2012/02/01

விட்டேனா பார்




    போன பதிவுக்காகக் கிண்டியதில் மிஞ்சியதுடன் அவசரமாக ஒரு பதிவு போட விரும்பினேன். அவசியத்தைக் கடைசியில் சொல்கிறேன்.

    pregnancy test சாதனத்துக்கு இப்படி ஒரு விளம்பரம். கிறிஸ்மஸ் நேரத்தில் வெளிவந்த விளம்பரம். அடி சக்கை!
    வுன்டுக்கு ராஜன் என்றால் சும்மாவா? டிஎம்எஸ் வளர்ச்சியில் சிவாஜி எம்ஜிஆருக்கு எத்தனை பங்குண்டோ அதற்கு ஈடான பங்கு இருவரின் வளர்ச்சியிலும் டிஎம்எஸ்சுக்கு உண்டு. பாடலுக்கு ஏற்றாற் போல் நடிப்பதில் சிவாஜி எம்ஜிஆர் இருவருமே வல்லவர்கள் என்பார்கள். சிவாஜி கேட்கவே வேண்டாம் - சில நேரம் பாட்டையே கெடுத்துக் குட்டிச்சுவர் செய்தாலும் பெரும்பாலும் பின்னணிக் குரல்களுக்கு உயிர் கொடுத்தவர் (ஏ எம் ராஜா மட்டும் ஏனோ சிவாஜிக்கு ஒத்து வரவேயில்லை). எம்ஜிஆருக்குப் பொருந்தி வராத குரலே இல்லை எனலாம் - எம்ஜிஆரும் குரலோடு ஒத்து நடித்தார். ஆனால் இந்தப் பாடலில் எம்ஜிஆர் சொதப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். எம்ஜிஆர் சொதப்பியது இந்த ஒரு பாடல் மட்டுமே என்றும் தோன்றுகிறது. எம்ஜிஆரை விடுங்கள். சரோஜாதேவியைக் கவனியுங்கள். இந்தப் பாடலுக்கு சரோஜாதேவி படத்தில் உயிர் கொடுத்திருக்கிறார். அபிநய சரஸ்வதியென்று சரியாகச் சொன்னார்கள்.
ரு பாட்டில் சொதப்பினார் என்றால் இன்னொரு பாட்டில் சேர்த்து வைத்து தூள் கிளப்பியிருக்கிறார் எம்ஜிஆர். சிவாஜி வாடை வீசினாலும், அட்டகாசமாக நடித்திருக்கிறார். நாகேஷ் கண்றாவியைத் தவிர்த்திருக்கலாம், பொருந்தவில்லை.

இரண்டு பாடல்களிலும் இசையமைப்பு உலகத்தரம்.

எம்ஜிஆர்-சரோ ஜோடி எனக்குப் பிடிக்கும்.

    2008ல் "புஷ்"ஷை எதிர்த்து ஒரு கல்லை நிற்க வைத்தால் கூட வெற்றி பெறும் என்றது டெமோக்ரேட் கட்சி. ஒருவேளை அதைத்தான் செய்தார்களோ என்ற சந்தேகம் எனக்குள் நான்கு வருடங்களாகவே இருந்தாலும், இப்போது ஒபாமாவை எதிர்த்துக் களிமண்ணை நிற்க வைத்தாலும் வெற்றி பெறும் என்கிறது ரிபப்லிகன் கட்சி. கல்லை எதிர்த்துக் களிமண்ணா? பலே! கண்மூடி மக்களுக்கு கல்லும் ஒன்றுதான், களிமண்ணும் ஒன்றுதான்.

வரும் நவம்பரில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட ரிபப்லிகன் கட்சி வேட்பாளர் தேர்தல் சூடுபிடிக்கிறது. மிட் ராம்னி, ஹெர்மன் கெய்ன், நூட் கிங்ரிச், ரிக் சேந்டோரம், ரான் பால் என்ற ஐவரில் (அறுவரான மிசல் பாக்மன் பாவம்) யார் வேட்பாளர் என்ற உள்கட்சித் தேர்தல். தொடக்கத்திலிருந்தே 'மிட் பணக்காரன்' என்றார்கள். அவருடைய மோர்மன் மதச் சார்பைப் பற்றி அதிகம் சொல்லத் துணிச்சல் வரவில்லை. அதனால் 'சுயமாகக் கோடிக்கணக்கில் சம்பாதித்த பணக்காரன்.. போதாக்குறைக்கு பரம்பரைப் பணம் வேறே.. ஏழை படும் பாடு அறியாதவன்' என்று திட்டத் தொடங்கினார்கள். பதிலுக்கு 'பெண் பித்தன்' 'ஊழல் பேர்வழி' 'மக்கள் பணத்தை அபகரித்தவன்' என்று கெய்னையும் நூட்டையும் மிட் திட்டித் தீர்த்தார். ரிக்கும் ரானும் நொடிந்து விட்டார்கள். இப்போது மிட்டுக்கும் நூட்டுக்கும் குடுமிப் பிடி. ஊழலும் கபடமும் நூட்டைத் தொடர்ந்து நிழலாக வருகிறது. மிட்டைத் தொடர்ந்து அவருடையப் பணம் வருகிறது. 'ஊழல்' 'ஏமாற்று' 'மக்கள் பணம்' 'பெண் பித்தன்' 'கோபக்காரன்' 'ஒத்துழைக்கத் தெரியாதவன்' என்று பலவாறு திட்டுகிறார் மிட். 'பணக்காரன்' 'பணக்காரன்' 'பணக்காரன்' அப்புறம்.. 'பணக்காரன்' என்று திட்டுகிறார் நூட். நூட்டுக்கு ஜூட்.

இதில் ஒபாமாவுக்குத் தான் குஷி. எம்ஜிஆர் போல் (காமராஜ்?) படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று சொல்லி வழக்கம் போல் தூங்கப் போகலாம். உளுத்தப்பை ராஜ்ஜியத்தில் உதவாக்கரை ராஜா.


    "ம்ம்ம்" என்ற ரஸூல் சிரித்தான். "இவனால் நம் காதல் பிழைத்தது. ஒருவேளை பீஜாபூர் சுல்தானுக்கு இவனைப் பிடித்துப் போய் இவன் மூலமாக நமக்கு ஒரு வழியும் பிறக்கலாம்.. யாருக்குத் தெரியும் ஸ்வர்ணா? இந்தப் பிள்ளையின் தலையில் என்ன கவிதை எழுதியிருக்கிறானோ இறைவன்?" என்றான். அதீதத்தில் புதுவம்சமும் பூச்சாண்டிப் படமும்.


    போன வாரம் வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று கூகுல் குண்டு வெடித்தது. பிலாக்கில் மூன்றாம் சுழியும் நசிகேத வெண்பாவும் காணவில்லை! சூடாமுடியும் லிப்போவும் இன்னொரு சோதனை பிலாகும் இருக்கிறது, இந்த இரண்டையும் காணோம். வெண்பா பதிவை வெளியிடலாமென்று பார்த்தால் ஆட்டம் குளோஸ் என்றது பிலாகர்! 'ஐயையோ!' என்று அரண்டுபோய் பிலாகர் உதவியை நாடினேன்.

நாலு நாள் இமெயில் போராட்டம் முடிந்து கடைசியில் என்னுடன் தொலைபேச இணங்கிய கூகுல்பெண் சாதாரணமாக, "மூன்றாம் சுழி, நசிகேத வெண்பா இரண்டும் உங்களது இல்லை" என்றாள்.

"அடியே..அடியே! நியாயாயாயாயமா நீ சொல்லுறது?" என்றேன். "ரொம்ப வருஷமா எழுதிக்கிட்டு வரேன். அதும் நசிகேதன் கதை இருக்குதே.. ரொம்பக் கஷ்டப்பட்டு எழுதுறேண்டி.. என்னுது இல்லைனு அலட்சியமா சொல்லுறியே.. நல்லாருப்பியா?" என்றேன்.

"எங்க சிஸ்டத்துல இருக்குறதைத்தான் சொல்லுறேன்" என்றாள்.

"அத்தான் பொத்தானு என்னென்னவோ சொல்றியேடி என் தங்கம்.. ஐயையோ.. அது சிஸ்டமில்லேடி, கஸ்டம்! என்னோட பிலாக் ப்ரோபைலில் தெரியுது. ஆனா டேஷ்போர்டில் கோவிந்தான்னுதே? சரியாப் பாரும்மா ஒரு அப்பனுக்குப் பொறந்த கொழந்தே" என்றேன். ஏதோ சொல்லிக் காணாமல் போனாள் கொழந்தே.

கடைசியில் வேறே ஒரு சூபர்வைசர் வந்தார். நம்ம ஊர்க்காரர். 'ஆகா!' என்று அவரிடம் புலம்பினேன். நம்ம ஊர்க்காரராச்சே, வார்த்தைக்கு வார்த்தை இங்கிலிபிசு. 'ஹேக்' என்றார், 'பேக்' என்றார், என்னென்னவோ சொன்னார். கடைசியில் சிக்கலைத் தீர்த்து வைத்தார் சிகாமணி.

அடுத்த முறை கூகுல் 'privacy' 'security' என்ற பெயரில் உபரி அடையாளம் சேர்க்கச் சொன்னால் சோம்பல் படாமல் மறு கேள்வி கேட்காமல் சேர்க்கப் போகிறேன்.

18 கருத்துகள்:

  1. நவரசம் ததும்பிய பதிவு சார், அமர்க்களம்.

    பதிலளிநீக்கு
  2. //2008ல் புஷ்ஷை எதிர்த்து..//
    2008ல் புஷ் பண்ணிய கூத்தினால் மெக்கெயினை எதிர்த்து.. என்று இருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  3. good catch bandhu. திருத்தி விட்டேன். சொல்ல நினைத்தது ரிபப்லிகன் கட்சி.

    பதிலளிநீக்கு
  4. விட்டேனா பார்ன்னு பிடிச்சிடீங்களா! சூப்பர்!

    pregnancy test படம் அட்டகாசம்.

    'பாரப்பா பழனியப்பா' பாடல் காட்சியை இப்பதான் சமீபத்துல அமுதகானம் நிகழ்ச்சியில் பாத்தேன். அஷ்டகோணல்தான் இந்த பாட்டுல எம்.ஜி.ஆர். வாயசைப்பு. எனகென்னவோ இந்த பாட்டை கேக்கும்போதெல்லாம் 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' பாடல்தான் கூடவே நினைவுக்கு வரும். ஏன்னா இந்த பாட்டுல 'கெட்டு போன புள்ளிகளா, வாழ பட்டணத்தில் வந்தீகளா' அப்படின்னு எழுதிட்டு, 'பாரப்பா பழனியப்பா' பாட்டுல 'சேத்த பணம் செலவழிஞ்ச நாட்டு பக்கம் ஒதுங்குதப்பா' அப்படின்னு எழுதி இருக்கார். கண்ணதாசனுக்கு ரெண்டு பாட்டுலேயும் பட்டணத்தை பத்தி எப்படிப்பட்ட கண்ணோட்டம்னு எப்பவுமே நினைப்பேன்.

    அதீதத்துல பூச்சாண்டி படம் ஜோரா இருக்கு. :) கதையை படிச்சாச்சு. கருத்தை அதுலேயே போடறேன்.

    பதிலளிநீக்கு
  5. தலைவரே! ப்ளாக்கைக் காப்பாற்றிக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஒரு தனி பதிவு எழுதுவீர்களா?

    pregnancy test படம் இந்தியாவில் வெளியிட்டிருந்தால் நாடு ரெண்டுபட்டு போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. ஹையா! எனக்கும் உங்களைப் போலத்தான் எம்.ஜி.ஆர் -சரோஜா தேவின்னா ரொம்பப் பிடிக்கும். (அரச கட்டளைல ‘புத்தம் புதிய புத்தகமே’ன்னு ஒரு பாட்டு... பாருங்களேன்) ப்ளாக்கை மீட்ட கதை சுவாரஸ்யம். எனக்கும் ஒருமுறை இப்படி ஏற்பட்டு, தானாகவே அடுத்த நாள் சரியாச்சு. நீங்க போராடி மீட்டிருக்கீங்க. அதீதம் படிச்சுட்டு ‌வர்றேன்...

    பதிலளிநீக்கு
  7. கண்மூடி மக்களுக்கு கல்லும் ஒன்றுதான், களிமண்ணும் ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லாபிப்ரவரி 02, 2012

    :)Anyhow you regained your blog.

    Enjoy Durai.

    //கண்மூடி மக்களுக்கு கல்லும் ஒன்றுதான், களிமண்ணும் ஒன்றுதான்//

    அடுத்தவன் தலைலப் போடுரதுனு முடிவெடுத்த பிறகு, கல்லென்ன மண்ணென்னனுதான சொல்கின்றிர்கள்

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாபிப்ரவரி 02, 2012

    a quick brown fox jumps right over the lazy dog

    post is like the above sentence, A - Z irukkunga durai.

    Case sensitive(vaa)? Capital letterla eluthirukkanumoo :)

    பதிலளிநீக்கு
  10. 'பிளாக்'கை மீட்ட கதை சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  11. அப்பாஜி...சின்னப்பிளையில இப்பிடி ஒரு பூச்சாண்டியைக் காட்டியிருந்தாங்கன்னா சாப்பிட்டேயிருக்கமாட்டேன் !

    புளொக் தொலையிறதை நிறையப் பேர் சொல்லிட்டாங்க.”பக்”ன்னுதான் இருக்கு !

    பழைய பாடல்கள் எப்பவுமே சூப்பர்.அதுவும் எம்.ஜி.ஆர் + சரோஜாதேவி....!

    பதிலளிநீக்கு
  12. ஆரம்பத்தில் இருந்து படிக்க படிக்க சுவாரசியம் கூடி கொண்டே போனது...ஒருவேளை இறுதியில் நீங்க பட்ட துன்பத்தை ரொம்ப ரசிச்சதால் இருக்குமோ ?!! :)

    பிளாக்கை மீட்டதை எப்படின்னு தெளிவா ஒரு பதிவு போட்டா உதவியா இருக்கும்...!!

    // அடுத்த முறை கூகுல் 'privacy' 'security' என்ற பெயரில் உபரி அடையாளம் சேர்க்கச் சொன்னால் //

    இதை பற்றி எனக்கு ஒரு மெயில் வந்தது...ரொம்பப நீளமா இருந்ததால படிக்க சோம்பல் பட்டு கண்டுக்காம போயிட்டேனே...!! :) ம்...உடனே அதை என்னனு பார்க்கணும்.

    இதுக்காக உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. //போன பதிவுக்காகக் கிண்டியதில் மிஞ்சியதுடன் அவசரமாக ஒரு பதிவு போட விரும்பினேன். அவசியத்தைக் கடைசியில் சொல்கிறேன்//.

    உண்மையாகச் சொல்லுகிறேன் அப்பாதுரை சார். எனக்கொன்றும் புரியவில்லை. ப்ளாக் மீட்டது தெரிகிறது.
    கடைசியில் அவசியத்தை சொல்லியிருக்கிறீர்களா.?

    பதிலளிநீக்கு
  14. ஐயையோ..ப்லாக் போயிடுமா..பயமா இருக்கே..அட ராகவனே! ஒண்ணும் பண்ணிடாதப்பா...கூகுளாண்டவருக்கு கொழுக்கட்டை நைவேத்யம் பண்றேன்!

    பதிலளிநீக்கு
  15. ஒருவழியா பாடுபட்டு பிளாக்கை மீட்டுட்டீங்க போல

    பதிலளிநீக்கு
  16. நசிகேத வெண்பாவுக்கு இப்பவே காப்புரிமை வாங்கி வச்சுக்கங்க. காக்கா ஊஷ்... ஆயிடப்போறது.

    பதிலளிநீக்கு
  17. தங்கள் எழுத்தின் மேல் நான் வைத்துள்ள மதிப்பின் சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன். என் தளத்துக்கு வருகை தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    http://minnalvarigal.blogspot.in/2012/02/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  18. நன்றி meenakshi, RVS ((பதிவு ஐடியா கொடுத்தீங்க.. ஆனா எழுதுற அளவுக்கு எதுவும் இருக்குதா தெரியல.. 'இலவசம்'னாலே 'நம்பமுடியாது ஜாக்கிரதை'னு அர்த்தம் - அரசியலைச் சொல்லலிங்க.. இருந்தாலும் தெரிஞ்சிக்கிட்டதை ஒரு இலவசப் பதிவாக்கிட்டாப் போகுது :),கணேஷ்,இராஜராஜேஸ்வரி,ஸ்ரீராம்., ஹேமா, Kousalya, G.M Balasubramaniam, ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, ராஜி, geetha santhanam, ...

    பதிலளிநீக்கு