tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2460764250009823376..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: கடவுள் கிடையாது பாப்பாஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56816026175493412312012-10-01T20:20:50.993-05:002012-10-01T20:20:50.993-05:00வளரும் குழந்தைகளுக்கு அவசியம் தெரிய வேண்டிய விஷயம்...வளரும் குழந்தைகளுக்கு அவசியம் தெரிய வேண்டிய விஷயம். முன்னோர்கள் சொன்னது எல்லாம் பொய், நீங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று குழந்தைகள் புரிந்து கொள்ளட்டும். உங்கள் தொண்டு வாழ்க! ஆகா! ஆகா! இதுக்குப் பட்டம் வேறே குடுக்கணும்னு சொல்றாங்களே? I cannot agree more.ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59318380002940780852012-09-30T05:57:37.902-05:002012-09-30T05:57:37.902-05:00//ஆத்திகத்தின் கடைசி நூற்றாண்டு இது. இதை என் கனவென...//ஆத்திகத்தின் கடைசி நூற்றாண்டு இது. இதை என் கனவென்று பிறர் நிராகரித்தாலும் சரி. ஆத்திகம் மறையும் அதே கணத்தில் நாத்திகமும் மறையும். //<br /><br />சார் <br />இந்த வரிகள் பல உண்மைகளை சொல்லாமல் சொல்கிறது <br />இவ்வளவு பெரிய கருத்தாடலுக்கு வழி வகுத்து உங்கள் பாடலுக்கு <br />நன்றி<br />இதை போல் நிறைய எதிர்பார்க்கிறேன் :) வேர்கள்https://www.blogger.com/profile/15366677729691741421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3357654098980433842012-09-28T10:53:21.733-05:002012-09-28T10:53:21.733-05:00என் கண்ணுக்கு எல்லாமே ஜன்னலாத்தான் தெரியுது ஜீவி ச...என் கண்ணுக்கு எல்லாமே ஜன்னலாத்தான் தெரியுது ஜீவி சார் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40938941375894340432012-09-28T10:17:49.789-05:002012-09-28T10:17:49.789-05:00அப்ப, கதவுகளைச் சாத்தியாச்சா?..அப்ப, கதவுகளைச் சாத்தியாச்சா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70655481914789667952012-09-28T07:20:12.317-05:002012-09-28T07:20:12.317-05:00சாதாரண பாப்பாப் பாட்டாக எழுதிப் பதிவு செய்தேன். சி...சாதாரண பாப்பாப் பாட்டாக எழுதிப் பதிவு செய்தேன். சிவகுமாரன் சொல்லியிருப்பது போல பின்னூட்டங்களில் சிந்தனைக் கதவுகள் திறந்தவண்னம் இருக்கின்றன. இவற்றின் சாரத்தை இன்னொரு பதிவில் சேர்க்க எண்ணியிருக்கிறேன், உங்கள் அனுமதியுடன். அத்தனை பின்னூட்டங்களுக்கும் நன்றி. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66458320426924992272012-09-28T07:13:25.080-05:002012-09-28T07:13:25.080-05:00வாங்க அரசூரான்.
திருவாசகத்தில் தனியாக ஒரு வாசகம் ...வாங்க அரசூரான்.<br /><br />திருவாசகத்தில் தனியாக ஒரு வாசகம் என்று எதுவும் இல்லை - ஆனால் நான் தினமும் படிச்ச அதே பாடல்களில் சில வேறு பொருளில் தோண ஆரம்பிச்சுது. என் குழப்பங்களை நானே தீர்த்துக் கொண்டேன் என்பது சரியான விளக்கமாகுமோ? இறையிலக்கியம் படைத்தவர்களும் முட்டாளில்லை, நானும் முட்டாளில்லை என்ற தெளிவும் சமாதானமும் கிடைச்சது என்று சொல்லியிருக்க வேண்டும். <br />இந்த realization & rationalization பற்றி அவசியம் எழுத நினைச்சிருக்கேன், 'நானும் கடவுளும்' பதிவில்.<br /><br />அடுத்து பதிவிடலாம்னு நினைச்சிருக்குற பாப்பாக் கதைக்கே என்னை உதைக்க ஆளிருப்பாங்கனு தோணுது - இதுல திருவாசகத்துலயும் திவ்வியப்பிரபந்தத்துலயும் நாத்திகம் இருக்குதுனு சொன்னேன்னு வைங்க, தமிழ்நாட்டுல இனி காலடி வைக்க முடியும்னு தோணலிங்க :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51448949674356737102012-09-27T15:17:44.251-05:002012-09-27T15:17:44.251-05:00//ஆனால் என் குழப்பங்களுக்கான தெளிவு திருவாசகம் திவ...//ஆனால் என் குழப்பங்களுக்கான தெளிவு திருவாசகம் திவ்வியப்பிரபந்தத்திலேயே கிடைத்தது // அப்பாதுரை தெளியவெச்சி தெளியவெச்சி அடிக்கிறீங்களே அய்யா, திருவாசகத்தில் அது எந்த வாசகம் எனச் சொல்லுங்களேன். நான் தேருவேனா? குளித்து கரை ஏறுவேனா?அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19513323661375569462012-09-27T10:06:36.317-05:002012-09-27T10:06:36.317-05:00வாருக, i mean, வருக வாசன்! சுந்தர்ஜியோட போட்டியா? ...வாருக, i mean, வருக வாசன்! சுந்தர்ஜியோட போட்டியா? டெபாசிட் தொலைக்க வழி சொல்றீங்களே, நியாயமா?<br /><br />//இவரு பெரிய மேதாவி...<br />நான் இப்படி அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன். நாத்திகத்தைத் தழுவத் தொடங்கிய புதிதில் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தமிழ் இறையிலக்கியங்களில் எனக்கு மிகவும் பிடித்த திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் படிக்கும் பொழுது இவர்களுக்கு இல்லாத அறிவும் விழிப்புமா எனக்கு வரப்போகிறது, இவர்கள் என்ன முட்டாள்களா என்று அடிக்கடி நினைப்பேன். (இரண்டு வருடங்களுக்கு முன் வரை தினம் திருவாசகம் திவ்வியப்பிரபந்தம் படிப்பேன்). ஆனால் என் குழப்பங்களுக்கான தெளிவு திருவாசகம் திவ்வியப்பிரபந்தத்திலேயே கிடைத்தது - ஒரு நாள் சுவரில் முட்டிய அனுபவம் போல.<br /><br />விவேகானந்தரின் 'எழுந்திரு, விழித்திரு' ஆன்மீகம், நாத்திகம் என்று நான் நினைக்கிறேன். <br /><br />பார்வையில் இருக்குது காட்சி.<br /><br />கொஞ்சம் மாத்திச் சொல்றீங்களோ சார்? வெற்றி என்றால் கடவுள் அருள், தோல்வி என்றால் தன் முன்வினை - இப்படித்தானே சொல்கிறோம்?<br /><br /> அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13763762367670586192012-09-27T10:01:27.329-05:002012-09-27T10:01:27.329-05:00//it is possible to separate religion from spiritu...//it is possible to separate religion from spirituality.. in my view, that is the only way to seek spiritual solace..... ramana maharishi.//<br /><br />ஒளிக் கீற்றின் பளீரிடல்!<br /><br />தகுந்த இடத்தில் மேன்மையான இந்த மேற்கோளை எடுத்தாண்ட அழகு, <br />அழகுக்கு அழகு சேர்த்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-752675179961625252012-09-27T09:29:17.759-05:002012-09-27T09:29:17.759-05:00நன்றி மாதங்கி. particularly your wodehousian part...நன்றி மாதங்கி. particularly your wodehousian parting lines - brilliantly humorous or humorously brilliant, depending on the time of the day.<br /><br />it is possible to separate religion from spirituality.. in my view, that is the only way to seek spiritual solace. we don't need to scour scriptures or ancient lores - there's an example round the corner: ramana maharishi.<br /><br />about 'bringing up a child as an atheist' - interesting pov. i think the risk is in "bringing up" regardless of how :) coz' i think it is a fallacy wrapped in parental arrogance. children are not brought up, they grow.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44262012911242528082012-09-27T09:20:20.332-05:002012-09-27T09:20:20.332-05:00உண்மை தனபாலன்.உண்மை தனபாலன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52829410255806579182012-09-27T09:20:04.063-05:002012-09-27T09:20:04.063-05:00நன்றி அரசூரான், Narmi.நன்றி அரசூரான், Narmi.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82297560385901231162012-09-27T02:37:37.610-05:002012-09-27T02:37:37.610-05:00ஆ...ஹா, "வ.கோ.வா. வீரப்பாவாய்"
"...ஆ...ஹா, "வ.கோ.வா. வீரப்பாவாய்" <br />"சபாஷ்....சரியான போட்டி" என ஆர்பரிக்கத்தான் தோன்றியது. <br />ஆட்டத்தில் இருப்பது அப்பாஜியும் சுந்தர்ஜியும் அல்லவா?<br />'காதல் மன்னனாய்' யாரும் <br />திரைச்சீலையை இழுத்து போட்டியை முடித்து விடாதீர்கள்.<br />....................<br />கட+ உள் = கடவுள்.<br />கடந்தோமா? கடக்கத்தான் வேண்டுமா?<br />கடந்தால் கண்டடைந்தது என்ன?<br />கடவுள் நல்லவரா, கெட்டவரா?<br />சுவர்க்கம், நரகம் தீர்மானிப்பவனா?<br />அறம், மறம் பிரிப்பவனா?<br />ஹிம்சை எது? அஹிம்சை எது.<br />எல்லைக் கோட்டின் அந்தப் பக்கமா? <br />இந்தப் பக்கமா அல்லது நடுவிலா?<br />நிம்மதி, அமைதி, சாந்தி என்பதின் <br />அளவீடு என்ன? அது தனிநபர் சார்ந்ததா?<br />சமுதாயம் சார்ந்ததா?<br />அணுவின்றி எதுவும் அசையாது<br />அணுமின்சாரம் வேண்டுமா?<br />அது நன்மையா, தீமையா?<br />அழிவா, ஆக்கமா? இரண்டுமேவா?<br />இல்லை அதையும் கடந்ததா?<br /><br />சாமி இருக்கானா? துன்பப்படுபவனின் ஐயம்<br />(குழந்தை நேய்வாய் பட்டிருக்கும் போது<br />பாரதி, காளியிடமே, "இப்படிச் சோதித்தால்<br />நான் ஆத்திகனாகி விடுவேன்" எனக் கோபிக்கிறார்.<br />பின் "எங்கெங்கு காணினும் சக்தியடா" எனவும் குதுகலிக்கிறார்.<br /><br />'நித்தி'யின் சிவசக்தி பூஜையும், சிவலிங்க வடிவும்<br />ஒன்றையே 'பாவி'க்கிறதா? (தளையசிங்கத்தின் 'தொழுகை' <br />கதையிலும் இப்படி ஒரு காட்சி வருகிறது) <br />இதுபற்றி பாற்கடலில் ஆழம் பார்த்தால் கிடைப்பது, அமிர்தமா? ஆலமா?<br /><br />கடவுள் இல்லையென்றிருந்தால், இத்தனை சாமிகளும் மதங்களும் கோவில்களும்<br />அதை நம்பி ஊரும். நாடும், நாணயமும்(In GOD we TRUST), ஒன்றாகி, பலவாகி, இணைந்து, பிரிந்து, பிரித்து,<br />உயிரூட்டி, கொலைகள் செய்து, குணமாக்கி, குருடாக்கி, கொடுத்து, பறித்து என இத்தனை லீலைகளும், திருவிளையாடல்களும், கோடுகளும், வடுக்களும், முடிசூட்டலும், மழித்தலும், இன்னபிறவும் நடந்திருக்குமா?<br /><br />இந்தக் குழப்பம் வரும் போதெல்லாம்,<br />"ஆமா, ஆமா, இவரு பெரிய மேதாவி, ஆனாப்பட்ட<br />பாரதியும், விவேகநந்தருமே நம்பிய, வழிகாட்டிய<br />பாதையை விட வேற மார்க்கம் ஏது? <br />நீ என்ன அவர்களை விட பெரிய..." <br />என எனக்கு நானே<br />புத்தி சொல்லிக் கொள்வேன்.<br /><br />'வெற்றியெனில் தன்னால்<br />தோல்வியெனில் அவனால்'<br />எனத் தோல்வியை சுமக்க<br />அல்லது மாற்றான் வெற்றிக்கு<br />காரணம் காட்டவாவது கடவுள் தேவை தானோ!<br /><br />தொடருங்கள். இந்தப் பழத்தை கொண்டுவந்து<br />நாடகத்தை நாரதர் நடத்தட்டும். இந்த போட்டி<br />அனைவருக்கும் நன்மையில் முடியுமென்பது திண்ணம்.<br />vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63305434072701804042012-09-27T02:31:49.602-05:002012-09-27T02:31:49.602-05:00I don't think I have anything to comment on th...I don't think I have anything to comment on the topic as such... Though, "strictly confining my comment to the post"- I think it's brilliant. <br /><br />The comments are all awesome. Esp- Jeevi sir and Sundarji! When people say- "I am spiritual, but not religious", I have always wondered if they really understand what they are talking about. Of course, there are very few people who say that... Sundarji's poetry- I have no words!<br /><br />I used to think the stories of magic, gods and goddesses widen the scope of a child's imagination. But as one grows up- the very complexities of human mind, leaves gods and magic- far behind! Funny though it may seem- I actually came across Russell saying, "The idea that things must have a beginning is really due to the poverty of our imagination"- later- which changed my opinion on what could contribute to "imagination". <br /><br />Isn't there a risk in "bringing up" a child as an atheist? After all, both "Religion" and "Spirituality" are highly persuasive... <br /><br />But as they say- this topic itself is something that is to be spoken on, only after a good lunch... There's a world out there to live...<br />Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34652091665132862622012-09-26T23:46:47.029-05:002012-09-26T23:46:47.029-05:00Dear Sir,
Your poem is excellent. I wish that the...Dear Sir,<br /><br />Your poem is excellent. I wish that the Tamilnadu Government uses your poem in the Tamil text books for the children to learn.<br />Please keep up your good work.<br />Narmihttps://www.blogger.com/profile/17754838203426500355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55705352257208621172012-09-26T00:49:42.463-05:002012-09-26T00:49:42.463-05:00சுந்தர்ஜி அவர்களின் பாடலும் நன்றாக இருக்கிறது...சுந்தர்ஜி அவர்களின் பாடலும் நன்றாக இருக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34652678054376499832012-09-25T16:55:19.475-05:002012-09-25T16:55:19.475-05:00அப்பாதுரை தளத்தில் பதிவுகள் எப்போதும் காவிரியில் ந...அப்பாதுரை தளத்தில் பதிவுகள் எப்போதும் காவிரியில் நுரையுடன் வரும் புதுத்தண்ணீர் போல! <br />அது சில/பல சமயம் கொள்ளிடமாய்!!<br />காவிரியும் கொள்ளிடமும் எங்களுக்கு (வாசகர்களுக்கு) ஒன்றுதான், நாங்கள் குளித்து மகிழ்கிறோம்!!!<br />ஜீவி,சு(ந்தர்)ஜி,அ(ப்பா)ஜி எல்லோரும் தனிமடல் அல்லாது இங்கு உரையாடினால் நாங்களும் பயன் பெருவோம் என வேண்டிக்கொள்கிறேன். நன்றி. அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26225244277137715612012-09-25T07:18:26.173-05:002012-09-25T07:18:26.173-05:00"ஆத்திகத்தின் கடைசி நூற்றாண்டு இது.ஆத்திகம்மற..."ஆத்திகத்தின் கடைசி நூற்றாண்டு இது.ஆத்திகம்மறைந்த அடுத்த கணம் நாத்திகமும் மறையும்"அற்புதமான வரிகள்.ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் அப்பாதுரை அவர்களே---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91859659676765728642012-09-25T06:46:30.185-05:002012-09-25T06:46:30.185-05:00//தெரிந்ததைத் தானே சொல்ல முடியும்?..
இப்படி வாருற...//தெரிந்ததைத் தானே சொல்ல முடியும்?..<br /><br />இப்படி வாருறீங்களே ஜீவி சார், நியாயமா? ஹிஹி..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33034467770275946882012-09-25T06:40:54.444-05:002012-09-25T06:40:54.444-05:00நன்றி RVS. அருமையான topicஐத் தொட்டிருக்கிறீர்கள்.
...நன்றி RVS. அருமையான topicஐத் தொட்டிருக்கிறீர்கள்.<br /><br />இதை 'நானும்' பதிவின் இறுதியில் எழுத எண்ணியிருந்தேன். சுந்தர்ஜியும் தொட்டுவிட்டதால் என் கருத்தைத் தெளித்து விட்டுப் போகிறேன்.<br /><br />கருவுற்றக் கணத்தில் சாத்தியப் பெற்றோரின் இன மத இன்னபிறச் சுவடுகள் கருவின் மேல் படிந்தாலும், பிறக்கையில் ஆத்திகரும் இல்லை நாத்திகரும் இல்லை. இரண்டுமே ஒருவித தகாத உரிமையின் விளைவாக ஊட்டப்படும் முலைப்பால். முதல்சோறு. <br /><br />புற இசையைக் கரு கேட்டு வளரும் என்பதன் எதிர்குழுவும் இருக்கிறது. கருவிலிருக்கும் பிள்ளை, வெளியுலக ஓசையைக் கேட்க சாத்தியம் உண்டு என்று மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ('சாத்தியம்' நிரூபிக்கப்பட்டிருக்கிறது!) அது இசையா என்னவென்று கருக்குழவியால் அறிய முடியாது. எத்தனையோ தம்பதிகள் கருவுற்றக் காலத்திலும் அடித்துக் கொள்கிறார்கள், சண்டை சச்சரவு என்று நிம்மதியைக் குலைத்துக் கொள்கிறார்கள். அன்பில்லாமல் கருவுற்ற மனைவியை எரிந்து விழுந்து சீறிக் குதறும் கணவர்கள், அழுகையோ அழுகை என்று இயலாமையில் திரியும் மனைவிகள் - இத்தனை ஓசைகளும் கருவைப் பாதிக்கும் தானே? இதற்கான சாத்தியங்கள் அலசப்பட்டிருக்கின்றனவே தவிர இது தொடரும் ஆய்வாகும். 'சனியன் முண்டை'க்குப் பதிலாகக் கொஞ்சம் சங்கீதம் கேட்டால் நிச்சயம் நல்லது தானே (குறிப்பாக, தாய் தந்தையருக்கு! :-). தாய் அமைதியாக இருந்தால் உடலுள் இருக்கும் கருவுக்கும் 'அமைதி' உண்டாகிறது. சுரப்பிகளின் விளைவு. இதை அப்படியே சொன்னால் சுவாரசியம் இருக்குமா? அதனால் கருவுக்கு முகாரியை விட மோகனம் பிடிக்கும் என்று சொல்கிறோம், அவ்வளவு தான். பிரகலாதன் கருவில் 'நாராயண ஸ்மரணை'யோடு இருந்திருக்க முடியாது என்றும் நாமறிவோம். இருந்தாலும் நம்புகிறோம். அஞ்ஞானம். (சரியானத் தமிழ்ச்சொல் தெரியவில்லை, என் அறிவுக்குறை). இன்னொரு பார்வையில், அப்படி கருவிலேயே நாராயணப் பாராயணம் செய்யாத பிரகலாதன் கதையில் சுவாரசியம் குறைந்து போயிருக்கும். இது கதாசிரியர் எடுத்துக் கொண்ட உரிமை. ராவணனுக்கு ஒரு தலை தான் என்றால் ராமனின் பராக்கிரமத்தில் லேசாகப் புழுதி படியும் என்பதால் கதாசிரியர் எடுத்துக் கொண்ட உரிமை. படிக்கும் நமக்கும் கண நிறைவாக இருக்கிறது.<br /><br />என் கருத்துக்கு வருகிறேன். ஆத்திகத்தின் கடைசி நூற்றாண்டு இது. இதை என் கனவென்று பிறர் நிராகரித்தாலும் சரி. ஆத்திகம் மறையும் அதே கணத்தில் நாத்திகமும் மறையும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19178391519400299322012-09-25T04:25:32.582-05:002012-09-25T04:25:32.582-05:00என் பங்கிற்கு.. Atheists Universe என்ற புத்தகத்தில...என் பங்கிற்கு.. Atheists Universe என்ற புத்தகத்தில் டேவிட் மில்ஸ் எழுதியிருந்ததை அப்படியே கீழே தருகிறேன்..<br /><br />We should recognize that all children are born as atheists.<br /><br />There is no child born with a religious belief. <br /><br />The Jesuits used<br />to have a saying: "Give us a child until he's 5 years old and we'll<br />have him for life." In a similar mode of thought, Bertrand Russell<br />once observed that "A man's religion, almost without exception, is<br />the religion of his community.”<br /><br />இப்படியெல்லாம் வெஸ்டனர்ஸ் சொன்னாலும் பக்தப் பிரகலாதன் வயிற்றுக்குள்ளிருந்தே நாராயண நாமத்தை ஸ்மரணம் செய்ததை நம்பாமல் இருக்க முடிவதில்லை. இப்போது அறிவியல்பூர்வமாக வெளியிலிருந்து எழுப்பப்படும் இசை கருவிலிருக்கும் குழந்தைக்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கிறார்கள்.<br /><br />வைரமுத்து ஒரு முறை மேடையில் சொன்னது. <br /><br />”பாப்பா உன் மதம் என்ன?” என்ற கேள்விக்கு..<br /><br />”தேதியாது” என்று பேசத்தெரியாதபோது சரியாகச் சொன்னது. <br /><br />வளர்ந்து பேசத்தெரிந்த போது என் மதம் உன் மதம் என்று தவறாகப் பேச ஆரம்பித்தது.<br />RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12713584332088297552012-09-24T22:20:49.836-05:002012-09-24T22:20:49.836-05:00ஒரு பழம். ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை பழுக்கும் அரிய...ஒரு பழம். ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை பழுக்கும் அரிய பழம். பார்த்தாலே நிறைவைத் தரும் பொலிவு. பழத்தின் ஒளியும் மணமும் மனதை எங்கோ இட்டுச் செல்கிறது. <br /><br />எல்லோரும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />இன்னொருவர் வந்தார். "என்ன பழம் இது?" என்று கேட்டார். பழத்தின் பெருமையை எல்லோரும் விவரித்தார்கள். தெய்வீகப் பழம் என்றார் ஒருவர். ஆராதிக்க வேண்டிய பழம் என்றார் ஒருவர்.<br /><br />"அப்படியா! என்ன ஆச்சரியம்!" என்றவர், உடனே பழத்தை எடுத்து சாறு வழியச் சாப்பிட்டு முடித்தார். "ஆகா! என்ன ருசி! என் பாக்கியம்!" என்றார்.<br /><br />திடுக்கிட்ட மற்றவர்கள், "என்னய்யா இது! ஆயிரம் வருடத்திய அரிய பழத்தை இப்படி சாறு வழிய நக்கிச் சாப்பிட உனக்கு எப்படி மனம் வந்தது? நாகரீகம் இல்லையா?" அப்படி இப்படி என்று விவாதித்தனர்.<br /><br />சாப்பிட்டவர், "இது பழம். சாப்பிட வேண்டியது. இந்தப் பழம் தான் என்னைச் சாப்பிடு என்று அழைத்தது. ஆயிரம் வருடத்திய அழுகலாக வேண்டாமென்று சாப்பிட்டேன்" என்று கையைத் துடைத்துக் கொண்டு போனார்.<br /><br />ப்ரிய சுந்தர்ஜிக்காக இந்தக் குட்டிக் கதை. (நான் சாப்பிட்டவர் கட்சி :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24114636404552725302012-09-24T21:52:15.212-05:002012-09-24T21:52:15.212-05:00ஆத்திகம் மிக வலிமையானது காஸ்யபன் சார், சந்தேகமே இல...ஆத்திகம் மிக வலிமையானது காஸ்யபன் சார், சந்தேகமே இல்லை. உலகில் ஆத்திகத்தின் ஆதிக்கம் தான் என்றைக்கும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82698488905944593942012-09-24T21:33:32.819-05:002012-09-24T21:33:32.819-05:00உங்களுடைய பாரபட்சமில்லாத அறிவுத் தேடலின் வீச்சு என...உங்களுடைய பாரபட்சமில்லாத அறிவுத் தேடலின் வீச்சு எனக்குத் தெரியும் அப்பாதுரை.<br /><br />உங்களின் நேர்மையான வார்த்தைகளுக்குக் கண்கள் கசிய என் நமஸ்காரம்.<br /><br />விஷயத்துக்கு வருகிறேன். <br /><br />கடோபநிஷத்தையோ, மைத்ரேயி உபநிஷத்தையோ மரணம் நிகழ்ந்த வீட்டில்தான் படிக்கவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் உபநிஷத்துக்களில் இல்லை.<br /><br />மொத்தம் 108 உபநிஷத்துக்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் ஒரு ரத்னம். வஜ்ரஸூசிகா உபநிஷத்து, நாரத பரிவ்ராஜக உபநிஷத்து,நாதபிந்து உபநிஷத்து, ஸூபாலா உபநிஷத்து பற்றியெல்லாமும் தனித்தனியே இடுகைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இவற்றில் நிர்வாணோபநிஷத்தின் மொழியே ஒரு கவிதை.அதுபோல் நவீனமான ஞானக் கவிதை இன்னும் எழுதப்ப்படவில்லை. <br /><br />மைத்ரேயி உபநிஷத்து ஸாம வேதத்தைச் சேர்ந்தது. இது மைத்ரேய முனிவர் சிவனிடம் பெற்ற உபதேசம்.இதைத் தனியாக எனது இடுகையில் முழுதுமாக எழுதுகிறேன்.<br /><br />தினசரி வாழ்க்கைக்கான சட்டதிட்டங்களை விதிப்பது உபநிஷத்துக்களின் நோக்கமில்லை. அந்த வேலையை ஸ்மிருதிகள் செய்கின்றன.<br /><br />இமயத்தின் மேலேறிச் செல்பவனுக்கு புறப்பட்ட இடம் எப்படித்தோற்றமளிக்குமோ அப்படியே சமூகத்தின் வேற்றுமைகளும் உதிர்ந்து ஞானத்தின் திறவுகோல் அவன் கைகளில் தஞ்சமடைகின்றன.அந்த அனுபவம் பயிற்றுவிக்கப் பட முடியாததும், தேடுபவனுக்கே கிடைப்பதும்.<br /><br />கடவுளைத் தேடி உணரும் அந்த இடத்தில் ஆஸ்திகம், நாஸ்திகம் இரண்டுமே அர்த்தமில்லாத வெற்றுச் சொற்கள்.<br /><br />மற்றுமொரு வேண்டுகோள்.<br /><br />பாரதி ஒரு மேதை.வெறும் 39 ஆண்டுகள் மட்டுமே கடுமையான நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த ஞானி.அவன் வாழ்நாளுக்குள் அவனைப்போல அதிகம் எழுதியதும்,அனுபவங்களைப் பெற்றதும்,மக்களை நெருங்கியதும் ஆதிசங்கரரும், விவேகானந்தருமே. அவனைப் புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும் மிகுந்த கவனமும் நிதானமும் தேவை.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50451828893995531562012-09-24T20:46:22.605-05:002012-09-24T20:46:22.605-05:00ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று பேசி
அலையும் அ...ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று பேசி <br /> அலையும் அறிவிலிகாள்- பல்<br />ஆயிரம் வேதம் ஓதும் தெய்வம்<br /> ஒன்றாம் எனக் கேளீறோ என்றான் பாரதி.<br />அத்வைதத்தை எதிர்த்த பாரதியை அவன் கோட்டு தலைப்பாகையோடு நாமத்தைப் போட்டு சிலையாக்கி பதிமூன்றாவது ஆழ்வாராக்கி விட்டார்கள். வைணவர்கள். அறுபத்துமூன்று நாயன்மார்கள் அல்ல.அறுபத்து ஐந்து. நவநாத சித்தர்(கார்ல் மார்க்ஸ்) அறுபத்து நான்கு! சொல்லடி நாயனார் (பெரியார்) அறுபத்துஐந்து.<br />பரதியும் மனிதன் தான். தெச பக்தன். புரட்சியாளன். ஆனாலும் he is a bundle of contrdiction and a mixer of confussion. ஆத்திகம் மிகவும் வலிமையானது. அது நாத்திகனையும் முழுங்கி ஏப்பம் விட்டுவிடும் ---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com