக்கர். முழுக்குருடாக இல்லாவிட்டால் நல்லது தான்.. வேறு ஏதாவது பாலியல் அடிமை வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள்.. ஒன்றுக்கும் உதவாத பிள்ளையைப் பெற்றதற்கு ஐந்து லட்சம் நல்ல லாபம் என்று நினைத்திருந்தேன். பிள்ளை கைக்கு வந்தால் அவனைக் காட்டி புரோக்கரிடம் கொஞ்சம் அதிகமாகவே கறந்து விடலாம்.. ம்ம்ம்... வேலை வைத்துவிட்டாள் ராதிகா. அவளைப் பிறகு கவனிக்கலாம். இப்போதைக்கு இந்தப் பிள்ளையைப் பிடுங்கி ஐந்து ல பார்க்கவேண்டும். கோர்ட்டுக்கு போனால் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. என்னுடைய பழைய வக்கீலும் அதைத்தான் சொல்லியிருந்தார். டிஎன்ஏ சோதனை என்று பணம் பிடுங்காமல் இருந்தால் சரி. <br />
<br />
எப்படியிருந்தாலும் கேஸ் முடிகிற வரையில் பொறுப்புள்ள தகப்பனாக நடக்க வேண்டும். வக்கீல் செலவுக்கு எத்தனை ஆகும் என்று யோசிக்கத் தொடங்கினேன். <br />
<br />
</SPAN>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41269266119008321902017-08-25T19:04:00.000-05:002017-09-13T06:36:40.209-05:00பல்கொட்டிப் பேய்<span style="line-height: 180%;"> <br />
<br />
<center>14</center><br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2017/08/blog-post_5.html">13◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>ப</b></span>லிமேடைக்கு எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். எனக்கு எதிரே ஸ்ரீராம். அவன் பின்னால் ரமேஷ். அவனைச் சுற்றி ஜாமக்கூழ் மக்கள். ரமேஷுக்குப் பின்னால் விளக்கு விசை. ஸ்ரீராமையும் ரமேஷையும் கவனித்தபடி ஏட்டு வாசலில் நின்றிருந்தார். ஸ்ரீராமின் சைகை தொடர்ந்து நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். மனதுள் இரண்டு அவசர ப்ளேஷ்பேக்.<br />
<br />
<i>ப்ளேஷ்பேக் ராமு</i>: ஸ்ரீராம் எங்களைக் கூட்டிப் பேசினான் என்றேனே, இதான் விஷயம். உக்கிராசலத்தின் திடீர் மறுப்பும் ஏட்டு காதுபட அவனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லாத மாதிரி பேசியதும் நாடகம் என்றான். உக்கிராசலம் ஏற்கனவே தலைப்பல்லை பெயர்த்து வைத்துவிட்டான் என்றும் சமயம் பார்த்து ஜாமக்கூழ் கூட்டத்தில் தலைபல்லை தட்டிக்கொண்டு போகலாம் என்றும் அன்று காலையே சொல்லிவிட்டதாகச் சொன்னான். “இந்தாடா” என்று ரமேஷிடம் கொடுத்தான். மஞ்சள் குங்குமம் பூசிய பெரிய உருளைக்கிழங்கு. “உக்கிராசலம் கொடுத்தான். தலைப்பல் அபேஸ் பண்ணிட்டு அந்த இடத்துல இதை வச்சுரு” என்றான்.<br />
<br />
“ஏன்.. நீ செய்யேண்டா?” என்றான் ரமேஷ்.<br />
<br />
“உனக்குத்தானே பேய் பிடிக்கும் அடிக்கடி? அதனால நீ செஞ்சா நாம மாட்டிக்கிட்டாலும் சாக்கு சொல்லிடலாம்ல?”<br />
<br />
“எவண்டா சொன்னது எனக்கு அடிக்கடி பேய் பிடிக்கும்னு?”<br />
<br />
“உக்கிராசலம் தான். ஏட்டு கிட்ட அப்படிச் சொல்லிருக்கான்.. நீ பேய் பிடிச்சு அன்னிக்கு அவரைப் பளார்னு அறைஞ்சேனு அவர்ட்ட சொன்னதா சொன்னான்.. அட்ஜஸ்ட் பண்ணிக்க.. பல் திருட்டுக்கும் வசதியாப் போச்சு..”<br />
<br />
“அடப்பாவிகளா.. நீங்க இருக்குறப்ப எனக்கு எதுக்குடா எதிரிங்க?”<br />
<br />
<i>ப்ளேஷ்பேக் சோமு</i>: மசாலா பால் சாப்பிடும் பொழுது தலைப்பல் திருடுவது பற்றித் திட்டமிட்டோம். மேடைக்கு எதிரெதிரே உட்கார்ந்து ஒருவர் ஏட்டைக் கவனிக்க வேண்டுமென்றும், ரமேஷ் பேய் வந்தாற்போல் ஆடத்தொடங்கியதும் ஸ்ரீராம் ஐந்து நொடிகளுக்கு விளைக்கை அணைக்க வேண்டுமென்றும், நான் அந்த சந்தடியில் உருளைக்கிழங்கை வைத்துவிட்டுத் தலைப்பல்லை எடுக்க வேண்டுமென்றும் திட்டம். “நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றது பல்கொட்டி. “ஏட்டு எதுக்கும் மசியாம நம்மளைத் துரத்தவோ தடுக்கவோ வந்தா அவர் தலையில ரெண்டு போடு” என்றான் ரமேஷ் கடுப்புடன். <br />
<br />
“ஏ பல்கொட்டி.. பல் கிடைச்சதும் எங்களை பழி கிழி வாங்கணும்னு நினைச்சே நாங்களே செத்து வந்து உன்னைப் பழி வாங்குவோம்.. எப்பவுமே பல் இல்லாம கிடக்க வேண்டியதுதான்” என்றான் ஸ்ரீராம்.<br />
<br />
“அய்ய்ய்ய்ய்ய்யோ.. வேணாம்.. இல்லையில்லை” என்றபடி மசாலா பால் க்ளாசைக் கீழே வைத்தது பல்கொட்டி. கல்லாக்காரர் எங்கள் பேச்சைக் கேட்டு நடுங்கினாரா அல்லது அந்தரத்தில் ஆடி வந்த பால் க்ளாசை கண்டு நடுங்கினாரா தெரியவில்லை. “பழி வாங்குற எண்ணமே இல்லே.. வயசான பேய் பாவம்பா.. கருணை காட்டுப்பா.. ஏட்டைக் கவனிக்கணும் அவ்ளோ தானே?”.<br />
<br />
        திட்டமிட்டபடி ரமேஷ் மெள்ள முனகத் தொடங்கினான். பிறகு “ஆத்தா” என்று விட்டு விட்டு உறுமத்தொடங்கியதும் கூழ்மக்கள் அவனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். எத்தனை பேயோட்டம் பார்த்திருப்பான்? அசத்தலாக நடித்தான். தோளைக் குலுக்கி ஆத்தா ஆத்தா என்று ஆடத்தொடங்கினான்.. மக்கள் கொஞ்சம் பீதியுடன் பரவி விலகத் தொடங்கினார்கள். உட்கார்ந்தபடியே நான் பீடத்தின் அருகில் சென்றேன். உருளைக்கிழங்கை கையிலெடுத்துத் தயாரானேன். <br />
<br />
ஸ்ரீராம் சட்டென்று விளக்கை அணைத்தான். ஐந்து நொடிகள். விளக்கு எரிந்தது. என் கையில் உருளைக்கிழங்கு இருப்பதைப் பார்த்து ரமேஷ் ஓவென்று கூச்சலிட்டு ஆடினான். ஸ்ரீராம் மறுபடி விளைக்கை அணைத்தான். ஐந்து நொடிகள். விளக்கு திரும்பியது. என் கையில் மறுபடி உருளைக்கிழங்கு. ரமேஷுக்கும் ஸ்ரீராமுக்கும் கடுப்பு. ஒரு சின்ன விஷயத்தை செய்யமுடியலியா என்று ஸ்ரீராம் என்னைக் கண்ணால் எரித்தான்.<br />
<br />
என் கஷ்டம் எனக்குத் தானே தெரியும்? ஸ்ரீராம் சொன்னபடி உக்கிராசலம் தலைப்பல்லைப் பெயர்த்திருப்பான் என்று நம்பி அதை எடுத்தால்.. வந்தால் தானே? கை வழுக்கி வழுக்கிப் போனதே தவிர பல் அசையவில்லை. நாலைந்து முறை வழுக்கியதும் புரிந்தது. தலைப்பல்லைப் பெயர்த்து வைப்பதற்கு பதில் பீடத்தின் மேல்தட்டையே பெயர்த்து வைத்திருக்கிறான் மடையன். பீடத்தை தூக்கி எடுக்கவும் முடியவில்லை. அப்படியே எடுத்தாலும் அந்த இடத்தில் உருளைக்கிழங்கையா வைக்க முடியும்? <br />
<br />
ரமேஷ் ஆடிக்கொண்டிருந்தான். “ஆத்தா பல்லைப் பிடுங்கித்தரச் சொல்லுதுடா பேராண்டி..” என்றான் என்னை இடித்தபடி.<br />
<br />
நானும் ஆடத்தொடங்கினேன். “பல்லுக்குப் பதில் பீடத்தை பேத்து வச்சிருக்காண்டா பேராண்டி..”<br />
<br />
“பீடத்தைத் தூக்கிப் பாரேண்டா பேராண்டி..”<br />
<br />
“கிண்டலா இருக்குதாடா பேராண்டி..”<br />
<br />
ஏட்டு அவசரமாக கூட்டத்தைப் பிரித்து உள்ளே வரத் தொடங்கியதைப் பார்த்த ரமேஷ் ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டு பக்கத்தில் இருந்தவர்களை இடித்து வேகமாக ஆடத்தொடங்கினான். ஆனால் ஏட்டு எங்கள் அருகே வந்து நின்று விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு விட்டார். பீடத்தின் தலை நகர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்தார். தன் கையிலிருந்த விசிலை எடுத்து ஊத முற்பட்டபோது திடீரென்று ஆகாயத்தில் உயர்ந்தார். பிறகு பொத்தென்று விழுந்தார். மீண்டும் ஆகாயத்தில் எழுந்தார். மறுபடி பொத்தென்று விழுந்தார்.<br />
<br />
உக்கிராசலம் சட்டென்று கோதாவில் இறங்கி ஏட்டை ஒரு வேப்பிலைக் கொத்தால் ஓங்கி அடித்தான். “மலையேறு ஆத்தா மலையேறு.. மலையேற ஆத்தா என்னா கேக்குது?”<br />
<br />
“பல்லு கேக்குதுடா பேராண்டி ஆத்தா பல்லு கேக்குதுடா” என்று ரமேஷ் குத்தாட்டம் ஆடினான்.<br />
<br />
நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஏட்டு பீடத்தை அப்படியே தூக்கினார். கூட்டம் அலறி விலகியது. ரமேஷ் ஆத்தா ஆத்தா என்று உணர்ச்சிவசப்பட, ஏட்டு தரையிலிருந்து நாலடி எழும்பி பீடத்தை தூக்கிக் கொண்டு வெளியே போனார். உக்கிராசலம் வேப்பிலைக் கட்டோடு ஏட்டைத் துரத்தினான். தொடர்ந்து ரமேஷ். தொடர்ந்து நான். ரயில்பெட்டி போல் என்னைத் தொடர்ந்த மக்கள் பக்தி வெறியில் மெய்மறந்து ஆத்தா ஆத்தா என்றனர்.<br />
<br />
பனைமரம் அருகே ஏட்டு படாலென்று பீடத்தைத் தரையில் எறிந்தார். சுக்கலாக உடைந்த பீடத்தைச் சுற்றி வந்து ஆடினார். மயங்கி விழுந்தார். ஜாமக் கூழ் மக்கள் பரவசத்தில் தங்களை மறந்தனர். ஏட்டைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.<br />
<br />
“வாங்க போவோம்” என்று பல்கொட்டி என்னை அவசரமாக இடித்தது. ரமேஷை இழுத்துக் கொண்டு கூட்டத்திலிருந்து விலகினேன். ஸ்ரீராம் ஏற்கனவே தெருமுனையிலிருந்தான். <br />
<br />
        “என்னடா ஆச்சு?” என்றான் ஸ்ரீராம்.<br />
<br />
“பல்லைப் பேத்து வைடானா பீடத்தைப் பேத்து வச்சிருக்கான் பீடை” என்றான் ரமேஷ்.<br />
<br />
“என்னால அதை நவுத்தக் கூட முடியலிடா.. ஏட்டு வேறே வந்துட்டான்.. அதான் பல் கொட்டியைக் கூப்பிட்டேன்.. அது என்னடானா ஏட்டை ஒரு அடி அடிச்சு கவுத்திடுச்சு” என்றேன்.<br />
<br />
“நீங்க தானேப்பா சொன்னீங்க.. ஏட்டை அடிக்கணும்னு..? அதான் மொதல்ல அடிச்சேன்.. அப்புறம் தான் கவனிச்சேன் நீ என்ன சொல்றேனு.. உடனே ஏட்டு கைல பீடத்தை வச்சு அவரை அப்படியே அந்தரத்துல தூக்கிட்டு சுத்தினேன்.. உங்களை நம்பினா எனக்குப் பல் கிடைச்ச கதைதான்.. பீடத்தைப் பேத்துட்டதினால எனக்கும் சிக்கல் இல்லாம போச்சு.. வெளில போனதும் நொறுக்கிட்டேன்.. பல்லை எடுத்துக்கிட்டேன்..”<br />
<br />
“இருந்தாலும் போலீஸை அடிக்கறதுனா பல்கொட்டிக்கு ரொம்ப இஷ்டம்..ஆளை ஒரு தட்டு தட்டச்சொன்னா இப்படியா துணி மாதிரி துவைக்கிறது? ஏட்டுக்கு மயக்கம் தெளிஞ்சதும் நம்மளைப் பிடிக்க வருவான்.. அதுக்குள்ள நாம ஓடிறணும்.. ” என்றான் ரமேஷ்.<br />
<br />
“எதுக்கு ஓடணும்?” என்றான் ஸ்ரீராம். “பீடத்தைத் தூக்கிட்டுப் போய் உடைச்சது ஏட்டுதான்னு எல்லாரும் சாட்சி சொல்வாங்க.. பரவாயில்லே பல்கொட்டி.. உனக்கும் கொஞ்சம் மூளை இருக்குது போல. குட். காரியம் ஆயிடுச்சில்லே? நடையக் கட்டு”.<br />
<br />
        மறுநாள் காலை நானும் ரமேஷும் மும்பை கிளம்பினோம். ஸ்ரீராம் பெங்களூர் கிளம்பினான். பல்கொட்டி எங்களை விமான நிலையத்தில் வழியனுப்பி “நான் உங்களை மறக்கவே மாட்டேன்” என்றது. <br />
<br />
“அய்யயோ..நீ வேறே... மொதல்ல எங்களை மறந்து தொலை.. இனிமே எங்க பக்கமே திரும்பிப் பார்க்காதே” என்றான் ரமேஷ்.<br />
<br />
என் பாஸ்போர்ட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த செக்யூரிடி திடீரென்று பாஸ்போர்ட் காற்றில் பறப்பதைப் பார்த்து அலறினான். தாவிப் பிடித்து என் கையில் கொடுத்து “மாப் கீஜியே” என்றான். விமானத்தில் கூட்டம் இல்லை. உள்ளே நுழைந்து என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தேன். பக்கத்து இருக்கை ஆசாமி அடிக்கடி நெளிந்து தன்னைத் தானே கன்னத்தில் அடித்துக் கொண்ட அதிர்ச்சியில் கலங்கிப் போயிருந்தான். நான் அவனைக் கவனிப்பது தெரிந்ததும் நெளிந்து “வயித்துவலி.. ஐ வில் கோ தேர்” என்றபடி எழுந்து பின்னால் போனான். <br />
<br />
பல்கொட்டி என் பக்கத்தில் இருப்பதை உணர்ந்தேன். “நீ எங்க பக்கமே வரக்கூடாதுனு சொன்னேன் இல்லே?” என்றேன். பல்கொட்டி பதில் சொல்லவில்லை.<br />
<br />
<i>முற்றும் - படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க!</i><br />
<br />
</SPAN>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15974048905905942132017-08-05T17:38:00.000-05:002017-08-25T19:05:24.457-05:00பல்கொட்டிப் பேய்<span style="line-height: 180%;"> <br />
<hr align="left" noshade="noshade" size="1" width="60%" /><i><b>இது வரை:</b></i> காஞ்சிபுரம் போயிருந்தனர் எங்கள் பெற்றோர். கோடை வெயிலை வீணாக்காமல் டெனிஸ் பந்தில் க்ரிகெட் விளையாடிக் கொண்டிருந்தோம் நான், என் தம்பி ஸ்ரீராம், என் பெரியம்மா மகன் ரகு, எதிர் வீட்டு நண்பன் ரமேஷ் நால்வரும். கீழே கிடந்த பந்தை எடுத்து நான் எறிய அதை ரமேஷ் பிடிக்கத் தொட்டதும் பந்து விர்ரென்று உயர்ந்து விரிந்து பேயாகச் சிரித்தது. எங்கள் வீட்டு வாசலையொட்டிய அம்மன் கோவில் பூசாரி தணிகாசலம் விவரம் கேட்டு 'அது பல்கொட்டிப் பேய்.. உங்களை விடாது' என்றார். கண்டிப்பாக அன்றிரவே பேய் எங்களைக் கடத்திச் சென்று தலைகீழாகத் தொங்கவிட்டு பல்லால் கொட்டி பலி வாங்கும் என்றார். அம்மனுக்கு பலி கொடுத்த ஆட்டு ரத்தம் தடவிய கயிற்றால் சுற்றி எங்களைக் காப்பாற்ற ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார். அதன்படி நடந்து என் தம்பி ஸ்ரீராம் பல்கொட்டியின் வாயிலிருந்த தலைப்பல்லை தட்டி எடுத்துவிட்டான். உக்கிரமாக ஆர்ப்பரித்த பேயிடம் விடியும் வரை பல்லைத் தராதிருந்து முன்னூறு வருடம் கழித்து வந்தால் தருவதாகச் சொல்லச் சொல்லியிருந்தார் பூசாரி. மறதியிலோ பயத்திலோ முன்னூறுக்கு பதில் முப்பது என்று சொல்லிவிட்டான் ஸ்ரீராம். கறுவிக்கொண்டே எங்களை விட்டு விலகிய பல்கொட்டி சரியாக முப்பது வருடங்கள் காத்திருந்து நான் தங்கியிருந்த மும்பை ஹோட்டல் அறையில் விடிகாலை என்னைத் தட்டி எழுப்பியது. முப்பது வருடங்களில் பல்கொட்டி சோர்ந்தும் நொந்தும் போயிருந்தது. வரும் ஆடி அமாவாசைக்குள் நாங்கள் கூட்டாக அதனிடம் தலைப்பல்லைத் திருப்பாவிட்டால் பெருங்கேடு நேரும் என்றது.<br />
<hr align="right" noshade="noshade" size="1" width="60%" /><br />
<center>13</center><br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2017/08/blog-post.html">12◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>எ</b></span>ன்னதான் அனுசரித்து பழக்க மரியாதையுடன் நடந்துகொள்வோம் என்று நினைத்தாலும் பல்கொட்டியின் பேய்க்குணம் மாறாது என்று புரிந்துவிட்டது. கெட்ட கனவை உருவாக்கியதுடன் நில்லாமல் இப்போது தலைகீழாகத் தொங்கியபடி இடியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது. கெட்ட கனவே மேல்.<br />
<br />
கூகில் ட்ரைவில் சேமித்திருந்த என் பழைய தொடர்பு விவரங்களிலிருந்தும் லிங்க்டின் தேடலிலும் ஒருவழியாக ரமேஷைக் கண்டுபிடித்தேன். பல்கொட்டியைத் திட்டினாலும் ஒருவழியில் சந்தோஷம் தான். நட்பைப் புதுப்பிப்பது ஒரு புறம், பல்கொட்டியின் வருகையைச் சொன்னதும் அவன் எப்படி நடந்துகொள்வான் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இடுக்கண் கொடுப்பதாம் நட்பு.<br />
<br />
குடும்ப நலத்திலிருந்து பக்கத்துத் தெரு வெறிநாய் மாரடைப்பில் இறந்தது வரை பேசிய ரமேஷ் பல்கொட்டி வருகையைச் சொன்னதும் ‘ராங் நம்பர்’ என்று வைத்துவிட்டான். மறுபடி முயற்சித்தபோது பெண்குரலில் மராத்தியில் பேசினான். பிறகு நாய் குரைப்பது போல். அதற்குப்பிறகு எடுக்கவே இல்லை. “இப்ப என்ன செய்ய? ரமேஷ் வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சுப் போவுறது?” என்றேன்.<br />
<br />
“இங்கதான் பைகலாவில் இருக்குது, எனக்குத் தெரியும் வா போகலாம்” என்றது பல்கொட்டி.<br />
<br />
“உனக்குப் பல்லுதான் இல்லே, மூளையுமா இல்லே? இதை மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல?”<br />
<br />
“நீ மொதல்லயே கேட்டிருக்கலாம்ல? முப்பது வருசமா உங்களைப் பேயா சுத்தி சுத்தி வரேன்ல? எனக்குத் தெரியாதா?”<br />
<br />
“அடப்பேவி!”<br />
<br />
<b>ர</b>மேஷ் வீட்டுக்குப் போனபோது அவன் வேலைக்கார வேஷத்தில் “ரமேஷ் சாப் கா கர் நஹி.. பொலிஸ் இன்ஸ்பெக்டர் கா மகான்.. அப் ஆனேவாலா ஹை.. சலே ஜா” என்றான். பத்து நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு உள்ளே அனுமதித்தான். தலைப்பல் மீட்பு பற்றிச் சொன்னேன். பல்கொட்டியின் தலைப்பல் ஓட்டையில் விரல் விட்டு விளையாடிக்கொண்டிருந்த ரமேஷின் நாலு வயது பேரனை இழுத்து இழுத்து அருகில் வைத்தபடி மறுத்தான். பிறகு சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன் கனவில் வந்து வசனம் பேசி நடிப்பார்கள் என்றதும் முகம் வெளிறிப் பதறி நடுங்கி அலறியடித்து ஒப்புக்கொண்டான்.<br />
<br />
<b>ஸ்ரீ</b>ராம் சிரிக்கத் தொடங்கினான். “கெட்ட கனவு தானே? ஜமாய் மச்சி” என்று பல்கொட்டியைத் தட்டிக் கொடுத்தான். என் தம்பி எதற்குமே அலட்டாத வகை. அதுவும் தூக்கம் என்றால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியாது. பக்கத்து வீட்டில் இடி விழுந்து கருகும். இவன் சுகமாகத் தூங்குவான். கனவா? கனவில் வந்தவர்களுடன் பேசியபடியே தூங்குவான். கடைசியில் அவன் காலில் விழுந்தோம். வேறு வழியே இல்லை. மூத்தவர்கள் மூவர் (பேயை மூவரில் சேர்க்கலாமா?) அவன் காலில் விழுவதைப் பார்த்து மனம் மாறினான்.<br />
<br />
      <b>ஞா</b>யிறு மாலை பம்மல் வந்தோம். கோவில் வெளிப்புறம் நன்கு மாறியிருந்தாலும் உட்புறம் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முந்தைய தோற்றத்திலிருந்து மாறவில்லை. கோவிலில் இருந்த ஒன்றிரண்டு பெண்கள் எங்களைச் சந்தேகத்துடன் விசித்திரமாகப் பார்த்தபடி வெளியேறினார்கள். “ரமேஷ். வேஷம் போடாம வாடானு சொன்னா கேட்டியா? அதும் ஒரு முழத்துக்கு தாடி ஒட்டி வச்சிருக்கே.. பாரு, ஆடிக்காத்துல ஆடிக்காட்டுது” என்று இடித்தேன்.<br />
<br />
பூசாரி வெளியே வந்து எங்களைப் பார்த்து சிரித்தான். “வாங்க.. என் பேரு உக்கிராசலம். கோவில் பூசாரி”<br />
<br />
தணிகாசலத்தின் பேரனாக இருக்க வேண்டும். விவரம் சொன்னோம். கோவில் பின்புறம் இருந்த அவன் வீட்டுக்கு அழைத்தான். உள்ளே நுழைந்ததும் ஒருவித வேப்பிலை நடனமாடி எங்களைச் சுற்றி குங்குமம் தூவினான். ஒரு எலுமிச்சையை அசால்டாக கையால் திருகி எறிந்து வெளியே வீசினான். “பல்கொட்டி உங்க கூட இருக்குதா?” என்றான்.<br />
<br />
“உக்கிராசலம்.. அது ஒண்ணும் பண்ணாதுபா” என்றேன். உடனடியாகத் தலைப்பல்லை எடுத்துக் கொடுக்கச் சொன்னான் ரமேஷ். “அடுத்த ப்ளைட்ல போவணும்பா..”<br />
<br />
“முடியவே முடியாது. தாத்தா சாவுறப்ப விவரம் எல்லாம் சொன்னாரு. முப்பது வருசம் பொறுத்து வருவீங்கனாரு. பல்லைத் திருப்பினா பலி வாங்கும்னாரு.. அதான் அவுரே கோவில் பூசைபலி மேடைல பொதச்சு வச்சுட்டாரு. எடுக்க முடியாது.. பாருங்க இதைப்பத்திப் பேசுறப்பவே வெளில நிழலாடுறாப்புல இருக்குது”<br />
<br />
"பொதைக்கலபா, பதிச்சு வச்சிருக்காரு.. சரியாச் சொல்லணும்" என்றான் ரமேஷ் தேவையில்லாமல்.<br />
<br />
“உக்ரம்.. இங்க வாங்க” என்றான் ஸ்ரீராம். “அஞ்சாயிரம் பணம் தரேன்.. அப்புறம் இதையும் அன்பளிப்பா வச்சுக்குங்க” நேராக விஷயத்துக்கு வந்தான். தன் பையிலிருந்த இரண்டு அரை லிடர் ஷிவஸ் புட்டிகளை எடுத்துக் கொடுத்தான். <br />
<br />
தணிகாசலம் பரம்பரை அல்லவா? உக்கிராசலம் உடனே விழுந்தான். “புதன்கிழமை தானுங்க அமாவாசை? நீங்க போயிட்டு செவ்வா நைட்டு வாங்க. பேத்து எடுத்துருவம். அதுக்குள்ளாற எங்க பேயாத்தா கிட்டே ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்”<br />
<br />
“பேயாத்தாவா? அது உங்க தாத்தாவுக்கு ஆத்தாவுக்கு ஆத்தாவாச்சேபா?” என்றான் ரமேஷ். “இன்னுமா சாவலே?”<br />
<br />
“பேயாத்தாவுக்கு சாவு கிடையாது. செத்து தானே பேயாச்சு?” என்று நுட்பத்தை விளக்கினான் உக்கிராசலம்.<br />
<br />
“போய்ட்டு வாங்க” என்று எங்களுடன் அவனும் வெளியே வந்தான். வீட்டு வாசலில் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஒரு ஏட்டு நின்றிருந்தார். “என்னா உக்கு? கோவில் சிலை திருட்டா? எல்லாம் கேட்டுட்டு இருந்தேன்.”<br />
<br />
“அய்யயோ அப்படியெல்லாம் இல்லிங்க இன்ஸ்பெக்டர்” என்றான் ரமேஷ். இலவசமாக் கிடைத்த பதவி உயர்வுக்கு மயங்காத கான்ஸ்டபிள் நேர்மையுடன் ரமேஷைப் பார்த்து “நீ யார்யா? ஐசிஸா? தாடி வச்சிட்டு ஒருத்தன் கோவில்ல திரியறானு அந்த பொம்பளிங்க சொன்னது உன்னியத்தானா?”<br />
<br />
“ஏட்டய்யா.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?” ஸ்ரீராம் நேராக விஷயத்துக்கு வந்தான்.<br />
<br />
ஏட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. ஆதிகால ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன் போல் குதிக்கத் தொடங்கினார். தொடங்கிய வேகத்தில் படாரென்று மயங்கி விழுந்தார்.<br />
<br />
“ஓடுங்க.. ஓடிருங்க.. என்னாச்சு தெரியலே.. அவரு எழுந்ததும் நான் பேசிக்கிறேன்” என்று எங்களை முடுக்கினான் உக்கிராசலம். “செவ்வா நைட்டு மறந்துறாதிங்க”.<br />
<br />
விரைந்தோம். “இப்பத்தான் மொதல் தடவையா போலீசை அடிச்சிருக்கேன்” என்றது பல்கொட்டி உடன் விரைந்தபடி. <br />
<br />
      <b>ஆ</b>ளே இருக்காது என்று நினைத்து செவ்வாய் இரவு பத்து மணிக்கு கோவிலுக்கு வந்தோம். ஆண் பெண் பிள்ளைகள் என்று மக்கள் கூட்டம். உள்ளே அம்மனுக்கு பூ அலங்காரம். சாம்பிராணிப் புகை. வெளியே இரண்டு இடங்களில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். உக்கிராசலம் எங்களைப் பார்த்ததும் வெளியே வந்தான். “மன்னிச்சுக்குங்க.. அர்த்தஜாமக் கூழ் காய்ச்சணுமின்னு காலைல வந்து பணம் கொடுத்தாங்க. இல்லேன்னு சொல்ல முடியாது.. நேந்துக்கிட்ட சமாசாரம்..” என்றான்.<br />
<br />
“ஏய்யா யோவ்.. எங்க கிட்ட பணம் வாங்கிட்டு ஜாமத்துல கூழ் ஊத்தவும் காசு வாங்கிட்டியா?” என்றேன் கடுப்பில்.<br />
<br />
“அதில்லாம பேயாத்தா கூடாதுன்னுடிச்சு.. தலைப்பல் கிடைச்சதுமே பல்கொட்டி பழி வாங்கிடுமாம்.. எதும் செய்ய முடியாது..” என்றான் தீர்மானமாக. “அந்த ஏட்டு வேறே இங்கயே ரோந்து சுத்திட்டிருக்காரு.. பாருங்க”<br />
<br />
“அடேய்.. நாளைக்கு அமாவாசை.. இன்னிக்கு எடுக்கலேனா பெருங்கேடு பெருங்கேடு” என்றான் ரமேஷ் பாலையா பாணியில்.<br />
<br />
ஸ்ரீராம் எங்களைத் தனியாக வெளியே அழைத்துப் பேசியதும், “சரி உக்ரம்.. வந்ததோ வந்துட்டம்.. சும்மா ஒரு ரவுண்டு அடிச்சுட்டு நாங்களும் ஜாமக்கூழ் பூசைல கலந்துக்கறோம்.. எங்களுக்கு உள்ளாற எடம் போட்டு வை” என்றோம். பல்லில்லாமல் போவதில்லை என்று தீர்மானித்திருந்தோம்.<br />
<br />
அங்கே இங்கே சுற்றி மெயின் ரோடு டீக்கடையில் மசாலா பால் வாங்கினோம். அகண்ட வாணலியில் சுண்டக்காய்ச்சிய பால் எடுத்து கிளாசில் ஊற்றி அதன் மேல் ஏடு போட்டு முந்திரி பாதாம் பிஸ்தா ஏலக்காய் பொடியைத் தூவிக் கொடுத்தார் டீ மாஸ்டர். மூன்று பேர் நான்கு பால் வாங்குவதையும் நாலாவது கிளாஸ் அந்தரத்தில் நிற்பதையும் பார்த்து எதுவும் பேசாமல் நடுங்கிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர். மசாலா பாலை அனுபவித்துக் குடித்தோம். கோவிலுக்குத் திரும்பியபோது மணி இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கோவில் வாயிலில் எங்களைப் பார்த்த ஏட்டு கையிலிருந்த லட்டியை சுழற்றிக் காட்டியபடி தலையசைத்தார். <br />
<br />
கூட்டத்துடன் கலந்து உள்ளே நுழைந்து பார்த்தோம். ஜாமக் கூழ் பூசை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.<br />
<br />
எங்களுக்காக பலிமேடை அருகே பரவலாக இடம் ஒதுக்கியிருந்தான் உக்கிராசலம். உட்கார்ந்தோம். பலிமேடை நடுவே அலங்காரங்களுக்கு இடையே துல்லியமாகத் தெரிந்தது தலைப்பல். <br />
<br />
நான் பல்கொட்டியைப் பார்த்தேன். தணிகாசலமும் பேயாத்தாவும் சொன்னது போல் ஒருவேளை தலைப்பல் கிடைத்ததும் பழிவாங்குமோ என்ற எண்ணம் அச்சமாகப் பரவத் தொடங்கியது.<br />
<br />
பனிரெண்டு மணியாகிவிட்டது என்று சைகை செய்தான் ஸ்ரீராம்.<br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2017/08/blog-post.html">12◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2017/08/blog-post_25.html">►14</a><br />
<br />
</span><br />
<br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86562533168964594662017-08-04T13:49:00.001-05:002017-08-05T17:39:32.552-05:00பல்கொட்டிப் பேய்<center>12</center><span style="line-height: 180%;"> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw47tAGvlHRYhBHd72VcNZFgKzS3od1hkhRKv_B67FMnwNHr7aZCuxVHsNQ5EVNIz5hQ7tUijznU2dOnwJXQaAs6-jdiih-tVm2Bjig7OrOtkyrRdFfHfUr9yocaenkIWBDC7WG0W3P31S/s1600/pk12.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw47tAGvlHRYhBHd72VcNZFgKzS3od1hkhRKv_B67FMnwNHr7aZCuxVHsNQ5EVNIz5hQ7tUijznU2dOnwJXQaAs6-jdiih-tVm2Bjig7OrOtkyrRdFfHfUr9yocaenkIWBDC7WG0W3P31S/s320/pk12.png" width="207" height="320" data-original-width="230" data-original-height="356" /></a></div><br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/05/blog-post.html">11◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>ப</b></span>ல்கொட்டியைக் காணாது திகைத்தேன். காலருகே ஏதோ புசுபுசுவென்று உணர்ந்தேன். ஹோடல் ரூமில் ஏது மரவட்டை? ஒருவேளை பல்லியாக இருக்குமோ என்று அச்சத்தில் துள்ளினேன். துள்ளிய வேகத்தில் படுக்கையில் விழுந்தபோது கவனித்தேன். பல்கொட்டிப் பேய் நான் நின்றிருந்த இடத்தில் முழுதுமாக கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருந்தது. அரை நிமிடத்தில் இருநூறு நமஸ்காரம் செய்திருக்கும். “ஏய்.. என்ன இது.. கால்ல விழுந்திட்டிருக்கே? அதுவும் இத்தனை வேகமா?”<br />
<br />
எழுந்து தரையில் உட்கார்ந்த பல்கொட்டி “என் தலைப்பல்லை நீ தான் எப்படியாவது மீட்டுக் குடுக்கணும்.. இந்த முப்பது வருஷமா நான் பட்ட கஷ்டம் ஒரு மனுசனுக்குக் கூட வரக்கூடாது.. அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்..” ஏறக்குறைய அழுதுவிட்டது. “என்னை இப்ப எந்தப் பேயும் மதிக்குறதில்லே.. காட்டேரிங்க கூட என்னைக் கண்டா வாய்ல கையப் பொத்திக்கிட்டு ஒதுங்கும்.. இப்ப பல்லிழந்த செல்லாப் பேயா அலையுறேன்…”<br />
<br />
எனக்கே பாவமாகிவிட்டது. என்னதான் இருந்தாலும் முப்பது வருசத்துக்கு முந்தைய பழக்கம் இல்லையா? “பல்கொட்டி.." என்றேன் கருணை பொங்க. "இதப்பாரு.. அந்த தலைப்பல் யார் கிட்டே இருக்குனு கூடத் தெரியாதே? அந்த தணிகாசாலம் ஞாபகம் இருக்குதா? அந்தாளு எடுத்துட்டுப் போயிட்டாரு.”<br />
<br />
“தெரியும்.. முப்பது வருசமா பாத்துட்டு இருக்கேன்ல? அம்மன் சிலைக்கு கீழே பூசை மேடையில பதிச்சு வச்சிருக்காரு”<br />
<br />
“அப்ப எடுக்க வேண்டியது?”<br />
<br />
“வாக்கு குடுத்திட்டேன் இல்லே? முப்பது வருசம் கழிச்சு வருவேன்னு. தொடமுடியாது”<br />
<br />
“ஆமாம்.. பொல்லாத வாக்கு.. நீ எங்க ஊர் அரசியல்வாதிங்களைப் பாக்கலே?”<br />
<br />
பல்கொட்டி நடுங்கியது. “ஐயோ.. அரசியல்வாதிங்களா.. இப்பல்லாம் கோழித்தலை காட்டேரிங்க கூட தமிழ்நாடுனா ஒரே ஓட்டமா ஓடுதுங்க.. நான் எம்மாத்திரம்?”<br />
<br />
“அதென்ன கோழித்தலை காட்டேரி?”<br />
<br />
“அந்தக் கதை இன்னொருக்கா சொல்றேன்.. ரத்தக்காட்டேரிக்கு மூத்த தலைமுறை… மின்னூறு மனுச வருசத்துக்கு ஒருக்கா எந்திரிக்கும்.. கண்ணு முளிச்ச எடமெல்லாம் காவுதான்.. அப்படித்தான் ஆறு மாசம் மின்னே சென்னைல மகாபலிபுரம் பக்கத்துல முளிச்சுக்கிச்சு.... சரி.. இனி ரத்த ரகளைதான்.. நாம இந்த சாக்குல தலைப்பல்லை ராவிக்குவம்னு நினைச்சு பின்னால போனா.. கோழித்தலை அலறி அடிச்சுனு ஓடுது.. என்னத்த சொல்ல..”<br />
<br />
“ஏன்?”<br />
<br />
“யாரு கண்டா என்னா நடக்குதோ தமிள்நாட்டுல.. கோழித்தலையே ஓடுறப்போ நாங்க என்ன சுத்திக்கிட்டா இருப்போம்? நாங்களும் மறைஞ்சுட்டோம். இப்பல்லாம் தமிழ்நாட்டுப் பக்கம் போவுறதுனாலே பேயுங்க பயப்படுதுங்க” <br />
<br />
“அப்ப என்னதான் செய்யுறீங்க?”<br />
<br />
“அந்தக் கொடுமையை ஏன் கேக்குற? வடநாட்டுல போய் முடி வெட்டுறோம்”<br />
<br />
“களுத நீங்கதானா?” எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.<br />
<br />
“எடுத்தவங்களே பல்லை வைக்கணும்.. உன் தம்பிக்குத்தான் அதிகாரம் இருக்குது.. பேய்ச் சாபம் உன் குடும்பத்துக்கு வேணாம்.. பல்லை எடுத்துக் குடுத்துறச் சொல்லு”<br />
<br />
“இதப்பாரு பல்கொட்டி.. நானாச்சும் உனக்கு பயப்படுவேன்.. என் தம்பி ஸ்ரீராம் இப்ப பெரிய ஆளு.. கோளித்தலையே அவனுக்கு பயப்படும் வேணாப்பாரு.. நீ இன்னா ஜுஜுபி.. பேய்சாபம்னா பேயாட்டம் சிரிப்பான்.. உனக்கு இந்த ஜன்மத்துல பல் கிடைக்காது.. ஆமா, உனக்கு ஜென்மம் எல்லாம் உண்டா?” <br />
<br />
பல்கொட்டி தலை குனிந்தது. “அப்பல்லாம் வெட்டு குத்து கொலை விபத்துனு அல்பாயுசா போயி பேயாவோம்.. இப்ப எல்லாம் மாறிடுச்சு.. அஞ்சாம்பு பெயிலு ப்ள்ஸ்டூ பெயிலு லவ் பெயிலு கடன் பாக்கி காலேஜுல இடம் இல்லே காவேரில தண்ணி இல்லே நாய்க்கு தலைவலி ஜல்லிக்கட்டு வெளாடலேனு எதுக்கெடுத்தாலும் திட்டம் போட்டு தூக்குல தொங்கிட்டு பேயா வந்து அலையுறாங்க.. பேஸ்புக்கு வாட்சப்புனு என்னென்னவோ தெரிஞ்சுகிட்டுவந்து கூத்தடிக்குதுங்க.. மிச்ச பேயுங்களும் அவங்களை கொண்டாடுதுங்க.. எங்க காலத்துல காட்டேரி கொள்ளிவாய் குட்டிசாத்தான் கொம்பேறினு பேரு வச்சுக்கிட்டோம்.. இப்ப தெர்மாகோல் பேய்னு ஒரு லேட்டஸ்டு வகை கேட்டிருக்கியா? தூங்குறப்ப மூச்சுக்காத்து வெளிய போவாம ஒரு தெர்மகோல் அட்டையை வச்சுக் கொல்லுமாம் குடாக்குங்க.. எல்லா முட்டாப் பேய்ங்களும் தெர்மகோல் அட்டையை கட்டிக்கிட்டு அலையுதுங்க. பேய்த்தொகை கணக்கு வேறே கூடிக்கிட்டே போவுது.. என்னிய மாதிரி பழம்பெரும் பேய்ங்களை யாரும் மதிக்குறதில்லே.. மனுசங்களும் மாறிட்டாங்க. சாமியும் பொய் பூதமும் பொய்யின்றாங்க.. அட பூதத்தையாவது நம்புவாங்கனு பார்த்தா..”<br />
<br />
“சரி.. சரி புலம்பாதே.. இதப்பாரு.. எங்க நாலு பேர்ல ரகு போயிட்டான்.. ஒருவேளை அவன் உன்னாட்டம் பேயா இருந்தாலும் இருக்கலாம் பாத்துக்க.. ரமேஷ் பய எங்க இருக்கானு தெரியாது.. தேடிப்பாக்கணும்.. அதும் நீ திரும்பிட்டனு தெரிஞ்சா பேரை சுரேசுனு மாத்தி வச்சுக்கிட்டாலும் சொல்றதுக்கில்லே.. ஆக நானும் என் தம்பியும் தான்..”<br />
<br />
“வர ஆடி அமாவாசைக்குள்ள நீங்க மூணு பேரும் கூட்டா வந்து தலைப்பல் சேக்கலினா பெரும் கேடு விளையும்”<br />
<br />
“யாருக்கு உனக்கா? களுத பொறுமையா இரு.. எல்லாம் கிடைக்கும்.. சாபம் கீபம் கொடுத்துராத.. காலைல ரமேசு நம்பரத் தேடி போன் பண்ணுறேன்.. இப்ப அந்த ஓரமா போய் உக்காரு.. இல்லே வவ்வாலா தொங்கு” என்று படுத்தேன். பல்கொட்டிக்குப் பயப்படுவதா பரிதாபப்படுவதா என்ற குழப்பத்தில் தூங்கிவிட்டேன். ரமேஷ் என் கழுத்தை நெறிப்பதாகக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தேன். <br />
<br />
பல்கொட்டி மென்மையாகச் சிரித்துக் கொண்டிருந்தது. "நீ எனக்கு பயப்படாம போனினா கூட கனவுக்கு பயந்து ஆவணுமே? என் தலைப்பல் எடுத்துத் தரலின்னா உனக்கு தினம் இது போல கனவுதான்" என்றது.<br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/05/blog-post.html">11◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2017/08/blog-post_5.html">►13</a><br />
<br />
</span> <br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87340014565176087772017-07-28T09:53:00.000-05:002017-08-04T07:55:53.293-05:00மீண்டும் சுழி <span style="line-height: 180%;"> <br />
<br />
        <span style="font-size: 280%;"><b>யா</B></SPAN>ருடைய கெட்ட கனவோ, எனக்கு திடீரென்று மீண்டும் எழுதத் தோன்றியது. தொடர்ந்து எழுதும் பொழுது தோன்றாத பாரம் விட்டு மீளும் பொழுது உறைக்கிறது. சுழியைச் சுற்றிவந்த ஐம்பது தெரிந்த வாசகரை ஏமாற்றி விட்டது போலவும் ஒரு உணர்வு. எழுத்து ஒரு பொழுதுபோக்கு, சோர்வகற்றி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். எழுத்து ஒரு போதை, புலிவால் என்றும் புரிந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு மறுபடி பற்றியிருக்கிறேன். ஒரு வருடம் போல் காணாமல் போனதைப் பொருட்படுத்தாமல், என்னை மறந்துவிடாமல், மீண்டும் வந்து படிப்பதற்கு மனமார்ந்த நன்றி.<br />
<br />
ஆதியில் விட்ட சில: <i>பேயாள்வான் புராணம், அந்தக்கடை, பெத்தாபுர மலர்</i><br />
பாதியில் விட்ட சில: <i>லுக்ரீசின் சாபம், திரவியம், கண்பிடுங்கி நீலன்</i><br />
மீதியில் விட்ட சில: <i>பல்கொட்டிப் பேய்</i><br />
இன்னும் இருக்கலாம். மேற்சொன்னவை என் நினைவிலிருந்து.<br />
<br />
கர்மயோகிகளிடம் ஒரு சிக்கல். கர்மமே யோகமாகப் பழக வேண்டியவர்கள் அப்படி இருக்கத் தவறினால் கர்மச்சுமை கரையும் வரை மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதே சுமையைக் கரைப்பார்களாம். என்று அந்தக் கிஸ்டப்பிரபு சொன்னதாக என் சகோதரி தன்னுடைய ‘பேட்ட கீதை’யில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறாள். நாம் எல்லோருமே கர்மயோகிகளே என அடித்து வேறு சொல்லிவிட்டாள்.<br />
<br />
ஆத்தாடி! இதுக்கு இன்னொரு பிறவியா? வேணாம்மா <a href="http://moonramsuzhi.blogspot.com/2017/07/blog-post_21.html" target="_BLANK">ஈஸ்வரி</a>! சுழியில் எத்தனை விட்டுப் போயிருக்குதோ அத்தனையும் சட்டு புட்டு ப்ளைட்டுக்கு டயமாச்சுனு <a href="http://engalblog.blogspot.com/2017/07/14.html" target="_BLANK">மஞ்சு</a> பாணில முடிச்சுர வேண்டியதுதான். <br />
<br />
கானல் புகழுக்குக் கண் இழந்து திரவியம் கண்பிடுங்கி இரண்டையும் நேரே சினிமாவுக்கும் டிவிக்கும் கொடுத்து விட்டதால் ஏவெகோகோகோ. வேறு வழியில்லை. இதில் <a href="http://moonramsuzhi.blogspot.com/2013/07/blog-post_7.html" target="_BLANK">கண்பிடுங்கி</a> மீண்டு வர கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. <a href="http://moonramsuzhi.blogspot.com/2014/03/blog-post.html" target="_BLANK">பெத்தாபுர மலர்</a> ஏன் தடைபட்டுக் கொண்டே போகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. <a href="http://moonramsuzhi.blogspot.com/2014/07/blog-post_7300.html" target="_BLANK">லுக்ரீசின் சாபம்</a> ஆதர்சம், முடிக்க வேண்டும். <a href="http://moonramsuzhi.blogspot.com/2013/07/blog-post.html" target="_BLANK">அந்தக்கடை</a>, <a href ="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post.html" target="_BLANK">பல்கொட்டி</a> விரைவில். <a href= "http://moonramsuzhi.blogspot.com/2013/12/blog-post_15.html" target="_BLANK">பேயாள்வான் புராணம்</a> பெரிய ப்ராஜக்ட், தொடரும் சாத்தியம் இல்லை. அதுக்காக இன்னொரு பிறவி வேணாம்மா.. படிக்கிறவங்க பாவம் இல்லையா? அவங்களை நினைச்சு ஒண்ணு ரெண்டை டீல்ல விட்டுருவம், என்ன சரியா?<br />
<br />
கர்மச்சுமை, பிறவி என்ற பாதையில் சிந்தனை ஓட, சட்டென்று நினைவுக்கு வந்த பாடல்:<br />
    மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்<br />
    வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா<br />
    இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை<br />
    கருப்பையூர் சேராமற் கா.<br />
<br />
'வாழாமற் கா' என்று பட்டினத்தார் பாடியதாகச் சொல்கிறார்கள். எனகென்னவோ 'சேராமற் கா' பொருத்தமாகத் தோன்றுகிறது. சமீபத்தில் இந்த பாடலை ஒருவருக்கு விளக்க நேர்ந்தது. 'வேதாவும் கைசலித்த'தை விளக்கும் போதுதான் இந்த பாடலின் எளிமை - ஏறக்குறைய அலட்சிய அற்புதம் - என்னைத் தாக்கியது. பட்டினத்தாருக்கே கர்மச்சுமை என்றால் ‘புட்டி’னத்தார் ஆசாமி கேவலம் நான் குறைபட்டுக் கொள்வானேன்? போனால் போகட்டும் போடா. சரி, இருப்பையூர் எங்கிருக்கிறது? கோமதி அரசுக்குத் தெரிந்திருக்கும். <a href="http://mathysblog.blogspot.com/2017/07/blog-post_23.html" target="_BLANK">புனுகீஸ்வரர்</a> மாதிரி கோவில்களை பிடித்தவருக்கு இருப்பையூர் தெரிந்திருக்காதா? :-)<br />
<br />
இத்தனை புலம்புகிறேனே, ஏதாவது உணர்ந்து உருப்படப் பார்க்கிறேனா? இல்லை. வலை நண்பர்கள் சிலருடன் இணைந்து கணிசமான ப்ராஜக்ட் செய்யலாம் (எழுதலாம்) என்ற நப்பாசையில் சில ஐடியாக்களைச் சேர்த்து வருகிறேன். பிரசவ வைராக்கியம் என்பது இதானா?<br />
<br />
        <span style="font-size: 220%;"><b>இ</B></SPAN>ணையம் விசித்திரமானது. ஒன்றைத் தேட ஒன்று கிடைக்கிறது. என் வீட்டைப் போலத்தான். பாருங்கள்.. கசிந்து ஒழுகிக் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இறுக்க வேண்டி முறுக்கியைத் தேடினால் என்றைக்கோ தேடிக்கொண்டிருந்த கையுறை கிடைத்தது.. பர்சைக் காணோமே என்று தேடினால் என் மகளின் நூலக உறுப்பினரட்டை கிடைத்தது.. இணையத்தில் ஏதோ ஒன்றைப் பற்றிய விவரம் தேடினால் இந்தத் தேவாரப் பாடல் கிடைத்தது . பாடலின் நயத்தில் தேடலை மறந்தேன்.<br />
    கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் <br />
    கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் <br />
    கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே <br />
    கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே. <br />
<br />
'கிடந்த'வை நீக்கிப் படித்தால் சட்டென்று புரிந்துவிடும். எதுகை மோனைக்காக கிடக்க விட்டிருக்கிறார் நாவுக்கரசர். வாகீசர் இல்லையா? அவருக்கு எல்லாவித உரிமையும் உண்டு. நீங்களும் நானும்.. சரி.. நானெல்லாம் இப்படி ஏதாவது எதுகைக்காக சேர்த்து கவி எழுதினால் 'அதெல்லாம் நல்லா தமிழ் தெரிஞ்சவங்க எழுதணும்.. உனக்கு எதற்கப்பா வேண்டாத வேலை?' என்பார்கள். எப்படியிருந்தாலும் நாவுக்கரசர் நயத்துக்கு என்னை அவர் காலில் கட்டி அடிக்கலாம், விடுங்கள். பொருள் நயம் முக்கியம்.<br />
<br />
இதே வி.கே.ராமசாமியா இருந்தா 'கிடந்து கிடந்துனா? களுத என்னா புரியுது?'னு கேட்டிருப்பாரு. அதுபோல நீயும் கேட்டுகினா வாய் மேல ரெண்டு போட்டு அர்த்தம் சொல்றேன் கெவுனி. நம்ம சிவம் யாரு? உமையொரு பாகன்.. அதாம்பா.. சிவன் பாதி சக்தி பாதி.. ஒரே பாடி.. லெப்டுல சிவன்.. ரைட்டுல சக்தி.. எப்டினு கேக்காதே.. கம்னு கேளு. இந்த சிவனோட தலைல பாம்பு கீதுல்ல.. அதுக்கு வந்த லொள்ள பாரு.. சொம்மா தலைலயோ கயுத்துலயோ குந்திகினு கீராம பாம்பு இன்னா பண்ணுதுனு கேளு.. நைசா சிவனோட மார்புல எறங்கி ரோந்து வுட்டுகுனு வருது.. நம்ம பார்வதிம்மா அதாம்பா சக்தி.. பாடில ரைட்டு ஆப்லக்குதுல? அது பாம்பைக் கண்டுகினதும் டர் ஆவுது.. இன்னாடாது.. பாம்பு ஊந்துகினே வருது.. நம்ம பார்டருல வருதுள்ளாற எஸ் வுடுவம்னா இந்தாளு புர்சங்காரன் பாதி உடம்பை வேறே புட்ச்சி வச்சிங்கிறான்.. பேஜாரா போச்சேனு மெய்யாலுமே பயந்துடிச்சிபா.. இந்தப் பொம்பள பாம்பைப் பாத்து டர் ஆவுதா? அந்தப் பாம்பு கதையை கேட்டுகினியா? அதுக்கும் பேதியாவுது.. ஏன்னு கேளு.. பாம்பு இந்தப் பொம்பள கலரையும் அயகையும் பாத்து மயில்னு நினைச்சுகிச்சுபா.. அட.. பாம்புக்கு மயில்னா பயமாச்சே.. இன்னாடா.. இந்த மன்சன்.. நம்மளை தலைல தூக்கி வச்சுகினானேனு அல்டாப்பா இருந்தா இந்த மயிலுக்கு காவு குட்த்துருவான் போலக்குதேனு அப்படியே ஷாக்காயிடுச்சு.. இங்க பார்வதியும் பாம்பும் மெர்சலாயினிருக்க சொல்ல இன்னொரு கூத்து கேளு.. சிவன் தலைல சந்திரன் இருக்குதுல்ல.. அதும் நடுங்குது.. ஏன்னு கேளு.. தோடா.. ஏற்கனவே ஒட்ச்சி போட்ட முறுக்காட்டம் இந்தாள் தலையில குந்தினுகுறோம்.. பாம்பு வேறே பயந்தாப்புல இருக்குது.. கபால்னு ரூட் மாறி நம்மளை முயுங்கிடுச்சுனா இன்னாவும் கெதினு அதுக்கு ஒரே பெஜாரு.. ஆத்தங்கரைல குந்திகினு இத்தையெல்லாம் பாத்துகினே சொம்மா சிரிச்சினிகுதுபா இந்த சிவம்..! இதான் அர்த்தம் பிரியுதா? அதான் படிக்க சொல்ல ஒயுங்கா தமிளு படின்றது.. அத்தவுட்டு இன்னாத்தையோ படிச்சினிகிறீங்கோ இந்தக்காலத்துப் புள்ளிங்கோ..<br />
<br />
அப்படி என்ன இணையத் தேடல் என்கிறீர்களா? நண்பர் ஒருவர் சமீபத்தில் மயில் கறி சாப்பிட்டதாகச் சொன்னார். மயில் மாமிசம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் நம்ப முடியவில்லை. தேசியப் பறவை, முருகன் வாகனம் என்று ஒருபக்கம் இருந்தாலும் - என்னவோ மயில் கறி பரிமாறுவார்கள் என்று நினைக்கவில்லை - மயில் மாமிசம் ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இல்லையாம். சரி, மயில் கறி எப்படியிருக்கும்.. கோழி போலவா வான்கோழி போலவா எப்படிச் சுவைக்கும் என்று அறிய விரும்பி கூகிலில் தேடினால் முதல் வரிசையிலேயே மேற்சொன்ன தேவாரப் பாடல் வருகிறது!<br />
<br />
மயில் கறியை மறந்து தேவாரப்பாடலில் லயித்து முடித்தால் இரண்டு வரிசை கீழே <a href= "http://eluthu.com/kavithai/194211.html" target="_BLANK">டாக்டர் கன்னியப்பன்</a> என்பார் மயில்கறி பற்றி நேரிசை வெண்பா எழுதியிருப்பதைக் கண்டேன். 'அட! என்னே என் தமிழ்த்தேடலின் பாக்கியம்' என்று அதையும் படித்தேன்.<br />
    சூலைப் பிடிப்புகளைச் சோரிவளி யைப்பித்த <br />
    வேலைச்சி லேட்டுமத்தை வீட்டுங்கால் – நூலொத்த <br />
    அற்பவிடை மாதே அனலா மயிலிறைச்சி <br />
    நற்பசியுண் டாக்கு நவில். <br />
<br />
பொருள்: <br />
நூல் போன்ற சின்னஞ்சிறு இடையை உடைய பெண்ணே! மயில் இறைச்சியை உண்பவர்களுக்கு உஷ்ணத்தைக் கிளப்பும். நல்ல பசியை உண்டாக்கும். வலி தரும் மூட்டுப் பிடிப்பு, சோரிவளி, பித்தம், அதிக கபம் இவைகளை விரட்டும்.<br />
<br />
மயில் கறிக்கும் அற்ப இடைப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு? <br />
<br />
        <span style="font-size: 220%;"><b>செ</B></SPAN>விக்குணவு போதும். இனி கண்ணுக்கு. சமீபத்தில் இரண்டு நாள் கொட்டித் தீர்த்தது மழை. அக்கம்பக்க விளையாட்டுத் திடல்கள் எல்லாம் குட்டைகளாக அவதாரம் எடுத்திருந்தன. ஒரு மாலைப் பொழுதில்:<br />
<table width="880"><tr> <th>இவர்களுடன் நடந்த போது</th> <th>இவற்றைக் கண்டேன்</th> </tr>
<tr> <td><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7rV5PooHBWPhdvCaOmLk5dQb3klBT90lIkMi3XCr6UH_5WjHcnval25V7FgDXz0LHe03MeK2JPadfGqTox2oI83fYzRqU7yrK2f32U7-0-6i3TDiLQcx8h01Rjhjnjw7WOk7RMJCJ-I2e/s1600/IMG_0289.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7rV5PooHBWPhdvCaOmLk5dQb3klBT90lIkMi3XCr6UH_5WjHcnval25V7FgDXz0LHe03MeK2JPadfGqTox2oI83fYzRqU7yrK2f32U7-0-6i3TDiLQcx8h01Rjhjnjw7WOk7RMJCJ-I2e/s320/IMG_0289.JPG" width="270" height="280" data-original-width="1200" data-original-height="1600" /></a></td> <td><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwyWL554JE4XSztNkhwLsQws0cxHLcPaNNp1XkB4wTZlD3vwv8SRJbV20olZF7s9BcPlIMUaY7J7jLCcaZ8beVbW1K-cfutropC7lGAEiHpXxmgdvJsLb0mW9qQyGwtJbcFZ2w-PsoEYul/s1600/IMG_0288.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwyWL554JE4XSztNkhwLsQws0cxHLcPaNNp1XkB4wTZlD3vwv8SRJbV20olZF7s9BcPlIMUaY7J7jLCcaZ8beVbW1K-cfutropC7lGAEiHpXxmgdvJsLb0mW9qQyGwtJbcFZ2w-PsoEYul/s320/IMG_0288.JPG" width="290" height="280" data-original-width="1200" data-original-height="1600" /></a></td> <td><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiolbkrXp18KpPGrJHmUPEmEnKChOdnM_d9SFLq0STVi8t2hBtjqPuBZjS9yZSZGkyuAH_Ay9z0HN3QaeXOP35UW_vIxekIn3IBRTe8Gost6X0cyfoVVOsKjzjGMa4wqwqwa-Sj7KLAdDNR/s1600/IMG_0290.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiolbkrXp18KpPGrJHmUPEmEnKChOdnM_d9SFLq0STVi8t2hBtjqPuBZjS9yZSZGkyuAH_Ay9z0HN3QaeXOP35UW_vIxekIn3IBRTe8Gost6X0cyfoVVOsKjzjGMa4wqwqwa-Sj7KLAdDNR/s320/IMG_0290.JPG" width="290" height="280" data-original-width="1200" data-original-height="1600" /></a></td> </tr>
</table>பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. வெண்பா கிண்பா எழுதவோ தேடவோ தோன்றவில்லை. <br />
<br />
</SPAN>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19166362928036410462017-07-21T22:58:00.000-05:002017-07-24T12:50:55.321-05:00வந்தவள்<span style="line-height: 180%;"> <br />
<br />
        <span style="font-size: 220%;"><b>இ</B></SPAN>ப்போதெல்லாம் இரவில் தூக்கம் சரியாக வருவதில்லை தவறி வந்தாலும் மூன்றரை மணிக்கே விழிப்பு வந்துவிடுகிறது. உதவியில்லாமல் படுக்கையை விட்டு எழுந்து நடமாடக்கூடாது என்று விதியிருப்பதால் படுத்திருப்பேன். ராம ராம என்று ஏதாவது சொல்வேன். சரியாக ஆறு மணிக்குச் செவிலிப்பெண் வந்து எழுப்புவது போல் எழுப்பி, நான் காலைக்கடன் முடிக்க உதவி செய்து, சிறிய டம்ளரில் சொட்டுப் பால் கலந்து சர்க்கரையில்லாத காபி கொடுப்பாள். இரண்டு பிரிட்டானியா பிஸ்கெட் கொடுத்து என்னை சாய்நாற்காலியில் உட்காரவைத்துப் போவாள். சில நேரம் பெரிய எழுத்து பாகவதம் படிப்பேன். கண்ணன் கதைகள் பிடிக்கும். அலமாரியில் வரிசையாக இருக்கும் மெடல்களைப் பார்ப்பேன்.. என் நேர்மைக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசுகள்.. சில நேரம் ஆல்பத்தைப் புரட்டிப் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் படங்களையோ அவர்களனுப்பிய கடிதங்களையோ பார்ப்பேன். படிக்க முடிவதில்லை. பல நேரம் கண்மூடியிருப்பேன். அன்றைக்கும் அப்படியே. <br />
<br />
சலசலப்பு கேட்டு விழித்தேன். <br />
<br />
விழித்தேன் என்பது சரியான சொல்லா தெரியவில்லை. கண் திறந்தேன் எனலாமா? அப்படித்தான் வைத்துக் கொள்ளவேண்டும். விழிப்பது புறச் செய்கையெனில் நான் தூங்கினால் தானே விழிப்பதற்கு? அகத்தைப் பற்றியதெனில் விழிப்பதற்கான வாய்ப்பே இல்லை. மூன்று வருடங்கள் முன்பு தூங்கிய அகம் இனி விழிக்கப் போவதில்லை. <br />
<br />
வெளியே சலசலப்பு பெரிதாகக் கேட்டது. அவளாகவே இருக்க வேண்டும். யாருக்கு அதிர்ஷ்டமோ? இன்றைக்கு என்னைப் பார்க்க வந்தால் நன்றாக இருக்குமே என்று உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்…. சரி வரும் போது வரட்டும்… என்று நினைக்கும் போதே அறைக்கதவைத் தட்டும் ஓசை. தொடர்ந்து உள்ளே வந்தாள். அவள்தான். <br />
<br />
பதினைந்து பதினாறு வயதிருக்குமா? தினமும் பதினாறாகவே இருக்கிறாளே? இன்றைக்குப் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். குழந்தைத்தனமும் விலகாமல் குமரித்தனமும் பரவாமல் ஒருவிதக் குதூகலமான முகம். வெகுளியும் விவேகமும் கலந்த அறிவார்ந்த முகம். நெற்றியில் கருங்கீற்று. அதன் கீழே சிறிய குங்குமப் பொட்டு. கருணைக் கடலாய் கண்கள். கழுத்தில் ஒரு கண்ணாடி மாலை. இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள். ஒரு கையில் சிறிய துணிப்பை. பளிச்சென்று இருந்தாள். பார்வைக்குப் பரவசம் தந்தாள். ஆறேழு மாதங்களாக அவ்வப்போது வருகிறாள். எப்போது வந்தாலும் அதே தோற்றம். அதே முகம். அதே பரவசம்.<br />
<br />
“தாத்தா” என்று ஓடிவந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “எப்படி இருக்கீங்க தாத்தா? இந்தாங்க உங்களுக்காக..” என்று தன் பையிலிருந்து ஒரு பிடி பவழமல்லிப் பூக்களை எடுத்துத் தந்தாள். “பாவாடை தாவணி உங்களுக்காகக் கட்டிக்கிட்டேன். அழகா இருக்கா? பவளமல்லியும் உங்களுக்குத்தான் தாத்தா.. இன்னிக்கு உங்க பிறந்த நாள் இல்லியா? வாழ்த்துக்கள் தாத்தா”<br />
<br />
“சந்தோஷம்”. புன்னகைத்தேன். “நாளைக்கு வருவியா?” என்ற என் கேள்விப் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் “அவசியம் இருந்தா வருவேன் தாத்தா..” என்ற வழக்கமான பதிலைச் சொல்லிக் கிளம்பி மறைந்து விட்டாள்.<br />
<br />
ஆல்பத்தைப் புரட்டி மகன் பேரன் பேத்தி படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். பிறகு கண்களை மூடி பவழமல்லிப் பூக்களை என் முகத்தில் அப்படியே கவிழ்த்துக் கொண்டேன். மணம் மனத்தை இழுத்தது.<br />
<br />
        <span style="font-size: 220%;"><b>எ</B></SPAN>ன் மனைவி பூரணியின் எழுபதாவது பிறந்தநாள். பூரணி என் உயிர். என் அகம். என் எல்லாம். எங்களுக்கு ஆறு பிள்ளைகள். முதல் ஐந்தும் வரிசையாக ஆண், கடைசியில் ஒரு பெண். எல்லாரையும் வளர்த்து, படிக்க வைத்து முன்னேற்றப் பாதையில் வழியனுப்பிவிட்டு என்னுடய ஹைகோர்ட் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்த என் குடும்ப வீட்டில் என் மூன்றாவது மகன் குடும்பத்துடன் இருந்தோம். அங்கேதான் விழா. சிகாகோ, லசான், துபாய், டோக்கியோ, மும்பையிலிருந்து எங்கள் மற்றப் பிள்ளைகளும் குடும்பத்துடன் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். பூரணி பிறந்த நாளுக்கு ஹோமம், அன்னதானம், துணிதானம் என்று அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். <br />
<br />
மறுநாள் காலை சிற்றுண்டி முடித்ததும் பேரக்குழந்தைகள் அனைவரும் மருமகனுடன் வெளியே பிக்னிக் கிளம்பினார்கள். மருமகள் ஐவரும் அதிகாலையிலேயே மொத்தமாக வெளியே கிளம்பியிருந்தார்கள். மகன் ஐவரும் மகளும் நாங்களும் மட்டும் இருந்தோம். “அப்பா அம்மா.. உங்களுட பேசணும்" என்றார்கள். <br />
<br />
மூன்றாவது மகன் தொடங்கிவைத்தான். “அப்பா.. அம்மா.. நீங்க ரெண்டு பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தீங்க.. எங்களுக்கும் வழி செஞ்சீங்க.. இனி அடுத்த நிலையைப் பத்தி யோசிக்க வேண்டாமா.. அப்பா.. உங்களுக்கு எழுவத்தெட்டு வயசாகுது.. அம்மாவுக்கு எழுபதாயிடுச்சு.. எனக்கும் என் மனைவிக்கும் இருக்குற வேலை குழந்தை வளர்ப்பு சமூக ஈடுபாடுகள்ல உங்களைக் கவனிக்க முடியலே.. குழந்தைகளுக்கும் நீங்க கொஞ்சம் பழைய நடத்தைகளைக் காட்டுறது என் மனைவிக்குப் பிடிக்கலேபா.. எனக்கும் கஷ்டமா இருக்கு”. <br />
<br />
“வீடு வேறே பழசாயிடுச்சுப்பா..” என்றான் இரண்டாமவன்.<br />
<br />
“டேய்.. இது எங்க தாத்தா காலத்து வீடுரா”<br />
<br />
“அதனாலதாம்பா..” என்றான் முதல்வன். “இதுல எங்களுக்கும் பங்கு இருக்குல்ல?”<br />
<br />
“என்ன சொல்றே?” என்றாள் பூரணி.<br />
<br />
“அம்மா. நீ கொஞ்சம் சும்மா இரும்மா” என்று அடக்கினாள் மகள்.<br />
<br />
“உங்க ரெண்டு பேரையும் முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டா எல்லாருக்குமே வசதியா இருக்கும்னு தோணுதுபா” – இது நான்காவது மகன்.<br />
<br />
“அதனாலதான் எல்லாரும் சேர்ந்து பேசலாம்னு ஒண்ணா வந்தோம்.. அம்மாவோட எழுபதாவது பொறந்த நாளையும் தவறவிடாம வந்துட்டோம்” கடைசி மகன். <br />
<br />
“ஆமாம்பா.. இந்த வீட்டை இடிச்சு ஆறு பேரும் ஜேவி போட்டு பனிரெண்டு ப்ளாட் கட்டுறதா திட்டம்.. ஜனாவே ஏற்பாடு செய்துடுவான்..” என்றான் மூத்தவன். ஜனா என் மூன்றாவது மகன். நகரின் மிகப்பிரபல கட்டிட நிறுவனம் ஒன்றின் முதலாளி. எங்களுடன் தினம் வாழ்ந்து வருபவன். “நாங்க ஆளுக்கு ஒரு ப்ளாட் எடுத்துக்குறோம். மிச்ச பிளாட்டை வித்து பணத்துலந்து ஒரு நல்ல முதியோர் இல்லத்துல வைப்புத்தொகை கட்டி உங்க ரெண்டுபேரையும் ஆயுசுக்கும் பாத்துக்கும்படி செய்துடறோம்.. மீதிப் பணத்துல உங்க பேரக் குழந்தைகளுக்கு ஒரு டிரஸ்ட் உருவாக்கிடறோம்”. அடப்பாவிகளா.. இதற்குத்தான் ஒன்றாக வந்தீர்களா எல்லாரும்?<br />
<br />
“ஏண்டா.. எங்களை கவனிக்க கஷ்டமா இருக்குதா?” பூரணி மறித்தாள்.<br />
<br />
“அம்மா.. சும்மா இருக்கியா? உங்க நனமைக்குத்தான் சொல்றோம். உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுனு வை, அவசரத்துக்கு நாங்க யாருமே இல்லியேமா? முதியோர் இல்லத்துல நல்லா கவனிப்பாங்க.. நாங்க யாராவது அப்பப்ப வந்து பார்ப்போம். உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டோம். பெத்தவங்க இல்லியா?” ஏறக்குறைய முடித்து வைத்தாள், என் செல்ல மகள். “என்னப்பா சொல்றீங்க?”<br />
<br />
நான் என்ன சொன்னேன் என்று நினைவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்று நினைவில்லை. எதிலெதிலோ கையொப்பமிட்டேன். ஒரு வருடத்துக்குள் இங்கே பவானி பக்கம் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு எங்களுடன் சில நாட்கள் தங்கினார்கள். பிரிந்தார்கள்.<br />
<br />
        <span style="font-size: 220%;"><b>அ</B></SPAN>து நடந்தது பதினொரு வருடங்களுக்கு முன்பு. <br />
<br />
எனக்கு இன்றைக்கு தொண்ணூறாவது பிறந்த நாள். பூரணி இருந்தால் ஏதாவது செய்வாள். இனிப்பு ஆகாது என்பதால் கொஞ்சம் தேன் எடுத்து என் நாவில் தடவி முத்தம் தருவாள். என் கைகளைப் பிடித்துக் கொண்டே ஏதாவது சினிமா பாட்டு பாடுவாள். எனக்கு சினிமாப் பாடல்கள் தான் பிடிக்கும். <br />
<br />
பூரணி இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் அதிகாலையில் பூரணி பூரணி என்கிறேன்…<br />
<br />
என் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் யாரும் வரவில்லை. அவர்களுக்கு என்ன முடக்கமோ வேலையோ.. பாவம். ஒரு மாதம் பொறுத்து ஜனா வந்து பூரணிக்கான வைப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு போனான். “உனக்கு ஏதும் வேணுமாப்பா?” என்றான்.<br />
<br />
அகம் தூங்கியது என்றேனே, அன்றைக்குத் தூங்கியது இனி விழிக்காது. மூன்று வருடங்களாக நானும் என் நலிந்து வரும் உடலும் மனமும் எதற்காகவோ காத்திருக்கிறோம். அவ்வப்போது செவிலிப்பெண் அக்கம்பக்கத்து முதியோர் பற்றிச் சொல்வாள். அனேகமாக எல்லார் கதையும் இப்படித்தான் போலிருக்கிறது.<br />
<br />
சென்ற இரண்டு வருடங்களாகவே நான் வெளியே போவதில்லை. அனுமதியில்லை. எலும்புச் சேதம் என்கிறார்கள். அல்சைமர்ஸ் என்கிறார்கள். மயொபிஜியா பராக்சிஸ்மாலிஸ் என்கிறார்கள். பொடேசியப் பற்றாக்குறை என்கிறார்கள். என்னைப் பார்க்கவும் யாரும் வருவதில்லை. ஆக, அறைவாசம் சிறைவாசம். <br />
<br />
ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இரவு மிக அழுதேன். உடல்வலியை மிஞ்சும் மனவலி. மனவலியை மிஞ்சும் இயலாமை. இயலாமையை மிஞ்சும் உயிர்ப்பிடிப்பு. எத்தனை நேரம் அழுதேனோ?<br />
<br />
மறு நாள் காலையில் திடீரென்று அறைக்கதவைத் தட்டி அவள் வந்தாள். முதல் முறை. “தாத்தா.. இந்தாங்க பிடிங்க” என்று ஒரு கை மல்லிகை மொட்டுக்களைத் தந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் அப்படி ஒரு களை முகத்தில். “யாரம்மா நீ?” என்று கேட்பதற்குள் கிளம்பிவிட்டாள். <br />
<br />
அதற்குப் பிறகு வந்தபோதெல்லாம் என் கைகளைப் பிடித்துக் கொள்வாள். இல்லையெனில் நெற்றியை வருடி விடுவாள். ஒரு பிடி உதிரி மலர் ஏதாவது கொடுத்து விலகுவாள். “நாளைக்கு வருவியா?” என்றால் சிரித்தபடி “அவசியம் இருந்தால் வரேன் தாத்தா..” என்பாள்.<br />
<br />
ஒரு முறை செவிலியிடம் கேட்டேன் அவளைப் பற்றி. “என்னவோ அய்யா.. எங்க கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதே அந்தப் பொண்ணு?” என்று சிரித்தாள்.<br />
<br />
“மாயப் பொண்ணா?”<br />
<br />
“இல்லே ஐயா.. நான் வரப்ப அந்தப் பொண்ணு வரலேனு சொல்றேன்.. அக்கம்பக்கம் அந்தப் பொண்ணு வரான்னு சொல்றாங்க. நான் பார்த்ததே இல்லை. அதான்”.<br />
<br />
"என்ன செய்யுது அந்தப் பொண்ணு மத்தவங்க கிட்டே?"<br />
<br />
"என்னய்யா பொறாமையா?" சிரித்தாள் செவிலி. "உங்களைப்போலத்தான் ஐயா. யாரும் இல்லாதவங்க கிட்டே வந்து பேசுது. ஆறுதலா சிரிக்குது. ஏதோ பூவோ பழமோ குங்குமமோ தருதாம் சிலருக்கு.. கேள்விதான்.. நான் கண்டதில்லே.. ஆனா அந்தப் பொண்ணு வந்து போனா சந்தோசமா இருக்குதுனு சொல்றாங்க.. உண்மை தானே ஐயா.. நான் இங்க கூலிக்கு வேலை பாக்குறேன்னு இருந்தாலும் உங்க முதிய மனசுங்களோட வலி புரியுது ஐயா.. உங்களுக்கு எத்தினி ஆறு புள்ளைங்களா.. உங்க விருந்தாளி ரெஜிஸ்டர்ல அஞ்சு வருசத்துல ஒரே முறை பதிவாயிருக்கு அதும் அம்மா காணாத போன பிறகு.. பன்னீர் செல்வம் அய்யா பாருங்க.. மகன் எம்எல்எ மந்திரி ஆனா ஊழல் செய்யுறது பிடிக்கலேன்னு இங்க வந்து உக்காந்திருக்காரு.. ராகவனய்யா ஒரே பையனை பறிகொடுத்துட்டு.. ராமநாதன் சாருக்கு ரெண்டு பசங்க.. ரெண்டாமவனுக்கு கல்யாணம் கட்டின ஒரு மாசத்துல இங்க அனுப்பிட்டாங்க.. காலம் மாறிட்டு வருதே? இப்படி இங்க வந்த நாதியில்லாத மன்னிச்சுக்குங்க ஐயா வயசானவங்களை அப்பப்ப வந்து விசாரிச்சுட்டுப் போகவும் நல்ல மனசு வேணும்.. அந்தப் பொண்ணு நல்லாருக்கட்டும்".<br />
<br />
        <span style="font-size: 220%;"><b>செ</B></SPAN>விலி சமீபமாக இல்லத்தில் முதியவர்கள் ‘காணாமல்’ போய்விடுவதாக அடிக்கடி சொல்லி வருகிறாள். “காணாம போறாங்களா?” என்று நான் அதிர்ந்தால் சிரிப்பாள். “இடக்கரடக்கல் ஐயா. கண் காணாத இடத்துக்கு போயிட்டாங்க”. <br />
<br />
என் பூரணியும் காணாமல் போய் மூன்று வருடங்களாகின்றன. எனக்கும் காணாமல் போகும் துடிப்பு இருந்துகொண்டே... <br />
ஏனோ அவளைப் பார்க்கும்பொழுது மட்டும் துடிப்பு சற்று அடங்குவது போல..<br />
<br />
பார்த்திருந்தாலும் அவள் பெயரைத் தெரிந்து கொண்டதேயில்லை. ஏனோ கேட்கும் நினைப்பும் வரவில்லை. அவளைப் பார்ப்பதில் கிட்டும் குறுநேரப் பரவசத்தில் எல்லாமே மறந்துவிடும். அடுத்த முறை கேட்கவேண்டும்.<br />
<br />
அடுத்த சில நாட்களுக்கு அவள் வரவில்லை. வாரங்களாகவும் இருக்கலாம். நேற்று முன்தினம் ராகவன் காணாது போனதாகச் செவிலி சொன்னாள். ராகவன் எங்களுக்கு ஐந்து வருடங்கள் பின்னால் வந்தவர். இன்று காலை பிஸ்கெட் தின்றுகொண்டே பன்னீர்செல்வம் காணாது போய்விட்டதாகச் சொன்னாள். வலித்தது. கண்களில் லேசாக நீர் திரையிடுவது தெரிந்தாலும் உணரமுடியாதது முரணாக இருந்தது. இன்று அந்தப் பெண் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.<br />
<br />
வந்தாள். வந்த போது நான் கண் மூடியிருந்தேன். "தாத்தா" என்ற குதூகலக் குரல் கேட்டுக் கண் திறந்தேன். என் முன் நின்றாள். அதே பரவசமூட்டும் முகம். புன்னகைக்க முயன்றேன். என் கை விரல்களை மிக மிக மென்மையாகப் பிடித்தாள். "ரொம்ப முடியலியா தாத்தா?" என்றபடி என் நெற்றியைத் தடவினாள். <br />
<br />
"என்ன கொஞ்ச நாளா வரலே?"<br />
<br />
"வந்தேனே தாத்தா? நீங்க கண்மூடியிருந்தீங்க.. பார்த்துட்டு போயிட்டேன்.. ஆனா இன்னிக்கு உங்க கண் திறந்து உங்களைப் பாத்து பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.." என்று இனிமையாகப் பேசினாள். <br />
<br />
"நாளை வருவியா?"<br />
<br />
"அவசியம் இருந்தா வருவேன் தாத்தா"<br />
<br />
"அவசியம் உண்டா இல்லியானு எப்படி தெரியும்?"<br />
<br />
மென்மையாகச் சிரித்தாள். "எனக்கு எல்லாம் தெரியும்" என்றபடி என் கைகளை விடுவித்தாள். "பயப்படாதீங்க தாத்தா". கிளம்பினாள்.<br />
<br />
"ஏய்.. இரு.. இரு.." என்றேன்.<br />
<br />
"என்ன தாத்தா?"<br />
<br />
"கோவிலுக்குப் போவியா?"<br />
<br />
ஆச்சரியத்தோடு பார்த்தாள். "ஏன் கேக்குறீங்க?"<br />
<br />
"இந்தா" என்று என் ஆல்பத்தைக் கொடுத்தேன். <br />
<br />
"என்ன இது தாத்தா?"<br />
<br />
"என் சந்ததி படங்கள்.. எனக்குத் தேவையில்லை.. ஏன் பிடிச்சு வச்சிட்டிருந்தேனோ.. அவங்க நல்லா இருக்கணும்னு அம்மன் கிட்டே நீ எனக்காக வேண்டிக்கிட்டு அங்கயே வச்சுடு.. அதோ அந்த பெட்டிக்குள்ள நிறைய காசும் பணமும் இருக்கு.. எடுத்து அர்ச்சனைக்குப் போக உண்டியல்ல போட்டுரு.. அந்த அலமாரியில என்னுடைய புத்தகங்கள்.. வந்தப்ப கொண்டு வந்தது.. யாருக்காவது கொடுத்துடு.. ஏன் இன்னும் இதையெல்லாம் பிடிச்சிட்டிருக்கேனோ.. இன்னொரு உதவி செய். அப்புறம்.. அதோ அந்த மெடல்கள்.. அப்புறம்.. அந்தப் பெட்டிய.. அதான்.. எடுத்துவா"<br />
<br />
வந்தாள்.<br />
<br />
"அம்மா.. நீ யாரோ எனக்குத் தெரியாது.. ஆனா நான் சோர்ந்த நேரத்திலெல்லாம் வந்திருக்கே.. எனக்கு இனம் புரியாத பிடிப்பைப் கொடுத்திருக்கே.. அதுக்கு நன்றினு நினைக்காதே.. இந்த மெடல்கள் அசல் தங்கம்.. என் திறமையே அவன் போட்ட பிச்சைனு மறந்துட்டு தங்க மெடல் கிடல்னு பிடிச்சிட்டிருந்தேன் பாரு.. இந்த பெட்டியில என் மனைவியோட நகைகள் இருக்கு.. மெடல்.. நகை.. இதை அத்தனையும் நீ எடுத்துக்க"<br />
<br />
அவள் மறுக்கவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "வேறே ஏதாவது தாத்தா..?"<br />
<br />
"ஆமாம்.. கேட்கணும்னு இருந்தேன்.. இங்க வா.. எல்லாம் தெரிஞ்ச பெண்ணே.. உன் பேரென்னம்மா?"<br />
<br />
"என் பேரு ஈஸ்வரி" என் முகத்தருகே நெருங்கி "எனக்கு மெய்யாவே எல்லாம் தெரியும் தாத்தா" என்றாள்.<br />
<center>■ ■</center><!-- flooble Expandable Content box1 start --><br />
<hr align="left" noshade="noshade" size="1" width="20%" /><b>குறிப்பு</b> [<a title="திற/மூடு" id="exp1302184812_link" href="javascript: void(0);" onclick="toggle(this, 'exp1302184812');" style="text-decoration: none; color: #000000; ">-</a>]<div id="exp1302184812" style="padding: 3px;"><span style="line-height: 160%"><br />
இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதியதாக நம்பப்படும் "The dog in the red bandana" எனும் சிறுகதை. 'காணாமல்' போவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு ரே எழுதியதாகச் சொல்கிறார்கள். ஐம்பது சதவிகிதம் சாத்தியம் என்பேன். குறைந்த பட்சம் முடிவையாவது யாரோ மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கதை வெளியாகவில்லை எனினும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம் போல் அசைபோட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.<br />
<br />
இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2017/07/blog-post_14.html" target="_BLANK">கொலகார பேஷன்ட்</a> | (The Murderer)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2014/07/blog-post_16.html" target="_BLANK">ஆஸ்மா கிணறு</a> | (The one who waits)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2014/06/blog-post_14.html" target="_BLANK">சிவப்பு வட்டம்</a> | (The last night of the world)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2013/03/blog-post.html" target="_BLANK">பரணறையில் நன்னாரி மணம்</a> | (A scent of sarasparilla)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2012/08/blog-post.html" target="_BLANK">மனதிற்கினிய மேரி டீச்சர்</a> | (A story of love)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2012/06/blog-post_07.html" target="_BLANK">மகிழ்ச்சி எந்திரம்</a> | (The happiness machine)<br />
</span></div><script language="javascript">toggle(getObject('exp1302184812_link'), 'exp1302184812');</script><!-- flooble Expandable Content box1 end --><br />
<br />
<br />
</SPAN><br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46580753671682828912017-07-14T22:36:00.000-05:002017-07-16T20:43:37.532-05:00கொலகார பேஷன்ட் <span style="line-height: 180%;"> <br />
<br />
        <span style="font-size: 220%;"><b>“டா</B></SPAN>க்டர் குரு, உங்கள் நாலு மணி பேஷன்ட் தயார். பாதுகாப்பு அறை ஏழு, புது பேஷன்ட். கைதி. மேலாய்வுக்காக டாக்டர் ஸ்னேகா வித்யுத் அனுப்பி வைத்தார்” என்று ப்லூடூத் ஹெட்செட்டில் வந்த தேன்குரல் கேட்டு “ஓகே” என்றான். கணினியில் தெரிந்த விவரங்களைப் படித்தான். இரண்டு அவசர உதவி வாக்கி டாக்கி ரேடியோக்களை எடுத்துக் கொண்டான். ஒன்றை இடது கால் சாக்ஸில் மறைவாகப் பொருத்திக் கொண்டான். மற்றொன்றை கோட் பாகெட்டில் போட்டுக் கொண்டான். ஐபேடை கணினி முன் நீட்ட பேஷன்ட் விவரங்கள் தானாகவே நகலாகின. ஐபேடை பார்த்தபடி பாதுகாப்பு அறை ஏழுக்கு நடந்தான். பேஷன்ட் பெயர் பாதித்தது.<br />
<br />
அறைக்குள் நுழையுமுன் பாதுகாப்பு ரேடியோக்களை இயக்கிக் கொண்டான். அறைக்குள் நுழைந்ததும் கதவு தானாகப் பூட்டிக்கொண்டது. <br />
<br />
நீண்ட மேஜையின் எதிரெதிரே இரண்டு வசதியான சாய்வு நாற்காலிகள். ஒரு நாற்காலியில் ஒருவன் அமர்ந்திருந்தான். நாற்பது வயதிருக்கும். கைகள் கட்டப்பட்டிருந்தன. மறு நாற்காலிக்குச் சென்ற குரு மனம் மாறி ஆளிருந்த நாற்காலியருகே வந்தான். கோட்டிலிருந்த ரேடியோ, ஐபேட் இரண்டையும் மேஜை மேல் வைத்தான். <br />
<br />
லேசானப் புன்னகையுடன் பேஷன்ட் கைக் கட்டை அவிழ்த்தான். “என் பெயர் டாக்டர் குரு” என்றான். “நீங்க?”<br />
<br />
“என் பெயர் கொலகாரன்”<br />
<br />
“பார்த்தேன். உங்க நிஜப்பெயரா?”<br />
<br />
“கொல செய்யுறவன் கொலகாரன் தானே? நாம எல்லாருமே கொலகாரங்க தான். இனி உங்களையும் கொலகாரன்னே கூப்பிடவா?”<br />
<br />
“டாக்டர் குருனே கூப்பிடுங்க…. மிஸ்டர் கொலகாரன்” தயங்கினான் குரு.<br />
<br />
“சரி” என்ற பேஷன்ட் சட்டென்று எழுந்து மேஜையிலிருந்த ஐபேடை எடுத்து சிதறு தேங்காய் போல் தரையில் ஓங்கி அடித்தான். சுக்கு நூறான ஐபேடைப் பார்த்துச் சிரித்தான். மேஜை மேலிருந்த ரேடியோவைப் பற்களால் கடித்துக் குதறி சின்னாபின்னமாக்கித் துப்பினான். நாற்காலியில் நிதானமாக அமர்ந்தான்.<br />
<br />
திடுக்கிட்ட குரு மெள்ள சுதாரித்தான். எதிர்புறமிருந்த நாற்காலியைப் பலத்த ஒலியுடன் பேஷன்ட் அருகே இழுத்து வந்து உட்கார்ந்தான். “நீங்க உடைச்ச ஐபேடும் ரேடியோவும் எழுவத்தஞ்சாயிரம் ரூபாய்” என்றான்.<br />
<br />
“சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்று உரக்கப் பாடினான் பேஷன்ட்.<br />
<br />
கோட் பாகெட்டிலிருந்த குறிப்பேட்டையும் பென்சிலையும் எடுத்தான் குரு. “மன்னிச்சுக்குங்க.. மிஸ்டர் கொலகாரன்… உங்களுக்கு இந்த மாதிரி கருவிகள் எந்திரங்கள் பிடிக்காதுனு மறந்துடுச்சு..” என்றான். புன்னகைத்தான். “போன வெள்ளிக்கிழமை கைது ஆயிருக்கீங்க. டாக்டர் வித்யுத் உங்களை மேற்பரிசோதனைக்காக எங்கிட்டே அனுப்பியிருக்காங்க”<br />
<br />
“தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தால்..” பாடினான் பேஷன்ட்.<br />
<br />
“நல்லாருக்கு. அந்தக்காலத்து சினிமா பாட்டா?” தொடர்ந்தான் குரு. “நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்னு நம்பறேன். உங்க மனசிலிருக்குறதை தைரியமா சொல்லுங்க.. என் கிட்டே சொல்லுற எதுவும் உங்களுக்கு எதிரா கோர்ட்டுலயோ பொதுவிலயோ சாட்சியமா பயன்படாது. தைரியமா எதுவானாலும் சொல்லுங்க”<br />
<br />
“தைரியமா எதுவானாலும் கேளுங்க” என்றான் பேஷன்ட். “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே..” பாடினான்.<br />
<br />
“மிஸ்டர் கொலகாரன்… போன வெள்ளிக்கிழமை மட்டும் அறுபது செல்போனை உடைச்சிருக்கீங்க, முப்பது டிவி உடைச்சிருக்கீங்க, நூறு லேப்டாப்களை அடிச்சு நொறுக்கியிருக்கீங்க.. பதினேழு எக்ஸ்பாக்ஸ்.. முப்பது ப்லேஸ்டேஷன்.. இருநூறு ஹெட்செட்டைப் பிடுங்கி எறிஞ்சிருக்கீங்க..”<br />
<br />
“சும்மாவா என்னைக் கொலகாரன்னு சொல்றாங்க?”<br />
<br />
“செல்போன் மேலே உங்களுக்கு ஏன் வெறுப்பு? நீங்க போன் உபயோகிச்சிருக்கீங்க இல்லையா?””<br />
<br />
“இருக்கேன்., போன் எதுக்கு? ஒரு அவசரத்துக்கு பேச. நேர்ல பேச முடியாதப்பவும் ரொம்ப தொலைவுல இருக்குறவங்க கூட அப்பப்ப இருக்கியா போயிட்டியானு விசாரிச்சுப் பேச. இப்ப பாருங்க.. யாரும் நேர்ல பேசிக்குறதே இல்லே.. மாடியிலிருந்து என் பையன் டெக்ஸ்ட் பண்ணுறான் “சாப்பாடு ரெடியா”னு கேட்டு. வந்து சாப்பிட்டதும் ரூமுக்கு ஓடி விடியோ விளையாடுறான். ஹெட்செட் மாட்டிக்கிட்டா எதுவுமே காதுல விழாது.. அப்புறம் வாட்சப் யூட்யூப்.. இப்படியே போகுது அவன் வாழ்க்கை.. வெளியில எத்தனை மரங்கள்.. எத்தனை குருவிகள்.. எல்லாம் காணாம போச்சு.. இவங்க செல்போன்ல வாழுறதுக்காக இயற்கை தினம் சாகுதய்யா…”<br />
<br />
பார்வை விலக்காமல் குரு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். பேஷன்ட் தன்னை மறந்துப் பேசிக்கொண்டிருந்தான்.<br />
<br />
“என் மனைவியைப் பாருங்க.. அந்த நாள்ல எங்கம்மா பாட்டி எல்லாம் சமையல் செய்து அன்போட குழந்தை கணவருக்குப் பரிமாறி சாப்பிடுறதைப் பார்த்து சந்தோஷப்படுவாங்க.. எங்க கூட விளையாடுவாங்க.. சாப்பிடுறப்ப கலகலப்பா இருக்கும். கதை பேசுவோம்.. வம்படிப்போம்.. இப்ப பாருங்க.. யாரும் ஒண்ணா சாப்பிடுறதே இல்லை.. என் மனைவி பசங்களோட சாப்பிட்டு நினைவேயில்லை.. பாதி நேரம் ஆனந்த பவன் கோணங்கி பவன்லந்து டேக் அவுட், ஸ்விக்கி பக்கினு யாரோ டிலிவரி பண்றாங்க.. அரிசி கூட வக்கறதில்லே பல நேரம்.. வாட்சப் ஃபேஸ்புக் ப்லாக்னு கலாய்ப்பா.. இல்லின்னா டிவி சீரியல்.. குடும்ப உணர்வே யாருக்கும் இல்லாமப் போனதுக்கு இந்தக் கருவிகளும் எந்திரங்களும் தானே காரணம்..”<br />
<br />
“நீங்க சொல்றது ஒரு விதத்துல உண்மைனாலும் நாகரீகம் வளர்ச்சி இதெல்லாம் நமக்கு பல வசதிகளைக் கொடுக்குது இல்லையா மிஸ்டர் கொலகாரன்? இப்ப பாருங்க.. இணையம் வந்ததுலந்து நம்ம சமூக உணர்வுகள் எவ்வளவு விரிஞ்சிருக்கு? தொழில் நுட்பத்தினால எத்தனை முன்னேற்றங்கள். ஃபேஸ்புக் வாட்சப் வழியா புரட்சியெல்லாம் நடக்குதே? ஊழல் மந்திரிங்க மாட்டுறாங்க.. மதுரை மாணவர் அமெரிக்க எம்ஐடியில் இங்கிருந்தே படிக்க முடியுதே..” என்றான் குரு.<br />
<br />
“ஆ.. என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாடினான் பேஷன்ட். “ஐயா.. முன்னாலயும் படிச்சிட்டுத்தான் இருந்தாங்க. அப்ப இல்லாத மேதைங்களா? போஸ், சிவிராமன், தாகூர், ராஜகோபாலாச்சாரி, பாரதி, அம்பேத்கர், காந்தி.. இவங்கள்ளாம் என்ன பாமரங்களா? செல்போனும் டிவியும் ஐபேடும் இணையமும் இல்லாம இவங்க புரட்சி செய்யலியா? புதுமை செய்யலியா? தொழில் நுட்பத்துக்கு என்ன விலை கொடுக்குறோம்னு யாருக்குமே தெரிய மாட்டேங்குதே..” <br />
<br />
“அதுனால இதையெல்லாம் போட்டு உடைக்குறது சரினு நினைக்கறீங்களா?”<br />
<br />
“தெரியாது. ஆனா அந்த அளவுக்கு எந்திரங்கள் புழக்கத்தில் இருக்காதே? அதான்..”<br />
<br />
“இதனால எத்தனை சேதம்னு உங்களுக்குப் புரியுதா? அதுவுமில்லாம நீங்க உடைச்சிருக்குற பொருட்கள் பெரும்பாலும் அடுத்தவங்களுக்குச் சொந்தமானது. இது குற்றம்னு உங்களுக்குத் தோணலியா?”<br />
<br />
“கொன்றவன் கண்ணன்.. கொல்பவன் கண்ணன்..” பாடினான் பேஷன்ட். “எது சேதம் டாக்டர்? இன்னிக்கு மகன் மனைவி நட்பு என்னும் அத்தனை உணர்வுகளும் மின்னணுவில் சிக்கிச் சின்னாபின்னமாகுதே அதானே சேதம்? பசுமை வரண்டு பில்டிங்கா வளர்ந்திருக்கும் சிமென்ட் காடு.. இதுவா வளர்ச்சி? யாராவது முன்னோடியா வரணும் இல்லையா? நான் தொடங்கி வைக்கிறேன் அவ்வளவு தான்.. பாருங்க.. இன்னும் ஒரு மாசத்துல ஆறு மாசத்துல வருசத்துல எத்தனை பேர் என்னைப் போல வராங்கனு பாருங்க.. இது ஒரு இயக்கம். இந்த எந்திர மோகம் அழியும் வரை விடமாட்டோம். உலகம் முழுதும் எங்க இயக்கம் பரவும். வீடு வீடா வருவோம். கட்டிடம் கட்டிடமா தேடுவோம்.. மனித நேயம் மறுபடி மலரும் வரை எந்திரங்களைத் தேடி அழிப்போம்..”<br />
<br />
“மிஸ்டர் கொலகாரன்..” கால் சாக்ஸிலிருந்த ரேடியோ பித்தானை அழுத்தினான் குரு. “உங்களுக்கு ஓய்வு தேவை. அதுக்கு மருந்து தருகிறேன்”<br />
<br />
“எல்லாத்துக்கும் மருந்து மாத்திரை. இயற்கையை நேசிச்சப்ப இதெல்லாம் தேவையே இல்லாம இருந்துச்சே? தூங்க மாத்திரை.. விழிக்க மாத்திரை.. யாருக்கு வியாதி டாக்டர்? உங்களுக்கா எனக்கா? என்ன வேடிக்கை உலகம்யா இது? எந்திரங்கள் நம்மை எந்திரங்களாக்கிடுச்சே.. எழுந்திருங்க டாக்டர்.. எப்ப விழிக்கப் போறீங்க?” என்று சட்டென்று குருவின் தோள்களைக் குலுக்கிக் கையிலிருந்த ஐவாச்சை அவிழ்க்கப் போனான். “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”<br />
<br />
அதற்குள் உதவியாட்கள் வந்து பேஷன்டைக் கட்டுப்படுத்தி இழுத்துப் போனார்கள். சற்றே கலங்கியிருந்த குரு ஆயாசத்துடன் வெளியேறினான். உதவியாளரை அழைத்து, “நான் வீட்டுக்குப் போறேன். என் மிச்ச பேஷன்ட்களை இன்னொரு நாள் வரச்சொல்லுங்க”.<br />
<br />
அலுவலகத்திலிருந்து வெளியேறி மூலைக்கு நடந்தான். கீழிறங்கிய நகர்படியில் பிறருடன் சேர்ந்து மூன்று மாடிகள் இறங்கி நடந்தான். பார்க்கிங் கராஜ் வந்ததும் கார்ச்சாவியின் பித்தானை அழுத்தினான். ஏழாம் வரிசையில் இருந்த கார் மின்னி பீப் என்றது. எஞ்சின் தானே விழித்தெழுந்து தயாரானது. ஏசியை இயக்கியது. <br />
<br />
        <b>வீ</b>டு வந்த போது ஆறு மணி. காரை நிறுத்திவிட்டு பதினைந்தாவது மாடி ப்ளாட்டிற்கு விரைந்தான். ஐவாச்சின் ப்லூடூத் இணைப்பில் உந்தப்பட்டுத் திறந்த துடிப்பூட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான். சலனமறிந்த அறை விளக்குகள் தானாக எறிந்தன. மேலே மாட்டியிருந்த சான்டலியர் துடிவிளக்கு இள நீலத்தில் ஒளிர்ந்தது. விளக்குள் பொருந்தியிருந்த ஒலிபெருக்கி ஐவாச்சுடன் தானாகவே ப்லூடூத்தில் இணைந்து கூகில் டிரைவிலிருந்து பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.<br />
<br />
ஐவாச்சின் செயலி ‘900 காலொரி’ எனும் வரை யோகா ட்ரெட்மில் வெயிட்ஸ் என்று பயிற்சி செய்தான் குரு. குளியலறைக்குள் நுழைந்தான். சலனமறிந்த குளியலறை விளக்குகள் தானாக எரியத் தொடங்கின. மின்சாரத்தில் இயங்கிய பல்விளக்கியில் அவசரமாகச் சுத்தம் செய்துகொண்டான். முன்பதிவிலிருந்த கணக்கி இரண்டு நொடிகள் தயங்கி இயங்க, தானாக வெளிவந்த மிதமான சுடுநீர்ச்சாறலில் குளித்தான். வெளியே வந்து உடையணிந்து சமையலறைக் குளிர்பெட்டியிலிருந்து கின்வா பீன்ஸ் புலவ் எடுத்து மைக்ரோவேவில் சுடவைத்தான். ப்ரொடீன் ஷேக் ஒன்றை எடுத்துக் கோப்பையில் ஊற்றினான். சாப்பிட்டபின் ஐவாச்சின் ஹெல்த் செயலியைத் தட்டி 462 காலொரி என்றான். <br />
<br />
வரவேற்பறையின் சொகுசுத் துடி நாற்காலியில் சாய்ந்தான். மசாஜுக்கான பித்தான்களைத் தட்டினான். அரை மணி போல் சாய்ந்து டிவியில் சானல் புரட்டினான். மனைவியிடமிருந்து வாட்ஸப் செய்தி பார்த்தான். அம்மாவைக் கூகில் டுவோவில் கூப்பிட்டுப் பேசினான். <br />
<br />
ஒன்பது மணி. ஐவாச் “உறக்க நேரம்” என்றது. புதிதாக அறிமுகமான உப்பு கலந்த டூத்பேஸ்டில் மறுபடி பல்விளக்கி, புதிதாக அறிமுமான வேம்பும் கிராம்பும் கலந்த மவுத்வாஷில் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டான். படுக்கையில் விழுந்தான். <br />
<br />
அறை விளக்குகள் தாமாக அணைந்தன. ஐவாச் ப்லூடூத் இணைப்பில் படுக்கை தலைப்பக்க ஸ்பீக்கர்களில் இதமான மெல்லிசை ஒலிக்கத் தொடங்கியது. குருவுக்கு ஏனோ மாலையின் நினைவுகள் மீண்டன. “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”. புரண்டு படுத்தான்.<br />
<center>■ ■</center><!-- flooble Expandable Content box1 start --><br />
<hr align="left" noshade="noshade" size="1" width="20%" /><b>குறிப்பு</b> [<a title="திற/மூடு" id="exp1302183822_link" href="javascript: void(0);" onclick="toggle(this, 'exp1302183822');" style="text-decoration: none; color: #000000; ">-</a>]<div id="exp1302183822" style="padding: 3px;"><span style="line-height: 160%"><br />
இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1953ல் வெளியான 'The Murderer' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.<br />
<br />
இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2014/07/blog-post_16.html" target="_BLANK">ஆஸ்மா கிணறு</a> | (The one who waits)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2014/06/blog-post_14.html" target="_BLANK">சிவப்பு வட்டம்</a> | (The last night of the world)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2013/03/blog-post.html" target="_BLANK">பரணறையில் நன்னாரி மணம்</a> | (A scent of sarasparilla)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2012/08/blog-post.html" target="_BLANK">மனதிற்கினிய மேரி டீச்சர்</a> | (A story of love)<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2012/06/blog-post_07.html" target="_BLANK">மகிழ்ச்சி எந்திரம்</a> | (The happiness machine)<br />
</span></div><script language="javascript">toggle(getObject('exp1302183822_link'), 'exp1302183822');</script><!-- flooble Expandable Content box1 end --><br />
<br />
<br />
<br />
</span><br />
<br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60000628997095437152017-07-10T21:24:00.001-05:002017-07-10T21:24:24.401-05:00பாத்திரம்<span style="line-height: 180%;"> <br />
<br />
        <span style="font-size: 220%;"><b>“எ</B></SPAN>ன்னிடம் பணம் இல்லை” என்று அன்றைக்கு மட்டும் பத்தாவது முறையாகச் சொன்னாள் லிசா. <br />
<br />
“என்னம்மா இது.. அடுத்த வருசம் நான் காலேஜ் போக வேணாமா? ஸேட் பயிற்சிக்குத் தானே கேக்குறேன்? உன் புருஷன் டானி கிட்டே வாங்கிக் கொடேன்?” என்றாள் கேதரின்.<br />
<br />
டானி லிசாவின் இரண்டாவது கணவன் என்பதாலும், வரும் ஆகஸ்டில் தான் பதினெட்டு வயதைத் தொடும் காரணத்தாலும் டானியை அப்பா என்றழைக்க மறுத்திருந்தாள் கேதரின். மேலும் லிசாவின் திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாததால் டானியுடன் அதிகமாகப் பழகவும் இல்லை. “ஏம்மா.. உன் புருஷன் டானி பணம் தரமாட்டானா? கடனா வாங்கித்தரியா?”<br />
<br />
லிசா ஏற்கனவே டானியைக் கேட்டிருந்தாள். கேதரினைப் பற்றிய அத்தனை விவரங்களையும் அறிந்த டானி பணம் தர மறுத்துவிட்டான். “லிசா.. இதப்பாரு.. உன் பெண் கேட் படிக்குறதுக்காக பணம் கேக்கலே.. அவ காதலன் ப்ரையனுடன் பிறந்த நாள் கூத்தடிக்கக் கேக்குறா.. ஏற்கனவே இந்த எட்டு மாசத்துல ரெண்டு தடவை அப்பானு கையெழுத்து போட்டு அவளையும் ப்ரையனையும் ஜாமின்ல எடுத்திருக்கேன்.. இனி அவ பாடு.. அடுத்த முறை ஜாமினும் எடுக்க மாட்டேன்.. புத்தி சொல்லிவை.. பதினெட்டு வயசு கூட ஆவலே.. படிப்பு வரலேனா பர்கர்கிங்ல இறைச்சி புறட்டுலாம்ல? கூலியாவது கிடைக்கும்.. கவுரவத்தோட இருக்கலாமே? என்ன பொண்ணு வளத்திருக்கே?”.<br />
<br />
டானி அத்துடன் நிற்கவில்லை. “லிசா.. உனக்கே இத்தனை கடன் இருக்குதுனு என் கிட்டே சொல்லாமலே கல்யாணம் கட்டியிருக்கே.. க்ரெடிட் கார்ட்ல எட்டாயிரம் கடன் வச்சிருக்கியே? இத நான் எப்படி கட்டுவேன்? உன் செலவையெல்லாம் பாக்குறப்ப ஏன் கல்யாணம் கட்டினோம்னு தோணிடுச்சு.. காசுக்குத்தான் என் பின்னாடி சுத்தி என்னை வளைச்சுப் போட்டியா? வேலைக்குப் போவியோ என்ன செய்வியோ நீயேதான் அடைக்கணும்.. எங்கிட்டே ஒரு டாலர் கூட எதிர்பார்க்காதே” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.<br />
<br />
மகளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதாள் லிசா. “தினம் கலெக்சன் ஆசாமிங்க வராங்க கேட்.. இந்த சின்ன ஊர்ல எல்லாருக்கும் எல்லாம் தெரியுது இல்லே? காருக்குப் பணம் கட்டலேனு வந்த டீலர்காரன் நேத்து என்ன கேட்டான் தெரியுமா?” என்று கையைக் குவித்து வாயில் வைத்துக் காட்டினாள். “..செஞ்சா இந்த மாசம் தவணைப்பணம் கட்டுறதா சொன்னான்”. மறுபடி அழுதாள்.<br />
<br />
“ஏம்மா.. டானிக்கு இன்சூரன்சு இருக்குதுல்ல?” என்றாள் கேட் நிதானமாக.<br />
<center>*</CENTER>படுக்கையில் நெருக்கமாக அணைத்துக் கொண்டிருந்தார்கள்.<br />
<br />
“ப்ரை.. எனக்காக இதை நீ செய்தே ஆவணும்” என்றாள் கேட். <br />
<br />
“என்ன பேபி இது.. உங்கப்பனைக் கொலை செய்யச் சொல்றியே?” அதிராமல் கேட்டான் ப்ரையன்.<br />
<br />
“டானி எங்கப்பன் இல்லே, இடியட்! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே” சட்டென்று எழுந்த கேதரின் தணிந்து, “என் அம்மா நிறைய கடன்ல இருக்கு.. எனக்கும் பணம் வேணும்.. எங்கம்மா கிட்டே எல்லாம் பேசிட்டேன்..”<br />
<br />
ப்ரையன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கேதரின் தொடர்ந்தாள். “டானிக்கு இருநூறாயிரம் இன்சூரன்சு இருக்கு.. அவன் செத்தா எங்கம்மாவுக்கு வரும். இருவத்தஞ்சாயிரம் எங்கம்மாவுக்கு, மிச்சம் எல்லாம் நமக்கு.. எங்கம்மா உடனே ஒத்துகிட்டா. அவளுக்கென்ன.. பணம் கிடைக்குது இல்லே? டானி போனா வேறே ஜானி கிடைப்பான்”. அவன் முழங்காலருகே குனிந்தாள். “கொஞ்சம் யோசிச்சுப் பாரு ப்ரை.. நாம இங்கிருந்து ஓடிறலாம்.. உனக்கும் கேனடா ஓடிறனும்னு ஆசை.. கைல பணத்தோடு ஓடிறலாம்.. ஒன் செவன்டி பை தௌ.. உனக்கு எழுவத்தஞ்சு.. எனக்கு நூறு.. என்ன சொல்றே?”<br />
<br />
ப்ரையன் அசையாமல் “ரொம்ப ரிஸ்க் கேட்” என்றான். <br />
<br />
“உன்னால முடியும் ப்ரை.. லுக் அட் தி மனி..” ப்ரையன் கன்னத்தைத் தொட்ட கேதரின் “இதப் பாரு நீ ஒத்துழைச்சா நானும் ஒத்துழைப்பேன்” என்றாள்.<br />
<br />
“என்ன சொல்றே?”<br />
<br />
அவன் கைகளை இழுத்த கேதரின் சட்டென்று தரையில் குனிந்து நின்று தன் இடுப்பை இரண்டு கை விரல்களாலும் தட்டினாள். <br />
<br />
சிரித்தபடி எழுந்த பரையன் “ஸ்டுபிட்.. கொலை செய்வது பெரிசில்லே.. நம்ம மேலே பழி வராம தப்பிக்கணும்ல?” என்று கேதரினை இழுத்துத் தன் மடி மேல் அமர்த்தினான். “அடையாளம் தெரியாத துப்பாக்கி, நம்ம மேலே பழி வராதபடி சாட்சிகள், டானியைக் கூட்டி வர தூது.. எல்லாம் பத்துக்கு மேலே செலவாகுமே.. பணம் யார் கிட்டே இருக்கு?” <br />
<br />
“என்னை நம்பி நீ செலவு செய்.. வேணுமுன்னா என் பங்குலந்து பத்து எடுத்துக்க.. இல்லின்னா எங்கம்மாவுக்கு பதினஞ்சு கொடுத்தா போதும்”<br />
<br />
“நோ.. இந்த நம்பிக்கை விவகாரம் எல்லாம் வேண்டாம்.. இன்சூரன்சு பணத்துல எனக்கு நூறு.. உனக்கு எழுவத்தஞ்சு.. செலவெல்லாம் நான் பாத்துக்குறேன் சரியா?” என்றான் ப்ரையன்.<br />
<center>*</CENTER>ஒரு வாரத்தில் டானி இறந்தான். <br />
<br />
சேம்பர் சந்தையின் கழிவறையில் கழுத்திலும் இடுப்பிலும் சுடு காயங்களுடன் கிடந்ததாகப் போலீஸ் சொன்னதும் துடித்துப் போனாள் லிசா. அலறினாள். கதறினாள்.<br />
<center>*</CENTER>முப்பது நாட்களாகியும் இன்சூரன்சு ஆசாமி யாரும் வராததால் கேதரினை அழைத்துக் கொண்டு சேம்பர் சந்தையில் இன்சூரன்சு ஏஜன்ட் அலுவலகத்துக்குப் போனாள் லிசா.<br />
<br />
விவரங்கள் கேட்டுக்கொண்ட இன்சூரன்சு அலுவலக கண்ணாடி ஆசாமி, “கொஞ்சம் இருங்க லிசா” என்று கணினியில் தட்டினான். “இனசூரன்சு பணம்.. அகால மரண போனஸ் சேர்த்து இருநூத்துப்பத்தாயிரம்.. பட்டுவாடா ஆயிருச்சே.. போன வாரம்.. முப்பதாம் தேதி..” என்றான் மெள்ள.<br />
<br />
“இல்லியே.. எனக்கு அறிவிப்பு கூட வரலியே.. பணம் கட்டாயம் வரலே.. மறுபடி பாருங்க" பதைத்தாள் லிசா.<br />
<br />
“இருங்க” கண்ணாடி ஆசாமி இம்முறை நிறைய கணினி தட்டினான். “ஆ.. விளங்கிருச்சு” என்றான். “பாருங்க.. டானி இன்சூரன்சு பாலிசில உங்க பேரை சேர்க்கவே இல்லே.. அவரு உங்க பேர்ல உரிமையை மாத்தாம விட்டதால பழைய மனைவியே இன்சூரன்சு பணத்துக்கு… அவங்களுக்குத்தான் பணம் போயிருக்கு.. இதப் பாருங்க... கொலராடோ பேங்க் கணக்குல பணம் போயிருக்கு பாருங்க…”<br />
<center>* * *</CENTER></SPAN><br />
<br />
<hr align="left" noshade="noshade" size="1" width="80%" /><span style="font-size: 85%;">அசல் லிசா கேதரின் ப்ரையன் டானி கதை இன்னும் விவகாரமானது. விரும்பினால் ‘க்லீவ்லன்ட் யுலோமா’ என்று இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.<br />
</SPAN>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60946330668633256622016-04-30T05:30:00.000-05:002017-08-04T17:54:32.144-05:00பல்கொட்டிப் பேய்<center>11</center><span style="line-height: 180%;"> <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_28.html">10◄</a><br />
<br />
<br />
        <span style="font-size: 200%;"><b>மு</b></span>ப்பது வருட கொசுவர்த்தி எரிந்து தீர.. தற்சமயத்துக்கு வந்தேன். <br />
<br />
பல்கொட்டி இன்னும் இஸ்திரிப் பெட்டி மேலிருந்து தலைகீழாக என்னைக் கேமராப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. விளக்கை இயக்க எண்ணித் தவிர்த்தேன். குடும்பம், வட்டம் பற்றிச் சொல்லவில்லை.. பொதுவாகச் சொல்கிறேன்.. மூப்பை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் நான் பேய் பிசாசு பற்றி இத்தனை வருட அனுபவத்தில் உணர்ந்தது ஒன்று உண்டு என்றால் அது பேய் பிசாசு அறைக்குள் இருப்பது தெரிந்தால் உடனே விளைக்கை ஏற்றகூடாது என்பதே. விளக்கு வெளிச்சத்தில் நம் கண்ணுக்குப் பேய் தெரியாதே தவிர, பேய்க்கு நம்மை நன்றாகத் தெரியும். எதற்கு வீணாக பேய்க்கு உதவ வேண்டும்?<br />
<br />
என் கூட்டாளிகள் பற்றி நினைத்தேன். பிரம்மபுத்ரா நதிக்கரை பக்கம் ஏதோ ஒரு இடத்தில் புத்தபிட்சுக்களுடன் இருப்பதாக ஒரு முறை கேள்விப்பட்டதைத் தவிர ரகுவைப் பற்றி அதிகம் தெரியாது. அதனால் அவனைக் கூப்பிட முடியாது. ரமேஷ் சில வருடங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்ததாகவும் அவனை மாம்பலம் அகோபில மடம் பக்கம் சிலர் பேயாகப் பார்த்ததாகவும் கேள்விப்பட்டேன். ஒருவேளை அவன் பல்கொட்டியாக இருந்து இந்த சமயத்தில் நட்புக்காக உதவலாம் என்றாலும் எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் என்ன செய்ய? அவனையும் தவிர்த்தேன். ஆக, இருப்பது அங்கதன் மட்டும். அவனைத்தான் கூப்பிட வேண்டும்.<br />
<br />
ஸ்ரீராம் இப்போது மைசூர் பக்கம் அயோக்கியப் பரதேசி மால்யாவின் பழைய பீர் கம்பெனி ஒன்றை வாங்கி சாராய விருத்தியில் இறங்கி அமோகமாகக் கொழிக்கிறான். அதைத் தவிர உபரி வியாபாரங்கள் செய்வதாகவும் சொல்லியிருக்கிறான். இப்ப கூப்பிட்டா போதையில் இருப்பானோ? இருந்தாலும் போனை எடுப்பானா தெரியாதே? நான் மும்பை வந்ததே அவனுக்குத் தெரியாது.. இப்போ பல்கொட்டி விவரத்தை வேறே சொல்லணுமா? சொல்லித்தான் ஆகவேண்டும்.<br />
<br />
பல்கொட்டியைப் பார்த்தேன். திறந்த வாயில் குட்டித்தலை இல்லாமல் பல்கொட்டி களையே போய்விட்டது போல் தோன்றியது. என்ன செய்வது? பேச்சு கொடுக்கலாமா? 'என்ன சௌக்கியமா? முப்பது வருஷமிருக்குமா பாத்து?' என்று ஏதாவது கேட்டு வைப்போமா? நினைக்கும் போது பல்கொட்டியின் கை பேசியது. அதாவது கைவாய். "வந்திருக்கேன்.. தலையை வாங்க வந்திருக்கேன்.." என்றது.<br />
<br />
'என் தலையையா குட்டித் தலையையா?' என்று கேட்கத் தீர்மானித்து தவிர்த்தேன், குட்டித் தலையை வாங்க வந்திருந்தால் .. அப்புறம் என் தலையையும் சேர்த்துக் கேட்டு.. நாமாக சூன்யம் வைத்துக் கொள்வானேன்? <br />
<br />
"ஒ..ஒ.. ஒரு போன் பண்ணிக்கட்டுமா?" என்றேன்.<br />
<br />
ஸ்ரீராமை அழைத்தேன். ஐந்தாவது தடவை கூப்பிட்ட போது போனை எடுத்து "எவண்டா அது?" என்றான். நான் என்று சொல்லியும் நம்பவில்லை. "பொறம்போக்கு நாயே.. சேல்ஸ் கால் பண்றதுக்கு வரைமுறை கிடையாதா? குடும்பத்துல ஒருத்தன்னு சொல்லிட்டு ராத்திரி மூணு மணிக்கு போன் பண்றியே? எருமைக்குப் பொறந்தவனே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா? போனை வைடா பன்னி". பயந்து வைத்து விட்டேன். எனக்கும் சேல்ஸ் தான் தொழில் என்பதால் பழக்க தோஷம் வேறே. <br />
<br />
மறுபடி அழைத்தேன். அவன் அன்பைப் பொழியுமுன் தடுத்து நிலைமையைச் சொன்னேன். சில நிமிடங்கள் மௌனம் காத்துவிட்டு சிரித்தான். "கரெக்டா வந்துடுச்சேடா! நியாயமா பாத்தா நீயும் ரகுவும் தான் கவலைப் படணும். எனக்கென்ன.. பல்கொட்டி முடியாச்சுனு இருக்கலாம்.. ஏற்கனவே உங்களுக்கு உதவி பண்ணி உயிர் பிச்சை போட்டாச்சு..". என் வாழ்நாளில் ஸ்ரீராம் இதை எழுநூற்று நாற்பத்து இரண்டாவது முறையாகச் சொன்னாலும் முதல் தடவை போல் ஒலித்தது. அது ஸ்ரீராம் சுபாவம். தொடர்ந்தான். "கவலைப்படாதே.. எல்லாமே டீல் மேகிங்ல இருக்கு.. குட்டித்தலை உன்கிட்ட இல்லே.. கொண்டு வந்து தர பத்து வாரம் ஆகும்னு சொல்லு.. அது வரைக்கும் சும்மா வந்து தொந்தரவு தரக் கூடாதுன்னு சொல்லு."<br />
<br />
"இப்பவே வேணும்" என்ற கர்ஜனை கேட்டு போனைத் தவற விட்டேன்.<br />
<br />
பல்கொட்டியின் கைவாய் நீ...ண்டு என் காதருகே வந்து கர்ஜித்தது. "இப்பவே.. வேணும்னு சொல்லு ". அந்தரத்தில் தொங்கிய அதன் மற்ற கை, கீழே கிடந்த போனை எடுத்துக் கொடுத்தது.<br />
<br />
ஸ்ரீராம் போனில் அதட்டியது கேட்டது. "ஏய்.. பல்கொட்டிப் புடுங்கி.. உனக்கு தில் இருந்தா எங்கிட்ட வா. எங்கண்ணனை விட்டுரு. நான்தானே உன் பல்தலையைப் பிடுங்கினேன்? நியாயமா பார்த்தா நீதான் எனக்கு நஷ்ட ஈடு தரணும். எத்தனை யுகமா பல் தேய்க்காம நாறிக் கிடந்த பல்லைத் தொட்டு என் கையெல்லாம் இன்னும் நாறுது.. ரொம்ப மிரட்டுனா தலை கிடைக்கவே கிடைக்காது.. தலையில்லாத வாயா நீ சுத்திட்டிருக்க வேண்டியது தான்.. தெரிதா?". போனை வைத்து விட்டான்.<br />
<br />
எனக்கு சங்கடமானது. பொறுமையா இருந்த பேயை உசுப்பி விட்டானே லட்சுமணன்? இப்ப நான் இல்லே மாட்டிக்கணும்? பல்கொட்டியைப் பார்த்து வழிந்தேன்.. "சின்னப் பையன் தெரியாம சொல்லிட்டான்.. தூக்கக் கலக்கம் இல்லியா? ஹிஹி.. வந்து.. இந்த தலை இருக்கே தலை.."<br />
<br />
அடுத்த கணம் பல்கொட்டி செய்ததை நான் எந்தப் பிறவியிலும் எதிர்பார்த்திருக்க முடியாது.<br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_28.html">10◄</a> <a href="https://moonramsuzhi.blogspot.com/2017/08/blog-post.html"> ►12</a><br />
<br />
</span><br />
<br />
அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37850536369200986472016-04-28T06:30:00.000-05:002017-08-04T10:39:33.457-05:00பல்கொட்டிப் பேய்<center>10</center><span style="line-height: 180%;"> <br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_27.html">9◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>ர</b></span>குவைத் தொடர்ந்து ரமேஷும் நானும் இழுக்கப்பட்டோம். பூசாரி சொன்னதையெல்லாம் ஸ்ரீராம் நினைவில் வைத்திருக்க வேண்டுமே! "சின்னத்தம்பி.. இப்ப நீதான் ஹீரோ. ரஜினிகாந்த். தெரிதா?" என்று பூசாரி அவனை உசுப்பேற்றியிருந்தார். ஸ்டைல் பண்ணுகிறேன் பேர்வழி என்று இவன் சொதப்பாமல் இருக்கணுமே!<br />
<br />
எங்கள் வீட்டு வாசல் கதவைத் தாண்டியதும் மற்ற மூவரில் எவருமே என் கண்களுக்குத் தெரியவில்லை. "தம்பிங்களா.. பேய் ஒருத்தரை ஒருத்தர் காட்டாது.. மயக்கி மறைச்சுறும். ஆனா நீங்க பேசுறத ஒருத்தரை ஒருத்தர் கேக்க முடியும்.. மறந்துறாதீங்க. நான் உங்களை பாத்துட்டே இருப்பேன். என் குரலை நீங்க கேட்க முடியும்.. எப்படியாவது சமாளிச்சு பல்கொட்டியை ஏமாத்திறலாம்.. பயந்துறாதீங்க. நான் சொன்னதையெல்லாம் மறந்துறாதீங்க.." என்று எங்கள் பின்னால் அவர் இரைவது கேட்டது.<br />
<br />
'இத்தனை நேரம் பேய் என் முகத்தருகே வந்திருக்கணுமே? வரலியே?' என்று எண்ணிக்கொண்டிருந்த போதே பல்கொட்டி என் முகத்தருகே வந்து உற்றுப் பார்த்தது.. என்னைச் சுற்றியது.. "தம்பி.. எச்சில் அடையாளம் இருக்குதானு பாத்துக்குது!".<br />
<br />
"ஹ்ஹா!" என்ற பல்கொட்டியின் ஆவேசம் எங்களை பயமுறுத்தியது. கயிற்றை அறுக்கப் பார்த்து முடியாமல் ஜிவ்வென்று உயரே ஏறியது. "தம்பிங்களா.. கயிறு முனையில அம்மனுக்கு வெட்டின ஆட்டு ரத்தம் கொட்டி கயிறு முச்சும் பூசியிருக்கேன்.. பல்கொட்டியால வெட்ட முடியாது. நீங்க கயித்தை மட்டும் விட்டுராதிங்க"<br />
<br />
"ரொம்ப ஸ்ரேஷ்டம்.. துரை, உங்கம்மா பக்தியா துளசிமாடம் எல்லாம் வச்சா ஆணியடிச்சு மாமிசம் தடவிட்டாரு தணிகாசலம்.. என்ன்ன்னவோ நாறுதேனு பாத்தேன்.. ரகு வேறே கன்னாபின்னானு சாப்பிட்டிருந்தானா, சரியா சொல்ல முடியலே.. ஆட்டு ரத்தமா? சரிதான்.. துளசியும் ஆட்டு ரத்தமும் கலந்து.. பலே பலே""<br />
<br />
"சும்மா இருடா ரமேஷ்.." என்றான் ரகு.<br />
<br />
திடீரென்று எங்களைக் கட்டியிருந்த கயிறு தாறுமாறாக ஆடியது. "தம்பிங்களா.. கயிற விட்டுறாதீங்க. பல்கொட்டி வெள்ளாடத் தொடங்கிடுச்சு.." பூசாரியின் குரல்.<br />
<br />
"ஸ்ரீராம்! பிடியை விட்டுறாதே!" என்று அலறினேன். "ரகு.. அவனைப் பாத்துக்கடா"<br />
<br />
"எங்கடா? அவன் என் கண்ணுக்குத் தெரிஞ்சா தானே?"<br />
<br />
கயிறு ஆவேசமாக ஆடி எங்களை சுழற்றியடித்தது. "மந்திரக்கயித்த வெட்ட முடியாம பேய் உங்களை தூக்கியாட்டி வெளில கொணாரப் பாக்குது.. பேயாத்தா சொன்னாபுலயே"<br />
<br />
"ஸ்ரீராம்.. பிடிச்சுக்கடா" என்றேன் மறுபடி. <br />
<br />
"ஐயோ! சின்னதம்பி பிடியை விட்டுருச்சுபா!" என்று பூசாரி கூவுவது கேட்டது.<br />
<br />
"ஸ்ரீராம்!" என்று அலறினோம். அவனிடமிருந்து பதில் இல்லை. விர்ரென்று பல்கொட்டி எங்களைச் சுற்றி வந்தது. அடுத்த நிமிடங்களில் நாங்களும் எங்களை பிடிப்பைத் தளர்த்தினோம். பூசாரி சொன்னது போலவே பல்கொட்டி தன் வாயருகே இருந்த புகைக் கயிற்றினால் எங்களைக் கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டது.<br />
<br />
""வவ்வாலாயாச்சுரா.. வாழ்க்கைல வவ்வாலா மாறுவேன்னு நினைக்கவேயில்லே"<br />
<br />
"சும்மா இருடா ரமேஷ்.." என்றேன். "ஸ்ரீராம்!" என்று கூவினேன். பதிலே இல்லை. எனக்குப் பயம் வந்தது.<br />
<br />
பூசாரி சொன்னது போல் பல்கொட்டி உப்பென்று ஊதிய வேகத்தில் அதன் பற்கள் அத்தனையும், வாய் நடுவில் இருந்த குட்டித் தலையைத் தவிர, கீழே விழுந்து தெறித்து எங்களைச் சுற்றிப் பறந்தன. ஊதிய வேகத்தில் எங்கள் தலைமுடி உதிர்ந்தது. உச்சந்தலையில் கொசு கடிப்பது போல் ஒரு உணர்வு. ஏதும் செய்ய இயலாத நிலையில் தலையைத் தடவிக்கொண்டேன். இனி ரத்தம் சொட்டத் தொடங்கிவிடும். எரிச்சலோடு கைகளைக் காற்றில் துழாவிப் பேயைப் பிடிக்கப் பார்த்தேன்.. பேயின் கழுத்தை நெறித்து என்ன பலன் என்றெல்லாம் தோன்றவில்லை. பயத்தில் எங்கள் இஷ்டத்துக்கு என்னென்னவோ செய்தோம் என்பது பூசாரியின் ரன்னிங் கமென்டரியினால் புரிந்து கொண்டோம்.<br />
<br />
"ஸ்ரீராமை காவு குடுத்தப்புறம் தானேடா நம்பளைப் பிடிக்கும்னான் பூசாரி? அதுக்குள்ளே என் தலைல ஓட்டை போட்டுருச்சேடா" என்று அலறினான் ரமேஷ். என் தலையைத் தடவிக்கொண்டேன். நிச்சயம் ஈரமாக இருந்தது. <br />
<br />
"ஸ்ரீராம்!" என்று நான் கூவ.. தொடர்ந்து மற்றவரும் கூவ.. அவனிடமிருந்து பதிலே இல்லை. பூசாரி சொன்னபடி பல்கொட்டி எங்களைச் சுற்றி ஆடி வந்தது. திறந்த வாயில் சிறிய தலை இன்னும் கோரமாகத் தெரிந்தது. ஒவ்வொரு சுற்றிலும் அதன் வாயில் தெரிந்த தலையைப் பார்த்து திடுக்கிட்டேன். ஸ்ரீராம் நிச்சயம் மயங்கி இருக்க வேண்டும். ஒரு வேளை.. "தணிகாசலம்!" என்று கூவினேன். "தம்பி எப்படி இருக்கான் பாருங்க.. பாத்து சொல்லுங்க..!"<br />
<br />
"ரகு தம்பி மயங்கிருச்சு.. ரமேஷ் தம்பி செத்துருச்சா மயங்கிருச்சா தெரியலே"<br />
<br />
"யோவ் குடிகாரப் பூசாரி.. நான் இன்னும் சாவலயா.. நான் மட்டும் செத்தா மவனே உன் மேலே பேயாட்டம் ஆடறேனா இல்லையா பாரு"<br />
<br />
"தணிகாசலம்.. என் தம்பியைச் சொன்னேன்.. ஸ்ரீராமைப் பாருங்க! ரமேஷ், சும்மா இருடா! நாம செத்தா எல்லாருமே சேந்து பல்கொட்டியை ஒரு வழி பண்ணிறலாம்.. இப்போதைக்கு பூசாரி திட்டப்படி நடப்போம்.."<br />
<br />
திடீரென்று பல்கொட்டி உக்கிரமானது.. புஸ் புஸ் என்று தீப்பொறி.. கோபமும் ஆத்திரமும் பொங்க எங்கள் மீது பாய்ந்து பாய்ந்து விலகியது.. எங்களைச் சுற்றி வெப்பம்.. புகைக்கயிறு எங்களை இறுக்கத் தொடங்கியது.. <br />
<br />
"ஆகா! பலே பலே! சூப்பருபா" என்ற பூசாரியின் குரல் கேட்டது..<br />
<br />
"யோவ்.. பேய் எங்க கழுத்தை இறுக்கி தணல்ல போடப் போவுது.. நீ ரஜினிகாந்த் படமாட்டம் விசிலடிக்கிறியா?"<br />
<br />
"ஆமா தம்பிங்களா.. சின்னத்தம்பி சூப்பர் ஸ்டாரு. பல்கொட்டி இந்தப்ப சுத்தி வந்துச்சா.. தம்பி தொங்கிட்டிருந்தபடியே உல்டாவா ஒரு பல்டியடிச்சு காலால பல்கொட்டி வாயில இருந்த குட்டித் தலையை உதைச்சு தட்டி விட்டிருச்சு.. பறந்து விழப்போன தலையை அலாக்கா எம்பிப் பிடிச்சிருச்சு.. சூப்பர்"<br />
<br />
எனக்குப் பெருமையாக இருந்தது.. பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை. இனி பூசாரி சொன்ன எதையும் ஸ்ரீராம் மறக்காமல் செய்தால் சரி. தம்பியுடையான் பேய்க்கு அஞ்சான்.<br />
<br />
பல்கொட்டி ஆவேசமாக ஸ்ரீராமையே சுற்றி வருவது பூசாரி சொல்லச் சொல்லப் புரிந்தது. "பயந்துராத ஸ்ரீராம், தலையை மட்டும் திருப்பிக் குடுத்துடாத.. ஏறக்குறைய விடியத் தொடங்கிடுச்சுடா.." என்ற ரகுவின் குரலைக் கேட்டதும் நிம்மதியானது. "ரகு.. நீ பூட்டகேஸ்னு நினைச்சுட்டேன்.. சாரிடா" என்றேன்.<br />
<br />
ஒரு மணி நேரம் போல் எங்களைக் கொடுமைப்படுத்திய பேய் விடியலில் சட்டென்று காணாமல் போனது. கீழே விழுந்த எங்களை பூசாரி ஓடி வந்து மறுபடி ஆட்டு ரத்தக் கயிற்றினால் கட்டி வீட்டுக்குள் இழுத்து வந்தார். எங்கள் தலைக்காயங்களைத் துடைத்து விபூதி பூசினார். எல்லோரும் ஸ்ரீராமைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினோம். நன்றி சொன்னோம்.<br />
<br />
"தணிகாசலம்.. நீங்க சொன்னபடி பல்கொட்டி என்னைச் சுத்தி சுத்தி வந்தப்போ தலையை எடுக்கத் தாவினேன்.. ஆனா அது விலகி விலகி சிரிக்குது.. அதான் அடுத்த தடவை வந்தப்ப ரஜினி ஸ்டைல்ல ஒரு பல்டி அடிச்சு தலையை தூக்கியடிச்சு இடது கையால ஒரு கேச் பிடிச்சேன்.."<br />
<br />
"ரொம்ப ஓவரா போவாதடா டேய்.. தலையை பத்திரமா வச்சிருக்க இல்லே?"<br />
<br />
"இதோ" என்று காட்டினான். ஒரு பெரிய கோலி உருண்டை போல் வழவழப்பாக இருந்த எலும்பு உருண்டையின் நடுவே கரும்பொட்டு. இப்போது பார்ப்பதற்கு சாதுவாக இருந்தது. பூசாரி அதை வாங்கிக் கொண்டார். "அம்மனுக்கு மாலை கட்டிப் போட்டுர்றேன் தம்பிங்களா. பல்கொட்டி பயமே வராது இனி.. சின்னத்தம்பி.. நான் சொன்னபடி பேயாண்ட கேட்டில்ல?"<br />
<br />
"தலையைக் குடு.. உன்னை மட்டும் விட்டுடறேனனு சொல்லிச்சு பேய் மொதல்ல. தலையைக் குடுக்காட்டி உங்க அத்தனை பேரையும் ரத்தம் உறிஞ்சு சாவடிக்குறதா பயமுறுத்திச்சு.. சுத்தி சுத்தி வந்து அதட்டலும் மிரட்டலும்.. நான் எதுக்குமே பதில் சொல்லாம அமைதியா இருந்தேன்.. கடைசில பேய் கெஞ்ச ஆரம்பிச்சு.... தலையை குடுத்துரு அத்தனை பேரையும் விட்டுறதா சொல்லிச்சு.. அப்பத்தான் பூசாரி சொன்னாப்புல பேய் கிட்டே சொன்னேன்.."<br />
<br />
"என்ன?"<br />
<br />
"முப்பது வருஷம் கழிச்சு வானு"<br />
<br />
"அடப்பாவி.. டேய்.. தணிகாசலம் முன்னூறுனு இல்லே சொன்னாரு?"<br />
<br />
"ஆமா தம்பி.. நான் கூட முன்னூறு மில்லி மாதிரினு எத்தினி தபா சொன்னேன்?"<br />
<br />
"தெரிலடா.. பயத்துலயும் அவசரத்துலயும்.." என்ற ஸ்ரீராமை முறைத்தோம். பூசாரி சொன்ன முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டான். முன்னூறில் ஒரு சைபர் குறைத்துவிட்டான் "ஏண்டா.. இதென்ன உன் கணக்கு பரீட்சையா? முப்பது வாங்க? வாழ்க்கை பரீட்சைடா" என்றான் ரகு.<br />
<br />
"முப்பது வருசத்துல திரும்பி வந்தா என்ன பண்றது?"<br />
<br />
"போனாப் போகுது" என்றார் பூசாரி. "சின்னத்தம்பியை கோவிக்காதீங்க.. அதாலதானே இன்னிக்கு பிழைச்சு வந்தீங்க.." என்ற பூசாரி பேச்சைக் கேட்டு அடங்கினோம். அவர் தொடர்ந்தார். "தம்பிங்களா..இன்னும் முப்பது வருசத்துல பல்கொட்டியே காணாமப் போயிறலாம்.. அப்படி இல்லின்னா கூட உங்க அத்தினி பேருக்கும் கல்யாணம் கட்டிக் குடும்பமாயிரும்.. பொஞ்சாதி பிள்ளைக் குட்டிங்க தொல்லையைப் பாத்து.. இருக்குற பேய் பிசாசுங்களே போதும்னு பல்கொட்டி வராமலே இருந்துரும்"<br />
<br />
"கண்டிப்பா வரும்" என்றான் ரகு. "நீ வேணா பாரு துரை. முப்பது வருஷம் கழிச்சு தனியா இருக்குறப்ப ஒரு நாள் ராத்திரி நிச்சயம் வரும்".<br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_27.html">9◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/05/blog-post.html">►11</a> <br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48683069486751946022016-04-27T06:30:00.000-05:002017-08-04T10:48:03.853-05:00பல்கொட்டிப் பேய்<center>9</center><span style="line-height: 180%;"> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMypTfORsRbZqqYaiTOkwD-m3Cgv2IjzUAmlkCtLfVF1cZI06KTsdSv5cEJbnoTsGbNHvZ4thbCyevis4XEwzU4CMsxDI_1HETvbiUoavUGCRutqBXoYvmEliMylqxZkgQLtHdF7zDP5Y4/s1600/PK8q.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMypTfORsRbZqqYaiTOkwD-m3Cgv2IjzUAmlkCtLfVF1cZI06KTsdSv5cEJbnoTsGbNHvZ4thbCyevis4XEwzU4CMsxDI_1HETvbiUoavUGCRutqBXoYvmEliMylqxZkgQLtHdF7zDP5Y4/s400/PK8q.png" /></a></div><br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_26.html">8◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>"அ</b></span>தில்லே தம்பி.. பல்கொட்டி ஆளுங்களைப் பிடிக்குற விதம் எப்படினா.. காவுங்களை மொதல்ல முடியால மூடும்.. ராவுல தான் வருமா.. காவுங்க தூங்கிட்டிருந்தா எதுவும் தெரியாது.. போர்வைனு நெனச்சுட்டு சொவமா முடியை இழுத்துப் போர்த்துத் தூங்கிடுவாங்க.. முடியத் தொட்டா எச்சிலாயிரும்" <br />
<br />
"தணிகாசலம்" என்று அதிர்ந்தேன்.. "என் கையைப் பாருங்க" என்றேன். மேலும் சில முடி நாற்றுகள் தோன்றியிருந்தன. "இதானா எச்சில்?"<br />
<br />
ரகுவுக்கு கழுத்திலும் ரமேஷுக்கு பாதங்களிலும் பரவியிருந்தன முடிக்கீற்றுகள். "பாருங்க தணிகாசலம்.. மூணு பேரும் எச்சிலா?"<br />
<br />
"ஆமா தம்பி.. அட.. பேயாத்தா உண்மையைத்தான் சொல்லியிருக்குது.. டுபாகூர்னு நெனச்சுனேன்பா.. பாவம் பேயாத்தா"<br />
<br />
"யோவ்.. நாங்கதான் பாவம்.." என்றான் ரமேஷ்.<br />
<br />
"அப்போ சின்னத்தம்பி போணிப் பொணம்" என்ற தணிகாசலம் அவரசப் படுத்தினார். "டயமில்லே.. அந்தரத்துல கயிறு தொங்கிருச்சுனா எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்.. காவு வாங்க பல் கொட்டி தயாராயிடுச்சுனு அர்த்தம்"<br />
<br />
"அப்பாடா.. ஸ்கூலுக்கே போவேணாம் இனிமே.. அருஞ்சொற்பொருள் எதுவும் அறிய வேணாம்.. ஒழிஞ்சுது.. நிமமதி.. ஸ்கூலை எவன் கண்டுபிடிச்சான்.. சனியன்.."<br />
<br />
"உடனே ஆரம்பிச்சுடாதடா ஸ்ரீராம்" என்று அவனை அடக்கினேன். "தணிகாசலம்.. என் தம்பியை அனுப்ப முடியாது.. நான் வேணும்னா போறேன்.. இல்லே எல்லாருமே ஒண்ணா.." என்ற என்னை நிறுத்திய ரகு, ஜன்னல் வழியாக வாசலைக் காட்டினான்.<br />
<br />
தெருவிளக்கின் சோம்பலான வெளிச்சத்தில் எங்கள் வீட்டு வாசல் முழுதும் புகை மண்டலம் போல்.. துளசிமாடத்தின் மேலே பல்கொட்டியின் வாய் மட்டும் சினிமாஸ்கோப் போல் விரிந்து, அடுக்கி வைத்த எலும்புகள் போல் பற்கள் தெரிந்தன.. வாயின் நடுவே ஒரு குட்டித் தலை. எங்களையே உற்றுப் பார்க்கும் கண்களுடனும் திறந்த வாயுடனும்.. நாங்கள் முன்பு பார்த்த அதே தலை.. வாயருகே அந்தரத்தில் போல் நாலு புகைக் கயிறுகள் தொங்குவது துல்லியமாகத் தெரிந்தது. <br />
<br />
பேயின் தயார் நிலை புரிந்து உறைந்தோம். எனில் அது மிகையல்ல.<br />
<br />
"கவனமா கேளுங்க தம்பி.. இனி நேரமில்லே.. ஏற்கனவே முடி போத்துனதால பல்கொட்டி உங்களை வரிசையா இஸ்த்துக்கும்.. போணியை போவ விடுங்க.. எல்லாரும் சொல்றாப்புல நடக்கணும்.. சொல்ற பேச்சு கேட்டிங்கனா வெளில் வந்துறலாம்.. சின்னத்தம்பி.. பயப்படாத.. எல்லாரும் கவனமா கேளுங்க, சரியா?". <br />
<br />
பல் கொட்டியிடமிருந்து தப்பிக்கும் விவரம் சொன்னார் தணிகாசலம். <br />
<br />
"முடியாது, அவன் என் தம்பி" என்றேன் ஆறாமல். <br />
<br />
"நாம எல்லாருமே அவனுக்கு அண்ணாடா" என்று சிவாஜிகணேசன் டயலாக் விட்ட ரகு, என் தோளைத் தட்டினான். "ஆனா.. இப்ப பூசாரி சொல்றதைக் கேட்டாகணுமேஏஏ?"<br />
<br />
தணிகாசலம் துரிதமாக ஸ்ரீராமைக் கயிற்றினால் சுற்றி மிச்சமிருந்த நீளத்தில்.. "ஒரே ரத்தம் பக்கத்துல நிக்கக் கூடாதுபா" என்று என்னை ஒதுக்கினார்... ரகு, ரமேஷ், நான் என்று வரிசையாக ஒவ்வொருவராகச் சுற்றி எஞ்சியிருந்த நீளத்தை... "இரும்பு இருக்குதாப்பா உங்கூட்டுல.. எங்கே.. அவசரத்துக்கு ஒரு இரும்புத்தடி வக்க மாட்டீங்களா ஐருட்டுங்கள்ள?" எரிச்சல் பட்டார்.. அருகிலிருந்த எங்கள் அம்மாவின் சைக்கிள் பாரில் சுற்றி, இழுத்துப் பிடித்துக் கொண்டார். <br />
<br />
"இழுக்குதுடா" என்று அலறினான் ஸ்ரீராம். அவன் வெளியில் இழுக்கப்படுவது தெரிந்து பதைத்தேன். "ரகு அவனைப் பாத்துக்கடா" என்ற என் கண்கள் கலங்கிவிட்டன. <br />
<br />
"மறந்துறாத தம்பி.. சொன்னபடி செய்யு.." நினைவூட்டினார் தணிகாசலம்.. சில நொடிகளில் எங்கள் கண்ணெதிரே புகையில் மறைந்து போனான் ஸ்ரீராம்.<br />
<br />
ஸ்ரீராமைத் தொலைத்த அதிர்ச்சியில் நான்.. ரகு நகரத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை. <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_26.html">8◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_28.html">►10</a><br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22260871620037502302016-04-26T06:16:00.000-05:002017-08-04T10:38:19.838-05:00பல்கொட்டிப் பேய்<center>8</center><span style="line-height: 180%;"> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXhgD6DsWZe8808eGm9_QaobUPtKRTrbS_Eu_1zYoHa1tg3E_Rr-eurDJHdLwJfrBpfUqSntqD97bfJXtsNPNBZJtrsOWuD0vFOJmBScT8YWTtD5rbccsVEP39IqmKydHB3_3UzwgaXMKh/s1600/PK7.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXhgD6DsWZe8808eGm9_QaobUPtKRTrbS_Eu_1zYoHa1tg3E_Rr-eurDJHdLwJfrBpfUqSntqD97bfJXtsNPNBZJtrsOWuD0vFOJmBScT8YWTtD5rbccsVEP39IqmKydHB3_3UzwgaXMKh/s640/PK7.png" /></a></div><br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_25.html">7◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>க</b></span>தவைத் தாளிட முடியாமல் கயிறு தடுத்தது. "கயிறு இருக்குற வரைக்கும் நாம பிழைச்சுக்கலாம் தம்பிங்களா" என்றார் தணிகாசலம். "நல்ல வேளை.. கதவைத் தொறந்து என்னை உள்ளே விட்டீங்க.. இல்லைன்னா இன்னிக்கு உங்க அத்தினி பேர் கதியும் அதோகதி தான்"<br />
<br />
"இதை சொல்லத்தான் ஓடி வந்தீங்களா? எங்க கதி அதோகதின்றதுல அப்படி ஒரு சந்தோசமா?" என்றான் ரமேஷ்.<br />
<br />
"இல்ல தம்பி.. குடிச்சுட்டு படுத்திருந்தனா? திடீர்னு.. எந்திரிடா வந்திருச்சு.. எந்திரிடா வந்திருச்சுனு ஒரு குரல்.. ஏதோ எம்பொஞ்சாதி அதுக்கு ஒண்ணுக்கு வந்திருச்சு, எந்திரிக்க சொல்லுதுனு நான் கண்டுக்காம படுத்தினுருந்தனா.. தடால்னு எம்மூஞ்சில ஒரு அறை விட்டுச்சு.."<br />
<br />
"யாரு, பொஞ்சாதியா?"<br />
<br />
"சேசே.. எம்பொஞ்சாதி செருப்பெடுத்து வீசுமே தவிர என் மேலே கை வக்காதுபா.. தங்கம். நான் சொல்றது எங்க பேயாத்தாபா"<br />
<br />
அருகிலிருந்த மர நாற்காலிகளை வேகமாக இழுத்துக் கதவின் பின்னே பாரமாக அடுக்கிய ரகுவும் நானும் "தணிகாசலம்.. விஷயத்தைச் சொல்லுங்க" என்றோம்.<br />
<br />
"பேயாத்தா என்னை எயுப்பி உங்களைக் காப்பாத்தச் சொல்லிச்சுபா.. அதுக்கு உங்க வீடுனா ரொம்ப இஷ்டம்.. உங்கம்மாவும் தங்கச்சிங்களும் வெள்ளிக்கெயமை மாவெளக்கு போடுவாங்கள்ள? அத்த துன்னது துர்கையம்மன்னு உங்கூட்டுல நெனச்சினுகிறாங்க.. துன்னதெல்லாம் எங்க பேயாத்தாபா! இப்பதான் சொல்லுது.. அதனால உங்களை காப்பாத்த சொல்லி ஐடியா குடுத்து என்னை அனுப்பிச்சு.. ஒரு பேயைப் பத்தி இன்னொரு பேய்க்குத்தானே தெரியும்?"<br />
<br />
"கரெக்டு.. பேயின் கால் பேயறியும்னு ஔவையாரே சொல்லியிருக்காங்க" என்றான் ஸ்ரீராம்.<br />
<br />
"பேயின் பல் பேயறியுமா? இது பல்கொட்டியாச்சே?" கடித்தான் ரமேஷ்.<br />
<br />
"சொம்மா இருங்கப்பா. இதப்பாருங்க.. வெள்ளாட்டா இருந்தா வினையாயிரும். பல்கொட்டி உச்ச நிலைக்கு வர ஒரு மணியாவுமாம்.. அதனால தயாராவுங்க. உச்ச நிலை வந்துச்சுனா அத்தனை பேரையும் தலைகீழா தொங்கவச்சு நடுமண்டைல பல்லால கொத்தி விட்டுருமாம்.. ரத்தம் அத்தினியும் கொட்டி வடிஞ்ச பிறவு.. இதா இப்பப் பாத்தமே.. அது போல காட்டேறிப் பல்லுங்களை அப்படி மொத்தமா துப்பி ஊதி உடம்பு அத்தினியும் கூறு போட்டு கிழிச்சுருமாம்.. பிறவு சாவுற மட்டும் சுத்தி சுத்தி வருமாம்.. செத்த பிறவு எலும்புங்களை பல்லுங்களா மாத்தி வாயுல போட்டுகினு போயிருமாம்"<br />
<br />
வவ்வாலாய்த் தொங்கிச் செத்தாலும் சரி, பேய்க்குப் பல்செட்டாவதில்லை என்றுத் தீர்மானித்தோம். "என்ன செய்யணும் பூசாரி?" என்றான் ரகு.<br />
<br />
"உங்கள்ள யாரு போணிப் பொணம்?" என்று தணிகாசலம் கேட்டதும் திடுக்கிட்டோம். "என்னங்க இது.. என்ன சாவுக் கடையா வச்சிருக்கோம்? போணிப் பொணம் போட?"<br />
<br />
"அதுக்கில்லே தம்பிங்களா.. போணிப் பொணத்தை வச்சுதான் உங்களைக் காப்பாத்த முடியும்.. பேயாத்தா திட்டமா சொல்லியிருக்கு.."<br />
<br />
"அப்ப ரமேஷ் தான் போணி" என்றான் ரகு.<br />
<br />
"ஏண்டா? எங்கம்மாவுக்கு நான் ரெண்டாவது பையன்.. எங்கப்பாம்மா இரண்டுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் கட்சி.. நீ இரேன் போணி? உங்க வீட்டுல உன்னை எதுக்கும் லாயக்கில்லாத அராத்துனு சொல்றதா நீயே சொல்லியிருக்கே?"<br />
<br />
"தம்பிங்களா.. உங்கள்ள ஒருத்தர்தான் போணிப் பொணம் ஆவ முடியும். பல்கொட்டி எச்சில் பட்டவங்க நிச்சயமா தொங்கல் கேஸ்.. எச்சல் படாதவங்கதான் போணி.. போணிப் பொணம்ன்றது பல்கொட்டி குடுக்குற காவாட்டம்.. போணியோட எலும்புங்களை பல்கொட்டி எதுவும் செய்யாது.. ஆனா போணி சுறுவா இருந்தா அத்தினி பேரையும் காப்பாத்திறலாம்.. உங்கள்ள யாரு பல்கொட்டி எச்சில்?" <br />
<br />
"எச்சிலா? சேசே, நாங்கலாம் பாப்பார பசங்க தணிகாசலம்.. ரொம்ப ஆசாரம்.. உனக்கு தெரியாதா?" என்றான் ரமேஷ்.<br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_25.html">7◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_27.html">►9</a> <br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84896135125323192062016-04-25T06:00:00.000-05:002017-08-04T10:37:57.780-05:00பல்கொட்டிப் பேய்<center>7</center><span style="line-height: 180%;"> <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_24.html">6◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>சா</b></span>மி அலமாரியிலிருந்த விபூதி குங்குமப் பொட்டலங்களை எடுத்தான் ரகு. அவ்வப்போது யாராவது தந்த அர்ச்சனை பிரசாத பொட்டலங்கள், மகாலக்ஷ்மி விக்ரகம் எதிரே ஒரு குப்பியில் கிடக்கும். நாங்கள் பரீட்சைக்குப் போகும்பொழுது ஸ்பெஷலாக எங்கள் நெற்றியில் ஒரு சின்ன கீற்றாக இட்டு விடுவார் அம்மா. என்னமோ அதனால் மட்டும் கேள்விகள் சுலபமாகி விடும் என்ற நம்பிக்கையில் நாங்களும் "எக்சாமுக்கு இட்டு விடுமா" என்போம். <br />
<br />
பொட்டலங்களைப் பிரித்துக் குப்பியில் கொட்டினான் ரகு. ஒவ்வொரு கதவு ஜன்னலாகப் போய் விபூதிக்குங்குமம் தேய்த்தான். என்னவோ ஜெபித்தான்.<br />
<br />
"என்னடா சொல்றே?" என்றேன்.<br />
<br />
"காயத்ரி"<br />
<br />
எங்களுக்கு ஸ்ரீதேவியைத் தவிர ஒரு காயத்ரியையும் தெரியாது. அதைக்கூட பார்க்க விடாமல் தடை போட்டுவிட்டார்கள் அம்மா. "என்னடா கதை இது? சுஜாதா கிஜாதலாம் படிக்காதனு சொன்னா கேக்குறியா? எப்பப் பாத்தாலும் மாரைத் தொட்டான்னு ஒரு கதை.. கண்றாவி.. இதையெல்லாம் சினிமா வேறே எடுத்து வச்சிருக்கானா? தோலை உரிக்கணும்". <br />
<br />
ரகு மட்டுமே எங்கள் வட்டத்தில் பூணல் அணிந்தவன். அந்தப் பந்தாவில் விபூதிக்குங்குமத்துடன் வீடு முழுதும் ஓடி மந்திரம் போல் ஓதிக் கொண்டிருந்தான். "காயத்ரி மந்திரம் சொல்றேண்டா"<br />
<br />
"சொன்னா பேய் ஓடிருமா?" என்றான் ஸ்ரீராம்.<br />
<br />
"யார் கண்டா? பேய் மட்டும் போலனு வை.. மவனே.. நான் பூணலே போடமாட்டேன்" என்றான் ரமேஷ்.<br />
<br />
"சும்மா இருங்கடா.." என்று அவர்களை அடக்கினான் ரகு. "இனிமே பேய் வராது. வந்துச்சுனா பாத்துக்க வேண்டியது தான்" என்று அவன் சொல்லி முடிக்கவும். பின்கதவு படபடவென்று விட்டுவிட்டுத் தட்டியது. சில நிமிடங்களில் வாசல் கதவருகே ணங் ணங் ணங் என்று சத்தம். கருங்கல்லில் ஆணி அறைவது போல. வாசல் கதவு மற்றும் ஜன்னல்களின் விரிசல்கள் வழியாக வெளியே பார்த்தோம். இரண்டரை அடி மனிதர் ஒருவர் எங்கள் வீட்டு வாசல் துளசிமாடத்தைச் சுற்றியிருந்த கோலத்தரையில் ஒரு ஆணி அடித்துக் கொண்டிருந்தார். திடுக்கிட்டோம் என்றால் அது மிகையல்ல.<br />
<br />
"டேய்.. இது குள்ளப் பிசாசுடா. <a href="http://moonramsuzhi.blogspot.com/2010/10/blog-post_22.html" target="_BLANK">பால்கார தாமு</a> சொல்லியிருக்கான் ஞாபகமிருக்கா? நைட்டு ஒரு மணிக்கு பால் கறக்குறாபுல சத்தம் கேட்டுச்சேனு தொழுவத்துக்குப் போனா அங்கே மூணு காலோட குள்ளமா ஒரு உருவம் மாட்டைச் சுத்தி தரையில ஆணி தேச்சிட்டிருந்துச்சாம். ரெண்டே நாள்ல கறவை மாடு செத்துடுச்சுனு சொல்லி நமக்கு ஒரு வாரம் பால்லே எக்ஸ்ட்ரா தண்ணி கலந்து கொண்டு வந்தான் ஞாபகம் இருக்கா?" என்றேன்.<br />
<br />
"சே.. இது தணிகாசலம்டா.. சரியா பாரு"<br />
<br />
ஆணி அறைந்து அதில் ஒரு கயிற்றின் முனையைக் கட்டி, நிமிர்ந்து மிச்சக் கயிற்றை இழுத்தபடி எங்கள் வாசற்கதவை நோக்கி எழுந்து நடந்து வந்த உருவம் தணிகாசலம் தான். கதவை வேகமாகத் தட்டி "தம்பிங்களா" என்றார்.<br />
<br />
நாங்கள் திகைத்தோம். கதவைத் திறக்கப் போன என்னைத் தடுத்தான் ரமேஷ். "டே.. யோசிச்சு பாருடா.. இது தணிகாசலமா இருக்காது. குடிச்சிருந்தான்ல? பாத்தோம்ல? இப்ப எதுக்கு எழுந்து வந்து வீட்டு வாசல்ல ஆணி அடிக்கிறான்? இதுவும் பேய் தாண்டா. எத்தனை படம் பாத்திருக்கோம்? இது கூட தெரியலேனா எப்படி? கதவைத் தொறந்து உள்ளே விட்டேனு வை. பளார்னு ஒரே அறை.. நம்ம பல்லெல்லாம் கொட்டிடும்.. பல்கொட்டிப் பேய்னு சொன்னாரில்லே?"<br />
<br />
"எனக்கு ஏற்கனவே முன்பல் விழுந்து அசிங்கமா இருக்கு.. எல்லா பல்லும் கொட்டிப் போச்சுனா ஸ்கூல் போக மாட்டேன்" என்றான் ஸ்ரீராம்.<br />
<br />
"இதான் சாக்குனு ஸ்கூலை நிறுத்துறியா.. பேய் உன் ரெண்டு காலை வெட்டி எடுத்தா கூட உருண்டாவது ஸ்கூல் போகச் சொல்வா அம்மா.."<br />
<br />
"தம்பிங்களா.. கதவைத் தொறங்கப்பா சீக்கிரம்.. நீங்க அந்தப்புல நிக்குது தெரியுது.. வெட்டியா பேசாம பல்கொட்டி என்னை விழுங்குறதுக்குள்ளாற தொறங்கப்பா.. மந்திரக் கயிறு கொணாந்திருக்கேன்" என்று கையில் கயிற்றுடன் மீண்டும் கதவைத தட்டினார் தணிகாசலம். "தொறங்கப்பா.. பல்கொட்டிக்கு தெரிஞ்சிடுச்சு.. இந்தால வந்துரும்.. தொறங்கப்பா". பரபரத்தார்.<br />
<br />
"வேணாம் தொறக்காதே" என்றான் ரமேஷ். "யோசிங்கடா.. கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் இருந்துச்சானு கேட்டு இப்ப இந்தாளே கயிறோட வந்திருக்கான்.. சத்தியமா இது பேய் தான்.. சாமி மட்டும்லடா.. பேய் கூட அவதாரம் எடுக்கும்.. தணிகாசல அவதாரம்"<br />
<br />
அதற்குள் விஷ் விஷ் என்று புயல் காற்றடிப்பது போல் பெருத்த ஓசை வாசலில் கேட்க, தணிகாசலம் பதறினார். துளசிமாடம் அருகே பல்கொட்டி உயர்ந்து நின்றது அரைகுறையாகத் தெரிந்தது. உரக்கச் சிரித்தது கேட்டது. "என்ன ஆனாலும் ஆகட்டும்டா" என்றபடி ரகு கதவைத் திறக்க, தணிகாசலம் பதறி உள்ளே வந்தார். திறந்த கதவின் வழியே முதன் முறையாக நாங்கள் எல்லாரும் பல்கொட்டியைப் பார்த்தோம்.<br />
<br />
துளசி மாடத்தை ஒட்டி நின்றிருந்தது. தலைகீழான தலை. கிட்டத்தட்ட நாலடி அகலத்துக்கு வாய். நிறைய பற்கள். காதருகே அகஸ்மாத்தாக அந்தரத்தில் தொங்கிய கைகள். ஒரு கையில் மட்டும் விரல்களுக்கு பதிலாக இன்னொரு வாய். ப்ளக் ப்ளக் ப்ளக் என்று திறந்து மூடியபடி இருந்தது. உய்ய்ய்ஹஹ் என்று விசித்திரமான ஓசையுடன் சிரித்து, கோபத்துடன் துப்பியது. முகவாயின் அத்தனை பற்களும் கொட்டி துளசிமாடத்தை மூடின. எத்தனை பற்கள்! <br />
<br />
மின்னல் வேகத்தில் இரண்டு கைகளையும் எங்களை நோக்கி வீசியது. ஏறக்குறைய ஸ்ரீராமைப் பிடித்துவிட்டது கையிருந்த வாய். அதாவது வாய் இருந்த கை. <br />
<br />
"கதவை மூடிரு தம்பி" என்று தணிகாசலம் அரண்டு மிரண்டு ஸ்ரீராமைக் கயிற்றினால் சுற்றிப் பிடித்துக் கொண்டார்.. பின் வாங்கிய பல்கொட்டி ஹூவென்று அலறி இன்னும் உயர்ந்து... உப்ப்ப்ப் என்று ஊத.. அத்தனை துளசிமாடப் பற்களும் எங்களை நோக்கிக் கத்தி போல் பறந்து வரவும் ரகு வாசல் கதவை மூடவும் சரியாக இருந்தது. <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_24.html">6◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_26.html">►8</a><br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87288645476336822352016-04-24T12:23:00.003-05:002017-08-04T10:37:35.075-05:00பல்கொட்டிப் பேய்<center>6</center><span style="line-height: 180%;"> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYZJbTypuVNS3litx6fyhZ5_YH9fUUOvBnsm0Bpsbsc-k8sGKvmTwdc8ND6B823_J7gWtWyOj8veZ4-j_anNoV3JqsNXdcqcgzbVnO6dNKkj7J5oyPHPg-qfQFMCl9JwzIqxIeqOGFLokc/s1600/uh3.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYZJbTypuVNS3litx6fyhZ5_YH9fUUOvBnsm0Bpsbsc-k8sGKvmTwdc8ND6B823_J7gWtWyOj8veZ4-j_anNoV3JqsNXdcqcgzbVnO6dNKkj7J5oyPHPg-qfQFMCl9JwzIqxIeqOGFLokc/s400/uh3.png" /></a></div><br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_21.html">5◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>"அ</b></span>சந்து தூங்கிட்டேண்டா" என்றான் ரகு. "நல்ல வேளை, கூச்சல் போட்டு எழுப்பினே"<br />
<br />
"அவன் பேசுறதே கூச்சல் போடுறாப்புல தான்" என்றான் ரமேஷ், அரைகுறையாக விழித்தபடி.. "சுபாவம் அப்படி.. போன வாரம் பம்பாய் பக்கமா திரும்பி நின்னு டிரங்க்கால் போடாமலே அவன் மாமா கிட்டே பேசினான் தெரியுமோ?"<br />
<br />
"நீ எழுப்பாட்டா பேய் தூக்கிட்டுப் போயிருக்கும்". ஸ்ரீராமுக்கு பயத்தில் அழுகை வரும் போலிருந்தது. "போலீசைக் கூப்பிடு" என்றான்.<br />
<br />
"எப்படிரா கூப்பிடறது? பல்கொட்டி கிட்டே பர்மிஷன் வாங்கி வேணா போய் கூட்டுரவா?"<br />
<br />
"அதான் எழுப்பிட்டேல்ல.. மறுபடி எதுக்குடா கூவுறே?" என்றான் ரமேஷ் என்னிடம்.<br />
<br />
"இத பாருடா.." என்று என் உள்ளங்கைகளைக் காட்டினேன். அத்தனை பேர் முகத்திலும், பாதி ராத்திரி என்றாலும், ஈயாடவில்லை. என் உள்ளங்கைகளில், விட்டு விட்டு நாற்று நட்டாற்போல், ஆங்காங்கே ஒன்றரை இஞ்ச் நீளத்துக்கு முடி. இழுத்துப் பார்த்தேன். வலித்தது. உடனே மூவரும் தங்களைத் தொட்டும் தடவியும் பார்த்துக் கொண்டனர். ரகுவின் கழுத்திலும், ரமேஷின் பாதங்களிலும் என்னைப் போலவே... <br />
<br />
"சத்தியமா இது பேய் முடி தாண்டா" என்றான் ரகு. திடீரென்று "நில்டா" என்றான். "கவனிங்கடா. சத்தம் கேக்குதா?"<br />
<br />
பின் கதவு விட்டு விட்டு ஓசையிட்டது. மென்மையான ஓசைதான். எனினும் தெளிவாகக் கேட்டது. யாரோ பந்தை எறிந்து விளையாடுவது போல. கிடுகிடுவென்று சமையலறை ஜன்னலுக்குச் சென்று பார்த்தோம். கிணற்றடி மேட்டிலிருந்து மேலே உருண்டு வந்து கதவில் மோதிக் கொண்டிருந்தது, பந்து சைஸில் நாங்கள் முன்பு பார்த்த தலை. இப்போது தீச்சிவப்பாக இருந்தது. யாரோ தணலை உருட்டி விடுவது போல் வந்து வந்து கதவில் மோதிப் போனது. <br />
<br />
நாங்கள் பார்ப்பதை கவனித்து விட்டது போல் கதவருகே வந்ததும் நின்றது. விர்ரென்று எழும்பி எங்கள் முன் ஜன்னல் முழுதும் வியாபித்த அதே மஞ்சள் முகம்! இடுங்கிப் போன கண்கள்.. ஏறக்குறைய முகம் முழுதும் வாய். அத்தனை பெரிய கூரிய பற்களை நாங்கள் பார்த்ததேயில்லை. எல்லையம்மன் கோவில் சாமிக்குக் கூட இத்தனை கோரைப் பற்கள் கொடுத்தார்களா தெரியவில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நேரமில்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தோம். "வா" என்றது ஆழமான குரலில். ஜன்னலுக்குள் முகத்தை நுழைக்கப் பார்த்தது.<br />
<br />
ரகு டக்கென்று ஜன்னலை இழுத்து மூடினான். சமையலறை ஜன்னல் ஏற்கனவே சரியாக மூடாது சனியன். இப்பொழுது மூட முடியாமல் கொக்கியருகே தட்டி நிறுத்தியதோ பேயின் இரண்டு பற்கள். ரகு ஜன்னல் கதவை இன்னும் அழுத்த, பல் விலகிக் கொண்டது. கொக்கி போட்டாலும் ஜன்னல் கதவின் பல விரிசல்களில் பேய் தெளிவாகத் தெரிந்தது. <br />
<br />
"இதுக்கு ஜன்னலைத் தொறந்தே வச்சுடலாம். அட்லீஸ்ட் பயங்கரம் கம்மியா தெரியும்" என்றான் ரமேஷ். <br />
<br />
"டே.. ஓடுங்கடா. எல்லா ஜன்னலையும் சாத்துங்கடா" என்று ஆர்டர் போட்டான் ரகு. <br />
<br />
எங்கள் வீட்டில் ஏழு மர ஜன்னல்கள். ராமர் அம்பு துளைத்த கதையாய் ஏழிலும் ஆங்காங்கே ஓட்டைகள். சிலவற்றை அறைந்து மூட வேண்டும். ரொம்ப அறைந்தாலும் உடைந்துவிடும் சாத்தியம். ஜன்னல் கதவுகளை மூட ஓடினோம். "ஸ்ரீராம்.. நீ என் கூடவே இருடா" என்றான் ரகு ஏறக்குறைய அதட்டலில். <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_21.html">5◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_25.html">►7</a><br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54311045514383795532016-04-21T08:46:00.000-05:002017-08-04T10:37:13.649-05:00பல்கொட்டிப் பேய்<center>5</center><span style="line-height: 180%;"> <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_20.html">4◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>"கா</b></span>ஞ்சிபுரம் போயிடலாம்" என்று கிளம்பிய ஸ்ரீராமை என்னருகே இழுத்தபடி பூசாரியிடம் கேட்டேன். "டேஞ்சர்னா என்ன மாதிரி சொல்றீங்க?"<br />
<br />
"எனக்கு அவ்வளவா தெரியாதுப்பா... எங்க ஆத்தா சொல்லும் .. பல்கொட்டி ரொம்ப அபூர்கமுனு.. அதுகிட்டே கேக்கலாம்"<br />
<br />
"உங்களுக்கே ரெண்டு ஆத்தா வயசு இருக்கும் போலிருக்குதே? உங்க ஆத்தா சொன்னாங்களா?" என்றான் ரகு.<br />
<br />
"எங்க ஆத்தா இறந்து அம்பது வருசமாச்சு தம்பி"<br />
<br />
"என்னாது? அம்பது வருசமாச்சா? அவங்ககிட்டே எப்படி கேப்பீங்க?" <br />
<br />
"தம்பி.. எல்லா பேயும் ஒண்ணா நினைச்சுறாதே.. எங்க ஆத்தாவும் பேய் தான். பேயாத்தானு கூப்பிடுவோம்"<br />
<br />
"பேயாத்தா.. நல்ல பேரு. யாரு, நீங்க வச்சதா?"<br />
<br />
"அடக் கேளு தம்பி.. பேயுன்னாலும் குடும்பத்துல ஒண்ணாச்சே..?"<br />
<br />
"குடும்பப் பேய்னு சொல்லுங்க"<br />
<br />
"வெளயாட்டில்ல தம்பி. எல்லார் வூட்லயும் நடக்குறது தான்.. உங்க ஐரூட்டுங்கள்ள வருசா வருசம் திதினு செத்தவங்களைக் கூப்பிட்டு கொண்டாடலியா? செத்தவங்க திரும்புனா பேயில்லாம என்னாவாம்? அத்த விடு தம்பி.. எங்க பேயாத்தா இருக்குதுல்ல? அதாண்ட குடும்ப விசயங்களுக்கு அடிக்கடி குறி கேப்போம்.. ஒரு கல்யாணம் கருமாதினா கூப்டா வரும்.. அதான் சொல்லியிருக்குது பல்கொட்டி பேய் பத்தி புள்ளயா இருக்குறப்ப.. பேயுங்க உலாத்துறப்ப எப்பனாச்சும் தான் பல்கொட்டி வருமாம்.. கருநாகப்பாம்பு மாதிரி.. பல்கொட்டியப் பாத்தா உடனே அத்தனை பேயுங்களும்.. காட்டேரி கூட.. சட்டுன்னு ஓரங்கட்டிக்குமாம்.."<br />
<br />
"உங்க ஆத்தா பல்கொட்டியா? காட்டேரியா?"<br />
<br />
"பேயாத்தா சாதுபா. ஆனா அதுக்கு பேயுங்க பத்தின வெவரம் அத்தினியும் தெரியும்.. அப்பப்ப எம்மேலே வந்து சாமியாடுறாப்புல ஆடும்.. அதுகிட்ட கேட்டு சொல்றேன்.. ராத்திரி ஒம்பது மணிக்கு மேலே வா.. காப்பு கட்டறதுனா கட்டித் தாரேன்.." என்று தணிகாசலம் கருங்கல் பெஞ்சிலிருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.<br />
<br />
ஒன்பது மணியடித்ததும் எல்லோரும் பூசாரி வீட்டுக்குப் போனோம். துர்கையம்மன் கோவிலை ஒட்டியே அவர் வீடு. சரியாகக் குடித்திருந்தார். "அடப்பாவி.. இவன் சாதாரணமாவே ரீல் விடுவான்.. இப்ப குடிச்சிருக்கான்.. என்ன சொல்லப் போறானோ?" என்று முணுத்தபடி நான் பூசாரியருகே சென்று "தணிகாசலம்.. எங்களை வரச்சொன்னீங்களே.. இப்படி குடிச்சிருந்தா எப்படி ?" என்றேன்.<br />
<br />
"தம்பி.. எனக்கு பயம் வந்தா குடிச்சிருவேன். அதான்"<br />
<br />
"என்ன சொல்றீங்க?"<br />
<br />
"ஆத்தா கிட்டே பேசினேன்.. பல்கொட்டி பிடிச்சா பொஞ்சாதி மாதிரியாம். சாவுற வரைக்கும் விடாதாம்.. அதும் யார் கை கண் பட்டுச்சோ அவங்களை விடவே விடாதாம்.. உங்கள்ள யார் பாத்தாங்க? யாருனா தொட்டாங்களா?"<br />
<br />
"எல்லாரும் பார்த்தோம்.. ரகு மட்டுந்தான் தொட்டது "<br />
<br />
"விடாதுபா.. உங்களை நினைச்சு எனக்கே பயமாயிருச்சு.. அதான் குடிச்சுட்டேன்" என்றபடி பட்டென்று கீழே படுத்து உடனே தூங்கிவிட்டார்.<br />
<br />
"என்னடா செய்யுறது?" என்றான் ரமேஷ்.<br />
<br />
"சும்மா இருங்கடா" என்றேன். என்னவோ தெரியவில்லை. தைரியம் பொங்கி வந்தது. "பம்மல்ல இருந்துகிட்டு பேய்க்கு பயந்தா எப்படி?" என்றேன்.<br />
<br />
"அதானே?" என்ற ரகு எங்களைத் தள்ளியபடி வீட்டுக்குள் நடந்தான்.<br />
<br />
ஹாலில் படுத்தோம். அரட்டையடித்தபடி தூங்கிவிட்டோம். <br />
<br />
பின் கதவு கடகடவென்று தட்டப்படும் ஓசை லேசாகக் கேட்க சட்டென்று விழித்தேன். என் போர்வையைக் காணோம். பக்கத்தில் படுத்திருந்த ரகு இழுத்திருக்க வேண்டும் என்று நான் அவன் மேலிருந்த போர்வையை இழுத்தேன். அத்தனை மென்மையான போர்வை எங்கள் வீட்டிலே கிடையாதே என்று தோன்ற, எழுந்து விளக்கைப் போட்டேன். <br />
<br />
ரகு, ஸ்ரீராம், ரமேஷ்.. வரிசையாகப் படுத்திருந்த யார் மீதும் போர்வையைக் காணோம். மாறாக போர்வை போல் அடர்ந்து படர்ந்திருந்த கருகருவென்று முடி.. தொடர்ந்து பின் கதவு வரை போனது. இவர்களோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். <br />
<br />
அப்போதுதான் கவனித்தேன். போர்வை போல் படர்ந்திருந்த முடி இவர்களை மெள்ள மெள்ள கதவை நோக்கி இழுக்கத் தொடங்கியதை. <br />
<br />
"எழுந்திருங்கடா டேய்!" என்று கூச்சல் போட்டேன். ரகு எழுந்து உடனே நடப்பதைக் கவனித்து விட்டான். சடாரென்று ஸ்ரீராமையும் ரமேஷையும் முடிப் போர்வையிலிருந்து வெளியே இழுத்துப் போட்டான்.<br />
<br />
புசுக்கென்று அத்தனை முடியும் பின் கதவு வழியாக மறைந்தது.<br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_20.html">4◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_24.html">►6</a> <br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15155048525466581342016-04-20T08:59:00.002-05:002017-08-04T10:36:53.141-05:00பல்கொட்டிப் பேய்<center>4</center><span style="line-height: 180%;"> <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_19.html?_sm_au_=iMVjWFjpvj23vwww">3◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>வி</b></span>பரீத அனுபவங்கள் ரகுவுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும் அவன் உறைந்து போனான் என்பது தெரிந்தது. பம்மல் வாசிகளான எனக்கும் ரமேஷுக்கும் பேய் சமாசாரம் பெரிய விஷயமில்லை என்றாலும்.. ஒரு பேய் தலையை இத்தனை அருகில் பார்ப்பது இதுவே முதல் தடவை. <br />
<br />
முதலில் தயங்கிய ரகு மெள்ள முன்னேறி, தலையை ஒரு குச்சியால் தொடப்போக.. அது விர்ரென்று எழுந்து வேகமாக கிணற்றுச் சுவற்றில் மோதித் தெறித்து எங்கள் பின்கட்டுக் கதவில் மோதி சட்டென்று எங்கள் முன் வந்து புவ்வென்று விரிந்தது.. டெனிஸ் பந்து தரையில் விழ, எங்கள் முகத்தருகே ஒரு உருவம்.. அத்தனை பற்களும் ஆடச் சிரித்தது. "வரேண்டா!" என்று கூவி சண்முகா கொட்டகை பக்கம் காணாமல் போனது.<br />
<br />
எத்தனை நேரம் வெலவெலத்திருந்தோம் என்பது நினைவில்லை. "தணிகாசலம் இருக்கார்டா.. அவர்கிட்டே சொல்லலாம்" என்றான் ரமேஷ்.<br />
<br />
அதற்குள் ஸ்ரீராமைக் காணாமல் அரண்டோம். முப்பதடி தொலைவில் பம்மல் மெயின் ரோடில் நின்று கொண்டிருந்தான். "இங்க வாடா" என்று கூவினேன். அவன் அங்கிருந்தே, "காஞ்சிபுரத்துக்கு எந்தப் பக்கமா போவணும்? நடந்தாவது அங்க போவேனே தவிர சத்தியமா இங்க இருக்க மாட்டேன்" என்றான். ஒரு வழியாக அவனை அடக்கி எங்களுடன் அழைத்து வந்தோம். "பயப்படாத.. நாங்க இருக்கோம்ல?".<br />
<br />
எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் துர்கையம்மன் கோவிலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். கோவில் எதிரே இருக்கும் ஒற்றைப் பனைமரத்தடியில் இருந்த கருங்கல் பெஞ்சில் படுத்துக் கொண்டிருந்த <a href="http://moonramsuzhi.blogspot.com/2012/03/blog-post_27.html" target="_BLANK">பூசாரி தணிகாசலத்தை</a> எழுப்பி விவரம் சொன்னோம்.<br />
<br />
"கால் தெரிஞ்சுச்சா? கொலுசு சத்தம் கேட்டுச்சா? சிரிச்சப்ப எக்காளமா இருந்துச்சா? இல்லே சத்தமில்லாம தும்முறாப்புல இருந்துச்சா? பல்லுலந்து ரத்தம் வந்துச்சா? கண்ணுலந்து முடி வந்துச்சா? தலைல கருமுடியா நரையா? உச்சந்தலைல ஆணி அடிச்சிருந்துச்சா? காது அறுந்திருந்துச்சா? கண்ணு ரெண்டும் சுத்துச்சா? கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் தெரிஞ்சுச்சா?...." என்று கேள்விகளை அடுக்கினார் தணிகாசலம்.<br />
<br />
"இந்தாளு இப்படி க்விஸ் வைப்பாருன்னு தெரியாம போச்சே?" என்று முணுத்தான் ரமேஷ்.<br />
<br />
"எதுவும் கவனிக்கலியா தம்பி?" என்று என்னை நெருங்கினார் பூசாரி. "இத பாருப்பா. பேயுங்க பல வகை. இன்ன வகைனு தெரிஞ்சா... அதுக்கு ஏத்தாப்புல குறியடிச்சு ஓட்டலாம்.. பலி போட்டு ஓட்டலாம்.. வேப்பெல அடிக்கலாம்.. ஆணி அடிச்சு முடி கட்டலாம்.. பச்சைக்கோழி ரத்தம் குடிச்சு மோளம் கொட்டலாம்.. எதுவுமில்லேனு வை.. ஓடி ஒளியலாம்" என்றார். "என்ன பேய்னு தெரியாம இப்போ என்ன செய்ய?"<br />
<br />
"தணிகாசலம்.. ஒரு குச்சியால ரகு தலையை நோண்டுனப்ப.. அது பிகுன்னு எங்க முன்ன விரிஞ்சு வந்துச்சு.. வரேண்டானு கூவிச் சிரிச்சு காணாம போயிருச்சு.." என்றேன்.<br />
<br />
"சிரிச்சப்போ பல்லு மொத்தமும் ஆடிச்சு" சேர்ந்து கொண்டான் ரகு. <br />
<br />
கொஞ்சம் யோசித்த பூசாரி, "தம்பி.. இது ரொம்ப டேஞ்சருபா.. பல்கொட்டியா இருக்கும் போலிருக்குதே? ரொம்ப ரொம்ப டேஞ்சரான பேய்பா" என்றார். <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_19.html?_sm_au_=iMVjWFjpvj23vwww">3◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_21.html">►5</a><br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36103472236315005412016-04-19T08:04:00.001-05:002017-08-04T10:36:31.450-05:00பல்கொட்டிப் பேய் <center>3</center><br />
<span style="line-height: 180%;"> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH_RC3xkUxPM8N3H0G3XBEIKePCb2qcoTDFnQXOng6_EGEyyDU5PJtuPt5LkcqCXEN9s9OOWPeJ0jp1OuBUGV-nnQ8tJRhSODiS_4dXJ9T_HFEBey841PiCzVdv3Tcyd-jUHrsOg8YiOOx/s1600/udownh3.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH_RC3xkUxPM8N3H0G3XBEIKePCb2qcoTDFnQXOng6_EGEyyDU5PJtuPt5LkcqCXEN9s9OOWPeJ0jp1OuBUGV-nnQ8tJRhSODiS_4dXJ9T_HFEBey841PiCzVdv3Tcyd-jUHrsOg8YiOOx/s400/udownh3.png" /></a></div><br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_18.html">2◄</a><br />
<br />
        <span style="font-size: 200%;"><b>கா</b></span>ஞ்சிபுரம் சங்கர மடத்தில் என்னவோ ஹோமம் நடத்தி இலவசமாக புண்ணியதானம் செய்கிறார்கள் என்று எங்கள் வீட்டிலும் வெங்கடராமன் என்கிற ரமேஷ் வீட்டிலும் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்கள். வீட்டில் நாங்கள் மட்டுமே. துணைக்கு எங்களுக்காக அம்மா விட்டுச் சென்ற மூன்று அடுக்குகள் நிறைய தோசை, தயிர்சாதம், வீட்டு வாழைக்காய் வறுவல். ரமேஷ் வீட்டிலிருந்து வந்த ஒரு ஜாடி காரமாவடு.<br />
<br />
பாதிச் சாப்பாட்டை காலி செய்த களைப்பில் மதியம் ஒரு மணி போல் பகல்தூக்கம் கலைந்து கிரிகெட் விளையாடத் தீர்மானித்தோம். டெனிஸ் பந்து கிரிகெட். எங்கள் வீட்டுச் சுவற்றில் செங்கலால் மூன்று செங்குத்துக் கோடுகள் கீறி இலவச விக்கெட் கீப்பருடன் ஆளுக்கொரு டீம் எடுத்துக்கொண்டு பதினோரு பேர் ஆட்டம். கிணற்றடியிலிருந்து மிதமாக இறங்கிச் சரியும் மேடு தான் பிட்ச். எதிரே சுமார் நூறடி தொலைவில் இருந்த சண்முகா கீற்றுக்கொட்டகை பவுண்டரி. சுற்றிவர இருந்த நிறைய புதர்களில் திக்குக்கொன்றாய் பவுண்டரி எல்லை தீர்மானித்து விளையாடத் தொடங்கினோம்.<br />
<br />
நானும் ரமேஷும் ஒரு கட்சி. ஸ்ரீராமும் ரகுவும் ஒரு கட்சி. நாங்கள் வெஸ்ட் இண்டீஸ். ரகு எப்போதும் இந்தியா டீம் எடுத்துக்கொண்டு விடுவான். வழக்கம் போல் ஒபனிங் ஓவர் கர்சன் காவ்ரி, அடுத்த ஓவர் பிஷன் சிங் பேடி என்று பந்தை உயரச் சுழற்றி வீச வந்துவிட்டான். <br />
<br />
அன்றைக்கு ராய் ப்ரெட்ரிக்கில் தொடங்கி கிடுகிடுவென்று நானும் ரமேஷும் விக்கெட் இழந்து கொண்டிருந்தோம். இருபது ரன் கூட தேறவில்லை, ஏழு விக்கெட்டோ என்னவோ காலி. ரகுவும் ஸ்ரீராமும் வெறித்தனமாக குதித்துக் கொண்டிருந்தார்கள். நான் டெரிக் மரேயாக ஆடிக்கொண்டிருந்தேன். ஸ்ரீராம் வீசிய ஒரு பந்தை மிடான் பக்கமாக அடிக்க, அது ஏதோ ஒரு புதரில் சிக்கிக் கொண்டது. எல்லோரும் பந்தைத் தேடிப் போனோம். ரமேஷ் கண்ணில் பந்து பட, "இதோ இருக்குடா" என்றபடி பந்தை எடுத்து ரகுவிடம் வீசி எறிந்தான். <br />
<br />
ரமேஷ் வீசிய மஞ்சள் டெனிஸ் பந்தைக் கண்ணால் பார்த்தோம். இருந்தாலும் அதை ரகு பிடித்த போது அவன் கையில் விழுந்தது பந்தல்ல. ஒரு குட்டித் தலை. மூக்கு கண் காது எல்லாம் வைத்து பெரிய சாத்துக்குடி சைஸில் தலை. முகமெல்லாம் மஞ்சள் பூசிய, ரத்தக்காயம் எதுவும் இல்லாத தலை. வாய் பிளந்து பல் காட்டிய தலை. <br />
<br />
பதறித் தூக்கி எறிந்தான் ரகு. கிணற்றடி அருகே எங்கள் வீட்டுப் பின்வாசலுக்கு நேர் எதிராக விழுந்து உருண்டு தலைகீழாக நின்ற தலையைப் பார்த்துத் திடுக்கிட்டோம். கிணற்றடித் தரைமேல் படிந்திருந்த ஈரத்தில் அரைகுறையாகத் தெரிந்த தலையின் நேர் பிம்பம் இன்னும் திகிலூட்டியது.<br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_18.html">2◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_20.html">►4</a><br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39783789857348868662016-04-18T08:53:00.001-05:002017-08-04T10:35:50.371-05:00பல்கொட்டிப் பேய்<center>2</center><span style="line-height: 180%;"> <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post.html">1◄</a> <br />
<br />
        <span style="font-size: 200%;"><b>ஏ</b></span>ழாம் வகுப்பு படிக்கையில் ஒரு நாள் தமிழாசிரியர் என்னிடம் 'எனில் அது மிகையல்ல' என்று ஒரு தொடரைக் கொடுத்து வாக்கியத்தில் அமைக்கச் சொன்னதும், ஐந்து நிமிடம் போல் விழித்த என்னிடம் 'ஏண்டா பேயாட்டம் முழிக்கிறே?' என்றதும் நினைவுக்கு வந்தது.<br />
<br />
பல்கொட்டிப் பேயின் முழி கிடக்கட்டும். 'பல ஆண்டுகளுக்குப் பிறகு பல்கொட்டிப் பேயைப் பார்த்து என் உடல் சிலிர்த்து உயிரும் ஒரு கணம் உறைந்து போனது எனில் அது மிகையல்ல' என்ற அருமையான பத்துக்கு பத்து மார்க் வாக்கியம் சடுதியில் நினைவுக்கு வந்தது என்று சொல்ல வந்தேன். <br />
<br />
பேய்த் தலையை மறுபடி பார்த்தேன். <br />
<br />
ரகு கேட்டுக்கொண்டபடி சரியாக வந்து விட்டதே?! முப்பது வருடங்களில் அப்படியே இருக்கிறதே பேய்! அந்த இளமையின் ரகசியம் என்ன என்று கேட்கத் தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் பல்கொட்டிப் பேய் என்ன செய்யும் என்பதும் உடனே அனுபவத்திலிருந்து நினைவுக்கு வந்தது. பயத்தில் ஒன்றுக்கும் வரவில்லை. அப்பொழுது தான் பாத்ரூம் போய் வந்த காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. படுபாவி ரகுவை இப்போ எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்பேனோ? <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2009/10/2012.html" target="_BLANK">ரகு</a>வைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். பல்கொட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறேனா தெரியவில்லை. சொல்கிறேன்.<br />
<br />
என் பெரியம்மா பையன் ரகு, எதிர் வீட்டு நண்பன் வெங்கடராமன் என்கிற ரமேஷ், நான், அப்புறம் என் தம்பி ஸ்ரீராம்.. நால்வரும் ஒரு சமயம் தனியாக எங்கள் பம்மல் வீட்டில் தங்க வேண்டியிருந்தது. <br />
<br />
அன்றுதான் பல்கொட்டிப் பேயுடன் எங்கள் முதலிரவு.<br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post.html">1◄</a> <a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_19.html?_sm_au_=iMVjWFjpvj23vwww">►3</a><br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28051424604460048002016-04-17T03:15:00.000-05:002016-04-24T12:42:50.654-05:00பல்கொட்டிப் பேய் <br />
<br />
<br />
<br />
<span style="line-height: 180%;"> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwsXPVkzFKzdGx8Bfa_Rgdyq1LuP6W4Qi7I8mlATkIP8duCzU83qEdMHbguYjriGUp3MFZjIFepR1RHiyuLCm3cM1uoLrFnXTr4-sJIaL-A4M2rxzq4E1zJhUts0h5XfhC-TDzNYgYUpfr/s1600/udownh.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwsXPVkzFKzdGx8Bfa_Rgdyq1LuP6W4Qi7I8mlATkIP8duCzU83qEdMHbguYjriGUp3MFZjIFepR1RHiyuLCm3cM1uoLrFnXTr4-sJIaL-A4M2rxzq4E1zJhUts0h5XfhC-TDzNYgYUpfr/s640/udownh.png" /></a></div>        <span style="font-size: 200%;"><b>அ</b></span>திகாலை இரண்டரை இருக்கும். <br />
<br />
எதிர்பாராமல் விழித்த கடுப்புடன் ஒன்றுக்கிருந்துவிட்டு அவசரமாகக் கை கழுவி ஹோட்டல் பாத்ரூம் கதவை அறைந்து சார்த்தி விளக்கணைத்து, படுக்கையில் மீண்டும் விழத் தயாரான போது கவனித்தேன். அறைமூலையில்.. இஸ்திரிப் பலகை மேல்.. இஸ்திரிப் பெட்டியின் மிதமான ரேடியம் ஒளியில் தெளிவாகத் தெரிந்தது... அதானா?<br />
<br />
தரை வரை பரந்து கிடந்த முடிக்கற்றை. நுனியில் வாய் பிளந்தபடி தலைகீழாகத் தலை. தலையருகே அந்தரத்தில் போல் தொங்கிய இரண்டு கைகள். ஒரு கையில் மட்டும் விரல்களுக்குப் பதிலாக.. <br />
<br />
சந்தேகமேயில்லை.. இது.. இது.. பல்கொட்டிப் பேயே தான்.<br />
<br />
அடக் கஷ்டமே! அதற்குள் முப்பது வருடங்களாகிவிட்டதா? இந்த நேரத்தில் ரகு, ஸ்ரீராம், வெங்கடராமன் என்கிற ரமேஷ்,... எல்லாரும் எங்கிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாதே?<br />
<br />
தனியாக வேறே சிக்கிக் கொண்டேனே? <br />
<br />
<a href="http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_18.html">►2</a><br />
<br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63557491145181422802016-01-15T12:20:00.001-06:002016-04-09T14:30:22.949-05:00புத்தாண்டு<span style="line-height: 180%;"> <br />
<br />
        <span style="font-size: 200%;"><b>(கு</b></span>ளிர்கால வழக்கப்படி) சற்றே கனமான உயர்மட்டச் சாராயங்களின் உட்பரவலால் உந்தப்பட்டு... பொருளாதாரம் அரசியல் தொழில்நுட்பம் இசை இளைய சமூகம் பற்றி நண்பர்களுடன் சுவாரசியமாக அளவளாவும் வாய்ப்பு பதினைந்தின் இறுதி வாரத்தில் கிடைத்தது. மூத்த நண்பர் ஒருவரின் அழைப்பின் பெயரில் அவர் வீட்டில் குழுமியிருந்தோம். <br />
<br />
'தென்னிந்திய சம்பிரதாய இசை மாலை' என்ற அறிவிப்புடன் அழைத்திருந்தார் மூத்த நண்பர். கர்நாடக இசையில் விருப்பமில்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம் என்ற அவரது பண்பைப் பாராட்டி வெகு சில நண்பர்களே குழுமியிருந்தோம். அப்படியும் பத்து பேருக்கு மேல் கூடிவிட்டது. சில புதுமுகங்கள். சீமைச் சாராயம், சைவப் பலகாரங்கள் (சீடை அளவில் சன்னமாக உருளைக்கிழங்கு போண்டா செய்திருந்தார்கள் - அட்டகாசம்!), பின்னணியில் கர்நாடக இசை. மணி அய்யர், ராதாஜெயலட்சுமி, எம்எஸ், எம்எல்வி, ரமணி, மாலி, சிட்டிபாபு என்ற வரிசையில் இன்றைய கலைஞர்கள் சிலரின் வண்ணமும் சேர்ந்து செவிக்கு விருந்தானது. <br />
<br />
ஆர்வலர் என்றால் என்னவென்று தெரியாது, எனினும் ஆர்வமுள்ளவர் என்ற பொருளில்... கர்நாடக இசை ஆர்வலர்கள் ஏறத்தாழ நால்வகைப் பட்டவர்கள் என்று நினைக்கிறேன். <br />
<br />
இனிமையான ராகத்தில் பிரபலமான பாடலாக இருந்தால் எந்தவித பரப்பும் ஆழமும் தேவைப்படாமல் இசைக்காக கேட்டுவைப்பவர்கள் முதலாவது ரகம். உதாரணத்துக்கு சங்கராபரணம் சினிமா வந்த காலத்தில் குழாயடியில் சாமஜவரகமனாவை குத்துப்பாட்டாகப் பாடியவர்கள் பலரை அறிவேன். காலப்போக்கில் ஓரளவுக்கு ஆழமும் பரப்பும் பெற்று சில கலைஞர்களையோ ராகங்களையோ மட்டும் நுட்மாக ரசிப்பவர்கள் இரண்டாவது ரகம். உதாரணத்துக்கு <a href="http://viewpure.com/D0e18NAerxI?start=0&end=0" target="_BLANK">முதல் மழை என்னை நனைத்ததே</a> சினிமாப்பாடல் மோகன ராக சாயலாக இருக்கிறதே என்று ரசித்துத் தள்ளுகிற ரகம். பரவலான அறிவும் ஆழமும் கூடி பலவகை கலைஞர்களையும் ரசிக்கும் கூட்டம் மூன்றாவது ரகம். ஓ! நாலாவது ரகம் ஒன்று இருக்கிறது. தன் பரவலான அறிவை சாமா சாஸ்திரி இருபத்தெட்டாவது மேளகர்த்தா ஆலாபனை துக்கடா ஜாவளி ப்ருகா நளினகாந்தி பீம்ப்லாஸ் தில்லானா அது இதுவென்று பயங்கரமாக விவாதித்து ரசிப்பவர்கள்(?) நாலாவது ரகம். உதாரணத்துக்கு முதல் மழை என்னை நனைத்ததே பாட்டு மோகன ராக சாயல் என்றால் உடனே கெக்கே என்று சிரிக்காமல் சிரித்து, அது தர்பாரி கானடா கோபிகா வசந்தம் என்று திடுக்கிடவைக்கும் ராகப்பெயர் சொல்லிப் பேருரையாற்றும் ரகம்.<br />
<br />
நான் இருக்கிறேனே, சரியான ரகமாறி. <br />
<br />
முதல் இரண்டாவது ரகங்களினூடே அடிக்கடி மாறுகிறவன். சம்பிரதாய இசைக் கலைஞர்கள் சிலரை மிகவும் பிடிக்கும். உதாரணம் மணி அய்யர், மாலி, சிட்டிபாபு. எம்எல்வி லாண்டரிக்கணக்கைப் பாடியிருந்தாலும் கேட்பேன். நல்லவேளை அவருக்கு லாண்டரிக்கணக்கைப் பாடிவைக்க வேண்டிய கர்வம் எதுவும் இருக்கவில்லை. இசை பிழைத்தது. செவியும். சுமார் பத்து ராகங்கள் போல் விரும்பிக் கேட்பேன். ஐம்பது கீர்த்தனைகள் போல் விரும்பிக் கேட்பேன். அதிலும் 'நீ இரங்காயெனில் புகலேது' என்று நிஷா ராஜகோபால் போல் புரியும்படி பாடினால் இன்னும் ரசித்துக் கேட்பேன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த நிறைய சினிமாப் பாடல்கள் இன்ன ராகத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதை அறிந்து கேட்பேன். அவ்வளவுதான் என் ரசனை.<br />
<br />
மூன்றாவது ரக மாந்தரை மதிக்கக் கற்றுக் கொண்டேன் எனலாம். அவ்வப்போது சில nuanceகளை எடுத்துக்காட்டி, தொடர்வது நம் விருப்பம் என்று அத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். என் மாமா மற்றும் சில நண்பர்கள் இந்த ரகம். சுப்புத்தாத்தா அவர்கள்?<br />
<br />
நாலாவது ரகம்.. ஹா! இசையையும் ரசிக்கவிடாமல் கலைஞரையும் அறியவிடாமல் தங்கள் பரந்துபட்ட அறிவைத் திணிக்கும் (ந)ரகம்டா சாமி! இப்படிப்பட்டவர்களை அறிந்ததும் தீயென்று விலகவேண்டாமோ? விட்டிலென விழுந்தேன்.<br />
<br />
'உள்மன ரகசியங்களைக் கேட்கக்கூடாதா?' என்று தன் மனதிடமே கோரிக்கைவிடும் தியாகய்யரின் தெலுங்கு வார்த்தைகளை அலுங்காமல் விரல்களால் அறுபது மைல் வேகத்துக்கு விளையாடிக்கொண்டிருந்தார் சிட்டிபாபு. ஆகா தருணம்! சமீப இலக்கிய(?) முயற்சியொன்றுக்காக தியாகய்யரின் க்ருதிகளைப் பற்றி விவரமாகப் படிக்கக் கிடைத்த வாய்ப்பின் பலனாக தியாகய்யரின் ராமச்சந்திரக் காதலைப் பற்றி நானறிந்த மட்டில் பகிரத் தொடங்கினேன். தியாகய்யரின் வீச்சும் வேகமும் பற்றி வியப்புடன் பேசினேன். 'ராமா' எனும் ஒரே ஒரு எண்ணத்தை.. உருவத்தை.. காதலாக்கி அதற்கும் ஒரு படிமேல் கொண்டு சென்று கசிந்து உருகி... அத்தனை பாடல்களைத் தந்திருக்கும் அவரின் prolific படைப்புத்திறனை வியந்தேன். ராமனை எத்தனை விதமாக எத்தனை முறை பாடமுடியும்? அதையே திரும்பத்திரும்பப் பாடி எப்படியோ காலத்தை வென்றிருக்கிறார் என்றால் அவருடை ராமகாதலின் ஆழத்துக்கு எத்தனை பரிமாணங்கள்(?) உண்டென்று கொஞ்சம் கொஞ்சமாக அலசத்தொடங்கினோம்.. இசையுடன் இழைந்திருந்த தியாகய்யரின் obsession பற்றி அலசினோம். அவருடைய வெற்றியின் ரகசியம் கவித்துவமா ராமகாதலா என்று சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்கையில்.. தியாகய்யரின் வெற்றி உலகறிந்த வெற்றி அல்ல என்றார் ஒரு நண்பர். புதுமுகம்.<br />
<br />
ப்ராம், பாக், மோசார்ட் போல தியாகய்யர் ஏன் உலகப் பிரபலமாகவில்லை என்று புது நண்பர் விவாதம் தொடங்கினார். ப்ராம், பாக், மோசார்ட் பற்றி எத்தனை பேர் தென்னிந்தியாவில் அறிந்திருப்பார்கள் என்று பதிலுக்குக் கேட்டேன். என் கேள்வியின் காரணம் "உலகப்புகழ்" என்பது அவரவர் வரையும் அறிவு மற்றும் கால வரம்புக்குட்பட்டது என்ற எண்ணமே தவிர, இவருடைய உலகப்புகழ் அவருடைய உலகப்புகழை விட மாறுபட்டது என்ற எண்ணமல்ல. நண்பர் உடனே மேற்கத்திய சம்பிரதாய இசையைப் பிட்டு வைத்து தென்னிந்திய சம்பிரதாய இசையுடன் ஒப்பிட்டு சாகித்தியம் வேறு சங்கதி வேறு என்றாக்கினார். தான் ஒரு இசைப் பேராசியர் என்பதையும் அடிக்கடி நினைவூட்ட மறக்கவில்லை. இந்தியாவிலும் சைனாவிலும் பேதோவன் பாக் படிக்கும் மாணவர்கள் போல் மேலை நாட்டில் தியாகய்யரைப் படிப்பதில்லை... தென்னிந்திய சமூகத்தைத் தவிர தியாகய்யரைப் பலரும் இந்தியாவில் கூட அறியவில்லை.. ஏஆர்ரகுமானை அறிந்த அளவுக்குக் கூட மேலையர்.. ஏன் இந்தியர்கள் கூட தியாகய்யரை அறியவில்லை என்பது சாத்தியம் என்று ஒரு கு தூ த போட்டார். இணைய உலகின் ஆதிக்கத்தில் தென்னிந்திய சம்பிரதாய இசை விரைவில் பின்னுக்குத்தள்ளப்படும் என்று சரமாரியாகப் பொழிந்தார். நான் குறிப்பிட்ட சில தியாகய்யர் க்ருதிகளை விவரமாகப் படம் வரைந்து பாகங்களைக் குறித்தார். <br />
<br />
பார்த்தேன். தவித்தேன். பதுங்கிடத் துடித்தேன். <br />
<br />
என் தட்டில் இன்னும் கொஞ்சம் உருளைக்கிழங்கு சீடைகளை அள்ளிக்கொள்ளும் சாக்கில் நழுவினேன். 'க்ருஷ்ணா ரக்ஷஸ்வமாம்' என்று ராதாஜெயலட்சுமி மனமுருகிக் கோரிக்கை விட்டுக்கொண்டிருந்தார். நன்று. இத்தனை விரும்பிக் கேட்கிறேனே தவிர ராதாஜெயலட்சுமி ஒருவரா இருவரா என இன்றுவரை அறியேன். இதுதான் என் ரகம்.<br />
<br />
        இந்த வருடத்திய அமெரிக்க தேர்தல் நிலவரம் எங்கள் எல்லாருக்குமே கொஞ்சம் வருத்தத்தைத் தரும் விதத்தில் அமைந்து வருகிறது. <br />
<br />
ட்ரம்பின் வளர்ச்சி எதிர்பார்த்ததே. ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோல் யாராவது சடசடவென்று உயர்வதும் சரியான நேரத்தில் தெளிவு உண்டாகி அடங்குவதும் இயல்பு. இந்த முறை எல்லாருமே சற்று அதிர்ச்சியுடன் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். "பெண்கள் மோசமானவர்கள்" என்றார். ஆதரவு வளர்ந்தது. "எங்கெங்கெல்லாம் இரத்தம் வருகிறதோ உனக்கு?!" என்று கொச்சையாக பெண் நிருபரைச் சாடினார். ஆதரவு உயர்ந்தது. "நிருபர்களை வெறுக்கிறேன். அதற்காக அவர்களைச் சுட மாட்டேன்" என்றார் தார்மீகத்துடன். ஆதரவு வடக்கே போனது. "மெக்சிகோவினர் கற்பழிப்புக்கும் போதைப்பொருள் விற்பனைக்கும் மட்டுமே லாயக்கு" என்றார். ஆதரவு அதிரடியாக உயர்ந்தது. "முஸ்லிம்கள் யாருக்குமே அமெரிக்கா வர அனுமதி வழங்கக்கூடாது" என்றார். ஆதரவு ராகெட்டில் ஏறியது. "அடிக்கடி ஒன்றுக்குப் போகிறார். அசிங்கம் அசிங்கம்" என்று ஹிலரி க்லின்டனைப் பற்றிப் பொதுமேடையில் பேசினார் ஆதரவு வானைத்தொட்டது. தான் பதவியேற்ற முதல் நாள் முதல் வேலையாக துப்பாக்கி தடை செய்யப்பட்ட இடங்கள் அத்தனையும் நீக்குவேன் என்றார். ஆதரவு சமீப பவர்பால் லாட்டரிப் பரிசுப்பணம் போல் பெருகிக்கொண்டே போனது.<br />
<br />
கொஞ்சம் அந்தப்பக்கம் எட்டிப் பார்த்தால் ஹிலரிக்கு கிடைத்துவரும் ஆதரவும் அதே அதே ஸேம் ஸேம். அதிர்ச்சியாக இருக்கிறது. எகிப்து லிப்யாவில் நடந்த தூதரகத் தாக்குதல்களுக்கு சாக்கு போக்கு பூசணிக்காய் என்று எதையெதையோ சொல்கிறார். ஆதரவு அடங்கவில்லை. அரசாங்கத் தகவல் தொடர்புக்கு தனி இமெயில் வசதியைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றக் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் பிட்டுவைக்கப்படுறது. ஆதரவு அடங்கவில்லை. ரஷியா வடகொரியா ஈரான் சைனா என்று வரிசையாக வெளியுறவு விவகாரங்களில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதாளத்துக்கும் கீழே புதைபடுவதை பட்டி தொட்டியெல்லாம் அறிகிறது. ஆதரவு அடங்கவில்லை. <br />
<br />
ட்ரம்ப் க்லின்டன் இருவரும் இப்படியென்றால் பிற ரிபப்லிகன் டெமோக்ரேட் வேட்பாளர்கள் வேடிக்கையோ வேடிக்கை. ஜெப் புஷ் பெயர்க்காரணத்தினால் மிகவும் சிரமப்படுகிறார். அது போதாமல் உருப்படியாக எதுவும் பேசாதிருப்பதால் கேலிக்குரியவராக சித்தரிக்கப்படுகிறார். பெயர்க்காரணமாகவும் இருக்கலாம். saturday night liveல் அவரைக் கிழி கிழியென்று கிழிக்கிறார்கள். 'ஜெப்ரா' என்று யூட்யூபில் தேடிப்பார்த்து சிரிக்கவும். பெர்னி சேன்டர்ஸ் வாயைத் திறந்தாலே புட்டுக்குவாரோ என்று பயமாக இருக்கிறது. டெமோக்ரேட் வேட்பாளர்களின் மொத்த வயது எண்ணிக்கை அறுநூறுக்கு மேல் இருக்கும் போலிருக்கிறது. இருப்பதே மூன்று வேட்பாளர்கள் தான்! ரிபப்லிகன் பியோனா அவ்வப்போது தோன்றி பேந்தப் பேந்த விழிக்கிறார். அவருக்குப் போட்டியாக ரூபியோ பேந்தப் பேந்த விழித்து புரியாமல் ஏதோ சொல்கிறார். டெட் க்ரூஸ் "என்னை யாருக்குமே பிடிக்காது என்பது எல்லோரும் அறிந்ததே. அதனால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்னை வெறுப்பார்கள். நான் அவர்களை வெறுப்பேன்" என்று குட்டையில் விழுந்து விழுந்து எழுகிறார்... இல்லை விழுகிறார். <br />
<br />
"இதில் மோடியையும் காந்தியையும் கிண்டல் செய்ய என்ன தகுதி இருக்கிறது நமக்கு?" என்றேன். மூத்த நண்பருக்கு மோடி ஆகாது. மோடி மோசடி என்று அடிக்கடி சொல்பவர். இசைப் பேராசிரியர் வழக்கம் போல் எந்தக்கட்சிக்கும் எதிர்க்கட்சியாக. "மோடி செய்து கொண்டிருப்பது அமைதிப்புரட்சி. இப்ப தெரியாது. இன்னும் பத்து வருடங்களில் வெளிப்படையாகத் தெரியப்போகும் பலன்களுக்கான ஆணிவேரை வளர்ப்பதில் குறியாக இருக்கிறார். அது எல்லாருக்கும் எளிதாகப் புரியாது" என்றார்.<br />
<br />
"கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்களேன்?" என்றேன்.<br />
<br />
பதிலைக்காணோம். மோடி ஒபாமாவைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை என்றார் மூத்த நண்பர். பேராசியர் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்வையை வீசினார். "இந்தியப் பாரம்பரியத்தை பெருமையைக் காக்கக் கூடிய ஒரு தலைவர் சமீப நூறு ஆண்டுகளில் உருவாகியிருக்கிறார் என்றால் அது மோடி மட்டுமே" என்றார். உடனே கண்மூடித்தனம் என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது.<br />
<br />
அதைத்தவிர, ஒண்ணுமே புரியலே அரசியல் உலகத்திலே.<br />
<br />
        மிக நெருங்கிய நண்பர் ஒருவர் எங்களுடன் கலந்து கொள்ளாததைப் பற்றிப் பேச்சு வந்தது. இலினாய் மாநிலத்தின் பிரபல கல்லூரியொன்றில் பொறியியல் படித்துவந்த நண்பரின் மகன் காரணம் புரியாமல் இறந்துவிட்டதை மிகுந்த வருத்தத்துடன் பேசினோம். நண்பருக்கு ஒரே குழந்தை. மிகவும் நன்றாகப் படித்து வந்த மகன். படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு பொதுச்சேவை என்று பலவகையில் பெயர் சம்பாதித்து வந்த மகன் திடீரென்று இறந்து விட்டார். இருபத்தொரு வயது! இருபத்தொரு வயது! அத்தனை வயதில் சாவதற்கு அப்படி என்ன அவசரம்? கல்லூரி.. படிப்பு.. பெற்றோர்.. காதல்.. கடன்.. என்ன பிரச்சினை அந்த இளைஞருக்கு என்று தெரியப்போவதே இல்லை.. எந்தப் பிரச்சினையானாலும் பெற்றோரிடமோ அல்லது நெருங்கியவர்களிடமோ பேசித் தீர்க்காமல் ஏன் உயிரைத் தீர்த்துக் கொண்டார்? கல்லூரி விடுதி அருகே அவரது உடல் கிடந்ததை வைத்து தற்கொலை விபத்து இரண்டில் ஏதோ ஒன்று என்று பூசிவிட்டார்கள். எப்படி இறந்தாலென்ன - இழப்பு இழப்பு தானே? இறந்த காரணத்தைப் பற்றி ஆளுக்கொன்று சொன்னாலும் அவர் இறந்து போனது நிஜம். நண்பரும் அவர் மனைவியும் அனுபவிக்கும் சோகம் நிஜம். 'இதற்காகவா அமெரிக்கா வந்தேன்!' என்று நண்பர் ஓவென்று அழுதது நிஜம். "இருபத்துமூன்று வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பப் போகிறோம்.. எங்கள் பெற்றோரிடம் என்ன சொல்வது? என்ன சாதித்தோம் அமெரிக்காவில் என்று எப்படிச் சொல்வது? இனி வரும் நாட்களை எப்படிச் சந்திப்பது?" என்று நண்பரின் மனைவி கேவியது நிஜம்.<br />
<br />
இன்னொரு நண்பரின் இரண்டு பிள்ளைகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகி லட்சக்கணக்கான டாலர் செலவில் சிகிச்சை பெற்றுவருவது பற்றிப் பேசினோம். இன்னொரு நண்பரின் மகன் படிப்பில் கவனமில்லாமல் எதையெதையோ செய்து.. கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டதைக் கூடத் தெரிவிக்காமல்.. எங்கோ ஓடிப்போனதைப் பற்றிப் பேசினோம்.<br />
<br />
அமெரிக்கா வாழ் எங்கள் சந்ததி எங்களிடமிருந்து என்ன கற்றுக் கொண்டிருக்கிறது? ஒரு வேளை அவர்களை அளவுக்கு அதிகமாகப் போற்றிப் பொத்தி வளர்த்துவிட்டோமோ? சிறிய சிக்கல்களைக்கூட தன்னம்பிக்கையுடன் சந்திக்க முடியாமல் செய்துவிட்டோமோ? அல்லது எங்கள் கனவுகளைத் திணித்து அவர்களைச் சுயமாகப் பொறுப்புணர்ந்து வாழ விடாமால் வளர்த்துவிட்டோமோ? அல்லது ஒருவேளை இன்றைய இளையசமூகம் உண்மையிலேயே இளமையில் நாம் சுமந்ததை விட அதிகமாகச் சுமக்கிறார்களோ? அப்படி என்ன பாரம்? நெருங்கிய வட்டத்தில் இத்தனை சரிவுகளைப் பார்த்ததும் இளைய சமுதாயமே சரிவதைப் போல் நினைக்கிறோமோ? இப்படி நிறையப் பேசினோம். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல அவர்கள் தலைமுறையின் மொத்த எதிர்காலம் பற்றியும் கவலையுடனும் அக்கறையுடனும் பேசினோம். <br />
<br />
"என்னவோ தெரியவில்லை. எத்தனை சுமையிலும் எத்தனை இறுக்கத்திலும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இழக்காமல் இருக்க வேண்டும் என்பதை என் அம்மா எங்களுக்கு வார்த்தையில் சொல்லித் தரவில்லை. வாழ்ந்து சொல்லிக் கொடுத்தார்" என்றேன். <br />
<br />
நாங்கள் வளர்ந்த சூழல் பற்றி நிறையப் பேசினோம். முதல் முறையாக ஒரு சந்தேகம் என் மனதில் அரும்பியது. நம் பிள்ளைகளை விட நாம் சற்றுத் திடமானவர்களோ என்று. கூடாது. அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்களாகவே.. எல்லா விதத்திலும் உயர்ந்தவர்களாகவே.. விளங்க வேண்டும். விளங்கட்டும்.<br />
<br />
        அமெரிக்கப் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையதிகாரிகள் நிறைய பேர் இந்தியர்களாக இருப்பதாலா அல்லது அமெரிக்க நிறுவனங்கள் வரிசையாக இந்தியாவில் முதலீடு செய்வதாலா.. மின் தொழில்நுட்பங்களின் அடுத்த உறையுள் பெங்களூரோ என்று சிறிது விவாதித்தோம். இந்தியாவிலிருந்து உருப்படியாக ஏதாவது தோன்றுமா அல்லது வெறும் பேச்சோடு நின்றுவிடுமா என்று நண்பர்கள் ஆளாளுக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னார்கள். என் இந்திய அனுபவம் சொல்லிக்கொள்ளும்படி அமையாததைப் பற்றிப் புலம்பினேன். 'இதைச் சாய்ப்பேன்.. அதைப் பிடுங்குவேன்' என்று சொல்லிச்சொல்லி எதையும் செய்யாமல் என் முதலீட்டையும் நேரத்தையும் வீணாக்கியதைப் பற்றிப் புலம்பினேன். எனக்குத்தான் வேலை வாங்கத் தெரியவில்லை என்று இசைப் பேராசிரியர் சொன்னதும் காலிப்புட்டியால் அவரை அடிக்கலாம் என்று தோன்றினாலும் அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் என்பதும் உறைத்தது. தொழில்நுட்பமோ எதுவோ இந்தியாவின் திறனை அசலாக வெளிக்கொண்டு வந்தால் சரிதான்.<br />
<br />
        இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிப் பேசினோம். இவர்களை வளர்த்தது அமெரிக்காவா? வளர்ப்பது சவுதியா? இன்றைய சிரியா இப்படிச் சீரழிவதும் அடுத்த சிரியா எது என்றும் பேசினோம். 'மற்ற இடங்களை விடுங்கள் இந்தியாவில் தீவிரவாதம் பரவியிருப்பதைப் பாருங்கள்!' என்றார் ஒரு நண்பர். 'ஐஸிஸ் இயக்கத்தில் எத்தனை இந்தியர்கள் - தமிழர்கள் - இருக்கிறார்கள் தெரியுமா?' என்று ஒரு பட்டியல் போட்டுச் சொன்னார். பஞ்சாப் அடுத்த சிரியாவாகும் வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு குண்டைப் போட்டார் இன்னொரு நண்பர்.<br />
<br />
        இதே ரீதியில் தொடர்ந்து கருடபுராணச் சித்திரவதை பற்றிப் பேச்சு வந்தது. சித்திரவதை மூன்றே வகைப்படும் என்றுத் தீர்மானமாகச் சொன்ன என்னைக் கேள்வியுடன் பார்த்தார்கள்.<br />
<br />
"உயிருடன் கொளுத்துவதோ அல்லது கொதிக்கும் எண்ணையில் முக்கியெடுப்பதோ முதல் வகை சித்திரவதை. அதைவிடக் கொடுமையானது... இரண்டாவது வகை. உயிருடன் இருக்கையில் உடல் அங்கங்களை முள்சுற்றிய துருப்பிடித்த கத்தியோ அரிவாளோ கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி, வெட்டிய துண்டுகள் மேல் தாண்டவம் ஆடுவது. அடுத்த.."<br />
<br />
"நிறுத்துப்பா.. இதைவிடக் கொடுமையானதா..?"<br />
<br />
"மூன்றாவது போல் கொடுமையானது இல்லை" என்றேன். "நாற்காலியில் ஆளைக் கட்டிப்போட்டு விஜய்-அஜித் திரைப்படங்களைப் பார்க்கவைப்பது - இதான் மனிதம் வடித்த மிகக் கொடுமையான சித்திரவதை. அத்தனை கருடபுராணங்களின் சாரம்" என்று நான் சொன்னபோது, நானே நடுங்கத் தொடங்கியது நிஜம்.<br />
<br />
        இது போன்ற நேரங்களில் யாராவது புத்தாண்டை நுழைத்து அது தவிர்க்க முடியாத தர்க்கமாகிப் போவதும் வாடிக்கையாகிவிட்டது. அதுவரையிலான உடல், மன முதிர்ச்சி மற்றும் வருட இறுதி மனநிலைகளைப் பொறுத்து உறுதிமொழிகள் கட்டப்படுகின்றன என்பது புரிந்தாலும், டிசம்பர் 25ம் தேதி வந்தால் போதும், வருடம் விடாமல் புத்தாண்டு உறுதிமொழிகள் பற்றி ஏதாவதொரு பேச்சோ வாதமோ வந்துவிடுகிறது. பதினாறுக்கான உறுதிமொழிகள் பற்றிய பேச்சும் அப்படித்தான் வந்தது. <br />
<br />
அடிச்சுக்க ஆள் பிறக்கவில்லை என்ற ரீதியில் மணி அய்யரைப் பின்னணியில் ரசித்துக்கொண்டிருந்த போது ஸ்டேன்லி கூப்ரிக்கின் பழைய படத்தில் வரும் காலமுரண் கட்டிடம் போல் நிரடி நின்றது - புத்தாண்டு உறுதிமொழிகள் பற்றிய திடீர் பேச்சு! ஒரு நிமிடமாவது சிந்தித்து உறுதிமொழிகளைப் பற்றிச் சொல்லப் பணித்தது குழு. <br />
<br />
பின்னணி இசை பாலமுரளியின் நனுபாலிம்ப என்று மாற, சற்று சிந்தைக்கும் ஈய வசதியாகிப் போனது. ஆகா ஓகோவென்று என் இசைவட்ட நட்பு சில இழைந்தாலும் பாலமுரளி எம்எஸ் இருவரின் இசையும் எனக்கு ஊறுகாய் போலத்தான். தேவைப்பட்டால் சுவைப்பேன், அவ்வளவே. என் முறை வரவும் பாலமுரளியை விட்டு புத்தாண்டு உறுதிமொழிகள் இரண்டைப் பகிர்ந்து கொண்டேன்.<br />
<br />
"முதலாவது... இனி என் நலனில் கவனம் செலுத்தப் போகிறேன். physical, mental or financial... மூவகை நலங்களிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை ஒவ்வொரு மாதமும் அடையப் போகிறேன்" என்றேன்.<br />
<br />
"இரண்டாவது?"<br />
<br />
சொன்னேன்.<br />
<br />
"இதெல்லாம் எப்படி உறுதிமொழி ஆகும்?" என்றார் இசைப் பேராசிரியர்.<br />
<br />
"ஏன் ஆகாது?" என்றேன்.<br />
<br />
"உறுதிமொழி என்பது ஒரு புதுமுயற்சியைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஒரு பரந்துபட்ட நற்பலனைத் தருவதாக இருக்க வேண்டும். தொலை நோக்கு இருக்க வேண்டும்"<br />
<br />
சர்க்கரை காரணமாக எனக்கு ஏற்கனவே பார்வை மங்கத் தொடங்கிவிட்டது. சாராயமும் காரணமாக இருக்கலாம். இவர் இந்த நேரத்தில் தொலை நோக்கு என்கிறாரே? "அப்படிப்பட்ட உறுதிமொழிக்கான உதாரணம் சொல்லுங்களேன்?" என்றேன்.<br />
<br />
"உறுதிமொழிக்கான உதாரணம் தெரியாமலா இத்தனை வருடங்களைக் கடந்திருக்கிறீர்கள்? உங்கள் உறுதிமொழி முட்டாள்தனமாக கேலிக்குரியதாக இருக்கிறது" என்றார். ouch..below the belt! மூத்த நண்பர் குறுக்கிடாவிட்டால் என் உறுதிமொழியை மட்டுமல்ல என்னையும் தாக்கித் தள்ளியிருப்பார் கனியிருப்பக் காய் கவரும் பேராசியர். "உறுதிமொழிகளை நிறைவேற்றினால்.. அதனால் பலன் பெறுகிறவர்களுக்கும் நிறைவு கிடைக்க வேண்டும், உறுதிமொழியை நிறைவேற்றும் நமக்கும் நிறைவு கிடைக்க வேண்டும்".<br />
<br />
"அதுவும் சரிதான்" என்று மறுபடி உகிசீ எடுக்க நழுவினேன். "நான் ப்லாக் எழுதுறதை நிறுத்தினால் படிக்கிறவங்களுக்கு நிம்மதி கிடைக்குமே தவிர அதனால எனக்கு ஒரு நிறைவும் கிடைக்காது" என்று அரை டஜன் உகி சீடைகளை அள்ளிக்கொண்டேன். ஒன்றை மெள்ள வாயிலெறிந்து சற்று உரக்கவே சுவைக்கத் தொடங்கினேன்.<br />
<br />
</span>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com23