<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112</id><updated>2012-01-27T07:56:07.642-06:00</updated><category term='இசை'/><category term='சிறுகதை'/><category term='புத்தகம்'/><category term='போட்டிக்கதை'/><category term='நினைவுகள்'/><category term='தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு'/><category term='புதிர்'/><category term='இருநூறு'/><category term='கட்டுரை'/><category term='அன்புமல்லி கதைகள்'/><category term='நெடுங்கதை'/><category term='சினிமா'/><category term='நாடகம்'/><category term='நூறு'/><category term='விபரீதக் கதைகள்'/><category term='கவிதை'/><category term='காதல்'/><category term='அசுவத்தாமன் கதைகள்'/><category term='இலக்கியம்'/><title type='text'>மூன்றாம் சுழி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>209</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1741349624406752</id><published>2012-01-15T10:22:00.011-06:00</published><updated>2012-01-23T06:29:46.643-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>கரையோரம்</title><content type='html'>&lt;span style="line-height: 160%"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;இ&lt;/b&gt;ரவுச் சாப்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதென்று இந்த வருடம் புத்தாண்டு தினத்தன்று உறுதியெடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை இரண்டு நாள் தவிர்த்திருக்கிறேன். (அதற்கு மேல் முடியவில்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக எதுவும் வேண்டாம்.  போன வருடம் செய்தத் தவறுகளைச் செய்யாதிருந்தாலே போதும் என்றுத் தீர்மானித்து விட்டேன். new year resolutions for the infernally dumb என்று யாராவது புத்தகம் எழுதினால் கும்பிடுவேன். &lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;ச&lt;/b&gt;மீபத்தில் படித்தச் சுவையானப் புத்தகம்.  &lt;br /&gt;&lt;br /&gt;போர், காமம், உணவு - மனித வாழ்க்கை நெறிகளையும், சமீப நூற்றாண்டுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், இந்த மூன்று தேவைகளும் எப்படித் தூண்டி வளர்த்திருக்கின்றன என்பதைப் பற்றியப் புத்தகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/images/sbb.JPG" target="_BLANK"&gt;&lt;img alt="" border="1" src="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/images/sbb.JPG" style="cursor: pointer; display: block; float: left; height: 380px; margin: 0px auto; text-align: center; width: 260px;" /&gt;&lt;/a&gt; மனிதனின் அடிப்படைத் தேவை உணவு மட்டுமே.  அந்தத் தேவையே பரிணாம வளர்ச்சியில் பலவிதமாக வெளிப்பபட்டிருக்கின்றன என்கிறார் ஆசிரியர் பீடர் நோவேக்.  &lt;br /&gt;&lt;br /&gt;நாலு கால் பிராணியாகத் திரிந்து கொண்டிருந்தவர்கள் இரண்டு கால் பிராணியாக எழுந்து நின்றதன் அடிப்படையில் போர், காமம், உணவு மூன்றும் உண்டு என்று எழுதியிருப்பது சுவாரசியம்.  பெண் துணைக்காக ஆண் குரங்கினம் அடித்துக் கொண்ட காலத்தில், சில பலவீன புத்திசாலிக் குரங்குகள், சாப்பாடு தேடி எடுத்துக் கொடுத்து பெண் குரங்குகளைக் கவரத் தொடங்கின.  சாப்பாட்டைச் சுமந்து கொண்டு பயணிக்க இரண்டு கைகள் இரண்டு கால்கள் தேவைப்பட்டன. பரிணாம வளர்ச்சி தொடங்கியது. விவரங்களில் இருக்கிறது விவகாரம். நம்ப முடிகிற ஆச்சரியம். &lt;br /&gt;&lt;br /&gt;விடியோ கேமரா தொழில்நுட்பம் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கக் காரணம் நீலப்படங்கள் என்கிறார். தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் போர் உதவியது போல் போர்னாக்ரபி உதவுகிறது என்று சொல்வதுடன் நிற்காமல் நிறைய விவரங்கள் தந்திருக்கிறார்.  interesting. &lt;br /&gt;&lt;br /&gt;உணவில் biotechnologyன் influenceஐப் படிக்கும் பொழுது கொஞ்சம் பக் என்று இருக்கிறது.  ஏறக்குறைய 90% உணவு வகைகளில் genetic modification ஏதோ ஒரு விதத்தில் நடைபெறுகிறது என்கிறார்.  அடுத்த இருபது வருடங்களில் fully synthetic தானியங்கள் காய்கறிகள் கிடைக்குமாம்.  [ஹ்ம்ம்.  2100க்குள் இப்படி நடக்கலாம். estrogen கலந்த பால் குடித்துப் பழகி அநேகமாக homosexual ஆண்கள் அதிகமாகப் புழங்கும் வீடு. தொழில் நுட்பம் இருப்பதால் கல்வி, வேலை, வணிகம் எல்லாம் வீட்டில் இருந்தபடியே. சமையல் உரையாடல்: 'அந்த ப்லேஸ்டிக் வெண்டைக்காயைப் போட்டு modified தண்ணீர் கலந்து உப்பில்லாம சாம்பார் வைடா தங்கம்'.]&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ராணுவம், pornography (தமிழ்ச்சொல் தெரிந்தால் சொல்லுங்கள்), மற்றும் McDonalds - இவை மூன்றும் சிக்கலானத் தொழில்நுட்பம் உலக அளவில் சாதாரணமாகப் புழங்குவதற்கு எப்படிக் காரணமாகின்றன என்று நிறைய உதாரணங்கள், விவரங்களுடன் விளக்கும் புத்தகம் Sex, Bombs and Burgers. ஆசிரியர்: Peter Nowak. (இது போன்ற தலைப்புகள் குறைந்தபட்சம் புத்தகத்தை எடுத்து நாலு பக்கமாவது புரட்ட வைக்கின்றன :)&lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;வ&lt;/b&gt;ருங்காலத்தில் சமூக, கல்வி, இன, பொருளாதார, சட்ட, தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து வருட இறுதியில் சிகாகோவில் ஒரு வாரக் கருத்தரங்கு நடக்கும். நிறைய forward, lateral, oob thinking ஆசாமிகளைச் சந்திக்கலாம். அளவளாவலாம். (வெட்டிப் பேச்சுக்குச் சரியானத் தமிழ்ச்சொல் என்று நினைக்கிறேன்.  வார்த்தையிலேயே வளவளா. அக்மார்க் onomatopoeia). &lt;br /&gt;&lt;br /&gt;இலவசமாக intellectual கும்மி அடிக்கலாம் என்றாலும், சாப்பாட்டைக் குறை சொல்ல முடியாது. 'வருங்காலத் திருமணப் பத்திரங்கள் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.  புதுப்பிக்கவில்லையெனில் தானாகவே காலாவதியாகும்' என்ற கருத்தில் நான்கு வருடங்களுக்கு முன் கருத்தரங்கில் பேசியிருந்தேன். தொடர்ந்து அழைப்பு விடுத்தார்கள். 2011ல் இடம் கிடைக்கவில்லை. ஓசிச் சாப்பாட்டை நிறையத் தின்றுவிட்டு உருப்படியாக எதுவும் கருத்து சொல்லாதது காரணமோ என்னவோ, யார் கண்டார்கள்?!  &lt;br /&gt;&lt;br /&gt;இடம் கிடைக்கவில்லையே என்று நினைத்த போது, இன்னொரு ஜன்னல் திறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோ நகரில் ஒரு கருத்தரங்கத்துக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள்.  ஆச்சரியம் என்னவென்றால், அங்கே திருமணக் காலவரம்புச் சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம்! பரிசோதனை முறையில் ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள். தொடர்ந்து பரவ சமூக ரீதியில் என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு நிபுணர் கருத்தரங்கம்.  என்னை(யும்) மதித்து ஒரு கருத்தரங்க அழைப்பு.  சும்மா விடலாமா? வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோவில் மாட்டுக்கறி நன்றாக இருக்கும்.  நம்மத் தலைவியே மாட்டுக்கறி சாப்பிட்டு சுவாகா பண்றப்ப, நாம சும்மா இருப்போமா? அதனால இந்த மாதிரி.. இந்த விதத்திலே.. சமைக்க வேண்டும் என்றுத் தெளிவாகச் சொல்லிவிட்டேன்.  "வெண்ணை மாதிரி பண்ணி வைக்கிறேன், வாங்கோண்ணா" என்று சொல்லியிருக்கிறார் chef. கருத்தரங்கம் எப்படிப் போகிறதோ, கறியை ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம்.&lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;table border="0" cellspacing="5"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td width="315" valign="top"&gt;&lt;embed allowfullscreen="false" allowscriptaccess="always" flashvars="height=260&amp;amp;width=310&amp;amp;file=http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/sociedad.flv&amp;volume=30&amp;amp;backcolor=0x000099&amp;amp;frontcolor=0xFFFF99&amp;amp;lightcolor=0xFFFFFF&amp;amp;screencolor=0xFFFFFF&amp;amp;showstop=true&amp;amp;usefullscreen=false&amp;amp;autostart=false&amp;amp;autoscroll=true&amp;amp;repeat=list" height="260" src="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/player.swf" volume="30" width="310"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;  &lt;td width="500"&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;ஹி&lt;/b&gt;ஹ்ஹிஹ்ஹி... &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோல்கீப்பர் அன்றைக்கு எப்படி நொந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;வ&lt;/b&gt;ம்சி பதிப்பகம் நடத்தியச் சிறுகதைப் போட்டியில் &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/06/blog-post_25.html" target="_BLANK"&gt;யுகபுருஷன்&lt;/a&gt; கதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. திடீரென்று கிடைத்த அங்கீகாரம். நான் எழுதியதையும் படித்து மதித்து அங்கீகரித்தார்களே என்று நன்றி. நன்றி. நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று வந்த மின்னஞ்சல்களையும் சந்திப்புக்களையும் எதிர்பார்க்கவில்லை. பிராமண குலத்தை மட்டம் தட்டி எழுதியிருப்பதாக வந்த இமெயில்கள் உறுத்தின. சிகாகோ பாலாஜி கோவிலுக்கு வந்த இரண்டு பேர் எப்படியோ என் வீட்டைத் தேடிப் பிடித்து வந்து விட்டார்கள்.  இனி இது போல எழுத வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு, கோவில் பிரசாதம் வேறு கொடுத்துவிட்டுப் போனார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இணையம் ரொம்ப டேஞ்சருங்க. இனிமேல் profileல் பாலராஜன்கீதா படத்தையும், பின்னூட்டம் இடும்பொழுது மோகன்ஜியின் படத்தையும் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;seriously, ஏதோ எழுதினேன், அவ்வளவு தான்.  அதற்கு மேல் துருவிப்பார்க்க செய்தி எல்லாம் எதுவுமே இல்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எழுத்தில் இருப்பதற்கு மேல் எதையும் தேடிப்பார்க்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;on that note, ஒரு சின்னப் பின்புலம்.  வர்ணாசிரமங்களின் அடிப்படையில் ஒவ்வொரு யுகத்தின் பின்னணியிலும் ஒரு கதை என்று நாலு கதைகள் எழுதி வைத்தேன்.  கி, தி யுகங்களை வைத்துப் புனைந்த கதைகளை முடிக்கவில்லை. மற்ற யுகங்களின் பின்னணியில் புனைந்த யுகபுருஷன், &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2010/08/blog-post_20.html" target="_BLANK"&gt;லிக&lt;/a&gt; என்ற இரண்டு கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தனித்தனியாகப் படிக்கலாம் என்றாலும் சேர்த்துப் படிப்பவர்கள்,  கதையில் வரும் தம்பதிகளின் சமூக, தர்ம, ஒழுக்கச் சிக்கல்களின் ஒற்றுமையைப் பிடித்துக் கொள்வார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;யுக வரிசை மாற்றி எழுதியிருந்தேன். லிகவை எழுதி ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து யுகபுருஷனை எழுதி முடித்தேன். எதற்குச் சொல்கிறேன் என்றால் லிகவைப் படித்துவிட்டு, 'பிராமணன் ஒரு நாளும் பீ அள்ள மாட்டான்' என்று அதற்கும் கண்டனம் தெரிவித்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கதை எழுதுவது எப்படி என்று ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறேன். அடி வாங்காமல் கதை எழுதுவது எப்படி என்று இனிமேல் தெரிந்து கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellspacing="5"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td width="315" valign="top"&gt;&lt;embed allowfullscreen="false" allowscriptaccess="always" flashvars="height=260&amp;amp;width=310&amp;amp;file=http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/amein.flv&amp;volume=30&amp;amp;backcolor=0x000099&amp;amp;frontcolor=0xFFFF99&amp;amp;lightcolor=0xFFFFFF&amp;amp;screencolor=0xFFFFFF&amp;amp;showstop=true&amp;amp;usefullscreen=false&amp;amp;autostart=false&amp;amp;autoscroll=true&amp;amp;repeat=list" height="260" src="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/player.swf" volume="30" width="310"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;  &lt;td width="500"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;தே&lt;/b&gt;வ் ஆனந்த் மரணம் கொஞ்ச நாள் கழித்து உறைத்தது.  சில மரணங்கள் நம்மில் ஒரு பகுதியைப் பிய்த்துக் கிழித்துக் கொண்டு போவது போல் உணர்வேன்.  திடீரென்று நினைவு வந்து ஒரு வார இறுதியில் என்னிடமிருந்த நாலைந்து தேவ் படங்களைப் பார்த்த போது, குரோம்பேட்டை பம்மல் நினைவுகள் வந்து வெந்தேன்.  தேவ்-மதுபாலா ஜோடி மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல், ஆங்கோன் மே க்யா ஜி, எனக்கு மிகவும் பிடித்தப் பத்து இந்திப் பாடல்களில் ஒன்று.  உடன் நடித்திருப்பது தேவின் அசல் மனைவி. பெயர் மறந்து விட்டது. இருவருமே பாடலில் கண்களால் புன்னகை செய்வதைப் பாருங்கள். there's romance for you.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&lt;i&gt;முதலாவது, அவள் பர்கா அணியவில்லை. இரண்டாவது, அவளுடைய முடி முக அலங்காரங்கள் அவளை மேற்கத்திய நாகரீகக்காரி என்று விளக்கின. மூன்றாவது, அவள் ஜீன்ஸும் முழுக்கைச் சட்டையும் அதன் மேல் டோல்சே கபானா டிசைனர் மேலங்கியும் அணிந்திருந்தாள். ஷ்! நான்காவது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மேலங்கிக்குள் கைபடும் அவசரத்தில் ஒரு இத்தாலிய பெரட்டா கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தாள்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதியதைப் படித்து மதிக்கும் இன்னொரு குழு &lt;a href="http://www.atheetham.com" target="_BLANK"&gt;அதீதம் இணைய இதழ்&lt;/a&gt;. பொங்கலுக்கு ஒரு கதை வந்திருக்கிறது. மேலே மேற்கோள் காட்டியிருக்கும் சஸ்பென்ஸ் கதை. &lt;a href="http://atheetham.com/story/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF" target="_BLANK"&gt;அம்ருதவல்லி&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மாதமும் ஒரு கதை வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். சரித்திரப் பின்புலத்துடன் எழுதிய முதல் காதல் சிறுகதை. &lt;br /&gt;&lt;br /&gt;அதீதம் குழுவுக்கும், படிக்கப் போகும் உங்களுக்கும் (!), என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellspacing="5"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td width="315" valign="top"&gt;&lt;embed allowfullscreen="false" allowscriptaccess="always" flashvars="height=260&amp;amp;width=310&amp;amp;file=http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/knjmniladi.flv&amp;volume=30&amp;amp;backcolor=0x000099&amp;amp;frontcolor=0xFFFF99&amp;amp;lightcolor=0xFFFFFF&amp;amp;screencolor=0xFFFFFF&amp;amp;showstop=true&amp;amp;usefullscreen=false&amp;amp;autostart=false&amp;amp;autoscroll=true&amp;amp;repeat=list" height="260" src="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/player.swf" volume="30" width="310"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;  &lt;td width="500"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;a href="http://santhyilnaam.blogspot.com/2011/12/blog-post_30.html" target="_BLANK"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;துவும் காதல்!&lt;/a&gt; என்று ஹேமா தன் உப்புமடச் சந்தியில் தொடர்பதிவைத் தொடர்ந்து விட்டு, சும்மா இராமல், என் போல் சிலரைத் தொடர இழுத்து விட்டார் :). &lt;br /&gt;&lt;br /&gt;ஹேமா எழுதியக் கதை, பாடல் தேர்வுகளுடன் கோர்வையாகச் செல்கிறது. நானும் நாலைந்து விடியோக்களை வைத்துக் கொண்டு யோசிக்கிறேனே தவிர, கதைக்கரு ஒன்றும் தோன்றக்காணோம். 'ஹீரோ ஹீரோயின் ம்யூசிக் லொகேஷன் எல்லாம் தயார். இந்தக் கதை ஒண்ணு தான் கெடக்கலே..'&lt;br /&gt;&lt;br /&gt;கதை எழுதுகிறேனோ இல்லையோ, எடுத்து வைத்த விடியோக்களில் நிச்சயம் கதைக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்று தீர்மானித்த விடியோ இது. பிடித்தப் பழைய பாடல்களில் ஒன்று.  துள்ளும் துடிப்பான இசையும் போதையில் துவளும் குரல்களும், தூங்குமூஞ்சி நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பில் தொலைந்து போன துக்கத்தை என்னவென்பது!  இருந்தாலும் பாடலை ரசிக்க முடிவது உலக மகா ஆச்சரியம்!&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;ஏ&lt;/b&gt;றக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2009/04/how-to-lead-dogs-life.html" target="_BLANK"&gt;இந்தப் பதிவை&lt;/a&gt; அவ்வப்போது யாராவது தேடிப் படிக்கிறார்கள். அன்று எழுதியபோதும் நிறைய கருத்துக்கள் வந்தன. நான்கு வருடங்களாக அடிக்கடிப் படிக்கப்படும் இடுகை. படித்துவிட்டுப் பின்னூட்டமும், நல விசாரிப்பு இமெயிலும் அனுப்பியவர்களுக்கும் அனுப்புகிறவர்களுக்கும் நன்றி.  &lt;br /&gt;&lt;br /&gt;இதை விடப் படுகுழியான நாள் இருக்கமுடியாதென்று எண்ணிய நாள் அது - அதனால் பதிவிட்டேன்.   சில கடுமையான நாட்களைச் சந்தித்திருந்தாலும், அன்றைப் போல் சோர்வூட்டிய நாளை அதற்குப் பிறகு சந்திக்கவில்லையென்றே சொல்லவேண்டும். தொக்கி நின்ற சிலவற்றைத் தொடர்ந்து எழுதி முடிக்கலாமா என்று அவ்வப்போது தோன்றும்.  மூன்றாம் சுழியின் போக்கும் அடையாளமும் மாறிவிட்டதால் எழுதவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பதிவில் எழுதியிருந்த எங்கள் நாய் spot இறந்துவிட்டது.  சிகிச்சைக்குப் பிறகு மூன்று வருடங்களுக்கு மேல் இழுத்துப் பிடித்த spotஐ, சென்ற நவம்பர் மாதம் ஒரு சுமாரான குளிர் நாளில் கண்மூட வைக்க நேரிட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;மூப்பின் கொடுமை அதிகமாகித் திண்டாடிய நாயை இன்னும் இழுத்து வாழ வைக்க வீட்டில் போராட்டம்.  எத்தனை சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்தார்கள். நல்ல வேளையாக மருத்துவர் உதவியுடன் அனைவரையும் convince செய்ய முடிந்தது. என் பெண்ணின் முதிர்ச்சி வியக்க வைத்தது.  spotன் மரணத் தேவையைத் தெளிவோடு ஏற்றுக் கொண்டாள். அவள் குழந்தையாக இருந்த போது எடுத்து வந்த குட்டி நாய் spot.  ஒரு வாரக் குட்டியாக இருந்ததிலிருந்து உடன் வளர்ந்தவள். அவளுக்கு spotடம் அதிக நெருக்கம். spot என்று பெயர் வைத்ததும் அவள் தான்.  (நாய்க்குட்டிக்குப் பெயர் சூட்டியக் குட்டிப்பெண் இன்று என்னிடம், 'don't live my life for me, you bald man' என்கிறாள். ஹ்ம்ம்).  &lt;br /&gt;&lt;br /&gt;மரணப்படுக்கையில் இருந்த spotடன் என் பெண் முதலில் பத்து நிமிடங்கள் தனிமை கோரினாள்.  நாங்களெல்லாம் வெளியில் வந்துக் காத்திருந்தோம். வெளியே வந்தவள், நேரே காரில் உட்கார்ந்து விட்டாள். குடும்பத்தில் ஒவ்வொருவராக நாயுடன் ஏதோ பேசிவிட்டு நகர்ந்தனர்.  பக்கத்து வீட்டிலிருந்து இருவர்.  போதாக்குறைக்கு இன்னொரு மாநிலத்துக்கு தொலைபேசி அங்கிருந்த உறவினர்கள் வேறு spotடன் பேசினார்கள்.  நாய் என்ற நினைப்பில் யாரும் இருக்கவில்லை.  என்னுடைய இறுதிக் கணம் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயைக் கண்மூட வைக்கும் அந்தக் கணத்தில் உடன் இருக்க யாருக்கும் மனமில்லை.  நானும் மருத்துவரும் மட்டுமே. ட்யூப் கட்டி முதலில் மயக்க மருந்து செலுத்தினார்கள். என் உள்ளங்கையை நாக்கினால் தடவிக் கொண்டிருந்த spot, என்னையே பார்ப்பது போலிருந்தது.  நிச்சயமாக ஏதோ சொன்னது. என்னவென்று புரியவில்லை. மயக்க மருந்து வேலை செய்யத் தொடங்கியதும் இன்னொரு hi-dose மருந்து செலுத்தினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று. இரண்டு. மூன்று.  spot கண்மூடியது.  'he had a peaceful exit' என்றார் மருத்துவர்.  ஒரு பழகிய உயிர் என் கைபடப் பிரிந்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். spotன் கழுத்தைத் தடவிக் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆச்சு?" என்று ஒரே கேள்விமழை காரில்.  "what did spot say? was he scared?"  என்றான் மகன்.  &lt;br /&gt;&lt;br /&gt;"don't know.. but he seemed to say something for sure" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட அமைதிக்குப் பின், "he said thank you, dad" என்றாள் பெண்.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் சட்டென்று புரிந்தது.  'பதினைந்து வருடங்கள் என்னைப் பார்த்துக் கொண்ட புண்ணியவான்களே, நன்றி, போய் வருகிறேன்' என்றே சொல்லியிருக்க வேண்டும்.  சற்று நிம்மதியாக இருந்தது.&lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellspacing="5"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td width="315" valign="top"&gt;&lt;a href="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/images/stel.JPG" target="_BLANK"&gt;&lt;img alt="" border="1" src="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/images/stel.JPG" style="cursor: pointer; display: block; float: left; height: 200px; margin: 0px auto; text-align: center; width: 310px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td width="500"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;2&lt;/b&gt;008 பதிவின் போது குட்டியாக இருந்த எங்கள் வீட்டின் இரண்டாவது நாய் stella இன்றைக்குப் பெரிய மனுஷி. என் மகனின் தோழி. அவன் ஸ்கூல் பஸ் மாலையில் அடுத்த தெருவில் வரும் பொழுதே வாசலில் புலி போல் உறுமிக்கொண்டே சுற்றிச் சுற்றி வருவாள். என் மகன் பக்கம் யாராவது போனால் போதும், பிடுங்கி விடுவாள். சாது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாளில் spot மறந்துபோகக் காரணமானவள். இன்னும் பத்து வருடங்களுக்கு இவளால் தொந்தரவு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;life is good.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-1741349624406752?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/1741349624406752/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=1741349624406752&amp;isPopup=true' title='35 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/1741349624406752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/1741349624406752'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2012/01/blog-post_15.html' title='கரையோரம்'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3773814071576251661</id><published>2012-01-01T21:30:00.009-06:00</published><updated>2012-01-02T11:20:09.885-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>புத்தாண்டில் பத்து</title><content type='html'>&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Y8OlWiZ6ZsQ/TwD6u45SRyI/AAAAAAAAAkg/30mIVbhSnpQ/s1600/blog101.png" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="359" width="450" src="http://4.bp.blogspot.com/-Y8OlWiZ6ZsQ/TwD6u45SRyI/AAAAAAAAAkg/30mIVbhSnpQ/s400/blog101.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 160%"&gt;&lt;br /&gt;அனைவருக்கும் புத்தாண்டில் அறிவும் அமைதியும் கிடைக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம், மாதம் ஒரு முறையாவது பறிக்க வேண்டிய வலைப்பூக்கள் பத்து:  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://minminipoochchigal.blogspot.com/" target="_BLANK"&gt;மின்மினிப்பூச்சிகள்&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; கடவுள், இலக்கியம், சமூகம் இவற்றின் பின்னணியில் சற்றே அறிவை உரசிப் பார்க்கவைக்கும் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுகிறார். இவருக்குப் பிடித்தப் புத்தகம், சோவின் 'எங்கே பிராமணன்?' என்று நினைக்கிறேன் :).  நம் வாழ்வின் கணங்களை மின்மினிப்பூச்சிகளின் ஒளிவீச்சுக்கு ஒப்பிடும் Shakthiprabhaவின் எழுத்துக்களில், சமீபத்தில் ரசித்தப் பதிவு: அகல் கூறும் கதைகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://narasimmah.blogspot.com/" target="_BLANK"&gt; நாடி நாடி நரசிங்கா&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; ஒரு சோம்பலான ஞாயிறு மதியம், இணையத்தில் எதையோ தேடப்போய் இவர் பதிவில் இறங்கிச் சிலிர்த்தேன். தமிழ்வேதம் எனும் திவ்வியப்பிரபந்தத்தை சுவையான சிறு பக்கவிவரங்களுடன் அழகாக எடுத்தெழுதுகிறார் Rajesh.  எங்கிருந்து படங்களைப் பிடிக்கிறார் என்று ஒவ்வொரு முறையும் வியக்கிறேன். சமீபத்தில் ரசித்தப் பதிவு: 'மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயானை' பாடலின் விளக்கம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://asokarajanandaraj.blogspot.com" target="_BLANK"&gt;கிணற்றுத் தவளை&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; நம்ப முடியாத அளவுக்கு தமிழ்ச் சினிமா பாடல்களின் தொகுப்பு.  காலவரையென்றிலாத rangeல் பாடல்களைத் தொகுத்து வழங்குகிறார் Asokaraj.  மறந்து போன எத்தனையோ பாடல்களை நினைவுக்கு கொண்டு வந்தவரை அவ்வப்போது நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://veeduthirumbal.blogspot.com/" target="_BLANK"&gt;வீடு திரும்பல்&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; அரசியல் சினிமா சமூகம் என்றுப் பரவலாக அலசி அழகாக எழுதும் சுஜாதா விசிறி. சமீபத்தில் ரசித்தப் பதிவு:  'வாங்க முன்னேறி பார்க்கலாம்'. சென்னை அறிமுகத்தைச் சுவாரசியமான கவிதையாகச் சொல்லியிருக்கிறார். (ஹ்ம்ம்ம். i miss madras):&lt;br /&gt;&lt;pre&gt;'ஏகமான கூட்டத்தில் மூச்சுத் திணறி &lt;br /&gt;  மூர்ச்சையானது என் கவிதை'. &lt;/pre&gt;&lt;br /&gt;&lt;a href="http://kousalya2010.blogspot.com/" target="_BLANK"&gt;மனதோடு மட்டும்...&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; பெண்ணியம், தாம்பத்தியம், ஒழுக்கம், விழிப்புணர்ச்சி என்று அனாயாசமாக பல தட்டுக்களில் பரிமாறுகிறார் கௌசல்யா. எழுத்திலும் எண்ணங்களிலும் தெரியும் துணிச்சல், இதமாகவும் இருக்கிறது.  சமீபத்தில் ரசித்தப் பதிவு: 'மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன?!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://maduraivaasagan.wordpress.com" target="_BLANK"&gt;சித்திரவீதிக்காரன்&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; தமிழ்மண நட்சத்திரமாக இவர் ஒளிவீசியபோது அறிமுகம். நல்ல கட்டுரைகள் அழகு தமிழில். மதுரைக்காரனென்றப் பெருமை பதிவுகளில் தெரிகிறது. சமீபத்தில் ரசித்தப் பதிவு: 'கதவைத்திற காற்றுவரட்டும்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kannam.com/" target="_BLANK"&gt;கன்னம்&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; யோவ் என்ற வித்தியாசமான பெயரில் வித்தியாசமான கவிதைகள் எழுதுகிறார். 'கவிதைக்காக எதையும் இழக்கலாம் என்று தீர்மானித்துவிட்டேன்' என்னும் இவர் எழுதியவற்றுள், நான் சமீபத்தில் ரசித்த ஒரு எளிமையானக் கவிதை: &lt;br /&gt;&lt;pre&gt;'சவரமும் சேர்த்தே செய்துகொண்டால்&lt;br /&gt;  பத்து ரூபாய் குறையும் என்பதால்&lt;br /&gt;    பெரும்பாலும் தாடியை வருடியே&lt;br /&gt;      தீர்மானிக்கப்படுகிறது&lt;br /&gt;        முடிவெட்டுகிற நாட்கள்..!'&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;a href="http://consenttobenothing.blogspot.com" target="_BLANK"&gt;Consent to be......nothing!&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt;  தமிழ்த்தளம் தான் :) opinionated அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பார்வை. விவரம் தெரியாமல் நிறைய பேர் எழுதுகிறார்கள் (மி).  விவரம் தெரிந்து நிறைய பேர் எழுதுகிறார்கள். இந்த வலைப்பூ இரண்டாவது வகை. காரசாரமான தலையங்கம். அரசியல் சமூகப் பார்வைகளில் நடுநிலை கவைக்குதவாது என்ற கொள்கையோடு எழுதுகிறார். நடுநிலை விளையாட்டு ரெபரீக்களுக்கு,  பொதுமக்களுக்கு அல்ல என்றே நானும் நம்புகிறேன். இவர் கட்டுரைகளை ஆழ்ந்து படிக்க வேண்டும். படித்தால், காரசாரத்தின் பின்னே கண்கெட்டிருக்கும் பொதுஜனத்தின் மேலுள்ள கரிசனம் லேசாக எட்டிப் பார்ப்பது புரியும். பின்னூட்டமிடக் கொஞ்சம் தைரியம் வேண்டும் :). சும்மா ஏதாவது எழுதினால் கிழித்து விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி, கவனம். சமீபத்தில் படித்து ரசித்தவை: 'வெள்ளின்னா' 'சன்டேன்னா' பதிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://shylajan.blogspot.com/ " target="_BLANK"&gt;எண்ணிய முடிதல் வேண்டும்&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; எதையோ தேடி ஏதோ ஒரு ப்லாகில் இறங்கி, திடுக்கிட்டு மலைத்து, இருப்பது அத்தனையும் படிக்கத் தோன்றிய அனுபவம் உண்டா?  அப்படிச் சமீபத்தில் அறிமுகமான வலைப்பூக்களில் ஒன்று. இவருடைய சவால் போட்டிச் சிறுகதையை மிகவும் ரசித்தேன். மில்ஸ் &amp; பூன் பற்றிய இவருடைய பழைய பதிவைப் படித்த போது, 'டப்பா புக்' என்று உயர்நிலைப்பள்ளியில் உடன் படித்த பெண்களைக் கிண்டல் செய்த நினைவுகள் வந்தன. அகலமான கேன்வஸ் இவருடையது. தேடத் தேட நிறையக் கிடைக்கிறது. நிறைய படித்து ரசித்தப் பதிவு: 'கோதை-செவ்வாய்-FRENCH KISS!'.  (ஹிஹி.. இவர் பதிவுல இறங்கின காரணம் புரிஞ்சுடுச்சா?) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://coralsri.blogspot.com/" target="_BLANK"&gt;நித்திலம்&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; விவரமாக நிறைய எழுதும் பதிவர்களில் ஒருவர்.  'பவளசங்கரி' என்று வரும் பதிவுகள் சுவையாக இருக்கின்றன. ('பவள சங்கரி' புரியவில்லை:).  இடையிடையே அருமையான இலக்கியத் தமிழ்ப் பதிவுகள் எழுதுகிறார். வல்லமை மின்னிதழின் நிர்வாக ஆசிரியர் என்பதை இதை எழுதும் பொழுது தெரிந்து கொண்டேன் :). தொடர்கதை எழுதுவது எளிதேயல்ல.  சென்ற மார்ச் மாதத்திலிருந்து 'வெண்ணிலவில் ஒரு கருமுகில்' என்று ஒரு கதையைத் தொடர்ந்து எழுதிவருகிறார். பிரமிக்க வைக்கும் உழைப்பு. சமீபத்தில் படித்து ரசித்தது: 'SMS எம்டன்' புத்தக விமர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;எ&lt;/b&gt;ழுதி முடித்த பிறகே இந்தத் தளத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. (நன்றி: &lt;a href="http://ramamoorthygopi.blogspot.com/" target="_BLANK"&gt;R கோபி&lt;/a&gt; ராமமூர்த்தி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nesampeople.blogspot.com/2012/01/blog-post.html" target="_BLANK"&gt;நேசம்&lt;/a&gt;&lt;b&gt;:&lt;/b&gt; இயக்கத்தின் பெயரே இழுக்கிறது. புற்றுநோய் விழிப்புணர்ச்சி பற்றிய வலைப்பூ மாதிரி இருக்கிறது. வளர்ந்தால் புரியும். விழிப்புணர்ச்சி உண்டாக்க ஒரு போட்டியுடன் தொடங்கியிருக்கிறார்கள் புத்தாண்டை. உடன்படும் யுடான்ஸ் குழுவினரோ, ஏதாவது செய்து பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  இது நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-3773814071576251661?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/3773814071576251661/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=3773814071576251661&amp;isPopup=true' title='35 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/3773814071576251661'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/3773814071576251661'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2012/01/blog-post.html' title='புத்தாண்டில் பத்து'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Y8OlWiZ6ZsQ/TwD6u45SRyI/AAAAAAAAAkg/30mIVbhSnpQ/s72-c/blog101.png' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1038142974803224668</id><published>2011-12-31T08:36:00.014-06:00</published><updated>2011-12-31T13:36:26.964-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மெல்லிசை நினைவுகள்</title><content type='html'>&lt;span style="color: #003300; font-size: 120%;"&gt;&lt;b&gt;வெத்து வேலை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 160%"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;த&lt;/b&gt;மிழ்ச் சினிமா காதல் டூயட்கள் பற்றி ஆகஸ்டு மாதம் சில பதிவுகள் எழுதியிருந்தேன். சென்ற ஐம்பது வருடங்களின் சிறந்த தமிழ்ச்சினிமா காதல் பாடல்கள் பற்றி உங்கள் தேர்வுகளையும் கேட்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ரசிக்கும் காதல் டூயட்களில் #2 இடத்தில் &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/08/blog-post_14.html" target="_BLANK"&gt;இந்தப் பாடல்&lt;/a&gt; என்று எழுதி நிறுத்தியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டங்களில் கிடைத்த உங்கள் தேர்வுகளில் சிலவற்றைத் தொகுத்து &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/10/blog-post_24.html" target="_BLANK"&gt;ஒரு பதிவும்&lt;/a&gt; எழுதியிருந்தேன் (நன்றி :-). &lt;br /&gt;&lt;br /&gt;நான் ரசிக்கும் #1 காதல் டூயட் பாடல் பற்றிய பதிவோடு இந்த வருடத்துக்கு விடைகொடுக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல், இசை, குரல், நடிப்பு, அலங்காரம், படப்பிடிப்பு என்று பல கோணங்களிலும் ரசிக்கக் கூடிய பாடல்களில் இது #1. ரசமான காதல் பாடலாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஒரு பாடலுக்காக மட்டும் கண்ணதாசனை அழைத்தார்களாம். காலத்தால் அழியாதக் காதல் மெல்லிசைக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தியை விட்டால் ஆளே இல்லை. சொக்கவைக்கும் காதல் டூயட்களுக்கு குரல் கொடுக்க, டிஎம்எஸ்-சுசீலாவை விட்டால் ஆளில்லை. தொடர்ந்து ரசிக்க முடிகிற காதல் ஜோடிகளுக்கு எம்ஜிஆர்-ஜெயலலிதாவை விட்டாலும் ஆளில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;துள்ளும் இசை. பாடல் முழுதும் இழையூடும் spanish பாணி lilting guitar riff, மோக முத்தம் போலவே சிலிர்க்க வைக்கிறது. இந்தப் பாடலில், எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் ஆக்கிரமிப்பு திரையைவிட்டு மனதில் குடியேறிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டு ரசித்திருக்கிறேன் என்பதற்கு கணக்கே இல்லை.  விடியோ வசதி கிடைத்ததும் எத்தனை முறை பார்த்து ரசித்திருக்கிறேன் என்பதற்கும். ஒவ்வொரு முறையும் ரசிப்பதற்குப் படப்பிடிப்பில் புதிதாக ஏதாவது தென்படுகிறது.  இந்த முறை ஜெ தலையில் பதிந்திருக்கும் குட்டிக் குட்டி ரோஜாக்களை ரசிப்பதற்காகவே தொடர்ந்து மூன்று முறை பார்த்தேன் :).  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறப்பான ஆக்கத்தின் பின்னணியில் இருக்கும் கூட்டுழைப்பு, இந்தப் பாடலில் வெளிப்படுகிறது.  சென்ற ஐம்பது வருடங்களின் சிறந்த தமிழ்ச்சினிமா காதல் டூயட்டுக்கான என்னுடைய தேர்வு இந்தப் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #6600cc;"&gt;&lt;b&gt;அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்&lt;/b&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:70%;"&gt;சினிமா-13 | 2012/12/31 | #1 தமிழ்ச்சினிமா காதல் பாட்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="false" allowscriptaccess="always" flashvars="height=260&amp;amp;width=420&amp;amp;file=http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/Naanamo.flv&amp;volume=30&amp;amp;backcolor=0x000099&amp;amp;frontcolor=0xFFFF99&amp;amp;lightcolor=0xFFFFFF&amp;amp;screencolor=0xFFFFFF&amp;amp;showstop=true&amp;amp;usefullscreen=false&amp;amp;autostart=false&amp;amp;autoscroll=true&amp;amp;repeat=list" height="260" src="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/player.swf" volume="30" width="310"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-1038142974803224668?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/1038142974803224668/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=1038142974803224668&amp;isPopup=true' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/1038142974803224668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/1038142974803224668'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_31.html' title='மெல்லிசை நினைவுகள்'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-290083877979106104</id><published>2011-12-29T23:32:00.020-06:00</published><updated>2012-01-08T10:13:50.193-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசுவத்தாமன் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெடுங்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபரீதக் கதைகள்'/><title type='text'>ஸ்மரண யாத்ரை</title><content type='html'>&lt;span style="color: rgb(51,51,183); font-size:120%;"&gt;&lt;strong&gt; (பெரிய) சிறுகதை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_16.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_18.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_20.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_28.html"&gt;4&lt;/a&gt; ◀◀ பூர்வத்துலே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 160%"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;"அ&lt;/b&gt;ந்தக் கமண்டலத்தை கீழே வைங்கோளேன்.. ரொம்ப நேரமா பிடிச்சிண்டிருக்கேள்.  கை வலிக்கப் போறது"ங்கறான் விஸ்வகர்மா. அவனோட பயம் அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ"ன்னார் கௌதமர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னையும் மன்னிச்சிடுங்கோ"னு சாஷ்டாங்கமா கௌதமர் காலிலே விழுந்தா, தாழ்வார அகல்யா. &lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா மாதிரியே இருக்கே... நீ யாரா இருந்தாலும் தீர்க்கசுமங்கலியா இரும்மா"னுடறார் கௌதமர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதான் சான்சுனுட்டு அவளும் எழுந்துண்டு, ""நான் ஸிந்து.  இவரோட பார்யாள்"னுட்டு விஸ்வகர்மாவைக் காண்பிக்கிறா. "உங்க ஆசீர்வாதத்தை மறந்துடாதீங்கோ"னு கௌதமர் கிட்டே சொல்றா. &lt;br /&gt;&lt;br /&gt;குழம்பிக் கிடந்த கௌதமருக்கு ஆத்திரமும் அவமானமும் சேர்ந்து இன்னும் பாடா படுத்தறது.  விஸ்வகர்மாவையே பாத்துண்டிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பூலோகத்துல யாரோட ரூபத்தை எடுத்துக்கறதுன்னு நெனச்சப்போ... இருக்கறவாளிலே ஆதர்ச தம்பதிகளாப் பாத்து அவா ரூபத்தை எடுத்துக்கலாம்னு தோணித்து.. அப்படி யாராவது உண்டானு இவர் கிட்டே கேட்டேன்"னு சொல்றா ஸிந்து. &lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வகர்மா சேந்துண்டான். "அதுக்கு நான் சொன்னேன்... அடி அசடே... நோக்குத் தெரியாதோ?  கௌதம மகரிஷியையும் அகல்யாவையும் விட்டா ஆதர்ச தம்பதிகள்,  பூலோகமென்ன ஸப்த லோகத்லயும் கிடையாதே..?"&lt;br /&gt;&lt;br /&gt;நன்னா ஐஸ் வைக்கறான். ஆமோதிக்கற மாதிரி ஸிந்து தலையை நாலு தடவை ஆட்டறா.  மருமகள் தன்னைத்தான் கிண்டல் பண்றாளோனு பிரம்மாவுக்கு தோண்றது.. இருந்தாலும் கவனிச்சுக் கேக்கறார்.  விஸ்வகர்மா தொடர்ந்து சொல்றான்.  "மகரிஷி.. உங்களையும் அகல்யாவையும் பார்க்க ஸ்மரண யாத்ரை பண்ணி வந்தோம்.  குடிலுக்குள்ளே பாத்தா யாருமில்லே. அகல்யா கொட்டில்லே கோபூஜை பண்ணிண்டிருந்ததைப் பார்த்தோம்.  குடில் நிசப்தமா ஆளில்லாம இருந்துது. உங்க பாதம் பட்ட புண்ய பூமியா என்னனு தெரியலை, எங்களுக்கு உடனே உங்களை மாதிரி ரூபமெடுக்கணும்னு தோணித்து.."&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் உங்க மேலே இருந்த அதீத மரியாதையினாலே.. மன்னிச்சுடுங்கோ"னு முடிக்கறா ஸிந்து.  "ஹிஹி"ங்கறான் விஸ்வகர்மா.  மனசுக்குள்ளே அகல்யா சொல்லிக்கொடுத்த வசனம் எல்லாத்தையும் சரியாச் சொன்னோமான்னு கணக்கு போடறான்.  கௌதமர் கொஞ்சம் இறங்கின மாதிரித் தோண்றது அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;'அவசரப்பட்டு சாபத்தை ஆரமிச்சுட்டோமே, முன்கோபத்தை காண்பிச்சுட்டோமே!'னு இருக்கு கௌதமருக்கு.  முணுக் முணுக்னு கோவம் வந்தா இப்படித்தான்.  கண்மண் தெரியாமக் கோபம்னு சொல்வாளே, அது இது தான்.  என்ன பாக்கறோம் என்ன கேக்கறோம் என்ன செய்யறோம்னு யோசிக்காம, புரிஞ்சுக்காம கோபம் வந்துடுத்துன்னு வைங்கோ, அப்புறம் ரொம்ப சங்கடம் தான்.  'கண்ணால் காண்பதும் பொய்'னு  புலவர் சொல்லலியோ?  'அது கௌதமருக்கு எப்படிய்யா தெரிஞ்சிருக்கும்?'னு கேக்கறார் ஜிஎம்பி சார். வாஸ்தவம். விடுங்கோ. &lt;br /&gt;&lt;br /&gt;முன்கோபத்தினாலே சகலத்தையும் கோட்டை விட்டுட்டோம்னு புரிஞ்சுண்ட கௌதமர், "ஸ்மரண யாத்ரை எந்த்ரமா?  என்னய்யா கதை விடறே?"னு ஹீனமாக் கேக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தோ பாருங்கோ"னுட்டு விஸ்வகர்மா அடுக்களையோரமா இருந்த குண்டத்தைக் காண்பிக்கறான். எடுத்துண்டு வரான்.  தப்பிச்சது யாரோட புண்யமோனு அவன் மனசு அடிச்சுக்கறது.  சட்னு அதுல இறங்கி ஓடிப்போய்டலாமானு தோண்றது.  ஆனா வித்வான் பாருங்கோ. வித்வான்களுக்கே உண்டான வித்யாகர்வம் அவனுக்கும் உண்டு. தன்னோட உன்னதமான எந்த்ரத்தை கதைனு சொல்றாரே கிழவர்னு நெனச்சுக்கறான்.  "கதையில்லை மகரிஷி.  வாஸ்தவம்"னுட்டு குண்டத்துல இறங்கி வேறே வேறே ரூபத்துல குடில் முழுக்க ஸ்மரண யாத்ரை பண்ணிக் காட்டறான்.  அப்புறம் சுயரூபத்துக்கு வந்து, "உங்க பேர்ல இருந்த அலாதி பக்தியிலே.. ஒரு மோகத்துல அப்படி நடந்துண்டோம்.. மன்னிச்சுடுங்கோ"னு மறுபடி கெஞ்சறான். அவனுக்குத் தெரியும் சாபம் கொடுக்க கௌதமருக்குப் பவரில்லேனு.. இந்த்ரன் மேலே சாபம் கொடுக்க ஆரம்பிச்சாச்சே? சாப சக்தி எல்லாம் இன்னொத்தருக்கு நான்-ட்ரேன்ஸ்பரபில் இல்லியோ? அதனால கொஞ்சம் மூச்சு வந்தாலும், எதுக்கும் இருக்கட்டுமேனு மன்னிப்பு மேலே மன்னிப்பா கேட்டு வைக்கறான். விட்டா போறும்னு இருக்கு அவனுக்கு உள்ளுக்குள்ளே. அகல்யா முன்னாடி இந்த்ரன் வேஷம் போட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நெனச்சுக்கறான். &lt;br /&gt;&lt;br /&gt;அசல் அகலிகை கௌதமர் காலில் விழறா.  "முனி ஸ்ரேஷ்டரே. உங்க தவபலனைக் கட்டுப்படுத்தறதுக்கு என்னை பிரம்மா இங்கே அனுப்பிச்சார். இங்கே வரதுக்கு முன்னாலயே இந்த்ரன் மேலே எனக்குத் தீராத காதல். உங்க நிழல்லே இருக்குற வரைக்கும் உங்க தர்மத்துக்கும் மானத்துக்கும் புறம்பா நான் ஒரு நாளும் நடக்கலே. உங்க தபோபலனை கட்டுப்படுத்துற நேரம் வந்தாச்சுங்கறதினாலே இப்போ இதெல்லாம் நடக்கறது.  இனிமே நான் உங்க பத்னியா மனுஷ்ய ரூபத்துலே இருக்க முடியாது. எனக்கு தேவரூபத்துல என் வழியில போறதுக்கு அனுமதி குடுங்கோ"னு கேக்கறா.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாவும் "இதுக்கெல்லாம் காரணம் நான்தான்.  உங்களோட முன் கோபத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.  உங்க  தபோபலன் அதீதமாகி எங்கே இந்த்ரபதவிக்குப் பங்கம் வந்துடுமோனு முன் ஜாக்ரதையா நடந்துக்க வேண்டியதா போச்சு.  அதனால அகல்யாவை உண்டாக்கி... இதெல்லாம் என்னோட நாடகம்னாலும் இது என் தொழில் தர்மம். மன்னிச்சுருங்கோ"னு சொல்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமருக்கு நன்னா ஏமாந்துட்டோம்னு கடுப்பா இருக்கு. "இந்த எந்த்ரத்தை வச்சுத்தானே நீங்களெல்லாம் என்னை ஏமாத்தினேள்?  இனிமே இந்த எந்த்ரம் தேவாளுக்குப் பயன்படாம போகட்டும்"னு சொல்லிடறார்.  அகல்யை தேவலோகத்துக்குப் போறதைப் பத்தியெல்லாம் அவர் கவலைப்படலே. முன்கோபத்துலே எல்லாத்தையும் இழந்துட்டோமேனு மட்டுமே  அவருக்கு வருத்தம்.  'சே!'னு ஆயிடுத்து.  "இருந்தாலும் இந்த சாபத்தை நான் கொடுத்தே ஆகணும்.. இப்ப என்ன பண்றது?"னு கேக்கறார் பிரம்மா கிட்டே.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க இந்த்ரனை கர்த்தாவாக்கி சாபம் கொடுக்க ஆரம்பிச்சதுனாலே, இந்த்ரன் தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும். அவனுக்குத் தான் சாபவலயத்துக்கு உரிமையிருக்கு"னு சொல்றார் பிரம்மா.  இந்த்ரனைப் பார்த்து சாபவலய, அதாவது சாபத்தை திசை திருப்ப,  யோசனை உண்டானு கேக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரனுக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்ததை இப்போ சொல்லியே ஆகணும்.  விஸ்வகர்மா மாதிரி ஆட்கள் சட்னு தன்னைப் போல வேஷம் போட்டு எல்லாரையும் ஏமாத்த முடியறதுன்னா, இந்த எந்த்ரத்துனாலே ஆபத்து வரத்தான் செய்யும்னு நெனச்சுக்கறான்.  இதல்லவோ வெபன் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன்னுட்டு ஒரு காரியம் பண்ணினான்.  பொதுவாவே வெபன் ஆப் மாஸ்டிஸ்ட்ரக்ஷன்னு சொல்றவா எல்லாருமே அவசரப்படறா.. அரைலூசா இருக்கா.. ஏன்னு தெரியலே. பாருங்கோ, அமெரிகாவிலே புஷ்ஷு பண்ணின கார்யம்.. சும்மாவானும் ஈராக்கோட ஒரு யுத்தத்தை உண்டுபண்ணி.. தேவையா சொல்லுங்கோ. நம்ம ஊர் கூடங்குளக் கதையாட்டம்.  பிரச்னை என்னனு நன்னா தெரிஞ்சுண்டு அதுக்கேத்த மாதிரி ஒரு உபாயத்தை.. சித்தியை செஞ்சு முடிக்க வேண்டாமோ? கூடங்குளத்தை இழுத்து மூடுனு சொல்றது கண்மூடித்தனம் இல்லையோ? இந்த்ரனுக்கும் அந்த மாதிரி ஒரு மைன்ட்லெஸ் இன்செக்யூரிடினு வைங்கோ. எந்த்ரத்தையே ஒழிச்சுடணும்னு நெனச்சான்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமர் கிட்டே, "மகரிஷி.. உங்க சாபசக்தியை இந்த எந்த்ரத்து மேலே காண்பிச்சுடுங்கோ"னு சொல்லிடறான்.  கௌதமரும் எத்தனை நாழி கமண்டலத்தைக் கையிலயே பிடிச்சுண்டிருப்பார்?  சரியாப் போச்சுனுட்டு சாபசக்தியை இந்த்ரன் கிட்டேயிருந்து திசை திருப்பி எந்த்ரத்து மேலே காண்பிச்சார்.  கமண்டலத்துலேந்து நாலு சொட்டு தண்ணியைத் தெளிச்சு "கல்லாப் போ!"னு சாபம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாபசக்தியை உள்வாங்கின எந்த்ரம் உருமாறிடுத்து. எந்திரம் இருந்த இடத்துலே குட்டியானை சைசுலே இப்போ ஒரு பெரிய பாறாங்கல் இருக்கு.    விஸ்வகர்மாவுக்கு அழுகை தாங்கலை.  தன்னோட மாஸ்டர்பீஸ் வேஸ்டாயிடுத்தேனுட்டு வேதனை.  எப்பேற்பட்ட எந்திரம் இப்படி காதலுக்காக அடிபட்டு உருத்தெரியாமப் போயிடுத்தேனு புலம்பறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;கௌதமருக்கே பாவமாயிடுத்து.  என்ன பண்றதுன்னு தெரியலை.  "பிற்காலத்துலே ஜனங்கள் எல்லாம் என்னை முட்டாள்னு சொல்வாளே?"னு அவரும் புலம்ப ஆரம்பிச்சார்,&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ பிரம்மா சொல்றார். இங்லிஷ்லே ஸ்பின் டாக்டர்ம்பா பிரம்மா மாதிரி ஆட்களை.  ஏதாவது சேதி கட்டி ஏமாத்தற வித்தை தெரிஞ்சவா. "மகரிஷி.  ஜனங்களைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாதீங்கோ.  நாம அதுக்கு ஏதாவது கதை கட்டி விடுவோம்.  பாருங்கோ, அகலிகை தான் இந்தக் கல்லா மாறினாள்னு சொல்லிக் கதைகட்டி விடுவோம்.  முட்டாள் ஜனங்க தானே.. எல்லாம் கண்மூடிகள்.. எதைச் சொன்னாலும் நம்பிடுவா.. பாருங்கோ இதுக்காக ஒரு விரதம் ஒரு பூஜைனு வேறே பண்ணுவா பாருங்கோ.  இதுக்கப்புறம் உங்க முன்கோபமும் போயிடும் பாருங்கோ.. இது தான் உங்களுக்குப் பாடம்"னு சொல்றார்.  கௌதமருக்குத் த்ருப்தியா இருக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வகர்மா இன்னும் புலம்பிண்டிருக்கான். பிரம்மா அவன் கிட்டே போறார்.  "குழந்தே.. போனாப் போறது விடு.  புத்திசாலிப் பெண்கள் கிட்டே நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்.  இதான் உனக்குப் பாடம். இதே மாதிரி இன்னொண்ணு செஞ்சுக்கோ. விஷ்ணு கூட ஒண்ணு வேணும்னு ஆர்டர் கொடுக்கறதா சொன்னார்"னு ஏதோ சொல்லி அவனை சமாதானப் படுத்தறார்.  அவன் விசும்பிண்டே இருக்கான்.  பிரம்மா மேலும் சொல்றார். "மகனே விஸ்வகர்மா.. உனக்கு ஒரு வரம் தரேன். இந்த கல் ஒரு நாள் வெடிக்கும்.  கவலைப்படாதே.  அதுக்குள்ளே இருக்கற ஸ்மரண யாத்ரை எந்த்ரம் வெளிவரும். இன்னொரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க உதவியா இருக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஜோடி?"ங்கறான் விஸ்வகர்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"அது ஒரு கதை.  நடக்கபோற கதை. இப்ப சொல்ல முடியாது.  அந்த ஜோடியை சேத்து வைக்க ஒருத்தர் கடல் தாண்ட வேண்டியிருக்கும், நெனச்ச நேரத்துல மூலிகை மலையைத் தேடிப் போக வேண்டியிருக்கும்.. அதுக்கெல்லாம் தோதுப்படும் இந்த எந்த்ரம்.  இந்த இடத்துக்கு அந்தக் கதையோட நாயகன் வந்ததும், இன்னொரு மகரிஷி அதை ரகஸ்யமா சொல்வார்"னு சொல்றார்.  தன்னோட எந்த்ரம் இன்னொரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கும்னு தெரிஞ்சுண்டு விஸ்வகர்மா அடங்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை சித்தே தனியா இருக்க விடுங்கோ"ங்கறார் கௌதமர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரனும் அகல்யாவும் கை கோத்துண்டு கிளம்பிட்டா.  பிரம்மாவும் ஐராவதத்துலே லிப்ட் கேட்டுண்டுக் கிளம்பிட்டார்.  "சீக்கிரம் கெளம்புங்கோ.  கிழம் மனசை மாத்திக்கப் போறது"னு கிசுகிசுக்கறா ஸிந்து.  விஸ்வகர்மாவும் கெளம்பறான்.  திரும்பத் திரும்பப் பாத்துண்டே போறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;மகோன்னதமான அவனோட எந்த்ரம் இருந்த இடத்துலே இப்போ ஒரு மகாப் பெரிய கல் இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;"இ&lt;/b&gt;தான் நடந்த கதை"னு சொல்லிட்டு என்னைப் பார்த்தார் மாமா.  &lt;br /&gt;&lt;br /&gt;'ஆ!'னு வாயப் பொளந்துண்டிருந்தேன். ஆத்துக்காரியும் மாமியும் உள்ளே நன்னா தூங்கிண்டிருக்கா.  கர்காரரவம் அதாவது குறட்டை சப்தம் திண்ணைல கேக்கறது. நடுஜாமத்துக்கு மேலே ஆயாச்சு. பக்கத்துல எங்கயோ சுவர்கோழி கத்தறது. ஆகாசத்துல நாலஞ்சு நட்சத்திரம் மினுக்கறது. ரொம்ப தூரத்துல தெருநாய் ஒண்ணு ஊளையிடறது. அதை விட்டா நிசப்தம்னா நிசப்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.  "என்ன இப்படி.. ஒரேயடியா மாத்திட்டேளே?  அகல்யாவை ஸ்மரணம் பண்ணினா பாவம் போகும்னில்லையா சொல்லியிருக்கு?  எப்பேர்பட்ட பாவவிமோசன புண்யக் கதையை... ரஜினிகாந்த் சினிமா சயன்ஸ் பிக்சன் மாதிரி மாத்திட்டேளே?"னு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓய்!  பாவபுண்யம் வினாசம் சம்ரக்ஷணம் எல்லாம் அவாவா இஷ்டத்துக்குக் கட்டினது ஓய்.  அகலிகையை தெனம் ஒரு தரம் நெனச்சுக்கோ பாவமெல்லாம் போயிடும்னு சொல்றது நமக்கே ஒருமாதிரியாப் படலியோ?  அகலிகையை ஸ்மரணம் பண்ணிப் பாவம் போய்டும்னா தெனம் பாவம் பண்ணிண்டிருக்கலாம்னும் அர்த்தம் ஆறதே ஓய்? ஜனங்கள் கண்மூடிகளா இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நம்பிண்டிருப்பா"னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேக்கு விட்டுக் கொடுக்க மனசில்லை.  "யுகக் கணக்கா ராமாயணம் பாராயணம் நடக்கறது.  ராமபிரான் பாதம்பட்டு அகலிகை விமோசனம் அடைஞ்சதை பக்தியோடே லோகம் முழுக்கச் சொல்லிண்டிருக்கா. நீர் என்னமோ நேர்ல பார்த்த மாதிரியில்லே எந்த்ரம் மந்த்ரம்னு சொல்றீர்?  யார் கண்மூடினு தெரியலியே?"னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓய்! எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன். அனுமார் கடலைத் தாவினார் மலையைத் தாவினார்னு சொல்றேளே?  அதெல்லாம் எப்படி நடந்ததுனு நெனக்கறேள்?  ராம லக்ஷ்மணருக்கு அகல்யா கதையைச் சொன்ன விஸ்வாமித்ரர் ராமனைத் தனியா அழைச்சுண்டு போய் விவரமெல்லாம் சொன்னார்.  பையா ராமா.. இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ. நாளைக்குத் தோதுப்படும்னு சொன்னார்.  ரகஸ்யத்தை ராமன் யாருக்கும் சொல்லலே.  ஆஞ்சநேயருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துடறான்.. ராம பட்டாபிஷேகம் முடிஞ்சதுக்கப்புறம், தன்னோட ரகஸ்யம் வேறே யாருக்கும் தெரியக் கூடாதுங்கறதுனால ஆஞ்சநேயர் எந்த்ரத்தை தலையை சுத்தி தூக்கி எறிஞ்சுட்டார்.."&lt;br /&gt;&lt;br /&gt;விட்டா ராமாயணத்தையே மாத்திடுவார் போலத் தோணித்து.  "நிறுத்தும் ஓய்!"னு கொஞ்சம் சத்தமா சொன்னேன்.  "சுவாரசியமா இருந்தாலும், நீர் சொல்றது எதுவுமே நம்பறதுக்கில்லே"னுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்த யோசிச்சுட்டு, "எந்த்ரத்தைப் பாத்தா நம்புவீரோ?"னார் நாலு பக்கமும் பாத்துண்டே.  "அனுமார் எறிஞ்ச எந்த்ரம் க்ருஷ்ணாபுரம் கோவில் பூமியில தான் விழுந்துது. இன்னும் அங்கயே தான் இருக்கு எந்த்ரம்.  வேணும்னா எங்கூட வாங்கோ.  காட்டறேன்"னு சொன்னார். சட்னு எழுந்து போய் ஒரு டார்ச் லைட்டு எடுத்துண்டு வந்தார். "ஓய்.. வாரும் போலாம். விடிஞ்சா பஸ் பிடிச்சு ஊரைப்பார்க்கக் கெளமபிடுவீர்.  இனிமே இந்தப் பக்கம் வருவீரோ மாட்டீரோ.. இப்பவே போய்ப் பார்க்கலாம் வாரும்.  போய்ட்டு அரை மணியில திரும்பிடலாம். எங்கிட்டே சாவி இருக்கு"னார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட ரிஸ்ட்வாச்சிலே மணி ஒண்ணரை. "ஓய்! அர்த்தராத்ரி மணி ரெண்டாப்போறது.. இப்போ எதுக்கு?"னேன்.  வயத்துல புளியைக் கரைச்சு விட்டாப்ல இருக்கு.  பேசாம இவர் சொன்னதை நம்பினதா சொல்லிடுவோமானு தோணித்து.  இருந்தாலும் ஒரு விபரீத ஆசை.  "சரி"ன்னுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்குப் பக்கத்துல தான் வீடுங்கறதாலே பத்து நிமிஷத்துக்கெல்லாம் கோவிலுக்குப் போயிட்டோம்.  வடக்கு வாசல்லே ஒரு சின்ன கதவு.  இவர் பாட்டுக்குத் திறந்து உள்ளே போனார்.  என்னையும் வான்னார். பயந்துண்டே போனேன். வீரப்ப நாயக்க மண்டபத்தை தாண்டிப் போறச்சே யானைகளுக்கு உயிர் வந்தா மாதிரி தோணித்து.  அவர் டாக்கு டாக்குனு நடக்கறார்.  இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்பாமே நானும் அவர் பின்னாலே போனேன்.  புருஷமிருகம் தூண் கிட்டே வந்து நின்னார். நாலு பக்கமும் பார்த்தார்.  "ஈ காக்கா இல்லை ஓய்.. என்ன பாக்குறீர்?"னு சொன்னேன்.  சட்னு தரையில விழுந்து தூணும் தரையும் தொடற இடத்துலே தடவினார். &lt;br /&gt;&lt;br /&gt;தரை நகந்து கதவாட்டம் தொறக்கறது. பயத்துல நேக்கு மூச்சே நின்னுடும் போலருக்கு. இவரோ, "வாரும்"னுட்டு என்னை இழுக்கறார். கீழே இறங்கினேன்.  க்ருஷ்ணாபுரம் கோவில்லே சுரங்கம் இருக்குனு கேள்விப்பட்டிருக்கேன்.  ஆனா இப்பத்தான் மொதல் தடவையா பாக்கறேன்.  மாமா கதவைச் சாத்திட்டு என்னைக் கூட்டிண்டு நடக்கறார்.  டார்ச் லைட்டு வெளிச்சம் பயப்பிராந்தியை ஜாஸ்தி பண்ணித்தே ஒழிய குறைக்கலை.  ஒரு நிமிஷமோ என்னமோ நடந்திருப்போம்.  "அதோ பாரும் ஓய்!"னு லைட் அடிச்சுக் காண்பிச்சார். சின்ன ஹோமகுண்டம் மாதிரி இருக்கு.  சுத்திவர ஸ்படிகம் மாதிரி பளபளனு இருக்கு. "இதான் ஓய்.. ஸ்மரண யாத்ரை எந்த்ரம். சாக்ஷாத் விஸ்வகர்மா நிர்மாணம் பண்ணினது. அகல்யாவோட காதல் நிறைவேறவும் ராமாயணம் சுபமா முடியவும் காரணமானது"னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நேக்கு வேர்க்கறது ஓய்!"னேன்.  எதுக்கு சொன்னேன்னு தெரியலை. உளறினேன். அங்கேந்து போனாப் போறும்னு ஆயிடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோ விடமாட்டேங்கறார். "ஓய். இதுல இறங்கி ஏதாவது ரூபத்துல எங்கயாவது ஸ்மரண யாத்ரை பண்ணிட்டு வாரும். அப்பத்தான் நம்புவீர்"னு சொல்றார்.  "பயப்படாம இறங்கும்வே".&lt;br /&gt;&lt;br /&gt;நேக்கு சப்தநாடியும் ஒடுங்கியாச்சு.  "வேண்டாம் சுவாமி"னு அவரை கும்பிட்டேன்.  "உங்களை நம்பறேன்.  ஆத்துக்குப் போலாம் வாங்கோ"னு கெஞ்சினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை ஓய்.  நீர் என்னை நம்பலைனு தெரியறது.  சரி. நானே போய்க் காட்டறேன்"னு உள்ளே இறங்கினார். ரெண்டாவது நொடியிலே ஆளைக்காணோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுக்கம்னா என்னன்னே அன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். அர்த்த ராத்ரியிலே க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே கூட இருந்த மனுஷரைக் காத்துலே பறி கொடுத்துட்டு.. நேக்கு எப்படி இருந்திருக்கும்னு நெனச்சுப் பாருங்கோ! &lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நிமிஷம் கழிச்சு பிராமணர் குண்டத்துலேந்து ஏறி வந்தார்.  சர்வ சாதாரணமா "காஞ்சிபுரம் போய்ட்டு வந்தேன்"னார்.  அவர் கைல என்னவோ மினுக்கறது. என்னன்னு பாத்தா மூக்குத்தி மாதிரி இருக்கு.  "வேணும்னா எடுத்துக்கும்.  ஞாபகார்த்தமா வச்சுக்கும் ஓய்!"னார்.  "வேண்டாம் சுவாமி. நேக்கு நம்பிக்கை வந்தாச்சு. கெளம்பலாம்"னேன்.  சிரிச்சுண்டே "சரி, வாரும்"னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு ஆத்துக்கு வந்தும் தூக்கமே வரலை.  ரெண்டு நாளைக்கு நடுக்கமே நிக்கலைனா பாத்துக்குங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;இதான் ஸ்மரண யாத்ரை ப்ரதாபம்.  கேட்ட அத்தனை பேருக்கும் நல்ல புத்தி கிடைக்கும்.  முன் கோபம் கொறையும்.  ஸ்த்ரீகள் மேலே மதிப்பு உண்டாகும்.  மழை பிடிக்கறதுக்கு முன்னாலே கெளம்புங்கோ.  பொறுமையா கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்.  சித்தே இருங்கோ.. சிவகுமாரன் என்னமோ கேக்கறார். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன இப்படிக் கேட்டுட்டேள்? நான் பார்த்தது, "ஸ்மரண யாத்ரை எந்த்ரம்னு எப்படித் தெரியும்? மாமா எங்கயாவது சுரங்கத்துல ஒளிஞ்சுண்டிருக்கலாமே?"னு கேக்கறார். நன்னா நறுக்குனு கேட்டார்.  பாருங்கோ.. நான் அதுலே இறங்கிப் ப்ரயாணம் பண்ணினாலொழிய அனுபவபூர்வமா சொல்ல முடியாது தான்.  ஆனா, கண்ணால பார்த்ததோட நிக்காமே கொஞ்சம் தீர விசாரிச்சிருக்கேன்.  நம்பிக்கையா சொல்றேன், கேளுங்கோ. &lt;br /&gt;&lt;br /&gt;கதையை ஆதியிலிருந்து கேட்டவாளுக்கு விருத்தாசலம் கோவில் பத்தி நியூஸ் ஐடம் சொன்னேனே ஞாபகமிருக்கோ?  பக்கத்தாத்து மாமாவோட அநித்ய உத்யோகம் பத்தியும் அவா ஆத்துல சகல பாத்ரங்களும் வெள்ளினும் சொன்னேனே ஞாபகம் இருக்கோ?  சாப்பாட்டுக்கு  முந்தி மாமாவோட பேசிண்டிருக்கச்சே அவா குடும்பத்து போட்டோவையும், அவரோட அண்ணா தம்பி எல்லாருமே குருக்கள்னு குடும்ப விவரங்களைப் பேசினதையும் சொன்னேனே ஞாபகமிருக்கோ?&lt;br /&gt;&lt;br /&gt;சித்தே பொறுமையா கேளுங்கோ. எல்லாத்துக்கும் முடிச்சு இருக்கு. விருத்தாசலம் குருக்கள் 'தான் ஊர்லயே இல்லை'னு கோர்ட்டுல சொன்னார்னு சொன்னேனில்லையா?  பேப்பர்ல விருத்தாசலம் குருக்கள் போட்டோவைப் பாத்ததும் நேக்கே ரொம்ப ஷாக்காயிடுத்து.  பாருங்கோ, மாமா காமிச்ச குடும்ப போட்டோவிலே அவரோட அண்ணா பாக்கறதுக்கு அசப்பிலே விருத்தாசலம் குருக்களாட்டமே இருந்தார்.  இப்போ எல்லாத்தையும் நீங்களே முடிச்சு போட்டுப் பாருங்கோ, புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்மரண யாத்ரை சாத்யம். க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே எந்த்ரம் இருக்கு. இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு.  ப்ரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-290083877979106104?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/290083877979106104/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=290083877979106104&amp;isPopup=true' title='18 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/290083877979106104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/290083877979106104'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_29.html' title='ஸ்மரண யாத்ரை'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1474543757932122331</id><published>2011-12-28T22:25:00.015-06:00</published><updated>2011-12-31T06:08:14.340-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசுவத்தாமன் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெடுங்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபரீதக் கதைகள்'/><title type='text'>ஸ்மரண யாத்ரை</title><content type='html'>&lt;span style="color: rgb(51,51,183); font-size:120%;"&gt;&lt;strong&gt; (பெரிய) சிறுகதை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_16.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_18.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_20.html"&gt;3&lt;/a&gt; ◀◀ பூர்வத்துலே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 160%"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;பொ&lt;/b&gt;துவாவே தபஸ்விகள் எல்லாரும் ரொம்பவே நிதானத்தை அனுஷ்டிக்கறவா. மெதுக்குன்னோ சோம்பேறின்னோ சொல்லலாம், ஆனா பாருங்கோ நிதானம்ங்கறது காயிருப்பக் கனி கவர்ந்த மாதிரியோன்னோ, அதனாலே அப்டியே வச்சுப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;கௌதமர் பொதுவா நிதானமானப் பேர்வழினு சொல்லலாம். கார்த்தாலே நித்யகர்மாக்களைப் பண்ணி முடிக்கணும்னு நெனச்சுண்டு எழுந்துண்டவர், சித்தே நிதானமா இருக்கார்.  நமக்கெல்லாம் இந்த நாளிலே கண் முழிச்ச பத்து நிமிஷத்துக்குள்ளே காபி உள்ளே இறங்கலைன்னா எல்லாமே துவேஷமாயிடறது இல்லியோ?  அதுவும் நல்ல டிகிரிக் காபியா வேண்டியிருக்கு நாக்குக்கு. செலபேர் காபி போடறேன்னுட்டு எதையோ போட்டுக் கொடுக்கறா.  குத்தமில்லை.  ஆனா, அந்த நாள்ல காபியாவது கீபியாவது? கிடையாதுன்னாலும், காச்சின பசும்பாலிலே மொத நாள் பொடிச்சு வச்ச சுக்கைக் கொஞ்சம் கலந்து உள்ளே தள்ளினாத்தான் அவாளுக்கும் இஞ்சின் ஓடித்து.  அப்புறந்தான் மத்த ஆஜார அனுஷ்டானங்களோட நெனப்பே வந்துதாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகை ஆஜாரம் அகல்யைக்கு அப்புறந்தான் லோக அப்யாசத்துக்கு வந்துதுனு சொல்லுவா. அதாவது, ஸ்த்ரீகளுக்கு மாசா மாசம் ருது உண்டாறதும் தூரம் தீட்டு பாக்கறதும் அவாள்ளாம் இந்த்ரனோட பாவத்தை சுமக்கறதுனால வந்ததுனு, அகல்யை கதையை வச்சுப் புராணத்துல வந்ததா சொல்றா.  அதெல்லாம் பொய்யாக்கும்.  இட்டுக்கட்டாக்கும். நம்ம பாவத்தை சுமக்கறதுக்கே நமக்கு ஒழியலை, இதுல இன்னொருத்தர் பாவத்தை வேறே சுமக்கணுமா? அக்ரமம் பாருங்கோ. தாய்மைங்கற ஒசந்த ஸ்தானத்தை, தெய்வங்களுக்கு மேலான ஸ்தானத்தை, ஸ்த்ரீகள் அடையறதுக்கு சாத்யமான இயற்கையான ஒரு அனுலோம கார்யத்தை,  இந்த்ரனோட பாவம்னு சொல்றது அழிச்சாட்டியமில்லையோ?  'நாதியில்லாத பொம்னாட்டிகள் தானே,  வாயை மூடிண்டிருப்பா'னு ஒரு குபுத்திலே சொன்னதாக்கும். அத்தனையும் வ்யாகுதி. புராணப் புருஷாளோடத் திமிராக்கும். அத்தனை லோகாதய சுகத்தையும் அதர்மத்தையும் அனுசரிச்சுட்டு, கடைசியிலே 'பெண் என்னும் மாயப் பேய்'னு அவாளைப் போட்டு மிதிச்சு த்வம்சம் பண்றது, அத்தனைப் புராணப் பண்டிதாளுக்கும் தொழிலா இருந்துது. கடவுளை கும்பிடறேன் பேர்வழின்னு வாய்ல வந்தபடி ஸ்த்ரீகளை பங்கப்படுத்தியிருக்கா.  ஐயா.. உமக்கு கடவுள் ஞானம் வந்துதா? பலே, கும்பிட்டுக்கோ! வேண்டாங்கலே. என்னவோ பண்ணிக்கோ. ஏன் ஸ்த்ரீகளைப் போட்டு சாக்கடை சல்லடைனும் பிணினும் கன்னாபின்னானு சொல்லணும்?  'ஸ்த்ரீகள் கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்தினேடா சிவனே! வைகுந்தா!'னு இஷ்டத்துக்கு பாடுவானேன்?  'ஸ்த்ரீகள்டேயிருந்து என்னைக் காப்பாத்தினியே, மகாலக்ஷ்மி! பராசக்தி!'னு யாராவது பாடியிருக்காளா தெரியலை. கண்ணைக் குத்தியிருப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;தான் என்கிற அகந்தையிலே புருஷ வம்சாவளி, என்னையும் சேத்து சொல்றேன், ஆயிரம் கோடி வர்ஷமா ஸ்த்ரீகளுக்கு மனசாலும் வாக்காலும் கார்யத்தாலும் செஞ்ச அபகாரங்களுக்கு இந்த அசுவத்தாமன் மன்னிப்பு கேட்டுக்கறேன்.  நல்ல வேளையா ஒரே ஒரு புலவராவது 'எங்கெங்கு காணினும் சக்தியடா'னு பாடினாரேனு த்ருப்தியா நெனச்சுக்கறேன். ஸ்த்ரீகளோட அசாத்ய சக்தியினாலே தான் அனித்யமான இந்த லோகவாழ்க்கைல நாங்கள்ளாம் ஏதோ ஒப்பேத்திட்டுப் போயிண்டிருக்கோம்.  இதை நான் ரொம்ப நன்றியோட சொல்றேனாக்கும். புருஷாளை மன்னிச்சுடுங்கோனு தண்டமா கேட்டுக்கறேன். நரகம்ங்கறது ஆம்ப்ளேளுக்கு மட்டும் தானாக்கும். கவலையே படாதீங்கோ. ஸ்த்ரீயாப் பொறந்தாலே அது ஸ்வர்க்கத்துக்கு ஒன் வே டிக்கட் வாங்கின மாதிரியாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டேன் பாருங்கோ.  சித்தே இருங்கோ. ம்ம்ம்.. இந்தப் பொடிப் பழக்கத்தை விடமுடியலை.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா உள்ளே வரதைப் பாத்துண்டிருந்த கௌதமர், "ஏது இவ்வளவு நேரமாச்சு உனக்கு?"னு கேட்டார்.  "இங்கே நான் எழுந்து எத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா, நல்லாத் தூங்கினியா?"னு கேக்கலை. "காலங்கார்த்தாலே பச்சைத்தண்ணிலே ஸ்நானம் பண்ணிட்டு வந்திருக்கே. குளிர் ஜூரம் வந்துடப்போறது.  சீக்கிரமா தலையைத் துவட்டிக்கோ.  நான் வேணும்னா சாம்ப்ராணி புகைச்சுக் குடுக்கட்டுமா?"னு கேக்கலை.  "சிரமபரிகாரம் ஏதாவது பண்ணிண்டியா?"னு கேக்கலை. "இத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேனே, தெரிய வேண்டாம்?"னு கேட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;கௌதமரைப் பிரமாதமா குத்தம் ஒண்ணும் சொல்லலை.  புருஷாள் நாங்க எல்லாருமே அப்படித்தான்.  அம்மாவாகட்டும் அக்காவாகட்டும் ஆம்படையாளாகட்டும், அவா சிரமத்துல படுத்துண்டிருந்தாலும் சரி, "என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.." இதைத்தான் பரம்பரை பரம்பரையா கௌதமர் காலத்லேந்து சொல்லிண்டிருக்கோம்னா பாருங்கோ.  டிஎன்ஏலனா கலந்துடுத்து?  லேசுல மாறுமோ? நாமதான் அப்படி.. ஸ்த்ரீகளாவது மாறுவாள்னா அங்கயும் டிங்கிரியானா இருக்கு?  எல்லாத்தையும் பொறுத்துண்டு.. கோவில் மாடு மாதிரி தலையை தலையை ஆட்டிண்டு..  தன் மதிப்பைத் தானே கெடுத்துண்டு.. கண்றாவி போங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ ஆச்சு.. மன்னிச்சுருங்கோ"னுட்டு உள்ளே ஓடறா அகல்யா. அவசரமா ஒரு விளக்கேத்திட்டு, கறந்து வச்சப் பாலைக் காய்ச்சரா. காஞ்ச சுக்கை ஒரு கை எடுத்து நன்னா பொடி பண்றா. அதை அப்படியே பாலில் கலக்கறா. பாலும் சுக்கும் சேந்து காயற வாசனை மூக்கைத் தொளைக்கறது. காயட்டும்னுட்டு அங்கேந்து நகந்து அன்னைய ஔபாசனத்துக்கு வேண்டிய சமித்து, பஞ்சபாத்திரம், சந்தனம், குங்குமம், மஞ்சளரிசி எல்லாம் எடுத்து வைக்கறா. அகல்யா குடுகுனு வேலை செய்றதைப் பாத்துட்டு ஒக்காந்துண்டிருந்த கௌதமர் கேட்டார். "என்ன நீ.. ரொம்ப உத்சாகமா இருக்கியே?"னுட்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;சில குடும்பத்துல பாத்திருக்கேன்.  பெண்டாட்டி சித்தே உற்சாகமா இருந்தா புருஷாளுக்குத் தாங்காது. "நான் இப்படி நோஞ்சு கிடக்குறப்போ நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாமா?"ங்கற மாதிரியா கேப்பா பாத்திருக்கேன். அதுமாதிரி இருக்கு கௌதமர் கேக்கறது.  அகல்யாக்கு திக்குங்கறது.  'நம்ம மனசுல இருக்குற குதூகலம் ஒருவேளை மொகத்துலயும் கார்யத்லேயும் தெரியறதோ?'னுட்டு நெனச்சுக்கறா.  பொங்க ஆரமிச்சப் பாலை எடுத்துக் கீழே வச்சுட்டு, "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே.  ஒங்களுக்கு நேரமாறதேனுட்டு அவசரம் அதான்"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;"இருந்தாலும் இத்தனை சுறுசுறுப்பை இன்னிக்குத்தான் பாக்கறேன்"னு சொன்ன கௌதமர் சட்னு, "ஆமா, குடத்துல தண்ணி கொண்டு வருவியே.. எங்கே குடத்தைக் காணோம்?  நான் முகம் அலம்பிக்கணுமே?"னு கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் அகல்யாவுக்குத் திக்குனு ஆறது.  அதாவது திக்குனு ஆன மாதிரி நடிக்கிறா.  "அடடா! மறந்துட்டேன்"னு  சொல்றப்பவே கௌதமர் குறுக்கே சொல்றார்.  "மறந்துட்டேனு தான் நானும் சொல்றேன்.  வாசப்படியிலயே வச்சிருக்கியே?"னு சொல்றார்.  டக்குனு அவ வாசல்ல பாக்கறா. பார்த்தவுடனே சட்னு அடுக்களைல ஒதுங்கிக்கறா.  கௌதமர்ட்டே, "அதிதி வந்திருக்காப்ல இருக்கு"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தாளி யாராயிருக்கும்னுட்டு கௌதமர் வாசல்ல பாக்க வரார். அங்க இந்த்ரன் நின்னுண்டிருக்கான்.  கௌதமரைப் பாத்துட்டு நம்ஸ்காரம்னு சொல்றான். சட்னு குடத்தை எடுத்து "இந்தாங்கோ.. நான் உள்ளே எடுத்துண்டு வரேன்"னு சொல்றான்.  &lt;br /&gt;&lt;br /&gt;கௌதமர் குடத்தை வாங்கற மாதிரி தவறவிடறார்.  தண்ணி கொட்டிடறது.  &lt;br /&gt;&lt;br /&gt;அமர்ஷஹாசம்னு சொல்வா.  அதாவது சிரிப்பும் இல்லாம உறுமலும் இல்லாம முனகலும் இல்லாம  ஒரு நையாண்டி.. அடுத்தவாளை மட்டம் தட்டற மாதிரி ஒரு கேனைத்தனமான சிரிப்புக்கு அமர்ஷஹாசம்னு பேர். 'ஹ'னு ஒரு சப்தம் கேட்டிருப்பேள்.. சிரிக்கறாளா மாட்டை விரட்டறாளானு தெரியாது.. அதான் அமர்ஷஹாசம். அசுவத்தாமனோட குடும்பத்லயும் அமர்ஷஹாசப் புலிகள் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;"ஹஹ.. இந்த்ரன் கைபட்டா எல்லாம் தவறிடும் போலிருக்கே?"ங்கறார் கௌதமர். 'ஹ்ம்ம்ம்'னுட்டு கௌதமர் உள்ளேயும் வெளியேயும் பாத்தார். தாடியைத் தடவிண்டார். "உள்ளே வானு இப்ப சொல்லமுடியலியே.  என்னை மன்னிக்கணும்.. நான் ஸ்நானம் பண்ணிட்டு வரேன்.. ஒரு நாழி கழிச்சு வாங்கோ"னு சொல்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"அதனால என்ன, பரவாயில்லை.  நானும் ஸ்நானம் பண்ணனும்.  உங்ககூட வந்தா எனக்கும் இடம் தெரிஞ்ச மாதிரி. அப்புறம் இந்த ஆஸ்ரமத்துல விஷ்ணு பூஜை பண்ண நீங்க தான் அனுக்ரகம் பண்ணனும்"னு பவ்யமா சொல்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகா! வாங்கோ போகலாம்"னு சொல்லிட்டு படியிறங்கினார் கௌதமர். 'விஷ்ணு பூஜை பண்ண வந்த மூஞ்சியப் பாரு?'னு மனசுல நெனச்சுண்டார். குடிலுக்குள்ளே பாத்து, "அகல்யா.. தட்டியைச் சாத்திக்கோம்மா.  யார் வந்தாலும் திறக்காதே, பத்திரம்"னு உரக்கவே சொல்றார்.  இந்த்ரனைப் பாத்து, "ஹ.. கதவைத் தொறந்து வச்சா..  கண்டதும் உள்ளே வந்துடறது.. காடு பாருங்கோ..நீங்க வாங்கோ தேவராஜா.. ஹ.. நாம போகலாம்"னு நடக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரன் அவர் கூடவே போறான்.  அவன் மனசெல்லாம் அகல்யானு ஜபம் பண்றது.  இருந்தாலும்  ஒண்ணும் பண்ண முடியாம நடக்கறான்.  திட்டம் போடறான்.  'இந்தக் கிழவனை வஜ்ராயுதத்தால லேசா ஒரு தட்டு தட்டிடலாமா?  பிரம்மஹத்தியாவது புடலங்காயாவது?  எல்லாத்துக்கும் பரிகாரம் வச்சிருக்காளே, அப்புறம் என்ன?'னு அவன் மனசுல தோணறது.  இருந்தாலும் கட்டுப் படுத்திக்கறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவைக் கொண்டுவிடறப்போ பிரம்மா சொன்னதை நினைச்சுக்கறார் கௌதமர்.  "முனி ஸ்ரேஷ்டரே.. என்னோட பொண்ணை.. உலகத்துலயே சௌந்தரின்னு சொல்லக்கூடிய இந்த அகல்யாவை, உங்களுக்கு ஒத்தாசையா இருக்க விட்டுட்டுப் போறேன்.  கடுமையான தபஸ் பண்றேள், உங்களுக்கு சகல விதத்துலயும் ஒத்தாசையா இருப்பா"னு தாரை வாத்துக் கொடுத்த பிரம்மா, சும்மா இருக்காம "இந்த்ரன் கண்ல படாம பாத்துங்கோ"னு வேறே சொல்லிட்டு போனார்.  பிரம்மக் குசும்புன்னா சும்மாவா?&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமர் மறுபடியும் மனசுக்குள்ளே 'ஹ' போடறார்.  இந்த்ரனை ஓரக்கண்ணாலப் பாக்கறார். 'பிரம்மா மட்டும் யோக்யனா? சொந்தப் பொண்ணுனு பாக்காம சரஸ்வதி பின்னால ஓடினவன் தானே? எல்லா தேவாளுமே அயோக்யத்தனம் பண்றதுலே சளைச்சவா இல்லே போலிருக்கு'னு நெனச்சுக்கறார். அகல்யாவைப் பார்க்கறதுக்குத் தான் வந்திருக்கான் இந்த்ரன்னு அவருக்கு நன்னா தெரியறது.  சும்மா இருக்காம இந்த்ரனைக் கிண்டல் பண்றார். &lt;br /&gt;&lt;br /&gt;"பாக்க வந்தது பாக்க முடியாம போயிடுத்தோ தேவராஜா?"னு கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்குனு ஆறது இந்த்ரனுக்கு.   "என்ன சொல்றேள்?"னு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"விஷ்ணு பூஜை பண்ண இடம் பாக்கறதா சொன்னேளே.. நான் கரடியாட்டம் குறுக்க வந்து உங்களை என்னோட ஸ்நானம் பண்ண அழைச்சுண்டு போறதைச் சொன்னேன்.. ஹ"&lt;br /&gt;&lt;br /&gt;"பாக்க வேண்டியதை பாத்துட்டு தான் வந்தேன்.. இருந்தாலும் உங்க அனுக்ரகம் இல்லாம ஒண்ணும் செய்யக்கூடாதுனுட்டு.."னு இழுக்கறான் இந்த்ரன்.  அவன் மட்டும் சளைச்சவனா?&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்நானம் பண்ணுங்கோ.. எல்லாத்தையும் முழுகிடுங்கோ"னு ஜாடையா சொல்றார் கௌதமர்.  "கௌதமன் அனுக்ரகம் லேசுல கிடைக்காதாக்கும்.. ஹ.."&lt;br /&gt;&lt;br /&gt;"சாபம் மட்டும் உடனே கொடுப்பேளோ?"னு கேட்டுடறான் இந்த்ரன்.  அப்புறம் சமாளிச்சு "இல்லை.. உங்க கோபம் த்ரிலோகப் பிரசித்தி.. அதான் பயத்துல கேட்டேன்.. க்ஷமிக்கணும்"னு சப்பை கட்டறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமர் சட்னு பேச்சை மாத்தி இன்னும் தூபம் போடறார். "அகல்யா இருக்காளே.. அழகுன்னா அத்தனை அழகு.. புருஷாள் நமக்குள்ளே சொல்றதுக்கு என்ன.. அவ அழகை வர்ணிக்கவே முடியாது தெரியுமோ?  உங்க இந்த்ராணி அழகுன்னாலும் அகல்யா ஆயிரம் மடங்கு அழகுன்னு தோணறது, மன்னிக்கணும்"னு சொல்லிட்டு இந்த்ரன் முகத்தை கவனிக்கறார்.  பொறாமையால வேகட்டும்னு மனசுக்குள்ள நெனச்சுக்கறார்.  "நேத்திக்கு முழு நிலா வெளிச்சத்துலே ஆஸ்ரமத் தரையிலே அவளோட ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அகல்யாவை எனக்குக் கொடுத்த பிரம்மாவுக்கு என்னிக்குமே என்னோட க்ருதக்ஞை'னு சொல்றார். க்ருதக்ஞைனா  அதிகமான ஸ்வஸ்த்யக்ஷரம்.. இங்க்லிஷ்லே க்ரேடிட்யூட்ம்பாளே.. நன்றிக்கு ஒரு படி மேலே. &lt;br /&gt;&lt;br /&gt;'உன்னோட க்ருதக்ஞையை உடைப்புல போட'னு நெனச்சுக்கறான் இந்த்ரன்.  இருந்தாலும் பவ்யமா தலையாட்டறான்.  அவன் மனசுல உடனே அகல்யாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கணும்னு தோணியாச்சு.  உதட்ல ரெண்டு மார்ல ரெண்டுனு எண்ணி நாலு முத்தம் குடுத்துட்டு மறுகாரியம் பாக்கணும்னு துடிக்க ஆரம்பிச்சான்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள புருஷாளுக்கான தடாகம் வந்தாச்சு.  கௌதமர் மண் படிக்கட்டுல இறங்கி, "வாங்கோ, ஸ்நானம் பண்ணலாம்"னு இந்த்ரனைக் கூப்பிடறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரனும் படிக்கட்டுல இறங்கறான்.  கடைசிப் படியிலே நிக்கறச்சே தடாகத்துலே கௌதமரோட உருவம் தெரியறதைப் பாக்கறான். டகால்னு அவன் மனசுல ஒரு யுக்தி.  'அடடா! அருமையான சான்சு.  இந்தக் கிழம் இங்கே குளிச்சிண்டிருக்கச்சே நாம அகல்யாவை கொஞ்சிட வேண்டியது தான்.  கௌதமர் மாதிரியே வேஷம் போட்டுண்டு போனா அவளுக்கும் தெரியாது. சங்கடம் இருக்காது'னு அவன் மனசுல தோணறது. தேவகன்னிகைகளோட அலங்காரம் எதுவும் இல்லாம, சாதாரண கச்சைகளோட அகல்யா நடந்து போனதையும் அவளோட ஸ்தனமும் ப்ருஷ்டமும் எந்தவிதமான கட்டுமில்லாம இயற்கையா அசைஞ்சதையும் நெனச்சுப் பாக்கறான்.  எப்பேற்பட்ட அழகி அவள்! இந்த தபஸ்விக் கிழத்துக்கிட்டே மாட்டிண்டு முழிக்கறாளே?  உடனடியா போய் அந்த அழகை ஆராதிக்க வேண்டியது தான்னுட்டு கௌதமர் போல வேஷம் போடத் தீர்மானிக்கறான். தண்ணிலே தெரிஞ்ச கௌதமரோட உருவத்துல கொஞ்சம் மண்ணைத் தள்ளறான்.  அது அந்த உருவத்தைக் கலைச்சுப் போட்டதை ரசிக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர்னு தலை சுத்தறா மாதிரி இருக்கு அவனுக்கு.  படியிலே உக்காந்துக்கறான்.  மனசுல அகல்யா மறைஞ்சு போய் விஸ்வகர்மா ஞாபகம் வரது.  "விஸ்வகர்மா! விஸ்வகர்மா!"ங்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு?"னு கேட்டார் கௌதமர்.&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியலே.. குளிக்கலாம்னு நெனச்சேன்.. திடீர்னு மனசுல விஸ்வகர்மா ஞாபகம் வியாபிச்சிண்டிருக்கு.. தேவகுலத்துக்கு ஏதாவது ஆபத்தோ.. அசுரக்கூட்டம் ஏதாவது படையெடுத்து வந்துடுத்தோ தெரியலியே?"னு புலம்பறான்.  அதுக்குள்ளே ஐராவதம் பிளிறிண்டே வரது.  இந்த்ரன் கௌதமர் கிட்டே, "என்னை மன்னிச்சுடுங்கோ.. என்னவோ நடக்கறது.. போய் பாத்துட்டு வந்துடறேன்"னு உடனே கிளம்பறான்.  அவன் ஏறி உக்காந்ததும் ஐராவதம் ஜெட் ஏர்வேஸ் ஜம்போ மாதிரி சொய்னு ஆகாசத்துல காணாம போறது.&lt;br /&gt;&lt;br /&gt;'விட்டது சனி'னு கௌதமர் குளிக்கறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;பாதி குளிக்கறச்சே திடீர்னு அவருக்கு சந்தேகம் வரது.  'மகாபாவி ஒருவேளை  ஆஸ்ரமத்துக்குப் போயிருப்பானோ?'னு நெனச்சுக்கறார்.  'போறும் குளிச்சது'னுட்டு  எழுந்துக்கறார்.  அவசரமா வேஷ்டி அங்கவஸ்திரத்தைச் சுத்திண்டு பரக்க பரக்க ஆஸ்ரமத்துக்கு நடந்தார்.  'அவன் மட்டும் அங்கே இருக்கட்டும், இன்னிக்கு அவனை பஸ்பமாக்கிடறேன்'னுட்டு பொறுமிண்டே நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்ரமத்து வேலிதாண்டி உள்ளே வந்தவர் சட்னு நின்னார்.  வாசல்ல தட்டிக்கதவு சாத்தியிருக்கு.  ஆனா உள்ளே ஏதோ பேச்சுக்குரல் கேக்கறது.  உடனே உள்ளே போகாம என்ன நடக்கறதுனு பாத்து கையும் களவுமா பிடிக்கணும்னு நெனக்கறார்.  பக்கவாட்டுல நடந்து மாட்டுக் கொட்டில் மேலே பரபரனு ஏறி அதுலேந்து குடிலோட கூரைக்குத் மெதுவாத் தாவினார். அடுக்களை கிட்டேயும் தாழ்வாரம் கிட்டேயும் கூரை லேசா ஜன்னல் மாதிரிப் பிரிஞ்சிருக்கும் அந்த நாளிலே.  சமையல், ஹோமப் புகை போறதுக்காகவும், நிலா வெளிச்சத்துல சம்போகம் பண்றதுக்காகவும் அந்த ஏற்பாடு. இப்பலாம் சன்ரூப் மூன்ரூப் சன்லைட் வின்டோ தஸ்சுபுஸ்சுனு என்னவோ சொல்றா, எல்லா ஏகாந்தமும் நம்ம கலாசாரத்துலயும் கட்டுமானத்துலயும் உண்டு.  அடுக்களையில அரவம் இல்லே.  மெள்ள நகந்து தாழ்வாரக் கூரை  பக்கம் போறார். &lt;br /&gt;&lt;br /&gt;"ஏதுடா அசுவத்தாமா? முனிஸ்ரேஷ்டாளுக்கு ஞானத்ருஷ்டி உண்டே? அப்படித் தெரிஞ்சுக்காம என்னமோ திருடனாட்டம் கூரை ஏறினார்னு சொல்றியே? இதெல்லாம் நியாயமாடா?"னு ரமணிண்ணா கேக்கறார். உங்களுக்குத் தெரியாததை நான் என்ன சொல்லிடப்போறேன்? இந்த ஞான த்ருஷ்டியெல்லாம் உடான்சுண்ணா.  பாருங்கோ.. அந்த நாள்லே பாதி தபஸ்விகளுக்கு த்ருஷ்டியே கிடையாது... மிச்ச பாதிக்கு ஞானம் கிடையாது.. இதுல எங்கேந்து ஞானதிருஷ்டி வரது?  எல்லாரும் இந்த அசுவத்தாமன் மாதிரிதான்.  பாருங்கோ.. என்னோட பால்யத்துலே.. வாத்யார் தொழிலைப் பத்திச் சொல்வா.  வேறே வேலை கிடைக்கலேன்னா ஸ்கூல் வாத்யார் வேலைக்கு போம்பா.  அதுமாதிரி புராண காலத்துலே..  பொழைக்க வழி வேறே ஒண்ணும் இல்லேன்னு வையுங்கோ, தபஸ் பண்ணப் போயிடுவா.  வாஸ்தவமாக்கும்.   எல்லா தபஸ்விகளும் அப்படினு இந்த அசுவத்தாமன் ஒரு நாளும் சொல்லமாட்டான்.  அதே நேரம் எந்த தபஸ்விக்கும் ஞானத்ருஷ்டினெல்லாம் எதுவும் இருக்கலைனும் திட்டமா சொல்வான்.. தப்பா நெனக்காதீங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமருக்கு ஞானம் இருந்தாலும் த்ருஷ்டி கொஞ்சம் தகராறு.  அதனாலே மெள்ள நகந்து கூரையைப் பிரிச்சுப் பாக்கறார்.  உத்துக் கவனிக்கறார்.  அங்கே தாழ்வாரத்து ஓரமா ரெண்டு பேர் ரொம்ப மதாகுளமா அதாவது காம உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சிண்டும் பேசிண்டும் இருக்கா.  அகல்யாவை நன்னா அடையாளம் தெரியறது.  அதிர்ச்சிலே விழுந்துடக் கூடாதுன்னு கூரையைக் கவனமா பிடிச்சுண்டே பாக்கறார்.  இன்னொருத்தர் பாக்கறதுக்குத் தன்னை மாதிரியே இருக்கார்.  "இது என்னடா கூத்து?"னுட்டுக் கவனிக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே சல்லாபம் நடந்துண்டிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?"னு கேக்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை"னு சொல்றார் கௌதமர். சொல்லிட்டு அகல்யாவைக் கட்டிப் பிடிக்கறார்.  அகல்யா அவரோட மார்லயும் முகத்துலயும் முத்தம் கொடுக்கறா.  கௌதமரோ வாலிபனாட்டம் அகல்யாவை ரெண்டு கைலயும் அள்ளியெடுத்துண்டு அப்படியே முத்தம் கொடுக்கறார். அவளைக் கீழே விடாமே இடுப்போட சேத்துப் பிடிக்சுக்கறார்.  அவளும் கால் ரெண்டையும் கௌதமரோட இடுப்பைச் சுத்திக் கட்டிக்கறா.  கையை அவரோட கழுத்தைச் சுத்திக் கட்டிக்கறா.  அப்புறம் ரெண்டு பேரும் தாழ்வாரத்துலே புரள்றா.  திடீர்னு அகல்யா, "என்ன.. இந்த்ரனை விட உங்களுக்கு என் மேலே ஆசை அதிகமா?"னு கேக்கறா. "நல்ல வேளை பிரம்மா என்னை இங்கே கொண்டு விட்டாரே"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இந்த்ரன்னு சொன்னா நம்புவியா அகல்யா?"னு கேக்கறார் கௌதமர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலேந்து பாத்துண்டிருக்கற கௌதமருக்கு உடம்பெல்லாம் பத்திக்கறது. புரிஞ்சு போச்சு.  இந்த்ரன் தான் வேஷம் போட்டுண்டு வந்திருக்கான்.  கௌதமருக்கு கோவத்துலே ருத்ரதாண்டவம் ஆடத்தோண்றது. ஆனா ஆட வராதேன்னுட்டு ஆக்ரோஷமா பாத்துண்டிருக்கார். 'மகாபாவி! விஸ்வகர்மாவைப் பாக்கணும் அப்படி இப்படினு கதைவிட்டு இங்கே வந்து என் பெண்டாட்டியைப் பாத்துண்டிருக்கியே சண்டாளா!'னு நெனச்சுக்கறார்.  அந்த வேகத்துல பிடியை விட்டுடறார். சரசரனு வழுக்கி வாசல் பக்கமா தட்டிக் கதவு கிட்டே விழப்போனவர், சுதாரிச்சுண்டு தட்டியிலே சாஞ்சு உள்ளே விழுந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;விழுந்த வேகத்துலே எழுந்து உள்ளே இருந்த ரெண்டு பேரையும் பார்த்தார்.  அவர் முகத்துல கோபாக்னி. "ஏலே.. இந்த்ரா"னார்.  'ஏலே'ன்னது பக்கத்தாத்து மாமாவாக்கும். இந்த்ரன் சொன்னானா தெரியாது.  "ஏட்டி.. அகல்யா"னார்.  'ஏட்டி'ன்னதும் பக்கத்தாத்து மாமாதான்.  "உங்க ரெண்டு பேரையும் சபிக்கிறேன் பார்"னு கமண்டலத்தைத் தேடினார்.  "இங்க தானே வச்சேன் கமண்டலம்.. எங்கே போச்சு?"னு கத்தினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சுவரோரமா கிடந்த கமண்டலத்தை எடுத்து, "ஏலே இந்த்ரா.. பொம்னாட்டி தேகத்துலே யோனி மோகத்துலே மூழ்கி நாசமாப் போற பயலே.. உனக்கு உடம்"னு சொல்லி முடிக்கறதுக்குள்ளே காலிங் பெல் சத்தம் மாதிரி கேக்கறது. திரும்பிப் பாக்கறார்.  தட்டியோரமா இந்த்ரனும் அகல்யாவும் நின்னுண்டிருக்கா.  கௌதமருக்கு ஒண்ணும் புரியலே.  'இங்க ஒரு கௌதமர்-அகல்யா ஜோடி, அங்க ஒரு இந்த்ரன்-அகல்யா ஜோடி.. நடுவுல நான் அசல் கௌதமன்.. என்ன இது?'னு முழிக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"முனி ஸ்ரேஷ்டரே.. உங்க சாபத்துலே நியாயமே இல்லை"னு சொல்றான் வாசல்ல நிக்கற இந்த்ரன்.  "ஏன்னா.. நான் தான் இந்த்ரன்.. அது வேறே யாரோ.. அவாளை சபிக்கறதுக்கு பதிலா என்னை சபிக்கறது அநியாயம் மட்டுமில்லே, அதர்மமும் கூட"னு சொல்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ரெண்டு பேரையும் சபிச்சுடறேன்"னு குதிக்கறார் கௌதமர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெப்படி?  நான் ஒரு தப்பும் பண்ணலையே.. என்னை எப்படி சபிக்கலாம்?"னு லா பாயின்ட் போடறான் அசல் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா.. க்ராதகி"னு  தாழ்வார அகல்யாவைப் பாத்து சபிக்கப் போறார் கௌதமர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிறுத்துங்கோ.. அது அகல்யாவுமில்லை. நான் தான் அசல் அகல்யா"னு சொல்றா வாசல்ல நின்ன அகல்யா.  தாழ்வார அகல்யா திருதிருனு முழிக்கறா.&lt;br /&gt;&lt;br /&gt;கொழம்பிப் போறார் கௌதமர்.  சாபம் கொடுக்க எடுத்த கையும் கமண்டலமும் அப்படியே இருக்கு.  ஆரம்பிச்ச சாபத்தை கொடுத்து முடிச்சே ஆகணும்.  இப்ப என்ன பண்றது? அப்போ காலிங் பெல் சப்தம் மாதிரி மறுபடியும் கேக்கறது.  பிரம்மா படியேறி வரார்.  "தவ ஸ்ரேஷ்டரே.. என்னை மன்னிச்சுடுங்கோ"னு நாலு மண்டையையும் பணிவா ஆட்டறார். ஆனா ஒரு மனசுக்குள்ள, "அம்பி.. ஒன்னோட தபோபலன் எல்லாம் புஸ்வாணமாயிடுத்து.. இனிமே இந்த்ர பதவிக்கெல்லாம் ஆபத்தில்லை'னு நெனச்சுக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிரம்மா.. இது என்ன நாடகம்?"னு வசனம் பேசறார் கௌதமர்.  இன்னும் கமண்டலத்தைப் பிடிச்சுண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொல்றேன்"னுட்டு தாழ்வார கௌதமர் அசல் கௌதமர் கால்லே சாஷ்டாங்கமா விழுந்தார்.  "எங்களை மன்னிச்சுடுங்கோ.. ஏதோ ஆசைக் கோளாறினாலே இப்படி நடந்துண்டோம்.  நான் விஸ்வகர்மாவாக்கும்"னுட்டு அசல் உருவத்துக்கு வந்தான் விஸ்வகர்மா. &lt;br /&gt;&lt;br /&gt;"நெனச்ச நேரத்துலே நெனச்ச ரூபத்துல ஸ்மரண யாத்ரை போற எந்திரம் ஒண்ணு கண்டுபிடிச்சேன். அதை என் ஆம்பிடையாள் கிட்டே காமிச்சப்போ, எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒரு ரூபத்துல பூலோகம் போய் சந்தோஷமா இருக்கணும்னு தோணித்து"னு சொல்றான் விஸ்வகர்மா. சொல்றப்பபோ வாசல் பக்கம் நிக்கற அசல் அகல்யாவைப் பாக்கறான். 'நீ சொல்லிக் கொடுத்தபடியே சொல்றேனா?"னு கேக்கற மாதிரி இருக்கு அவன் பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமருக்கு இன்னும் கோவம் தணிஞ்ச பாடில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ப்ரசங்கத்துல முடிச்சுடறேன். &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_29.html"&gt;►►&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-1474543757932122331?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/1474543757932122331/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=1474543757932122331&amp;isPopup=true' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/1474543757932122331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/1474543757932122331'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_28.html' title='ஸ்மரண யாத்ரை'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8828686855353289826</id><published>2011-12-20T22:09:00.021-06:00</published><updated>2011-12-29T23:36:44.987-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசுவத்தாமன் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெடுங்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபரீதக் கதைகள்'/><title type='text'>ஸ்மரண யாத்ரை</title><content type='html'>&lt;span style="color: rgb(51,51,183); font-size:120%;"&gt;&lt;strong&gt; (பெரிய) சிறுகதை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_16.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_18.html"&gt;2&lt;/a&gt; ◀◀ பூர்வத்துலே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 160%"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;சி&lt;/b&gt;ரிச்சுண்டே நின்னுண்டிருந்த இந்த்ரனை ப்ரமிச்சுப் போய் பாத்துண்டிருக்கா அகல்யா. சினிமால பாடறாளே, நினைத்தேன் வந்தாய் நூறு வயதுனு, அந்த மாதிரி பாடத் தோணறது அவளுக்கு.  இந்த்ரனைக் கட்டிப் பிடிச்சுக்கலாம்னு வாத்சல்யத்தோட போறா. ஒரு அடியெடுத்து வைச்ச அகல்யா, சட்டுனு நின்னுடறா. தன்னோட காலப் புடிச்சுக்கறா. கண்டகம் குத்திடறது. நெருஞ்சி முள். நன்னா காய்ஞ்சு போன நீளமான முள். சுர்ருனு பாதத்துல குத்திக் குடைஞ்சு ஏறிடுறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி டயத்துல நமக்கெல்லாம் என்ன தோணும்? 'சனியன்'னு எரிச்சல் படத்தோணும்.  'ஐயோ, அம்மா.. பிராணன் போச்சே'னு கூச்சல் போட்டு ஊரைக்கூட்டத் தோணும். அகல்யாவுக்கு முள்வலினாலும் யோசிக்கறா. 'கௌதமரும் அவரோட ரிஷிக் கூட்டமும் தெனம் நடமாடற இடமாச்சே? நானும் மத்த ரிஷிபத்னிகளும் நித்யம் ஆசிரமத்திலேந்து தடாகம் வரைக்கும் இந்தப் பாதையைப் பெருக்கித் தள்ளி சுத்தமா வச்சிருக்கோமே, இன்னிக்கு எங்கேந்து முள் வந்தது? அதுவும் காஞ்ச கண்டகம்? ஒரு வேளை ரிஷிகள் யார் கால்லயாவது குத்தியிருந்தா எத்தனை கஷ்டமாயிருக்கும்? நல்ல வேளை, நம்ம கால்ல குத்தினதால இதை எடுத்துத் தூர போட முடியறதே!'னு முள்ளை எடுத்து ஓரமா போட்டு ஸ்ராங்கா மண்ணைத் தூவி மூடறா.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள "என்னாச்சு?"னுட்டு ஓடி வந்துட்டான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"குத்திடுத்து"னு, கொழந்தை மாதிரி விசும்பிண்டே ஒரு பாதத்தைக் காட்டறா.&lt;br /&gt;&lt;br /&gt;'கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ?'னு அவளைப் பாத்துட்டு, "இதென்ன வினோதம்? முத்தும் பவழமும் இப்படி சேந்து உருள்றதே?"னு கேக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவோட பாதம் அவளோட முகம் மாதிரி அத்தனை பொலிவா இருக்காம். பாதத்துல ரத்தம் பவழமா வரதாம். முள் குத்தின வலி தாங்காம அகல்யாவோட கண்லேந்து ஜலம் முத்தா உருள்றதாம். என்னமா டயலாக் விடறான் பாருங்கோ! சினிமாக்காராள் காதல் டயலாக் எழுதக் கத்துண்டது இந்த்ரன் அகல்யா ஜோடி கிட்டேயாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னோட காலையும் கண்ணையும் பாத்துட்டு இந்த்ரன் இப்படி வர்ணிக்கறான்னு தெரிஞ்சதும், வலி போன மாதிரி இருக்கு அகல்யாவுக்கு.  இந்த்ரன் அவளோட காலைப் பிடிக்க வரான். முள்ளு குத்தினதுக்கான ஹேது புரிஞ்சுது அவளுக்கு. அவசரமா ஒதுங்கிண்டு இந்த்ரனைத் தடுக்கறா. "இந்த முள்ளை அத்தனை லகுவா எடுக்க முடியாது"னுட்டு கழுத்தைக் தொட்டுக் காட்டறா. அவள் கழுத்துல மின்னின மஞ்சள் குங்குமத்தைப் பாத்துட்டு ஒதுங்கறான் இந்த்ரன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்துல மனுஷ்ய கல்யாணத்துக்கு அடையாளமோ லக்ஷணமோ உண்டானு கேட்டேள்னா, உச்சந்தலைலயும் கழுத்துக் குழியிலயும் வச்சுக்குற மஞ்சள் குங்குமப் பொட்டுதான். விவாகச் சின்னம்னு இப்ப நாம எல்லாம் விவாதம் பண்ற தாலி, மாங்கல்யம், மெட்டி எல்லாம் பின்னால வந்தது. மாங்கல்யதாரணம்னு ஒரு க்ருதானுசாரத்தை நாம ஏன் அனுஷ்டிக்கிறோம்னு தெரிஞ்சா, இந்தக் காலத்துப் பொண்கள்  பாதி பேர் தாலி கட்டிக்க மாட்டா. 'என்னடா அசுவத்தாமா, அடி வாங்கத் தயாரா இருக்கியா?'ங்கற மாதிரி பாக்கறார் பாருங்கோ காஸ்யபன் மாமா.. அதனால அந்தக் கதையை இன்னொரு நாள் சொல்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா தன்னோட மஞ்சள் குங்குமத்தைத் தொட்டுக் காமிச்சதும் இந்த்ரனுக்கு எரிச்சலாவும் கஷ்டமாவும் இருக்கு. "இதெல்லாம் மனுஷ சம்ஸ்காரம், இதுக்கெல்லாம் நீ ஏன் கவலைப் படறே?"ங்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப நான் மனுஷியாத்தானே இங்கே வந்திருக்கேன்? மனுஷ பழக்கங்களையும் யதார்த்தங்களையும் அனுசரிச்சு தானே ஆகணும்?"னு பதில் கேள்வி கேக்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"பூ போட்டு என்னை வரச்சொன்ன மனுஷி, நீ தானே?"னு, 'மனுஷி'யை அழுத்தி, கொஞ்சம் கோவமா கேக்கறான். அவளைத் தொட்டுத் தாங்க முடியலையேனு அவனுக்கு ஆதங்கம். ஆத்திரம். சில பொம்னாட்டிகள் காதலிக்கிறேம்பா தியாகம் பண்றேம்பா.. ஆனா திடீர்னு அப்பா அம்மா குடும்பம் வேலை லொட்டுனு ஏதோ சாக்கு சொல்லி பல்டி அடிச்சு காதலிக்கறவனை நடுத்தெருல நிக்க வச்சுருவா. அப்படித்தான் ஏமாந்த சோணகிரியான மாதிரி இருக்கு இந்த்ரனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன தெரிஞ்சா பூ போட்டேன்?  எதை எதுக்காக ஆகாயத்துல எறியறேன்னு தெரியாம தானே இத்தனை நாளும் எறிஞ்சேன்?"னு பதிலுக்குக் கேக்கறா.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ மனுஷப்பிறவில இதையெல்லாம் மறந்துடுவேன்னு தானே முன் ஜாக்கிரதையா அப்படி ஒரு வரம் கேட்டே?  என்னோட பலஹீனத்தைப் புரிஞ்சுண்டு என்னை வரவழைக்கத் தானே திட்டம் போட்டு அப்படி ஒரு வரம் கேட்டே?"னு இந்த்ரன் லா பாயின்டை புட்டு புட்டு வைக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா யோசிக்கறா. புத்திசாலி பொம்பளையோன்னோ? பேச்சை மாத்திடறா. "சரி, ரெண்டு பேரும் மாத்தி மாத்திக் கேள்வி கேட்டுண்டு இருந்தா எப்படி?"னு  இந்த்ரனைப் பாத்து சிரிக்கறா. கொஞ்ச நேரம் அவனையே பாத்துண்டு இருக்கா. ரெண்டு பேர் பார்வைலயும் இந்த அசுவத்தாமனால பிரஸ்தாபிக்க முடியாத அளவுக்கு சிந்தா பரிவர்த்தனை நடந்துண்டிருக்கு. அத்தனை பேசிக்கறா நயன பாஷைல. 'வாய்ச் சொற்கள் யாது பயனும் இல'னு புலவர் சொன்னது இவாளை வச்சுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அகல்யா, "விவாகமான ஒரு ஸ்த்ரீ இன்னொரு புருஷனைப் பாக்கறதே அதர்மம்னு மனுஷ சாஸ்த்ரம் சொல்றது, இருந்தாலும் ஒங்களைப் பாக்கணும் போல இருந்துது. என்னோட மனுஷ்ய ஜீவிதத்லே சோர்வு என்னை உருக்கும் போது உங்களை பாத்தா உற்சாகமா இருக்கும்னு எனக்கு அப்பத் தோணித்து, வரம் கேட்டேன்"னு ரொம்ப சாத்வீகமா சொல்றா. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரன் சாந்தமாறான். அகல்யாவைப் பாத்து, "சுகம் தானா? சொல்லு கண்ணே"ங்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் அவனைப் பாத்து விஷமமா, "சுகம் சுகம் தானே நினைவிருந்தால்"னு சொல்றா. அப்புறம், "எனக்கு ஒரு குறையுமில்லை. என்னை ஒரு சேவகி மாதிரி பாவிக்கறார் கௌதமர். அவருக்கு எல்லா விதத்துலயும் ஒத்தாசையா இருக்கேன். இருந்தாலும் அப்பப்போ கோவம் வந்து சபிச்சுத் தள்ளிடறார்"னு கையை காலைக் காட்டறா. அங்கங்க ஒரே புண்ணா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படிப் புண்ணாக்கி வச்சிருக்கியேடா என் தங்கமே?"னு உருகறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்காகத் தானே இங்கே வந்திருக்கேன்? கௌதமரோட தவபலத்தைக் கட்டுப்படுத்தத்தானே? சாபத்தைக் கொடுத்துட்டா அதைத் திருப்பி எடுத்துக்க முடியாதே? அதான் சாப நிவர்த்திக்காகவும் உக்ரத்தைக் குறைக்கவும் இப்படியெல்லாம் பரிகாரம் பண்ண வேண்டியிருக்கு"னு அவ தலையைக் குனிஞ்சுண்டே சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;ச்ச்ச்.. அகல்யா என்ன சொல்றா கவனிச்சேளா? புஷ்பத்தைப் போலானவள் பெண். முனிவரோட சாபத்தை வாங்கிண்டு புண்ணா சொமக்கறா பாருங்கோ? எப்பேர்கொத்த தியாகம்? எதுக்காக இந்த த்யாகம்? புரிஞ்சுக்க முடியாத த்யாகங்கள் பொம்பளேள்ட்டே நெறய உண்டு போங்கோ! எங்கம்மா ஞாபகம் வந்து நேக்கே கண் கலங்கறது. &lt;br /&gt;&lt;br /&gt;சாபம் ஏன் குடுக்கத் தோண்றது? க்ரோதம். ஆங்காரம். தபஸ்வியா இருக்கறவா சாந்தமா, மன்யு விட்டு இருக்கணும். க்ரோதமோ மன்யுவோ வந்து சாபம் கொடுத்துட்டா, சாந்தமா இருந்து சம்பாதிச்ச தபோபலன் அத்தனையும் காணாம போயிடும். பேலன்சிங்  ஆக்டுங்கறாளே, அதான். மனுஷாளை மனுஷாளாவே வச்சிருக்க இது ஒரு தேவ யுக்தியாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேள்னா, இதுல பெரிய லோகநீதி புதைஞ்சிருக்குனு புரியும். ஆத்துல ஏதோ அசம்பாவிதம் நடக்கறது. கொழந்தை காபி டம்ளரைத் தட்டிவிடறது.  வாழக்கா பொடிமாஸ்ல பொண்டாட்டி உப்பை ஜாஸ்தியா போட்டுடறா. பிள்ளை பரீட்சைலே மார்க்கு கம்மியா வாங்கியிருக்கான். பொண்ணு சொன்ன பேச்சு கேக்காம அடம் புடிக்கறா. ஆபீஸ்லே சொன்ன டயத்துக்கு வந்து வேலை செய்ய மாட்டேங்கறா. ஷாப்பிங் சென்டருலே கார் பார்க் இடத்துக்கு சண்டை. ஏதோ ஒரு அல்ப காரணம். மனுஷ நியமப்படி நமக்குக் கோபம் வந்து அடாபுடானு வையறோம், பல சமயம் கைநீட்டி அடிச்சுடறோம். 'உன் தலையில இடி விழ'னு நாம் சொல்றது வசவா இருந்தாலும், யோசிச்சுப் பாத்தேள்னா அது சாபம் தானே? 'நீ உருப்படமாட்டே'னு நம்ம கொழந்தேளை நாம சொல்றது திட்டா, சாபமா? 'கட்டேலே போக'னு எத்தனை தடவ சொல்றோம், அது சாபம் தான்னு நமக்குத் தோணலை பாத்தேளா? மனுஷாளா பொறந்து சம்சார பந்தத்துலேந்து அனாச்ருதம் வேணும்னு நாம பண்ற தபஸ், இந்த மாதிரி சாபங்களால தானே ஸ்வாதீனமே இல்லாமப் போறது? கோவத்தை வளத்து இப்படி சாபம் குடுக்க குடுக்க, நாம பிறவி எடுத்துண்டே இருப்போம். நாம சொல்ற கடுமையான வார்த்தை, திட்டு வாங்கினவாள் கிட்டே புண்ணா மாறிடறது. அந்தப் புண் நம்ம கண்ணுக்குத் தெரியாதே தவிர, வாங்கிண்டவா மனசுலயும் உடம்புலயும் அது அழுகிண்டே இருக்கும். சுட்டுண்டே இருக்கும். 'நாவினால் சுட்ட வடு ஆறாதே'னு புலவர் சொல்லலியா? &lt;br /&gt;&lt;br /&gt;மன்யுவை, அதாவது அசாத்யக் கோபத்தை, மனுஷா எல்லாருமே குறைக்கணும். மன்யு அகார்ஷீத்னு ஜபம் பண்றதே அதுக்குத்தான் தெரியுமோ? சும்மா பூணலை மாட்டிண்டு புரியாத பாஷைல எதையோ சொல்லிட்டு பாயசம் வடையைச் சாப்பிடறோம்.  என்ன ப்ரயோஜனம்?  இந்த ஜபத்தை எல்லாருமே பண்ணலாம். மத நம்பிக்கை இல்லேன்னா கூட இந்த ஜபம் பண்ணலாம். 'அசாத்ய கோபம் தொலஞ்சு போகட்டும்'னு ஜபம் பண்றதுக்கு தெய்வ மத நம்பிக்கை தேவையில்லை. லோகத்துல கோவம் குறையட்டும்னு பிரார்த்தனை பண்ணுங்கோ எல்லாரும் நாளைக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;சரி, கதைக்கு வரேன். லோகநீதியப் பத்தி பேசினா நாலு மாமாங்கம் ஆகும் முடியறதுக்கு. அகல்யா கதையை புராணமாட்டம் இழுத்துண்டு போனேன்னு வைங்கோ, சிவகுமாரன் வெண்பாவிலே அறம் பாட ஆரம்பிச்சுடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமர் அகல்யாவைச் சபிக்கற போதெல்லாம் இப்படி அவ தேகத்துல ரணகளமாயிடறது. அவளும் பிரம்மாகிட்டே கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்னு த்யாகம் பண்ணிண்டே இருக்கா. இங்கயும் பாத்தேள்னா, இது லோகநீதி தான். ஸ்த்ரீகளுக்கு புருஷன் தானே தெய்வம்னு சொல்றா? அதனாலதானே லோகநீதி காரணமா ஸ்ரீராமபிரான் பண்ணின கொடுமையெல்லாம், பிராட்டி பொறுத்துண்டா? எப்பேர்கொத்த மகோன்னத த்யாகம் அது! &lt;br /&gt;&lt;br /&gt;மனுஷ தர்மப்படி நடக்கணும்னு அகல்யாவும் பொறுமையா இருக்கா.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரனுக்கு கை துறுதுறுங்கறது. வஜ்ராயுதத்தை நெனச்சுக்கறான். அகல்யாவை இப்படி நடத்தறானே பாதகன்னு தோணறது அவனுக்கு. தேவாளோன்னோ, மனுஷாள் எல்லாருமே  அவாளுக்குப் பாதகாளாத் தோணும். தேவாள் என்ன பாதகம் பண்ணாலும் குத்தமில்லே, பாவ மூட்டைய சொமக்கறது மனுஷக் கூட்டம். மனுஷனா பொறந்துட்டாலே பாவம் பண்றவாள்னு சொல்றதே வேதம்?  நம்ம வேதம் மட்டுமில்லே. எங்காத்து முனைலே ஒரு சர்ச் இருக்கு. போன வாரம் பாருங்கோ, அந்தப் பக்கமா வர போறவாளை எல்லாம் பாவிகளே பாவிகளேனு கூப்டுண்டேயிருக்கா மைக் வச்சு. ரெண்டு நாளைக்கப்புறம் அந்தப் பக்கம் போறதையே நிறுத்திட்டேன். கதைக்கு வருவோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;"உன் மனசு எத்தனை கஷ்டப்படும்?"னு சொல்றான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையே. உங்க மனசைத்தானே நான் எடுத்துண்டு வந்தேன்? என் மனசு உங்க கிட்டேதானே இருக்கு? வச்சிண்டிருக்கேளா, இல்லே இன்னொரு பொண்ணைப் பாத்துட்டு என் மனசைத் தூக்கிப் போட்டுட்டேளா? கடைசி வரைக்கும் பத்திரமா வச்சுப்பேள்னு தானே குடுத்துட்டு வந்தேன்?"னு முள் குத்தின வலிலே கண்ல தண்ணி வந்தாலும், சிரிச்சுண்டே சொல்றா அகல்யா. "என் ஒடம்புல தான் காயம்.  மனசுல பாருங்கோ, ஒண்ணுமில்லே. ஒங்க மனசாச்சே, பத்திரமா காயம் படாம வச்சுண்டிருக்கேன்"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா சொன்னது இந்த்ரன் ஹ்ருதயத்தைக் கூழாக்கறது. அகல்யா மேலேயே கோபம் வரது. தேவராஜனாச்சே, கொஞ்சம் கட்டுப் படுத்திண்டு ஒண்ணும் பேசாம இருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, உம்முனு இருக்கேள்? உங்களைப் பாத்ததுல சந்தோஷம்"னு ஏக்கத்தோட மறுபடியும் சொல்றா அகல்யா. "ஆனா, என்னோட நெலமையை மறந்து உங்களை நெனச்சது தப்புதான். தெரியாமலே செஞ்ச பாதகம். உங்களோட இப்படிப் பேசிண்டிருந்தா அவருக்குக் கோபம் வந்து ரெண்டு பேரையும் சபிச்சுடப் போறார். என்னைப் பாக்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். கிளம்புங்கோ. நானும் போயிட்டு வரேன்"னுட்டு ஆஸ்ரமத்தைப் பாத்து நடக்கறா. முள் தச்ச பாதமோன்னோ, உந்திண்டே நடந்து போறா பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp அவ போறதையே பாத்துண்டிருக்கான் இந்த்ரன். அகல்யா உந்தி உந்தித் தள்ளாடறது அவனுக்குத் துக்கமா இருக்கு. தனக்காகத் தானே இந்தத் த்யாகம் பண்றானு வருத்தமா இருக்கு. மனசுக்கு இஷ்டமானவளோட இருக்க முடியாம, இந்த்ர பதவினால என்ன ப்ரயோஜனம்னு எரிச்சலா இருக்கு. க்லேசம் ஓயணும்னு சித்த நாழி கண்ணை மூடிக்கறான். &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் ஆசுவாசமானதும், திரும்பிப் போகலாம்னு எழுந்து ஐராவதத்தைக் கூப்பிட்டவன், கீழே பாக்கறான். அகல்யா கைதவறி விட்ட குடம் ஓரமா உருண்டு கிடக்கு. அகல்யாவைக் கூப்பிடலாம்னு பாத்தா அவளைக் காணோம். 'அடடா, இதை மறந்துட்டாளே, கௌதமர் கோவத்துல ஏதாவது சபிச்சுடப் போறாரே'னு எழுந்து குடத்தைக் கையிலே எடுத்துண்டு ஆஸ்ரமத்தைப் பாக்க ஓடறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்துல கார்யசித்திக்கான ஒரு சுவாரஸ்யமான உத்தியைப் பத்திச் சொல்லணும். பொண்களுக்கு ரொம்பக் கைவந்த யுக்தியாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா அந்தக் குடத்தை மறந்து விட்டுட்டு போனாள்னு தானே நாம நெனச்சுண்டிருக்கோம்? ஆனா துளசி மாமியைக் கேளுங்கோ.. அகல்யா குடத்தை வேணும்னே விட்டுட்டுப் போனாள்னு டக்குனு சொல்லிடுவா டீச்சர். வாஸ்தவமாக்கும். தேவைப்பட்டா புத்தியில்லாம நடந்துக்கறது அசாத்திய புத்தியாக்கும். கார்யசித்திக்கோஸ்ரம் பொண்கள் இப்படி நடந்துப்பா. புருஷாளுக்கு இது சுட்டுப் போட்டாலும் வராது. பொண்கள் இப்படி நடந்துக்கறாங்கறதும் நமக்குத் தெரியாது. நம்ம கண்ணைத்தான் காமமும் க்ரோதமும் சதா மறைச்சுண்டே இருக்கே? 'புத்தியில்லாம இருக்கியே?'னு கத்திட்டுத் தொண்டையப் பிடிச்சுண்டு ஒக்காந்துடுவோம். கார்யம் ஜெயம்னு அவா மௌனமா மனசுக்குள்ள கொண்டாடிண்டிருப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவும் அப்படித்தான். இந்த்ரன் குடத்தை எடுத்துண்டு வருவான், கௌதமரைப் பாத்து பேசுவான், விவகாரத்தை முத்த வைக்கணும்னு தான் குடத்தை மறந்து போன மாதிரி விட்டுட்டுப் போனா. இந்த்ரன் கண்ணை மூடிண்டு ஒக்காந்துண்டான்னு தெரிஞ்சதும், உந்தி உந்தி நடந்துண்டிருந்தவ, ஒரே ஓட்டமா ஆஸ்ரமத்துக்குப் போக ஆரமிச்சா. அவ மனசுல உத்சாகம். &lt;br /&gt;&lt;br /&gt;ஓடறப்போ ஞானோத்சவத்துல விஸ்வகர்மாவோட பேசினது ஞாபகம் வரது அகல்யாவுக்கு.  ஸ்ரீராம் அண்ணாவுக்காக ஸ்பெஷலா இன்னோரு ப்ளேஷ்பேக்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-left: .6cm; line-height: 160%"&gt;விஸ்வகர்மாவுக்கு எப்பவுமே அபிக்யாத்ர மனசு, அதாவது மேனேஜ்மென்ட் மென்டாலிடிம்பாளே, அது உண்டு. தேவேந்த்ரனோடும், க்ரகாதிபதிகளோடும், மும்மூர்த்திகளோடும் விஸ்ராந்தியா குழைஞ்சு பேசுவானே தவிர, சாதாரண தேவாளை துரும்பாக் கூட நினைக்க மாட்டான். அவாள பாக்கறதே காலவிரயம்னு நெனக்கறவன் எங்கேந்து பேசப் போறான்? வந்தவாள் கிட்டே  அவனோட எடுபிடிகளை விட்டு பேசச் சொல்லிண்டிருந்தவன், திடீர்னு சதசுக்கு வந்த அகல்யாவைப் பாத்ததும் அசந்துட்டான். இத்தனை முகலட்சணத்தை அவன் மகாலக்ஷ்மி கிட்டேயும் பாத்ததில்லை. அவ பின்னாடியே ஓடி, அவளுக்கு எல்லாத்தையும் சொல்லிக் காண்பிச்சான். அகல்யா எல்லாத்தையும் பாத்துட்டு, ஓரமா இருந்த ஹோமகுண்டத்துக்கு வந்து, "இது என்ன?"னு கேட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;"அதை தேவேந்த்ரனுக்கும் மும்மூர்த்திகளுக்கு மாத்ரமே சொல்ல முடியும். மகா ரகஸ்யமாக்கும். என்னை மன்னிச்சுடுங்கோ"னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க எனக்கு அண்ணாவாகணும். தங்கை கிட்டே சொல்லக் கூடாதா?"னு கெஞ்சிப் பேசறா.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணாவா?"னு கேக்கறான் விஸ்வகர்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"சரஸ்வதியை சித்தத்துல நெனச்சு உங்களை ஒரு விசேஷ கார்யத்துக்காகப் படைச்சார் இல்லையா பிரம்மா? அதே மாதிரி சரஸ்வதி க்ருபையோட என்னையும் ஒரு விசேஷ கார்யத்துக்காகப் படைச்சிருக்கார். இருக்கிற தேவாள்ள சரஸ்வதி க்ருபையோட பொறந்தது நாரதனை விட்டா, நீங்களும் நானும் தான். நீங்க தேவேந்த்ரனுக்கு உதவி பண்றேள். நானும் தேவேந்த்ரனுக்கு உதவி பண்றேன்"னுட்டு பிரம்ம ஆக்ஞை பத்தி எல்லாத்தையும் சொல்றா. சொல்லிட்டு விஸ்வகர்மா முகத்தை ஏக்கத்தோட பாக்கறா. அவ கண்ல அப்படி ஒரு ஆகர்ஷணம். காந்தி. கவர்ச்சி. உருகிடறான் விஸ்வகர்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அனேக புருஷாளுக்கு ஒரு துர்பலம் உண்டு. அவாளைப் பொருத்தவரைக்கும் அழகான பொண்கள், ஒண்ணு தான் கல்யாணம் பண்ணிக்கறவாளா இருக்கணும், இல்லை கூடப் பொறந்தவாளா இருக்கணும். அழகான பொண்களோட நெருக்கம் புருஷாளுக்குத் தேவைப்படறது. அப்பத்தான் மத்த புருஷாளோட மதிப்பும் மரியாதையும் நமக்கு கிடைக்கிறதுன்னு ஒரு எண்ணம். வாஸ்தவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவைக் காட்டிலும் அழகியுண்டோ? விவேகியுண்டோ? விஸ்வகர்மாவுக்கு ஹோமகுண்டத்தைப் பத்தி ஆதியோடந்தமா அகல்யாவண்டை சொல்லத் தோணறது.  "இது அதி விசேஷமாக்கும். நெனச்ச நேரத்தில் நெனச்ச ரூபத்தில் ப்ரயாணம் செய்யத் தோது பண்ணும். இதுல இப்படி நின்னுண்டு எந்த உருவம் வேணுமோ அதை மனசுல நினைச்சுண்டு, எங்கே போகணும்னு விரும்பறோமோ, அங்கே ஸ்மரண வேகத்துல போய்டலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆச்சரியமா இருக்கே?"னு கண்ணைப் படபடனு அடிச்சிக்கறா அகல்யா. "இது இருந்தா எந்த வாகனமும் வேண்டாம் போலிருக்கே? உங்க வித்யை பத்திக் கேள்விப் பட்டிருக்கேன், ஆனா இப்போதான் பாக்கறேன். ஆஹா! நீங்க எப்பேர்பட்ட புத்திமான்! இந்த்ரன் கொடுத்து வச்சிருக்கணும், நீங்க இந்த்ர சபைல ஆஸ்தான வித்தகரா சேந்து இருக்கறதுக்கு! அண்ணானா அண்ணா தான்!"னு ஏகத்துக்கு ஸ்துதி பண்றா.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வகர்மா கர்ணம் குளிற எல்லாத்தையும் கேட்டுண்டிருக்கான். திடீர்னு அகல்யா கேக்கறா, "ஆமாம், இது நெஜமாவே வேலை செய்யுமாண்ணா?"னு. &lt;br /&gt;&lt;br /&gt;காத்து போன பலூன் மாதிரி ஆய்டறது விஸ்வகர்மா மொகம். ரோஷம் வரது. "என்ன இப்படி சொல்றே?"னு அதிகாரத்தோட கேக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை அண்ணா. கொஞ்ச நேரத்துல தேவேந்த்ரன் வந்து இதைப் பத்திக் கேட்டு வேலை செய்யலைனு வச்சுங்கோ.. அண்ணா, ஒங்களுக்குத் தானே கெட்ட பேர்? இதைப் பரீக்ஷை பண்ணிப் பார்க்க வேண்டாமா?"னு கேக்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் இந்த்ரன் ஒண்ணும் சொல்லாமப் போனது ஞாபகம் வரது விஸ்வகர்மாவுக்கு.  ஒருவேளை இந்த்ரன் திரும்பி வந்து பரீக்ஷை பண்ணிணா? வாஸ்தவம்னு தலையாட்டிட்டு, "இந்தா, நீ பரீக்ஷை பண்ணிப் பார்"னு சொல்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம் அண்ணா, எனக்கு பயமா இருக்கு அண்ணா!"னு வரிக்கு வரி அண்ணானு கொஞ்சறா அகல்யா. "நீங்களே பண்ணுங்கோ. ஒங்களுக்குத்தான் ஞானம் ஜாஸ்தி. ஏதாவது ஆச்சுனா கூட என்ன பணணனும்னு தெரிஞ்சு புத்திசாலித்தனமா திரும்பி வந்துடுவேள்"னு சொல்றா. பாருங்கோ, லக்ஷ்மி கடாக்ஷம் அவச்யமில்லே, அழகான பொண்களுக்கு முகஸ்துதியே சகல சௌபாக்யத்தையும் கொடுக்குமாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, என்ன ரூபம் எடுக்கட்டும் சொல்லு"ங்கறான் விஸ்வகர்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா கொஞ்சம் யோசிக்கறா. எல்லாம் பாவ்லா. அவளுக்கு நன்னா தெரியும், என்ன கேக்கணும்னு. சொன்னேனில்லையா, சில சமயம் புத்திமட்டா நடந்துக்கறது அதிபுத்திசாலித்தனம்னு? "நேக்கு ஒண்ணும் தோண மாட்டேங்கறதே, அண்ணா?"ங்கறா. அப்புறம் விஸ்வகர்மாவோட கையைப் பிடிச்சுண்டு சின்னக் குழந்தையாட்டம் குதிக்கறா வேணும்னே. "இப்படிப் பண்ண முடியுமா அண்ணா? பிரம்மாவை விட்டா நான் உங்களையும் இந்த்ரனையும் தான் பாத்திருக்கேன். இந்த்ரன் மாதிரி ரூபம் எடுத்துண்டு பரீக்ஷை பண்ணிக் காட்டுங்கோ பாக்கலாம், நான் நம்பறேன்"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வகர்மா கொஞ்சமும் யோசிக்காம, "சரி, அதுக்கென்ன? இதோ பார்"னு அந்த குண்டத்துக்குள்ள இறங்கி நின்னான். "இந்த்ரனா மாறி அதோ அந்த கூட்டத்துல தெரிவேன் பார்.  உன்னைப் பாத்து வலது கையை அசைக்கிறேன் சரியா?"னு வடக்குப் பக்கமா கை காண்பிக்கறான். அப்படியே கண்ணை மூடிக்கறான். காத்துல கரைஞ்சு போன மாதிரி, விஸ்வகர்மாவைக் காணோம். &lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவுக்கு திக்குனு ஆறது. சட்டுனு உத்தர தெசைலே பாக்கறா. அங்கே தேவேந்த்ரன் நின்னுண்டிருக்கான். சாக்ஷாத் தேவேந்த்ரன்னுட்டு எல்லா தேவாளும் அவனோட பேசிண்டிருக்கா. அங்கேருந்துண்டே அகல்யாவைப் பாத்து வலது கையை ஆட்டறான். அகல்யாவுக்குப் புரிஞ்சு போச்சு அது விஸ்வகர்மானு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பல்லாம் டெலிபோர்டேஷன்னு விசித்ரமா சொல்றாளே.. பாருங்கோ அது அப்பவே நம்ம விஸ்வகர்மா வித்தையாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தேவேந்த்ரனாட்டம் இருந்த விஸ்வகர்மா தன்னை எல்லாரும் விழுந்து விழுந்து உபசரிக்கறதைக் கொஞ்ச நாழி அனுபவிச்சுட்டு, பழையபடி குண்டத்துலேந்து திரும்பி வந்தான். அகல்யாவைப் பாத்துட்டு பெருமையா, "இப்ப என்ன சொல்றே?"னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன சொல்றது அண்ணா? அபாரம். ப்ரமாதம். அபூர்வம்"னு அவனைக் கட்டிப் பிடிச்சு நெத்தியிலே முத்தம் கொடுக்கறா. "நான் வரேன் அண்ணா"னுட்டு கிளம்பறா.  ஒரு நாலடி நடந்து போய்ட்டு திரும்பி வந்து விஸ்வகர்மாவைத் தனியா கூப்பிடறா. "அண்ணா, இந்த குண்டத்துனால உங்களுக்கு ஆபத்து வரும்னு தோணறது"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;"திடீர்னு என்ன இப்படி சொல்றே அகல்யா?"னு கேக்கறான் விஸ்வகர்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணும் இல்லை. தேவேந்த்ரனோட பதவிமோகம் அதிதீவிரம்னு எல்லாருக்குமே தெரியும். இந்த குண்டத்தை வச்சுண்டு யார் வேணா தேவேந்த்ரனா ஆயிடலாம் போலிருக்கே? இதைக் கண்டுபிடிச்ச உங்களை தேவேந்த்ரன் கண்டிப்பா அழிச்சுடுவார்னு தோணறது"னு மெதுவா, ஆனா நல்லா ஒறைக்கும்படி சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இதைக் கண்டுபிடிச்சதோட சரி. வஜ்ராயுதம் மாதிரி இதுவும் ஒரு லவி, சாஸ்த்ரம், கருவி அவ்ளோதான்"னு சொல்றான் விஸ்வகர்மா. அவன் குரல் லேசா நடுங்கறதைக் கண்டுக்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க சொல்றது சரிதான் அண்ணா. ஆனா நீங்க இந்த்ரனா மாறி தேவாளோட பேசிண்டிருந்ததை நெறய பேர் பாத்திருக்காளே? அதுவும் நல்லா அனுபவிச்சுப் பேசிண்டிருந்தேளே? அவா போய் ஏதாவது கோள் சொல்லிட்டா? இந்த்ரனுக்கு சந்தேகக் குணமாச்சே? இன்னோரு இந்த்ரன் எங்கேந்து வந்தான்னு யோசிச்சா?"னு கிளறிவிடறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டிம்மா.. நீயே போய் சொல்லிக் கொடுத்துடுவே போலிருக்கே?"ங்கறான் விஸ்வகர்மா. பக்குனு அடிவயிறு பத்திக்கறது. இருந்தாலும் சமாளிக்கறான். "அது நான்தான்னு யாருக்கும் தெரியாதே, உனக்கு மட்டுந்தானே தெரியும்? நீ என்ன ஒங்கண்ணாவையே சொல்லிக் கொடுக்கவா போறே?"னுட்டு அகல்யாவைப் பாக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா முகத்துல ஒரு அதீதக் களை. விஷமமா சிரிச்சுண்டே விஸ்வகர்மாவைப் பாக்கறா. அவன் கேள்விக்கு பதில் சொல்லாம, ஒண்ணும் பேசாம, அவனை அப்படியே பாத்துண்டிருக்கா. விஸ்வகர்மாவுக்கு பயம் பிடிச்சுண்டுது. தன்னை இந்த்ர ரூபம் எடுக்கச் சொன்னக் காரணம் எல்லாம் மொள்ளப் புரியறது அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா, நீ என்னோட தங்கையில்லையா? ஒனக்கென்ன வேணும் சொல்லு, நான் செய்யறேன். இந்த்ரன் கிட்டே மட்டும் இதைச் சொல்லிடாதே. என்னைக் காப்பாத்து"னு சாஷ்டாங்கமா அகல்யா கால்ல விழறான். பயம் வந்தாலும் தன்னம்பிக்கை போனாலும் புருஷாளுக்கு என்ன பணறதுன்னே தெரியாது. அகல்யா அவனைத் தடுத்து, "என்ன அண்ணா இது? நான் உங்க தங்கையாச்சே, ஒங்களைக் காட்டிக் குடுப்பேனா?"ங்கறா. அப்புறம் சாவதானமா, "நீங்க எனக்கு ஒரு கார்யம் பண்ணினாப் போறும். பண்றேள்னு சொல்லுங்கோ, நான் இந்த்ரன் கிட்டே மூச்சு விடலை"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பண்ணனும் சொல்லு, சத்யமா பண்றேன்"னு வாக்கு கொடுக்கறான் விஸ்வகர்மா. அசடு.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா தனக்கு என்ன வேணும்னு அவன் கிட்டே விளக்கமா சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டதும் விஸ்வகர்மா மொகத்துல களையே இல்லை. "என்ன அகல்யா, இப்படிப் பண்ணச் சொல்றே?"னு கேக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதை விட்டா வேறே வழியே இல்லை அண்ணா. உங்களுக்கும் எனக்கும் இந்த்ரனுக்கும் ஆபத்து வராமே இருக்கணும்னா நீங்க இதுக்கு ஒத்துண்டே ஆகணும். எனக்காகவாவது நீங்க இதைப் பண்ணித்தான் ஆகணும். இல்லேன்னா ஒரு வேகத்துல நான் இந்த்ரன் கிட்டே ஒங்களைப் பத்திச் சொல்லிடுவேன்"னு, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டும்பாளே அது மாதிரி, சொல்லிடறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, இந்த்ரன் எங்கிட்டே வந்ததும் நீ சொன்னபடி செய்யறேன்.  நல்ல தங்கச்சி வந்து வாச்சாளே எனக்குனு"னுட்டு புலம்பிண்டே வாக்கு கொடுக்கறான் விஸ்வகர்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"மறந்துடாதீங்கோ அண்ணா, இப்படிக் கேக்கறேனேனு தப்பா நினைக்காதீங்கோ. உங்களைக் காட்டிக் குடுத்தா நேக்கு மட்டும் நிம்மதி இருக்கும்னு நினைக்கறேளா?"னு சொல்லிட்டு அங்கேந்து கிளம்பறா.&lt;/div&gt;&lt;br /&gt;காரணத்தோடே தானே விஸ்கர்மாவைப் பாத்துப் பேசிட்டு வந்தா அகல்யா? இந்த்ரன் பூலோகம் வந்தாச்சு, இனிமே நெனச்சதெல்லாம் ஒண்ணொண்ணா கை கூடி வரும்னு மனசுக்குள்ள சிரிச்சுண்டே ஆஸ்ரமத்துக்குள்ளே போனா அகல்யா. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே கௌதமர் காத்துண்டிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல.&lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_28.html"&gt;►►&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-8828686855353289826?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/8828686855353289826/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=8828686855353289826&amp;isPopup=true' title='21 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/8828686855353289826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/8828686855353289826'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_20.html' title='ஸ்மரண யாத்ரை'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3656048430322963421</id><published>2011-12-18T19:55:00.019-06:00</published><updated>2011-12-29T23:37:07.187-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசுவத்தாமன் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெடுங்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபரீதக் கதைகள்'/><title type='text'>ஸ்மரண யாத்ரை</title><content type='html'>&lt;span style="color: rgb(51,51,183); font-size:120%;"&gt;&lt;strong&gt; (பெரிய) சிறுகதை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_16.html"&gt;1&lt;/a&gt; ◀◀ பூர்வத்துலே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 160%"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;அ&lt;/b&gt;துக்குள்ள மாமா லேசா தொண்டைய கனைச்சுண்டார்.  என்னை அங்கேயே இருக்கும்படி சைகை காண்பிச்சார். காசித்துண்டால வாயைப் பொத்திண்டு பொழக்கடை பக்கம் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆகா, என்னமோ புதுசா கதை சொல்றார்'னு காத்துண்டிருக்கேன். அதுக்குள்ள மாமி ரெண்டு கைலயும் ரெண்டு தட்டைக் கொண்டு வந்தா. ரெண்டு தட்லயும் கிண்ணம். எழுந்து கை குடுப்போம்னு நினைக்கறச்சே, "சாப்டுங்கோ, போளியும் பால்பாயசமும் பண்ணினேன்"னுட்டு என் எதிர்ல தட்டையும் கிண்ணத்தையும் வச்சார். "எங்க போனார்? அவர் சொல்றதை எல்லாம் கேட்டுண்டிருக்காதீங்கோ.. என்னமாவது சொல்வார்.. அவருக்கு சித்தசுவாதீனம் இல்லையோனு நேக்கே செல சமயம் தோணும்"னு சொல்லிட்டு உள்ளே போனார். "பாயசம் ஆறிடப் போறது, சீக்கிரமா சாப்டுங்கோ ரெண்டு பேரும்"னார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் பாயசத்தைப் பாத்தேன். சுண்டக்காய்ச்சின பால், நெய்யில வறுத்து வேகவச்ச ஜவ்வரிசி, குங்குமப்பூ, ஏலக்காய், முந்திரிப்பருப்புனு வாசனை மூக்கைத் துளைக்கறது.  "மாமா வரட்டும்"னு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணு மட்டும் நேக்குப் புரியலை. மாமாவுக்கோ நிரந்தர உத்யோகம் இல்லை. பூர்வீக சொத்தும் இல்லை. ஆனா பாருங்கோ, எங்களுக்கு சாப்பாடு போட்ட தாம்பாளம் வெள்ளி. மாமி கழுத்துலயும் காதுலயும் கைலயும் ஜாஸ்தி இல்லேன்னாலும், ஏதோ மினுக்கறது. பகு ப்ரமாதமா விருந்து பண்ணிப் போட்டுட்டு, இப்ப என்னடான்னா வெள்ளிக் கிண்ணத்துல பால்பாயசம் கொண்டு வரார். இதுக்கெல்லாம் எங்கேந்து முடியறது இவாளாலனு நேக்குத் தோணினாலும், ஒண்ணும் கேக்கலை. விருந்தோம்பல்னா செல பேருக்கு தெய்வ கைங்கர்யம்னு கேள்விப்பட்டிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள மாமா வந்து, "எல்லாம் அந்த திருவாழத்தான் வேலை"னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேக்குப் புரியலை. "யாரு? என்ன?"னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எதுத்தாத்து ராமலிங்கம் ஓய். என்னோட செப்புக் கிண்ணத்தை வாங்கிண்டு போனான், திருப்பித் தரலை. இப்போ வெத்தலை போட்டா, எழுந்து போய் துப்பிட்டு வர வேண்டியிருக்கு"னார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ராமலிங்கம் இவரோட செப்புக் கிண்ணத்தை வச்சுண்டு என்ன பண்ணினா, நமக்கென்ன ஹானி சொல்லுங்கோ? "மாமா.. அகல்யை பத்திச் சொல்ல ஆரம்பிச்சேள்"னேன். &lt;br /&gt;&lt;br /&gt;"சொல்றேன். மொதல்ல போளியும் பாயசமும் சாப்பிடும் ஓய்"னு மாமா சொன்னதும், கண்ணாலயும் மூக்காலயும் அனுபவிச்சுண்டிருந்த பாயசத்தை ஆச்வாதம் பண்ண ஒரு வாய் எடுத்துண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகா! அம்ருதம் எப்படி இருக்கும்னு நேக்குத் தெரியாது, ஆனா இந்த பாயசத்தோட பாதி ருசி அதுக்கு இருக்கும்னா, தேவாசுர யுத்தம் ஏன் வந்துதுனு புரிஞ்சு போச்சு. அப்படி ஒரு அலாதி ருசி போங்கோ. இதைப் பண்ணின மாமியைக் கட்டிப் புடிச்சு ஒரு முத்தம் கொடுக்கலாம்னா, மாமா ஏதாவது சொல்லுவாரோனு  பேசாம இருந்துட்டேன். போளியையும் பாயசத்தையும் ரசனையே இல்லாம க்ஷணத்துல கபளீகரம் பண்ணிட்டு, தட்டையும் கிண்ணத்தையும் தடால்னு கீழே வச்சுட்டார் மாமா. 'என்னடாது, இந்த மனுஷனுக்கு அனுபவிக்கத் தெரியலையே?'னு நேக்கு தோணித்து.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டு ரசனை பாருங்கோ, அது காதலிக்கிற மாதிரி. நல்ல சாப்பாட்டை பஞ்சேந்த்ரியம், அதான் அஞ்சு புலன்ம்பாளே, மெய் வாய் கண் மூக்கு செவி, எல்லாத்தாலயும் அனுபவிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;த்ருஷ்டாந்தத்துக்கு, காதலியோட லாவண்ய மொகத்தைப் பாக்கறேள்னு வச்சுங்கோ. பொண்கள்ளாம் காதலனோட மொகத்தைப் பாக்கறதா நெனச்சுக்குங்கோ, அசுவத்தாமனுக்கு ஸ்த்ரீபுருஷ பேதம் கெடயாது. காதலியோட உதடு வாவானு ஏங்கறது. ஓடிப் போய் பச்சுனு ஒரு முத்தம் குடுத்துடலாம், தப்பில்லை. ஆனா பாருங்கோ.. மொகத்தைக் கைல ஏந்திண்டு உதட்டைத் தொட்டும் தொடாம கிட்ட கொண்டு போய்ட்டு, வெளையாட்டா கொஞ்சி, அவ முகத்து வாசனையையும் மூச்சு சப்தத்தையும் அனுபவிச்சுண்டே, லேசா உரசி, கொஞ்சம் கொஞ்சமா அந்த முத்தம் உதட்டுல ஆரம்பிச்சு, மூளையில ஏறி, மனசுல பதியறதுக்கு அவகாசம் கொடுத்தேள்னு வச்சுங்கோ, அது முத்தம். அப்படி அனுபவிச்சா தானே காதலிக்கும், நாம அவளை மதிக்கறோம்னு தெரியும் இல்லையோ? முத்தத்துக்கும் அதானே மதிப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாதிரி, நேக்கு அந்த பாயசத்தை சித்த அனுபவிச்சு சாப்டலாமேனு தோணித்து. போளியை சின்ன துண்டா பிச்சு பாயசத்துல தோச்சு ஒரு வாய், போளி தனியா ஒரு வாய், அப்றம் பாயசம் தனியா ஒரு வாய்னு மாத்தி மாத்தி சாப்ட வேண்டாமோ? ஆனா.. இந்த மனுஷன் புர்ர்னு உறிஞ்சு தட்டைக் கீழே வச்சுட்டு என்னையே பாக்கறார். என்ன பண்றது, நானும் பீமபோஜனம் பண்ணிட்டு தட்டையும் கிண்ணத்தையும் கீழே வச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையை விட்ட எடத்திலந்து சொல்ல ஆரம்பிச்சார் மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;இ&lt;/b&gt;ந்த்ரன் நெலமை இப்படி இருக்கச்சே, பூலோகத்துல அகல்யா மனசு சஞ்சலப்படறது. &lt;br /&gt;&lt;br /&gt;தன்னை யாரோ கவனிச்ச மாதிரி அவளுக்குத் தோணறது. இந்த்ரனா இருக்குமோனு நெனக்கறா. பூலோகத்துல இருக்கற அத்தனை பொண்களையும் இந்த்ரன் பாத்துண்டிருப்பான்னு அகல்யா பொதுவா கேட்டிருந்தாலும்.. ராஜேஸ்வரி மாமி.. இதை நான் சொல்லலை, இந்த்ரன் த்ரிலோகத்துப் பொண்களை சதா கண்காணிச்சுண்டு இருக்கறதா புராணத்துல சொல்லியிருக்கு.. லோகத்து புருஷாளுக்குத்தான் க்லேசம்.. இருந்தாலும் இந்த்ரன் தன்னை மட்டும் கவனிச்ச மாதிரி அகல்யாவுக்குத் தோணித்து. ரிஷிபத்னியோல்லியோ? கோவம் வரது.  சாபம் குடுக்க நெனக்கறா. ஆனா க்ஷணத்துல கோவம் மறைஞ்சு போறது. தலை சுத்தறது. கரையோரமா இருந்த துணி துவைக்கற கல் ஒண்ணு மேலே உக்காந்து ஆசுவாசப்படுத்திக்கறா. தான் கௌதமரோட பத்னினு நெனச்சுண்டிருந்த அகல்யாவுக்கு திடீர்னு என்னென்னவோ ஞாபகம் எல்லாம் வரது.  தன்னோட பூர்வீகம் ஞாபகம் வரது. ஸ்ரீராம் அண்ணா சிலாகிக்கற மாதிரி ப்ளேஷ்பேக்கா ஓடறது அவ மனசுல. பூமிக்கு வரதுக்கு முன்னாடி பிரம்மாவோட பேசினதும், இந்த்ரனோட சந்திப்பும்,  அகல்யாவுக்கு ஞாபகம் வரது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-left: .6cm; line-height: 160%"&gt;பிரம்மா சொல்றார், "உன்னைப் போல ஒரு சுந்தர ஸ்வரூபிணியை இதுவரைக்கும் நான் படைக்கலை. இனிமே படைக்கவும் போறதில்லை". அவளைப் படைச்சதா சொன்னதும், பிரம்மா கால்ல விழறா அகல்யா. "நித்யகீர்த்தியோட இரும்மா"னு ஆசீர்வாதம் பண்ணிட்டு, "உன்னை யாருமே புரிஞ்சுக்க முடியாது. அதனாலயும் உனக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு வ்யாதியாலயும் உனக்கு அகல்யானு பேர் வைக்கறேன்"னார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு என்ன வ்யாதி?"னு கேக்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொல்லமாட்டேன், தானா உனக்குத் தெரியும். படைக்கும் போது ஒரு சின்ன தப்பு செஞ்சுட்டேன்.  அதான். ஆனா பயப்படாதே, நீ பூலோகத்துலந்து திரும்பி வரச்சே இந்த வ்யாதியை அங்கேயே விட்டுட்டு வந்துடலாம். இந்த வ்யாதியினால ஒன்னோட கீர்த்தி ஒசரப்போறது"னுடறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"பூலோகமா? எதுக்கு?"ங்கறா அகல்யா.  "இப்பத்தானே என்னைப் படைச்சேள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கௌதமர்னு ஒரு மகரிஷி, மகா தபஸ் பண்ணிண்டிருக்கார். அவரோட தவபலத்தைக் கொஞ்சம் திசை மாத்திவிட உன்னை அவருக்கு தாரமா கொடுத்து, சேவை செய்யச் சொல்லப்போறேன். நீ அவருக்கு நானாவித சிஸ்ருஷையும் பண்ணி, அவர் தவத்தை கட்டுப்படுத்தணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்"னு சமத்தா சொல்றா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"செய்யச் சொல்றதை செய். செய்யக்கூடாதுனு சொல்றதை செய்யாதே"னு புதிர் போடறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன செய்யக்கூடாது?"&lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக்கு வருஷாந்த்ர மகோத்சவம். நீ உன் இஷ்டத்துக்கு தேவலோக உத்சவத்தை அனுபவி. ஆனா, இந்த்ரன் கண்ல மட்டும் படாதே. பட்டாலும் அவனை நீ பாக்காதே. அப்படியே பாத்தாலும் ஒரு வார்த்தை பேசாதே. அப்படியே பேசினாலும் அவனையோ அவன் சொன்னதையோ மனசுல வச்சுக்காதே. அப்படியே மனசுல வச்சுண்டாலும் ஒடனே மறந்துடு"னு சொல்லிட்டு வேகமா போயிடறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;மனசு இருக்கு பாருங்கோ, விசித்ரமா வேலை செய்யும். ராமஜபம் பண்ணச் சொன்னா, மனசு கேக்கறதோ? அப்பத்தான் ஜிலுக்கடி ஜிகினானு பாட்டு ஞாபகம் வரதில்லையோ? வைராக்யத்தைப் பிடிச்சுக்கோன்னா வையாக்ரத்துலனா தடுக்கி விழறது? 'பாக்காதே, பேசாதே, நினைக்காதே'னு பிரம்மா சொன்னதெல்லாம் 'கண்டிப்பா பாத்துடு, பேசிடு, மனசார நினைச்சுக்கோ'னு அர்த்தமாறது அகல்யாவுக்கு. ஒண்ணும் புரியாம, சரி, மறுநாள் பாத்துக்கலாம்னு விட்டுடறா.  &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் ஞானோத்சவ வைபவத்துல அகல்யை இந்த்ரனைப் பாத்ததும் என்ன ஆச்சுனுதான் நமக்குத் தெரியுமே? பாத்த க்ஷணத்துலயே 'என்னோட மனசு ஒனக்கு, ஒன்னோட மனசு எனக்கு'னு ரெண்டு பேரும் நைமேயம் பண்ணிண்டது தெரியுமே? எங்கிட்ட இருக்கறது அவரோட மனசுன்னா? இதுல அவர் சொன்னதை வச்சுக்கவோ மறக்கவோ எனக்கு க்யாதியில்லையே? என் மனசுதான் எங்கிட்டயே இல்லையே?  இன்னும் சித்த நாழி அவர் முகத்தை பாத்துண்டு இருந்திருக்கலாமோ? அங்கே என்னை பொசுக்கிட்டு எங்கே இந்த கிழட்டு பிரம்மனைக் காணோம்?'னு நெறைய பிரச்னச்சின்னம் அதான் கேள்விக்குறி போட்டு நினைச்சுக்கறா. ஞானோத்சவத்துல இந்த்ரனை விட்டு பொசுக்னு கிளம்பினதை நெனச்சு வருத்தப்படறா.&lt;br /&gt;&lt;br /&gt;டாண்ணு பிரம்மா வந்துட்டார். "என்ன அகல்யா, ரெடியா? முன்னாடியே வந்தேன்.. ஒன்னைக் காணோம்னு சரஸ்வதியைப் பாத்து.." &lt;br /&gt;&lt;br /&gt;"விஸ்வகர்மாவைப் பாத்துப் பேசினேன். வர நாழியாயிடுத்து. எதுக்கு என்னைப் பொசுக்கினேள், இந்த்ரன் இருந்த இடத்துலேந்து?"னா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாவும், "இல்லேன்னா ஒன்னை அங்கயே த்வம்சம் பண்ணியிருப்பான் போலத் தோணித்து.. பார்வையா பாக்கறான் பாவி? ம்ம்ம்.. இந்த்ரனை விட்டு வரதுக்குள்ள போறும்னாயிடுத்து.. ஒன்னையே நெனச்சுண்டிருக்கான்.. பக்கம் வராதடா படவானு நன்னா சொல்லிட்டு வந்திருக்கேன்"னார். &lt;br /&gt;&lt;br /&gt;திடீர்னு அகல்யா மொகத்தைத் தூக்கி வச்சுக்கறா. "பூலோகத்துக்குப் போகப் பிடிக்கலை"னு சொல்றா. "இனிமே இந்த்ரனைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, யாருக்கும் சிஸ்ருஷை பண்ண முடியாது. இந்த்ரனும் என்னைக் காதலிக்கறது தெரியும். நீங்க சொல்றபடி கேக்க முடியாது"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாவுக்குத் தூக்கிவாரிப் போடறது. பெத்தவனையே எதிர்த்துப் பேசறாளே? தன்னோட தப்பு அதுக்குள்ள விஸ்வரூபம் எடுத்துடுத்தேனு அவருக்கு விபக்கம்.. கடுப்பு. "இந்தா தடிச்செருக்கி.. இந்தக் காதல் கீதல்னு பேச்சே ப்டாது இந்த இடத்துல. ப்டாதுன்னா ப்டாது"னு ஏகதேசத்துக்கு கோவப்படறார்.  அப்புறம் சாந்தமாகி, "கொழந்தே.. ஏதோ தெரியாம கோபிச்சுண்டேன்.  மனசுல வைச்சுக்காதே"னு சொல்றார். மண்ணெண்ணை தீந்து போற அரிக்கேன் விளக்காட்டம் பிரம்மா மனசு பக்கு பக்குனு அடிச்சுண்டுது. "அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு இந்த்ராணி கூட இருக்காளே?"னு சொல்றார் பிரம்மா. சொல்லும்போதே அவருக்கு தன்னோட வீக் பாயின்ட் புரிஞ்சு போயிடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;"காதலாகப்பட்டது சித்தாந்தம். கல்யாணம் வெறும் சடங்குதானே? அதனால இந்த்ரனோட கல்யாணத்தையும் மதிக்கிறேன், அவரோட காதலையும் மதிக்கிறேன். என்னோட காதலை விட்டுக்குடுக்க முடியாது"னு சொல்லிடறா அகல்யா. "ஒரு வேளை அவர் என்னையும் இந்த்ராணியாக்கலாம்"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;'இது ஏதுடா வம்பா போயிடுத்தே?'னு இருக்கு பிரம்மாவுக்கு. 'இவளை ஏதாவது சொல்லி வழிக்கு கொண்டு வரணுமே'னு நினைக்கறார். "இந்தாம்மா அகல்யா, நீ இந்த்ரனைக் காதலிக்கறதா சொல்றே, அவனுக்காக ஒரு சின்ன த்யாகம் கூட பண்ண மாட்டேங்கறியே?  அவன் என்னடான்னா நேக்கு இந்த்ர பதவி வேண்டாம், அகல்யாதான் வேணுங்கறான். ஒன்னால அவனுக்கு இந்த்ர பதவி போயிடப்போறது போ"னு அளந்து சொல்றார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த்ரனுக்காக என்ன த்யாகம் வேணும்னாலும் செய்வேன். என்ன செய்ய்யணும்?"னு கேக்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மா விட்டுப் பிடிக்கறார், "இல்லம்மா, ஒனக்கு அவன் மேலே ரொம்ப ப்ரீதி வந்துடுத்து. இனிமே நீயாச்சு, இந்த்ர பதவி போன அவனாச்சு".&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த்ர பதவிக்கு ஆபத்தா? ஏன்? யாராலே?"னு வெகுளியா கேக்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"கௌதம ரிஷி இருக்காரே, அவராலதான் ஆபத்து. தவ ஸ்ரேஷ்டர். அவரை இப்படியே தவம் செய்யவிட்டா இந்த்ர பதவிய அவருக்குக் கொடுக்க வேண்டி வரும். நீதான் அவருக்கு எல்லா விதத்துலயும் உதவியா இருந்து அவர் தவத்தைக் கட்டுப்படுத்தணும். இந்த த்யாகத்தை செய்வியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய காதலை விட்டுக்கொடுத்து, இன்னொருத்தரைக் கல்யாணம் செய்யச் சொல்றேளே?"னு அழறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"பூலோக விவாகம் தேவலோகத்துல செல்லாது கொழந்தே.. யாருக்காக கேக்கறேன்? எல்லாம் உன் காதலனுக்காகத் தானே? இந்த்ரன் எப்பவுமே தேவராஜாவா இருக்கணும்னு நீ மனசார நினைக்கறேனு தெரிஞ்சதால தானே கேக்கறேன்? நீ இந்த த்யாகத்தைப் பண்ணலைனா, அவன் இந்த்ர பதவி போனப்புறம் உன் மனசு பாடுபடக் கூடாதேனு தானே கேக்கறேன்?"னு அடுக்கி விடறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களோட காதல் உங்களுக்கு புரியலையா?"னு விசும்பறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மா கொஞ்சம் விட்டுப் பிடிக்கறார். "அழாதே. அழறதுக்காகவா உன்னை இத்தனை அழகா படைச்சேன்? அழாதே. சரிம்மா கொழந்தே. உன்னோட காதல் நேக்குப் புரியறது. அதுவும் மொதல் காதல் வேறே. காதலிக்கறவாளைப் பிரிக்கற கல்நெஞ்சக்காரன் இல்லை நான். வேறே ஏதாவது ஏற்பாடு செஞ்சுக்கறேன்"னு சொல்லிட்டு புறப்படற மாதிரி பாவலா பண்றார். "ஒரு வேளை, என்னால கௌதமரோட தவத்தைக் கட்டுப்படுத்த முடியாம போய் இந்த்ரனுக்கு தேவராஜ அந்தஸ்து போனாலும், நீ இதைச் செய்யாம இருந்துட்டேங்கறதை நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன். இந்த்ரன் கிட்டே மட்டும் நிச்சயமா சொல்ல மாட்டேன். நீ தியாகம் பண்ணாததாலே அவன் பதவி போச்சுனு அவனுக்குத் தெரியவே படாது. வரட்டுமா?"னார்.  கடைசியாச் சொன்னது அகல்யா மனசுல பதியணும்ங்கறதுக்காக கொஞ்ச நாழி நிக்கறார். சண்முகத்தையும் மோகனாவையும் பிரிக்க வைத்தி வில்லத்தனம் கத்துண்டது யார்ட்டேனு நினைக்கறேள்?  &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள அகல்யா கண்ணைத் தொடச்சுண்டு, "சரி, நான் இந்தத் த்யாகம் பண்றேன்"னு சொல்றா. "நீங்க எனக்கொரு வரம் தரணும்.  பூலோகத்துலந்து திரும்பி வந்ததும் என்னையும் இந்த்ரனையும் சேத்து வைக்கணும்".&lt;br /&gt;&lt;br /&gt;"தந்தேன்"னுடறார் பிரம்மா.  வரம் தரதுக்கு முன்னால துளியாணும் யோசிக்குமோ இந்த மூர்த்தி?  என்னிக்கு யோசிச்சு வரம் கொடுத்தார், இன்னைக்கு யோசிக்க?   &lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப சந்தோஷம். நான் இப்பவே பூலோகம் போகத் தயார்"னு சொல்றா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னோட பேரும் கீர்த்தியும் சிரஞ்சீவியா நெலைக்கப் போறது. இந்த த்யாகத்தைப் பண்ணுவேனு தெரியும். ஆனா.."னு இழுக்கறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?"ங்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்தக் காரணம் தொட்டும் நீ பூலோகத்துல இந்த்ரனைப் பாக்கவே கூடாது. அப்படிப் பார்த்தா, அதனால உண்டாகக் கூடிய அபாயத்துனால நீ இங்கே திரும்பி வர அனேக வர்ஷாயுதமாகலாம்"னு சொல்றார் பிரம்மா. வர்ஷாயுதம்னா பத்தாயிரம் வருஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அனேக வர்ஷாயுதமா? என்ன அபாயம்?"னு கேக்கறா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னால அதைச் சொல்ல முடியாது. நீ இந்த்ரனைப் பாத்தாலும் சரி, அவன் உன்னைப் பாத்தாலும் சரி, ஒனக்குத்தான் அபாயம் வரும்னு மட்டும் சொல்ல முடியும்"னுடறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கோ.. பிரம்மா சறுக்கினது இங்கதான். சபைலே நெறைய பேர் இருக்கா.  சேல்ஸ்ல இருக்கறவாளுக்கு நான் சொல்றது புரியும்.  சாய்ராம் அண்ணாவைக் கேளுங்கோ சொல்வார்.  வியாபாரம் முடியற சிக்னல் கிடைச்சப்புறம் வளவளனு ஏதாவது பேசப்படாது. வியாபாரத்தை முடிச்சோமா, ஆர்டரை வாங்கினோமானு இருக்கணும். சேல்ஸ் க்ளோஸ் ஆற டயத்துல எதையாவது சொன்னா ஏடாகூடமாயிடும். டிஸ்கவுன்ட் குடு வாரன்டி குடுனு எக்ஸ்ட்ராவா கேக்க மாட்டாளோ?&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா 'வாங்கோ பூலோகம் போலாம்'னு சொன்னாளோனோ? அந்த இடத்துல டீலை க்ளோஸ் பண்ணாம, அபாயம் கிபாயம்னு எதாவது சொல்லலாமோ பிரம்மக் கிழம்?  அண்வ வாயிருக்கச்சே ரகஸ்யம் ஏதாவது மனசுல நிக்குமோ? பிரம்மாவுக்கு சல்லடை வாய்னு அகல்யாவுக்குப் புரிஞ்சு போச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;"பூலோகத்துல அடியெடுத்து வச்சதும் எனக்கு இந்த்ரன் ஞாபகமே இருக்காதே?  அவரைப் பார்த்தாலும் அடையாளம் தெரியாதே?"னு நைசா சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா இந்த்ரனுக்கு ஞாபகம் இருக்குமே?  அவன் உன் கண்ணை எங்கேந்து பாத்தாலும் உனக்குப் பூர்வீகமெல்லாம் தெரிஞ்சுடுமே? அதனால உன்னைக் கண்ணாலயும் பாக்கக் கூடாது, உன்னை மறந்துடணும்னு அவன் கிட்டே திட்டமா சொல்லியிருக்கேனாக்கும்"னு பெருமையா சொல்றார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ, பதிலுக்கு நீங்க எனக்கு ரெண்டு வரம் தரணும்"னு கேக்கறா. &lt;br /&gt;&lt;br /&gt;"வரமா? என்ன சொல்லு.."னு இழுத்தார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா சித்த நாழி யோசிக்கறாப்ல நடிக்கறா. பிரம்மா ஓட்டை வாய்னு தெரிஞ்சதுமே அவ சப்ஜாடா ப்ளான் போட்டாச்சே? புத்திசாலிப் பொண்ணோல்லியோ? "சரி, நீங்க சொல்ற மாதிரி நான் இந்த்ரனைப் பாக்கலை. ஆனா அவர் என்னைப் பாத்தா நான் என்ன செய்ய முடியும்? ஆம்பளையோட முட்டாள்தனத்துனால பொம்பளைக்கு ஆபத்து வரது நியாயமா படலியே?  அதனால அவர் என்னை முதல்ல பாத்தார்னு வைங்கோ, எனக்கு அபாயம் வரதுக்கு முன்னாடி அவருக்கு விஸ்வகர்மா ஞாபகம் வரணும். ரெண்டாவது, பூலோகத்துல இருக்குற வரைக்கும் எனக்கு எதையாவது அடிக்கடி ஆகாசத்துல எறியத் தோணனும். இதான் நான் கேக்கற வரம்"னா.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வகர்மாவைப் பாக்கணுமா? ஆகாசத்துல எதையாவது எறியணுமா? வரம் கேக்கத் தெரியலியே இவளுக்கு? ரொம்ப சோமபானம் குடிச்சிருப்பாளோ இந்தப் பொண்ணு? பிரம்மாவுக்கு ஒண்ணும் புரியலை. யாராலயும் புரிஞ்சுக்க முடியாதவள் என்கிறதால தானே அவளுக்கு அகல்யானு பேர் வச்சார்? என்னென்னவோ நெனச்சுக்கறார்.  ஆளவிட்டாப் போறும்னு இருக்கு. சரினு தலையாட்டறார். அவர் காரியம் ஆகணும் அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய சமஸ்தான ராஜாக்கள் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானத்துல முடிஞ்ச மாதிரி இருக்கு ரெண்டு பேருக்கும். "பூலோகத்துல கார்த்தால இருக்கணுமாக்கும். தயாரா இரு, வரேன். சொன்னதை மறந்துடாதே"னுட்டு பிரம்மா கிளம்பிப் போயிடறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp கொஞ்ச நாழி கழிச்சு, இந்த்ரன் வந்தான். அகல்யாவைப் பாத்ததும் "என்ன நீ? ஞானோத்சவத்துல பொசுக்னு காணாமப் போயிட்டே? உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. எனக்கு இந்த்ர பதவி வேண்டாம்னு உன் கிட்ட வந்துட்டேன். இனிமே நீ தான் எனக்கு பூலோகம், தேவலோகம், ஸ்வர்க்கம் எல்லாம்"னு சொல்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;'இது ஏது ரெண்டுங்கெட்டானா மண்டூகமா இருக்கே? இதுக்கா இப்படி த்யாகம் பண்ணினோம்?'னு தோணறது அகல்யாவுக்கு. இருந்தாலும் தன் மேலிருந்த வாஞ்சையினாலும் ப்ரேமையினாலும் தானே இந்த்ரன் எல்லாத்தையும் விட்டு ஓடி வந்தான்னும் தோண்றது. ஒடனே இந்த்ரனை ஆலிங்கனம் பண்ணிக்கறா. இந்த்ரனும் அவளை அப்படியே அள்ளிக்கறான். அவளோட ஸ்தனம் ரெண்டும் அவனோட ஹ்ருதயத்தை அழுத்தறது. ஸ்தனமுக்யம் முறிஞ்சுபோயிடற மாதிரி உத்வேகத்தோட அணைச்சுக்கறான். அவ மூச்சோட உஷ்ணம் அவன் முகத்தைப் பொசுக்கறது. அவனும் அதே வேகத்தோட அவ மொகத்துல உதட்டால ஒத்திப் பாக்கறான். சின்ன முத்தம். ம்ருதுசும்பம்னு பேரு. அப்புறம் அவளோட நயனம், நாசினு மாறி மாறி முத்தமா பொழியறான். சும்பானந்தம்னு பேரு. முத்தமே லாகிரி வஸ்துவா மாறி மனுஷாளைக் கெறங்க அடிச்ச நிலை. முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வரனு புலவர் பாடலியோ? அகல்யாவோ இந்த்ரனுக்கு ஒரு படி மேலே போறா. அவனோட கைகளை எடுத்து தன் இடுப்பில கொக்கி மாதிரி போட்டுக்கறா. மேகலை நழுவறது தெரியலை. ஒட்டியாணம் கழள்றது தெரியலை. இடுப்புலேந்து துணி வெலகறது தெரியலை. ரெண்டு பேருக்கும் என்ன நெலைல இருக்கோம்னும் தெரியலை. என்ன பண்றோம்னு புரியலை. புரிஞ்சப்போ ரெண்டு பேரும் கலந்தாச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தரை ஒருத்தர் மனசோட மட்டும் நெனச்சுண்டிருந்தா, அது வெறும் ப்ரேமை..  மானசீகக் காதல்னு சொல்வா. ரெண்டு பேர் உணர்ச்சியும் கலந்தாத்தான் மானசீகக் காதலுக்கு ப்ராணன் வரதும்பா. 'மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா?'னு பாடலியோ புலவர்? இதுல பாருங்கோ, கலந்தப்புறம் என்ன தெரிஞ்சு என்ன ப்ரயோஜனம்? கலந்தப்புறம் ரெண்டே நிலமை தான். ஒண்ணு பரமானந்தமான நெலமை. இல்லேன்னா பரமசங்கடமான நெலமை. இல்லையா? இவா ரெண்டு பேருக்கும் ஒரு பக்கம் பரமானந்தம், இன்னொரு பக்கம் பரமசங்கடம். ஒரு பக்கம், ஆத்ம காதலுக்கான ஆசீர்வாதம் கெடச்சாச்சுனு குதூகலம். இன்னொரு பக்கம், காதலுக்காக ஆத்மாவையே சீதனம் கொடுக்க வேண்டியதாப் போச்சுனு சங்கடம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாவோட பேசினதையெல்லாம் அவளண்டை சொல்றான் இந்த்ரன். அவன் மார்ல தலைய வச்சுண்டே, அவளும் நடந்ததையெல்லாம் சொல்றா. அவளுக்காக அவனும்  அவனுக்காக அவளும் த்யாகம் பண்ண சித்தமாயிருந்ததை சொல்லிப் பாத்து ஏகத்துக்குச் சிரிச்சுக்கறா. &lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா.. வா. எல்லாத்தையும் விட்டு ரெண்டு பேரும் எங்கேயாவது கண்காணாம ஓடிப்போயிடலாம்"னு சொல்றான் இந்த்ரன். இந்தக் காலத்து காதல் ஜோடிக்கெல்லாம் இந்த டயலாக்கைக் கொடுத்தவன், இந்த்ரன் தானாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம். நான் திரும்பி வரப்போறேனே. வந்ததும் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கப் போறோமே?"ங்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ ஆபத்து வரும்னு சொன்னியே?"ங்கறான் இந்த்ரன். அவன் நெஜமாவே பதறதைப் பாத்ததும் அவளுக்குச் சிரிப்பும் ஆசையும் கூடிவந்து அவனைத் தன் மேலே இழுத்துக்கறா. "நீங்க என்னைப் பாக்க வந்தாத்தானே ஆபத்து?"னு கொஞ்சறா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னை பாக்காமே என்னாலே எப்படி இருக்க முடியும்?"னு பதிலுக்குக் கொஞ்சறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கதான் எல்லாப் பொண்களையுமே எப்பவுமே பாத்துண்டு இருக்கறதா சொல்றாளே?"ங்கறா அகல்யா பொய்க் கோபத்தோடே.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா எந்தப் பொண்ணைப் பாத்தாலும் நீயாத்தானே தெரியறது?"னு சிரிக்கறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ? அப்ப என்னைப் பாக்கணும்னு உங்களுக்குத் தோணினா, ஏதாவது ஒரு பொண்ணைப் பாப்பேளோ?"னு இன்னும் கடுமையான பொய்க்கோபத்தோடே கேக்கறா அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. உன்னைத்தான் பாக்கணும். ஆனா, என்ன பண்றதுனு தெரியலையே?"ங்கறான் இந்த்ரன் ஆதங்கத்தோடே. "வேணும்னா, அந்த கௌதமரை வஜ்ராயுதத்தாலே கொன்னுடட்டுமா?"ங்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம்"னு அவ பதறிப் போயிடறா. இந்த்ரன் முகத்தை ரெண்டு கைலேயும் தாங்கிண்டு அவன் கண்ணைத் தீட்சண்யமா பாத்து, "அந்த மாதிரி அசட்டுக் காரியமெல்லாம் செய்யமாட்டேன்னு சொல்லுங்கோ"ங்கறா. அவனும் சரின்னு தலையசைக்கறான். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க என்னைப் பாக்க வரணும்னு எனக்குத் தோணித்துனா, ஒரு பூவை எடுத்து ஆகாசத்துல எறிவேன். அப்ப நீங்க என்னை வந்து பாக்கலாம்"னு சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உன்னைப் பாக்க வந்து, உனக்கு ஏதாவது அபாயம் வந்து, அப்புறம் மன்வந்த்ரக் கணக்குலே ஒன்னைப் பாக்க முடியாமலே போயிடுத்துனா?"னு இந்த்ரன் சந்தேகப்பட்டுக் கேக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்குத்தான் உங்களுக்கு விஸ்வகர்மா ஞாபகம் வரணும்னு வரம் வாங்கியிருக்கேன்"னு சொல்றா அகல்யா, விஷமமா சிரிச்சுண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;"விஸ்வகர்மா என்ன பண்ணப் போறான்?"னு கேக்கறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னோட அண்ணா மேலே ஒரு நம்பிக்கை"னு சொல்லிட்டு இந்த்ரனைக் கீழே தள்ளறா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணும் புரியலையே?"ங்கறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதனாலதான் என் பேர் அகல்யா"னுட்டு அவனுக்குச் செல்லமா ஒரு முத்தம் குடுக்கறா. "பொழுது விடியப் போறது பூலோகத்துல. நான் போகணும்"னு எழுந்துக்கறா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 160%"&gt;&amp;nbsp &amp;nbsp கண்ணைத் தொறந்து பாத்த இந்த்ரன் கோதாவரியையும் காணாம அகல்யாவையும் காணாம தவிச்சுப் போனான். இதென்ன ஆச்சர்யம்! பூலோக நடப்பை எப்படி தன்னால கை வீசினதும் பார்க்க முடியறது? மறுபடியும் காத்துல கையைத் தேச்சான். இப்போ நன்னா தெரியறது. கரையோரமா நின்னுண்டு ஆகாசத்தையே ஏக்கத்தோட பாத்துண்டு இருக்கறவள், தன்னோட அகல்யானு தெரிஞ்சுத் துடிச்சுப் போறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதான் அவனுக்கு அவள் சொன்னது ஞாபகம் வரது. "நீங்க என்னைப் பாக்க வரணும்னு எனக்குத் தோணித்துனா, ஒரு பூவை எடுத்து ஆகாசத்துல எறிவேன். அப்ப நீங்க என்னை வந்து பாக்கலாம்". &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்யணுங்கற ஒரு தீர்மானத்தோட எழுந்துக்கறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நிலைக்கு வந்த அகல்யா, ஆகாசத்துல பூ விட்டெறிஞ்ச எடத்தையே பாத்துண்டிருந்தா. இந்த்ரன் தன்னை இன்னும் ஞாபகம் வச்சுண்டிருப்பானா, மறந்து போயிருப்பானா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மா சொன்ன அபாயம் என்னன்னு இன்னும் புரியலை அகல்யாவுக்கு. ஆனா தனக்கு வந்த வ்யாதி மட்டும் என்னன்னு அவளுக்குப் புரிஞ்சு போச்சு. லாலசம். &lt;br /&gt;&lt;br /&gt;லாலசம் அபிகாமம் இதுக்கெல்லாம் பசலைனு அர்த்தம். நமக்கு பசலையைக் கொடுத்துட்டுப் போனது அகல்யை. வையறதானாலும் வாழ்த்தறதானாலும் நாம அகல்யாவைத்தான் வையணும், வாழ்த்தணும். அகல்யாவுக்கு முன்னாலே பூலோகத்துலே ஆத்மார்த்தமான காதலும் பிரிவும் சோகமும் சேர்ப்பும் கிடையாது. 'அண்ணலும் நோக்கினான்' 'செம்புலப்பெயநீர்' எல்லாம் அவளாலே கிடைச்சது. காதல், காதல் சம்பந்தப்பட்ட உபத்திரவம் எல்லாமே நமக்கு அகல்யா கொடுத்தது. தேவர்களுக்கு இந்த வியாதி கிடையாது. 'அகல்யா'ங்கற பதத்துக்கு 'காதல் நோய்'னும் ஒரு அர்த்தம் உண்டாக்கும். ஆத்மார்த்தமா க்ஷணம் கூடப் பிரிஞ்சு இருக்க முடியாம காதலிக்கறவாளை, அப்படிப் பிரிஞ்சு இருக்கும் போது உண்டாற அதீத மனக்கஷ்டம் இருக்கு பாருங்கோ, அதுக்குத்தான் பசலைம்பா. அதைப் பத்தி மகா பண்டிதாள்ளாம் பாட்டு எழுதித் தள்ளியிருக்கா. சபைல கூடப் பாருங்கோ.  காதலைப் பத்தி அவாவா விதம்விதமா எழுதறா. இன்னோரு புலவர் மழைமுத்தம்னு பாடினதை ரொம்ப சிலாகிச்சு அப்பாதுரைனு ஒரு ஆப்தர், நேக்கு அனுப்பிச்சார்.  படிச்சுப் பாத்து அசந்துட்டேன்.  யாரிந்தப் புலவர்னு பாத்தா.. நம்ம ஹேமாவாக்கும். இந்தக் காதல் பசலை பாட்டு எழுதுறதுலே அவர் ரொம்ப பிரசித்தம்னு சொல்லிக்கறாளே?&lt;br /&gt;&lt;br /&gt;சரி, கதைக்கு வந்துடறேன். சித்தே இருங்கோ. மோகன்ஜியாட்டம் அப்பப்போ காணாமப் போனாலும், பத்மநாபனாட்டம் திரும்பி வந்துடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;பூ&lt;/b&gt;ர்வீகம் எல்லாம் ஞாபகம் வந்து என்னென்னமோ யோசிச்சுண்டிருக்கா அகல்யா. வியாமோகம். மனக்கொழப்பம் தீர்ந்தபாடில்லை. ஆச்சு, ஆஸ்ரமத்துக்குப் போயாகணும். அங்கே தன்னை ஜடமாட்டம் பாவிக்கற கௌதமருக்கு சகல சிஸ்ருஷையும் செய்யணுமே? கௌதமரை அகல்யா தப்பாவே நெனைக்கலை. அவர் தபஸ்வி. தபஸ்தான் முக்யம்னு நெனைக்கறவர். அதுதான் ப்ரதான கர்மம்னு நினைக்கறவர். அவருக்கு அகல்யா ஒரு சேவகி, அவ்ளோதான். அதனால தன்னை ஜடமா பாவிச்சாலும் அகல்யா அதைப் பெரிசு பண்ணலை.&lt;br /&gt;&lt;br /&gt;'இதுநாள் வரைக்கும் தோணாம இப்ப ஜடமாட்டம் நடத்தறதா தோணுவானேன்?'னு யோசிச்சுண்டே கரைலேந்து நடந்து வரா. மத்த ரிஷிபத்னியெல்லாம் இன்னும் ஜலத்துலயே இருக்கா. ஆஸ்ரம திக்குலே அகல்யா மட்டும் தனியா கைல ஒரு கொடத்தோட நடந்து வரா.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தள்ளி எதிர்க்க யாரோ நிக்கறாப்ல தெரியறதே, யாருன்னு பாக்கறா. பாத்தா அவளுக்கு அதிந்து போயிடறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அத்யந்த சுந்தரன் சிரிச்சுண்டே நின்னுண்டிருக்கான்.  அவளைப் பாத்து, "அகல்யா?  என்னைத் தெரியலையா? நான்தான் இந்த்ரன்" அப்டீங்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடுக்கிட்டுப் போய் கைல இருந்த கொடத்தைக் கீழே போட்டுடறா அகல்யா. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல. &lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_20.html"&gt;►►&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-3656048430322963421?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/3656048430322963421/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=3656048430322963421&amp;isPopup=true' title='18 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/3656048430322963421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/3656048430322963421'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_18.html' title='ஸ்மரண யாத்ரை'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8160069020852263881</id><published>2011-12-16T09:41:00.008-06:00</published><updated>2011-12-18T19:58:42.264-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசுவத்தாமன் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெடுங்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபரீதக் கதைகள்'/><title type='text'>ஸ்மரண யாத்ரை</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color: rgb(51,51,183); font-size:120%;"&gt;&lt;strong&gt; (பெரிய) சிறுகதை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 160%"&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;ஜ&lt;/b&gt;கதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும்,  முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா   எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;மரண யாத்ரை தெரியும். அதான் பாடறாளே, நாலு பேருக்கு நன்றினு. சினிமாப் பாட்டு பாடினா எல்லாருக்கும் ஞானம் வந்துடறது. ஸ்மரண யாத்ரை தெரியுமோ? ஒரு எடத்துக்குப் போகணும்னு நெனக்கறோம்.. பஸ்சு காரு ப்ளேனுனு இல்லாம, டக்குனு நெனச்ச ஒடனே போக முடியறதுனு வைங்கோ, அதான் ஸ்மரண யாத்ரை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் நடக்கற காரியந்தான் கீதா மாமி. நடந்துருக்கே? சொல்றேன், சித்த இருங்கோ. ஒரு சிட்டிகை....நல்ல பட்டணம் பொடில்லாம் இப்ப கெடைக்கறதே இல்லை...நன்னா விர்ர்ர்னு ஏர்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ராஸ்ல மழை விடாது போலிருக்கே? என்னோட ஸ்கூடர் பாருங்கோ, பாதி நாள் ஓடாது. இன்னைக்கு அது சத்யமா ஓடாதுனு ஸ்டார்ட் பண்ணினா, பட்டுனு ஸ்டார்டாயிடுத்து. மழை என்னடானா ப்ரளய சம்ஸ்காரம் பண்றாப்ல கொட்டறது, இன்னைக்குப் பாத்து ஸ்டார்ட் ஆறதே சனியன்னு தர்ஜம் பண்ணிண்டே ஆப் பண்ணிட்டு, கொடை எடுத்துண்டு நடராஜா சர்வீஸ்ல ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து நின்னா.. ஸத்யவ்ரதனோட ஓடத்துக்கு காத்துண்டுருக்கற மாதிரி, அங்க அப்படி ஒரு ஜனசந்தம். எனக்கானா இங்க வந்து சம்வாதம் பண்ணனுமே, இப்படி விளம்பிதமாயிண்டுருக்கேனு ஆயாசம். ஸ்மரண யாத்ரை பண்ண முடிஞ்சுதுனு வைங்கோ, இங்கே வரணும்னு நெனச்ச க்ஷணத்துலயே வந்திருக்க மாட்டேனோ?&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா அசுவத்தாமா, இப்படி இல்லாததக் கொண்டா கல்லாததப் பாடுனு சொல்றாப்ல இருக்கேங்கறா, நம்ம மீனா மாமி. சரி மாமா, உங்க மீனா மாமி. நீங்களே வச்சுங்கோ, யார் வேண்டாம்னா? ஸ்மரண யாத்ரை பண்ண சாத்யப்படுமானு கேக்ககறா மாமி. அதுக்கு நான் சொல்றேன். ஸ்மரண யாத்ரை சாத்யம். சாத்யம். சாத்யம். இது சத்யம். சத்யம். சத்யம். &lt;br /&gt;&lt;br /&gt;சயன்ஸ் பிக்சன்னதும் சாத்யமெல்லாம் மறந்துட்டு வாயைப் பிளந்துண்டு படிக்கறா பாக்கறா.  சயன்ஸ் பிக்சன் என்ன சுண்டைக்காய்? பாலக்ருஷ்ணனோட வாய்க்குள்ளே பூலோகம் மேலோகம் எல்லாம் தெரிஞ்சுதுனா அது கப்ஸாங்கறோம். அதையே இன்டர் ஸ்டெல்லர் விஷன்னு யாராவது சொன்னா ஆகா ஓகோங்கறோம். பகுத்தறிவிலே பரவசமாகிச் செலபேருக்கு ந்ருஜலமே வந்துடறது.  சரிண்ணா, கதைக்கு வந்துடறேன்.  ஸ்ரீராம் இருக்கார் பாருங்கோ, விடாம தார்க்குச்சி போட்டுண்டே இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெனச்ச மாத்ரத்துல என்னண்ணா, நெனச்ச ரூபத்துல கூடப் ப்ரயாணம் பண்ணலாம். எல்லாத்துக்கும் நம்ம இதிகாசத்துல சாக்ஷி இருக்கு. நிதர்சனமா.. இன்ன முறைலே இன்ன விதமா எப்படி பண்ணனும்னு சிஷ்டாத்வமா சொல்லியும் வச்சுருக்கா. கிருஷ்ணர் முருகர் எல்லாம் டக்கு டக்குனு இங்கயும் அங்கயும் போனார், தர்சனம் கொடுத்தார்னெல்லாம் படிச்சிருக்கோமே. கேட்டிருக்கோமே. எல்லாம் இப்படியாகப்பட்ட பயணம் தான். சந்தேகமே வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகவானை விடுங்கோ. நேத்தி பேப்பர்ல பாத்தேளா? போன மாசம் நடந்த விருத்தாசலம் கோவில் திருட்டுப் பத்தி தகவல் போட்டிருக்காளே? கோவில் குருக்கள் தான் எல்லாத்தையும் திருடினார்னு குத்தம் சாத்தி அவரை ஜெயில்ல போட்டுட்டாளே? இவர் என்னடானா, 'திருட்டு நடந்த அன்னைக்கு நான் ஊர்லயே இல்லை, இது எப்படி சாத்யம்?'னு கதறிக் கதறிக் கேக்கறார்.  கதறினாலும், அவரைக் கண்ணால பாத்ததா எத்தனை பேர் சத்யம் பண்ணியிருக்கா பாருங்கோ! எனக்கென்னவோ குருக்கள் அன்னிக்கு ஊர்ல இல்லைனு சொல்றது வாஸ்தவமாப் படறது. வேற யாரோ.. குருக்கள் ரூபத்துல வந்து, அவாளே திருடிட்டு ஸ்மரண யாத்ரை பண்ணி காணாம போயிருக்காங்கறேன். குருக்கள் பாவம், மாட்டிண்டிருக்கார். குருக்கள் தானே, பொய் சொல்லுவார்னு தோணிடுத்து எல்லாருக்கும்.  என்ன பண்றது? நெலமை... குருக்கள், மடத்துக்காராளை எல்லாம் ஜெயில்ல போடறதை கொஞ்ச நாள் பாக்காம இருந்தோம்.. இப்போ மறுபடி அடியைப் பிடிரா பாரதபட்டானு கிளம்பிடுத்தோனு தோண்றது.. &lt;br /&gt;&lt;br /&gt;நான் உளறலை மாமி. புத்தியோட, வித்யிதமாத்தான் பேசறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போன மாசம் என்னோட மாமனார் தவறிப் போயிட்டார்னு நானும் பார்யாளும்  போயிருந்தோம்.  மாமனாரோட மரண யாத்ரைக்கும் நான் சொல்ற ஸ்மரண யாத்ரைக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதெங்கோ. நானே சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட மாமனார் ஊர், திருநெல்வேலி பக்கத்துல க்ருஷ்ணாபுரம். மாமனார் ஒண்டிக் கட்டை. வயசாயிடுத்து. காரியம் எல்லாம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோமா?  &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து ஆத்துக்காரர், க்ருஷ்ணாபுரம் கோவில்ல அநித்ய குருக்கள் வேலை பாக்கறார். இப்பத்தான் கோவிலை எல்லாம் கவர்மெண்டு எடுத்துண்டு அழிச்சாட்டியம் பண்றாளே, என்ன பண்றது சொல்லுங்கோ? அநித்யமா இருந்தாலும் ஏதோ பகவத் கைங்கர்யம் பண்ணிண்டு, புவாவுக்கு வேலைன்னு ஒண்ணு இருக்கேன்னு சாத்வீகமா இருக்கா பாவம். கிளம்பறதுக்கு மொத நாளன்னிக்கு அவாத்துல சாப்பிடக் கூப்பிட்டிருந்தாளேனு போனோம். &lt;br /&gt;&lt;br /&gt;அவா குடும்பத்லே அண்ணா தம்பி எல்லாருமே குருக்கள் தானாம்.  ஒண்ணு ரெண்டு போட்டோ காட்டிட்டு குடும்பக் கதை பேசி முடிக்கறதுக்குள்ளே சமையல் ரெடி. தளிகை தேவாம்ருதம். சூயன் அந்த ஊர்ல பண்ணி சாப்டாத்தான் நேக்குத் திருப்தி. புருஷாள் ரெண்டு பேரும் சாப்ட உக்காந்திருக்கோம். நான் ஏதோ அவசரமா சாதத்தைப் பிசஞ்சுண்டு, பிட்ளைக்காக காத்துண்டிருக்கேன். என்னோட பார்யை அழறாப்ல கேக்கறது. என்னனு அவளைப் பார்த்தேன். அவ என்னடான்னா அந்தப் பக்கத்தாத்து மாமாவைப்  பாத்துண்டு, பரிமாறாம நிக்கறா. நானும் அவரைப் பாத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டுராமர் அநேகம் பேர் இருக்கா. செலபேர் போஜனம் பண்றது, பாக்கறதுக்கு விசித்ரமாவோ நூதனமாவோ இருக்கும். ஒத்தொத்தர் போஜனம் பண்றத பாத்தா, சம்க்ஷோபமா.. அதி பயங்கரமா இருக்கும். இன்னும் செலபேர் பாத்தேள்னா, என்னமோ எல்ஐசி கட்டின எஞ்சினியர் மாதிரி வித்தை எல்லாம் காட்டுவா.&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கோ, என்னோட மாமனார் இப்படித்தான். தட்டு சாதம், அதுக்கு மேலே பருப்புப்பொடி, நெய், அதுக்கு மேலே சொட்டு நல்லெண்ணெய் குத்திண்டு, அப்படியே பெசஞ்சு ஒரு கொளம் கட்டுவார். நாலு பக்கமும் நன்னா வரப்பு மாதிரி கட்டி, பெசஞ்ச சாதம் உள்பக்கம் சரிஞ்சுண்டு வரும். அப்புறம் தெளிவா ரசம் நாலு கரண்டி எடுத்து அந்த குளத்துல விடுவார். குளம்னா அப்படியே ரசத் தடாகம் மாதிரி இருக்கும். கொத்தமல்லி தக்காளித்துண்டு எல்லாம் குளத்துல அல்லி மாதிரி ரசத்துல மொதந்துண்டு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பாளத்துல சிவில் எஞ்சினியர் வேலை பாத்துண்டிருக்கார் பக்கத்தாத்து மாமா. அதைப் பாத்ததும் என் ப்ரியைக்கு அப்பா ஞாபகம் வந்து அழ ஆரம்பிச்சுட்டா. மொள்ள அடங்கி, ஒரு முகூர்த்தத்துல எல்லாரும் சாப்டு முடிச்சோம். தாம்பூலம் போடலாம்னு திண்ணைக்கு வந்தோம். மாமியும் என்னோட மிஸசும் வந்து உக்காந்துண்டா. மாமி ராமாயண புஸ்தகத்தை எடுத்துண்டு வந்து படிக்க ஆரம்பிச்சா. அகல்யை விமோசனம். "படிக்கறேன், கேக்கறேளா?"னா. "பேஷா"னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமி ராமாயணம் படிக்க ஆரம்பிச்சார். கொஞ்ச நாழி கழிச்சு மாமா, "வெத்தலை போடறேளாவே?"னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நேக்கு பழக்கமில்லை"னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கால் பேகட் வாசனை சீவலை எடுத்து ஒண்ணொண்ணா வாயில போட்டுண்டார் மாமா. மூணு வெத்தலை எடுத்து, காம்பைக் கிள்ளிட்டு தொடையில அப்டி ஒத்தி எடுத்துட்டு, சுண்ணாம்பைத் தடவி.. அப்டி இப்டி மடிச்சு.. ஒண்ணொண்ணா வாயில போட்டுண்டார். வெத்தலைச் சாறு, சர்ர்னு தெளிக்கறது. அதை அப்படியே வாயைத் திறந்தபடி உறிஞ்சுண்டார். மாமிக்குக் கோபம் வந்துடுத்து. "கோதண்டராமன் சரிதம் படிக்கறச்சே இப்படி கட்டபொம்மன் பஸ் மாதிரி சத்தம் போடறேளே. உள்ள போலாம் வா"னு என் பெண்டாட்டியை அழைச்சுண்டு உள்ளே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவா போனப்புறம், மாமா சிரிச்சுண்டார். "அப்படி நடக்கலை"னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யை சாபம், ஓய். அப்படி நடக்கலை"னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யை விவகாரம் பொய்ங்கறேளா?"னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓய், அதைச் சொல்லலை. அகல்யை விவகாரம் நடந்தது வாஸ்தவம். ஆனா வெவரம் எல்லாம் மாத்திட்டா".&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படின்னா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்றேன் கேளும்"னுட்டு என்னமோ பகுஜனப் பிரசங்கம் பண்ற மாதிரி, த்ருஷ்டாந்தமா நானா பக்கமும் பாத்துட்டு, மாமா சொல்ல ஆரம்பிச்சார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;தே&lt;/b&gt;வலோகத்துல அன்னிக்கு வருஷாந்த்ர மகோத்சவம் ஆரம்பம். தேவசபை முழுக்க ஜகஜ்ஜோதியா அலங்காரம் பண்ணியிருக்கா. எட்டு திக்குலயும் பாரிஜாத சுகந்தம். முப்பத்து முக்கோடில ரெண்டு பேரைத் தவிர மத்த தேவாளும், மும்மூர்த்திகளும், தேவாசுர குருக்களும், ப்ரத்யேகமா கூப்பிட்ட அசுர கந்தர்வ ராஜாக்களும், சபைல கூடியிருக்கா. பாட்டும் நாட்யமும் களை கட்டிண்டிருக்கு. இந்த்ராணியும், தேவேந்த்ரனும் வந்து மகோத்சவத்தை ஆரம்பிச்சு வைக்கறதுக்காக தேவலோகமே காத்துண்டிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாவுக்கு நாலு முகமோல்லியோ, தலையைத் திருப்பாமலேயே நாலு பக்கமும் சைட் அடிச்சுண்டிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர் எதிர்த்தாப்ல, மன்மதன் ஒக்காந்துண்டிருக்கான். பக்கத்துல ரதி. மல்கோவா மாம்பழம் மாதிரியான அவளோட மார் ரெண்டும் எப்படி அந்தரத்துல நிக்கறது, இடுப்பையே காணோமேன்னுட்டு, எல்லா ஆம்பள தேவாளும் நாக்கைத் தொங்கப் போட்டுண்டு பாக்கறது தெரிஞ்சதும், வேணும்னே ரதியோட தோளைச் சுத்திக் கையைப் போட்டு, மார்ல மார் அப்படி பக்கவாட்ல உரசற மாதிரி, பக்கத்துல இழுத்துக்கறான். பொறாமைல மத்த தேவாள்ளாம் பஸ்பமாறா.&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லாரும் என்னோட சந்ததி, என்னோட கொழந்தேள், ஆனாலும் இப்படி ஒருத்தர ஒருத்தர் சைட் அடிக்கறேளே?'னு நினைச்சுண்டே இடது பக்கம் பாக்கறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க, விஷ்ணு மகாலக்ஷ்மியோட ஒக்காந்துண்டிருக்கார். தேமேனு சாதுவா ஒக்காந்துண்டிருக்கார்னு நினைக்கறச்சேயே பத்தடி தள்ளி ராமரா சீதை பக்கத்துல ஒக்காந்திண்டிருக்கார். கொஞ்சம் தள்ளி பாமா ருக்மணியோட ஒக்காந்துண்டிருக்கார். இன்னும் சித்த தள்ளி ராதையோட தோள்ல தலையை சாச்சுண்டு இருக்கார். மகாப் பொல்லாதா பத்தடி தள்ளி பாலக்ருஷ்ணரா கோபிகைகளோட சில்மிஷம் பண்ணிண்டிருக்கார். கொடுத்து வச்சவர்னு நினைச்சுண்டு வலது பக்கம் பாக்கறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;யாருடானு பாத்தா நீலகண்டர். மகாதேவன். சிவபெருமான். உம்முனு இருக்கார், பாவம். பராசக்தி மகாதேவி அவரைக் கட்டுப்படுத்தி வச்சிருக்கா. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பிப் பாத்து சைட் அடிச்சா காளி ரூபம் எடுத்துண்டு பரமசிவனை நடுங்க வச்சு, பெட்டிப் பாம்பா அடக்கி வச்சிருக்கா. கங்கையைக் கூட சைட் அடிக்க முடியலை, தலைக்கு மேலேனா ஒக்காந்திருக்கா? நெத்தியில கண் இருந்து என்ன ப்ரயோசனம், தலைலனா இருக்கணும்? பிரம்மா மனசுக்குள்ள சிரிச்சுண்டு தலையைத் திருப்பாமலே பின்பக்கம் பாக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க என்னடான்னா ஞானோத்சவத்துக்கான ப்ரயத்னங்கள் நடந்துண்டிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர்ல சயன்ஸ் எக்சிபிஷன், கண்காட்சிம்பாளே, அதேதான். வந்திருக்கிற தேவ விஞ்ஞானியெல்லாம் அவா அவா கண்டுபிடிச்சதை மத்தவாளுக்கு காண்பிச்சுண்டிருக்கா. ஒரு பக்கம் சுக்ராச்சாரியார் டீம்லந்து விசேஷ ஆயுதங்கள். இன்னொரு பக்கம் ப்ரஹஸ்பதி பாடசாலைலேந்து அஸ்த்ரம், ஆதர்சம், விமானம்னு என்னென்னமோ எடுத்துப் பிரிச்சுப் போட்டிருக்கா. எல்லாரையும் தாண்டி விஸ்வகர்மா ஏகதேசத்துக்கு கண்டுபிடிப்புகளை எடுத்து வச்சுண்டுருக்கார். என்னவா இருக்கும்னு பாக்கறச்சேயே கூட்டத்துல உற்சாக சப்தம் கேக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;'நாலு முகம் இருந்து என்ன புண்யம், எதுக்காக கோஷம் போடறா, கண்ணுக்கு ஒண்ணும் தெரியலையே'னு பிரம்மா நினைக்கறச்சே, ஆகாச மார்க்கமா பிளிறிண்டே இறங்கறது ஐராவதம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொதல்ல இந்த்ரன் இறங்கறான். தேவராஜாவோன்னோ, கம்பீரம்னா அப்படி ஒரு கம்பீரம். இந்த்ராணியை இடுப்பைப் பிடிச்சு இறக்கி விடறச்சே அவ உடுத்திண்டிருந்த பட்டு சரிஞ்சு அவளோட காலும் தொடையும் தெரியறது. எல்லாரும் 'ஙே'னு பாக்கறா. அவளோ கவலைப்படாம அலட்சியமா, இந்த்ரனுக்கேத்த கம்பீரத்தோட நடந்து வரா. 'ஜே' 'ஜே'னு எல்லாரும் கூச்சல் போடறா. எல்லாரையும் பாத்து இந்த்ரனும் ராணியும் கையசைக்கறா. தேவசபைல கரகோஷம் பிளக்கறது. சில தேவாள்ளாம் விசிலடிக்கறா. தேவராஜனைப் பாத்த சந்தோஷம். எல்லாரையும் சாந்தமா இருக்கும்படி சைகை காண்பிச்சுட்டு, இந்த்ரன் தன்னோட வஜ்ராயுதத்தை எடுத்து அப்படி ஆகாசத்துல ஒசத்தினதும் அதுலந்து வர்ணஜாலமா தீப்பொறி பறக்கறது. உத்சவம் ஆரம்பமாயாச்சு. கோலாகலம்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்மூர்த்திகளுக்கும் ஒரு 'ஹலோ' போட்டுட்டு, ஞானோத்சவ ப்ரதேசத்துக்குப் போறான் இந்த்ரன். மத்த தேவ கூட்டம் வர்றதுக்கு முன்னாடி, இந்த்ரனுக்கு மட்டும் ப்ரைவேட் ஷோ உண்டு எப்பவும். ஒவ்வொரு ஐட்டமா பாத்துண்டு வரான். ப்ரகஸ்பதி பாடசாலைல ஒருத்தன் ஒரு சின்ன பெட்டியை வச்சுண்டு இருக்கான். "என்ன இது?"ங்கறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"திவ்யாதர்சம்"ங்கறான் அந்தப் பெட்டிய காமிச்சவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"புரியும்படியா சொல்லும் ஓய்"னான் இந்த்ரன். திருநெல்வேலியோன்னோ, எல்லாத்துக்கும் ஒரு ஓய் போட்டுடுவார் மாமா. இந்த்ரன் ஓய் போட்டானா தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;"தேவராஜா, உங்க கையைக் காட்டுங்கோ"னான் பெட்டிக்காரன். இந்த்ரன் கையைக் காட்டினதும் அந்தப் பெட்டியத் தொறந்து, இந்த்ரன் ஆள்காட்டி வெரல்லே மோதிரம் மாதிரி ஒண்ணைப் போட்டு நன்னா நாலு வாட்டி தேச்சான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே, நீங்க இப்படி விரலைக் காத்துல கிழிச்சேள்னா ஒடனே கண்ணுக்குத் தெரியாததெல்லாம் தெரியும். இது உங்களுக்காகப் பண்ணினது"னுட்டு இந்த்ரன் கால்ல சாஷ்டாங்கமா விழறான் பெட்டிக்காரன். இந்த்ரனுக்கு இதுல நம்பிக்கையில்லை. இருந்தாலும் படிச்சவாள் ஸ்னேகம் வேணும்னுட்டு பேசாம சிரிச்சுண்டே நகந்து, விஸ்வகர்மாவாண்ட போறான். விஸ்வகர்மா இந்த்ரனோட பேவரட்டாக்கும். போன வருஷம் வஜ்ராயுதம் பண்ணிக் கொடுத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த வருஷம் என்ன விசேஷம்?"னு கேக்கறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு கையையும் தூக்கி ஒரு பெரிய கும்பிடு போட்ட விஸ்வகர்மா, "தோ பாருங்கோ தேவராஜா"னான்.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வகர்மா காமிச்ச எடத்தைப் பாத்தான் இந்த்ரன். நாலஞ்சு செங்கலை சேத்து வச்ச ஹோம குண்டம் மாதிரி சதுரமா ஒண்ணு இருக்கு. நம்ம ஊர் கோவில் சிலதுல த்வஜஸ்தம்பம் பக்கத்துல இதை மாதிரி பாக்கலாம். "என்ன இது?"னு வழக்கமா கேக்கறான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வகர்மா அதைப் பத்தி விஸ்தாரமா சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் பொறுமையா கேட்ட இந்த்ரனுக்கு நம்பிக்கை வரலை. 'சரிதான் இந்த வருஷம் ஞானோத்வசத்ல எல்லாமே ரொம்ப அபூர்வமா இருக்கும் போலிருக்கே?'னு வெளிப்படையா சொல்லாம, விஸ்வகர்மாவை 'ஆகா ஒகோ'னு முகஸ்துதி பண்றான். யாரையுமே பகைச்சுக்கப் படாதில்லையா? அதுலயும் புத்திமான் த்வேஷம் நிந்திதமாச்சே?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் பாத்துட்டு வெளில வந்த இந்த்ரன், "இனிமே பொது தேவாளுக்கு உள்ளே வர அனுஜ்யை..பர்மிஷன் க்ரேன்டட்"னு கூட வந்த சாதாரண தேவாள்ட்ட சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான். கொஞ்சம் தள்ளி நின்னுண்டிருந்த பிரம்மாவைப் பாத்து பிரமிச்சுப் போறான். என்னிக்குமில்லாதபடி அப்படி ஒரு தேஜஸ் பிரம்மாகிட்ட ஜொலிக்கறது. என்ன இப்படி ஒரு தேஜஸ்னு பாத்தப்போ, பிரம்மா பக்கத்துல நின்னுண்டிருந்த கன்னிகையைக் கவனிக்கறான் இந்த்ரன். &lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் பாத்ததும் அவனுக்கு கை கால் உடம்பெல்லாம் வஜ்ராயுதம் பட்ட மாதிரி பொறி பறக்கறது. தேவலோகமே காலடிலேந்து கழண்டு விழுந்த மாதிரி இருக்கு. அப்படி ஒரு அழகியை அவன் பாத்ததே இல்லை. பிரம்மாவுக்கு இத்தனை ரசனையுண்டா? கிழட்டு பிராமணனால இப்படி எல்லாம் கூட படைக்க முடியறதா? அப்படி இப்படினு மனசுல நினைச்சு அவளை மறுபடியும் பாத்துத் திக்குமுக்காடிப் போயிடறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளால தான் பிரம்மாவே ஜொலிக்கறார்னு அவனுக்கு இப்போ புரிஞ்சு போச்சு. அவளோட சௌந்தர்யம் அப்படி ப்ரகாசிச்சுண்டு, பக்கத்துல இருக்கறவா எல்லாரையுமே அழகா காட்டிண்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஸ்த்ரீயை த்ரிலோகத்துலயும் பாத்ததில்லையேனு அசந்து போறான் இந்த்ரன். ரதி, த்லோத்தமை, ஊர்வசி, மேனகை எல்லாரோட அழகையும் ஒண்ணாக்கி, அதுக்கு மேலே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதியோட லாலித்யத்தைக் கலந்து, மும்மூர்த்திகளோட தேஜசைக் கலந்து, அதுக்கு மேலே அது எல்லாத்தையும் லக்ஷம் மடங்கு பெருக்கினா கூட இத்தனை ரூப லாவண்யம் வருமாங்கறது சந்தேகம்னு அவனுக்குத் தோணறது.&lt;br /&gt;&lt;br /&gt;'யாரிந்த சுந்தரி சௌந்தரி நிரந்தரி?'னு நினைச்சுண்டே பிரம்மாவைப் பாத்து வேகமா நடக்கறான். இவன் இப்படி நினைச்சுண்டிருக்கச்சே, அவளும் இந்த்ரனைப் பாத்துட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்த க்ஷணத்துலயே மனசைப் பறிகொடுத்துடறா. எப்பேர்க்கொத்த அழகன் இவன்! ஐராவதத்துக்குப் பக்கத்துல நின்னா, இவன் தோள் எது ஐராவதம் எதுன்னு புரியாது போல இருக்கே! என்னமா நடந்து வரான்?! சிம்ஹம் மாதிரி அவன் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் 'என்னை எடுத்துக்கோ'னு சொல்லத் தோணறதே! இவனைப் பாத்தப்புறமும்  இன்னும் எதுக்கு எல்லாரும் மும்மூர்த்திகளக் கும்பிட்டுண்டு இருக்கா? பார்வைல எத்தனை தீட்சண்யம்?! 'என் மனசை அப்படியே இழுத்துண்டு போறதே, யாராவது தடுத்து நிறுத்துங்கோளேன்'னு படபடத்துப் போறா. ஆனாலும் உள்ளுக்குள்ள சந்தோஷமா இருக்கு. த்விகுண லீலாவா நின்னுண்டிருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மா சொன்ன விஷயம் ஒண்ணு சட்னு தேவையில்லாம அவளுக்கு ஞாபகம் வரது. இருந்தாலும் இந்த்ரனையே பாத்துண்டிருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள இந்த்ரன் பக்கத்துல வந்துட்டான். கண் பிரம்மாவைப் பாத்தாலும், அவன் மனசு மட்டும் அவளையே சுத்திண்டிருக்கு. அவளுக்கும் அவன் தன்னை மானசீகமா பாத்துண்டிருக்கான்னு தெரிஞ்சுடறது. பேனோவிஷன் கேமராங்கறாளே அது மாதிரி அவள் கண் ரெண்டும் அவன் முகத்தை படம் புடிச்சு ப்ரேம் போட்டு மனசுல மாட்டி வச்சுடறது. அவளோட நாடி நரம்பு ஹ்ருதயம் எல்லாம் 'இந்த்ரா இந்த்ரா'னு அடிச்சுக்கறது. பக்கத்துல இருந்தாலும் தொட முடியலையேன்னு நினைச்சுக்கறா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரன் பிரம்மாகிட்டே ஏதோ பேசிண்டிருக்கறதைப் பாத்துண்டு இருக்கா. திடீர்னு ரெண்டு பேரும் அவ கிட்ட வந்துடறா. இந்த்ரன் அவளைப் பாத்து முகமெல்லாம ப்ரகாசமா புன்னகை பண்றான். அவளும் பதிலுக்கு புன்னகைக்கறா. சாதாரண புன்னகையா? கமலஹாசம்னா! இந்த்ரன் சொக்கிப் போயிடறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மா அவள் கிட்டே சொல்றார். "அகல்யா, இவன் தேவராஜன். இந்த்ரன். உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னான்"னு அறிமுகம் பண்ணி வைக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா. த்ரிலோக அழகையெல்லாம் நீ ஒருத்தியே இப்படி எடுத்துண்டா இனிமே வரவாளெல்லாம் அழகுக்கு எங்க போறது?"னு வசனம் பேசறான் இந்த்ரன். தேவ ராஜனோல்லியோ, பேச வராதா?&lt;br /&gt;&lt;br /&gt;"சந்தோஷம்"னு ஒரு வார்த்தை சொல்றா. பாற்கடல்லேந்து எடுத்த அம்ருதம் கூட அத்தனை மதுரமா அவனுக்குத் தோணலை. அந்த ஒரு வார்த்தைக்கப்புறம் அவன் எதையுமே கேட்கப் ப்ரியப்படலை. அந்தப் பேரழகியோட மொதல் வார்த்தையே 'சந்தோஷம்'னு வரப்போ, இனிமே எதுக்குப் பேசுவானேன்னு அவன் நினைக்கறான். அவன் நினைக்கறது அவளுக்குப் புரியறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மா அவளைப் போகச் சொல்றார். "போம்மா, சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கட்டும்"ங்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் தலையசைச்சுட்டு, இந்த்ரனைப் பாத்து "வரேன்"னு சொல்லிட்டுப் போறா.&lt;br /&gt;&lt;br /&gt;"சத்யமா வருவியா?"னு அவன் மனசு கேட்டதை அவள் மனசும் கேக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா போனப்புறம், பிரம்மா இந்த்ரனைப் பாத்து தீர்மானமா பேசறார். "நீ அவளை மறந்துடு. பூலோகத்துல கௌதமர் மகாதவம் பண்ணிண்டு இருக்கார். அவரை இப்படியே விட்டா உன்னோட இந்த்ர பதவிக்கு ஆபத்து வந்துடும். அதனால கௌதமர் முன்னாடி ப்ரசன்னமாகி அகல்யாவை அவருக்கு தாரம் கொடுத்து சேவை செய்யச் சொல்லப் போறேன். உன்னோட பதவி நெலைக்கணும்னா அவளை மறந்துடு"ங்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இந்த்ர பதவி வேண்டாம். அகல்யா தான் வேணும்"னு சொல்றான் இந்த்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நோக்கு இந்த்ர பதவி வேண்டாம்னாலும், எங்களுக்கெல்லாம் நீ தான் ராஜா. அதனால இந்த பதவில நீ இருந்து தான் ஆகணும்.. ஒன்னோட திருவாழத்தான் வேலையை எல்லாம் அவகிட்டே காட்டாதே. அவளை மறக்காம நீ ஏதாவது திப்பிசம் பண்ணினியோ, உனக்கு ரொம்பக் கெடுதல் வரும் தெரிஞ்சுக்கோ"னு உக்ரமா சொல்லிட்டுக் கிளம்பிடறார் பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவும் பொசுக்னு காணாமப் போயிடறா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரனுக்கு எல்லாமே வெறுப்பா இருக்கு. இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு எங்கருந்து வந்து முளைச்சா இந்த அகல்யானு நெனச்சு வேகறான். கொஞ்ச நாளானா சரியாப் போய்டும்னு அவனாவே சமாதானம் பண்ணிக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp கொஞ்ச நாள் ஆறது. இந்த்ரன் அகல்யா ஞாபகமாவே இருக்கான். முன்னை விட மோசமாயிடுத்து. தன்னை மாதிரி அவளும் நினைச்சுத் துடிப்பாள்னு நினைச்சுக்கறான். அப்ப அவனுக்கு திவ்யாதர்ச மோதிரம் ஞாபகம் வரது. அகல்யாவை மனசுல நினைச்சுண்டே கையை ஆகாசத்துல தேய்க்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதர்சம்னா கண்ணாடினு ஒரு அர்த்தமுண்டு. இந்த்ரன் கையை அப்படி தேச்சதும், காத்துல கண்ணாடி மாதிரி தெரியறது. பிரமிச்சுப் போய் நிக்கறான். அகல்யாவை மனசுல நினச்சுண்டு எதிர்க்க தெரிஞ்ச காத்து கண்ணாடில பாக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹபுல்னு சொல்றாளே.. அதுல பாத்தா ஆகாசத்துல அத்தனையும் க்ளோசப் ஷாட் மாதிரி தெரியுமாமே? அது மாதிரி அந்தக் காலத்லயே வந்தாச்சு பாருங்கோ! இந்திரன் காத்துல தேச்சது அந்தக்கால ஹபுலாக்கும். கூகுல் எர்த் மேப் மாதிரி பூலோகத்துல அத்தனையும் விஸ்தாரமா தெரியறது. சூபர் அமோலெட் டிஸ்ப்லேங்கறாளே.. இந்த்ரன் பார்த்தது அதைவிட சூபராக்கும். இந்த்ரன் ஆள்காட்டி விரலாலே காத்துல டக்கு டக்குனு க்ளிக் பண்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பூலோகம் தெரியறது. கோதாவரி சுழிச்சுண்டு ஓடறது. சுத்திப் பாக்கறான். கங்காத்வாரம் கிட்ட, கோவம் அடங்கின காதலி மாதிரி, கோதாவரி சாந்தமா ஒடற எடத்துல ஒரு பெரிய தடாகம் பரவி இருக்கு. அல்லி, தாமரைனு எராளமான ஜல புஷ்பங்கள். ஒரு தாமரை ரொமப அழகா இருக்கேனு அவன் கவனிச்சுப் பாக்கறச்சே, அது அகல்யாவோட முகம்னு புரிஞ்சு போய்டறது. அப்புறம் பாத்தா அனேக ரிஷி பத்னிகள் ஸ்நானம் பண்ணிண்டு ஜலத்துல விளையாடிண்டு இருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த்ரன் பாத்துண்டு இருக்கச்சே அகல்யா எழுந்துக்கறா. பூமிலேந்து உதிச்ச நிலா மாதிரி அவ எழுந்துக்கறதைப் பாத்ததும் இந்த்ரன் ஆனந்தப் பரவசமாய்டறான்.&lt;br /&gt;&lt;br /&gt;முகமும், தோளும், மார்பும், கையும், வயிறும், இடுப்பும், தொடையும், காலும் ஈரம் சொட்டறது. ஸ்த்ரீ லக்ஷண சிற்ப சாஸ்த்ரத்துக்கு எழுதின வ்யாக்யானம் மாதிரி அவ எழுந்துக்கறா. எழுந்து கரைக்கு வரா. ஒரு சின்ன அல்லிப்பூவை கிள்ளி எடுத்து முகத்துலயும் மார்லயும் வச்சுக்கறா. அப்புறம் அந்தப் பூவை எடுத்து ஒரு முத்தம் குடுக்கறா. என்ன தோணித்தோ அப்படியே ஆகாசத்துல வீசறா. பூ ஆகாசத்துல போன இடத்தைப் பாத்துண்டு இருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;தேவலோகத்துலந்து அந்தப் பூவைப் பாத்துண்டு இருந்த இந்த்ரனுக்கு, பூலோகத்துலேந்து அதே பூவைப் பாத்துண்டிருந்த அகல்யாவோட கண்ணைப் பாத்த மாதிரி தோண்றது. திக்குனு ஆய்டறது. ஒரு வேளை தான் பாத்தது அவளுக்கு தெரிஞ்சு போயிருக்குமோன்னு நினைச்சு சட்டுனு கண்ணை மூடிக்கறான். கண் தொறந்து பாக்கறச்சே கோதாவரியும் தெரியலை. ஸ்வப்ன சுந்தரியும் தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல.&lt;a href="http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_18.html"&gt;►►&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-8160069020852263881?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/8160069020852263881/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=8160069020852263881&amp;isPopup=true' title='29 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/8160069020852263881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/8160069020852263881'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_16.html' title='ஸ்மரண யாத்ரை'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7720068977416020501</id><published>2011-12-11T17:19:00.029-06:00</published><updated>2011-12-11T22:14:54.480-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஊனம்</title><content type='html'>&lt;span style="color: #3333b7; font-size: 120%;"&gt;&lt;b&gt;சிறுகதை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;சா&lt;/b&gt;தாரண நிகழ்வுகள் சில சமயம் எதிர்பாராத உருக்கொண்டு, பேரழிவுக் காரணிகளாவதைக் கவனித்திருக்கிறேன். சோம்பலா.. திமிரா.. தனக்குத் தெரியாததில்லை என்ற ஆணவமா.. முட்டாள்தனமா.. அல்லது உறைந்திருக்கும் பிறவிக் குணமா... ஏதோ ஒன்று கண்ணைக் கட்டிவிடுகிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;ரகு. &lt;br /&gt;&lt;br /&gt;என் வட்டத்துக்கு வெளியே என்றாலும், சற்று நெருங்கிய நண்பர் என்பேன். தன் பெருமைகளையும் செல்வாக்கையும் அடிக்கடி அபரிமிதமாகவே வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் ரகம்.  குறையில்லாதவர் எவருமில்லை என்பது என் கட்சி. அதனால் அவரின்  சில மிகையான செயல்கள் என்னைப் பாதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பிஎம்டப் வாங்கியிருந்தார். உடனடியாக எனக்கு போன் செய்தார். கார் வாங்கியிருக்கிறேன் என்று சாதாரணமாகச் சொல்லாமல், "உங்க காரை விடப் பெரிய பீமர் வாங்கியிருக்கேன். செவன் சீரீஸ்" என்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்த்துக்கள், ரகு" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;"எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வரேன்.  எப்படி இருக்குனு பாத்து சொல்லுங்க" என்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"அதான் வாங்கிட்டீங்களே, இனிமே எப்படி இருந்தா என்னங்க?" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.. இல்ல.. நீங்க பாக்கணும்.  லேடஸ்டு மாடல். ஸ்ப்லிட் ஹீடிங்க் கூலிங்க் போட்டோக்ரோமிக் வின்ட்ஷீல்ட் இன்டக்ரேடட் டேஷ்போர்ட் எல்லாம் இருக்குங்க.." என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டு போனார், "இத்தனை வருசமா இருக்கீங்க..  நீங்க கூட வாங்கலை.. உங்க கார்ல இதெல்லாம் இல்லை.. கொண்டு வந்து காட்டுறேன்.." என்றார், என்னை ஏளனம் செய்வது புரியாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆகா, ஓகோ, உங்க கார் போல இல்லை' என்று சொல்லும் வரை விடமாட்டார் என்பது புரிந்து, "அடடே, அப்படியா? நான் பார்த்ததே இல்லை.. எடுத்துட்டு வாங்க.. உங்க காரைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு" என்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;"இதோ கிளம்பிட்டே இருக்கேன். சுசீலாவையும் கூட்டிட்டு வரேன்.. அவ குடும்பத்துல டூ வீலருக்கே ஆனு பிளப்பாங்க.. மொத மொத சொகுசுக் கார்னதும் மயக்கம் வராத குறைதான்.." என்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க, காத்துட்டிருக்கேன் வாங்க" என்றேன்.  வந்தால் போதும் என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அவர்களைக் காணோம். எனக்குக் கொஞ்சம் வார இறுதி வேலை இருந்ததால் முடித்து விட்டு மாலை நாலு மணி போல் திரும்பி வந்தேன்.  ரகுவிடமிருந்து செய்தி வந்திருந்தது. அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன்.  "என்ன ரகு, வர முடியலியா?  அடடா, உங்க காரைப் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தனே?" என்றேன்.  மிகைப்படுத்தியிருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ஆகா ஒகோனு சொன்னீங்களா.. உங்க கண் பட்டுருச்சா என்னனு தெரியலை.. பாருங்க.. உங்க வீட்டுக்கு வரப்ப ஆக்சிடென்ட் ஆயிருச்சு" என்றார், என்னைப் புண்படுத்துவது புரியாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;பதட்டப்பட்டேன்.  "ரகு என்ன ஆச்சு.. யாருக்கும் அடிபட்டுச்சா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆளுக்கெல்லாம் அடியில்லை.  சுசீலாவுக்கு லேசா நெத்தியில அடி.. சரியா உக்காரத் தெரியாம... ஜட்கா ஆளுங்களை லக்சுரிக் காரில் உக்கார வச்சா அப்படித்தான்.. ப்ச.. அவளை விடுங்க, கார் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு.. புது வண்டி.. எனக்கு மூட் அவுட்டாகி அதான் உங்க வீட்டுக்கு வர முடியலே"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க விபத்து? என்ன ஆச்சு? போலீஸ் ரிபோர்ட் கொடுத்தீங்களா?  வண்டிய விடுங்க.. இன்சூரன்சுல வாங்கி ரிப்பேர் பண்ணிடலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"கேல்மட் ரோடுல லெப்ட் எடுத்தனா.. நான் லெப்ட் எடுக்குறது தெரியாம நேரா வந்துட்டான் ஒரு வெள்ளைக்காரப் பொறுக்கி..."&lt;br /&gt;&lt;br /&gt;"நேரா வரவங்களுக்குத் தான் வழியுரிமை ரகு.. சரி விடுங்க.. அந்தக் காருக்கு அடிபட்டுச்சா? ஆளுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க வேறே.. நல்லா அடிபட்டிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்.. நான் சட்டுனு ப்ரேக் போட்டு நிறுத்திட்டேன்.. லக்சுரி காராச்சே.. அவன் ஏதோ டொயோடா கட்டைவண்டியை வச்சுட்டு மெதுவா வரான்.. இருந்தாலும் அவன் காருக்கு அடி.. டிரைவர் சைட் டோருங்க ரெண்டும் கொஞ்சம் நசுங்கிருச்சு.. போலீஸ் கீலீஸ் எல்லாம் வேணாம்னு அங்கியே செடில் செஞ்சுட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ரகு.. இதெல்லாம் சீரியஸ் மேடர் இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என் ப்ரெந்ட்ஸ் சர்கிள் கிட்டே கேட்டுத்தான் எல்லாம் செஞ்சேன்.. நீங்க இந்த ஊர்க்காரங்க மாதிரியே பேசுவீங்க.. இன்சூரன்ஸ் புகார் கொடுத்தா பிச்சிக்கும்.. லேசா டச் பண்ணியிருக்கேன்.. அந்த ஆளு ஓகே.. நான் ஐநூறு தரேன்னு சொன்னேன்.. அந்தாளு கூட வந்த அவன் பொண்டாட்டியோ வப்பாட்டியோ கேர்ல் ப்ரெந்டோ.. அவ செஞ்ச கூத்தைப் பொறுக்க முடியாம மேலே இருநூறு டாலர் போட்டுக் கொடுத்து செடில் செஞ்சுட்டு வந்துட்டோம்.. இதுக்குப் போய் போலீசு இன்சூரன்சு.. சுசீலா வேறே பயந்துட்டா.. பொண்ணும் பயந்துடுச்சு.. நோ ப்ராப்லம்.. செடில்ட்..."&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார். 'உங்களுக்குத் தான் அறிவில்லை, உங்க ப்ரெந்ட் சர்கிளுக்கும் அறிவில்லையா?' என்று கேட்க எண்ணி, "ஓகே, ரகு  எந்த சிக்கலும் நேராம இருந்தா சரி" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பிரச்னையும் வராது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தது.  மறுநாள் காலையில் எனக்கு போன் வந்தது.  சுசீலா பேசினார். "அவரைப் போலீஸ்ல பிடிச்சுட்டுப் போயிட்டாங்க.. எனக்கு என்ன செய்றதுனே தெரியலை.. கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?" என்றார், அழுகை கலந்தக் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ வரேன்.." என்று விரைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விவரம் தெரிந்த சுசீலா அழுது கொண்டிருந்தார்.  அருகில் அவருடைய ஆறு வயதுப்பெண் விவரம் தெரியாமல் அழுது கொண்டிருந்தார்.  முடிந்த வரை சமாதானம் செய்து விவரம் கேட்டேன்.  அடுத்த பத்து நிமிடங்களில் மூவரும் காவல் நிலையத்தில் இருந்தோம்.  ஸ்டேப் ஆபீசரிடம் பேசிவிட்டு உள்ளே கமிசனரிடம் நேரே போனோம்.  கமிசனர் கோடை காலத்தில் வாரா வாரம் மேரதான் ஓட எங்களுடன் பயிற்சி செய்வார்.  லேசாகப் பழக்கம் உண்டு.  என்னைக் கண்டதும் அடையாளம் புரிந்து வரவேற்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ப்ரெந்டா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்.. இவங்க அவரோட மனைவி, மகள்.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓகே.. லெட்ஸீ.. நேத்து மதியம் இவர் இன்னொரு காரை இடிச்சிட்டு சத்தம் போடாம இடத்தை விட்டு ஓடிட்டாரு. ஹிட் அன்ட் ரன்.  சீரியஸ் அபென்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ ஆபீசர்.. நேத்தே பேசினோம்.. இன்னொரு காரில் இடிச்சதாகவும் ரெண்டு பார்ட்டியும் ஒத்துகிட்டு, பணம் கொடுத்து செடில் செஞ்சதாகவும் சொன்னாரு.. என்ன சுசீலா.. நான் சொல்றது சரிதானே?"&lt;br /&gt;&lt;br /&gt;சுசீலா தலையசைத்தார்.  "ஆமாம்.. அவங்க ரெண்டு பேருமே சேர்ந்து தான் காசு வாங்கிட்டாங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;"கமிசனர்.. தேர் இஸ் எ மிஸ்டேக்.. விபத்தில சிக்கின அந்தப் பார்ட்டியைக் கூப்பிட்டுக் கேளுங்க.." என்று சொல்லத் தொடங்கிய என்னைத் தடுத்தார் கமிசனர். "அந்தப் பார்ட்டியைக் கூட்டிக் கேக்க முடியாது. ஆளு இறந்துட்டாரு. நேத்து ராத்திரி ஹேட் எ சீஷ்ர்.. வலிப்பு வந்து இறந்துட்டாரு.  விபத்துல ஏற்பட்ட விப்லேஷ் காரணம்னு மெடிகல் ரிபோர்ட். பணம் வாங்கிட்டாருனு சொல்றீங்க.. இந்த கம்ப்லெயின்ட் கொடுத்ததே இறந்தவர் மனைவிதான்.. உங்க நண்பரோட கார் நம்பரை நோட் செஞ்சு ஹிட் அன்ட் ரன்னு கம்ப்லெயின்ட் கொடுத்தாங்க.. மேலும், செடில்மென்ட் எல்லாம் இப்ப செல்லாது.. ஹிட் அன்ட் ரன் இஸ் பேட் இன் இட்செல்ப்.. இங்கே மரணம் வேறே ஏற்பட்டிருக்கு.. திஸ் இஸ் வெரி சீரியஸ்" என்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சுசீலா அடக்க முடியாமல் அழத் தொடங்க, இன்னொரு ஏஜன்டை அழைத்து சுசீலாவைத் தனியறைக்கு அழைத்துப் போகச் சொன்னார்.  "விபத்து ஏற்பட்டா போலீஸ் புகார், இன்சூரன்ஸ் புகார் எல்லாம் செய்யணும்னு ஒரு காமன் சென்ஸ் கூட இல்லாம இருந்திருக்காங்க.. போத் பார்டீஸ்.. மரணம் ஏற்பட்டது பேட் லக்" என்றார் என்னிடம்.  "வி ஸீ திஸ் ஆல் த டைம்.. உங்க ப்ரெந்டுக்கு ஒரு நல்ல லாயரா பாருங்க" என்றபடி என்னை ரகுவிடம் அழைத்துப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேயறைந்தது போல உட்கார்ந்திருந்த ரகுவுக்கு என்னைப் பார்த்ததும் அவமானமாக இருந்தது.  ஆனாலும் உடனே வாயைத் திறந்தார். "நீங்க சொன்னது சரியாப் போச்சு.. கரி நாக்கு.. எந்த நேரத்தில அப்படிச் சொன்னீங்களோ..".  &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல் பேசும் ரகுவுடன் எப்படி என்னால் நட்புடன் பழக முடிகிறது என்று ஒரு கணம் தோன்றினாலும், புன்னகை செய்தேன். "வி வில் கெட் சம் ஹெல்ப்"&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடையத் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பெயரில், பத்தாயிரம் டாலர் ஜாமீன் கட்டியதும் ரகுவை என்னுடன் அனுப்பினார்கள்.  "வாலென்டரி ஹவுஸ் அரெஸ்ட்" என்றார் கமிசனர். "ஹானர் கோட்.  உங்க சிடிசன்ஷிப் பெயரில் இவரை அனுப்புறோம்.. மேலும் இன்னிக்கு சன்டேன்றதுனால இங்கே இடம் எதுவும் கிடையாது இவரை அடைச்சு வக்க..  செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கோர்ட் ஹியரிங்.. கெட் எ குட் அடர்னி.. குட் லக்".&lt;br /&gt;&lt;br /&gt;ரகுவை வீட்டில் இறக்கிவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு நல்ல வக்கீலுடன் வருவதாகச் சொல்லிவிட்டு, சுசீலாவையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.  ஞாயிற்றுக்கிழமை வேறு.  ஒரு பயலையும் லேசில் பிடிக்க முடியாது என்ற எண்ணத்துடனே சில நண்பர்களை அழைத்தேன்.  அங்கே இங்கே பேசி நண்பருக்குத் தெரிந்த ஒரு வக்கீலைப் பிடித்தேன்.  தெரிந்த விவரங்களைச் சொல்லி உதவி கேட்டேன்.  மறுநாள் காலை தன் அலுவலகத்தில் வந்து பார்க்கச் சொன்னார்.  ரகு வண்டியின் சில புகைப்படங்களை உடனடியாக எடுக்கச் சொன்னார்.  அவர் கேட்டச் சம்பளம் சற்று மிகையாகத் தோன்றியது.  ரகுவிடம் அனுமதி கேட்டபின் மறுபடியும் அழைப்பதாகச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகுவின் வீட்டுக்குப் போனபோது மதியம் மூன்றரை இருக்கும்.  ரகுவைக் காணோம்.  "என்ன சுசீலா, எங்கே உங்க கணவர்?"&lt;br /&gt;&lt;br /&gt;சுசீலாவின் பதில் என்னை உறுத்தியது. "அவரோட நண்பர்கள் ஸ்ரீகுமாரும், கிரணும் வந்திருந்தாங்க.. ரொம்ப நேரம் பேசினாங்க. ஸ்ரீகுமாருக்கு நல்ல வக்கீல் ஒருத்தர் தெரியும்.. வீடு வாங்கினப்ப கூட அந்த வக்கீல்தான் பேபர் வொர்க் எல்லாம் செஞ்சாராம்.. அவர் கிட்டே கேக்கலாம்னு கூட்டிட்டுப் போனாரு."&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  'ஏம்மா.. அப்ப அவங்க கிட்டயே காலைல உதவி கேட்டிருக்கலாமே?' என்று கேட்க எண்ணி, "சுசீலா.. ரியல் எஸ்டேட் லாயருக்கு இந்த மாதிரி மேடரை டீல் பண்ண முடியுமானு யோசிச்சீங்களா?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவருக்குத் தெரியும்.. ஸ்ரீகுமார் ரொம்ப பழக்கம்ன்றதுனால போனாரு"&lt;br /&gt;&lt;br /&gt;"லிசன்.. மொதல்ல் ஜாமீன் எடுத்துட்டு வந்தது நான். அதுக்கு மேலே ஹவுஸ் அரெஸ்டுனு கமிசனர் ரெண்டு மூணு தடவை சொல்லியிருக்காரு. செவ்வாய்க்கிழமை கோர்ட் ஹியர்ங் முடியற வரைக்கும் ரகு வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது..  என்னோட தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் அவரை வெளிய விட்டிருக்காங்க.. நீங்க இப்படி நடந்துக்கலாமா? இப்ப எதுனா ஆச்சுனா ஹி வில் பி ஜம்பிங் பெயில்.. அது இன்னொரு குற்றம்" என்றேன், முடிந்தவரை என் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு.  கடவுளே, எல்லாவற்றுக்கும் ஒரு அளவு வைத்தது போல் முட்டாள்தனத்திற்கும் ஒரு அளவை வைக்காதது ஏன்?  &lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொன்னா கேட்டாத் தானே?" என்றார் சுசீலா.  கேட்டதுடன் தன் பங்கு முடிந்து விட்டது என்ற பொறுப்பற்ற மனப்பான்மை. இயலாமையில் தஞ்சம் புகும் திமிர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி.. ரகு வரவரைக்கும் இங்க இருந்தா உங்களுக்கு ஆட்சேபணையில்லையே?  அவரோட வண்டி போட்டோஸ் வேணும்னாரு வக்கீல்.  அதோட செலவும் அதிகமாகும் போலத் தோணுது.. ரகு கிட்டயே பர்மிசன் வாங்கி அதுக்குப் பிறகு.." என்று நான் சொல்லும் பொழுது இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள்.  என்னைப் பார்த்ததும் சற்றுத் தயங்கி, பிறகு நான் கவனித்தது தெரிந்து தயக்கம் தொலைத்தார்கள்.  ஒருவரை முன்பு பார்த்திருக்கிறேன்.  "ஸ்ரீ" என்று என் கையைக் குலுக்கினார்.  "திஸ் இஸ் கிரண்".&lt;br /&gt;&lt;br /&gt;"ரகு எங்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;"சுசீலா சொல்லலியா உங்க கிட்டே?"&lt;br /&gt;&lt;br /&gt;சுசீலாவைப் பார்த்தேன். தலைகுனிந்தார். "மன்னிச்சிருங்க.." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் இஸ் ஹேபனிங்?" என்றேன் சற்றுக் குரலை உயர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"ரகு இந்தியா போயிட்டாரு.  இப்பத்தான் ப்ளேன்ல ஏத்திட்டு வரோம்.. திஸ் இஸ் நோ ப்லேஸ் பார் ஹிம்"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?"  என்னால் எரிச்சலை அடக்கவே முடியவில்லை.  "ஏன் இப்படிச் செஞ்சீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாங்க.. இதெல்லாம் ரேசிஸ்ட் மோடிவேசன். செடில் ஆயிருச்சு, அதுக்குப் பிறகு இந்த மாதிரி கம்ப்லெயின்ட் கொடுத்தா பின்னே எப்படி? இந்டியன்ஸ்னா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நெனச்சிடராங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?"  எனக்கு அதற்கு மேல் எதுவும் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க ரொம்ப நேரம் பேசித்தான் இந்த முடிவுக்கு வந்தோம்.. ரகு மெட்ராஸ் போயிட்டாரு.  சுசீலாவும் குழந்தையும் பேங்க் அகவுந்ட் எல்லாம் மூடி செடில் செஞ்சிட்டு நாளைக்குப் போறதா ப்ளான்"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இட் இஸ் ஓகே சார். இது எங்க பிரச்சினை..வி வில் டேக் கேர்"&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கணத்தில்தான் எனக்குக் கோபம் வந்தது. "இது ரொம்ப சீரியஸ் மேடர்..  இது எவ்வளவு பெரிய குற்றம்னு உங்க ரெண்டு பேருக்கும் புரியலியா? இந்தம்மா.. இந்தச் சின்னப் பெண்.. இவங்க நிலமையை நினைச்சுப் பாத்தீங்களா? கோர்ட்டுக்கு வராம இருந்தா ஹி வில் பி அட்மிடிங் கில்ட். அதுக்கு மேலே ஊரை விட்டு ஓடிட்டாருனு தெரிஞ்சா பியூஜிடிவ் கேஸ் வேறே. சாதாரண விபத்தை இப்ப இன்டர்னேசனல் ப்யூஜிடிவ் நிலைமைக்குக் கொண்டு வந்துட்டீங்களே? நீங்கள்ளாம் உண்மையிலேயே நண்பர்கள் தானா? ரகு தப்பிப் போனதுக்கு நீங்களும் உடந்தை, புரியுதா? இட் இஸ் பாசிபில் தட் யு வில் ஆல் பி அரெஸ்டட்"&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களும் ஆடிப்போனார்கள்.  "சாரி சார்.. இப்ப என்ன செய்யலாம்?  தெரியாம நடந்து போச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ டோன்ட் நோ" என்றபடி, என் ரன்னிங் க்ளப் நிர்வாகியுடன் தொடர்பு கொண்டேன்.  அவர் கமிசனரின் வீட்டு எண்ணைக் கொடுத்தார்.  கமிசனருடன் பேசினேன்.  எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. என் அவமானத்தை விட ரகுவின் நிலமை பெரிதானதால் அமைதியாக கமிசனரின் திட்டுக்களை கேட்டுத் தலையசைத்தேன்.  பேசி முடித்த பிறகு மெள்ள சுசீலாவிடம் பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ பாருங்க சுசீலா. ரகுவை பெயில் ஜம்பர்னு முத்திரை குத்திட்டாங்க.  அது ஆபத்து. என்னோட தனிப்பட்ட உத்தரவாதம் ஒரு வாரம் வரைக்கும் செல்லும்னு கமிசனர் சொன்னாரு. அதுக்குள்ள ரகுவைத் திரும்ப கூட்டியாறணும். கோர்ட் ஹியரிங் ஒரு வாரம் தள்ளிப் போடறதா இருந்தாங்களாம், அதனால இட் மே வொர்க் அவுட்னு கமிசனர் சொன்னாரு. எப்படியிருந்தாலும் ரகுவுக்கு பெயில் ஜம்பர் ஸ்டேடஸ் தான்.  ஒரு வேளை கேஸ் நடந்து அவருக்கு எதிரா தீர்ப்பானா, குற்றவாளி ஸ்டேடசும் சேந்துக்கும்.  இந்த நிலமையில, விபத்து நடந்ததை ரெண்டு பார்ட்டியும் உடனே புகார் கொடுக்காதது மட்டுமே ரகுவுக்கு சாதகமா இருக்கு.. அவரு ஊரை விட்டு ஓடிட்டாருனு தெரிஞ்சதும் அந்த சாதகமும் போயிரும். ப்லீஸ், உடனே அவரைத் திரும்ப வரவழைங்க.. தேவைப்பட்டா டிகெட் செலவை நான் குடுத்துடறேன்.. இல்லீன்னா, நானே அடுதத ப்ளேன்ல போக வேண்டியிருக்கும்.. என்னோட பத்தாயிரம் டாலர் தொலைஞ்சு போனா பரவாயில்லை, ஒரு குற்றம் நடக்க நான் உடந்தையா இருக்க விரும்பலே, புரிஞ்சுக்குங்க" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுசீலா தலையாட்டினார், "புரியுது". என்ன புரிந்ததோ!  "கவலைப்படாதீங்க.. நாளைக்கு மதியம் போன் பண்ணி அடுத்த ப்ளேன்லயே ரகுவைத் திரும்பச் சொல்லிடுறோம்" என்றார் ஸ்ரீ.  &lt;br /&gt;&lt;br /&gt;'கடவுளே, முட்டாள்களிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பாற்று' என்று வேண்டியபடி அங்கிருந்து விலகினேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மதியம் அவர்கள் வீட்டுக்குப் போனபோது வீடு பூட்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;இ&lt;/b&gt;து நடந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் சென்னை போயிருந்த போது ரகுவைச் சந்தித்தேன். பனகல் பார்க்கில் ஒரு புத்தகக் கடையைத் தேடிக் கொண்டிருந்த போது எதிர்ப்பட்டார்.  என்னைக் கண்டுத் திடுக்கிட்டாலும் சுதாரித்தார்.  நானும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சிகள் விலகிச் சுமுகம் லேசாக எட்டிப் பார்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கடையைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னேன்.  கூடவே வந்து அடையாளம் காட்டினார்.  பொன்னேரி, வேளச்சேரி, அனகாபுத்தூர், போரூர் என்று நாலைந்து இடங்களில் ஒரு செயின் ரெஸ்டராந்ட் நடத்துவதாகவும் வியாபாரம் அமோகமென்றும் சொன்னார்.  ரெஸ்டராந்ட் பெயர் சொல்லி அவசியம் சாப்பிட வரவேண்டும் என்றார்.  கோயமுத்தூரில் ஒரு ஐடி கம்பெனி தொடங்கியிருப்பதாகவும் அடுத்த ஐந்து வருடங்களில் நூறு கோடிக்கு மேல் வருமானம் வரும் என்றும் அளந்தார். பழைய கதை எதுவுமே பேசவில்லை.  அப்படி ஒரு கதை இருப்பதாகவே ரகுவின் பேச்சில் தோன்றவில்லை. என் மனதுக்குள் ஓரமாக ஒதுங்கியிருந்த ஏமாற்றமும் வலியும் விழிப்பது போலத் தோன்றவே, ரகுவிடம் அவசரமாக விடை பெற்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;போரூரில் என் மாமா வீட்டுக்குப் போனபோது, அருகே ரகுவின் ரெஸ்டரான்ட் இருப்பதைக் கவனித்தேன்.  மாமாவுடன் அங்கே சென்று சாப்பிட்டேன்.  கூட்டமான கூட்டம். ரகுவைக் காணோம். "இந்த ரெஸ்டராந்ட் ஓனரை எனக்குத் தெரியும்" என்றேன் மாமாவிடம்.  அர்த்தமற்றப் பெருமை என்பது உடனே புரிந்தது. இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;போ&lt;/b&gt;ன வாரம் மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  "டேய், உன்னோட ப்ரெந்ட்.. அதாண்டா ரெஸ்டராந்ட் ஓனர்... அவனைப் போலீஸ் தேடுதுதுடா" என்றார்.  "ரெஸ்டராந்ட் வியாபாரத்தில் தில்லுமுல்லாம்...ஏதோ பொய் சொல்லி எசகு பிசகா மாட்டிக்கிட்டானாம்..அவனோட தப்பே இல்லைனு பேசிக்கிறாங்க.. ஆனாலும் ஆள் அப்ஸ்காந்ட் ஆயிட்டானாம்".&lt;br /&gt;&lt;br /&gt;'தப்பு அவன் பேரில் தான், எனக்குத் தெரியும்' என்று சொல்லத் தோன்றியது. "ஊனத்தை குணப்படுத்த முடியாது" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா.. நான் என்னவோ சொல்லுறேன்.. நீ என்னவோ சொல்லிட்டிருக்கே? யாருக்கு ஊனம்?" என்றார் மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-7720068977416020501?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/7720068977416020501/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=7720068977416020501&amp;isPopup=true' title='31 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/7720068977416020501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/7720068977416020501'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post_11.html' title='ஊனம்'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5366614099963434149</id><published>2011-12-09T01:19:00.013-06:00</published><updated>2012-01-07T11:36:48.646-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபரீதக் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டிக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருநூறு'/><title type='text'>வந்தவளை  - எங்கள் சவடால் 2K+11</title><content type='html'>&lt;span style="color: #3333b7; font-size: 120%;"&gt;&lt;b&gt;சிறுகதை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்கதை:&lt;a href="http://engalblog.blogspot.com/2011/11/blog-post_03.html" target="_BLANK"&gt;எங்கள் சவடால் 2K+11&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 150%"&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;வே&lt;/b&gt;கமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள்.  "மன்னா.. மன்னா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு உறவோ என்று நினைத்துவிட்டேன்.. எனக்கு உதவி செய்வீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"பெண்ணே.. அரக்கன் கணவன் காப்பாற்று போன்ற வசனங்களெல்லாம் கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது.  ஆளை விடம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களால் மட்டுமே முடியும் மன்னா, மறுக்காதீர்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;"இது போல் எத்தனை பேரிடம் சொல்லியிருக்கிறாய் பெண்ணே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆறு பேரிடம் மன்னா"&lt;br /&gt;&lt;br /&gt;"பிறகென்ன வசனம் வேண்டிக் கிடக்கிறது? உங்களால் மட்டுமே முடியும்.." என்று அவள் சொன்னது போலவே புங்கவர்மன் இழுத்தான்.  "ஆளை விடம்மா.. வசனம் பேச வேறு ஆளைப்பார்"&lt;br /&gt;&lt;br /&gt;"கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது என்று சொன்னீர்களே?  கேட்டதேயில்லை மன்னா.  அதற்கு என்ன பொருள்?"&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் அவனுடன் வேட்டைக்கு வந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர்.  "மன்னா, இங்கே ஒரு பெரிய தவளை போனதே பார்த்தீர்களா?" என்றான் ஒரு காவலன்.  பதில் சொல்லாது எரிச்சலுடன் பார்த்த புங்கவர்மனிடம் காவலன் புலம்பினான்.  "அதற்குள் அடித்துச் சாப்பிட்டு விட்டீர்களா மன்னா? எங்களுக்கு ஒரு காலாவது மிச்சம் வைக்கக் கூடாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"புரிந்தது மன்னா.. சோற்றுச் சிக்கலா?" என்றாள் தவளைப்பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் தவளையே.. பெண்ணே...  சாப்பிட்டுப் பல நாட்களாயின. அரசன் என்பதால் செடி கொடி காய் என்று ஏதாவது பறித்துக் கொடுக்கிறார்கள்.  அரிசிச்சோறு தின்று அரை வருடமாகிறது. செலவுக்குச் சில்லறையில்லை. கடனும் தரமறுக்கிறார்கள். கஜானா காலி.  இதோ இருக்கிறார்களே, ஏதோ வேலையில்லா திண்டாட்டம் இருப்பதால் சம்பளம் கேட்காமல் என்னிடம் வேலை பார்க்கிறார்கள்.  இப்படியே இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நான் தனியாகப் பிச்சை எடுக்க வேண்டியதுதான்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் மன்னா" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன், நீ பிச்சை எடுக்கிறாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதில்லை மன்னா.."&lt;br /&gt;&lt;br /&gt;"எதுவாக இருந்தால் என்ன?  பெரிய தவளையாகத் தென்பட்டதே, தனியாகச் சென்று அடித்துச் சாப்பிடலாம் என்று பின் தொடர்ந்தால் பெண்ணாக மாறிவிட்டாய்.. நீ யாரோ நாங்கள் யாரோ? உன் கணவரை மீட்டுக் கொடுக்க நல்ல ஆளைப் பார்த்தாய்.  வேறே யாராவது எட்டாவது ஆள் வருவான், அவனிடம் வசனம் பேசு, போ.."&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னா.. நான் இளவரசி. என் கணவரை மீட்டுக் கொடுங்கள்.  உங்கள் கடனையெல்லாம் அடைக்க.."&lt;br /&gt;&lt;br /&gt;"பொன்னும் மணியும் தருவாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. குறைந்த வட்டிக்கு நானே கடன் தருகிறேன் என்று சொல்ல வந்தேன்.  அதற்கு மேல், இப்பொழுதே உங்கள் அனைவருக்கும் மாமிசச்சோறு வரவழைக்கிறேன்.. என்னிடம் மந்திரசக்தி இருக்கிறது" &lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்தால் தேரை போல் இருக்கிறாய்.. நீ இளவரசி என்று எப்படி நம்புவது? அடையாளம் ஏதாவது இருக்கிறதா? பேன் உண்டா? இருந்தால் எடுத்துக் காட்டு. ஐயா, மந்திரியாரே.. இந்தப் பெண்ணின் அரசுப் பேன் அடையாளத்தை சரி பாருங்கள்" &lt;br /&gt;&lt;br /&gt;"இதோ" என்றபடி கூந்தலைப் பிரித்துக் காட்டினாள் இளவரசி.  எட்டிப் பார்த்த மந்திரி தலையாட்டினார்.  "ஆமாம் மன்னா.  அரசப்பேன் தான்.  நன்றாகக் கொழுத்துத் திரிகின்றன.  இளவரசி கூந்தலை வேகமாக அசைத்தால் பத்துப் பதினைந்தாவது விழும், வறுத்துச் சாப்பிடலாம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உமது புத்தி உம்மை விடுமா?" என்று புங்கவர்மன் கடிந்தான்.  பிறகு பெண்ணைப் பார்த்து, "இளவரசி, எங்களுக்கு மாமிசச்சோறு போடுவதாகச் சொன்னாயே?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"முதலில் என் கணவரை மீட்டு என்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதி அளியுங்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;"உயிர்தானே மன்னா, போனால் போகிறது, வாக்கு கொடுங்கள்" என்று அனைவரும் பிடுங்கி எடுக்க, மன்னன் தலையசைத்தான்.  "சரி, பெண்ணே. உன்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றுகிறேன். முதலில் சோற்றைக் கண்ணில் காட்டு" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசி பாடத் தொடங்கினாள்.  மரணப் பிடியில் சிக்கியத் தவளையின் குரலில் அவள் பாடத் தொடங்கியதும், கூட்டம் அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நிறுத்தம்மா.. உன்னை யாரும் இங்கே துன்புறுத்தவில்லை.. சாப்பாடு கேட்டோம்.. தர விருப்பம் இல்லை என்றால் நேரடியாகச் சொல்லிவிடு, பாடத் தேவையில்லை" என்றான் புங்கவர்மன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இளவரசி அவனை மறித்து, "பொறுங்கள் மன்னா" என்றாள்.  ஒரு மணி நேரம் போல் பாடித் தீர்த்தாள். உடனே அங்கே ஒரு பெரிய விருந்து தோன்றியது.  உப்பு குறைவு, காரம் அதிகம், வேகவில்லை, குழைந்துவிட்டது, கோழியும் ஆடும் உயிரோடு இருப்பது போலவே தோன்றுகிறது என்று ஆளுக்கொரு குறை சொன்னாலும், விருந்துப் பண்டங்கள் நொடிகளில் மறைந்தன.  எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் பாடத் தொடங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி.. இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?" என்றாள் இளவரசி.&lt;br /&gt;&lt;br /&gt;"பாடவில்லை.. அது.. எங்கள் ஏப்பம்" என்றான் புங்கவர்மன்.  "சரி, அரக்கனைப் பிடிக்கப் போகலாம், வா".&lt;br /&gt;&lt;br /&gt;"பொறுங்கள் மன்னா. ஒரு நிபந்தனை இருக்கிறது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?" &lt;br /&gt;&lt;br /&gt;இளவரசி சரேலென்று ஒரு மரத்தின் பின்னே சென்றாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;"பாவம், அவசரம் போல" என்றான் காவலன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிறுத்தய்யா.." என்று புங்கவர்மன் சொல்லி முடிக்குமுன் இளவரசி திரும்பி வந்தாள். அவள் கையில் ஒரு கிளி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னா, இந்த கிளி அரக்கனுடைய கிளி.  கிளியுடன் வராவிட்டால் அரக்கன் நிச்சயம் என் கணவனைக் கொன்றுவிடுவான். கிளியைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வளவு தானே? போகலாம் வா" என்று புங்கவர்மன் நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வளவு சீக்கிரம் போக முடியாது.  சில சட்டங்கள், விதிகள் எல்லாம் உண்டு" என்ற குரல் கேட்டுத் திரும்பினான் புங்கவர்மன்.  இளவரசியைப் பார்த்தான். "பேசுவது கிளியா, பெண்ணரசி மொழியா?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கிளி தான்" என்றது கிளி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம் மன்னா.. இது சட்டக்கிளி"&lt;br /&gt;&lt;br /&gt;"சட்டையே காணோம்?" என்றார் மந்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;"சட்டக்கிளி மந்திரியாரே" என்றது கிளி.  "நான் வச்சது தான் சட்டம்.  அரக்கனைப் பிடிக்கப் போகிறவர்கள் சில விதி முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.  ஒரு நாளைக்கு ஐநூறிலிருந்து ஆயிரம் மூச்சு வரை இழுக்கலாம்.  ஆபாச பேச்சு ஜாடை எதுவும் கூடாது.  ஏழு கடல் ஏழு மலை கடந்து அரக்கனைப் பிடிக்கும் வரை தொடர்ந்து போக வேண்டும், விட்டுப் பிறகு பிடிக்கலாம் என்று நிறுத்தித் தொடரக்கூடாது."&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் வேறு ஏதாவது உண்டா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்றை மறந்து விட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"தோன்றும் நேரத்தில் திடீரென்று புது விதி ஏதாவது புனைவேன்.." என்ற கிளி,  கிளிகிளி என்று சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இதென்ன புது வம்பு? சட்டக்கிளியா?" என்றான் புங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம் மன்னா! தலைவிதி.  என் கணவரைத் தூக்கிச் செல்லும் பொழுது அரக்கன், 'கிளி உயிரோடு இருக்கும் வரை உன் கணவனும் உயிரோடு இருப்பான்' என்று இந்தக் கிளியை என்னிடம் கொடுத்துவிட்டு மாயமாக மறைந்து விட்டான்.  தினம் ஒரு விதி என்று புதுப்புது சட்டம் போட்டுக் கழுத்தறுத்தாலும் கிளியை ஒன்றும் செய்ய முடியாது" என்றாள் இளவரசி.&lt;br /&gt;&lt;br /&gt;"கிளிக்.." என்று புங்கன் தொடங்கும் போதே கிளி கத்தியது.  "ஆபாசம்! ஆபாசம்!"&lt;br /&gt;&lt;br /&gt;புங்கன் அமைதியானான்.  கூட்டத்துடன் நடந்தான்.  தொலைவில் தெரிந்த மலை மெள்ள அருகில் வந்ததும் திடீரென்று கிளி கத்தியது.  "நீங்கள் எல்லோரும் படுத்து உருண்டு  மலையேற வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, இதை முதலில் சொல்லவில்லையே?" என்றான் புங்கன் எரிச்சலுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"புது விதி" என்றது கிளி.&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னிக்க வேண்டும் மன்னா.. கிளி சொன்னபடி செய்யவேண்டும்" என்றாள் இளவரசி.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தக் கிளியை யாராவது கொஞ்சம் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்.. கழுத்துப் பக்கமாக" என்றான் புங்கவர்மன்.  &lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாமல் அனைவரும் படுத்து உருண்டு மலையைக் கடந்தனர்.  அடுத்து வந்த இரண்டு மலைகளை ஓடிக் கடக்க வேண்டும் என்றது கிளி.  சோர்ந்து போன கூட்டம் புங்கவர்மனை விட்டு விலகுவதாகச் சொன்னது.  "ஒரு கடல் கூட இன்னும் வரவில்லையே மன்னா?" என்றான் ஒருவன். "என்றைக்குக் கடந்து என்றைக்கு அரக்கனைப் பிடித்து என்றைக்கு எங்கள் சோற்றுச் சிக்கல் தீர்வது?" என்றான் இன்னொரு காவலன். "என்னைக் கேட்டால் இங்கேயே கிளி பிரியாணி செய்து சாப்பிடுவதே மேலென்று தோன்றுகிறது" என்றான் சமையல்காரன்.  கிளி அஞ்சி ஒதுங்கி இளவரசியின் தோள் மீது அமர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் கூட்டத்தின் அமைதியின்மையைக் கவனித்த புங்கன், அனைவரையும் அடக்கினான். "எல்லோரும் களைப்பாக இருக்கிறோம்.  இன்றிரவு இங்கே உறங்கிவிட்டு காலையில் தீர்மானிப்போம்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல யோசனை.  ஏதாவது புது விதி புனையுமுன் உறங்குவோம்" என்றார் மந்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;"தூங்குமுன் எனக்கு யாராவது கதை சொன்னால் தான் தூக்கம் வரும்" என்றான் புங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கஷ்டம்! இவனெல்லாம் நமக்கு அரசன்" என்றான் காவலன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?" என்றான் புங்கவர்மன் சினத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ, நானில்லை.. இந்தக் கிளி தான் சொன்னது. விடாதீர்கள் மன்னா" என்றான் காவலன்.  கிளி படபடத்து இளவரசியின் பின்னே பதுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நானே கதை சொல்கிறேன். என்னுடைய கதை" என்றாள் இளவரசி.&lt;br /&gt;&lt;br /&gt;"கதை சொல்வதாக இருந்தால், ஒரு ஊர்ல என்று தொடங்கிச் சொல்ல வேண்டும்" என்றான் புங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவனுக்கு ஒரு ராணியாம்.  ராஜா என்றாலும் அவன் ஊருக்கு மருத்துவனாம்.  எந்த வியாதியாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற நிறங்களில் ஒரு மூலிகையைக் கொடுத்து சில சமயம் குணப்படுத்துவானாம்.  மக்களும் வண்ண மூலிகைகளுக்கு ஆசைப்பட்டு இல்லாத வியாதிகளைச் சொல்லிக் கொண்டு வருவார்களாம்.  ஒரு நாள் ஒரு கொடிய அரக்கன் அரசனைத் தேடி வந்தானாம்.  'மன்னா.. எனக்கு நரம்புவலி, முதுகுவலி, சுளுக்கு என்று பல வலிகள்.. நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும்' என்றானாம்.  மன்னனும் வண்ண மூலிகைகளைக் கொடுத்தானாம்.  எல்லாவற்றையும் சாப்பிட்ட அரக்கனுக்கு வலி அதிகமாகி விட்டதாம்.  வந்த கோபத்தில் அரசனைக் கடலில் எறிவதாகச் சொன்னானாம்.  ராஜாவை மன்னித்து விடும்படி ராணி அரக்கனிடம் மன்றாடினாளாம்.  அரக்கனோ மனமிறங்கி, 'சரி, ஒன்று செய்கிறேன்.  இதோ இருக்கிறதே கிளி.. இதை உன்னிடம் விட்டுச் செல்கிறேன்.  மன்னனோடு கிளியையும் சேர்த்துத் தூக்க முடியவில்லை. முதுகுவலி அதிகமாகிறது. நீ கிளியோடு ஏழு கடல் ஏழு மலை தாண்டி உன் கணவனைக் கண்டுபிடிக்க வா.  இல்லையெனில் உன் கணவனையும் கொன்று உன்னையும் கொல்ல வருவேன்' என்று கூறி ராஜாவோடு மறைந்து விட்டானாம்" என்றாள் இளவரசி.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் அந்த ஏழுமலை?" என்று எழுந்து உட்கார்ந்தான் ஒரு காவலன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏழுமலையில்லை.  ஏழு கடல் ஏழு மலை" என்றாள் இளவரசி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன? ஏழு கடல், ஏழு மலையா?" என்று எழுந்து உட்கார்ந்தார் மந்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியெனில் நாம் வீணாகச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.. அரக்கன் இருக்குமிடம் எனக்குத் தெரிந்துவிட்டது" என்றார் மந்திரி.  "அரசனை எழுப்புங்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் புங்கவர்மனை எழுப்பினார்கள்.  "அரசே, அரக்கன் இருக்குமிடம் எனக்குத் தெரியும்" என்றார் மந்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் அரக்கன்.. என்ன இடம்?" என்ற புங்கவர்மன் சுதாரித்து, "சொல்லுங்கள்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னா... ஏழு கடல் ஏழு மலைகள் கடந்தால் வருவது நம் உலகின் எதிர்முனையில் இருக்கும் அமாரிகோ எனும் நாடு.  அதைத்தான் அரக்கன் சூட்சுமமாகச் சொல்லியிருக்கிறான்" என்றார் மந்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;"மந்திரியாரே.. அப்படியே சென்றாலும் அரக்கனுடைய முதுகுவலியைக் குணப்படுத்தி என் கணவரை எப்படி மீட்பது?" என்று கலங்கினாள் இளவரசி.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரி புன்னகைத்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"அதிகம் புன்னகைக்காதீர்கள். அரையிருட்டில் பயமாக இருக்கிறது" என்றான் புங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கவலைப்படாதீர்கள் இளவரசி.. அமாரிகோ நாட்டில் வலி நிவாரண நிபுணர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  ஒன்று குணப்படுத்துவார்கள் அல்லது மருந்து கொடுத்தே கொன்றுவிடுவார்கள்.  எப்படியும் நமக்கு நன்மையே.. உங்கள் கணவரை மீட்டுவிடலாம்.  அமாரிகோ போகும் கழுகு விமானத்திலேறி நாம் நாளையே பயணம் செய்வோம்" என்ற மந்திரியை நன்றியோடுத் தழுவிப் பாராட்டினான் புங்கன்.  அடுத்து இளவரசியை மகிழ்ச்சியோடு தழுவலாம் என்று முனைந்த போது சட்டக்கிளி அலறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;இ&lt;/b&gt;ரண்டு நாட்களுக்குப் பின் அமாரிகோவில் முழு வேர்க்கடலை உரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அரக்கனைப் பிடித்தார்கள்.  புங்கன் அரக்கனிடம் இளவரசியின் கணவனை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டான்.  அரக்கன் "என் உடல்வலி மிகவும் மோசமாகி விட்டது.  தலையிலிருந்து கால் வரை வலிக்கிறது.  எல்லாவற்றுக்கும் இந்த ஆள் கொடுத்த மூலிகையே காரணம்.  குணமாகாமல் இவனை விடுதலை செய்ய மாட்டேன்.  இன்னும் ஒரு வாரத்தில் குணமாகவில்லையெனில் இவனையும் கொன்று உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்" என்று பலமாகச் சிரித்தான்.  பிறகு முகத்தைப் பிடித்துக் கொண்டு வருந்தினான்.  "சிரித்தால் வாய் வலிக்கிறது".&lt;br /&gt;&lt;br /&gt;"அரக்கனாரே, முதலில் இந்தக் கிளியைப் பிடியுங்கள்" என்றான் புங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரக்கன் அலறினான். "ஐயோ, சட்டக்கிளியா?  மறுபடியுமா? இங்கே வரமாட்டீர்கள் என்று நம்பி சட்டக்கிளியைக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு வந்தால், அதை இங்கேயும் எடுத்து வந்தீர்களா?  வரும் வழியில் பசித்தப் பூனை ஒன்றைக் கூடவா பார்க்கவில்லை? கருணையில்லாத கூட்டமாக இருக்கிறதே!" என்று நடுங்கினான். &lt;br /&gt;&lt;br /&gt;"நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற காவலன், சரேலென்று கிளியைப் பிடித்து ஒரு பைக்குள் திணித்தான்.  வயிற்றை எதிர்பார்ப்புடன் தடவிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அரக்கனாரே.. உங்கள் வலிகளைப் போக்கும் வழியைச் சொல்கிறேன். என்னைத் தொடர்ந்து வாருங்கள்" என்றார் மந்திரி.  &lt;br /&gt;&lt;br /&gt;புங்கவர்மன் தலைமையில் எல்லோரும் மந்திரியைப் பின் தொடர்ந்தார்கள்.  அரக்கனும் புலம்பிக் கொண்டே நடந்தான்.  நெடுந்தூரம் சென்றபின் நின்றார்கள்.  மாலை மயங்கி இரவு தொடங்கியிருந்தது.  "அதோ பாருங்கள்.. சிவப்புச் சட்டை அணிந்த அந்தக் கூட்டத் தலைவனை கவனியுங்கள்.."&lt;br /&gt;&lt;br /&gt;முழு நிலவின் ஒளியில் அங்கே ஒரு கூட்டம் நேராகவும் தலைகீழாகவும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தது.  அரக்கன் அவர்களையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். "இவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்களே!" என்றான். சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் தலைகீழாக நடந்து அவர்களை நோக்கி வந்தார்.  அரக்கனை இழுத்துக் கொண்டு ஆடத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowscriptaccess="always" width="310" src="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/player.swf" height="260" allowfullscreen="false" flashvars="height=260&amp;width=310&amp;file=http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/pthril.flv&amp;backcolor=0x000099&amp;frontcolor=0xFFFF99&amp;lightcolor=0xFFFFFF&amp;screencolor=0xFFFFFF&amp;showstop=true&amp;usefullscreen=false&amp;autostart=false&amp;autoscroll=true&amp;repeat=list"/&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆடி முடித்ததும் அரக்கனுக்கு மகிழ்ச்சி.  "ஆகா! மூலிகையை நம்பி இப்படி ஆடிப்பாடி மகிழ்வதை மறந்தேனே! என்ன ஆட்டம்! என்ன ஆட்டம்! என் வலியெல்லாம் போய்விட்டது!" என்றபடி இளவரசியின் கணவனை விடுதலை செய்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;வாக்களித்தபடியே புங்கவர்மனுக்குக் குறைந்த வட்டியில் நிறைந்த கடன் கொடுத்த இளவரசி, கணவனை இழுத்துக் கொண்டு ஓடினாள். &lt;br /&gt;&lt;br /&gt;"வாருங்கள் மன்னா, கிளி பிரியாணி காத்திருக்கிறது" என்று புங்கவர்மனை இழுத்துக் கொண்டு ஓடினார் மந்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்புச் சட்டைக்காரர் பேந்த விழித்துக் கொண்டிருந்தார்.  "இனி நீயே என் மருத்துவன்" என்றபடி அரக்கன் இழுத்துக் கொண்டு ஓடினான் அவரை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-5366614099963434149?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/5366614099963434149/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=5366614099963434149&amp;isPopup=true' title='28 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/5366614099963434149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/5366614099963434149'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/2k11.html' title='வந்தவளை  - எங்கள் சவடால் 2K+11'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5380368967320235756</id><published>2011-12-03T09:37:00.019-06:00</published><updated>2011-12-11T19:30:39.829-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>ரெயில்வே ஸ்தானம்</title><content type='html'>&lt;span style="color: #003300; font-size: 120%;"&gt;&lt;b&gt;போக்கற்ற சிந்தனை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;div style="margin-left: 1cm; line-height: 150%"&gt;&lt;b&gt;வ&lt;/b&gt;சந்த காலம், காலை நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில், திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில், சுமார் நூறு பிரயாணிகள் கூடியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். இன்ன ஊரில், இன்ன தேதியில், இன்னாருக்கு சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள். பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலே இருந்து தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுமங்கலி பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலை குனிந்து நின்றுகொண்டு, போவோர் வருவோரைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில முகம்மதிய ஸ்த்ரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேங்குழல், சுசியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரரும் பகற்கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணி நேரம் தாமசமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. சிறிது தூரம் உலாவி வரலாமென்று கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலே மிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரை தைத்த மஸ்லின் சட்டை, சரிகைக் கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூரணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்த மீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்றுகிறது. எனக்கு மிகவும் பரிதாபமுண்டாயிற்று. அவன் முன்னே போய் நின்று கொண்டு, "தம்பி, ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடத்தில் எப்படியோ நல்லெண்ணம் உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம் கொள்ளாமல் "ரயில் எப்போது வரப் போகிறது?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்றைக்கு ஒரு மணி நேரம் தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப் பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நான், "சிறு பிராயத்திலே காசிப்பட்டணத்தில் எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று. ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷை தான். முகலாய ராஜாக்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்த தேசத்துப் பாஷையாகிய ஹிந்தியையே பொதுவாகக் கைக்கொண்டார்கள். ஹிந்தி, சம்ஸ்கிருத பாஷையின் சிதைவு. அதை தேவநாகரியில் எழுதி ஸ்வயம்புவாகப் பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டு பல பார்ஸி அரபு மொழிகளைக் கலந்து ஹிந்துஸ்தானி அல்லது உருது என்று பெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷையென்று அர்த்தம். அதாவது, முகலாய சேனைகள் கூடாரம் அடித்துக் கொண்டு பல தேசத்துப் போர் வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்புப் பாஷை. ஹிந்தியிலும் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன். இது நிற்க, நீ வருத்தப்பட்டுக் கொண்டிருந்த காரணம் யாது?" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முகமதியப் பிரபு சொல்லுகிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களிடம் சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுமென்று என் மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் மற்றவர்களிடம் சொல்லக் கூடியதன்று. எனினும் உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தை தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்த புண்ணியமுண்டு, இந்த உபகாரத்தை நான் இறந்து போகும் வரை மறக்க மாட்டேன்".&lt;br /&gt;&lt;br /&gt;"முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும், தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார் பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். நான் என் பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதா மிகவும் ஏழையாக இருந்தார். எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய லாட்டரிச் சீட்டு ஏலம் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ பத்து ரூபாய் கடன் வாங்கி அனுப்பினார். அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணி விடவேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய்ச் சீட்டு அவருக்கு விழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு நடத்தின வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டு கோடிக்கு அதிபதியாகி விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத்தொடங்கிற்று. என் பிதா நல்ல புத்திமான். நஷடம் வரத் தொடங்கிய மாத்திரத்திலே திடீரென்று வியாபாரங்களையெல்லாம் நிறுத்திக் கொண்டு, பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திகள் வாங்கி மாளிகை கட்டிக் கொண்டு, தம்மால் இயன்றவரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார். நான் பதினைந்து வயதாக இருந்த போது அவர் இறந்து போய் விட்டார். அவர் சொத்தெல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தை இறக்குந்தறுவாயில் சிறிய தகப்பனாருக்கு சில லக்ஷங்கள் பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்து, என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்து கொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொள்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம் புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. என் சிறிய தகப்பனார் என் தாயாரின் அனுமதியில்லாமலே விவாகத்தை முடித்து வைத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார், என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய்விட்டது. சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது. எல்லாம் அவர் வசத்தில் விட்டுவிட்டேன். அவரும் என் சொத்தில் தம்மால் இயன்றவரை தாசிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு குடல் வெடித்துச் செத்துப் போனார். சொத்தை நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சொத்து கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. என் மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந்தரமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ, ஸ்டேஷன் பக்கத்தில் முகமமதிய ஸ்த்ரீகள் கூட்டம் தெரிகின்றதோ? நடுவே இருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை இல்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை. அவளுக்கு ஒரு நகை வாங்கிக்கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையைக் கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் மூவரும் முரண்பட்டு என் பிராணனை வதைக்கிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப் படுகிறது. நான் என்ன செய்வேன்?&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி 'அடே! நீ உன் பத்தினிமார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்து கொள்ள விட்டு விடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக் கொள். உன் துக்கம் தீரும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய மனதில் தோன்றுவது தான் கனவாக வருகிறதென்பதை நான் அறிவேன். ஆனாலும், நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளை என்று தான் கருதுகிறேன். யாரைத் தள்ளுவது யாரை வைத்திருப்பது என்று என் புத்திக்குத் தென்படவில்லை. அதற்காகத் துக்கப்படுகிறேன்" என்று முகம்மதியப் பிரபு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் ரயில் வருகிற சத்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் திடுக்கென்றெழுந்து "சலாம்! சலாம்!" என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான். நானும், "நல்ல வேளை, இந்தக் கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்பு சொல்லுமுன் ரயில் வந்ததே" என்று மகிழ்ச்சியோடு ரயிலேறப் போய்விட்டேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-left: .5cm;"&gt;இதுவரை நீங்கள் படித்த கதை, பாரதியார் எழுதி 1920ல் வெளியான 'ரெயில்வே ஸ்தானம்' கதையின் சுருக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;என் அறிவையும் மனதையும் தொட்டக் கதைகளில் இது ஒன்று. அந்த நாளில் இப்படி கதை எழுதி முடித்திருப்பது புரட்சி. பின்வந்த இது போன்ற பல கதைகளுக்கு முன்னோடி. சமுதாய நோக்கோடு எழுதப்பட்ட இலக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, உங்களுக்கு ஒரு கேள்வி. பாரதியின் இந்தக் கதையில் பிழை இருக்கிறது. கருத்துப் பிழை. அது என்ன பிழை என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;பிழையையும், அந்தப் பிழை சுட்டிக்காட்டப்பட்டப் பின்னர், பாரதி என்ன செய்தாரென்பதையும் சொல்கிறேன். ரெயில்வே ஸ்தானம் கதை பற்றி, தான் எழுதிய 'முகம்மதிய ஸ்த்ரீகளின் நிலமை' என்ற கட்டுரையில் தொடர்கிறார் பாரதி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-left: 1cm; line-height: 150%"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் என்னிடம் முதலாவது கேட்ட கேள்வி: "ரெயில்வே ஸ்தானம் என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாகவே நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதை தானா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வெறும் கற்பனை" என்று நான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கருத்துடன் எழுதினீர்?" என்று அவர் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கதையென்றால் கற்பனைப் புனைவையே நான் முக்கியமாகக் கருதுவேன். எனினும் என்னை மீறியே கதைகளிலும் தர்ம போதனைகள் நுழைந்து விடுகின்றன. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால், அதனின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மையாகும்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்த முஸ்லிம் நண்பர், "அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பிழை?" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படிச் சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்து கொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி 'ஹராம்' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடனிருக்கையில் அவளுடன் பிறந்த மற்ற ஸ்த்ரீயை ஒரு முஸ்லிம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டவுடன் நான், "சரிதான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாததலால், அது போலே முகம்மதியர்களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதிவிட்டேன். எனவே அந்த முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றி,  தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி எழுதிவிடுகிறேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் ஒரு திருத்த அறிக்கையையும் வெளியிட்டார்:&lt;br /&gt;&lt;br /&gt;"ரெயில்வே ஸ்தானம் என்ற கதையில் நான் கூறிய தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும், பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லிம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றி மேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லா ஹூத்த ஆலா அருள் புரிவாராக".&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-left: .5cm;"&gt;இதிலிருந்து எனக்கு உண்டான எண்ணங்களில் குறிப்பிடும்படி இரண்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;1) பாரதியும் சில நேரம், விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார் என்ற மேலோங்கும் வியப்பு&lt;br /&gt;2) பாரதி சொல்லியிருப்பது போல், சகோதரிகளை மணம் புரிவது தவறென்று இந்து மதத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்ற ஐயம். &lt;br /&gt;&lt;br /&gt;வியப்பு என்னோடு இருக்கட்டும்.  பாரதியை எண்ணி வியப்பதில் பிறவியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. ஐயம் தீர வழி உண்டா? உங்களுக்கு இதைப் பற்றித் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் கதைகளைப் போல் அவருடைய கட்டுரைகளும் காலத்தை வென்றவை. பாரதியின் கவிதைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புகளை உங்களுக்கு, பூத்தூரிகை வழியாக, அறிமுகமோ நினைவோ படுத்த எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பை எண்ணி வியக்காத நாளே இல்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆ&lt;/b&gt;சிரிய நண்பர் அரசனின் நினைவில், அவர் எழுதியப் பதிவு ஒன்று. முண்டாசுக்காரனின் நினைவிலும்.&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11/12/11&lt;br /&gt;இதை ஏற்கனவே பதிவாக ஜனவரி மாதம் வெளியிட்டதை மறந்து மீண்டும் வெளியிட்டிருக்கிறேன். awkward. சுட்டிக்காட்டிய நண்பர் ராமசுப்ரமணியத்துக்கு நன்றி.  &lt;br /&gt;மன்னிக்க வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-5380368967320235756?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/5380368967320235756/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=5380368967320235756&amp;isPopup=true' title='18 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/5380368967320235756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/5380368967320235756'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/12/blog-post.html' title='ரெயில்வே ஸ்தானம்'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6636808170316947752</id><published>2011-11-25T06:48:00.009-06:00</published><updated>2011-11-26T10:06:05.634-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>மெல்லிசை நினைவுகள்</title><content type='html'>&lt;span style="color: #003300; font-size: 120%;"&gt;&lt;b&gt;வெத்து வேலை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;நே&lt;/b&gt;ற்று நள்ளிரவு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போல எல்ஆர் ஈஸ்வரி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். காரணம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் மாலை உள்ளூர் பள்ளிக்கூட ஜேஸ் விழாவில் பதின்ம வயதினரின் இசையை அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று வந்த மெட்டு பாதித்தது.  எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே இந்தக் குழல் என்று நினைத்தேன்.  எந்தப் பாடல் எந்தப் பாடல் என்று என்னையே கேட்டுக் கேட்டு நொந்து நொந்து போனேன். பட்டத்து ராணி பார்க்கும் பார்வை. அட!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஜேஸ் கேட்க ஆசை வந்தது. அதான் முதல் வரியில் குறிப்பிட்ட நள்ளிரவு நிகழ்வு. தமிழ்த் திரையிசையில் ஓசைப்படாமல் ஜேஸ் புகுத்திய பெருமை விஸ்வநாதன் ராமமூர்த்தியைச் சேரும். எல்ஆர் ஈஸ்வரியின் குரலில் எம்எஸ்வி நமக்கு &lt;i&gt;(எனக்கு மட்டும்:)&lt;/i&gt; கொடுத்த சில ஜேஸ் பாணிப் பாடல்கள் அருமையானவை. பாடல்களுக்கு என்னை விட வயது அதிகமென்றாலும் இன்னும் கேட்க முடிகிறதே! மெல்லிசை மன்னன் என்றால் மெல்லிசை மன்னன் தான்.  எல்ஆர் ஈஸ்வரிக்கு யாரும் எந்தப் பட்டமும் தரவில்லையே, ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; • 'வரவேண்டும் ஒருபொழுது' பாடல் தமிழ்த் திரையிசையில் ஒரு மைல்கல்.  ஈஸ்வரி மட்டுமே பாடியிருக்க முடியும். பதின்ம வயதில் நண்பன் சாம்பா அறிமுகம் செய்துவைத்தப் பாடல். &lt;br /&gt;&amp;nbsp; • 'பூவுக்கு முகம் காட்டுவேன்' பாடலில் குழலிசை அற்புதம். இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பான போது, 'என்னடா பாட்டு இது, காட்டுவேன் காட்டுவேன்னு பொம்பளை பாடிட்டிருக்கா, நீயும் கேட்டுட்டிருக்கே?' என்று ஒருமுறை என் மாமா ரேடியோவை நிறுத்தியதை இன்றைக்கும் வெறுக்கிறேன் :-)&lt;br /&gt;&amp;nbsp; • 'நான் கண்ட கனவில் நீ' பாடலில் 'துடித்ததென்னவோ' என்று உடுக்கை போல் நாவை உருட்டும் வித்தை எல்ஆர் ஈஸ்வரிக்கு மட்டுமே தெரியும். ட்ரம்பெட் சேக்சபோன் துள்ள வைக்கும். ஜெயலலிதா வேறேயா? ஹ்ம்ம்ம்ம்!&lt;br /&gt;&amp;nbsp; • 'கண்களுக்கென்ன' மெட்டு எம்எஸ்வி திரும்பத் திரும்ப உபயோகித்த மெட்டு.  இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பேங்கோஸ், ட்ரம்பெட் என்று துவக்கத்தில் பின்னுவார் பாருங்கள், சடாரென்று நிறுத்தி ஸ்னேர் டிரம்ஸ், கிடார் ஸ்ட்ரம், ஹம்மிங் பின்னணியில் ஈஸ்வரியின் 'ஏதோ ஒரு அற்புதக் கற்பனை' வரிகள்.. சொக்க்க்க்கும்.&lt;br /&gt;&amp;nbsp; • 'மல்லிகை ஹொ'  பாடலுக்கு இணையாக தமிழில் இன்னொரு பாடல் வரவில்லை. என் டாப் 10. இந்தப் பாடலுக்காக ஈஸ்வரிக்கு பட்டம் பதக்கம் எதுவும் தராதது உலக மகா குற்றம்.&lt;br /&gt;&amp;nbsp; • 'உறவினில்' பாடல் அதிகம் பிரபலமாகவில்லை என்று தோன்றும்.  பாடலின் 1:09 கணத்தில் 'கன்னம் கனி.. இனியமொழி என்றும் ஹனி' வரிகளின் இறுதியில் திடீரென்று லட்சம் வயலின் பாய்ந்து திடுக்கிட வைக்கும். &lt;i&gt;பாவி எம்எஸ்வி, இப்படியா திடுக்கிட வைப்பது?  இன்னொரு தடவைடா கண்ணா, ப்லீஸ் ப்லீஸ்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கும் பிடித்தால் துள்ளலாம், சொக்கலாம், திடுக்கிடலாம். (ஒலியைச் சற்றே குறைத்துக் கேட்க வேண்டுகிறேன். எல்லாப் பாடல்களும் சீராக ஒலிதிருத்த மறந்துவிட்டது, மன்னிக்கவும்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:70%;"&gt;மெல்லிசை நினைவுகள் | எல்ஆர் ஈஸ்வரி  | 2011/11/25 &lt;/span&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="false" allowscriptaccess="always" flashvars="height=70&amp;amp;width=360&amp;amp;file=http://s105737641.onlinehome.us/blog/msuzhi/text/mn20111125.xml&amp;playlist=bottom&amp;amp;backcolor=0x000099&amp;amp;frontcolor=0xFFFF99&amp;amp;lightcolor=0xFFFFFF&amp;amp;screencolor=0xFFFFFF&amp;amp;showstop=true&amp;amp;usefullscreen=false&amp;amp;autostart=false&amp;amp;autoscroll=true&amp;amp;repeat=list" height="70" src="http://s105737641.onlinehome.us/blog/msuzhi/video/player.swf" width="360"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-6636808170316947752?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/6636808170316947752/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=6636808170316947752&amp;isPopup=true' title='20 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/6636808170316947752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/6636808170316947752'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/11/blog-post_25.html' title='மெல்லிசை நினைவுகள்'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8167272848430834832</id><published>2011-11-12T13:25:00.057-06:00</published><updated>2011-11-13T20:40:34.965-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>சோட்டு</title><content type='html'>&lt;span style="color: #3333b7; font-size: 120%;"&gt;&lt;b&gt;சிறுகதை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;உ&lt;/b&gt;றக்கம் விலகி விழித்தேன். அருகே கடிகாரம் ஆயிரத்து நூற்றுப்பதினொன்று என்றது. அலாரம் வைத்த, கைக்கடக்கமான டிஜிடல் கடிகாரம்.  என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்!  கெமிஸ்ட்ரிக்கு பதில் எலக்ட்ரானிக்ஸ் படித்திருக்கலாம்.. ஹ்ம்ம். தொடர்ந்து யாரோ கதவைத் தட்டுவது கேட்கக் கலைந்தேன். விலகிப் படுத்திருந்த மனைவியை எழுப்பினேன். "மைத்லீ... யாரோ கதவைத் தட்டறா.. போய்ப்பாரு".&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கியிருப்பாள் என்று நினைத்தவன், ஏமாந்தேன்.  பெண் சிறுத்தை போல் சீறினாள்.  "நல்லா இருக்கே?  நான் போய் கதவைத் தொறக்கணுமா? அதுவும் அர்த்த ராத்திரிலே.. யாராவது பொட்டுல ஒண்ணு வெச்சா என்னாறது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டீ... நான் போய் கதவைத் தொறந்து என் பொட்டுல ஒண்ணு வச்சா பரவாயில்லையா?  அப்றம் நாறிப்போய்டுவேள்டீ.."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப மட்டும் என்ன கிழியறது..? மதுராந்தகத்துல ஒண்ணரை ஏக்கரா நெலத்தோட அழகாப் பண்ணை வீட்டை விட்டுட்டு இங்க ரெண்டு ரூம் வீட்டுல படி ஏறி எறங்கி நாறாம என்ன நடக்கறதாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்? பம்பாய் வாசம் நாறதா? எங்கியோ அத்துவானத்துல வரட்டி தட்டிண்டிருந்துட்டு.. அதுதான் அசல் நாத்தம்.."&lt;br /&gt;&lt;br /&gt;"நிறுத்துங்கோ.. இது மட்டும் அத்வானமில்லையாக்கும்..  இருந்து இருந்து ஒரு மாதர் சங்கத்துல சேந்தா அதுக்கு போக விடலை நீங்க.. அப்றம் பம்பாய் என்ன வேண்டிக்கிடக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கோபம் எனக்கு நன்றாகப் புரிந்தது.  மாலை மாதர் சங்க மீடிங் போக வேண்டாமென்று தடுத்துவிட்டேன்.  இன்னும் பத்து நாளைக்கு எந்தப் பேச்செடுத்தாலும் மாதர் சங்கத்தை இணைத்து முரண்டு பிடிப்பாள். பெண் சுதந்திரம் என்ற பெயரில் ஏதோ கூத்தடிக்கிறார்கள். கதவு தட்டப்படுவதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தேன்.  ஒரு ஆர்க்யூமென்ட் என்றால் அதை ஜவ்வாக இழுத்து முடித்துவிட்டு மறுகாரியம் பார்க்கவேண்டும். பிராமணத் தம்பதிகளின் குணச்சித்திரம். "மைத்லீ.. சாயந்திரம் அணுசக்தி அலாட்மென்ட் ஆர்டர் வரலையேனு போய்ப் பாக்கறது முக்கியமில்லையா?  இந்த மாதர் சங்க மீடிங் விட்டா அடுத்த மாதர் சங்க மீடிங் ரெண்டே நாள்ல வரப்போறது..."&lt;br /&gt;&lt;br /&gt;கதவை வேகமாகத் தட்டினார்கள். பிக்ரம் என்றால் இந்நேரம் குரல் கொடுத்திருப்பான்.  அல்லது கதவைப் பெயர்த்தெடுத்திருப்பான்.  யார் தட்டுகிறார்கள்? மைதிலி தொடர்ந்தாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;".. க்கும்..ஒண்ணரை வருஷத்துல அலாட் ஆயிடும்னேள்.. இங்க வந்து ரெண்டு வருஷமாய்டுத்து.. இப்ப இன்னும் ஒண்ணரை வருஷம்ங்கறேள்.. நன்னா நாறித்தான் கெடக்கு எல்லாம்.. அந்த மகாலிங்கத்துக்கு மட்டும் வந்து நாலே மாசத்துல அலாட் ஆயிடுத்து. பன்னெண்டு வயசுல பொண்ணு நமக்கு.. நாளைக்கே பெரியவளாப் போறா.. இங்கே தூரம்னு உக்காரக் கூட இடமில்லை. ஒண்டிக்கட்டை மகாலிங்கத்துக்கு எப்டி அலாட் ஆச்சுனு கேட்டேளா? இல்லியே..அதுக்கெல்லாம் தைரியம் வேணும்.."&lt;br /&gt;&lt;br /&gt;"மகாலிங்கத்துக்கு எப்டி அலாட் ஆச்சுனு தெரிஞ்சுண்டு என்னடி பண்றது? கதவைத் தட்ட்றான் பார்.. ப்லீஸ்.. போய்ப் பாருடி மைத்.. ஆர்க்யூமென்டை வந்து வச்சுக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்டித் தட்றானே?.. பிக்ரம் எங்க போனான்? ஏதாவது ஜிந்தாபாத் போஸ்டர் ஒட்டப் போயிருப்பான் கடங்காரன்.. தட்டற தட்டல்ல கொழந்தை முழிச்சுண்டுறப் போறா..நீங்களே போய்க் கதவைத் தெறங்கோ..யாருனு பாருங்கோ.. யாரா இருந்தாலும் 'இது பொம்னாட்டிகள் இருக்குற வீடு, போய்ட்டு வா'னு சொல்லிட்டு வாங்கோ.. யாராவது ராப்பிச்சையா இருக்கும்.. மாடியேறி வந்திருக்கு பாருங்கோ.."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னால எழுந்துக்க முடியலே மைத்லீ.. சாய்ந்தரம் பத்து கிலோ அரிசியை மாடிக்கு எடுத்துண்டு வந்ததுல முதுகு பிடிச்சுண்டு.. தட்டற தட்டுல முழிச்சுக்கறாளோ இல்லியோ, உன் கத்தல்ல முழிச்சுக்கப் போறா... மைத்லீ.. சித்த போய் பாரேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அப்பவே முழிச்சுண்டாச்சு.. நீங்க ரெண்டு பேர் ஆர்க்யூ பண்றதைக் கேட்டுண்டிருந்தேன்.. ஐ டோன்ட் வான்ட் டு கெட் மாரீட்பா" என்று மூலைப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் வித்யா. &lt;br /&gt;&lt;br /&gt;"இந்தாத்துல எல்லாத்தையும் நானே கவனிக்க வேண்டியிருக்கு.." என்றபடி எழுந்த மைதிலி, வித்யாவை அதட்டினாள். "இந்தாடி.. தஸ்சுபுஸ்சு.. படுறி.. காத்தால ஸ்கூலுக்குப் போகணும்". &lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியின் தைரியம் எனக்கு இல்லை.  மனதுக்குள் அவளுக்கு நன்றி சொல்லியபடி போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.  கதவைத் திறக்கும் ஒலி கேட்டது. நொடிகளில் கதவை இழுத்து மூடும் ஒலி. தொடர்ந்து மைதிலியின் அலறல்.&lt;br /&gt;&lt;br /&gt;முதுகு வலியை மறந்து அடித்துப் பிடித்து எழுந்து ஓடினேன். எனக்கு முன்னால் என் மகள் வித்யா ஓடினாள். "என்னாச்சும்மா?".&lt;br /&gt;&lt;br /&gt;மைதிலி வெலவெலத்து நின்றிருந்தாள்.  அவள் எதிரே ஒரு சிறுவன். &lt;br /&gt;&lt;br /&gt;"யாருடீ இது?"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பிக்ரம்.. இந்தப் பையனோட.. வெளில நின்னுண்டிருந்தான். கதவைத் தொறந்ததும் இதை உள்ளே தள்ளிட்டு.. 'மூச்!'னு ஜாடை காட்டிட்டு.. அவனே கதவைச் சாத்திண்டு கீழே ஓடிட்டான்"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரிவன்? எதுக்கு நம்மாத்துல.."&lt;br /&gt;&lt;br /&gt;"கேள்வி என்ன வேண்டிக்கிடக்கு... மொதல்ல இதை வெளில தள்ளி கதவைச் சாத்துங்கோ சொல்றேன்..." என்றாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;அவள் சுட்டிய 'இதை' இன்னொரு முறை பார்த்தேன். ஏழு வயதிருக்கலாம். அரை நிஜார் போட்டிருந்தான்.  முழங்கால் அருகே காயங்கள். சட்டைக்குப் பதில் துண்டு போர்த்தியிருந்தான்.  செக்கச்செவேலென்று நிறம்.  கன்னத்தில் சூடு காயம் போல் தெரிந்தது. பெரிய கண்கள். சுருள் சுருளாய் தலைமுடி.  &lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா.. பாவமா இருக்குமா.. அனாதையா இருக்கும்" என்றாள் வித்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"உள்ளே போடி தடிச்செருக்கி.. போய்ப் படுறி" என்று ஆத்திரத்தை மகள் மீது செலுத்தினாள் மைதிலி.&lt;br /&gt;&lt;br /&gt;"எக்தம் ஜங்க்லி ஹை" என்று முணுத்தபடி என்னருகே ஒட்டிக்கொண்டாள் வித்யா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சிறுவன் எங்களையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.  பெரிய கண்களில் சிறியக் கண்ணீர்த்துளிகள்.  பசியும் பயமும் முகத்தில் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ உள்ளே போய்ப் படு வித்யா.. அம்மா சொல்றதக் கேளு" என்று நான் சொல்லவும், வெளியே கூச்சல் கேட்டது.  அவசரமாக ஜன்னலுக்குச் சென்றோம். பிக்ரம் யாருடனோ கத்திப் பேசிக்கொண்டிருந்தான்.  பெங்காலி மராத்தி கச்சடா இந்தி என்று இருவரின் சச்சரவும் கேட்டது.  மெள்ள மற்ற வீடுகளின் வெளிச்சம் கீழே பரவத் தொடங்கியது.  சில நிமிடங்களில் ஒரு பெண்ணுருவம் கீழே தெரிந்தது. பூரணி விஸ்வேஸ்வரன். செம்பூர் மாதர் சங்கக் காரியதரிசி.   எந்த ஆணும் கீழே இறங்கி வரவில்லை. என்னைப் போலவே ஜன்னலோரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரணியும் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டது போல் தெரிந்தது. சிறிது நேரத்தில் அமைதியானது.  பிக்ரமுடன் இருந்த ஆள் வெளியேறினான்.  பிக்ரமும் பூரணியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு இருவரும் எங்கள் பிளாட் படிகளை நோக்கி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp பிக்ரம் எங்கள் ஜட்டி நகருக்கும் அணுசக்தி காலனிக்கும் பொதுவான வாச்மேன். எங்களுக்கு முன்னாலிருந்து அவன் வாச்மேனாக இருக்கிறான்.  முப்பது வயது கூட இருக்காது.  நல்ல உயரம், உடல்வாகு. பிஏ படித்த வேலையில்லா பட்டதாரி என்பார்கள். சிலர் ஹைஸ்கூல் என்பார்கள். வாச்மேன் வேலையை அவனாகவே வலிய எடுத்துக்கொண்டதாகச் சொல்வார்கள். இந்தி, மராட்டி, பெங்காலி, ஆங்கிலம் என்று சரளமாகப் பேசுவான். அணுசக்தி காலனி அலாட்மென்டை எதிர்பார்த்து, சென்ற ஐந்து வருடங்களில் இங்கே வந்து சேர்ந்த என் போன்றத் தமிழர்களிடமிருந்து தமிழ் கற்றுக் கொண்டுவிட்டான்.  என்னடி ராக்கம்மா பாட்டை, என் கண்ணு மூக்கு பல்லு நாக்கு என்று பார்ட் பார்டாகப் பிரித்துப் பாடுமளவுக்கு ஞானம் வந்துவிட்டது.  அத்தனை பேரையும் தெரியும். பூரணி சில நேரம் பிரா போடுவதில்லை என்று என்னிடம் ரகசியமாகச் சொல்லிச் சிரிப்பான். ஒருவேளை மைதிலியையும் கவனிக்கிறானோ என்று தோன்றும். பிள்ளைகளுடன் கால்பந்து க்ரிகெட் விளையாடுவான். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செம்பூர் காரியதரிசி. அவ்வப்போது காணாமல் போய்விடுவான். இரண்டு நாள் பொறுத்துத் திரும்பி வருவான்.  சில சமயம் காலனியின் வீடுகளில் இந்திரா காங்கிரசை எதிர்த்து நோட்டீஸ் வழங்குவான்.  அவனுடைய அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காவிட்டாலும் அவனுடைய உள்ளூர்ச் செல்வாக்கும் பாதுகாப்பும் எங்களுக்குத் தேவைப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp கதவைத் தட்டாமலே திறந்தேன். பூரணியும் பிக்ரமும் உள்ளே வந்தார்கள்.  தொடர்ந்து மணிகண்டன், முரளி, முரளியின் அப்பா, தங்கத்துரை, தங்கத்துரையின் மாமனார், ஜேம்ஸ், விஸ்வேஸ்வரன், வேல்முருகன், சாய்ராம் என்று அக்கம்பக்க பிளாட்களிலிருந்து தம்பதிகளோடு வந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் சிறுவனைப் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்கள் பொறுத்து, பிக்ரம் பேசினான்.  மைதிலிக்கு நன்றி சொன்னான். "சோட்டு ஸே மிலியே" என்றான். சிறுவனை அருகில் இழுத்துக் கொண்டான். "இன்னிலந்து இவன் இங்கே இருப்பான்.  நீங்க எல்லாரும் இவனுக்கு சாப்பாடு டிரஸ் கொடுக்கணும்" என்றான் சர்வ சாதாரணமாக.&lt;br /&gt;&lt;br /&gt;வேல்முருகனுக்குக் கோபம் வந்து விட்டது. "யாருப்பா இந்தப் பையன்? என்னவோ நீ பாட்டுக்கு சொந்தம் கொண்டாடுற? எங்களையும் இழுத்து விடுறே? நாங்க ஏன் இந்தப் பிள்ளைக்கு சோறாக்கணும்? துணி கொடுக்கணும்?  நல்லா தூங்கிட்டிருந்தவங்களை எழுப்பி என்ன கதையடிச்சிட்டிருக்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;பூரணி மறித்துப் பேசினார். "இந்தப் பையன் பிக்ரமோட அக்கா பையனாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதனால?" என்றார் திருமதி மணிகண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜி.. இந்தப் பையனோட அப்பா அம்மா ரெண்டு பேரும் க்ளோஸ். சூய்சைட் செஞ்சுகிட்டாங்கோ.  பாவம் இந்தப் பிள்ளையை நான் எடுத்துட்டு வந்தேன்.  என் கிட்டே அவ்ளோ வசதியில்லே. அதான் நீங்க எல்லாரும் உதவி செய்யணும்.. நான் உங்களுக்கு எக்ஸ்ட்ரா வேலை எதுனா செய்றேன். மெகர்பானி" என்றான் பிக்ரம்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேறே வேலையில்லே?  யார் பெத்த பிள்ளையோ? இருக்கறவங்களுக்கே இடத்தைக் காணோம்.  இதுல ஊர்ப்பிள்ளைங்களுக்கு ஊஞ்சல் பலகையா?" என்றாள் மைதிலி. வித்யா என்னை இடித்தாள்.  "இஸ்கோ சுப் கரோ" என்றாள் மென்மையாக.&lt;br /&gt;&lt;br /&gt;பிக்ரம் அந்தச் சிறுவனை மையமாக நிறுத்தினான். "ப்லீஸ்.. லுக் அட் ஹிம்.  யூ லேர்னட் பீபில். உங்க வாழ்க்கைல நீங்க எல்லாம் நல்லா மேலே வந்தீங்க.. இவன் என்ன பாவம் செஞ்சான் யோசனை பாருங்கோ. நாம எல்லாம் இவனை வளத்தாவணும்.  அப்னா ஜிம்மேதாரி ஹை.. சஹி ராஸ்தா ஹை"&lt;br /&gt;&lt;br /&gt;சோட்டு எங்களைப் பார்க்காமல் அறையைச் சுற்றிப் பார்த்தான்.  பிறகு என்ன தோன்றியதோ, வித்யாவின் அருகே நின்று கொண்டான்.  வித்யாவைப் பார்த்துப் புன்னகைத்தான். மைதிலி சடாரென்று வித்யாவை இழுத்துக் கொண்டாள். சோட்டு புரியாமல் விழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"போலீஸ்ல சொல்லி அனாதை ஆசிரமத்துல சேத்துடலாமே?" என்றார் ஜேம்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது தான் சரி.  இதுல தலையிடறது மே நாட் பி லீகலி ரைட்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் அந்த ஆளு? உன் கூட சண்டை போட்டானே? ஒரு வேளை அவன் சொந்தமோ என்னவோ.. அவன் கிட்டே விடுறது தானே?" என்றார் தங்கத்துரை.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த ஆளு இந்தப் பையனோட சித்தப்பாவாம்" என்றார் பூரணி.&lt;br /&gt;&lt;br /&gt;"அவருக்குத்தான் உரிமை இருக்கு.  நாம யாரு குறுக்கே வர? பையனை உடனே அவங்க சித்தப்பா கிட்டே சேத்துருங்க" என்றார் மணிகண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ டெல் யூ வாட். நாங்கள்ளாம் ஆளுக்கு பத்து ரூவா கொடுக்கறோம். நான் நூறு ரூவா தனியா குடுக்கறேன்.  பிக்ரம், இந்தப் பையனைக் கூட்டிட்டு அவங்க சித்தப்பா கிட்டே விட்டுரு.  பணத்தையும் கொடுத்துரு.  தட்ஸ் இட், திஸ் சைல்ட் இஸ் நாட் அவர் ரெஸ்பான்சிபிலிடி" என்றார் சாய்ராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிக்ரம் குறுக்கிட்டான்.  "நான் இந்தப் பையனோட மாமா.  எனக்கும் ரைட்ஸ் இருக்குதே? அந்த சித்தப்பா கிட்டே பையனைக் கொடுத்தா ரெண்டே நாளிலே தாராவிலே வித்துருவான்.  பையனை கண்ணு அந்தாவாக்கி பிச்சை எடுக்க வச்சுருவான் மாதாசோத்.." என்று சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான்.  "வெரி சாரி" என்றான்.  "இந்தப் பையன் கொஞ்ச நாள் சர்வைவ் பண்ண உதவி செய்யுங்க. ஹீ நீட்ஸ் பேமிலி.  நீங்க எல்லாரும் நல்ல குடும்பத்துல வந்தவங்க. உங்க குடும்பத்துல ஒருத்தனா இவனை நினைக்க வேண்டாம்.  ஜஸ்ட் என் ஆர்பன்.. அனாத்.. அப்படி நெனச்சு முடிஞ்சப்ப சாப்பாடும் பழைய துணியும் குடுங்க போதும்.. ஆப்கே பேர் பகட்தா மை.. இல்லாட்டி இவனை ரொம்போ கொடுமை படுத்துவாங்க.. பிச்சை எடுக்க வைப்பாங்க.. சாலா மர் பீ ஜாயேகா" என்று சோட்டுவை இழுத்து அணைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நோ.. நோ.. திஸ் இஸ் நாட் ரைட்" என்றார் ஜேம்ஸ்.  &lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் பையன் என்ன ஜாதியோ? வீட்டு சாமியுள்ளுக்குள்ள வருவான்.." என்றார் முரளியின் அப்பா.  "நாங்கள்ளாம் ஆசாரம் பாக்குறவா".  &lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, பேசாம இரு!" என்று அடக்கினார் முரளி.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லைடா.  இப்படி எடத்தைக் கொடுத்துத்தான் பாரு.. இப்ப மடமே இவா கூட்டமா போயிடுத்து.  சாப்பாடு போட்டா போறது.. எத்தனையோ பிச்சை போடலியா.. அதுக்காக இருக்க எடம் கொடுத்து துணி கொடுத்து.. வேண்டாத வேலை" என்று அவர் தொடர்ந்தார்.  முரளி முறைத்து நெளிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்கவங்க தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கணும்" என்று ஒவ்வொருவரும் ஏதோ சொல்லத் தொடங்கினார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாத வம்பை விலைக்கு வாங்குறாப்புல ஆயிடும்"..  "நமக்கென்ன தலையெழுத்து"..  "இந்தப் பிள்ளைக்கு ஏதாவது வியாதி இருக்குமோ?".. "நாம யாருங்க இந்தப் பிள்ளையோட விதியைத் தீர்மானிக்க?"..  "இதுக்கெல்லாம் அரசாங்க செலவுல அனாதை ஆசிரமம் இருக்குங்க"..  "இதெல்லாம் முடியாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் சில நிமிடங்களானது. யாரும் எதுவும் சொல்லவில்லை.  பிக்ரம் சிறுவனை இழுத்துக்கொண்டு, "சோட்டு.. ஆவ்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரணி அவனைத் தடுத்தார். "பிக்ரம்.  உன்னோட வேகமும் மனசும் எங்களுக்குப் புரியுது.  அவசரப்பட்டு யாரும் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.  இதென்ன நாய்க்குட்டி பூனைக்குட்டியா? எ ஹ்யூமன் சைல்ட்.. திஸ் இஸ் மோர் சீரியஸ்.  ஒரு வாரம் யோசிப்போம்.  அதுவரைக்கும் எங்க வீட்டுல இருக்கட்டும். ஒரு வாரம் கழிச்சு... இப் தேர் ஆர் நோ இஷ்யூஸ்.. வீ வில் டிசைட்... ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு.. இப்போ எல்லோரும் போய்ப் படுங்க" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதிலி திடீரென்று, "இன்னிக்கு ராத்திரி எங்க வீட்லயே இருக்கட்டும்.. வந்தாச்சு.. இப்ப சின்னக் கொழந்தையை வெளில எப்படி தள்றது?" என்றாள்.  என்னால் நம்ப முடியவில்லை. வித்யாவின் பார்வையில் திடீரென்று பெருமை தெரிந்தது.  மைதிலியின் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வெரி குட் மைதிலி.  செடில்ட். நாளைலந்து எங்க வீட்ல இருக்கட்டும்" என்று மைதிலியைத் தட்டிக் கொடுத்து வெளியேறியப் பூரணியைத் தொடர்ந்து ஒவ்வொருவராக வெளியேறினர்.  கடைசியில் பிக்ரம் மைதிலியையும் என்னையும் கும்பிட்டான்.  "ஆப் லோக் இஸ்கோ துபாரா ஜனம் தியே.. பகுத் பகுத் ஷுக்ரியா" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சோட்டுவுக்கு என்னுடைய பழைய சட்டை ஒன்றைக் கொடுத்தேன்.  பாய் தலையணை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் வித்யா.  படுத்ததும் தூங்கி விட்டான் சோட்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஏதோ வளர்ப்புப் பிராணியைப் பார்ப்பது போல் அவனை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். "தி பெஸ்ட் டே ஆப் மை லைப்" என்ற வித்யா மைதிலியைக் கட்டிக் கொண்டாள். "அம்மா.. நீ ஜங்க்லி மாதிரி பேசினாலும் உள்ளுக்குள்ள ரொம்ப சாப்ட்.. ஐ லவ் யூமா" என்றாள்.  எனக்குத் தூக்கம் வந்தது. மறுபடி படுத்தபோது மூன்று மணிக்கு மேலாகியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp அந்த இரவைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகி விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இன்னும் அணுசக்தியில் அலாட் ஆகவில்லை.  வேறெங்கெங்கோ கொடுத்தார்கள்.  வித்யாவின் ஹைஸ்கூல் காலேஜ் பொருட்டு கிடைத்த மாற்றல்களை நிராகரித்து விட்டேன்.   போன ஜூனில் எமர்ஜென்சி வந்ததிலிருந்து அரசாங்க வேலைகளில் நிறைய சுறுசுறுப்பு வந்திருந்தது.   இருபதம்சத் திட்டத்தின் கீழ் என்னென்னவோ மாற்றங்கள் கொண்டு வந்தார்கள்.  இன்னும் ஒன்றரை வருடங்களில் நிச்சயம் அணுசக்தியிலேயே அலாட் ஆகிவிடும் என்றார்கள்.  ஊழல் இருக்காது என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சோட்டு எங்கள் காலனியில் ஒருவனாகி விட்டான்.  பிக்ரமின் ஷெட்டில் தங்கிக் கொண்டான்.  எங்கள் வீடுகளில் எடுபிடி வேலை செய்தான்.  எங்களுடன் பேசிப் பழகி தமிழ் கற்றுக் கொண்டுவிட்டான்.  காய்கறி வாங்குவது, பேப்பர் கொண்டு வருவது, பிக்ரம் இல்லாத நேரங்களில் பால் வாங்கி வருவது, பிள்ளைகளுடன் விளையாடுவது என்று மினி பிக்ரமாகி விட்டான்.  கிடைக்கும் சில ரூபாய்களை மைதிலியிடம் கொண்டு வந்து கொடுப்பான். சஞ்சயிகா பிஞ்சயிகா என்று ஏதோ திட்டத்தில் சேர்த்து அவன் காசை சேமிக்கச் சொல்லிக் கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எமர்ஜென்சி வந்த நாளிலிருந்து பிக்ரம் அடிக்கடி ஜெயிலுக்குப் போகத் தொடங்கினான்.  காங்கிரசின் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடுகிறேன் பேர்வழி என்று என்னென்னவோ செய்தான்.  சில நாட்கள் உடல் முழுதும் ரத்தக் காயத்தோடு வருவான். அடிக்கடி எங்கள் காலனிக்குப் போலீஸ் வரத்தொடங்கியதும் நாங்கள் எல்லாம் பிக்ரமை சற்று அடக்கி வாசிக்கச் சொன்னோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;வித்யா கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.  அவள் அடிக்கடி பிக்ரமுடன் பேசுவதைக் கண்டிப்பதால் மைதிலிக்கும் அவளுக்கும் சண்டை வந்து விடும்.  இதைச் செய்யாதே..  அதைச் செய்யாதே.. லிப்ஸ்டிக் போடாதே.. ஸ்லீவ்லெஸ் போடாதே.. ராஜேஷுடன் என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.. அப்படி இப்படியென்று தினம் ஏதாவது சண்டை போடுவார்கள்.  வீட்டை விட்டு ஓடிப்போவதாக வித்யா பயமுறுத்துவாள்.  படிப்பை நிறுத்திவிடுவதாக மைதிலி பயமுறுத்துவாள்.  நான் மைதிலியுடன் விவாதம் செய்த நேரம் போக, காலையில் மாதுருடன் பஸ் பிடிப்பதில் கவனமாக இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp சாயந்திரம் சினிமா போகலாமென்று சொல்லியிருந்ததால் சீக்கிரமே கிளம்பி வந்தேன்.  இன்னும் வித்யா வரவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;"நாலு மணிக்கெல்லாம் வந்துடுவாளே?"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க பொண்தானே?  அணுசக்திக் காலனி ராஜேஷோட சிரிச்சுண்டிருப்பா.. அவ படிப்பை நிறுத்துங்கோனா கேக்க மாட்டேங்கறேள்"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கெடுத்தாலும் படிப்பை நிறுத்துனு சொல்லாதே மைதிலி.. பெண் குழந்தைகள் படிச்சாதான் நல்லது... நீயே நல்லா படிச்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணிண்டுச் சித்திரவதைப் படுவியா சொல்லு.."&lt;br /&gt;&lt;br /&gt;"போறும் போறும்..  வழியறது.."&lt;br /&gt;&lt;br /&gt;"சோட்டு.. சோட்டூ... அப்னி வித்யா தேகா க்யா?" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லே" என்றான் சுருக்கமான தமிழில். வித்தியாசமாகப் பட்டது.  எப்போதும் காலேஜ் வரை தேடிப்பார்க்கிறேன் என்று சைக்கிளில் உடனே கிளம்பிவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிக்ரம் கஹான்?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கயோ போயிருக்கான்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தெருக்கோடி வரைக்கும் போய் பாருப்பா.. வித்யா அந்த ராஜேஷோட பேசிண்டிருந்தா வரச்சொல்றியா?" என்றாள் மைதிலி.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி" என்று குறுக்கு வழியில் அணுசக்தி காலனிக்குள் ஓடினான் சோட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு மணியாகியும் வித்யா வரவில்லை.  மெள்ள விசாரித்ததில் தங்கத்துரையின் பெண்ணும் ஹைஸ்கூல் முடிந்து வீடு வந்து சேரவில்லை.  அணுசக்தி காலனியில் இரண்டு பெண்களைக் காணோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;போலீசில் புகார் கொடுத்துவிட்டு வந்தோம். செம்பூர் போலீஸில் புகார் எழுதிக் கொண்டு சாதாரணமாக, "ஆப் லோக் ஜாயியே" என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதிலி ஒரு வாளி நிறைய தண்ணீரில் இலுப்பைக் கரண்டியைப் போட்டு வைத்தாள். அழுது கொண்டே இருந்தாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எலும்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.  எங்கே என் பெண்? எங்கே என் பெண்?  கற்பனை கன்னா பின்னாவென்று ஓடி இன்னும் கலக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவில் தூக்கம் வராமல் கீழே இறங்கி நடக்கத் தொடங்கினேன்.  சோட்டு தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.  என்னைப் பார்த்ததும் ஒதுங்கினான்.  "சோட்டு" என்றேன்.  "என் பெண்ணைப் பாத்தியாப்பா?" என்றேன்.  என் கண்களின் கண்ணீரை அவன் கவனிக்குமுன் துடைத்துக் கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;நாலடி நடந்திருப்பேன்.   சோட்டு என்னைத் தொடர்ந்து வந்து, "சாப்" என்றான்.  &lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஜி" என்று என் காலில் விழுந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;விழித்தேன்.  "என்ன சோட்டு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஜி... பிக்ரம் பதல் கயா.. நல்ல ஆளில்லே இப்போ" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா சொல்றே?  இதுக்கும் வித்யாவுக்கும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க எங்க இருக்காங்கனு ஒரு ஐடியா இருக்கு.. இப்பவே வந்தீங்கன்னா பசா சக்தே"&lt;br /&gt;&lt;br /&gt;என் வயிறு உள்ளுக்குள் வெடித்துச் சிதறியது. "என்னடா சொல்றே?" என்று அவனை அறைந்தேன்.  "உனக்குத் தெரியுமா?  போலீஸ் போகலாம் வா"&lt;br /&gt;&lt;br /&gt;"போலீஸ் போனீங்கனா இன்னும் மோசமாயிடும்" என்றான்.  "சப் லோக் ஹை இஸ் மே.. என்னை நம்புங்க" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இடிந்து உட்கார்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp சற்று நேரத்தில் தங்கத்துரை, ஜேம்ஸ், அணுசக்தி காலனி ஆட்கள், மனைவிமார் என்று கூடினோம். எல்லோரும் சோட்டுவை ஆளுக்கொரு அறை கொடுத்தார்கள். "தெரிஞ்சுகிட்டு எங்களை ஏமாத்தியிருக்கே பொறுக்கி"..  "எங்க உப்பைத் தின்னுட்டு எங்களுக்கே துரோகம் செஞ்சிருக்கியே?"&lt;br /&gt;&lt;br /&gt;சோட்டு அழுதான்.  "சாப்.. எனக்கு நிச்சயமா எதுவும் தெரியாது.  இப்பத்தான் பிக்ரம் சாசா பெட்டில பணம் பாத்தப்போ கொஞ்சம் புரிஞ்சுகிட்டேன். அனாதையான எனக்கு இருக்க எடம் கொடுத்து, அன்பு காட்டின உங்களுக்கு துரோகம் செய்வேனா?  ஒவ்வொருத்தருக்கு ஒரு அப்பா-அம்மா.. முஜே இத்நே மா பாப்.  நீங்க என்னை உங்க பிள்ளையா நினைக்காவிட்டாலும் நான் உங்களை என் பெற்றோர்களா நெனச்சுத்தான் வளந்தேன்... ப்லீஸ் என்னை அடிக்காதீங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு சோட்டு.. எங்க இருக்காங்க எப்படி கூட்டிட்டு வரது?  ஏன் போலீஸ்ல சொல்லக்கூடாதுனு சொல்றே?" என்றார் பூரணி.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு ஒரு சந்தேகம் தான்.. ஒரு.. நாலஞ்சு இடம் போய் பாக்கலாம்.. அங்க இருந்தாங்கனா கூட்டிட்டு வந்துரலாம்.." என்றான் சோட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க.. நாம பையன் சொல்ற இடத்துல போய் பாக்கலாம்.. எப்படி இருந்தாலும் பிறகு போலீசுக்கும் போயிடுவோம்" என்றார் ஜேம்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;"உடனே போங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;சோட்டு சைக்கிளில் விரைந்தான்.  நிமிடங்களில் ஒரு அம்பேசடருடன் வந்தான்.  "சலியே" என்றான் டிரைவர்.  சோட்டுவுடன் நானும் தங்கத்துரையும் ஜேம்சும் ஏறிக்கொண்டோம்.  "வேண்டாம்.. ஜகா நஹி.. ஏக் சாப் பஸ் ஹை" என்றான் சோட்டு.  எனக்குச் சற்று அச்சமாக இருந்தது.  தங்கத்துரையைப் போகச் சொல்ல நினைத்தேன். என் பெண் என்ற எண்ணம் மேலோங்கி அச்சத்தைக் கரைத்தது.  ஜேம்ஸ் மட்டும் இறங்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp பூனே சாலையில் அரை மணி போல் பயணம் செய்தோம். சட்டென்று விலகி ஏதோ சந்தில் திரும்பியது வண்டி. சந்தோஷிமா க்ளினிக் என்ற கட்டிடத்தைத் தாண்டிச் சென்று நின்றது.  டிரைவர் வண்டியை நிறுத்தி சோட்டுவுக்கு சைகை காட்டினான்.  சோட்டுவும் நாங்களும் இறங்கிக் கொண்டோம்.  சந்தோஷிமா க்ளினிக் கதவைப் பலமாகத் தட்டினோம். ஒரு கிழவி கதவைத் திறக்க, அவளைத் தள்ளிவிட்டு சோடு உள்ளே ஓடினான். நாங்களும் அவன் பின்னே ஓடினோம்.  இரண்டு அறைகள் தாண்டி, சாத்தியிருந்த அறைக்கதவைத் திறந்தான். யாரும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாட்கள் இப்படிப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான் சோட்டு. ஒவ்வொரு இடத்திலும் ஏமாந்த வெறியில் அவனை வழியெல்லாம் அடித்தோம். தங்கத்துரை அவனை அடித்து அடித்து ஓய்ந்து போனார். சோட்டு டிரைவருடன் அடுத்த இடத்திற்குச் செல்வதிலேயே குறியாக இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாம் நாள் ஏமாற்றத்துடன் சுற்றிவிட்டுத் திரும்ப எண்ணினோம். இதற்குள் தங்கத்துரையும் நானும் சோட்டுவைப் பம்மி எடுத்துவிட்டோம். போலீசில் தகவல் கொடுப்பது என்று முடிவெடுத்தோம்.  வீட்டுக்குப் போன் செய்து சொன்னபோது, போலீசில் ஜேம்ஸ் துணையுடன் ஏற்கனவே தகவல் கொடுத்ததாகச் சொன்னாள் மைதிலி.&lt;br /&gt;&lt;br /&gt;சோட்டு டிரைவரிடம் ஏதோ சொல்ல, மறுபடி சந்தோஷிமா க்ளினிக் வந்தோம்.  சோட்டு வேகமாக ஓடினான்.  பின்புறம் வழியாக உள்ளே குதித்தான்.  சில நொடிகளில் வாசல் கதவைத் திறந்தான்.  எங்களை வேகமாக இழுத்துக்கொண்டு ஓடினான்.  உள்ளே முன் பார்த்த அறையில் என் பெண் வித்யா சோர்ந்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.  அவளருகே தங்கத்துரையின் பெண்.  மற்ற இளவயது ஆண் பெண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp வீட்டுக்கு வந்தபோது விடிந்து விட்டது. மைதிலி வித்யாவைக் கட்டிக்கொண்டு விலகவேயில்லை. "அம்மா" என்று தொடர்ந்து விசும்பிக் கொண்டே இருந்தாள் வித்யா.  &lt;br /&gt;&lt;br /&gt;காலையில் பிக்ரம் வந்தான். பெண்களைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டான்.  அவனை நாங்கள் முற்றுகையிட்டுப் போலீசில் சொல்வதாகச் சொன்னோம்.  ஜேம்ஸ் அதற்குள் செம்பூர் இன்ஸ்பெக்டரை அழைத்து வரப்போனார். "இவனை விடாதீங்க".&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் அமைதியாக இருந்த பிக்ரம், "என்னை மன்னிச்சிருங்க" என்றான்.  "போலீஸ்லே என்னை அடிச்சு ரொம்பத் துன்புறுத்திட்டாங்க.  வலுக்கட்டாயமா கர்ப்பத்தடை செய்ய ஆள் சேத்துக் கொடுக்கச் சொன்னாங்க..ஒரு ஆளுக்கு இருநூறு ரூபாய்.. நை தோ என்னை மிசாலே பர்மனென்டா தள்ளி சித்ரவதை செய்றதா.. என் உயிருக்கு பயந்து பால் மாறினேன். அரசியல் கட்சி சண்டையில் என் வாழ்க்கை நாசமாயிடுச்சு.. ஆள் பிடிச்சுக் கொடுக்கறாப்ல நடந்துகிட்டு நானே அவங்களை நாளைக்குக் கொண்டு வரதா இருந்தேன்.. நீங்க முதல் தடவை வந்தப்பவும் அங்க தான் இருந்தாங்க.. ஒரு வேளை யாராவது வருவாங்கனு நெனச்சு பக்கத்து ரூமுல அடைச்சு வச்சிருந்தாங்க.. ஆப் ஸப் மதராசி லோக்.. உங்களுக்கு ஆதரவா இங்க யாரும் வரமாட்டாங்க.. உங்க ஆளுங்களே ஒதுங்கிப் போயிடுவாங்கனு ஒரு தைரியத்துல.. ஐசா கியா..  மாகி கசம் உங்க பிள்ளைகளுக்கு வேறே கெடுதல் செய்ய எண்ணவில்லை... சோட்டு, வா போகலாம்" என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;சோட்டுவின் உடலெங்கும் வீங்கியிருந்தது.  தங்கத்துரை அவனை செருப்பால் அடித்து விளாசியிருந்ததில் முகத்தில் அங்கங்கே ரத்தக்கறை. பிக்ரமைப் பார்த்தான். "என்னால் இவர்களை விட்டு வரமுடியாது" என்றான்.  "பிக்ரம் சாசா.. உன்னைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.  உனக்கு விழுந்திருக்க வேண்டிய இத்தனை அடிகளை நான் வாங்கிக் கொண்டதில் என்னுடைய நன்றிக் கடன் தீர்ந்தது. நீ ஏன் மனம் மாறினாய் என்பது முக்கியமில்லை. இனி ஒரு கணம் கூட உன்னை இந்தக் கட்டிடத்தில் அனுமதிக்கப் போவதில்லை. வெளியே போ. இனி இந்தப் பக்கம் வராதே, வந்தால் நானே உன்னைக் கொன்றுவிடுவேன்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிக்ரம் மௌனமாக வெளியேறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்துரையும் நானும் சோட்டுவிடம் மன்னிப்பு கேட்டோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு இவர்கள் இருந்த இடம் எப்படித் தெரியும்?" என்றார் ஜேம்ஸ்.  பதிலுக்கு சோட்டு பார்த்தப் பார்வையில் சோகம் பரிதாபம் வலி வருத்தம் எல்லாம் கலந்திருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை வற்புறுத்தியும் எங்கள் காலனியில் தங்க மறுத்துவிட்டான் சோட்டு.  "உங்க அடிகளுக்காகவும் ஏச்சுக்காகவும் நான் வருத்தப்படவில்லை. எனக்கு வாழ்வு கொடுத்தவங்க நீங்கதான். அதைத் திரும்ப எடுக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கு. ஆதரவு கொடுத்தீங்க, அதனால அடிச்சு உதைச்சீங்க ஜைசா சம்ஜியே.. டீக் ஹை ..லேகின்.. இந்தத் தவறு ஏற்பட ஒருவகையில் நான் காரணம் என்பது என்னை உறுத்திக்கிட்டே இருக்கும். மறுபடியும் நான் உங்க வீட்டுக்குள்ள வந்தா என் மனசாட்சி என்னை ரொம்பத் துன்புறுத்தும்" என்ற சோட்டு, எங்கள் வீடுகளுக்குள் வருவதை நிறுத்திக் கொண்டான். நாங்கள் கொடுத்தப் பணம் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை. திடீரென்று மூன்றாம் நாள் காணாமல் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp ஆறு மாதங்களில் நடந்ததை எல்லாம் அனேகமாக மறந்துவிட்டோம். வழியில் சிக்கியவற்றைச் சேர்த்துக்கொண்டுக் கிடைத்தப் பாதையில் ஓடும் நதியைப் போல, ஒரு சில மாற்றங்களுடன் வாழ்க்கை தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் கிடைத்ததில் மைதிலிக்கு நிம்மதி. எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. வழக்கம் போல் வித்யாவை அதட்டினாள். ஆனால் படிப்பை நிறுத்துவதாகச் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா வழக்கம் போல் கல்லூரிக்குப் போனாள். மைதிலியுடன் சண்டை போடவில்லை. சோட்டுவின் சிறிய புகைப்படத்தை தன் அறையுள் சட்டம் போட்டு மாட்டி வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டருக்கு நிறையச் செலவானது.&lt;br /&gt;&lt;br /&gt;முரளியின் அப்பா தன்னுடைய சொத்தையெல்லாம் அனாதைகளுக்கு எழுதி வைத்ததாகச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்துரை வேலையை விட்டு சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் போனார்.  &lt;br /&gt;&lt;br /&gt;நானும் மைதிலியும் எதற்கெடுத்தாலும் விவாதம் செய்வதை நிறுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அணுசக்தி காலனியில் அலாட்மென்ட் உத்தரவு வர இன்னும் ஒன்றரை வருடமாகும் என்று மறுபடி சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்காவது சோட்டு திரும்பி வருவான் என்று மட்டும் அடிக்கடித் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr align="left" noshade="noshade" size="1" width="100%" /&gt;&amp;nbsp &amp;nbsp மாதங்கி மாலியின் &lt;a href="http://maiththuli.blogspot.com/2011/09/episode-6.html" target="_BLANK"&gt;துப்பாண்டிக் குடும்பத்தினர்&lt;/a&gt; பதிவின் விடியோவைப் பார்த்தபோது தோன்றிய கருவையும், எமர்ஜென்சி காலக்கட்டத்தில் குரோம்பேட்டையில் நடந்த மனதை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தையும் இணைத்துப் புனைந்தக் கற்பனைக் கதை.  மாதங்கிக்கு மட்டும் மனமார்ந்த நன்றி.  &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp 111111 மயக்கத்திலும் அவசரப் பிழையின் விளைவினாலும், நானும் சோட்டுவை மறந்து போனேன்.  மன்னிக்க வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8583474086541315112-8167272848430834832?l=moonramsuzhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://moonramsuzhi.blogspot.com/feeds/8167272848430834832/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8583474086541315112&amp;postID=8167272848430834832&amp;isPopup=true' title='32 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/8167272848430834832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8583474086541315112/posts/default/8167272848430834832'/><link rel='alternate' type='text/html' href='http://moonramsuzhi.blogspot.com/2011/11/blog-post_12.html' title='சோட்டு'/><author><name>அப்பாதுரை</name><uri>http://www.blogger.com/profile/01863778312440065359</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-rQJALMp8UFk/TwBySdDbjsI/AAAAAAAAAjw/K_KMVOXIAt8/s220/tt.JPG'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7955835224903634104</id><published>2011-11-01T06:25:00.022-05:00</published><updated>2011-11-01T22:23:22.322-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>சோட்டு</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color: rgb(51,51,183); font-size:120%;"&gt;&lt;strong&gt;முன்னோட்டம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp &amp;nbsp &lt;b&gt;இ&lt;/b&gt;ன்னமும் கற்புக் கெடாத செம்பூர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிடப் பொடி நடை தூரத்தில், பளபளக்கும் புத்தம்புது அணுசக்திக் குடியிருப்பையொட்டிய ஜட்டி நகர் (ஜனார்தன் தல்வார்கர் ஜட்டியாக மருவியதற்கும் கதைக்கும் தொடர்பில்லை என்றாலும், நாளைக்கே ஒரு ஐஏஎஸ் ஐஐஎம் ஐஐடி ஐஐயோ பரீட்சையில் கேள்வி கேட்டார்கள் என்று வையுங்கள்.. உதவும் இல்லையா?). &lt;br /&gt;&lt;br /&gt;ஜட்டி நகர் என்று பெயரே தவிர, எண்பது வீடுகளும் இரண்டு விளையாட்டுத் திடல்களும், ஒரே ஒரு கெரசின் மற்றும் காய்கறிக் கடையும் கொண்ட குடியிருப்பு, அவ்வளவுதான். ஓ..மறந்து விட்டது. ஒரு மரத்தடி பிள்ளையார் சன்னிதியையும், எதிரில் சம்பந்தமேயில்லாமல் எலுமிச்சை செருகிய சூலம் புதைந்த இடத்தையும் ஜட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாட்டிலிருந்து வந்து அடாமிக் சென்டரில் வேலைக்குச் சேர்ந்திருந்த அத்தனை மதராசிகளும் பப்பள அணுசக்தி காலனியில் இடம் கிடைக்கும் வரையில், ஜட்டி நகரில் தண்டேரா போடுவார்கள்.  இரண்டு காலனிகளுக்கும் குறுக்கே மதில் சுவர் இருந்தாலும், இடையில் போகவர வசதியாக முழங்கால் நெருடும் சுழல்கதவு ஒன்று போட்டிருந்தார்கள்.  டர்ன்ஸ்டைலை ஒட்டி, ஒற்றையறை ஓட்டுக்கட்டிடம். வாட்ச்மேனுக்காக. அணுசக்திக்கும் ஜட்டிக்கும் பொது வாட்ச்மேன். &lt;br /&gt;&lt;br /&gt;அணுசக்தி அளவுக்கு அழகாக இல்லாவிட்டாலும், ஜட்டியைக் குறை சொல்ல முடியாது.  home is what you make of a house, இல்லையோ?  ஜட்டி, அணுசக்தியை விட உயிரோட்டமாக இயங்கும். காலை நாலு மணிக்கு வாட்ச்மேன் நூறு பேகெட் பால் வாங்கிக் கொண்டு வந்து ஒவ்வொரு பிளாட் வாசலிலும் போடுவதில் தொடங்கும் நாள், உடனே களைகட்டிவிடும். எட்டரை மணிவரை சுறுசுறுப்பாக இருக்கும்.  பிறகு மாலை நாலு முதல் இரவு ஒன்பது மணி வரை களைகட்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;கர் என்று வழங்காத அத்தனை பேரையும் மதராசிகள் என்று அழைத்தாலும், அங்கே இருந்தப் பெரும்பாலான மதராசிகள் உண்மையிலேயே தமிழர்கள் தான். &lt;br /&gt;&lt;div style="margin-left: 1cm;"&gt;&lt;i&gt;..ஏண்டி மைதிலி.. மைத்லீ.. என்னோட சட்டைல பட்டன் தெச்சு வைனு நேத்திக்கே சொன்னேனே?&lt;br /&gt;&lt;br /&gt;..கந்தா என்றழைக்கவா கதிர்வேலா என்றழைக்கவா..&lt;br /&gt;&lt;br /&gt;..ஏன்னா... உங்க பொண்ணைப் பாருங்கோ.. என்னமோ லிப்ஸ்டிக் போட்டுக்கறாளே?&lt;br /&gt;&lt;br /&gt;..மம்மி.. பாகல் ஹோ க்யா? எல்லாரும் இப்ப லிப்ஸ்டிக் போட்டுக்கறா. ஸ்லீவ்லெஸ்  போட்டுக்கத்தான் அலோ பண்ண மாட்டேங்கறே.. இதுக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;..பொங்கும் பூம்புனல்.. &lt;br /&gt;&lt;br /&gt;..வைடி சித்த... ராஜேஸ்வரி ஷண்முகம் கொரல் கேப்போம்.. சும்மா கர்னாடக சங்கீதம் பக்தி பாட்டு வச்சுண்டு.. ரேடியோல கை வச்சா பின்னிடுவேன்.. சிலோன் லேசுல கிடைக்காது..&lt;br /&gt;&lt;br /&gt;..கடங்காரி.  கீழே போடுறீ. இந்தாத்துல இருக்குற வரைக்கும் நான் சொல்றதைத்தான் கேக்கணும்..  மினுக்கி.. சூடு போட்டுறுவேன்..&lt;br /&gt;&lt;br /&gt;..முத்துச் சிப்பி மெல்ல மெல்லத் திறந்து வரும்..&lt;br /&gt;&lt;br /&gt;..காபிய சாப்டுங்கோ.. மெட்ராஸ்லந்து வாங்கிண்டு வந்தேன்.. லியோ காபி..க்ரிகெட் கண்றாவியைக் கேட்டீரோ ஓய்? இருங்கோ பேப்பர் எடுத்துண்டு வரச்சொல்றேன்..&lt;br /&gt;&lt;br /&gt;..ன்னா.. சித்த அந்த கத்திரிக்காயைக் கெளறுங்கோ கருகிடப் போறது..&lt;br /&gt;&lt;br /&gt;..சோட்டு.. அரே சோட்டூ.. இதராவ்.. நீசே ஸே அப்னா பேப்பர் லாவ்.. அரே பாபு ஓ நஹி.. அங்க்ரேசி.. ஹிண்டூ..  இதோ எடுத்துண்டு வருவான்..  &lt;br /&gt;&lt;br /&gt;..பொண்ணு பிரசவத்துக்காக பம்பாய் வந்தோமுங்க.. குழந்தை தவழ ஆரம்பிச்சிருச்சு.. ஊரைப் பாக்க போவணும்..&lt;br /&gt;&lt;br /&gt;..அறுவது ஓவர்ல நூத்து முப்பத்ரெண்டு அடிச்சிருக்காங்க ஓய்.. நிக்க வச்சு சுடவேண்டாமோ இவாளை?&lt;br /&gt;&lt;br /&gt;..ஏந்திருடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;..எல்லாம் அந்த கவாஸ்கர் உருப்படாத பய வேலை.. அறுவது ஓவர்ல முப்பத்தாறு ரன் அடிச்சிருக்கானே மகாபாவி..&lt;br /&gt;&lt;br /&gt;..ப்பா.. அம்மா பிடாரியாட்டம் கத்தறா..யே தோ ஜங்க்லி ஹை.. முஜே பசாவ் டேடி..&lt;br /&gt;&lt;br /&gt;..எங்கே சுவாமி?  தமிழ்நாட்டுல பூணல் போட்டுண்டா பாவம்னு இல்லையா ஆயிடுத்து?  படிக்கவும் முடியலே.. படிச்சா வேலையும் கிடைக்கலே..&lt;br /&gt;&lt;br /&gt;..ஏன் அப்படி சொல்லுறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;..உங்க ஆட்கள்ளாம் வந்து எங்களை உண்டு இல்லைனு ஆக்கிடலையா பின்னே?&lt;br /&gt;&lt;br /&gt;..பச்சைக்கிளி முத்துச்சரம்..&lt;br /&gt;&lt;br /&gt;..இங்க்லிஷ் ஸ்கூல்ல சாய்ந்த்ரம் கேதரிங்க் வச்சிருக்கா. நம்ம ஊர்க்காரா நாலு பேருக்கு பெலிசிடேசனாம்.. அதுல பொன்னையா நாயுடுனு ஒருத்தர் முஜிபூர் ரெஹ்மானுக்கே அட்வைசரா இருந்தாராம்.. இந்திரா காந்தி அனு
