2012/12/28

கனவு பலி...க்கும்




"வாங்க டாக்டர் ஜேம்ஸ்" என்றார் மணிவண்ணன்.

"அவசரமாக என்னைப் பார்க்கச் சம்மதித்ததற்கு நன்றி, டாக்டர் மணி" என்றார் அரைப் புன்னகையுடன் அறையுள் நுழைந்த ஜேம்ஸ். "இந்தப் பிரச்சினை என்னைக் குடைஞ்சிட்டே இருக்கு. நானே விக்டிம் ஆயிட்டது நம்ப முடியலே"

"உக்காருங்க.. ப்லீஸ் செடில்" என்று சாய்விருக்கையைச் சுட்டினார் மணி.

"முதல்லயே சொல்லிடறேன் டாக்டர் மணி.. இது கொஞ்சம் விபரீதமான கேஸ்.." சொகுசுச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மெள்ளச் சாய்ந்து கொண்டார் ஜேம்ஸ்.

"பொறுமையா விவரம் சொல்லுங்க.. எந்த விபரீதமானாலும் வி ஷல் கம் அவுட் டுகெதர்" என்றபடி ஜேம்சின் தலையருகே இருந்த ஒரு நேர் நாற்காலியில் அமர்ந்துத் தன் ஐபேடைத் தட்டி எழுப்பினார் டாக்டர் மணி.

அரை டசன் பெருமூச்சுகளுக்குப் பிறகு பேசத் தொடங்கினார் ஜேம்ஸ்.

"ரெண்டு மாசம் முன்னே டாக்டர் விமலா என் க்லினிக் வந்தாங்க. தன்னை ட்ரீட் பண்ண முடியுமானு கேட்டாங்க"

"யு மீன்..?"

"ஆமா.. அவங்களே தான்.. பிரபல உளவியல் மருத்துவரான விமலா எங்கிட்டே ட்ரீட்மென்ட் தேடி வந்திருக்காங்களேனு ஆச்சரியமா இருந்துச்சு எனக்கு. எல்லா மருத்துவர்களுமே நோயாளிகள் தான்னு கல்லூரியில படிச்சது நினைவுக்கு வந்துச்சு. பட் வந்திருக்குறது விமலான்றதால மரியாதை கலந்த பயத்தோட சிகிச்சையைத் தொடங்கினேன்.."

"ம்ம்.."

"ஆறு மாசம் முந்தி அவங்களைத் தேடி ஒரு பேசண்ட் வந்தாராம்.. தொடர் கனவின் விளைவாக தூக்கமிழந்ததாகச் சொன்னாராம்.."

"ம்ம்.. தொடர்ந்து சொல்லுங்க.."

"கோட்டூர்புரம் ஸ்டேசன்ல சென்னை பீச் போற வழியில நின்னுட்டு இருக்கேன் டாக்டர்.. மதியம் பனிரெண்டு மணி இருக்கும்.. காலேஜ்ல செமஸ்டர் பரீட்சைக்குப் போவணும்.. கூட்டம் அதிகம் இல்லே.. மொதல்ல ஒரு ஆளு வரான்.. கைல ஒரு கறுப்பு க்ளவுஸ் போட்டிருக்கான்.. பாக்சிங் எல்லாம் பண்றாங்களே அது போல பருத்து வெயிட்டா இருக்குது அவன் கை.. காத்துல குத்து விடுறாப்புல கையை வீசி நடந்துகிட்டு வரான்.. அதுக்கு பயந்துகிட்டே வழியில நின்ன சிலபேருங்க நவுந்து ஒதுங்குறாங்க..

..இந்த ஆளு என்னைத் தாண்டிப் போவுறான்.. கொஞ்ச நேரத்துல இன்னொரு ஆளு வரான்.. அவன் ஒரு பொண்ணை இழுத்துட்டு வராப்புல இருக்குது.. பக்குனு ஆவுது எனக்கு.. ஆனா அந்தப் பொண்ணு தானாவே அவன் கூட வராப்புலயும் இருக்குது.. வயசுப் பொண்ணு.. பச்சைக் கலர் சட்டையும், ஜீன்சும் போட்டுகிட்டிருக்கு.. தயங்கித் தயங்கி அதே நேரம் பலாத்காரத்துக்குப் பயந்து வராப்புலவும் இருக்குது.. பக்குனு ஆவுது எனக்கு..

..என்னைத் தாண்டிப் போவுறப்ப கவனிச்சேன்.. பொண்ணு மூஞ்சி பேயடிச்சாபுல இருக்குது.. கண்ணுல தண்ணி காஞ்சிருக்குது.. ஆனா அந்தாளு பொண்ணை இழுத்துகிட்டு போயிட்டே இருக்கான்.. 'யாராவது உதவி செய்யுங்களேன்.. ஐயோ.. தயவு செய்து யாராவது என்னைக் காப்பத்துங்க'னு அந்தப் பொண்ணு அமைதியா அழுதுகிட்டே வேண்டுறாப்புல இருக்குது.. ஆனா வாய் திறந்து கத்தக் காணோம்.. யாரும் கண்டுக்கிட்டதாகவே தெரியலிங்க.. அதுக்குப் பிறகு பத்தடி தள்ளி இன்னொரு ஆள் கைல பாக்சிங் உறை மாட்டிக்கிட்டு அவங்க பின்னால போறான்..

..என்னால எதுவும் செய்யாம இருக்க முடியலே.. ஆனா என்னா செய்யுறதுனு தோணலே.. செல்போன் எடுத்து போலீசுக்கு சொல்லலாம்னு பாத்தேன்.. பக்கத்துல நின்னுட்டிருந்த ஆளு என் செல்போனை தட்டி விட்டான்.. 'தம்பி.. உன் வேலையைப் பாரு.. வம்புல மாட்டிக்காதே'னு கிசுகிசுனு சொல்றாரு..

..செல் போனை எடுத்துப் பையில போட்டேன்.. அந்தப் பொண்ணுக்கு எதுனா உதவி செய்யணும்னு துடிக்குது மனசு.. அந்தப் பொண்ணை எங்க கூட்டிக்கிட்டுப் போறான்னு பாத்துருவோம்னு அவங்க பின்னால போனேன்.. காலேஜுக்குப் போவணும்னு ஒரு அலாரம் மனசுல அடிக்குது.. ஆனா அந்தப் பொண்ணோட முகம் என் மனசுல பெரிய பீதியைக் கிளப்பி விட்டுருச்சு.. ஒரு ஆதரவில்லாத பொண்ணுன்றது மட்டுமில்லே.. இப்படி பொதுமக்கள் நடுவுல பட்டப்பகல்ல எங்க கண் முன்னாலயே இழுத்துட்டுப் போற அக்கிரமத்தைத் தாங்க முடியலிங்க.. எதுனா செய்யணும்னு வேகம்..

..நான் அந்தப் பொண்ணு கிட்டே போய் நின்னேன்.. வண்டி வந்துச்சு.. ஏறினாங்க.. நானும் சட்டுனு அவங்க கூடவே ஏறினேன்.. அந்தப் பொண்ணு கிட்டே ரொம்பத் தெரிஞ்சவன் போல 'என்னம்மா? எக்சாம் போவலியா?'னு கேட்டேன்.. அந்தக் காலிப் பசங்க விலகிடுவாங்கனு நெனச்சது தப்பாப் போச்சு.. வண்டி கிளம்பினதும் அந்த ஆளு என்னை அப்படியே ப்ளேட்பாரத்துல தள்ளி விட்டான்.. விழுந்து புரண்டு கை காலெல்லாம் அடி..

..மறுநாள் மதியம் ஸ்டேசன்ல நின்னுட்டிருக்கேன்.. சீக்கிரமே வந்துட்டனா.. அங்க இங்கே பார்வை மேஞ்சிட்டிருக்குறப்ப அதே பொண்ணைப் பார்த்தேன்.. அவசரமா அதுகிட்டே போய் 'மேடம்.. நேத்து நீங்க.. உங்களுக்கு எதுனா ஆயிடுச்சுனு பயந்துட்டிருந்தேன்.. அந்த ஆளுங்க..'னு இழுத்தேன்.. அந்தப் பொண்ணு சுருக்குனு 'மிஸ்டர்.. உங்க வேலையைப் பாத்துகிட்டு சும்மா இருங்க'னுச்சு..

..அஞ்சு நிமிசமோ பத்து நிமிசமோ இருக்கும்.. மொத நாள் பாத்த அதே ஆளு வந்தான்.. வேகமா அவ கிட்டே வந்து நின்னான்.. எதிர்பார்க்கவே இல்லிங்க.. பட்னு அவ கன்னத்துல அறைஞ்சான்.. ஆடிப்போயிட்டேன்.. என்னவோ திட்டினான்.. அதுக்கு அந்தப் பொண்ணு என்னவோ சொல்லி அழுவுது.. என்ன ஆனாலும் பரவாயில்லேனு நான் அந்த ஆள்கிட்டே போய் 'மிஸ்டர்.. என்ன அந்தப் பொண்ணை இப்படி அடிக்கிறீங்க? போலீஸ் கம்ப்லெயின் குடுக்கறேன்னு சொல்லி அவனை அங்கயே செல்போன்ல போட்டோ எடுத்தேன்.. அவன் என் போனைப் பிடுங்கத் தாவினான்.. நான் சட்டுனு ஓட ஆரம்பிச்சேன்.. அவன் என்னைத் துரத்தினான்.. நான் 'மேடம்.. ஓடிறுங்க.. ஸ்டேசன் டிகெட் கவுன்டர்கிட்டே போலீஸ் நிக்குறாங்க.. போங்க'னு கத்திக்கிட்டே ஓடினேன்... அந்த ஆளு என்னைத் துரத்திட்டு வந்துப் பிடிச்சுட்டான்.. செத்தடானு சொல்லிக் கத்தியை உருவினான்.."

"கனவு அங்க நின்னுடுச்சாம்.. சரியா அந்த இடத்துல தினம் அந்தாளு முழிச்சுக்குவானாம்.. அப்புறம் தூக்கம் வராம ரா முழிச்சு தவிப்பானாம்.." என்றார் ஜேம்ஸ்.

"ம்ம்.."

"டாக்டர் விமலா அவனுக்கு முதல்ல மெலடனின் ட்ரீட்மென்ட் குடுத்தாங்க.. ரெண்டு வாரமோ என்னவோ கொடுத்து அதுக்குப் பிறகும் நிலமை கொஞ்சம் கூட இம்ப்ரூவ் ஆவலியாம்.. பிறகு நாலு வாரம் லைட் பேர்பசுரேட் கொடுத்துப் பாத்தாங்க.. நோ யூஸ்.. ஒரு நாள் ட்ரீட்மென்டுக்கு வந்த ஆளு எழுந்து விமலா எதிர்ல நின்னு நிதானமா ஒண்ணு சொன்னானாம்.. பிறகு திடீர்னு விமலா டேபிள் மேலே இருந்த கத்தரிக்கோலை எடுத்து பச்சு பச்சுனு நாலஞ்சு தடவை மார்ல குத்திக்கிட்டானாம்.. ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போறதுக்குள்ளாற க்லினிகலி டெட்.. ஆர்டீரியல் லேசரேசன்.."

"குட்னஸ்!"

"அதுக்குப் பிறவு ஒரு மாசமோ என்னவோ பொறுத்து விமலா என் க்லினிக் வந்தாங்க.."

"ம்ம்.. அதானா? குத்திக்கிடறதுக்கு முன்னால என்ன சொன்னானாம்?"

"இங்க தான் விபரீதம் தொடங்குது டாக்டர் மணி.. சொல்றேன்.."

"சொல்லுங்க.."

"டாக்டர் விமலாவுக்கு அதே கனவு வரத் தொடங்கிச்சாம்.. முதல்ல அவங்க சைகோ அனேலிசிஸ் செய்யுறதா வேணாமானு குழம்பி அப்படியே விட்டுட்டாங்க.. ஆனா தினம் தூக்கம் கெட்டுப் போனதும் என் கிட்டே வந்தாங்க.. நான் நாலஞ்சு வாரம் அவங்களுக்கு பேர்பசுரேட்டும் அமிட்ரிடைலினும் குடுத்தேன்.. ஹிப்னோசிஸ் சிகிச்சையும் குடுத்தேன்.."

"ம்ம்."

"ரெண்டு மாசம் முன்னே க்லினிக் வந்து, கனவு நின்னுடுச்சு, ரொம்ப தேங்க்ஸ்னாங்க.. பிறகு எழுந்து என்னெதிரே வந்தாங்க.. என் கண்ணைப் பாத்தாங்க... அவங்க பேசன்ட் சொன்னதை ரிபீட்.. அப்படியே என் கிட்டே சொன்னாங்க. நான் சுதாரிக்கறதுக்குள்ளாற தன் கைப்பையிலிருந்த ரிவால்வர்னால பின் கழுத்துல சுட்டுக்கிட்டாங்க.. யு நோ தி ரெஸ்ட்.."

"குட்னஸ்! அந்த க்லினிக்?"

"ஆமா.. அவங்க சுட்டுக்கிட்ட பிரபல மருத்துவமனை என்னுடைய க்லினிக் தான்.. பெயர் வராமத் தடுத்துட்டேன்.."

மணி புன்னகைத்தார். "டாக்டர் ஜேம்ஸ்.. உங்களுக்கு இப்ப இந்தக் கனவு வருதுனு சொல்றீங்க.. சரியா?"

"ரைட்.. மூணு வாரமா தினம் அதே கனவு.. வெயிட் பண்ணி வெயிட் பண்ணிக் கடைசியிலே உங்க கிட்டே வரலாம்னு முடிவு செஞ்சேன்.."

"என் திறமைல நம்பிக்கை வச்சு என் கிட்டே வந்ததுக்கு நன்றி டாக்டர் ஜேம்ஸ்.. கவலைப்படாதீங்க.. இது இனி நீடிக்காம பாத்துக்குவேன்.. நீங்க உடனே என் கிட்டே வந்திருக்கணும்"

"என்னோட கவலை அதில்லே டாக்டர் மணி.. கனவு என் கிட்டேயிருந்து உங்க கிட்டே வந்தப்பிறகு.. எனக்கு சாக விருப்பமில்லே.. அதுக்கு மேலே.. உங்க சாவுக்கு நான் காரணமாகிறேனேனு எனக்கு கில்ட்.."

"டேக் இட் ஈஸி, என் மேசைல கத்தரிக்கோல் துப்பாக்கி எதுவும் கிடையாது.. இனி இங்க வரப்ப உங்களைச் சோதனை செஞ்சுதான் உள்ளே விடுவேன்.. பர்கிவ் மி.." என்று மணி சிரித்தார். "டாக்டர் ஜேம்ஸ், மைல்ட் பேர்பசுரேட்ல தான் நானும் உங்க சிகிச்சையைத் தொடங்கப் போறேன்..".

டாக்டர் மணி சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தார். எதிரே இருந்தவரை நெருங்கினார்.

மிக அமைதியான குரலில், "டாக்டர்.. எனக்கு சரியாயிடுச்சு.. கனவு நின்னுடுச்சு.. உங்க பத்து வாரச் சிகிச்சைக்கு நன்றி. ஆனா இப்பலேந்து கனவு உங்களுக்கு தொத்திக்கும்.. என்னையும்.. எனக்கு முன்னால டாக்டர் ஜேம்ஸ், டாக்டர் விமலா, அவங்க பேசன்ட் போல.. உங்க தூக்கத்தையும் கெடுக்கும்.. பலி கூட வாங்கிரும்.. குட்பை டாக்டர் சுதா" என்று சடுதியில் ஓடி, பதினோறாம் மாடி ஜன்னல் கண்ணாடிக் கதவை உடைத்துக் குதித்தார்.



புத்தாண்டு வாழ்த்துக்கள்

28 கருத்துகள்:

  1. தொடர் கனவு. துரை, படிக்கறவங்களுக்கு வராதே!!ஸ்ஸ்ஸ்.
    நல்லவேளை.ஸைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போகிற வழக்கம் இன்னும் வரவில்லை.:)

    பதிலளிநீக்கு
  2. தொடர் கனவை நீங்க தொடர்பதிவாக்கி வருசம் பூராவும் எங்களுக்கு திகில் கொடுக்கப்போறீங்க. சரியா!!!!

    இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  3. தொடர் கனவு சைக்கியாரிஸ்ட்டுக்குத்தானே வரும், கதை கேட்ட சாமானியர்களுக்கு இல்லையே?. எனக்குத் தெரிஞ்சு போச்சு, இந்தியா போய் தொடர்ந்து டிவி நியூஸ் பார்த்திருக்கீங்க. tv syndrome தான் இது ஸ்ந்தேகமே இல்லை.

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மூன்றாம் சுழி வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் நசிகேத வெண்பாவைப் போல் மேலும் ஒரு சிறந்த படைப்பை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. ஐயோ... நான் இதை படிக்கவே இல்லைங்கோ!

    மகிழ்வான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. ஆ.....ஆ...

    //அந்த ஆளு என்னைத் துரத்திட்டு வந்துப் பிடிச்சுட்டான்.. செத்தடானு சொல்லிக் கத்தியை உருவினான்..//

    எனக்கு இதோட தொடர்ச்சி கனவா வருது... கத்தியை உருவியவன் செல்போன் பேசிகிட்டே கார்ல ஏறி கோட்டூர்புரம் ப்ரிட்ஜுக்கா போறான். போறானா.... அங்க காரை நிறுத்திட்டு செல்போன் பேசிகிட்டே இறங்கிக் கோபமா நடக்கறான்... அங்க என் கனவு நிக்குது... ஒவ்வொரு பதிவராப் பார்த்துச் சொல்லச் சொல்லுது... முதல்ல உங்க கிட்டதான் சொல்றேன்.... அடுத்த பதிவரைத தேடிக் கிளம்பறேன்.,..

    :)))

    பதிலளிநீக்கு
  7. கோட்டூர்புரம் ப்ரிட்ஜ் வேண்டாமே ஸ்ரீராம். வேற பக்கம் வைத்துக் கொள்ளலாம். துரை கதைக்கு எத்தனை எஃபெக்ட் பார்த்தீங்களா.:) மூன்றாம் சுழி படிக்க வருகிற அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கனவில்லாத தூக்கம் வரவும் பிரார்த்தனைகள்:)

    பதிலளிநீக்கு


  8. "இந்த தொடர் கனவு , கனவு வந்தப்புறம் சிகிச்சை, பார்பிடுரேட், அமிட்டிரிப்டலைன் ,
    ஹிப்னோஸிஸ் எல்லாமே ...

    யாருக்கு வரும்னு எனக்குத் தெரியும்.... "

    'உங்களுக்கு வந்ததா ?'

    "தெரியல்ல... "

    " ஏன் ?"

    "வருமோ வந்திடுமோ அப்படிங்கிற பயத்துலேயே இரண்டு வாரமா தூக்கமே இல்ல..."

    " அப்படியா ... அதற்கும் சிகிச்சை இருக்கு...."

    " ஆனா சிகிச்சை முடியும்போது உங்களிடம் கத்தி, துப்பாக்கி, இல்லையே ?"

    "இல்லாட்டி என்ன ?"

    " நீங்க பதினிரண்டாம் மாடிலயும் இல்லயே ?"

    "இல்லாட்டி என்ன....?!!!"

    " எனக்கு நீங்க சிகிச்சை தரமுடியும் அப்படிங்க்ற நம்பிக்கை வேண்டாமா ?"

    "அப்ப என்ன செய்ய... ""

    " இந்தாங்க.. இந்த கத்தி, துப்பாக்கி எல்லாம் பிடிங்க...
    என்னோடய பின்னாடி வாங்க..."

    "எங்க...? "

    "பதினிரன்டாம் மாடிக்கு....."


    (appadurai follows in silence subbu thatha)

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  9. ஹிஹிஹி, நான் தூங்கவே மாட்டேனே, இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?

    பதிலளிநீக்கு
  10. சீரியல் கனவு, கலர் கனவுனு எல்லாம் கேள்விப் பட்டிருக்கேன். இது புதுசா இருக்கு, ஆனாலும் நல்ல கனவு தான். நினைச்சு நினைச்சுச் சிரிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. படிச்ச எனக்கு எதுவும் கனவு வராதவரைக்கும் சரிதான்... வித்தியாசமான சப்ஜெக்ட்ல ரசிக்க வைக்கற மாதிரி கதையைச் சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு என்னோட அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. // எனக்கு இதோட தொடர்ச்சி கனவா வருது... கத்தியை உருவியவன் செல்போன் பேசிகிட்டே கார்ல ஏறி கோட்டூர்புரம் ப்ரிட்ஜுக்கா போறான். போறானா.... அங்க காரை நிறுத்திட்டு செல்போன் பேசிகிட்டே இறங்கிக் கோபமா நடக்கறான்... //

    யோவ் ! நில்லுய்யா !! அப்படின்னு ஒரு ஸௌன்டு வருது.

    நிக்கறான். ...

    யாரு அது !! திரும்பி பாக்கறான்.

    அப்பதான் ஸௌன்டு கொடுத்த அவனும் பின்னாடிலேந்து ஒரு வீச்சறுவாளை எடுத்துக்கிறான்.

    டேய்.... சும்மா அதிருதில்ல....

    டேய்....

    அப்படின்னு ரெண்டு பேரும் முன்னாடி பாயுறாங்க... ...

    (தொடரும்....)

    ஹாப்பி நியூ இயர்

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  14. அப்பாஜி.........தனிய இருக்கிற என்னை இப்பிடிப் பயம் காட்டிட்டு பிறகென்ன புத்தாண்டு வாழ்த்து.எனக்கு வேணாம் இப்ப.இன்னும் 3 நாள் இருக்கே.அப்ப வந்து சொல்லுங்கோ !

    பதிலளிநீக்கு
  15. இந்தியாவில பேப்பர் படிக்கிற லட்சக்கணக்கான பேர் இப்படிபட்ட கனவை அனுபவித்து வருகிறார்கள் ! அப்பதுரை அவர்களே! ஏன் நீங்கள் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது ?( ஒரு குட்டி தகவல் ! இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற D.செல்வராஜ் எனக்கு மிகவும் நெருக்கமான தோழர் ! அவரோடு நங்கள் 16 பேர் சேர்ந்து தமிழ்நாடு ம்ற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தோம்! அவர் எந்த பெரிய பத்திரிகைகளுக்கும் கதைப் எழுதியதில்லை! ) ---காஸ்யபன்.v

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லாடிசம்பர் 28, 2012

    நல்ல கதை. :))

    அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. //டாக்டர் மணி சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தார். எதிரே இருந்தவரை நெருங்கினார்.
    ............

    மிக அமைதியான குரலில், "டாக்டர்..//

    'நெருங்கினார்'- க்கும், 'மிக அமைதியான குரலில்'-க்கும் மத்தியில் இன்னொரு கதையைப் பதுக்கி வைத்திருப்பது தான் உங்கள் சாமர்த்தியம்!

    //குதித்தார்.//

    யார்?- என்று கேள்வி கேட்டால், டாக்டர் சுதாவுக்கு தன் கனவை மாற்றிய அவரின் கதையும், பெயரும் தெரியும்!

    பதிலளிநீக்கு

  18. எனக்கு அந்தக் கனவு வராது. டாக்டர் சுதா என்னிடம் சிகிச்சைக்கு வரமாட்டார். நான் ஒரு டாக்டரல்லவே.

    சாதாரணமாக கனவுகள் கோர்வையாக வருவதில்லை. வந்தாலும் கோர்வையாக நினைவு படுத்த முடியாது. அப்படி முயலும்போது நிறையவே கற்பனைகள் கலக்கும். என்னதான் இருந்தாலும் அப்பாதுரைக்கு ஒரு கதை நாம் படிக்க. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. டாக்டர், வரக்கூடாத கனவெல்லாம் எனக்கு வருது டாக்டர்!

    என்ன கனவு??

    24 மணி நேரம் மின்சாரம் இருக்கிறாப்போல எல்லாம் கனவு வருதே டாக்டர்!!


    கருத்துக்கு நன்றி கல்கி ன்6--1--2013 இதழ்.

    பதிலளிநீக்கு
  20. இன்று வலைச்சரத்தில் உங்க பதிவை பகிர்ந்துள்ளேன்.வருக! கருத்திடுக!
    மிக்க நன்றி!

    http://blogintamil.blogspot.in/

    பதிலளிநீக்கு
  21. அப்பாஜி! இப்பொழுது தான் 'கையாள்' படித்து முடித்தேன். நீங்கள் அடிக்கடி சொல்கிற வட்டச் சுழற்சி. தவறாமல் 'கடவுளும்' கதையில் ஆஜரானது, எழுதியது நீங்கள் தான் என்று ஊர்ஜிதப் படுத்தியது. நீங்கள் ஏன் பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது என்று காஷ்யபன் சாரும் கேட்டிருந்தார்..

    தமிழகத்து வார இதழ்களில் ஓரளவு வித்தியாசமாக இருக்கிற 'குங்குமத்' தில் வெளிவந்த வித்தியாசமான சிறுகதையாய் இருப்பது சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. இப்படி ஒரு 'பலி' கனவுக்கதையை எழுதி கூடவே புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லும் சாமார்த்தியம் உங்களுக்கே உண்டு அப்பாஜி ஸார்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. அப்பாஜி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.
    நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், நி.எ.

    பதிலளிநீக்கு
  25. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  26. தெற்கே இனமே அழிக்க‌ப்ப்ட‌ட‌து
    ஒன்டே இன்ட்ர்நேச‌ன‌ல் பார்த்தோம்.
    கால்வாயை ம‌றிச்சு க‌ல்லூரி க‌ட்டுவாங்க‌
    ப‌யிரெல்லாம் ம‌ரிச்சு, நாங்க‌ லாசு வாங்கிட்டு
    ஓட்டுப் போட்டேம்.
    அதுனால த‌மிழ‌ன் எதையும் தாங்குவான் என்கிற‌
    ந‌ம்பிக்கையில் இப்ப‌டி ஒரு திகில் புத்தாண்டு வாழ்த்தா?
    இந்த‌ க‌ர‌ண்டு போயிருச்சி.....

    பதிலளிநீக்கு
  27. புது(மை)க்கனவு!
    எப்படி இப்படில்லாம் திங் பண்றீங்களோ? நல்லாருக்கு..
    புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு