2010/04/22

திட்டம்

சிறுகதை


    ள்ளக்காதல் இப்படி ஒரு கொலையில் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஒரே தெருவில் வசித்த காரணத்தால் என் கணவரின் தம்பியுடன் திருமணத்துக்கு முன்பிருந்தே எனக்குப் பேச்சுப் பழக்கம் உண்டென்றாலும், நெருக்கமேற்பட்டது சமீபத்தில் தான். ஏறக்குறைய ஒரே வயது ஏறக்குறைய ஒரே ரசனை என்று தொடங்கிய பழக்கம், ஏறக்குறைய ஒரே படுக்கை என்றளவுக்கு வந்து விட்டது.

எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் நடந்த திருமணம் ஒரே வருடத்தில் ஏமாற்றமாகிவிட்டது. கணவர் நல்லவர் தான். இனிமையாகப் பேசுகிறவர் தான். என்னை மதித்து நடத்துகிறவர் தான். ஆனால் விஸ்கி, மூணு சீட்டு, குதிரைப் பந்தயம், நண்பர்களுடன் பேச்சு, கிரிகெட் போட்டி சினிமா என்று இறங்கிவிட்டால் பெண் துணை தேவையில்லை அவருக்கு. அப்படியே நெருங்கினாலும் ஒரு நிமிடத்தில் ஓய்ந்து விடுவார். தொட்டவுடனே பட்டென்று முடிந்து விடும் எம்டிஆர் புணர்ச்சியை நான் எதிர்பார்க்கவேயில்லை.

முப்பத்திரண்டு இருபத்தெட்டு முப்பத்தாறு என்று நான்காம் வாய்ப்பாடாக எல்லாவற்றையும் அளந்து வளர்த்ததெல்லாம் வீணாகிப் போனதில் எனக்கு வருத்தம் இருக்காதா? உடலுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கணவர் படும் போது பட்டு வாழும் பல பெண்களைப் போலில்லை நான். 'என் வாழ்வு என் உணர்ச்சி' என்று இப்போதில்லை, இள வயதிலிருந்தே இருந்தவள் நான். திருமணத்தை முறித்துக் கொள்ளலாமா என்று நினைத்து அம்மாவிடம் அறிவுரை கேட்ட போது, "பொம்பளையா நீ? இதுக்காகக் கட்டுனவரை விட்டு ஓடுறியா? பத்து நாள் பொத்தலுக்கா படி தாண்டுறே? செருக்கினு சிரிக்குமடி" என்று வெறுப்பும் வேதாந்தமும் பேசினார்.

எல்லாமே அநீதியாகப் பட்டது.

மற்றப் பெண்களைப் போல் குழந்தை குட்டி மாமியார் பக்கத்து வீடு என்று உபரித் தொல்லைகளில் நேரத்தைக் கழிக்கவும் எனக்கு வாய்ப்பில்லை. நோ குழந்தை. நோ குட்டி. நோ மாமியார். நோ பக்கத்து வீடு.

கடைசியில் சொன்னது தவறு. எஸ் பக்கத்து வீடு. அங்கே தான் தொடங்கியது விவகாரம்.

நான்கு வருடங்களுக்கு முன் வேலை மாற்றத்தில் ஊர் திரும்பிய கணவரின் தம்பி, பக்கத்து வீட்டில் குடியேறினான். "வரட்டும் வரட்டும்.. நம்ம வீட்டிலயே இருடானு சொன்னா கேக்க மாட்டுறான். தனி வீட்டுல இருக்குறதும் நல்லது தான். ஒரு பொண்ணைப் பாத்து கட்டி வச்சுருவோம்" என்று கணவர் உற்சாகமானார். இருக்கிற கூட்டம் போதாதென்று தம்பியும் சீட்டாட்ட விஸ்கி விளையாட்டுக்களில் கலந்து கொள்ள, கணவருக்கு ஒரே கொண்டாட்டம். 'ஒரே ரத்தம் தானே, வேறெப்படி இருக்கும்?' என்று நானும் விட்டிருந்த போது, தொட்டான். நெஞ்சைத் தான்.

திடீரென்று ஒரு மாலை, "உன்னாண்ட ஒண்ணு கேக்கணும். எப்பவும் சோகமா இருக்க.. கல்யாண உறவெல்லாம் சரியாத் தானே இருக்கு?" என்றான்.

"சேச்சே.. நல்லாத்தானே இருக்கேன்?" என்று பதில் சொன்ன என்னை அவன் பார்த்த பார்வை! மெள்ளப் பேசத்தொடங்கி நாளாக நாளாக உள்ளத்தைக் கொட்டினேன். அவ்வப்போது ஒன்றாகச் சாப்பிடுவோம். சில திரைப்படப் பாடல்களைக் கேட்போம். பேச்சோடு சரி. இருந்தாலும் மனதளவில் ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். உணர்ந்தோம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் திடீரென்று அவன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டான். "அண்ணே, எனக்கு மறுபடி மாத்தலாயிடுச்சு. பக்கத்து ஊரு தான், இருந்தாலும் இங்கெருந்து தெனம் போய்வர நேரமாகும். அங்கியே ஒரு வீடு பாத்துக்குறேன்" என்று என் கணவரிடம் சொன்ன வார்த்தைகளில் பொய் முலாம் பூசியிருந்ததைக் கவனித்தேன்.

ஒரு வாரம் பொறுத்துத் தொலைபேசினான். "எதுக்கு இப்படிப் பெட்டி படுக்கையோடு கெளம்பிட்டே? இங்கியே இருந்திருக்கலாமே? என் புலம்பல் பிடிக்கலையா?" என்றேன்.

"சொன்னா தப்பா நெனக்காத.. அங்க இருந்தா உன்னை நெருங்கித் தொட்டுறுவனோனு பயம் வந்துடுச்சு. இருந்தாலும் அங்க இருக்குறப்ப, நின்னா உக்காந்தா படுத்தா உன் நெனவு தான். ஒண்ணு ரெண்டு முறை உன்னைத் தொட்டுக் கட்டிடணும்னு கூட நெனச்சேன்... ஆனா உனக்கு இது போல ஏதாவது எண்ணம் இருக்குதா தெரியல... அதுவுமில்லாம அண்ணண் பெண்டாட்டியாச்சே? முறை தவறலாமா? ரெண்டு பேருமே விரும்பினாலும் ஊரு உலகம்னு விவரம் மோசமாயிடுமே? அதனால தான்"

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நொடிகள் மௌனம் காத்துவிட்டு, உண்மையைச் சொல்லி விட்டேன்.

நெருங்கிப் பழகத் தொடங்கினோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொட்டுக்கொண்டோம். அண்ணனுக்கும் தம்பிக்கும் எவ்வளவு வித்தியாசம்! கண்ணதாசன் கவிதை போல என்னைப் படிக்கத் தெரிந்திருந்தது அவனுக்கு. சில சமயம் விறுவிறுப்பான சுஜாதா நாவலானேன் அவன் கையில். பல சமயம் ஏஆர்ஆரின் இலக்ட்ரிக் கிடார் போல் என்னை வாசித்தான். சின்னச் சின்ன மயக்கங்களிடையே நானும் அடிக்கடி டென்டுல்கரானேன்.

கணவருக்கு சந்தேகமேற்பட்டதா தெரியவில்லை. "என்ன நீ? இப்பல்லாம் சிரிச்சு பேசி சந்தோசமா இருக்கியே?" என்பார் என்னிடம். "ஏண்டா, மாத்தலாயிடுச்சுன்னுட்டு பக்கத்து ஊருக்குப் போனவன் தெனம் இங்க வரியே? இங்கியே இருந்திருக்கலாம்ல? இப்பப் பாரு, பக்கத்து வீட்டுல குடிவந்துட்டாங்க" என்பார் தம்பியிடம். "செல்போன் பில்லைப் பாத்தா அவன் போனுக்கு எப்பப் பாத்தாலும் கால் போட்டுப் பேசிட்டிருக்கியே?" என்பார் என்னிடம். "நீ என்னடா, என்னைப் பாக்க வந்தியா? இவளைப் பாக்க வந்தியா? சும்மா அவளையே சுத்திக்கிட்டிருக்கே? வாடா, வந்து ஒக்காந்து என்னாண்ட பேசு" என்பார் தம்பியிடம். திடீரென்று ஒரு நாள் என்னிடம், "அவன் எதுக்கு உன்னாண்ட எப்பவும் கிசுகிசுனு எதுவோ பேசிட்டிருக்கான்? சீட்டு வெளையாட வந்தவன் நிமிசத்துக்கொருக்கா எழுந்து என்னவோ சொல்றானே உன்னாண்ட?" என்றார்.

கவனமாக இருக்கத் தீர்மானித்தோம். கணவரில்லாத பொழுதும் நான் வெளியே கடைத்தெரு என்று கிளம்பிய பொழுதும் மட்டுமே சந்திப்பதென்று முடிவு செய்தோம். எப்படி ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக் கொள்வது? செல்போனைக் கண்காணிக்கிறார். வீட்டில் இமெயில் பார்த்தாலும் பின்னால் நின்று கண்காணிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால் பிளாக் உலகத்தில் சந்தித்து செய்தி தெரிவித்துக் கொள்வதென்று தீர்மானித்தோம். உங்கள் பிளாக், சாம்பார் வடை, கோலிசோடா, இதயம் சாத்துகிறது என்று இரண்டு பேருமே படிக்கும் சில தமிழ் வலைப்பூக்களில் கமென்ட் போடுகிற சாக்கில் மறைமுகமாகச் செய்தி சொல்லிக்கொள்ளத் தொடங்கினோம். மற்ற கருத்தாளர்களைக் கேட்கிற சாக்கில், "என்னங்க கொசுவத்தி? ரெண்டு நாளா ஆளையே காணோமே? வீட்டுல விசேசமா? கலக்கல் கமென்டு போட்டிங்க" என்று எழுதினால் இரண்டு நாளில் வீட்டில் கலக்கலாமென்பது செய்தி. "கல்யாணச் சாப்பாட்டையெல்லாம் பார்த்ததும் உடனே சாப்பிடத் தோணுது. இன்று மாலை காய்கறி வாங்கி நானே சமைக்கப் போகிறேன்" என்று கமென்ட் எழுதினால், காய்கறி வாங்கும் வழியில் மாலையில் சந்திக்கிறேன் என்று செய்தி. சில சமயம் அனானிகளாக கமென்ட் போடுவோம். இப்படி மறைமுகச் செய்தி தெரிவித்து சந்திப்பது வசதியாக இருந்தது. கணவரும் இந்த வலைப்பூக்களைப் படிப்பதால் வீட்டில் சிக்கலே இல்லை. செய்தி சொல்லி, கணவர் இல்லாத நேரத்தில் சந்தித்து மகிழ்ந்திருப்போம்.

புதிதாகக் குடிவந்த பக்கத்து வீட்டுக்காரர் கணவருடன் சீட்டாட்டத்தில் கலந்து கொள்ளும் போது ஒரு நாள் என்னிடம் வந்தார். அவர் சனி ஞாயிறுகளில் கணவருடன் தமிழ் பிளாக் படிப்பதும் கமென்ட் போடுவதும் உண்டு. அன்றைக்கு என்னிடம் தனிமையில் வந்து, "நீங்க கள்ளச்செய்தி தெரிவிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்" என்றார்.

அதிர்ந்தேன். வெளிக்காட்டாமல் "என்ன சொல்றீங்க?" என்றேன்.

"ஒரு யூகம் தான்" என்றவர், சென்ற மூன்று மாதங்களில் நான் இட்ட கமென்டுகளை விவரமாக எடுத்துக் காட்டி, அன்றைக்குக் கணவரின் தம்பி வந்ததையோ நான் வெளியே சென்றதையோ சுட்டிக் காட்டினார். "நீங்க வெளியே போறதைக் கவனிச்சு பின்னால கூட வந்தேன். நீங்க எங்கே போனீங்கனு தெரியும்" என்றார். நான் இன்னும் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தேன். "எனக்கு ஒரு இன்ட்ரெஸ்ட் வந்து துலக்கினேனே தவிர, இது உங்க லைப். நீங்க எப்படி வேணும்னாலும் வாழலாம்" என்றார். நான் பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்

அன்று மாலை கணவரின் தம்பியைச் சந்தித்த போது நடந்ததைச் சொன்னேன்.

"விடு, இதை ஒதுக்கிடறது பெடர்னு தோணுது. அந்த ஆள் இன்னொரு முறை எதுனா சொன்னா பாத்துக்குவோம், அதுவரை நெனைச்சுப் பாக்க வேண்டாம்" என்ற அவனைக் கட்டினேன்.

அவ்வப்போது என்னை ஒரு பொருளுடன் பார்ப்பது போல் தோன்றினாலும், அதற்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரரும் அதைப் பற்றிப் பேசவேயில்லை. என் கணவருடன் சீட்டாட்டம், சனி ஞாயிறு அரட்டை என்று அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து கணவருடனும் என்னுடனும் சிரித்துப் பேசி நன்றாகவே பழகினார். நானும் அவர் சொன்னதை மறந்து முன்னைவிட அதிக சந்தோஷத்துடன் இருந்தேன்.

கொலைக்கு வருகிறேன்.

கணவர் திரும்பி வர நேரமாகும் என்ற நம்பிக்கையில் தம்பியைச் சந்திக்க இருந்தவள், அன்றைக்கு அவன் சொன்ன நேரத்துக்கு முன்பே வருவானென்று எதிர்பார்க்கவில்லை. தன்னிடமிருந்த சாவியை வைத்துக் கதவைத் திறந்து உள்ளே வந்தவன், படுக்கறையில் என்னைப் பார்த்து விட்டான். பக்கத்து வீட்டுக்காரருடன்.

16 கருத்துகள்:

  1. அருமையன கதை. அருமையான நடை. கடைசியில ஒரு வாக்கியத்துல வெச்சியேய்யா ட்விஸ்ட்டு. சூப்பர். இலை மறைவு காய் மறைவாக உணர்த்துவதற்கு வைத்த வார்த்தைகளும் அருமைய்யா.

    பதிலளிநீக்கு
  2. ஐயையே..

    முடிவு எதிர்பார்த்ததுதான்..

    இந்த ப்ளாக்குகளில் 'பேசி'க் கொள்வது என்பது எனக்கும் சில சமயம் சந்தேகம் வரும். ஆனால் ஆன் பெண் நட்பாய் அல்ல..வேறு சில சீரியஸ் விஷயங்களை பரிமாறிக் கொள்வார்களோ என்று...உங்களுக்கு இந்த எண்ணம் ஏன் தோன்றியது என்று சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
  3. சில தமிழ் பிளாக்குகளில் இது வழக்கமா நடக்குறதை கவனித்திருக்கிறேன். குறிப்பாக 'சென்னை வாசிகள்' சில பேருடைய கமென்டுகளைப் படிச்சப்போ சந்தேகமே இல்லாம இது private messaging என்று பட்டது. ஐயையோ எனக்கு ஒண்ணு தெரியாதுங்க... பொடாக்காரங்க வராங்க. மாட்டி விட்டிருவீங்க போலிருக்கே ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
  4. சொல்லப்போனால், இது சில மாதங்களுக்கு முன்னால் 'அப்னா' பிளாக்கில் இரண்டு பேருக்கிடையே நடந்த 'பேச்சு வார்த்தை'யைப் படித்த போது தோன்றித் திரித்த கதை (கன்னாபின்னா கற்பனை ஐயாவின் ஸ்பெஷாலிடி). எந்த இடுகையென்று நான் சொல்ல மாட்டேம்பா.

    பதிலளிநீக்கு
  5. இது தொழில் மாதிரி இல்லே இருக்கு !!

    பாப்பா வீடு எங்கே ?

    பதிலளிநீக்கு
  6. "எம்.டி.ஆர். புணர்ச்சி" நல்ல கற்பனை! :)

    //பாப்பா வீடு எங்கே?// ஆத்துக்கு அண்ணாண்ட!

    பதிலளிநீக்கு
  7. ||சாய்ராம் கோபாலன் கூறியது...
    இது தொழில் மாதிரி இல்லே இருக்கு !! பாப்பா வீடு எங்கே ?||


    பிளாக் மேஞ்சா தெரியுங்க. அதுவும் பழைய இடுகைகளைப் படிச்சா அசத்தலா இருக்கு - பழைய இடுகைகளை யாரும் படிக்க மாட்டாங்கன்ற நம்பிக்கைனால என்னல்லாம் கமென்ட் போடுறாங்க! இப்பத்தான் recent comments எடுத்துப் போடுறதுனால கொஞ்சம் குறைஞ்சிருக்கு - ஆனா நிறைய பிளாக்குல இதுவும் இல்லையா? கசமுசா தான். பாப்பா வீட்டை ஒரு டிபன் பிளாக்குல அழகா with address எடுத்துச் சொல்லியிருக்காங்கப்பா. (அப்படினு நினைக்கிறேன், உதைக்க வந்துடப் போறாங்க)

    பதிலளிநீக்கு
  8. கற்பனை இல்லெங்க meenakshi. ஆம்பிளைங்களைப் பத்தி பொம்பளைங்க வழக்கமா சொல்றது தான் (திட்டறது தான்?)

    பதிலளிநீக்கு
  9. //meenakshi சொன்னது…

    //பாப்பா வீடு எங்கே?//

    ஆத்துக்கு அண்ணாண்ட! //

    ஏங்க அந்த பாப்பா வீடு எங்கன்னு கேட்டா - ஆத்தையும், குளத்தையும் தாண்ட சொல்றீங்க ?

    பதிலளிநீக்கு
  10. அப்பா....பொறுமையா கதை வாசிச்சேன்.முடிவில அசத்திட்டீங்க.இப்பிடியும் நடக்குமா !

    புளொக் பின்னூட்டங்களில எல்லாம் கதை இருக்கா.கவனமாத்தான் இருக்கணும்.கவனிக்கணும் இனி !

    பதிலளிநீக்கு
  11. // பத்து நாள் பொத்தலுக்கா படி தாண்டுறே?//

    பாப்பாவை விட மாமியார் இன்னும் பஜாரி போலிருக்கு ?

    அது காலனியே வைத்திருக்கும் போலிருக்கே ? அண்ணாநகரில் நான் படித்த காலங்களில் எங்கள் வீட்டுக்கு எதிரில் அப்படித்தான் ஒன்று இருந்தது !

    பதிலளிநீக்கு
  12. வாங்க ஹேமா... art imitates life என்பதை நம்புகிறவன் நான். வாழ்க்கையில் நடக்காதது எதுவுமே இல்லை.

    பதிலளிநீக்கு
  13. //ஹி ஹி இங்கியும் அதே தானா?// ஹி ஹி ஆமாம். நான்லாம் பின்னூட்டர் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  14. என்ன பின்னூட்டம் போடணும் தெரியாம அவனவள் ஒரு கால்ல நிக்கணும்ன்றீங்க... எதுவானாலும் புதுமை தான் அமர பாரதி.

    பதிலளிநீக்கு