tag:blogger.com,1999:blog-8583474086541315112.post8393219237740613277..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: சென்னைத் தா[க்]கம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72009386268607617992012-09-12T00:02:03.307-05:002012-09-12T00:02:03.307-05:00திராட்சை தோட்டங்கள் மட்டுமல்ல நிறைய தோட்டங்கள் இரு...திராட்சை தோட்டங்கள் மட்டுமல்ல நிறைய தோட்டங்கள் இருக்கும் இடமே தெரியாம போச்சு... எல்லாம் நீங்க சொன்னது போல கான்க்ரீட் கட்டிடங்களா முழித்துக்கொண்டு நிற்கிறது....ஹலீம் நா என்ன?? அது சாப்பிட்டா எடை கூடுமா? அச்சச்சோ எடை குறைய எதுனா சாப்பிட்டு சொல்லக்கூடாதா நீங்க? அதென்னப்பா புல்லாரெட்டி இனிப்பு காரவகைகள்... நான் சாப்பிட்டதே இல்லையே :(<br /><br />ஆமாம் ஏர்ப்போர்ட்ல இது ஒரு அவஸ்தை எக்ஸஸ் லக்கேஜுக்கு போராடினீங்களா... ஹூம்... இவ்ளவு பயங்கரமாவா இருப்பாங்க ஜனங்க? புத்தகங்களையும் புல்லாரெட்டி இனிப்பு கார வகைகள் இவ்ளோ வேகமா திருடி இருக்காங்களே :( இன்னும் கவனமா இருக்கணும் நாம அப்டின்னு சொல்லுது உங்களோட இந்த பகிர்வு....<br /><br />இங்கே வெளிநாட்டில் வசிப்போர் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து மனம் சோர்ந்து எப்படா சொந்த ஊர் போவோம்னு காத்திருந்து போனால் இப்படி எல்லாம் எக்ஸ்ப்ரியன்ஸ் கிடைத்தால் ஊருக்கு போகும் ஆசையே விட்டுப்போகும்னு நினைத்தால் ஹுஹும் மனசு அழிச்சாட்டியமா மறுபடி எப்ப லீவ் கிடைக்கும் போவோம்னே காத்திருக்கும்...<br /><br />உங்க பகிர்வு படிக்கும்போது நீங்க போன இடத்துக்கெல்லாம் எங்களையும் கைப்பிடித்து அழைத்து சென்றது போல, நடந்த சம்பவங்களை எல்லாம் நேரில் இருந்து கண்டது போல இருந்தது என்றால் அது மிகையில்லை அப்பாதுரை... <br /><br />அதென்ன எங்க கிட்ட எல்லாம் எப்பவும் சந்தோஷமா பதிவு போடும் நீங்க ஏர்ப்போர்ட்ல லக்கேஜ் பிரச்சனைக்காக சண்டை போட்டீங்களா?? ஹுஹும் நம்ப முடியலையே.... கோபம் கூட வருமா என்ன? சரி சரி அடுத்த முறை நீங்க ஊருக்கு நாங்களும் போகும்போதே இந்தியா போனீங்கன்னா நாங்களும் வரோம்பா... மறக்காம இனிமே ஃப்ளாஷ் ட்ரைவ் பத்திரமா வைச்சுக்கோங்க....<br /><br />ரசிக்கவைத்த உங்களுடனே எங்களையும் பயணிக்கவைத்த அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அப்பாதுரை....<br /><br />அடுத்து எப்ப ஊருக்கு போறீங்க? :)கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32120930732822177072012-09-12T00:01:27.951-05:002012-09-12T00:01:27.951-05:00அது வேற ஒன்னுமில்லப்பா எத்தனை நாளுக்கு தான் வயலை வ...அது வேற ஒன்னுமில்லப்பா எத்தனை நாளுக்கு தான் வயலை வைத்துக்கொண்டு சேற்றை மிதித்துக்கொண்டு கைக்கும் வாய்க்கும் வயிற்றுக்கும் பத்தாம அல்லல்படுவது அப்டின்னு ரியல் எஸ்டேட்காரர்களுக்கு வித்துடறாங்க.... அப்புறம் எங்க பசுமை எங்கே மழை? கட்டிடங்களாக நிமிர நிமிர அண்ணாந்து பார்த்து பார்த்து நமக்கும் தான் கழுத்து வலி வந்துவிடுகிறது....... இப்பெல்லாம் ஊருக்கு (சென்னைக்கு) போனாலே வெளியூருக்கு போவது போல தான் இருக்குப்பா... நான் உடுத்துவதையும் பேசுவதையும் பார்த்து கிண்டல் செய்கிற அளவுக்கு :) நாகரீகம் அந்த அளவுக்கு முன்னேறி விட்டது.... நீங்க எழுதி இருப்பதை பார்த்தபோது நான் சென்னை போய் வந்ததை நினைத்து பார்க்கிறேன்.... அப்டேட்டடா இருக்காங்க பிள்ளைகள்... ஸ்டைல் பெருகிவிட்டது.... சூப்பர் மார்க்கெட்டுக்கு மட்டுமல்ல துணி கடைகளுக்கு போனால் கூட எடுத்து பார்க்கும்போதே கூடவே வந்து கனிவாக கூட பதில் சொல்வதில்லை... சிடுசிடுன்னு தான் சொல்றாங்க.... கூட்டம் முண்டுகிறது..... செல்போன் உபயோகம் இப்ப ரொம்ப ரொம்ப அதிகமாகிவிட்டது ஊரில்..... சுத்தம் சுகாதாரம் மருந்துக்கு கூட காணோம் எங்கேயும்.... பஸ்ல போகவே பயமாக இருக்கிறது... எல்லாம் நீங்க சொன்ன அவஸ்தைகள் தான்...டாக்டரிடம் நார்மல் செக்கப்புக்கு தான் போனேன்... நீங்க சொன்னது போலவே லிஸ்ட் அடுக்கிவிட்டார்கள் இத்தனை டெஸ்ட் எடுக்கணும்னு. தலை சுற்றிவிட்டது.. வெளிநாட்டில் இருக்கும் நாமெல்லாம் நம் ஊரின் வளம், பழமை, அன்பு இப்படி தேடிக்கிட்டு ஓடுகிறோம். ஆனால் அங்க எல்லாமே உல்டாவாக இருக்கிறது.... எப்டிப்பா இது?? ஏன் இப்படி??? கேள்வி நமக்குள் எழுவது தான் மிச்சம்... பதிலில்லாத கேள்விகள் தான் இதெல்லாம்.. நொந்து போய் குவைத் வந்தாச்சு... என்ன சொன்னாலும் சரி.... நாம தான் இன்னும் மாறாம இருக்கோம்....<br /><br /><br />பழைய படங்கள், பக்தி படங்கள் இதெல்லாம் இப்ப கிடைப்பதே சிரமமாக இருக்கிறது.... முரசு சேனலில் தினமும் மாலை 4.30க்கு தமிழ் படம் பழையது போடுகிறான். பார்த்து ஆறுதல் கொள்கிறோம்.... அம்மா ரொம்ப நாட்களாக கங்காகௌரி படம் கேட்டுக்கொண்டே இருக்காங்க.. உங்கள் யாருக்காவது கிடைத்தால் எனக்கு அனுப்புங்கோ ப்ளீஸ்.....<br /><br /><br />அடேங்கப்பா நிஜம்மாவே இது மிராக்கிள் தான்.. தொலைத்த ஃப்ளாஷ் ட்ரைவ் கிடைத்தது... எத்தனை கவனப்பிசகு.... நாம இருக்கும் அவசரத்தில் எங்கு சென்றாலும் எதாவது ஒன்னு விட்டுட்டு வரணும் என்பது விதி போலிருக்கு... இதே கதை தான் எங்களுக்கும்... நல்லவேளை.... இத்தனை விஷயங்கள் அதுவும் முக்கியமான விவரங்கள் அடுக்கிய ஃப்ளாஷ் பத்திரமா திரும்ப கிடைச்சிருக்கு.. நீங்க செய்த நல்லதெல்லாம் மொத்தமா உங்களை இப்படி காப்பாத்தி இருக்கு அப்பாதுரை.... கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்கலை தானேப்பா?<br /><br />சிறுகதை போட்டியில் நீங்க பெற்ற பரிசுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா... பரிசு மட்டுமல்லாது வீட்டுக்கு அன்பு வற்புறுத்தல் செய்து உங்களுக்கு விருந்தோம்பல் மட்டுமல்லாது நீங்கள் விரும்பிய புத்தகங்கள் அனைத்தும் கொடுத்த அந்த முகம் தெரியாத தம்பதியருக்கு என் மனம் நிறைந்த நன்றிகளை சொல்லிருங்கப்பா...<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83711977533844773322012-09-05T03:21:50.014-05:002012-09-05T03:21:50.014-05:00வந்து போன உங்களுக்கு இந்த அனுபவம்.நொந்து போன எங்கள...வந்து போன உங்களுக்கு இந்த அனுபவம்.நொந்து போன எங்களின் மாநகர வாழ்வுப்பாடுகளை எந்த மொழியில் துல்லியமாய் சொல்வதென எனக்குத் தெரியவில்லை!ஆனாலும் உங்களின் எழுத்து அருமை.பேனாவில் குற்றால நீரைக் கலந்து விடுகிறீர்களோ!வாழ்த்துகள்!-நேசமிகு எஸ்.ராஜகுமாரன்.5-9-2012Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60030233981466399842012-08-30T01:20:02.452-05:002012-08-30T01:20:02.452-05:00இப்போதைய எம்.ஜி ரோட்-தீராத வருத்தம்:(!
வீடுகள்(fl...இப்போதைய எம்.ஜி ரோட்-தீராத வருத்தம்:(!<br /><br />வீடுகள்(flats & villas) கோடிகளில் என்றாகி சில வருடங்களே ஆகி விட்டன பெங்களூரில். பில்டர்ஸ் விற்காவிட்டால் அப்படியே போட்டு வைப்பார்களே தவிர விலையைக் குறைக்க மாட்டார்கள். ஆனால் பலரும் சென்னையை விட பெங்களூர் தேவலாம் என்றும் சொல்லக் கேட்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10831337393826761652012-08-24T07:08:08.315-05:002012-08-24T07:08:08.315-05:00//இதயம் வயிற்றுக்குள் விழுந்துப் பிசைந்துச் சக்கைய...//இதயம் வயிற்றுக்குள் விழுந்துப் பிசைந்துச் சக்கையானது போல் உணர்வு. //<br /><br />தான் அடைந்த உணர்வுகளை இன்னொருவருக்கும் வார்த்தை வரிகளில் உணர்விக்க வரம் வாங்கி வர வேண்டும் போலத் தான் தோன்றுகிறது. அதை நீங்கள் வாங்கி வந்திருக்கிறீர்கள்.<br /><br />அடுத்த தடவை இந்தப் பக்கம் வரும் பொழுது முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுங்கள். தவறாமல் நேரில் சந்திக்கலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53543372231020601592012-08-20T06:33:42.207-05:002012-08-20T06:33:42.207-05:00உங்கள் பார்வையில் சென்னை படித்தேன்; எனக்கும் சென்ன...உங்கள் பார்வையில் சென்னை படித்தேன்; எனக்கும் சென்னையைப் பற்றிப் பெரிய கருத்தெல்லாம் ஒன்றும் இல்லை தான். என்றாலும் உங்களுக்கு நேர்ந்த பல இழப்புகள் மனதுக்கு வேதனையைக் கொடுக்கிறது. அதுவும் புத்தகங்கள் தொலைந்தது முக்கியமாய் வருத்துகிறது. :((((<br /><br />நிறையப் புத்தகங்களோ?? geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37619054615246759732012-08-20T06:33:40.160-05:002012-08-20T06:33:40.160-05:00உங்கள் பார்வையில் சென்னை படித்தேன்; எனக்கும் சென்ன...உங்கள் பார்வையில் சென்னை படித்தேன்; எனக்கும் சென்னையைப் பற்றிப் பெரிய கருத்தெல்லாம் ஒன்றும் இல்லை தான். என்றாலும் உங்களுக்கு நேர்ந்த பல இழப்புகள் மனதுக்கு வேதனையைக் கொடுக்கிறது. அதுவும் புத்தகங்கள் தொலைந்தது முக்கியமாய் வருத்துகிறது. :((((<br /><br />நிறையப் புத்தகங்களோ?? geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31267811220007720332012-08-18T20:58:13.507-05:002012-08-18T20:58:13.507-05:00தலைப்பு :).
Flash drive தொலைத்ததை படித்தபோது அப்ப...தலைப்பு :).<br /><br />Flash drive தொலைத்ததை படித்தபோது அப்போதைய உங்கள் பதற்றமும், டென்ஷனும் படித்த தருணத்தில் என்னையும் தொற்றிக் கொண்டது. தொடர்ந்து அதே டென்ஷனில் கிடைத்து விட்டதா என்பதை தெரிந்து கொள்வதற்காக கட கட கடவென்று பதிவை படித்தேன். தொலைந்தது கிடைத்ததை படித்தபோதுதான் அப்பாடி என்றிருந்தது. பிறகு மீண்டும் ஒரு முறை பதிவை டென்ஷன் இல்லாமல் நிதானமாக படித்தேன். <br /><br />சீரான நடையில் ஒரு சுவாரசியமான பதிவு. <br /><br />சுசீலாவின் குரலில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. மிகவும் ரசித்து கேட்டேன். நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6525784845409730342012-08-18T07:19:50.313-05:002012-08-18T07:19:50.313-05:00பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.
உதவ முன்வந்ததற்க...பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.<br />உதவ முன்வந்ததற்கு நன்றி மோகன்குமார், அடுத்த இக்கட்டு நேர்கையில் உங்கள் உதவியை நிச்சயம் கேட்கிறேன் (தயாராக இருங்கள் :-)<br />நீங்கள் சொல்வது புரிகிறது கணேஷ். டிரைவ் கிடைத்ததில் நிறைவடைந்த மனம் அடுத்த நிமிடமே எத்தனை காபி எடுத்திருப்பார்களோ என்று நினைக்கத் தொடங்கியது.. திருந்த மாட்டேன்.<br /><br />நான் சொல்லவந்தது என் மறதி, அவசரம், முட்டாள்தனம் பற்றித்தான். மின் யுகத்தில் எல்லாமே டிஜிடலாக கைக்கடக்கமாக இருக்கையில் கவனமாக இருக்கவேண்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78650223043003643402012-08-18T02:20:43.017-05:002012-08-18T02:20:43.017-05:00பலேஷ் டிரைவை தொலைத்தது குறித்து வருத்தமே மற்றபடி ப...பலேஷ் டிரைவை தொலைத்தது குறித்து வருத்தமே மற்றபடி பயண அனுபவங்களை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்றும் சிந்திக்க வைக்கிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24476403416972312072012-08-18T01:51:52.781-05:002012-08-18T01:51:52.781-05:00சென்னைத் தாக்கத்தோடு தாகமும் குறையவில்லை என்றே தோன...சென்னைத் தாக்கத்தோடு தாகமும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. என்ன இருந்தாலும் நம்ம ஊர் நம்ம ஊர்தானுங்க, என்று எப்போதாவது தோன்றியதா. ? முகம் தெரியாதவர்களோடு பழகும்போதும் ஒரு அன்னியோன்னியம் கிடைத்ததா இல்லையா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37011908712380479592012-08-17T23:24:20.796-05:002012-08-17T23:24:20.796-05:00எத்தனை விதமான அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன இந்தப்...எத்தனை விதமான அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன இந்தப் பயணத்தில் உங்களுக்கு... அந்த பலேஷ் டிரைவை அதன் முக்கியத்துவம் உணராததால் கடைக்காரப் பெண் ஓரமாகப் போட்டு வைத்திருந்தாள் என்பது என் கணிப்பு. வம்சி கொடுத்த புத்தகங்கள் தொலைந்து விட்டன என்பதைப் படித்ததும் மிகமிக வருந்தினேன். நான் தொலைத்தவை எல்லாம் நினைவில் நிழலாடின. அந்தப் புதிர் என்ன... சீக்கிரம் சொல்லுங்க அப்பா ஸார்... ஈகர்லி வெய்ட்டிங்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58895360931881811902012-08-17T22:57:07.141-05:002012-08-17T22:57:07.141-05:00புத்தகங்கள் தொலைந்து போச்சா.....ஐயோ....! புத்தகங்கள் தொலைந்து போச்சா.....ஐயோ....! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84493658216360134552012-08-17T22:55:39.328-05:002012-08-17T22:55:39.328-05:00//செல்போனில் பேசியபடி தெருவோரம் சிறுநீர் கழித்து ம...//செல்போனில் பேசியபடி தெருவோரம் சிறுநீர் கழித்து மூக்கைச் சிந்தி காறித் துப்புகிறார்கள்.//<br /><br />சொர்க்கமே என்றாலும்.....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37003209013463954502012-08-17T21:39:08.166-05:002012-08-17T21:39:08.166-05:00உடன் நாங்களும் பயணப்பட்டதைப்போல இருந்தது
அனுபவங்க்...உடன் நாங்களும் பயணப்பட்டதைப்போல இருந்தது<br />அனுபவங்க்களை படிப்பவர்களும் அனுபவிக்கும்படி<br />எப்படி எழுதுவது என்பதை தங்கள் பதிவுகள் மூலம்<br />எளிதாக கற்கலாம் என நினைக்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28938228465473685622012-08-17T13:41:04.654-05:002012-08-17T13:41:04.654-05:00என்னமா பகிர்ந்துக்கறீங்க... விறுவிறுப்பான நடை. நன்...என்னமா பகிர்ந்துக்கறீங்க... விறுவிறுப்பான நடை. நன்றி!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25181675658725381162012-08-17T12:13:55.661-05:002012-08-17T12:13:55.661-05:00ப்லேஷ் டிரைவ் திரும்பக்கிடைத்தது பெரிய விஷயம்!ப்லேஷ் டிரைவ் திரும்பக்கிடைத்தது பெரிய விஷயம்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24256222619638826932012-08-17T09:44:48.626-05:002012-08-17T09:44:48.626-05:00குரோம்பேட்டை விஷயம் உடனே சொல்லியிருந்தால் (கடை பெய...குரோம்பேட்டை விஷயம் உடனே சொல்லியிருந்தால் (கடை பெயரும்) அந்த கடைக்கு சென்று கேட்டிருக்கலாம்; இன்டர்நெட் கடை பேர் நினைவிருக்கா? நாளை குரோம்பேட்டை பக்கம் செல்வேன். மெயிலில் சொல்லவும். கடை தெரிந்தால் போய் கேட்டு பார்க்கிறேன் <br /><br />//புல்லாரெட்டி இனிப்பு // அடடா ! நாங்க ஹைதை போனபோது சாப்பிட்டோம் செம டேஸ்ட் !<br /><br />வம்சி பதிப்பகத்தார் பற்றி அறிந்து மகிழ்ச்சி ; உங்கள் புத்தக வெளியீடு பற்றி அவர்களிடம் பேசி பார்த்திருக்கலாமே?<br />CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24185978436741737152012-08-17T09:43:24.594-05:002012-08-17T09:43:24.594-05:00
பல அனுபவ நினைவுகளை கிளறி விட்டது உங்கள் பதிவு.
... <br />பல அனுபவ நினைவுகளை கிளறி விட்டது உங்கள் பதிவு.<br /><br />சென்னையை நன்றாக வர்ணித்திருக்கிறீர்கள்.<br /><br /><br /><br />ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88724340454070235222012-08-17T09:40:52.008-05:002012-08-17T09:40:52.008-05:00அப்பாதுரை அஞ்சலிதேவியாகி அழைக்காதே (இந்தியாவுக்கு)...அப்பாதுரை அஞ்சலிதேவியாகி அழைக்காதே (இந்தியாவுக்கு) என்று பாடுவது போலவே தோன்றியதைச் சொல்ல விடுபட்டுவிட்டது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44491874014689620742012-08-17T09:36:07.578-05:002012-08-17T09:36:07.578-05:00//தமிழகத்தில் வசித்தால் இது போல் அடிக்கடி சந்தித்த...//தமிழகத்தில் வசித்தால் இது போல் அடிக்கடி சந்தித்துக் கொஞ்சம் intellectual மேய்ச்சலுக்கான வழி கிடைக்கும். யோசிக்கிறேன்.//<br /><br />//நீண்ட பயணத்தில் சென்னையை மறக்க முயன்றேன்.//<br /><br />//விவரம் சொன்னதும், "இதுங்களா? யாருதுனு தெரியலிங்க.. இங்கயே வச்சிருந்தோம்" என்று என் ப்லேஷ் டிரைவை எடுத்துக் கொடுத்தார் கடைக்காரப் பெண்.//<br /><br />போன இடுகையின் கடைசி வரிக்கும், இந்த இடுகையின் கடைசி வரிக்கும் இடையில்தான் சென்னை மட்டுமல்ல இந்தியாவே இருக்கிறது.<br /><br />இங்கு அன்னா ஹஸாரே போன்றோரை முன்னிறுத்தும் பெருமக்களிடம் போக விரும்பும் இடமும், போகும் வழி தெரியாத தவிப்பும் இருப்பது இதனால்தான். <br /><br />பல விஷயங்களை அமுக்கமாக வெளியில் காட்டிக்கொள்ளாத அழுத்தக் காரரய்யா நீர்! என்னோட வாலட் ஹைதராபாதில் தொலைந்துபோன சமயத்தில் கூட எனக்கு வருந்தியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7479365300469575382012-08-17T08:47:40.834-05:002012-08-17T08:47:40.834-05:00தங்களின் பயணம் பலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது... ...தங்களின் பயணம் பலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com