2009/10/22

நாகூர் 2012, கசம் சே! (முடிவு )

6


◄◄   (1)   (2)   (3)   (4)   (5)


    நாகூர் விவகாரம் பற்றிய பதிவைப் படித்தும் கருத்து தெரிவித்தும் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. நான் எழுதிப் பதிவு செய்த எந்த இடுகைக்கும் வராத அளவுக்கு இந்தக் குறிப்பிட்ட இடுகைக்கு எனக்கு மின்னஞ்சல்கள் வந்து குவிந்தன. இரண்டு இமெயில்களையும் அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி.

ஆயலாமா ஓயலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு கருத்துக்களும் இமெயில்களும் தூபம் போட்டு விட்டன. ஆய்ந்தபின் ஓயலாமென்றிருக்கிறேன்.

    கே: இது உண்மையான கதையா, கதையான உண்மையா? (choice words, Murungai)

     : இது கதையான உண்மை. பெயர்களும் சம்பவங்களும் கொஞ்சம் கற்பனையும் கலந்து (okay Priya, i agree; lot of imagination) எழுதப்பட்ட கதை.

ரகு:
    அந்த நாளில் கொஞ்சம் பிசகாக நடந்து கொண்டால் 'மூளைக் கோளாறு' அல்லது 'வசியம்' என்ற கணிப்புக்கு வந்து விடுவார்கள், என்னருமை முதிய தலைமுறையினர். ரகுவின் கதையும் அந்த வகை தான். ரகு, எங்கள் குடும்பத்தில், என் தலைமுறையின் 'கிறுக்கு' என்று பட்டம் கட்டப்பட்டவன். அவனைப் புரிந்து கொள்ளாமல், "அவன் ஒரு மாதிரி போயிட்டாண்டா" என்று அவனை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே ஒதுக்கிவிட்டோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

அந்த நாகூர் விடுமுறைக்குப் பின் நான் சென்னை வந்து விட்டேன். ரகுவுடன் பிறகு ஒட்டவில்லை. அவ்வப்போது அவனைப் பற்றிய செய்திகள் காதில் விழும். ஒன்றிரண்டு முறை என் உறவுத் திருமணங்களில் பார்த்திருக்கிறேன். தனியாக உட்கார்ந்திருப்பான்.

ஷ்யாமி விவகாரம் முடிந்ததும் பெரியம்மா அவனை மசூதி, வைதீஸ்வரன் கோவில், வேளாங்கன்னி என்று ஒரு இடம் விடாமல் அழைத்துக் கொண்டு மந்திரித்ததாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பிறகு திருச்சி சென்று கல்லூரிப் படிப்பைத் தொடங்கிய ரகு, பி.எஸ்.சி முடிக்க ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டதாகக் கேள்வி. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தன்னை விடப் பத்து வயது மூத்த விதவைப் பேராசிரியருடன் ஓடிவிட்டதாகப் பரப்பரப்பான தகவல். அதற்குப் பிறகு, சுவாமி சுக்லா த்ருஷ்டா என்று ஏதோ ஒரு பெயரில் ரகு காசியில் சன்னியாசியாகி விட்டதாகவும் தான் பார்த்ததாகவும் என்னுடைய மாமா சொல்ல, அதைச் சுற்றி சில நாட்கள் குடும்ப வாய்களின் நமநம. இடையில் அவன் நகசல்பாரியாகிவிட்டான் என்று ஒரு செய்திச் சுற்று.

எண்பதுகளின் தொடக்கத்தில் அவன் அம்மா இறந்ததும் சென்னைப் பக்கம் வந்திருந்தான். நாங்கள் பம்மலில் குடியிருந்தோம். மீனம்பாக்கத்தில் மறுநாள் அதிகாலை விமானம் பிடிக்க வந்திருப்பதாகச் சொல்லி, முதல் நாள் எங்கள் வீட்டில் தங்கினான். "பிளேன்ல போறதாச் சொல்றானேமா, இவனையா லாயக்கில்லைனு சொன்னோம்?" என்றேன், என் அம்மாவிடம் ரகசியமாக. உடன் இருந்த என் மாமா, "டேய், அதெல்லாம் புருடா. எதுக்கும் நீ அவன் கிட்டே போகாம தள்ளியே நில்லு" என்று எனக்கு அறிவுரை வழங்கினார்.

அதற்குப் பிறகு என் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளின் போது தான் அவனைச் சந்தித்தேன்.

ஒரு சுற்று சுற்றி விட்டு மறுபடி ரகுவுக்கு வந்து ஆய்வை முடிக்கிறேன்.

ஷ்யாமி:
    ஷ்யாமி அழகாக இருப்பாள். (சிவப்பாக இருந்தால் தான் அழகு என்று அந்த நாளில் நினைத்திருந்தேன்).

ஷ்யாமியைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ரகுவுக்கு ஷ்யாமி மேலிருந்தது அபிமானமா காதலா என்பது அந்த நாளில் எனக்குப் புரியாவிட்டாலும், ஷ்யாமி ரகுவை உபயோகிக்கிறாள் என்று அப்போழுதே எனக்குச் சந்தேகம். ரகுவுடன் தான் பெரும்பாலான நேரத்தை அவள் செலவழித்தாள் என்றாலும், அவனில்லாத போது என்னுடன் பேசுவாள். நான் அவளை விடச் சிறியவன் என்பதில் அவளுக்கு ஒரு வினோத கௌரவம். என்னை விட உயர்ந்தவள் போல் நடந்து கொள்வாள். அவளைப் பற்றிய என் கணிப்பு, அவளுடன் நான் தனியாகப் பேசிய பழகிய ஒரு சில சந்தர்ப்பங்களில் உருவானது.

ஒரு முறை, "பெரியவனானதும் என்ன வேலை பார்க்கப் போறே?" என்றாள்.

"தெரியலை. சிஏ படிக்கலாம்னு நினைச்சிருக்கேன்" என்றேன்.

"சிஏ அரசாங்கத்தை ஏமாத்தி பணம் பண்ணுற வேலை. ஜெயிலுக்குத் தான் போவே" என்றாள்.

"உனக்கெப்படி தெரியும்? எங்க மாமா ஒருத்தர் சிஏ படிச்சுட்டு பெரிய பணக்காரரா இருக்கார்"

"பாத்தியா? என்ன சொன்னேன்? எங்கிருந்து பணம் வருதுனு நினைச்சே? சீக்கிரமே ஜெயிலுக்குப் போவார் பாரு"

சிஏ படிக்கும் ஆசையை அன்றைக்கு விட்டொழித்தேன் என்று நினைக்கிறேன். "ஆமாம், நீ என்ன பண்ணப் போறே?" என்றேன் வீம்புக்கு.

"நான் பெரிய மாடலா வரப் போறேன். சினிமாலே நடிக்கப் போறேன். சாய்ராபானு மாதிரி. படோசன் பாத்திருக்கியா?" என்றாள்.

"அப்படீன்னா?"

'க்யா கரூன் ஹாய்' என்று ஒரு பிடி பிடித்து விட்டு நிறுத்தினாள். "இந்தி சினிமாடா. நான் சாய்ராபானுவை விட அழகு" என்றாள்.

"அதெல்லாம் உங்கம்மா அப்பாவுக்குப் பிடிக்காது. நீ வேணா பாரு" என்றேன்.

"எங்கம்மா அப்பாவுக்கு பிடிக்காட்டா எனக்கென்ன வந்துது? பதினாறு வயசுல ஸ்கூல் முடிச்சதும் நான் வீட்டை விட்டு ஓடிடுவேன். எங்க தெருவில ஒரு சினிமா ப்ரொடியூசர் இருக்கார். நான் ரொம்ப அழகு, என்னை சினிமால நடிக்க வைக்கறதா சொல்லியிருக்கார் தெரியுமில்லே?"

எனக்கு பயமாக இருந்தது. "வீட்டை விட்டு ஓட உனக்கு பயமா இல்லே?" என்றேன்.

"வீட்டுல இருக்குறதுக்கு தான் பயம். என் அப்பா அம்மா சண்டையைப் பாத்துட்டு இருக்குறதுக்கு, ஓடறது எவ்வளவோ மேல். சரி, சரி, நீ இதை யார் கிட்டேயும் சொல்லாதே" என்றபடி ஓடிவிட்டாள்.

இன்னொரு நினைவு.

அவர்கள் நாகூர் வந்த முதல் நாளோ அல்லது குடுகுடுப்பை முதலில் வந்த நாளோ என்று நினைக்கிறேன். "பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வா" என்று சொல்லி என்னிடம் ஒரு தட்டு நிறைய இட்லி கொடுத்தனுப்பினார் பெரியம்மா. அனுமதி கேட்காமல் பக்கத்து வீட்டுள்ளே சென்றவன் சற்றே திடுக்கிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். இட்லித் தட்டை சமையலறையில் வைத்து விட்டுத் திரும்பியவன், சாத்தியிருந்த அறையிலிருந்து வினோதமான குரல் கேட்கவே கதவை விலக்கித் தள்ளினேன். உள்ளே ஷ்யாமி தரையில் படுத்திருக்க, கோலப்பொடியினால் அவளைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து கொண்டிருந்தார் அவளுடைய அம்மா. மந்திரம் போல் ஏதோ சொல்லிக் கொண்டே இரண்டு வரிகளுக்கொரு முறை கொஞ்சம் அரிசி எடுத்து, ஷ்யாமியின் நடுத்தலையில் அர்ச்சனை போல் எறிந்தார். என்னைப் பார்த்ததும் இருவரும் எழுந்தனர். ஷ்யாமியின் அம்மா கதவை அடைத்து விட்டு, "ஷ்யாமிக்கு த்ருஷ்டி சுத்திப் போடுறேன். அவ்வளவு தான். இதையெல்லாம் ஆம்பிளைங்க பாக்கக் கூடாது. நீ தெரியாம் உள்ளே வந்துட்டே. யார் கிட்டேயும் சொல்லாதே, உனக்குத் தான் பழி வரும்" என்றார்.

நான் ஏன் சொல்கிறேன்? I think Shyami had issues. No, her entire family had issues.

நான்:
    சென்னை வந்ததும் குரோம்பேட்டை பம்மல் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் மறந்துவிட்டது. புது உறவுகள் புது உற்சாகங்கள். சில இரவுகள் ஷ்யாமியின் கிணற்றடி விவரங்கள் வந்து பயமுறுத்தும். என் அம்மா சொற்படி கொஞ்சம் விபூதி தடவிக்கொண்டு மறக்க முயற்சிப்பேன். பின்னாளில் நிறைய புரிந்து கொண்டேன். நம்பிக்கையை ஒழித்த போது தான் நம்ப முடிந்தது - there's irony!

உளவியல் படித்த போது என் ஆசிரியரிடம் நடந்ததைப் பற்றி விவாதித்திருக்கிறேன். (ஷ்யாமி விவகாரத்தைப் போலவே இன்னொரு மாமி விவகாரமும் உண்டு. Real மாமி. அந்தக் கதை இப்போது வேண்டாமே?) அதற்குப் பிறகு ஒன்றிரண்டு முறை உளவியல் ஆலோசனைக்காகப் போன போதும் இந்த விவரங்களைப் பற்றி விவாதித்திருக்கிறேன்.

அந்த விவாதங்களில் நான் அறிந்தவை:

எங்களுக்கு ஏற்பட்டது illusion. Visual and Auditory hallucination. குடுகுடுப்பை தூவியதில் குரூர வகை nitrous oxide கலந்திருக்க வேண்டும். அதனால் வந்திருக்கக் கூடிய மயக்கத்தின் விளைவு தான் நாங்கள் பார்த்த கபாலத்தின் தோற்றமும் மறைவும். Retinaவின் blind spotல் விழுந்தெழுந்த சாதாரண மாயவித்தை. முழு விவரமும் சொல்லத் தெரியவில்லை, nevertheless, I believe it is a variation on the popular illusion/mainfestation/disappearance magic technique. கண்ணெதிரே வீனஸ் சிலையைத் தோன்ற வைத்தும் மறைத்தும் காட்டும் தந்திரம் போலத்தான் இதுவும். சென்னை நாட்களில் சந்தித்த சாம்பார் சாதத் தொப்பைக் குடுகுடுப்பை இல்லை நான் நாகூரில் சந்தித்த குடுகுடு. அவன் உடை அணிந்திருந்த விதமும், எங்களையும் மற்றவரையும் எடுத்தெறிந்துப் பேசிய விதமும், makes me want to believe that he descended from the 'thug' community abolished by the British when they took over. நிச்சயமாக வட நாட்டுக் குடுகுடுப்பை. He knew how to intimidate and was probably a base magician.

இந்தப் படத்தைப் பாருங்கள். இதில் தீட்டப்பட்டிருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் வருடங்களில், கத்தரிக்காய் வாங்க சாதுவாகத் தெருவில் நடந்து போன நம் போன்றோருக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சி.
குடுகுடுப்பை இப்படித் தான் தோற்றமளித்தான். (குடுகுடுப்பையை விவரிக்க ஒரு சித்திரம் தேடிய போது, 'Ancient Wisdom and Secret Sects' என்ற Time-Life புத்தகத்தில் நம்ம ஊர் காளி, குடுகுடுப்பை பற்றி எழுதப்பட்டிருப்பதை அறிந்து வியந்தேன்).

நள்ளிரவில் ஊஞ்சல் பலகை மேல் ஷ்யாமி தோன்றி மறைந்ததைப் பற்றியும் ஒரு விளக்கம் வைத்திருக்கிறேன். Psychiatric symptomatology பற்றிப் படித்த போது parallel hallucination மற்றும் asynchronous and asyndetic somatic response பற்றி அறிந்து கொண்டேன். ஷ்யாமியை ஊஞ்சல் பலகை மேல் நானும் ரகுவும் பார்த்தது என்னவோ உண்மை தான் (the hallucination). ஆனால் எனக்கு ஏற்பட்ட hallucinationம் ரகுவுக்கு ஏற்பட்ட hallucination விவரமும் வேறு வேறு. உதாரணமாக, 'எனக்குப் பசிக்குது' என்று ஷ்யாமி சொன்னதாக நான் மட்டும் தான் நினைத்திருக்க வேண்டும். அதனால் தான் கீழே ஓடிச் சென்று பெரியம்மாவை அழைத்து வந்தேன். ரகுவும் நானும் ஷ்யாமியைப் பார்த்ததைப் பற்றிப் பேசிக்கொண்டோமே தவிர, அவள் எங்களுடன் என்ன பேசினாள் என்பதைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. அவள் சொன்னதை ரகுவும் கேட்டிருப்பான் என்று அன்றைக்குத் தோன்றியிருந்தாலும், அது சாத்தியமில்லை என்று பின்னாளில் புரிந்தது. என்னிடம் பேசுவதாக நினைத்ததற்கு நானும் அவனிடம் பேசுவதாக நினைத்ததற்கு ரகுவும் பதில் சொன்னோம். We both had the same trauma induced hallucination about Shyami, but we responded separately. அடிபட்டு ரத்தம் கசியக் கீழே விழுந்தவளைப் பார்த்ததன் விளைவும், அவசரமாக அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டதன் விளைவும், ஒரு முடிவு கிடைக்காததாலும் எங்களுக்கு ஏற்பட்ட தனித்தனி மயக்கம். அவ்வளவு தான். (அப்படித் தான் நான் நம்புகிறேன்).

இரண்டாவது முறையாகக் கிணற்றடியில் நாங்கள் பார்த்த கபாலமும் முடியும் ரகுவின் வேலை என்று இப்போது நம்புகிறேன். He wanted attention. அதை விட்டால் எனக்கு வேறு விளக்கம் சொல்லத் தோன்றவில்லை. குடுகுடுப்பையின் நோக்கம் பயமுறுத்தல், திருட்டு. அதற்கு மேல் குடுகுடுப்பைக்கு இதில் பங்கில்லை என்று நினைக்கிறேன். ரகுவாகத் தான் இருக்க வேண்டும்.

ஷ்யாமிக்கு என்ன நடந்திருக்கும்?
    என் கணிப்பு: (100% hypothesis, 0% substantiation).

கிணற்றடியில் அடிபட்ட ஷ்யாமி இறந்திருக்க வேண்டும். அதிர்ச்சியில் அப்பனும் அம்மையும் கூட்டு சேர்ந்திருக்க வேண்டும். மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதாக ஒரு கதை கட்டி ஷ்யாமியை எடுத்துக் கொண்டு ஓடியிருக்க வேண்டும். அந்தக் கணத்தில் தாலிபாக்கியம் கருதி வழக்கம் போல் புருஷனை விட்டுக் கொடுக்காத மனைவி ஒத்துழைத்திருக்க வேண்டும். அல்லது இனிமேல் எதற்கு இந்தக் கூட்டணி என்று தனித்தனியே பிய்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

I believe Shyami was killed. It was an accident - she did not survive - that is my guess. இல்லாவிட்டால் ரகுவும் ஷ்யாமியும் சந்தித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஒருவருக்கொருவர் மேலிருந்த அபிமானம் மறைந்திருந்தாலும் கூட இருவரும் சந்தித்திருப்பார்கள்.

மீண்டும் ரகு:
    பிறந்த நாளில் ரகுவைச் சந்தித்த போது நிறைய பழைய கதை பேசினோம். ஷ்யாமியைப் பற்றிப் பேசினோம்.

"அப்புறம் என்ன ஆச்சுடா அவளுக்கு? எப்பவானும் பாத்தியா?" என்றேன்.

"இல்லேடா. நான் அங்கே இங்கே சுத்தி ஒரு வழியா செட்டில் ஆனதே பெரிய பாடு" என்றான்.

"சில சமயம் அவ அங்கே இருக்காளோனு தோணும்"

"எனக்கும் சில சமயம் அந்த எண்ணம் வரும். நாகூர் போய்ப் பாக்கலாமானு கூடத் தோணும்"

"சும்மா நாகூர் போய் பார்ப்போமா?" என்றேன்.

"வேணாண்டா. எனக்கு வேலை இருக்கு" என்றான்.

"எனக்கும் தான். சும்மா தான் கேட்டேன்" என்றேன்.

ரகு கிளம்பிய மறுநாள் கோவிந்தபுரம் சென்றேன். பழம் வாங்கிக் கொண்டு போகலாம் என்று அருகே கடையில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப்பழங்களை நோட்டம் விட்ட போது இரண்டு கண்ணாடி ஜாடிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருந்த அன்றைய தினமலர் பத்திரிகையை எடுத்தேன். பொழுது போகாமல் புரட்டிய போது, ஒரு உள்பக்கத்தில் புத்தாண்டில் பனிரெண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து நாள்-மாதம்-வருடம் ஒரே எண்ணாக வரும் தேதிகளைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். குறிப்பாக, 06.06.06 மற்றும் 12.12.12 தேதிகளின் மகத்துவம் பற்றியும் நடக்கக்கூடிய விபரீதங்கள் பற்றியும் எழுதியிருந்தார்கள். இறந்தவர்கள் உயிருடன் எழுவதிலிருந்து உலக அழிவின் தொடக்கம் வரை எழுதப்பட்டிருந்த விபரீதங்கள் சுவையான கற்பனையாகப் பட்டது.

அதைப் படித்ததிலும் ரகுவை மீண்டும் சந்தித்துப் பேசியதிலும் தோன்றியது தான் மிச்சக் கதை. கசம் சே!


16 கருத்துகள்:

  1. என்னதான் விஞ்ஞானம், உளவியல் ஆராய்ச்சி, என்றெல்லாம் - நம் அறிவுக்குப் பட்டாலும், சில விஷயங்கள், அறிவுக்கு எட்டாத - புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, இருந்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பதிவை இங்கே பதியச் சொல்லி உங்களுக்கு எப்படி தோன்றியது? அதை படிக்கவேண்டும் என்கிற உந்துதல் எனக்கு எப்படித் தோன்றியது - இதெல்லாம் கூட சில சமயங்களில் - விசித்திரமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. /சில விஷயங்கள், அறிவுக்கு எட்டாத - புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, இருந்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. -kggouthaman/

    அதுவும் சரிதான். எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் எனக்கு கணிதமும் விஞ்ஞானமும் ஏன் மண்டையில் ஏறவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரை கூறியது...

    "எனக்கு கணிதமும் விஞ்ஞானமும் ஏன் மண்டையில் ஏறவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.."

    இப்படி சொல்லியே, இன்னும் எவ்வளவு நாள் கதை அளப்பே ?

    யூ கீப் கோடிங் சம் வியிர்ட் புக்ஸ், அனலாஜி - இதில் இந்த கதை வேறு அவ்வபோது ?

    - சாய்ராம்

    பதிலளிநீக்கு
  4. /இப்படி சொல்லியே, இன்னும் எவ்வளவு நாள் கதை அளப்பே? -சாய்ராம் கோபாலன்/

    அல்லாம் ஷோ மச்சி, அல்லாம் ஷோ.

    பதிலளிநீக்கு
  5. அப்பாதுரை சொன்னது…

    /இப்படி சொல்லியே, இன்னும் எவ்வளவு நாள் கதை அளப்பே? -சாய்ராம் கோபாலன் - அல்லாம் ஷோ மச்சி, அல்லாம் ஷோ /

    ஆனா நான் இன்னும் கதை படிக்கவில்லை !!

    ஜக்கம்மா அருள் கிடைத்தால் படிப்பேன் !!

    - சாய்

    பதிலளிநீக்கு
  6. ஐயா துரை அவர்களே

    நீங்கள் இன்று கடா வெட்டி விழா எடுக்கலாம். நான் கதையை படித்து முடித்துவிட்டேன்.

    - சாய்ராம்

    பதிலளிநீக்கு
  7. /நான் கதையை படித்து முடித்துவிட்டேன். -சாய்ராம் கோபாலன்/

    மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது

    பதிலளிநீக்கு
  8. அப்பாதுரை கூறியது...

    "கொட்டோ கொட்டென்று"



    "அப்பா நீங்க வேணா பாருங்க, என் படம் ஆஹா ஓஹோனு ஓடும் பணம் கொட்டோன்னு கொட்டும்."

    ஆமா, பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் நான் கட்டோ கட்டுன்னு கட்டுவேன்"

    நாகேஷை மறக்க முடியவில்லை நீங்க வேற, ஏண்ணே இப்படி படுத்தறீங்க ?

    பதிலளிநீக்கு
  9. Your views are interesting. I thought the whole story was made up with some loose life events. So there was a tragic event then?

    பதிலளிநீக்கு
  10. அப்பாதுரை கூறியது...

    1. "ஷ்யாமி விவகாரத்தைப் போலவே இன்னொரு மாமி விவகாரமும் உண்டு. Real மாமி. அந்தக் கதை இப்போது வேண்டாமே?"

    துரை, அதுலையாவது ரகு என்ற பெயரில் ஜொள்ளு விடாம உன் ஒரிஜினல் திருவிளையாடலை எழுது !!

    2. "ரகு, எங்கள் குடும்பத்தில், என் தலைமுறையின் 'கிறுக்கு' என்று பட்டம் கட்டப்பட்டவன். "

    நல்ல வேலை உனக்கு பிடித்த பெயர் என்று கொஞ்ச நாள் முன்பு வரை எழுதி வந்த "சாய்" என்ற பெயரை இதில் விட்டியே !! நல்ல வேலை இது ரகு !

    ஷயாமியும் கிடைக்காம மாமியும் கிடைக்காம இதற்காக வேறு தனியாக கிறுக்கு பட்டம் எனக்கெதுக்கு !!

    ஏற்கனவே பெண்டாட்டியும் பிள்ளைகளும் என்னை விசிரு மாதிரி தான் பார்க்கறாங்க !!

    - சாய்ராம்

    பதிலளிநீக்கு
  11. சாதாரணமான நிகழ்வு. 'கடவுள் அனுபவம்' இந்த வகையைச் சேர்ந்தது தான். உங்கள் உறவினர் ரகு எவ்வளவோ மேல். எத்தனையோ ஆண்களும், அதுவும் பெண்களும், மனநோய்க்கான சிகிச்சைக்குச் செல்லாமல் வாழ்க்கையே வீணான உண்மை நிகழ்ச்சிகள் நிறைய இருக்கின்றன. நோய் என்று கூட நினைக்க வேண்டியதில்லை - ஆனால் வசியம் பைத்தியம் என்று நினைத்து ஒதுக்குவதை விட நோய் என்று எண்ணி மருத்துவ ஆலோசனை பெறலாமே? நிறைய பெற்றோருக்கு அது தெரியாதது வருத்தம் தான். இன்றைய ஹை ஸ்ட்ரெஸ் நிலையில் மனதுக்கான சிகிச்சை அவசியம் என்று உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. ஹேமா துவாரகநாத் சொன்னது…

    "இன்றைய ஹை ஸ்ட்ரெஸ் நிலையில் ..."

    உளவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற உங்களிடம் ஒரு கேள்வி:

    1. அன்றைய காலங்களை விட அதிக வருமானம், வசதி, வேலை வாய்ப்புகள், முன்னேற்றம் இப்படி பலபல இருந்தும் ஏன் இந்த நிலை ?

    மனதில் என்ன எண்ணங்கள் ஓடுவதால் இந்த ஹை ஸ்ட்ரெஸ் என்ற நிலை ?

    எதைக்கண்டு நாம் பயபடுக்கின்றோம்.

    ஐந்து பிள்ளைகளை பெற்ற என் தாய் தந்தை எங்களை காப்பாற்ற எடுத்த கஷ்டத்தில் கால்பகுதி கூட நான் எடுத்திருப்பேனா என்று தெரியாது இருந்தாலும் நீங்கள் சொல்லும் ஸ்ட்ரெஸ் எப்படி வருகின்றது ?

    நாமாக உருவாக்கிக்கொள்வதா இது ?

    நேரம் கிடைக்கும்போது விளக்கம் தேவை ப்ளீஸ்.

    - சாய்ராம்

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. appadurai - "ஜவ்வரிசி என்று பலவகை வடாம் இட்டுக் காய வைப்பார்கள். எலுமிச்சை பிழிந்த அரிசி வடாம் இடும் போது அதை அரைகுறையாகக் காய்ந்த நிலையில் எடுத்து ருசித்தது நினைவுக்கு வருகிறது. ம்ம்ம்"

    ஆஹா ஆஹா அற்புதம் அந்த நினைவுகள்.

    எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் அம்மா வடாம் இடும்போது காக்கையை விரட்ட என்று போய் பிளாஸ்டிக் பேப்பரில் இட்டிருந்த பல வடாங்களை எடுத்து தின்றுவிடுவோம். சாயங்காலம் அதை எடுக்கும்போது வீட்டில் எல்லாருக்கும் திட்டுவிழும் வெய்யிலில் விடுவதற்கு முன் சாப்பிட்டு தொலைக்கவேண்டியது தானே என்று !!

    அதுவும் ஜவ்வரசி வடாத்தின் மாவில் இன்னும் கொஞ்சம் மிளகாய் பேஸ்ட், கொஞ்சம் அதிகமாக எலுமிச்சை பிழிந்து ஒரு பாத்திரம் நிறைய சாப்பிடுவோம். செம்ம ருசி.

    வடாமும் நானும் ஒரு தூரத்து பந்தம் ! எப்படி என்று கேளுங்கள். நான் இப்போதுள்ள விற்பனைத்துறைக்கு வடாமும் ஒரு வழிகாட்டி !!

    வருடம் 1982 இருக்கலாம். நான் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !! 16 வயது எனக்கு.

    இருந்த எல்லா சொத்தையும் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று தொலைத்துவிட்டு அண்ணாநகரில் எங்களுடன் வந்து இருந்தார்கள் என் தாய் வழி தாத்தா மற்றும் பாட்டி.

    அவர்களின் கடைசி காலத்தில் எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த என் தாய் (!); அவர்களிடம் நூறு ரூபாய் முதலீட்டில் வடாமுக்கான சாமான்களை வாங்கி வெய்யிலில் வடாம் இடுவார்கள்.

    என் வீட்டிற்கு பின் இருந்த என் ஆருயிர் நண்பனின் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவர் சிப்ஸ் போட்டு கடைகளில் விற்பார். அவரிடம் எடை பார்க்கும் கருவி வாங்கி எடை போட்டு, பிளாஸ்டிக் பாக்கில் 1/4 Kg, 1/2 Kg, 1 Kg என்று அவர் வீட்டில் உட்கார்ந்து பேக் செய்து மெழுகுவத்தி விளக்கில் ஓரங்களை ஒட்டி ஒரு பெரிய பேக்கில் எடுத்துக்கொள்வேன்.

    சென்னை கிழக்கு அண்ணாநகரில் இருந்த நான், சைக்கிளில் எவ்வளவு முடியுமோ அதை எடுத்துக்கொண்டு அன்றைய கிழக்கு / மேற்கு அண்ணாநகரில் (அப்போதே பந்தா ஊர் அது) இருக்கும் ஐந்து / பத்து கடைக்களுக்கு சென்று என் அம்மா செய்த வடாங்களை விற்று விடுவேன் !! இரண்டு வாரம் முன்பு என் நண்பனை மீட் செய்தபோது அவன் "நண்பா, நீ அப்பவே சூப்பர் சேல்ஸ் ஆளு என்றான் !"

    வெய்யிலில் பல மணி நேரம் உழைத்த வேலைக்கு உருப்படி இல்லாத விற்பனை அது !! பெங்களூரில் வேலை பார்த்த அப்பாவுக்கு தெரிந்தவுடன் விட்டுவிட்டோம் !

    இப்படி ஆரம்பித்த என் விற்பனை அனுபவம், மெடிக்கல் ரேப் ஆகி, கணணி விற்று, கணணி மென்பொருள் விற்று இப்போது கணணி மென்பொருள் எழுதும் ஐ.டி. சர்விசஸ் நிறுவனத்திற்கு விற்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது !!

    ஒழுங்காக படிக்கவில்லை என்றாலும், பொருள் வாங்குபவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் - கடை முதலாளி முதல் அண்ணாநகர் அன்றைய சூப்பர் மார்க்கெட் கடைகளில் சாமான் வாங்குபவர்கள் உட்பட வழிய நின்று பேசுவேன் நான் !!

    - சாய்ராம் கோபாலன்

    பதிலளிநீக்கு
  15. என்னனு சொல்றது! உங்க கதை! கதையா அது! கடவுளே, எப்படிப்பட்ட அனுபவங்கள்! அதென்ன உங்களைத் தேடித்தேடி வருது! பம்மல் அனுபவம் ஒரு ரகம்னா இது வேறே ரகம்.
    நான் நினைச்சது என்னன்னா, ஷ்யாமி அடிபட்டதாய்ப் பாசாங்கு செய்துட்டு வீட்டை விட்டுட்டு ஓடிப் போயிருப்பாள்னு. நீங்க அடிபட்டது உண்மைனு சொல்றீங்க. அப்போ நிஜம்மாவே இறந்திருப்பாளோ! இந்த 12-12-12 அன்னிக்குப் பார்க்கலாம் என்ன நடக்குதுனு! :))))))))

    பதிலளிநீக்கு
  16. உண்மை கதை படித்த அனுபவம் கிட்டியது.

    கடைசியில் நீங்கள் இதை 12.12. 12 அன்று மறுமடியும் என்ன நடந்தது என்று சொல்வீர்கள் என்று படிக்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.

    தொடர்ந்து ஒரே மூச்சில் தொடர்கதையை படித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு