2014/07/19

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    


லுக்ரீசின் சாபம் [1]

1
விதியின் கைகளில்
வண்ணக் கலவை.
எறிவதற்கான சுவர்
எதிர்வரும் எதிர்பார்ப்பில்.
எறிந்த வண்ணக்குழம்பு
ஓவியமாகுமா
என்பதில் விதிக்கு அக்கறையில்லை.
ஓவியமாக்குவது அதன் வேலையில்லை.

வெற்றி தோல்வியில்
அக்கறையில்லாது
எறியும் பகடையில் குறியாயிருக்கும்
விதி.

வெற்றியும் தோல்வியும்
மனிதரின் வலி.
விளையாட்டு மட்டும்
விதியின் வழி.

இரும்பும்
துரும்பும்
சந்தித்தால்
எது வெல்லும்?

விதியின் பகடை எப்படி உருளும்?

சந்திப்பவை மட்டும்
இரும்பும் துரும்பும்.
சந்திக்கும் களத்தையும் சந்திப்பையும்
உருவாக்குவது
விதி.

அலையடர் பெருங்கடலில் சந்தித்தால்
காணாமல் பயணம் போகும் இரும்பு.
கோணாமல் பயணம் போகும் துரும்பு.
கடற்களப் போரில்
இரும்பை வெல்லுமே
சிறுமரத் துரும்பு.

பெருங்கடலில்
துரும்பின் சாகசம் தெளிவாவது
துரும்பினாலா இரும்பினாலா?
விதியினாலா?

வாழ்க்கை
ஒரு பெருங்கடல்.
விதி
பெருங்கடற்ப் பேரலை.

அலையின்றிக் கடலில்லை.
கடலின்றி அலையில்லை.
அலைகடலுள் உறங்கும் கடலலை.
கடலலையில் விளங்கும் அலைகடல்.

இங்கே துரும்புகளின் பயணங்கள்
சில நேரம்
சாகசங்களின் அரிச்சுவடியாகின்றன.

துரும்புடன் மோதி இரும்படையும் காயம்.
வலியோரை எளியோர் வெகுண்டடக்கும் மாயம்.


லுக்ரீசின் சாபம் [2-5]

20 கருத்துகள்:

  1. எக்ஸலண்ட் அப்பா ஸார்.... வசன கவிதை அல்ல... கவிதை என்றே தயங்காமல் சொல்லலாம். கவிதைக் காவியத்தில் முதல் பகுதியே முத்திரை பதித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. இரும்பும்
    துரும்பும்
    சந்தித்தால்
    எது வெல்லும்?//

    கரும்பென தித்திக்கும் நும்
    காவியம் வெல்லும்.

    சுப்பு தாத்தா.

    அது சரி. வெகு காலத்துக்கு முன் வந்த
    கமல் ஹாசன் படம் ஒரு கைதியின் டயரி கதையை
    சேக்ஷ்பியர் காப்பி அடித்து இருக்கிறாரோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா விஷயம்?! எனக்கு எப்பவுமே சேக்குபியர் மேலே ஒரு சந்தேகம் உண்டு.

      நீக்கு
  3. கதை பகிர்வும், கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா.... ஆஹா......சூப்பர் சார் ("விஷ்ய்க்...வ்ஷ்ய்க்...வ்ஷ்ய்க்..."). தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்தான் சார். சேக்கு பெரிய இலக்கிய மேதை என்பது மட்டும் நல்லா தெரியும். அவரோட காவியத்தை நீங்க தமிழில் எழுதுவது என்னைப் போன்றவர்களுக்கு சந்தோசமளிக்கும் விஷயம். கொஞ்சம் வசதியானவங்க வீட்டு கல்யாணத்தில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்ததும் மனசு கல்யாண சாப்பாடு நல்லா இருக்கும் ஒரு பிடி பிடிக்கணும்னு நினைப்பது போல இப்பவே உங்க கவிதை விருந்து பெரிய எதிபார்ப்பை ஏற்படுத்துகிறது.

    சேக்குவின் லூக்ரீசின் சாபம்.....உங்களால் எங்களுக்கு லாபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி..
      //தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்தான் - ஆஹா.. இப்படிப் பின்றீங்களே?

      நீக்கு
  5. நல்ல ஆரம்பம், அப்பாதுரை. ஆனால் வசன நடையில் எழுதப்படும் கவிதையை என்னால் ஏனோ அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. அதற்கு உரைநடையாகவே எழுதிவிடலாமே.

    அது இருக்கட்டும். ஒரு கைதியின் டைரி, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் எங்கள் தானைத்தலைவன், பகுத்தறிவு செம்மல், தமிழனின் தன்மான சிங்கம், காதல் இளவரசன் (60 வயதானாலும் பரவாயில்லை) நடித்த திரைக்கதையை திருடிய ஷேக்ஸ்பியரை வன்மையாக கண்டிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லிட்டீங்களே.. ஒரே ஒரு ஓட்டுக்குத் தான் வெயிட் பண்ணினேன். உரைநடையா எழுதினாலும் எழுதிடுவேன்.

      'borne by trustless wings of false desire"னு வரிக்கு வரி கமல்பியர் பாட்டுக்கு நூத்துக்கணக்கா அனுபவிச்சு எழுதறாரு..அதை தமிழ்ல எழுத ரொம்ப கஷ்டமா இருக்குங்க (நான் என்ன ராமலக்ஷ்மியா?). உரைநடை தான் சரிஹி.. உரைநடையை ரெண்டு ரெண்டு வார்த்தையா பிச்சிப் போட்டா வசன கவிதை. (இல்லையா?)

      யாரங்கே.. அந்த அறுந்த ஹவாயை எடுத்தா.. கமல்பியராம்ல?

      நீக்கு
    2. சின்ன சாம்பார்னு சொல்வாங்களே... இப்பல்லாம் இல்லையா?

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆ! நீங்க படிக்கறீங்களா..?!
      (ஒயுங்கா எயுதுரா டேய்.)

      நீக்கு
    2. அது சரி. கல்லூரி வயதில் வாசித்தது. உங்கள் பகிர்வின் மூலம் இன்னொரு வாய்ப்பு. பாருங்க, ஜூலியஸா ஜூனியஸான்னு வாசித்த உடனே சொல்லத் தெரியலை:).

      நீக்கு
  7. மறுபடியும் சுவற்றில் எறிந்த சாயமா?..

    விடாது, கறுப்பு?..

    பதிலளிநீக்கு
  8. ஆஹா அருமை... வாழ்த்துக்கள்...
    தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  9. /எளிமைக்கும் கீழே அழுத்தப்பட்டவர்கள் மௌனமாக அழும்பொழுது அது கற்பழிப்பைப் போன்றக் கொடுமையானதொரு வலியின் வெளிப்பாடாகும். இது பரவலாகப் புரியாமலே போவதில் புதைந்துள்ள அபத்தமும் அநீதியும் எத்தனை காவியங்கள் யார் எழுதினாலும் வெளி வாரா./ நிலைமை இப்படி இருக்கும்போது நான் எழுதினால் மட்டும்வந்து விடுமா தீர்ந்து விடுமா?

    பதிலளிநீக்கு
  10. பொதுவாக அறியப் படாத கதைகளை, வசன கவிதையிலோ இல்லை கவிதையிலோ எழுதினால் புரியாது போக வாய்ப்பு இருக்கிறது என்னும் முன் எச்சரிக்கை கதைச் சுருக்கம் தருவதில் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  11. வண்ணம் உங்கள் கைகளில் ஓவியமாகட்டும். ...!முதல் பகுதி கதைக்கே வரவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.
      மொழியாக்கத்துக்கு ஒரு வகையில் நீங்களும் காரணம் சார். (ஹிஹி.. தப்பிருந்தா நான் மட்டுமே பொறுப்பு).
      கதைக்கு வரும் கவிதை - கோவில் தேர் போலத்தான்.

      நீக்கு
  12. மிகவும் அருமை. வசன நடையில் இருந்தால் என் மாணவர்களை கொண்டு ஒரு நாடகம் நடத்தியிருக்காலம் என ஆசை கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மீண்டும் வருக.
      வரிகளைச் சேர்த்துப் போட்டால் வசனமாகிறது :-)

      நீக்கு