tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5272594308373250505..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: அறுந்த காற்றாடிஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88329258751213895312012-12-26T03:44:28.532-06:002012-12-26T03:44:28.532-06:00Happy new year to u and ur family
subbu rathinamHappy new year to u and ur family<br /><br />subbu rathinamsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55835186462009336452012-12-21T10:25:45.157-06:002012-12-21T10:25:45.157-06:00இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31064802536685573552012-12-21T03:53:22.800-06:002012-12-21T03:53:22.800-06:00இந்தக் கதையைப் பற்றிய கருத்துக்களுக்கு எத்தனை நன்ற...இந்தக் கதையைப் பற்றிய கருத்துக்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதவில்லை என்ற குறையாக இருக்கிறது. <br /><br />இந்தக் கதையின் மாமி ஒரு possessive & patronizing lovebird. பசுபதியின் நிலை வெந்த கத்திரிக்காய்க்குச் சமம். இதை அதிகமாக வெளிப்படுத்தவில்லை. 70 வயதுக்கு மேற்பட்ட சில முதிர்ந்த தம்பதிகளை நேரில் கண்டிருக்கிறேன்/நீங்களும் கண்டிருக்கலாம். சாதாரணமாக இயங்கக் கூடிய கணவர்கள் கூட வெந்த காய்கறியாக இருக்கையில், உடல் ஊனம் கொண்ட பசுபதியை மாமி was dominating என்பதில் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. என் குடும்பத்திலே இதைக் கண்டிருக்கிறேன். in fact, மாமியின் பாத்திரம் பெருமளவுக்கு என்னுடைய பாட்டியை மனதில் வைத்து எழுதியது.<br /><br />'இருவருமே தற்கொலை செய்து கொள்கிறார்கள்' என்றதால் இதில் பசுபதிக்கும் உடன்பாடு உண்டு. அல்லது ஒன்று கொலையாகி விடும் இல்லையா? 'இது வாழ முடியாததால் எடுத்த முடிவில்லை ரகு, வாழ்ந்து முடித்ததால் எடுத்த முடிவு' என்று துரை சொல்வதாக ஒரு வரி இருந்தது. சுவாரசியம் குறையுமென்று நீக்கிவிட்டேன். தவறாக இருக்கலாம்.<br /><br />மாமி வாழ்க்கையை நேசிக்கிறவர் என்று முதல் பகுதிகளில் சொல்ல முயன்றேன். 'செத்தப்புறம் பேரக்குழந்தையோட சுவாசத்தை அனுபவிக்க முடியாதே' என்று சொல்லும் மாமி, நிகழ்ந்து மறைந்த சுவாசத்தை அனுபவிக்கும் ஒரு நபர், வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பதில் கோழைத்தனம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இன்றைய சூழலில் வெளிப்பார்வையில் இதை பார்க்கும் பொழுது சிலருக்குத் தவறாகப் படுகிறது. எண்பது வயதின் ஆதரவற்றத் தள்ளாமையில் மனம் நாறக்கூடிய சாத்தியங்கள் அதிகம். <br /><br />'தற்கொலை' என்பது பொறுப்பில்லாத செயல். அறிவற்ற செயல். 'வாழ்வை முடித்துக் கொள்வது' அப்படியல்ல. ஆனால் அந்தச் செயலுக்குப் பொருத்தமான ஒரு வார்த்தை கூட இன்றைக்கு நம் அகராதியில் இல்லை. வரும் நாளில் நிச்சயம் அந்தச் சொல் 'தற்கொலை'யாக இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் உரிமை உண்டு என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் அந்த முடிவை அறிவுடன் பொறுப்புடன் எடுக்கும் முதிர்ச்சி வரும் என்றும் நம்புகிறேன்.<br /><br />இந்தக் கதையில் வரும் தம்பதிகள் இணைந்தே அந்த முடிவை சரியான காலக் கட்டத்தில் எடுத்தார்கள் என்று நம்புகிறேன். நம்பலாம்.<br /><br />தொடர்ந்து படித்தமைக்கும், பின்னூட்டம் மின்னஞ்சல்களுக்கும், தொலைபேசியதற்கும் கோடி நன்றிகள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30239160928332159492012-12-21T03:30:21.009-06:002012-12-21T03:30:21.009-06:00மூன்று பகுதிகளையும் தொடர்ந்து படித்தப் பொறுமைக்கு ...மூன்று பகுதிகளையும் தொடர்ந்து படித்தப் பொறுமைக்கு நன்றி. பின்னூட்டங்களுக்கு நனி நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45228198195975182402012-12-20T20:48:10.890-06:002012-12-20T20:48:10.890-06:00Remarkable story அப்பாதுரை!Remarkable story அப்பாதுரை!ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91714387733620780562012-12-19T22:55:23.512-06:002012-12-19T22:55:23.512-06:00உண்மையில் கதையல்ல நிஜம்மாதிரிதான் இருக்கு... அழகான...உண்மையில் கதையல்ல நிஜம்மாதிரிதான் இருக்கு... அழகான ஆழமான காதல்... சில இடங்களில் படிக்கும் போது நம்மையும் மீறி கண்ணீர் துளிர்க்கின்றது... <br /><br />அருமை சார்... உங்கள் கர்ப்பனை..... இன்னும் எதிர் பார்க்கின்றோம்.... நன்றி...SathyaSudhahttps://www.blogger.com/profile/11524963088853589162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3837147612715781452012-12-19T04:26:38.626-06:002012-12-19T04:26:38.626-06:00
கதையின் கரு உங்களுடையது, கதா பாத்திரங்கள் உங்களது...<br />கதையின் கரு உங்களுடையது, கதா பாத்திரங்கள் உங்களது எண்ணத்தில் எழுவதைத்தானே செய்ய முடியும்.இவர் இப்படி செய்திருக்கலாம், அவர் அப்படிச் செய்திருக்கலாம் என்று எண்ணுவதே தவறோ என்று தோன்றுகிறது.நீங்கள் கதையை அணிகிய முறை மிகவும் எதார்த்தமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். ரசித்தேன். ஒரு எழுத்தாளன் அவனது எண்ண ஓட்டங்களைத்தான் கதையில் கொண்டு வரமுடியும். அதை சிலர் விரும்பலாம், சிலர் விரும்பாது இருக்கலாம். ரசிப்பதும் அல்லாததும் அவரவர் சுதந்திரம். I liked it APPATHURAI.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86851868421776305862012-12-19T04:05:46.125-06:002012-12-19T04:05:46.125-06:00
அப்பாதுரை அவர்களே, ஒருவரை சார்ந்து ஒருவர் வாழும்...<br /> அப்பாதுரை அவர்களே, ஒருவரை சார்ந்து ஒருவர் வாழும் நிலையிலுள்ள முதியவர்களின் எண்ணக்கிடக்கைகளை அந்த மனசுக்குள்ளேயே போய்க் காண்பதுபோல் எழுதி இருக்கிறீர்கள். மனோதத்துவம் தெரிந்தவரோ? இல்லை அதற்கு மேலும் புத்திசாலித்தனமாக யூகிக்கும் உங்கள் அறிவும் கண்டு உங்களுக்கு ஒரு பட்டம் தருகிறேன். தயை கூர்ந்து பெற்றுக் கொள்ளுங்கள். விவரம் என் பதிவில். நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45526193095830709922012-12-19T02:53:19.550-06:002012-12-19T02:53:19.550-06:00மாமியின் குரல் காதிலேயே ஒலிப்பது போன்றதொரு பிரமை இ...மாமியின் குரல் காதிலேயே ஒலிப்பது போன்றதொரு பிரமை இன்னமும். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18676072032192972472012-12-19T02:52:36.752-06:002012-12-19T02:52:36.752-06:00//..ஹ்ம்ம்.. இந்தியால்லாம் வேண்டாம்பா. எங்களுக்கு ...//..ஹ்ம்ம்.. இந்தியால்லாம் வேண்டாம்பா. எங்களுக்கு இங்கயே, இந்த மண்லயே, பிராணனை விட்டு அவாளோட கலக்கணும்.. இங்கயே பிராணனை விட்டா அவாளோட கண்டிப்பா சேந்துப்போம்னு ஒரு நம்பிக்கை. அந்த உலகம்மை அதையாவது எங்களுக்குச் செய்வானு ஒரு நம்பிக்கை.." என்று மாமி மீண்டும் கலங்கினார்.<br /><br /><br />அந்த ஞாபகங்கள் எல்லாம் அப்படியே விஷ அம்பா மாறி அவர் மனசைக் குதறி எடுத்துடும். உடம்பு கிடந்து நாறட்டும், இவர் மனசு நாறக்கூடாதுப்பா"//<br /><br />கண்ணீர் பொங்கியது. என்ன சொல்ல! என்ன சொல்ல! <br /><br />//நான் ஏன் அவங்களுக்கு உதவி செஞ்சேன்னு இன்னி வரைக்கும் எனக்குத் தெரியாது. உண்மையிலே நான் உதவி செய்யறதாக் கூட நினைக்கவே இல்லை. இது.. தர்மம்னு சொன்னா உனக்குக் கோபம் வரும். ஆனா இது ஒரு டைப் தர்மம். சுயதர்மம்னு வச்சுக்கயேன்?//<br /><br />ஆஹா, நல்ல விளக்கம்.<br /><br /><br />//ரகு என்னைக் கேள்வியோடு பார்த்தான்.<br /><br />"மனசு நாறக்கூடாதுனு மாமி சொல்வாங்க" என்றேன்.<br /><br />"என்ன சொல்றே?"<br /><br />"காத்தாடி சமாசாரம்" என்றேன். //<br /><br />ம்ம்ம்ம்?? முடிவு தான் ஏத்துக்க முடியலை. இத்தனை வருடம் தாக்குப் பிடிச்சுட்டு திடீர்னு தற்கொலைனா??? ஆனா இம்மாதிரியான ஒரு முடிவை எதிர்பார்த்தேன். சூரி சார் சொல்லி இருக்காப்போல் மாமி பசுபதிக்கும் விஷத்தைக் கொடுத்துட்டுத் தானும் விஷம் தின்று செத்துப் போவார்னு தான் நினைச்சேன். <br /><br />மனதை மிகவும் பாதித்த கதை. கதைனு நினைக்க முடியலை. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53582131182818284462012-12-19T01:52:16.177-06:002012-12-19T01:52:16.177-06:00//"நேத்திக்கு உனக்கு சரியா நன்றி சொல்ல முடியா...//"நேத்திக்கு உனக்கு சரியா நன்றி சொல்ல முடியாம போயிடுத்துப்பா" என்றார் மாமி..என் பிள்ளையாட்டமா இப்படி எங்களைத் தாங்குறியே..?" என்ற மாமியின் குரல் கம்மியது.// <br /><br />இந்த அத்தியாயத்தில் மாமியின் கேரக்டரைக் கொஞ்சமே கொஞ்சம் செப்பனிட்டிருப்பதற்கான காரணமும் புரிந்தது. அதுவே மாமியின் இயல்புத் தன்மை போய்விட்ட மாதிரியான உணர்வையும் தோற்றுவித்தது. இருந்தாலும் செய்த வரை சரிதான் என்று மனசைத் தேற்றிக் கொண்டேன். இல்லையென்றால், இந்தக் கதையும் இந்த அத்தியாயத்தோடு முடிவதால், அதோடு மாமி-பசுபதியின் கதையும் முடிவதால், இப்போ அதைச் செய்தால் உண்டு. வேறு தருணம் வாய்ப்பதற்கில்லை என்பதினால் சரி.<br />செய்ததினால், மொத்தப் பெருமையையும் ரகுவும்,துரையும் வாரிச்சுருட்டிக் கொண்டு போகாமல் சமன்படுத்தப்பட்டிருப்பதையும் சொல்ல வேண்டும்.<br /><br />//மாமி வெகுளியல்ல என்றுப் புரிந்தது.// <br /><br />இப்பத்தானா?.. எப்போதோ மாமி வெகுளியில்லை என்பது புரிந்து விட்டது. எல்லா நேரங்களிலும் அவர் தன்னைச் சுற்றியே நினைப்பதிலும் இந்த அத்தியாயத்திலும் அது தெரிகிறது. ரகு, துரை, யுவான் எல்லாரும் தனக்கான கசிந்து உருகணும்ங்கற கடப்பாடு ஏன் இருக்கணும்ங்கற எண்ணம் கொஞ்சம் கூட மாமிக்கு இல்லே பாருங்கோ..<br /><br />//மாமியோட இல்லீகல் ஸ்டேடஸ்.. எனக்கு முக்கியம்னு இப்ப புரிஞ்சுட்டிருப்பியே?".. //<br /><br />ரகுவின் இந்தத் தீவிரம்?.. தொடர்ந்து எழுத வாய்ப்பிருந்தும், முடிச்சிட்டீங் களே!<br /><br />//"எனக்கு என்ன ஆச்சரியம்னா, அவங்க ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்கனு தான்"//<br /><br />அதுக்குத் தான் மாமியே சொல்லிட்டாங்களே!...<br /><br />"ரெண்டு பேரும் பொட்டுனு ஒரே டயத்துல போயிட்டா நல்லாயிருக்கும்"<br /><br />ஆதரவாகச் சிரித்தேன். "அதெல்லாம் நடக்கிற காரியமா? நம்ம கைலயா இருக்கு?"<br /><br />"எல்லாமே நம்ம கைலதான் இருக்கு துரை. ஆனா எசகு பிசகா நடந்துடக்கூடாதேனு பயம், அதான். எங்களால மனசால சந்தோசமா இருக்க முடியற வரைக்கும்.. மனசு நாறாத வரைக்கும் வாழ்ந்து பாத்துடணும்."<br /><br />நிறைய கொக்கிகள்.. மொட்டை மாடியில் மேற்கொண்டு கட்டிடம் எழுப்ப செங்கல்களை துருத்தியபடி நீட்டி கட்டி வைப்பார்களே, அது போல மேற்கொண்டு கதையை நீட்டிக்க சாவகாசமான நிறைய முன்னேற்பாடுகள். வேறொரு சமயத்திலும் வேறு வகையான பாத்திரப்படைப்புகளோடு தொடரலாம். <br /><br />இந்தக் கதையில் எதிர்பாராமல் கதைக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் இடையில் வந்த 'உயிர்' பற்றிய <br />கலந்துரையாடல், வேறொரு தருணத்தில் கிளைபரப்பி தழைத்து<br />நிழல் தரும் என்று நம்புகிறேன்.<br /><br />நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றி, அப்பாஜி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76121880405519224022012-12-18T22:32:09.419-06:002012-12-18T22:32:09.419-06:00துரை அவர்கள் இருவரும் ஒன்றாக மறைந்ததில் எனக்கொரு ப...துரை அவர்கள் இருவரும் ஒன்றாக மறைந்ததில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை. கை மீறிப் போன நிலையில் மாமி இந்த முடிவை எடுத்திருக்கவேண்டும்.இதுபோல ஒரு கதை இதுவரை படித்ததில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-23648690753681391672012-12-18T08:11:57.358-06:002012-12-18T08:11:57.358-06:00'அஞ்சுவது ஒளியையா, இருளையா?'
sury Siva ...'அஞ்சுவது ஒளியையா, இருளையா?' <br /><br /> sury Siva கூறிய முடிவுதான் மனதை ஆறுதல்படுத்துகிறது ...<br /><br />மனது நாறிய தற்கொலை முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்..<br /><br />எத்தனை சிரமப்பட்டார்கள் ..<br />கடைசியில் இந்த முடிவை எடுக்கவா ..??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48687048740697208142012-12-18T08:11:20.521-06:002012-12-18T08:11:20.521-06:00அப்பதுரை அவர்களே! எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடி...அப்பதுரை அவர்களே! எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத முடிவு! அவர்கள் ஏன் வாழக்கூடாது? எழுத்தாளன் நம்பிக்கையின்மையை விதைக்கலாமா! எனக்கு என்னமோ தவறான செய்தியை வாசகனுக்குகொடுத்துவிட்டிர்களோ என்று குறையாக இருக்கிறது ! உயிரோடு இருந்தால்கஷ்டப்படுவார்களா ! படட்டுமே ! அது தானே யதார்த்தம்! நானும்,நீங்களும் ,அந்த ரகுவும்,மீனாட்சி,ஜீவி,ஸ்ரீ ராம் ஆகிய அத்துணை பேரும் ஏன் இந்த சாமூகம் முச்சூடும் அவர்கள் கஷ்டத்தை பார்த்துக் கொண்டுதானே இருந்தோம் ! துரும்பை அசைக்க தைரியமில்லை ! நம்கோழித்தனத்தை அந்ததம்பதியர் மீது சுமத்த உங்களுக்கு உரிமைகொடுத்தது யார்! எங்கேயோ நம் சிந்தனையில் கோளாறு! ---கஸ்யபன் kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50734828783741304272012-12-18T07:07:15.347-06:002012-12-18T07:07:15.347-06:00// மாமியை நீயே ஒரு பெட்டிக்குள்ள வேணும்னாலும் பூட்...// மாமியை நீயே ஒரு பெட்டிக்குள்ள வேணும்னாலும் பூட்டி வச்சுக்கோ. ஆனா அந்த பெட்டிக்குள்ள தன் இஷ்டத்துக்கு இருக்க மாமிக்கு சுதந்திரம் வேணும்.//<br />மனதை தொட்ட வரி.<br />மனம் நிறைவாக இருந்தால் எப்படியும், எந்த நிலையிலும் வாழலாம். நீங்க முன்னாடி எழுதி இருந்ததை படித்த போது அவர்களுக்கு என்ன ஆகுமோ என்று <br />மனதில் ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. இந்த முடிவு மனநிறைவை கொடுக்கிறது. <br />அருமையான சிறுகதை. அற்புதமா எழுதி இருந்தீங்க. வாழ்த்துக்கள்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46828739677702965082012-12-18T05:11:17.788-06:002012-12-18T05:11:17.788-06:00இப்படிப் பட்ட "தற்கொலை" முடிவு தான் எ...இப்படிப் பட்ட "தற்கொலை" முடிவு தான் என்றால், அதை எப்போதே எடுத்திருக்கலாமே?<br />இவ்வளவு பாடுகள் பட்டிருக்க வேண்டாம், உங்களை படுத்தியிருகவும் வேண்டாம் தானே?<br /><br />மாமி (ஆன்டி) கிளைமாக்ஸ்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6651191169977061712012-12-18T04:44:29.962-06:002012-12-18T04:44:29.962-06:00மனம் மிக கனத்துப் போனது
நேரடி நிகழ்வாகச் சொல்லாமல்...மனம் மிக கனத்துப் போனது<br />நேரடி நிகழ்வாகச் சொல்லாமல்<br />தகவலாகச் சொன்னதே மிகச் சிறப்பு<br />சூரித்தாத்தா சொன்னதைப் போலத்தான்<br />நடந்திருக்கவேண்டும்.சூரியன் உதிப்பது கிழக்கு<br />என ஏன் சொல்லவேண்டும் ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1292274494173821392012-12-18T04:25:29.294-06:002012-12-18T04:25:29.294-06:00Tears roll down from my eyes - heart has become ve...Tears roll down from my eyes - heart has become very heavy - mind is paralysed hence do not know in words the effects in thoughts created by this post. Make me to think from different angles but unable to concentrate to think from one angle. Felt very bad sorry sad after reading this post. mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12096348018276100912012-12-18T04:00:09.915-06:002012-12-18T04:00:09.915-06:00ஒண்ணும் எழுதத் தோணலை. முதல் பாகம் படித்ததிலிருந்து...ஒண்ணும் எழுதத் தோணலை. முதல் பாகம் படித்ததிலிருந்து அந்தத் தம்பதியர் ஞாபகமாகவே இருக்குது. தற்கொலைதான் என்றாலும், ஒன்றாகவே இறந்தார்கள் என்பது நிம்மதி தருகிறது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58305515121660458032012-12-18T01:53:59.030-06:002012-12-18T01:53:59.030-06:00கதை என்று தோன்றவில்லை.. 3ம் சேர்த்துப் படித்ததும்...கதை என்று தோன்றவில்லை.. 3ம் சேர்த்துப் படித்ததும்..<br /><br />சில சமயம் நடக்கிறதை வேடிக்கை பார்க்கிற பொறுப்பு மட்டும் நமக்குன்னு நினைக்கிறேன்..<br /><br />வேறென்ன சொல்ல..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84078463903899142592012-12-17T21:29:19.663-06:002012-12-17T21:29:19.663-06:00//தலையாட்டினேன். "ஷி லிவ்ட்" என்றேன். &q...//தலையாட்டினேன். "ஷி லிவ்ட்" என்றேன். "மனம் போல வாழ்ந்தாங்க. அத்தனை கஷ்டத்துக்கு நடுவுலயும் அவங்க ரெண்டு பேர் நெருக்கம் எனக்கு ஒரு ஆச்சரியம்.. அதைவிட நீ அவங்களுக்கு செஞ்ச உதவிகள் இப்பவும் நினைச்சா பெரிய ஆச்சரியமாத்தான் இருக்கு.. "//<br /><br /> இந்த வரிகளுக்குப் பிறகு கதை இப்படி போயிருக்கலாமோ என்று தோன்றியது. ஃபர்கிவ் மி இஃப் ஐ ஸீ திஸ் இன் எ டிஃபரன்ட் <br /> ஆங்கிள்....<br /><br /> இப்ப படிப்போம். <br /><br /> " ..........இப்பவும் நினச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு.."<br /> <br /> அது சரி. <br /> அப்பறம் எப்படி செத்தா ? <br /> <br /> நான் சொல்றதுல்லாம் நடக்குமா ? அப்படின்னு கேட்காதே !<br /><br /> சரி... <br /> அப்படித்தான் நடந்திருக்கும்னு நான் சொல்றதற்கு எங்கிட்ட லீகல் மெடிகல் எவிடன்ஸ் எதுவும் இல்ல. <br /> இருந்தாலும் அவங்களோட பழகி அவங்க மன நிலையை நன்னா புரிஞ்சுண்டவன் அப்படிங்கற ரீதிலெ சொல்றேன். <br /> எனக்குள்ளே ஏதோ ஒண்ணு அப்படி நினைக்குது...<br /> <br /> விசயத்துக்கு வா...<br /><br /> ஒரு நாளைக்கு ராத்திரி ரொம்ப நேரம் லைட் இன்னமும் எரிஞ்சுட்டிருக்கே கிச்சன்லே அப்படின்னு, யுவான்<br /> உள்ளே போயிருக்கான்...<br /><br /> போயி....<br /><br /> இவா இரண்டு பேரும் ஒத்தர் கையை ஒத்தர் புடிச்சுண்டு அந்த அதே நாற்காலி மேலே விழுந்து கிடக்கா..<br /> தரைலே கஞ்சி கொட்டிப்போயிருக்கு, பாத்திரம் பாதி கவிழ்ந்து கொஞ்சம் கஞ்சி மிச்சமிருக்கு...<br /><br /> பசுபதி வாயிலே இன்னமும் கொஞ்சம் கஞ்சி தேங்கியிருக்கு.... <br /> மாமி பக்கத்துலெ.. இல்ல... அவர் மேலேயே சாஞ்சாப்போல விழுந்திருக்கா...<br /><br /> நிசமாவா....<br /> தெரியாது... ஆனா யுவான் அப்படித்தான் சொன்னான். <br /> என்ன செய்யறதுன்னு தெரியாம...<br /><br /> எனக்கு ஃபோன் பண்ண நான் போய் பார்த்தா, எல்லாமே முடிஞ்சு போயிருக்கு....<br /><br /> என்ன ஆயிருக்கும் அப்படின்னா ? மாமி தினமும் போல கஞ்சி கொடுக்கறதுக்கு வந்திருக்கா.. கிழவர் வாய திறக்கல்ல..<br /> திறங்க...திறங்க ... அப்படின்னு மாமி கதறி .. வாயத் துறந்து கொஞ்சம் கஞ்சியையும் ஊத்தி இருக்கணும்...<br /> அந்த கடைசி வாய் கஞ்சிக்காக கிஞ்சித்தேனும் அந்த பசுபதியோட உயிரு உடல்லே இருந்திருக்கணும். அப்படியே <br /> அவர் கண்ணைத்துறந்துண்டே சாஞ்சுட்டார். அதப் பாத்து மாமிக்கு ஸடன் ஷாக் . ஒரு மாஸிவ் ஹார்ட் அடாக்லே <br /> அவளும் கீழே விழுந்துருக்கணும்... <br /><br /> ச்...ச்...ச் .... என்ன சொல்றதுன்னே தெரியல்ல...<br /><br /> வேற மாதிரி அவா முடிவு இருக்கும்னு தோணல்லெ... ஏன்னா அவா வாழ்ந்த விதம் அப்படி... அவா ஒத்தரை ஒத்தர்<br /> புரிஞ்சுண்டு வாழ்ந்த விதம் அப்படி...<br /><br /> <br /> அவர் எனக்கு முன்னாடி போயிடணும் அப்படின்னு மாமி சதா வேண்டிண்டு இருந்தா...<br /> ஆமா. <br /><br /> <br /> யூ பிகம் வாட் யூ பிலீவ். <br /><br /> இதயெ தான் அந்தக்காலத்துலேயும் சொல்லிருக்கா.. <br /><br /> என்னன்னு...?<br /><br /> யத் பாவம் தத் பவதி... <br /><br /> நீ என்ன நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்....<br /><br /> <br /> சுப்பு ரத்தினம். @ சுப்பு தாத்தா.<br /><br /> இஃப் யூ ஃபீல் திஸ் என்ட் இஸ் ட்ரமாடிக் ஆர் ஈவன் மெலோ ட்ரமாடிக், ஐ ஆம் ஸாரி . <br /><br /> <br /><br /> <br /><br /> <br /><br /> <br /> <br /><br /> <br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78169191326779791662012-12-17T21:25:21.098-06:002012-12-17T21:25:21.098-06:00.ஹ்ம்ம்.. இந்தியால்லாம் வேண்டாம்பா. எங்களுக்கு இங்....ஹ்ம்ம்.. இந்தியால்லாம் வேண்டாம்பா. எங்களுக்கு இங்கயே, இந்த மண்லயே, பிராணனை விட்டு அவாளோட கலக்கணும்.. இங்கயே பிராணனை விட்டா அவாளோட கண்டிப்பா சேந்துப்போம்னு ஒரு நம்பிக்கை. அந்த உலகம்மை அதையாவது எங்களுக்குச் செய்வானு ஒரு நம்பிக்கை.." என்று மாமி மீண்டும் கலங்கினார்.//<br /><br />நீங்கள் எழுதி இருப்பது எல்லமே கோடிட்டு காட்டலாம்.<br /><br />கதை என்று சொல்லமுடியவில்லை.<br /><br />இந்த மாதிரி இவர்களை அந்த உலகம்மை ஏன் சோதனை செய்தாள்?<br />என்ற கேள்வி மண்டையை குடைகிறது.<br /><br />நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது இருந்தாலும் இந்த கதையை படித்த போது அதுவும் அவர்கள் எடுத்த் முடிவு வேறு என்ன முடிவு அவர்கள் எடுத்து இருக்க முடியும் என்று நினைக்க வைத்தது.<br />மாமி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41141042441620607562012-12-17T21:24:37.087-06:002012-12-17T21:24:37.087-06:00சோக முடிவு என்று சொல்லியிருந்தீர்களே என்று பயத்தோட...சோக முடிவு என்று சொல்லியிருந்தீர்களே என்று பயத்தோடே படித்தேன். ரகுவோ துரையோ மனிதமின்றி கைவிட்டு இவர்கள் தவிப்பார்கள் என்று யோசித்துப் படிக்கத் தயங்கியிருந்தேன். இதைச் சோக முடிவாகப் பார்க்க முடியவில்லை. நிறைவு, இயல்பு. தாம்பத்த்யம் ஒரு சங்கீதம்தான். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17591266532789064102012-12-17T21:19:16.469-06:002012-12-17T21:19:16.469-06:00நான் ரகுவோ அல்லது துரையோ அவர்கள் இருவரையும் கருணை ...நான் ரகுவோ அல்லது துரையோ அவர்கள் இருவரையும் கருணை கொலை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52304549029572065772012-12-17T18:53:44.617-06:002012-12-17T18:53:44.617-06:00கையைக் கொடுங்க அப்பாதுரை சார்.... என்ன மாதிரி ஒரு...கையைக் கொடுங்க அப்பாதுரை சார்.... என்ன மாதிரி ஒரு கதை. <br /><br />மனதினை அப்படியே உலுக்கிப் போட்டுவிட்டது. எப்படிப்பட்ட மனிதர்களை உங்கள் கதை மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம்....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com