2011/01/01

புத்தாண்டில்

சிரித்து வாழ வாழ்த்துக்கள்.



சொல்லாதே துன்பத்தைச் சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே...

21 கருத்துகள்:

  1. இதுவரை கேட்டிராத பாடல். அருமையான வரிகளில் ஒரு ஜாலியான பாட்டு. நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  2. இதுவரை கேட்டிராத பாடல். அருமையான வரிகளில் ஒரு ஜாலியான பாட்டு. நன்றி அப்பாதுரை!

    ரிப்பீட்டு...

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டு பாட்டு அருமை ..இதில் டி.எம்.ஸ் எஸ்.பி.பி .. இன்னமும் பல குரல்கள் சேர்ந்து வருகிறமாதிரி தெரிகிறது.. இந்த பாட்டை கேட்டதில்லை ..நிறைய தட்டுக்கள் வைத்திருக்கிறிர்கள் போல் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  5. புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கேயிருந்து புடிக்கிற இந்த மாதிரி பாடல்களை. பாட்டும், இசையும் நல்லா இருந்தது

    பதிலளிநீக்கு
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பாதுரை

    பதிலளிநீக்கு
  7. நல்ல பாடல். வித்தியாசமான செலெக்ஷன். இந்தப் படத்தில் சந்தோஷமான தருணங்கள் ரொம்பக் கம்மி. அதில் இந்தப் பாடலும் ஒன்று. படத்தையும் சோகத்தின் உச்ச கட்டமான கடைசி காட்சியையும் மறக்கவே முடியாது. அதே சமயம் கற்பழிக்க ஒருவன் பக்கம் வரும்போது ஒரு பெண் ட்யூன் போட்டுப் பாடிக் கொண்டே தப்பிக்க நினைப்பாளா என்றும் வியக்க வைத்த படம்!
    பத்மநாபன், நிறைய குரல் இல்லை மூன்று மட்டுமே. படம் புன்னகை. பாலச்சந்தர் படம்.
    மூன்றாவது குரல் சாய்பாபா.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி meenakshi, ஆதிரா, பத்மநாபன், எஸ்.கே, geetha santhanam, எல் கே, ஸ்ரீராம், anu, vasan, ...

    ஸ்ரீராம்... டிஎம்எஸ் குரல் நிச்சயம் சிவாஜிக்கு பாடியது போல் படுகிறது. இந்தப் பாட்டில் டிஎம்எஸ் "பயணம் போ..கும் போது நில்லா..தே" என்று இழுப்பது சிவாஜிக்கான மேனரிசம். வழக்கமாக இந்த இழுப்புக்களில் சிவாஜி இடது தோளை ஒரு சிறு சுற்று சுற்றுவார் அல்லது இடது கையை தலைக்கு மேலே உயர்த்தி தலையைச் சாய்ப்பார்.. இந்த இழுப்பைக் கேட்கும் போதெல்லாம் உடனே சிவாஜியின் மேனரிசம் கண் முன் நிற்கும்.

    பாட்டு சேர்த்தேனே தவிர மற்ற விவரங்களை நான் சேர்த்ததே இல்லை.. இது வேறே ஏதோ படம்.

    பதிலளிநீக்கு
  9. புன்னகை ஜெயந்திக்காகவும் நாகேசுக்காகவும் பலமுறை பார்த்திருக்கிறேன் - mostly ஜெயந்திக்காக. மிகவும் படித்த கலைஞர்.

    சோகமயமான படம். கற்பழிப்பு பாடல் காட்சி was an insult.

    புன்னகை, பாலசந்தரின் crossover படம் என்று நினைக்கிறேன். சேகர் மோகன் போல் இடமிருந்து வலமாக ஜோக்சரம் வெடித்துக் கொண்டிருந்தவர், திரைப்படம் எடுக்கத் தொடங்கியது எதிரொலி, புன்னகை டயத்தில் என்று நினைக்கிறேன். என் கணிப்பில், பாலசந்தர் அரைகிணறு தாண்டும் டைரக்டர் - (இதுக்கு யாராவது அடிக்க வந்துறப் போறாங்க. நாலு நாள் பொறுங்கய்யா, மொத்தமா சேத்து வையுங்க.) பாலசந்தர் படம் பார்க்கும் அனுபவம் விசித்திரமானது - எப்படா பார்ப்போம் என்று இருக்கும், பார்த்தபின் ஏன் பார்த்தோம் என்று தோன்றும். ஒரு படம் விடாமல் இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. (அவள் ஒரு தொடர்கதை is an exception)

    பதிலளிநீக்கு
  10. //பத்மநாபன், நிறைய குரல் இல்லை மூன்று மட்டுமே.// நன்றி ஸ்ரீ .. நானும் குத்து மதிப்பா சரியாய்த்தான் சொல்கிறேன்...
    சாய்பாபா... இன்னோரு நல்ல பாட்டை கேட்ட ஞாபகம் ..சற்றென்று வரமாட்டேன் என்கிறது....

    அப்பாதுரை...பாலசந்தரின் நகைச்சுவை படங்கள் கூட சேர்த்திக்க மாட்டிங்களா..பாமா விஜயம்..தில்லுமுல்லு...

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரை,
    அது புன்னகைப் படம்தான். ஜெயந்தி பற்றி நீங்கள் சொன்னதைப் படித்ததும் உண்மைத் தமிழன் தனது தளத்தில் ஜெயந்தி பற்றி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் நினைவுக்கு வந்தன!!!
    பத்மநாபன்,
    சாய்பாபா பாடிய இன்னொரு பாடல் என்றால் நிறைய பாடல்களில் அவர் கூட பாடியிருந்தாலும் வீட்டுக்கு வீடு படத்தில் நாகேஷுக்காக 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது...அதுவோ?

    பதிலளிநீக்கு
  12. இருக்கலாம் ஸ்ரீராம். எனக்கு உண்மையிலயே தெரியாது. கேக்குறப்ப சிவாஜி போல இருந்தது அதான்.. உண்மைத்தமிழன் என்ன சொன்னாரு? போய்ப்பாக்குறேன்.

    சாய்பாபா பாடிய இன்னொரு பாட்டு: குளிரடிக்குதே கிட்ட வா

    பதிலளிநீக்கு
  13. மன்மத லீலைல பட் பட் பாட்டு சாய்பாபாவா?

    பதிலளிநீக்கு
  14. குளிரடிக்குதே பாட்டில் சைட் குரல் இருக்குன்னு நினைக்கறேன்....
    பட பட மன்மதலீலை பாட்டு ஏ வி ரமணன்...

    பதிலளிநீக்கு
  15. ஏவி ரமணன்! மறந்தே போச்சு! நன்றி.
    ஒரே ஒரு பாட்டு தான் பாடினாரா?

    சாய்பாபா பாடின இன்னொரு சைடு: உன்னைத் தொடுவது இனியது. (தனிப்பாட்டு பாடியிருக்காரா என்ன?)

    பதிலளிநீக்கு
  16. நட்சத்திர மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..........

    பதிலளிநீக்கு
  17. தமிழ்மணம் வலைப்பதிவில் இந்த வருடத்தின் முதல் வாரத்தின் நட்சத்திர பதிவாளராக நீங்கள் தேர்வாகி இருப்பதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  18. நன்றி எஸ்.கே, anu, வழிப்போக்கன் - யோகேஷ், meenakshi, திகழ், ...

    பதிலளிநீக்கு