2012/06/03

சுபம்


    “நெனச்ச காரியம் நடக்கலே ராணி” என்று சலித்தபடி உள்ளே நுழைந்தக் கணவரை வருத்தத்துடன் பார்த்தாள் காவிரி.

“பாத்துங்க.. தலை இடிச்சுக்கும்.. கவனிங்க” என்று நிலைப்படிக்கு விரைந்து சென்று, கைத்தாங்கலாக அவரை உள்ளே அழைத்து வந்தாள். “ரெண்டு நிமிசம் உக்காருங்க..” என்று அவரை வீட்டின் ஒரே நாற்காலியில் உட்கார வைத்தாள். சுவரோரமாக இருந்த நைந்தத் திண்டுத் தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி எடுத்து வந்தாள். கணவரின் கால்களை உயர்த்தி, “.. ஒரு நல்ல செருப்பு வாங்கிக்கங்கனா கேக்குறீங்களா? வெறுங்காலோட இப்படி வெயில்ல நடக்காதீங்கனு சொன்னா கேக்கணும்..” என்றாள்.

“நீ நல்லாருக்கணும் ராணி” என்று சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கொண்டவரின் தலைமுடியை லேசாகக் கோதி விட்டாள். சுவரலமாரியில் இருந்த அம்ருதாஞ்சன் புட்டியைத் திறந்து ஓட்டிக்கொண்டிருந்த களிம்பை விரலால் சுரண்டி எடுத்து அவர் நெற்றியில் இடம் வலமாகத் தடவினாள். முந்தானையைக் கயிறு போல திரித்து தலையைச் சுற்றி இறுக்கிப் பிடித்தாள்.

“ம்ம்ம்.. ரொம்ப இதமா இருக்கு ராணி.. உன் கைல இதோ இந்த நேரத்துல இப்படியே போயிடலாமானு தோணுது ராணி” என்றவரின் கண்களில் உருண்ட கண்ணீர்த் துளிகளைக் குனிந்து உதட்டால் முத்தமிட்டுத் துடைத்தாள். முந்தானைச் சுற்றை விலக்கினாள். “போறதும் வாறதும் நம்ம கைலயா இருக்கு?” என்று அவர் நெற்றியில் இன்னொரு முத்தமிட்டாள். “டீ போட்டுக் கொண்டாறேன்.. கொஞ்ச நேரம் கண்ணை மூடுங்க” என்றபடி சமையலறைக்குள் சென்றாள்.


மீதிக் கதை: அதீதம் மின்னிதழில்.
நன்றி அதீதம்.